ஞாயிற்றுக்கிழமை , சுற்றுலா
➦➠ by:
Angelin
இன்று நாங்க சுற்றுலா போறோம் நாங்க என்றால் நானும்
என் கணவர் ,மகள் எங்களோடு கலைச்செல்வி :) :)
இங்குள்ள பள்ளிகளில் ஏழு வாரம் பள்ளி தொடர்ச்சியாக நடக்கும்
பிறகு பத்து நாள் முதல் இரண்டு வாரம் வரை
விடுமுறை கிடைக்கும் ..அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
ஒரு சிறு ஓய்வு .அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஐரோப்பா
ஆசியா என அலைமோதும் ..டிக்கட் விலையும் மலிவாக கிடைக்கும் .
வெளி நாடுகளுக்கு செல்லாதோர் கூட உள்ளூரில் cottage புக் செய்து
குடும்பத்தோடு அந்நாட்களை கழிப்பார்கள் ..
(இப்பதிவு முழுதும் நாங்கள் உரையாடுகிறோம்..நீங்களும்
எங்களோடு இருப்பது போல கற்பனை செய்து படிங்க )
கலை .... அக்கா ..//என்ன வளவளன்னு பேச்சு சீக்கிரம்
ரெடியாகிட்டோம் புறப்படலாம் ...//
நான் ....சரி சரி :) ஏர்போர்ட் போகிற வழியில் தோழி பாயிஜாவை
பார்த்துவிட்டு போவோம் ..
அக்கா அவங்க அருமையான சுவையான பூரி கிழங்கு
கொடுத்து உபசரிச்சாங்க அத்துடன் சுவையான எள்ளுருண்டையும்
கொடுத்தாங்க :)
கலை ஒரு உருண்டைக்கு மேல் எடுக்ககூடாது :)என்றேனே
ஹாண்ட் லக்கேஜ்ல ஏர்போர்ட்ல வைக்க விட மாட்டாங்க .
சீக்கிரம் வா ட்ரான்சிட் ஜெர்மனியில் ..அங்கே ப்ரியாவை பார்த்து
விட்டு போகணும் ....
கலை ...அக்கா இது என்னது இந்த விமான பணிப்பெண் காப்பி
கொடுக்கறாங்க .பக்கத்துக்கு சீட்டு ஆள் கோப்பையை
கடிச்சு கடிச்சு திங்கறார்??????????
நான் .... உஷ்ஷ் :) கலை அது சாப்பிடக்கூடிய டூ இன் ஒன்
காப்பி கோப்பை நான் என் பதிவில் போட்டேனே படிக்கலியா .
. இங்கே சென்று பார் .
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு ..
உனக்கு பிளாஸ்டிக்கின் தமிழ் பெயர் தெரியுமா ? ..நெகிழி
இங்கே வரலாற்று சுவடுகள் பதிவில் பிளாஸ்டிக்கினால்
பூமிக்கு ஏற்படும் தீமைகள் பற்றி சொல்றாங்க படித்துப்பார் .
நம்ம நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கூட நிறைய
விழிப்புணர்வு இதைபற்றி நடத்துறாங்க ..இங்கே ஊருலகம்
வலைப்பூவில் பாலித்தீன் பை தவிர்ப்போம்னு சொல்றாங்க
எல்லார் பதிவையும் படி ..ப்ளேன்ல சும்மா கேம்ஸ்
விளையாடாம....பணிப்பெண் வராங்க ..பார் ..அங்கே
ஒழுங்கா பெல்டை போடு !
கலை...அக்கா எனக்கு ரெண்டு கோக் டின் எடுக்கட்டா ""
நான் ...கலை கொகோகோலா உடம்புக்கு கெட்டது
எலுமிச்சை ஜூஸ் குடி நீ படிக்கல்லியா நலம் வலையில்
அதன் தீமைகளை ...
கலை...ஆஅமாங்கா ..பாத்ரூம் கழுவ கூட பயன்படுதராங்களாம் !! ..
நான் ...ஆமாம் பச்சை தேநீர் பற்றி ஹேமாவின் பதிவு சென்று படி .
அதன் நற்குணங்களை தெரிஞ்சிக்கோ சும்மா கண்ட ஜூஸ்
குடிக்ககூடாது .சரி தொணதொணன்னு னு பேசாம தூங்கு .
ஜெர்மனில இறங்கி பிரியசகி ப்ளாக் ஓனர் பிரியாவை
பார்த்துட்டு உடனே இந்தியா பிளைட் பிடிக்கணும் .!!
கலை ..அக்கா அவுங்கதானே ஜெர்மானிய அதிபர் Angela
அவர்களின் கையை குலுக்கி ரெண்டு வாரத்துக்கு கையை
கழுவாம இதான் சாக்குன்னு வேலை எதுவும் செய்யாம
இருந்தாங்க !!!
(பிரியா இதெல்லாம் கலை தான் பேசுறா நான் இல்லை )
நான் .....அஆங் ஆமாம் ..கலை இல்லையில்லை ஆமாம் :)
மீதியை ஒரு குப்பைதொட்டிலையும் ,பிளாஸ்டிக்
குப்பையை வேற குப்பை தொட்டிலையும் போட்டா
ஏன் ???
ஷரன் .. அம்மா கலை சித்தி எல்லாத்தையம் ஒரே bin இல்
போட்டாங்கம்மா !!!
நான் ... கலை வெளிநாட்டில் எல்லாத்தையும் முறையே
ரிசைக்கில் செய்வாங்க ,,இல்லையென்றால்
பிளாஸ்டில் குப்பை கடலில் ,ஆறு, ஏரிகளை
மாசுபடுத்தும் ..போன வருடம் நம்ம ஏரியா
எங்கள் ப்ளாக் .k .g .கௌதமன் சார் மற்றும் பலர்
செம்பரம்பாக்கம் ஏரியை சுத்தப்படுதினாங்களே
நினைவிருக்கா ??
கலை ...MIND VOICE ..{ஆண்டவா இந்த அஞ்சு அக்காவுக்கு மட்டும்
ஏன் இவ்ளோ ஞாபக சக்தியை கொடுத்தாய் ???
மாமாவும் ,பொண்ணும் முன் சீட்ல
தப்பிட்டாங்க நான்தான் அக்கா கிட்ட மாட்டிக்கிட்டேன்}
கலை ..அக்கா ஏர்போர்ட் வெளியில் என்ன ஒரே கூட்டமா
நிக்கிறாங்க எல்லாரும் சிலர் சிட்டுகுருவி மாதிரி டிரஸ்
போட்டிருக்காங்க சிலர் பட்டாம்பூச்சி போல ட்ரஸ்
போட்டிருக்காங்க எதுக்கு ?
நான் .. கலை அது சிட்டுக்குருவிகள் பட்டாம்பூச்சிகள் ,
தேனீக்கள் எல்லாம் மனிதர்களின் பேராசையாலும் ,கெட்ட
புத்தியாலும் அழிஞ்சி கொண்டு வருகின்றன அதனால்
இயற்கை ஆர்வலர்கள் தீமைதரும் பூச்சிகொல்லிகள்
போன்றவற்றை தடை செய்யக்கோரி ஊர்வலம் போறாங்க .
தேனீக்கள் இல்லைன்னா மனித இனமே அழியுமான்னு கேள்வி
எழுப்பறாங்க பசுமை இந்தியா என்ற வலைப்பூவில் :(
மேலும் கூவலப்புரம் வலைப்பூவில் அதைபற்றிசொல்றாங்க .
இயற்கை வளங்களை காப்போம் என்ற பதிவையும் படி .
இங்கே நோயற்ற வாழ்வே குறைவற்ற வாழ்வு வலைப்பூ
உரிமையாளர் கணேஷ் சிட்டுக்குருவிகளை பற்றி எழுதின
பதிவை வாசித்துப்பார் .
இங்கே நீர் நிலம் மனிதன் வலைப்பூவிலும் சிட்டுக்குருவிகள்
பற்றிய பதிவு இருக்கு வாசித்துப்பார் .
கலை ....கொர்ர்ர்ரர்ர்ர்ரர் ..
நான் ... என்னை பேசவிட்டுட்டு இந்த பொண்ணு தூங்குது ?
கலை .. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அக்கா ஆஆ
நான் .. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு கத்துற இப்போ
கலை .. அக்கா ப்ளேன் சென்னைக்கு போகாம டெல்லியில்
இறங்குது ????????!!!
நான் .. அது நான் டெல்லியில் இறங்கி இரண்டு பேரை
பார்த்திட்டு அப்புறம் போலாம்னு நினைச்சேன் :)
இங்கே ஆச்சி ஆச்சின்னு ஒரு நெருங்கிய தோழி
இருக்காங்க மாபெரும் சாதனை பெண்களை பற்றி
எழுதினாங்களே அவங்கதான் .
அடுத்தது சொல்லுகிறேன் வலைப்பூ எழுதும் நம்ம
காமாட்சியம்மா இருக்காங்க அவங்க ரெண்டுபேரையும்
சந்திக்கணும் அவங்க எழுதின சாளகிரமம் பற்றிய பதிவு
எனக்கு ரொம்ப பிடிக்கும் .
கலை ...அக்கா எனக்கு காப்பி குடிக்கணும் உடனே !!
நான் .... இரு மாமா அங்கே வாங்கிட்டு வரார் ..கலை
எனக்கு காப்பின்னா மதுரகவி ப்ளாக் எழுதும் ரமா ரவி
நினைவுக்கு வராங்க அவங்களையும் சந்திக்கணும் .
கலை ....சென்னை வந்தாச்சு..அக்கா நான் வீட்டுக்கு போகணும் .
நான் .. கலை இன்னும் சிலரை சந்திக்கணும் அதற்கு உன்
துணை தேவை என்கூட சில நாள் இரு .இப்போ நம்ம
ஸாதிகா அக்கா வீட்டுக்கு போயிட்டு வரலாம் .
கலை .. அந்த தும்பி பதிவு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
தானே அக்கா ..
நான் ... ஆமாம் கலை சிறு வயது நினைவு வரும் ..
இன்னிக்கு நாம திருச்சிக்கு போறோம் கலை ..
நான் ... ..கலை மீத்தேன் எதிர்ப்பு திட்டம் பற்றிய காணொளி
பார்த்தாயா ..மறக்காமல் பார்
கலை ..அக்கா அங்கே என்ன ஒரு ஆள் தண்டோரா வச்சி
அடிசிக்கிட்டிருக்கார் //
அதுவா
//அன்பின் கோபு அண்ணா அவர்களின்
வலைத்தளத்தினில்
gopu1949.blogspot.in
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று
ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப
போட்டியும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் இதில் கலந்துகொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//
நம்ம கோபு அண்ணா வலைப்பூ சென்று பார் நிறைய
பரிசுமழை உண்டு நீயும் கலந்துக்கோ :)
கலை ..அக்கா இப்போ திருநெல்வேலிக்கா போறோம் ?
ராணியையும் சந்திச்சிட்டு போலாம்
அவங்க தேன்மிட்டாய் செய்து வைச்சிருப்பாங்க நமக்கு :)
கலை . அக்கா ..அங்கே ஒருத்தவங்க வீடு சுத்தி நிறைய பச்சை
பசேல்னு மரங்களா இருக்கே அதுதான் கெளசி அக்கா வீடா ?
நான் .. ஆமாம் கலை கௌசல்யா ..வீட்டுத்தோட்டம்
மரம் வளர்க்கணும் ,பள்ளியில் மாணவிகளின் சங்கடங்கள்
இயற்கை ,சுற்றுசூழல் நலம் என்று நல்ல விஷயங்களை
எழுதறாங்க .விழிப்புணர்வு என்றால் என்னன்னு அவங்க
பதிவை படித்துப்பார் ......
சரி கலை ..இத்துடன் நம்ம பயணம் முடிவுற்றது :)

நம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் வேளை :)
.நட்புக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்
கொள்கின்றேன் ..ஒவ்வொருநாளும் வருகை தந்து என்னை
உற்சாகமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி .
இந்த ஒரு வாரம் முழுதும் எனக்கு இங்கு எழுத வாய்ப்பு
அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த
நன்றிகள் .கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில்
பயன்படுத்தியிருக்கின்றேன் என்ற நம்பிக்கையில்
அனைவரிடம் இருந்தும் விடை பெறுகின்றேன் .
நன்றி ,
அன்புடன் ஏஞ்சலின் ...
அவங்க தேன்மிட்டாய் செய்து வைச்சிருப்பாங்க நமக்கு :)
கலை . அக்கா ..அங்கே ஒருத்தவங்க வீடு சுத்தி நிறைய பச்சை
பசேல்னு மரங்களா இருக்கே அதுதான் கெளசி அக்கா வீடா ?
நான் .. ஆமாம் கலை கௌசல்யா ..வீட்டுத்தோட்டம்
மரம் வளர்க்கணும் ,பள்ளியில் மாணவிகளின் சங்கடங்கள்
இயற்கை ,சுற்றுசூழல் நலம் என்று நல்ல விஷயங்களை
எழுதறாங்க .விழிப்புணர்வு என்றால் என்னன்னு அவங்க
பதிவை படித்துப்பார் ......
சரி கலை ..இத்துடன் நம்ம பயணம் முடிவுற்றது :)

நம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் வேளை :)
.நட்புக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்
கொள்கின்றேன் ..ஒவ்வொருநாளும் வருகை தந்து என்னை
உற்சாகமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி .
இந்த ஒரு வாரம் முழுதும் எனக்கு இங்கு எழுத வாய்ப்பு
அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த
நன்றிகள் .கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில்
பயன்படுத்தியிருக்கின்றேன் என்ற நம்பிக்கையில்
அனைவரிடம் இருந்தும் விடை பெறுகின்றேன் .
நன்றி ,
அன்புடன் ஏஞ்சலின் ...
.jpg)











