07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label Angelin. Show all posts
Showing posts with label Angelin. Show all posts

Sunday, May 4, 2014

ஞாயிற்றுக்கிழமை , சுற்றுலா






இனிய ஞாயிற்றுக்கிழமை வணக்கங்கள் அன்பு நட்புக்களுக்கு :)
                                                                                
                                                                        
                                                                             


இன்று நாங்க சுற்றுலா போறோம் நாங்க என்றால் நானும்
என் கணவர் ,மகள் எங்களோடு கலைச்செல்வி :) :)
இங்குள்ள பள்ளிகளில் ஏழு வாரம் பள்ளி தொடர்ச்சியாக நடக்கும் 

பிறகு பத்து நாள் முதல் இரண்டு வாரம் வரை
விடுமுறை கிடைக்கும் ..அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
ஒரு சிறு ஓய்வு .அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஐரோப்பா
ஆசியா என அலைமோதும் ..டிக்கட் விலையும் மலிவாக கிடைக்கும் .
வெளி நாடுகளுக்கு செல்லாதோர் கூட உள்ளூரில் cottage புக் செய்து
குடும்பத்தோடு அந்நாட்களை கழிப்பார்கள் ..

(இப்பதிவு முழுதும் நாங்கள்  உரையாடுகிறோம்..நீங்களும் 
எங்களோடு இருப்பது போல கற்பனை செய்து படிங்க ) 

கலை .... அக்கா ..//என்ன வளவளன்னு பேச்சு சீக்கிரம்
              ரெடியாகிட்டோம் புறப்படலாம் ...//

நான் ....சரி சரி :) ஏர்போர்ட் போகிற வழியில் தோழி பாயிஜாவை
              பார்த்துவிட்டு போவோம் ..

அக்கா அவங்க அருமையான சுவையான பூரி கிழங்கு
கொடுத்து உபசரிச்சாங்க அத்துடன் சுவையான எள்ளுருண்டையும்
கொடுத்தாங்க :)
கலை ஒரு உருண்டைக்கு மேல் எடுக்ககூடாது :)என்றேனே
ஹாண்ட் லக்கேஜ்ல ஏர்போர்ட்ல வைக்க விட மாட்டாங்க .
சீக்கிரம் வா ட்ரான்சிட் ஜெர்மனியில் ..அங்கே ப்ரியாவை பார்த்து
விட்டு போகணும் ....

கலை ...அக்கா இது என்னது இந்த விமான பணிப்பெண் காப்பி
                கொடுக்கறாங்க .பக்கத்துக்கு சீட்டு ஆள் கோப்பையை 
                கடிச்சு கடிச்சு திங்கறார்??????????

நான் .... உஷ்ஷ் :) கலை அது சாப்பிடக்கூடிய டூ இன் ஒன் 
                காப்பி கோப்பை நான் என் பதிவில் போட்டேனே படிக்கலியா .
.               இங்கே சென்று பார் .
                பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு ..

உனக்கு பிளாஸ்டிக்கின் தமிழ் பெயர் தெரியுமா ? ..நெகிழி
இங்கே வரலாற்று சுவடுகள் பதிவில் பிளாஸ்டிக்கினால்
பூமிக்கு ஏற்படும் தீமைகள் பற்றி சொல்றாங்க படித்துப்பார் .

நம்ம நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கூட நிறைய
விழிப்புணர்வு இதைபற்றி நடத்துறாங்க ..
இங்கே ஊருலகம் 
வலைப்பூவில் பாலித்தீன் பை தவிர்ப்போம்னு சொல்றாங்க
எல்லார் பதிவையும் படி        ..ப்ளேன்ல சும்மா கேம்ஸ் 
விளையாடாம....பணிப்பெண் வராங்க ..பார் ..அங்கே 
ஒழுங்கா பெல்டை போடு !

கலை...அக்கா எனக்கு ரெண்டு கோக் டின் எடுக்கட்டா ""
நான் ...கலை கொகோகோலா உடம்புக்கு கெட்டது 
              எலுமிச்சை ஜூஸ் குடி நீ படிக்கல்லியா நலம் வலையில் 
              அதன் தீமைகளை ...

கலை...ஆஅமாங்கா ..பாத்ரூம் கழுவ கூட பயன்படுதராங்களாம் !! ..
நான் ...ஆமாம்  பச்சை தேநீர் பற்றி ஹேமாவின் பதிவு சென்று படி .
               அதன் நற்குணங்களை தெரிஞ்சிக்கோ சும்மா கண்ட ஜூஸ் 
               குடிக்ககூடாது .சரி தொணதொணன்னு னு பேசாம தூங்கு .

ஜெர்மனில இறங்கி பிரியசகி   ப்ளாக் ஓனர் பிரியாவை 
பார்த்துட்டு உடனே இந்தியா பிளைட் பிடிக்கணும் .!!

கலை ..அக்கா அவுங்கதானே ஜெர்மானிய அதிபர் Angela 
               அவர்களின் கையை குலுக்கி ரெண்டு வாரத்துக்கு கையை 
                கழுவாம இதான் சாக்குன்னு வேலை எதுவும் செய்யாம 
                இருந்தாங்க !!!

(பிரியா  இதெல்லாம் கலை தான் பேசுறா நான் இல்லை )
நான் .....அஆங் ஆமாம் ..கலை இல்லையில்லை ஆமாம் :)

கலை ...அக்கா ஷரன் ப்ரியா அக்கா வீட்டில் சாப்பிட்டதும் 
                  மீதியை ஒரு குப்பைதொட்டிலையும் ,பிளாஸ்டிக் 
                  குப்பையை வேற குப்பை தொட்டிலையும் போட்டா 
                  ஏன் ???

ஷரன் .. அம்மா கலை சித்தி எல்லாத்தையம் ஒரே bin இல் 
                போட்டாங்கம்மா !!!

நான் ... கலை வெளிநாட்டில் எல்லாத்தையும் முறையே 
                 ரிசைக்கில் செய்வாங்க ,,இல்லையென்றால் 
                 பிளாஸ்டில் குப்பை கடலில் ,ஆறு, ஏரிகளை 
                 மாசுபடுத்தும் ..போன வருடம் நம்ம ஏரியா 
                 எங்கள் ப்ளாக் .k .g .கௌதமன் சார் மற்றும் பலர் 
                 செம்பரம்பாக்கம் ஏரியை சுத்தப்படுதினாங்களே 
                 நினைவிருக்கா ??

கலை ...MIND VOICE ..{ஆண்டவா இந்த அஞ்சு அக்காவுக்கு மட்டும் 
                ஏன் இவ்ளோ ஞாபக சக்தியை கொடுத்தாய் ???
                மாமாவும் ,பொண்ணும்  முன் சீட்ல 
                தப்பிட்டாங்க நான்தான் அக்கா கிட்ட மாட்டிக்கிட்டேன்} 

கலை ..அக்கா ஏர்போர்ட் வெளியில் என்ன ஒரே கூட்டமா 
                நிக்கிறாங்க எல்லாரும் சிலர் சிட்டுகுருவி மாதிரி டிரஸ் 
                போட்டிருக்காங்க சிலர் பட்டாம்பூச்சி போல ட்ரஸ் 
                போட்டிருக்காங்க எதுக்கு ?
நான் ..  கலை அது சிட்டுக்குருவிகள் பட்டாம்பூச்சிகள் ,
                தேனீக்கள் எல்லாம் மனிதர்களின் பேராசையாலும் ,கெட்ட 
                புத்தியாலும் அழிஞ்சி கொண்டு வருகின்றன அதனால் 
                இயற்கை ஆர்வலர்கள் தீமைதரும் பூச்சிகொல்லிகள் 
                போன்றவற்றை தடை செய்யக்கோரி ஊர்வலம்  போறாங்க .

தேனீக்கள் இல்லைன்னா மனித இனமே அழியுமான்னு கேள்வி 
எழுப்பறாங்க பசுமை இந்தியா என்ற வலைப்பூவில் :(

மேலும் கூவலப்புரம் வலைப்பூவில் அதைபற்றிசொல்றாங்க .
இயற்கை வளங்களை காப்போம் என்ற பதிவையும் படி .
இங்கே நோயற்ற வாழ்வே குறைவற்ற வாழ்வு வலைப்பூ 
உரிமையாளர் கணேஷ்  சிட்டுக்குருவிகளை பற்றி எழுதின 
பதிவை வாசித்துப்பார் .
இங்கே நீர் நிலம் மனிதன் வலைப்பூவிலும்  சிட்டுக்குருவிகள் 
பற்றிய பதிவு இருக்கு வாசித்துப்பார் .

கலை ....கொர்ர்ர்ரர்ர்ர்ரர் ..
நான் ... என்னை பேசவிட்டுட்டு இந்த பொண்ணு தூங்குது ?

கலை .. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அக்கா ஆஆ 
நான் ..   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு கத்துற இப்போ 
கலை .. அக்கா ப்ளேன் சென்னைக்கு போகாம டெல்லியில் 
                 இறங்குது ????????!!!

நான் ..  அது நான் டெல்லியில் இறங்கி இரண்டு பேரை 
                பார்த்திட்டு அப்புறம் போலாம்னு நினைச்சேன் :)
                இங்கே ஆச்சி ஆச்சின்னு  ஒரு நெருங்கிய தோழி 
                இருக்காங்க மாபெரும் சாதனை பெண்களை பற்றி 
                எழுதினாங்களே அவங்கதான் .

                அடுத்தது    சொல்லுகிறேன்   வலைப்பூ எழுதும் நம்ம 
                காமாட்சியம்மா இருக்காங்க அவங்க ரெண்டுபேரையும் 
                சந்திக்கணும் அவங்க எழுதின சாளகிரமம் பற்றிய பதிவு 
                 எனக்கு ரொம்ப பிடிக்கும் .

கலை ...அக்கா எனக்கு காப்பி குடிக்கணும் உடனே !!
நான் ....  இரு மாமா அங்கே வாங்கிட்டு வரார் ..கலை 
                  எனக்கு காப்பின்னா மதுரகவி ப்ளாக் எழுதும் ரமா ரவி 
                  நினைவுக்கு வராங்க அவங்களையும் சந்திக்கணும் .

 
கலை ....சென்னை வந்தாச்சு..அக்கா நான் வீட்டுக்கு போகணும் .
நான் ..    கலை இன்னும் சிலரை சந்திக்கணும் அதற்கு உன் 
                  துணை தேவை  என்கூட சில நாள் இரு .இப்போ நம்ம
                  ஸாதிகா அக்கா வீட்டுக்கு போயிட்டு வரலாம் .
கலை ..  அந்த தும்பி பதிவு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
                  தானே அக்கா ..
நான் ...  ஆமாம் கலை சிறு வயது நினைவு வரும் ..


                 இன்னிக்கு நாம திருச்சிக்கு போறோம் கலை ..

நான் ... ..கலை மீத்தேன் எதிர்ப்பு திட்டம் பற்றிய காணொளி 
                 பார்த்தாயா ..மறக்காமல் பார் 


கலை ..அக்கா அங்கே என்ன ஒரு ஆள் தண்டோரா வச்சி 
                அடிசிக்கிட்டிருக்கார் //
                அதுவா 
              //அன்பின் கோபு அண்ணா அவர்களின் 
                 வலைத்தளத்தினில் 
                  gopu1949.blogspot.in
             ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று 
            ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது. 

அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப 
போட்டியும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் இதில் கலந்துகொண்டு 
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//
நம்ம கோபு அண்ணா வலைப்பூ சென்று பார் நிறைய 
பரிசுமழை உண்டு நீயும் கலந்துக்கோ :)

கலை ..அக்கா இப்போ திருநெல்வேலிக்கா போறோம் ?
நான் ..  ஆமாம் கலை போகிற வழியில் அப்படியே நம்ம ராதா 
                ராணியையும் சந்திச்சிட்டு போலாம்
                அவங்க தேன்மிட்டாய் செய்து வைச்சிருப்பாங்க நமக்கு :)

கலை . அக்கா ..அங்கே ஒருத்தவங்க வீடு சுத்தி நிறைய பச்சை
                 பசேல்னு மரங்களா இருக்கே அதுதான் கெளசி அக்கா வீடா ?
நான் ..   ஆமாம் கலை கௌசல்யா ..வீட்டுத்தோட்டம்
                 மரம் வளர்க்கணும் ,பள்ளியில் மாணவிகளின் சங்கடங்கள்
                 இயற்கை ,சுற்றுசூழல் நலம் என்று நல்ல விஷயங்களை
                 எழுதறாங்க .விழிப்புணர்வு என்றால் என்னன்னு அவங்க
                 பதிவை படித்துப்பார் ......

சரி கலை ..இத்துடன் நம்ம பயணம் முடிவுற்றது :)


 

நம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் வேளை :)

.நட்புக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் 

 கொள்கின்றேன் ..ஒவ்வொருநாளும் வருகை தந்து என்னை
 உற்சாகமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி .
இந்த ஒரு வாரம் முழுதும் எனக்கு இங்கு எழுத வாய்ப்பு 
அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த
 நன்றிகள் .கிடைத்த  வாய்ப்பை நல்ல முறையில் 
பயன்படுத்தியிருக்கின்றேன் என்ற  நம்பிக்கையில் 
அனைவரிடம் இருந்தும் விடை பெறுகின்றேன் .


நன்றி ,
அன்புடன்  ஏஞ்சலின் ...











                                                              

மேலும் வாசிக்க...

Saturday, May 3, 2014

நலம் மற்றும் குழந்தை வளர்ப்பு !



வணக்கம் நட்புக்களே :)
அனைவருக்கும் இனிய சனிக்கிழமை வணக்கம் !
நேற்று திருவிழா போய்வந்த களைப்பு இன்னும் இருக்கா ?
அப்படியென்றால் இந்தாங்க ஒரு கோப்பை நீராகாரம் !
                                                               
                                                 (பட உதவி ..நன்றி மீரா ..mirashobbylounge.blogspot.com.)




சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!
"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"


                     

இன்றைய தலைப்பு உடல் நலம் மற்றும் குழந்தை வளர்ப்பு !
மிக்சி ,கிரைண்டர் ,குளிர்சாதன பெட்டி ,ஹோட்டல் உணவு ,
துரித உணவு  ,மைக்ரோவேவ் ,பதபடுத்தபட்ட உணவு , எந்த
தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லாத நாளிலும் 

நமது தாத்தா பாட்டி,காலத்தில்அவர்களால் எப்படி நோய்  
நொடியின்றி வாழ முடிந்தது ?

இப்போ இருப்பதுபோல ஜிம் ,ட்ரெட்மில் ,அட்கின்ஸ் உணவு
 டயட் ஸ்பா :) நீராவி குளியல் எதுவுமே இல்லையே அப்போது .

ஆனால் அப்போதில்லாத எல்லா நோய்களும் இன்னும் 

புதிய வகை நோய்களும் இப்போ நாளொரு மேனியும் 
பொழுதொரு வண்ணமுமா கணக்கு வழக்கின்றி பெருகி 
வருகின்றது (அதனாலோ என்னவோ மீண்டும் பலர் நமது 
முன்னோர் வழியை பின்பற்ற ஆரம்பிச்சிருக்காங்க .

உண்மையில் இது மகிழ்ச்சியான விஷயமே !.

நம்மில் எத்தனை பேருக்கு சாமை ,தினை ,வரகு ,கவுணி அரிசி 
இவை பற்றி தெரியும் ?
இவையெல்லாம் நமது உடலுக்கு நன்மை தரும் 

தானியங்கள் .உடல் நலம் மட்டுமின்றி குழந்தை வளர்ப்பு 
பற்றிய தகவல்கள் பகிரும் வலைப்பூக்கள் சிலவற்றை 
இங்கு இணைத்துள்ளேன் .

தாஜுத்தீன் என்பவரது வலைப்பூ

கோணுழாம்பள்ளம் போஸ்ட் ... இதில் நீராகாரத்தின் அருமை 
பெருமைகளை அழகாக விளக்கியிருக்கின்றார் .மற்றும் பற்பல
அறிய தகவல்களும் இங்குண்டு .

நீராகாரம் செய்முறை !இங்கே நம்ம ஆசியா தந்திருக்கின்றார் .
கவுணி அரிசியில் பிடி கொழுக்கட்டை இங்கே லலிதா
சண்முகம், அவர்கள் மங்கையர்மலர் ,அவள்விகடன்
ஆகிய பத்திரிக்கைகளுக்கு குறிப்பு எழுதுபவர் .
அவரது வலைப்பூ http://lalithasspecialrecipes.blogspot.co.uk/

கறுப்பு அரிசி /கவுணி அரிசி பாயசம் செய்முறை இங்கே
மேனகா அருமையாக செய்து காட்டியிருக்காங்க ..
அபார ருசி ..எங்க வீட்டில் அடிக்கடி செய்றோம் ..

ஹேமா மேனனின் வலைப்பூ ..நாம் மறந்தவற்றை
மீண்டும் நினைவுகூறுகிறார் ...இவர் தளம்
http://hemamenan.blogspot.co.uk/ 
 இதில் 
சனி நீராடு ..இதன் விளக்கங்கள் மற்றும் பற்பல
ஆரோக்கிய குறிப்புகள் வழங்குகிறார் ஹேமா மேனன் .

நாம் அனைவரும் ரோஸ் மில்க் குடிக்கிறோமே
அதில் எப்படி ரோஜா வர்ணம் வந்தது என்று நினைத்து
பார்த்திருக்கோமா ..செயற்கை நிறமூட்டிகள் சேர்ப்பதால்
உடலுக்கு பற்பல தீங்குகள் வரலாம் ..இங்கே இயற்கை
முறையில் ரோஸ்மில்க் தயாரிப்பது எப்படின்னு 

சொல்கிறார் தாய்மை ஒரு இனிய பயணம் வலைப்பூவில்
http://thaaymai.blogspot.co.uk/ .


மண்பாண்ட மகிமை பற்றி விளக்குகிறார் ,பண்ணையார்
மருத்துவம் ,இயற்கை விவசாயம் ,பாரம்பரிய உணவு
என பற்பல தகவல்கள் இங்குண்டு .
எங்கு சென்றாலும் மனது விவசாயத்தை தேடும் .பார்க்கும்
இடம் எல்லாம் , கண்ணில் படுவதை எல்லாம் விவசாயத்துடன்
இணைத்து பார்க்கும் மனம்.என்கின்றார் தன்னைப்பற்றி
இவரது வலைத்தளம் http://www.pannaiyar.com/


குழந்தை வளர்ப்பு ,கர்ப்பிணி பெண்களுக்கு ,வளரும்பெண்களுக்கு
என பலருக்கும் பயன்படும் தகவல் பெட்டகம் ஜலீலாவின்
சமையல் அட்டகாசம் வலைப்பூ .
http://samaiyalattakaasam.blogspot.com/p/blog-page_1.html.
கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ் இங்கே


கேன்சர் நோயாளிகளுக்கு ,தர உகந்த உணவுகள் ,
விழிப்புணர்வு பக்கங்கள் என ஜலீலா நிறைய
குறிப்புகளை பகிர்கிறார் .


குழந்தை வளர்ப்பு நலம் பற்றிய வலைப்பூ சுபாவின் குறிப்பு
http://subawin.blogspot.co.uk/
குழந்தை நலம் பற்றிய இவரின் பதிவு



மலரினும் மெல்லிய மனம் படைத்த மழலைகள்
அவர்களின் குணங்களை ,அவர்களின் இயல்பை புரிந்து

 நடக்க வேண்டியது பெற்றோர் கடமை ..

நல்லவற்றையே சொல்லிகொடுங்கள் .விளையாட்டுடன்
கல்வியை கற்றுகொடுங்கள் .நற்குணங்களை கற்று கொடுங்கள் .
பெற்றோரின் ஆசைகளை பிள்ளைகள் மேல் திணிக்காதிருத்தல்
மிக்க நலம் .


சமீபத்தைய செய்தி ..இந்த சுட்டியில் பார்க்கவும்

http://www.bbc.co.uk/tamil/science/2014/04/140424_undrawingslgirl.shtml


                                                                       


இலங்கையை சேர்ந்த சிறுமியின் ஓவியம் ஐ .நா .சுற்றுசூழல்
திட்டத்துக்கென தேர்வாகியிருக்கு .அவர்கள் கொடுத்த தலைப்பு
வீணாகும் உணவும் பூமியை பாதுகாப்பதும் .
ஒரு உண்டியலில் அனைத்து சிறாரும் காய்கறிகளை
சேமிப்பது போன்ற ஓவியத்தை அச்சிறுமி வரைந்து 

பரிசை தட்டி சென்றுள்ளார் .
அவளின் பெற்றோர் சேமிக்கும் பழக்கத்தை அவளுக்கு 
சொல்லி தந்ததால்தான் இந்த யோசனை உதித்திருக்கும் .
நல்லமுறையை நற்குணங்களை ஊட்டி வளருங்கள் .

குழந்தைகளின் குணம் அவர்களுக்கான வழிகாட்டல்
என பல செய்திகளடங்கிய பக்கம் .திரு .அன்பரசு
அவர்களின் வலைத்தளம் http://sjkt-keruh.blogspot.co.uk/


சகோதரர் கே .ஆர் .பி .செந்தில் அவர்களின் தளம் .

http://www.nalam.net/
குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு ஆபத்தில் முடியலாம்
இதைப்பற்றி மேலும் வாசிக்க இங்கே .

வாருங்கள் புரிந்துகொள்வோம் குழந்தையை என்று
அழைக்கிறார்கள் பேரன்ட்ஸ் க்ளப் வலைப்பூவில்
http://parentsclub08.blogspot.co.uk/
எப்படியெல்லாம் குழந்தைகளிடம் நடக்க வேணும்னு
மிக அழகா சொல்கிறார்கள் இங்கே .

குழந்தைகளை முதியோர் ஆக்காதீர்கள் என்கிறார்
ராஜசேகரன் அவர்கள் இங்கே http://nanduonorandu.blogspot.com/
 அதிகப்படியான மன அழுத்தம் இக்கால குழந்தைகளுக்கு .


ஆற்று மணலிலும் கடற்கரை மணலிலும் பிள்ளைகளை
விளையாட வைக்க வேண்டும் என்கின்றார் வேதா அக்கா
இங்கே ..

பெண் குழந்தைகளின் உடல் நலம் பற்றி ரஞ்சனி அம்மா 

இங்கே எழுதியிருக்காங்க ,பெற்றோர் கவனத்தில் கொள்ள 
வேண்டியவை .


மகவே கேள் மிக அருமையாக தாய்க்கு செய்யும் சேவை பற்றி
அன்பாக அறிவுரை தருகிறார்கள் சமூக விழிப்புணர்வு
பக்கத்தில் ..http://nijampage.blogspot.co.uk/.

இது மழலைப்ரியனின் பக்கம் சாந்திவனத்துகதைகள் ,
அறிவமுது ,குழந்தைகளுக்கான படக்கதைகள் பல இங்குண்டு ...
மீண்டும் நாளை சந்திப்போம் .

அன்புடன்
ஏஞ்சலின் ..



























மேலும் வாசிக்க...

Friday, May 2, 2014

திருவிழா போகலாம் வாங்க :)



திருவிழா போகலாம் வாங்க :)

                                                                               

                                                                         



வணக்கம் நட்பு பூக்களே ! அனைவரும் மே தின விடுமுறையை 
ஆனந்தமாக கொண்டாடினீர்களா ? 
எங்களுக்கு திங்கள் கிழமை அன்றுதான் விடுமுறை .
இன்று உங்களை திருவிழாவுக்கு அழைத்து செல்லப்போகின்றேன்:)
நான் சிறு வயதில் திருவிழா போயிருக்கின்றேன் .
அப்பா மருத்துவர் அதனால் கிராமத்தில் அவருக்கென தனி 
உபசரிப்பு உண்டு :)கிளிப்பச்சை வர்ண பாவாடை கட்டி ,தலையில்
 இரண்டு பக்கமும் pig tail ,(ரிப்பன் கட்டி அதுவும் பச்சை நிறம் )
சென்றது நினைவுக்கு வருது !

அப்பாவின் உதவியாளர் ஒரு அண்ணா இருந்தார் அவர் என்னை
கைபிடித்து வேடிக்கை காட்டி கொண்டிருந்தார் .. சேமியா 
போட்ட ரோஸ்மில்க் குண்டு ஐஸ் என்று நினைக்கிறேன் :)
 அதை சாப்பிட்டுகொண்டே பராக்கு பார்த்திட்டு நடந்து !!!
கூட்டத்தில் தொலைந்து போனேன் !!ஆனா ஒலிபெருக்கியில்
அறிவிப்பு தரும் முன்னமே எங்கம்மா என்ன கண்டுபிடிச்சிட்டாங்க !! 
எப்படி தெரியுமா நான் கட்டியிருந்த பச்சை கலர் பாவாடை :)ரிப்பன்
மணமாகும் வரைக்கும் எனக்கு ட்ரஸ் தேர்வு அம்மா தான் ..
அதுவரைக்கும் நான் அணிந்த உடைகள் எல்லாமே கலர் கலரா தான்
இருந்தது ..கல்லூரி படிக்கும்போது கூட பலர் என்னை கேட்பார்கள்
எதற்கு பள பள நிறங்களை தெரிவு செய்கிறார்கள் உங்கள் வீட்டில் ?
அதன் ரகசியம் எனக்கு தானே தெரியும் :)

இன்றுமுதல் சித்திரை திருவிழா ஆராவாரத்துடன் துவங்குகிறது .
அதற்கான அட்டவணை அனைத்தையும் ஒவ்வொரு நாள் 
 செல்ல விரும்புபவர்கள் குறித்துக்கொள்ளுங்கள் ...

முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா இங்கே 
ராஜேஸ்வரியக்காவின் பதிவு 

இங்கே வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர் என கணீர் 
குரலில் மிக அழகாக பாடுவதை கேளுங்கள் ! 
பாடகர் யார் தெரிகிறதா !!
பாடகர் நமது அன்பின் சீனா ஐயா அவர்கள்தான்  !  :)
                                                                                  
பல்வேறு திருவிழாக்கள் பற்றிய சில நினைவுகளை
பகிர்கின்றார்கள் இவர்கள் ..........................................


நல்லகாலம் பொறந்தாச்சு என்று கவிதை படிக்கின்றார் கல்பனா .
பூவனத்தில் இவர் சித்திரை திருவிழாவில் தொலைந்ததை
நினைவு கூறுகின்றார் ..திண்டுக்கல் மலை வாழையும் நீர்மோரும்
இவர் நீங்கா நினைவில் இருக்காம் .



தமிழகத்தில் இரண்டாவது பெரிய தெப்பக்குளம் மதுரை
மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் என்கிறார் சித்திரவீதிக்காரன் .
கலங்கிய கண்களுடன் இவர் வைகையை பார்க்க காரணம்
இங்கே சென்று படிங்க இது மதுரை வாசகனின் நினைவலைகள் .


களிமண் ரேடியோவும் ,குழாய் ரேடியோவும் என இவரது
தேர்த்திருவிழா கால கிராமத்து நினைவுகள் ம்ம்ம் மிக அருமை ..
எந்நேரமும் காலுக்கு சாக்ஸும் ஷூவும் அணிந்த வெளிநாட்டில்
வாழும் எமது பிள்ளைகள் இவற்றையெல்லாம்
அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை :(

சித்திரை திருவிழாவும் தொலைந்த மிதிவண்டியும்  இங்கே !


குதிரைகள் கலக்கிய குருநாத சுவாமி கோவில் திருவிழா ..
திருவிழாவில் அறிவிப்பு :)//யாராவது குழந்தையைக் காணவில்லை
என்று வந்தால் குதிரைச் சாட்டை தயாரா இருக்கு, வெளுக்க//மேலும்
படிச்சு பாருங்க மிகவும் அருமையாக இருக்கு :)


அனைவரையும் தஞ்சை சித்திரைப் பெருவிழாவில் கலந்துக்கொள்ள
அழைப்பு விடுக்கிறார் இங்கே துரை செல்வராஜ் ஐயா .


இத்தனை பதிவுகளையும் சேகரித்தபோது எனக்கே இப்ப நம்மூர்
திருவிழா பார்க்கணும் போல ஆசையாக இருக்கு !
நம்மூரில் ஒவ்வொரு காரண காரியத்துடன் விழா கொண்டாடுவாங்க
ஆனா வெளிநாட்டினர் வெங்காயம் பூண்டு ஆஸ்பாரகசுக்கு எல்லாம்
திருவிழா கொண்டாடுறாங்க :)
           

இப்போது சில வெளிநாட்டு திரு விழாக்களை பார்ப்போம் :)

பல உலக நாடுகளின் அறுவடை திருவிழா பற்றி இவர்
இங்கே குறிப்பிட்டுள்ளார் மயிலை முத்துகள் தளத்தில் .



வெங்காயத் திருவிழா  சுபா அவர்கள் அழகிய படங்களுடன் 
சொல்கிறார் 
ஒரு பூதம் ஒன்று கிராமத்து மக்களுக்குத் தொல்லை 
கொடுத்துக் கொண்டிருந்ததாம். 
சந்தையில் வெங்காயம் விற்கும் பெண் ஒருத்தி அந்த 
பூதத்தைப் பிடித்து வெங்காயத்திற்குள் வைத்து விட்டாளாம். 
பூதம் தொலைந்த அந்த சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டாமா?
அதற்குத் தான் வெங்காயத் திருவிழா.

கில்ராயில் நடைபெறும் பூண்டு திருவிழா !!! நிறைய படங்களுடன்
சென்று படிங்க இவர் தளத்தில் .
சோமபான திருவிழா :) பியர் திருவிழா இங்கே சென்று வாசிங்க .

கவலைகளை மறந்து உற்சாக கொண்டாட்டம்  ஜெர்மானிய 
ரோசன் மொன்டாக் ..gowsy அக்கா பதிவில் .

ஆரஞ்சு திருவிழா
ஒவ்வோரு வருடமும் பிப்ரவரி மாதம் கொண்டாடபடும் இந்த
விழாவிற்கு இந்த வருடம் பயண்படுத்திய ஆரஞ்சுகளின்
எண்ணிக்கை 500 டண் ஐ தாண்டியதாம்.


சொக்கன் சுப்பிரமணியன் :) இவர் திருவிழா போனதை 

பத்திரிகையில் போட்டார்களாம் :)
நீங்களும் பாருங்க உண்மையா தாங்க சொல்கிறார் :)


தக்காளி திருவிழா பற்றி சொல்கின்றார் ஜாபர் சாதிக்
ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவில்
பயன்படுத்தப்படும் தக்காளியின் எடை எவ்வளவு தெரியுமா 125 டன்...!




திருவிழா சுற்றிபார்த்ததில் அலுப்பா இருக்கா இந்தாங்க ஒரு 
ஜிகர்தாண்டா :)







நாளை மீண்டும் சந்திப்போம் :)

அன்புடன் ஏஞ்சலின் .





மேலும் வாசிக்க...

Thursday, May 1, 2014

செல்லமே ! இவை மனதுக்கு அமைதி தரும் செல்லங்கள் !



                                     

வணக்கம் அன்பு நண்பர்களே :)
                                                                      



இன்றைய பதிவில் நாம் பார்க்கபோவது இனிமையான ,நமது
மனதுக்கு அமைதி தரும் செல்லங்கள் . நம் அனைவருக்குமே
அன்றாட வேலை ,அலுப்பு ,வீட்டில் வெளியிடத்தில் என பற்பல
சமயங்களில் படபடப்பு எரிச்சல் ,மன அழுத்தம் எல்லாம்
ஏற்படும் .இங்கே வெளிநாடுகளில் மருத்துவரிடம் சென்றால்
உடனே அவர்கள் ..//உங்க வீட்ல ஒரு நாய் ,பூனை ,பறவை ,மீன்
இவற்றில் ஏதேனும் வளருங்கள் ,காலையும் மாலையும்
அவற்றுடன் நேரத்தை செலவிடுங்கள் ,அல்லது தோட்டத்திலாவது
உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழியுங்களேன் //
என்பார்கள் ..அதற்கேற்றார்போல இங்கே அனைவரும் ஏதேனும்
ஒன்றை வளர்ப்பார்கள் மேலும் கோடைகாலத்தில்தோட்டத்தில்
நேரத்தை செலவழிப்பார்கள் .
இங்கு வீட்டில் நாய் வளர்க்க இயலாதோருக்கு வாரம் ஒருநாள்
அவற்றை வாடகைக்கு பணம் செலுத்தி  எடுத்து செல்லவும் வசதி
உண்டு :)


அதேபோல வீட்டில் தோட்டம் போட இடமில்லாதோருக்கும் 
Allotment எனப்படும் சமூக தோட்டங்களில்  வருடாந்திரம் ஒரு
குறிப்பிட்ட தொகை வாடகை செலுத்தி அந்த இடத்தில 

தோட்டம் செய்யவும் வசதி உண்டு .

இன்றைய பதிவு நாலுகால் செல்லங்கள் மற்றும் உடலுக்கும்
உள்ளத்துக்கும் புத்துணர்வூட்டும் வீட்டுத் தோட்டம் பற்றியது .

செடிகளுக்கும் உணர்வு உண்டாம் !! அவற்றுடன் பேசினாலோ 
அல்லது இனிய இசையை செடிகளின் அருகே ஒலிக்கும்படி 
செய்தாலோ ,அவை நன்கு செழித்து வளருமாம் .அப்போ 
செடிகளும் செல்லங்கள் தானே :)
முதலில் நம் பிரபல பதிவர்களின் சில செல்லங்கள்  :)

நம்ம துளசி அக்காவின் பதிவுகளை வாசிக்கும்போது 

அவர்களின் உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும் ,அவங்க 
நிறைய நேரத்தை செல்லங்களோட செலவழிக்கறாங்க 
என்று நினைக்கிறேன் :)
அக்காவின் செல்லம் ரஜ்ஜூ இங்கே
அக்கா வீட்டுக்கு அழையா விருந்தாளியா வருகை தந்த
விருந்தினர் இங்கே .


கூண்டு செல்லங்கள் பற்றிய கவிதை

இது மோகன்குமார் அவரின் வீட்டு செல்லம் :)

கூகிள் பண்ணி பார்த்தாலும் இவர் போல அழகன்
யாருமில்லையாம் இவர் செல்லம் :)

இவர் வீட்டு செல்லம் :) ரொம்பத்தான் பீட்டர் விடறார்

இது ரத்னவேல் ஐயா அவர்களின் உறவினர் வீட்டுக்கு வரும்
செல்லங்கள் .உண்மையில் மனம் நெகிழ்ந்தது படிச்சபோது

காக்கை குருவி எங்கள் ஜாதி !


இளமதி வீட்டு செல்லம் !!


இது மதுரை தமிழன் வீட்டு செல்லம்

இது எங்க இமா அவர்களின் வீட்டு செல்லம்

இமா இங்கே டெரேரியம்,கண்ணாடி சாடியில் காக்டஸ் வளர்ப்பது
பற்றியும் சொல்லியிருக்காங்க ..சிலந்தியைகூட செல்லம் என்று
சொல்ல இவங்களால் மட்டுமே முடியும் !


இவர்கள் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் வீட்டு செல்லங்கள் .


.......................................................................................................................................

இப்போது பச்சை பசுமையான செல்லம்கள் :) செடிகள்
                                                                     


இது பத்திரிகை செய்தி ..மன அழுத்தம் குறைக்கும் மாடிதோட்டம்

வித்யா சுப்ரமணியம் அம்மா அவர்கள் எழுத்தாளர் !!
இங்கே மாடித்தோட்டம் மூலிகை செடிகள் பற்றி அழகா
சொல்லியிருக்காங்க .


சித்ரா சுந்தர் மீள்சுழற்சி முறையில் கொத்தமல்லி வளர்ப்பு 
பற்றி சொல்லி தராங்க இங்கே 

மாடித்தோட்டம் மற்றும் அதற்கான வழிமுறைகளை 
பற்பல தகவல்களை இங்கே காணலாம் .இது தோட்டம் 
வலைப்பூ .

வீட்டுத்தோட்டம் தயார் செய்யும் முறைகள் இங்கே 
http://denaldrobert.blogspot.co.uk/2013/01/blog-post_1529.html


தொட்டியில் காரட் வளர்ப்பு இது மஹியின் குறிப்பு .

இயற்கைக்கு திரும்புங்கள்  ...வீட்டுத்தோட்டம் மீள்சுழற்சி 
மீள்பயன்பாடு பற்றிய அருமையான தகவல்கள் இங்கே .
நீர் நிலம் மனிதன் வலைப்பூவில் ..

வீட்டில் கீரை வளர்ப்பு இது K.R.P.செந்தில் அவர்களின் 
தளத்தில் இன்னும் பற்பல வீட்டுத் தோட்ட குறிப்புகளும் 
இங்குண்டு .

இவர்களின் இந்த தளத்தில் தண்டுக்கீரை ,பொன்னாங்கன்னி 
கீரை வளர்ப்பு பற்றி சொல்கிறார்கள்  நான்கு பெண்மணிகள் .

வீட்டில் நாலுகால் செல்லங்களை வளர்த்தாலும் அல்லது 
பசுமையான செடிகொடிகளை வளர்த்தாலும் அவற்றுக்கும்  
முறையான கவனிப்பு தேவை .
இன்றைய பதிவு பலருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் 
என நினைக்கிறேன் .

நாளை மீண்டும் சந்திப்போம் .

அன்புடன் ஏஞ்சலின் .










மேலும் வாசிக்க...

Wednesday, April 30, 2014

சமையலில் நளபாகம் :)


                 அனைவருக்கும் பொன்னான புதன்கிழமை 
வணக்கங்கள் :)தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்குமே 
விளங்கியிருக்கும் ..:)
பெண்கள் வசமிருந்து ஆண்களுக்கு சென்றுவிட்டதோ 
இத்துறை எனும்  அளவுக்கு நிறைய ஆண்கள் சமையல்  துறையில் கோலோச்சுகிறார்கள் . நம்மூரில் ஆண்கள் சமைக்க   பற்பல காரணங்கள் உண்டு  தனிக்கட்டை வாழ்க்கை , 
ஹோட்டல் உணவை தவிர்க்க ,பணத்தை சேமிக்க ..இப்படி 

                        வெளிநாட்டில் உள்ள சமையல் நிபுணர்களை 
பாருங்கள் ,Heston Blumenthal ,Marco Pierre white,  Gordon Ramsey ,  
James Martin,     Keith Floyd,Anthony worral thompson ...இவர்கள் 
அனைவருமே இங்கிலாந்தின் பிரபல சமையல் நிபுணர்கள்     .

             நம்ம தொலைகாட்சிகளிலும் தாமு ,அறுசுவை அரசர் 
என அதிகம்ஆண்களையே  சமையல் நிகழ்சிகளில்
காட்டுகிறார்கள் இதில்வேறு  தல//தலப்பாக்கட்டு பிரியாணி 
செய்தார் //என்று  அடிக்கடி செய்தி ,படிக்க  பொறாமையாக 
இருக்கும் :)

எனக்கு திருமணம் நிச்சயமானதும்  வருங்கால கணவர் 
வெளிநாட்டில் படித்து வேலை செய்கிறார் .அங்கே அவரது 
சகோதரர்களுடன் இருக்கார் என்று சொன்னார்கள்....
மணமாகி கணவருடன் ஊருக்கு போனதும் முதல் இரண்டு 
மூன்று நாட்களுக்கு அவரின் சகோதர்கள் வீட்டுக்கு விருந்து 
சாப்பிட சென்றோம் .
அங்கே கண்ட காட்சிகள் வேறு எனக்கு  மிகவும் 
ஆனந்தமாக இருந்தது !  ஒவ்வொருவர் வீட்டிலும் 
மைத்துனர்கள் அழகா ஏப்ரன் கட்டிக்கொண்டு கிச்சனுக்கும் 
டைனிங் ஹாலுக்கு நடந்த வண்ணம் இருந்தாங்க ..:)

இப்படியே ஒரு வாரம் போனது எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம் ..
ரெடிமேட் நூடில்ஸ் மட்டுமே என் கணவர் பரிமாறினார் 
இதுவே இரண்டாம் வாரமும் தொடரவும் அவரே  சொல்லிட்டார்
 தனக்கு சமையல் தெரியாதென்று !....
.....(நான் மிரட்டவில்லை ).
நான் கேட்டேன் //அப்போ ஊரிலிருக்கும்போது எனக்கு போனில் சொன்னீங்களே ?அண்ணன் டின்னருக்கு வர்றார் ,தம்பி டின்னருக்கு
 வரார்னு ?....கணவர் ..//அது ..நான் காய்கறிகளை வாங்கி நறுக்கி 
வைத்துவிடுவேன் அவர்களே வந்து சமைப்பாங்க !!!//அவ்வ்வ்வவ் !
அங்கேயே மயங்கி விழாத குறைதான் எனக்கு .....

                            

சரி இப்போ நம்ம பிரபல பதிவர்கள் யார்யாரெல்லாம் சமையல் 
சிங்கங்கள் என்று பார்ப்போமா :) அம்மா ,பெரியம்மா ,சித்தி ,
அத்தை ,அண்ணி ,அக்கா தங்கச்சிங்க எல்லோரையும் வருக  !
வருக ! என அழைக்கிறேன் :)
அனைவரும் வந்து தட்டில் உள்ள நொறுக்குகளை எடுத்துகிட்டு 
நாற்காலியில் அமர்ந்துக்கோங்க :)
                                                                          


ஆண்கள் அனைவரும் இந்தாங்க சுவையான பன்னீர் சோடா 
கையில் எடுத்துக்கிட்டு சமையலறைக்கு போகலாம் :)

                                                                               
                                                                           
பிரபல எழுத்தாளரும் புத்தக பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி 
அவர்களின் பேட்டியும் ,கலக்கல் சமையல் குறிப்பும் இங்கே  
இது தினகரன் பத்திரிகையில் வெளியானது ..
தான் சமையல் செய்ய ஆரம்பித்த காரணத்தை தொடராக 
சொல்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி இங்கே அவரின் ஸ்பெஷல் 
ரெசிப்பியும் அங்கே உள்ளது .

முதலில் இவர் ஆஹா என்ன அழகு என்று அடை சாப்பிட அழைக்கின்றார் 
வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை மிளகாய் பொடிகொஞ்சம் 
தொட்டுக்கொள்ள ஆசை என்று பாட்டு பாடி அழைக்கின்றார் :)
சும்மா சொல்ல கூடாது .அருமையான சுவை !!

அடுத்த பதிவர் இவர் புது வித பயத்தம்  பருப்பு அல்வா 
செய்ய சொல்லிதறார் ..அதுமட்டுமன்றி ஒரு விழிப்புணர்வு 
தகவலையும் பகிர்ந்துள்ளார் ..கண்டிப்பா படிங்க .

இவரை உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் ..தெரியாத விஷயம் 
இவர் இவ்ளோ அருமையா காஜர் பராட்டா செய்வார் என்பது 

இவ்ளோ சுவையா ,ஆரோக்கியமான எலுமிச்சை ரசம் குறிப்பு 
தர இவர் ஒருவரால் மட்டுமே முடியும் ...இவர் தொலைக்காட்சி நிலையம் 
வேறு வைத்திருக்கிறாராம் ..குறிப்பு இங்கே :)

அடுத்து இவர் ஒரு சர்வதேச சமையல் ரெசிப்பி தந்திருக்கார் :)
ஸ்பானிஷ் உணவு  நானும் செய்து பார்த்தேன் ..ருசி அபாரம் !

ம்ம் அடுத்தவர் இவர் :)உருகி உருகி காதலித்தாலும் சமையலும் 
நல்லாவே செய்யறார் PANNA COTTA 
அத்துடன் ஒரு ஆரோக்கியமான ஸ்டார்டர்  இனிமே பால் கோபி குடிக்க மாட்டாரா ? :)

ஆஹா இவர் குறிப்பும் சூப்பர் :) திரட்டிப்பால் குறிப்பு வழங்குவது 
பிரபல DOHA பதிவர் :)

இவர் வாயூறும் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய 
சொல்லிதருகின்றார் இங்கே ...

இவங்க இ எ மி கா ஊறுகாய் போடசொல்லித்தராங்க இங்கே 

இவரின் ப்ளாகில் நிறைய குறிப்புகள் இருக்கு ஒவ்வொன்றா 
குறித்துகொள்ளவும் :)

சமைக்க தெரியாதவங்களுக்குன்னு அற்புத வழிகள்  :)
 இவரின் குறிப்புக்கள் பலருக்கு உதவலாம் 


இவரது மகனும் வருங்காலத்தில் சமையல் புலியாக 
வருவாரா :) இப்பவே எவ்வளவு விவரமா இருக்கார்னு பாருங்க 

மிக அருமையா இலையில் எப்படி உணவு பரிமாறணும் என்று 
விவரமாக சொல்றார் இங்கே  கொட் ரசம் சூப்பருங்கோ !
வெந்நீர் போடுவதற்கு  கூட இவ்வளவு அழகா குறிப்பு தர 
இவரால் மட்டுமே முடியும் :)

நிறைய குறிப்புகள் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன் அப்படியே 
இந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள் :)ஒவ்வொரு உணவையும் 
அருமையா பேர சொல்லி ,சொல்லி பாடுகிறார் இந்த பதிவர் :)
https://www.youtube.com/watch?v=JROigL20fwA



இன்றைய பதிவில் பகிர்ந்தவற்றை அனைவரும் செய்து பார்த்து 
சொல்லுங்க ..மீண்டும் நாளை சந்திப்போம் :)





அன்புடன் ஏஞ்சலின் .
                                                                        








மேலும் வாசிக்க...

Tuesday, April 29, 2014

அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)



மீண்டும் பள்ளிக்கு போகலாம் :)
                                                                                     

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு! 
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு' 
                               கண்ணதாசன்.
ஒரு நான்குவயது சராசரி குழந்தை ஒரு நாளைக்கு நானூறு 
கேள்விகளுக்கு மேல் கேட்கும் .!!
தனது வாழ்நாளில் 1368 கண்டுபிடிப்புகளை உலகிற்கு 
அறிமுகப்படுத்திய தாமஸ் ஆல்வா எடிசன் மூன்று மாதங்கள் 
மட்டுமே பள்ளிக்கூடம் சென்றாராம் .
பல பிள்ளைகளுக்கு பள்ளி என்றாலே ஒரு கசப்பு அனுபவம் ..
அப்படிப்பட்ட கசப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர் தான்
 ப்ரெடரிக் ப்ரோபெல் .ஆகவே தன்னை போலன்றி பிற்கால 
சந்ததியாவது சுமூகமான சூழலில் கல்வி கற்கணும் 
என்ற ஆவலோடு விளையாட்டு முறை கோட்பாடுகளை
 கொண்ட கிண்டர் கார்டன் பள்ளி முறையை கண்டுபிடித்தார் .
ஒரு குழந்தை தன்னை முழு மனிதனாக உருவாக்கிக்கொள்ளும் 
இடம் தான்ஆரம்ப பள்ளிக்கூடம் .அந்த இடம்  நாம் ஒரு பூங்கா 
அல்லது மலர்வனத்துக்குள்நுழையும்போது ஒரு இனிய 
சூழ்நிலை போல மனதுக்கு ரம்மியமாக இருக்க வேண்டும் .
அப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்தி  திடமான வருங்கால 
சந்ததியை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டவை கிண்டர்கார்டன் 
பள்ளிகள் .



திரும்பி பார்ப்பது எவ்வளவு ஆனந்தமான ஒரு அனுபவம் 
தெரியுமா :) நான் சொல்வது சந்தோஷமான தருணங்களை !
பலருக்கு நிச்சயமாக ஆட்டோகிராப் படத்தின் ஞாபகம் !
வருதே! ஞாபகம்  வருதே பாடல் மிகவும் பிடிக்கும் 
எனக்கும்  மிகவும் விருப்பமான பாடல் . எனக்கும் சேரனுக்கும் 
ஒரு ஒற்றுமை :)பள்ளி நினைவுகளை மீட்டியதில் .
எனக்கு  முதல் வகுப்பு எடுத்த ஆசிரியரின் 
பெயர் ..மல்லிகா ..இன்னொருவர் பெயர் உமா ..அவர்களின் 
இருவரது திருமணத்துக்கும் நாங்க அப்போ சேலம் சென்றோம் .
எப்படி ஒன்றாம் வகுப்பில் நடந்த விஷயம் எனக்கு இன்னும்
 நினைவு இருக்கு என்று இருவருக்கு (அதிரா ,கலை )
மட்டும் சந்தேகம் வரும் :)
எனக்கு அந்த இருவரின் மாப்பிளைகளுக்கும் அத்திருமணத்தில் உறவுக்கார்கள் போட்ட ஒரு ரூபாய் 
நோட்டு மாலை ஆளுயரத்துக்கு இருந்தது கூட இன்னும் 
நினைவில் இருக்கின்றது :)..
சின்னஞ்சிறு வயதில் சில விஷயங்கள் அழுத்தமாக மனதில்
 வேரூன்றிவிடும் ..அதனால்தான் பெரும்பாலானவர்களுக்கு 
அவர்கள் ஆரம்ப பள்ளிஆசிரியர்கள் இன்னமும் மனதில் 
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்  ...இப்போ 
அந்த பாடலை பார்த்துக்கொண்டே             
                                                                   



அப்படியே அப்படியே வரிசையில் வந்து ஆரஞ்சு மிட்டாய் 
எடுத்துக்கோங்க  :)

                                                                      


இப்ப என் கூட வாங்க உங்கள் அனைவரையும் அவரவர் 
பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் அழைத்து செல்கிறேன்   ..
                                                                

                                                 

நான் முதன்முதலா கின்டர்கார்டன் சென்ற அனுபவம் எனக்கு 
இப்பவும் நினைவிருக்கு ...ஆனா அந்த காலத்தில் 
படம் எடுப்பது போன்ற விஷயங்கள் இல்லாததால் அச்சம்பவங்களை 
மனதில் மட்டுமே அசை போடமுடிகிறது ..ஆனா ரோஷினி குட்டி 
அவங்க அம்மா இப்பவே பதிவில் 
அழகா அத்தனை நினைவுகளையும் சேமித்து வைத்திருக்கிறார் .

அதைப்போல சந்தனமுல்லை அவங்க பாப்பா பப்புவுக்கு எப்படி
எல்லாம் பள்ளி பற்றிய விவரங்கள் சேகரிச்சு இருக்காங்கன்னு 
இங்கே பாருங்க 

கீதமஞ்சரி 
ஆஸ்திரேலிய பள்ளி கல்விமுறையை விளக்கி இருக்காங்க 
..


தம்பி செங்கோவி ஸ்கூல் போலீசா இருந்த விஷயத்தை இங்கே 
சுவாரஸ்யமா சொல்லியிருக்கார் ..ப்ளே ஸ்கூல் பற்றி அவர் 
சொல்லியிருப்பது அவ்வளவும் உண்மை தெரு வீதிதான் நமக்கு 
play school அக்காலத்தில் .
நம்ம சகோதரி ராஜி பள்ளி வாழ்க்கை முழுவதையும் 
கவிதையாக வடித்திருக்கார் இத்தொடர்பதிவில் 

என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை !இப்போ 
இதெல்லாம் நடைபெற சாத்தியமுமில்லை !பின்னே 
இவர் படிக்கும்போது மூன்றாம் வகுப்புவரை மூன்று ரூபாய் 
தானாம் பள்ளிக்கட்டணம் !!!

என் குட்டி தம்பி இங்கே சின்ன சின்ன ஞாபகங்களை 
அழகா எழுதியிருக்கார் :)

இந்த பதிவர் P .E .வகுப்பில் புல்லு பிடுங்கினதை சொல்கிறார் 
நீ பரவாயில்லை தங்கச்சி :) நாங்க கிரவுண்ட் முழுதும் 
குப்பை பொறுக்குவோம் எங்க பள்ளியில்  .

இவரது பள்ளிக்கால நினைவுகள் வாசிக்கும்போது எனக்கு 
வலித்தது ...இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை .
எதை சொல்ல :(

அடுத்தது இவர் :) என் கண்ணில் இது மட்டும் பளிச்சினு 
தெரிந்தது ..பள்ளியில் பேசற பிள்ளைங்க பேர  எழுத 
சொன்னா எழுதி அப்படியே ஆசிரியர்கிட்ட கொடுக்கணும் :) 
அதை விட்டுட்டு ..மேலும் சென்று படிங்க இங்கே 

இவ்வளவு புத்திக்கூர்மை பதினோரு வயசிலேயேவா !!! 
இந்த பதிவர் பாருங்க ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தலைமை 
ஆசிரியரிடம் இன்னொரு நண்பியை அழைத்து கொண்டு போய் ஸ்கூல் அட்மிஷன்  வேண்டுமென கேட்டிருக்கின்றார் :) 


இவர் எழுதும் ஒவ்வொரு கதையின் 
கதா பாத்திரமும் அப்படியே தத்ரூபம் போலிருக்கும்  :)
இவர் கற்பனையாக எழுதினாலும் அச்சம்பவம் யாருக்கோ 
எங்கோ நிஜ வாழ்வில் நடந்திருக்கும் :)
மீண்டும் சாம்புவை அனைவருக்குமே பிடிக்கும் :)

அனைவரும் உங்களது பள்ளி நினைவுகளை திரும்பி 
பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் .உங்கள் 
பிள்ளைகளும் திரும்பி  பார்க்க உதவியாக SCRAP 
BOOKS செய்து வையுங்க ..
நன்றி நண்பர்களே நாளை  வேறொரு தலைப்புடன் 
உங்களை மீண்டும் சந்திக்கின்றேன் .

Angelin .









மேலும் வாசிக்க...

Monday, April 28, 2014

வணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் :)

வணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் ..அஞ்சு /அஞ்சு அக்கா /
காகிதப்பூக்கள் ஏஞ்சல் :)

                                                                                                   



அனைவருக்கும் முதலில் ஒரு பாரம்பரிய பிரித்தானிய கேக் :)




                                                                             

மற்றும் நமக்கே நமக்கு நம்ம நாட்டுக்கு  சொந்தமான தேன் மிட்டாய் :)
எடுத்துக்கோங்க                                                                        



என் மீது அபார நம்பிக்கை வைத்து வலைசரத்தில் ஒரு வாரம் ஆசிரியாக 
நியமித்த சீனா ஐயா ,தம்பி பிரகாஷ் ஆகிய இருவருக்கும் எனது பணிவான 
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் .
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திரு .வை.கோபாலகிருஷ்ணன் 
( கோபு  அண்ணா) அவர்கள் என்னை அழைத்திருந்த போதிலும் அப்போது 
எழுத இயலாத சூழ்நிலையால் தடை பட்டது .
ஆனால்  இடைப்பட்ட காலத்தில் என்னை நானே சுய பரிசோதனை செய்து 
இயன்ற வரையில் எனது எழுத்துக்களை சிறிதேனும் மேம்படுதியிருக்கின்றேன் 
என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதால் மிகுந்த சந்தோஷத்தோடு இப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் .



சரி :) இப்பொழுது என்னைப்பற்றி ...:) தருமபுரியில் பிறந்த தேவதை .
அப்பாவின் பணிமாற்றம் காரணமாக அடிக்கடி பல ஊர்களுக்கு பிரயாணம் 
செய்ததில் படிப்புக்கு இடையூறு வர வேண்டாமென சென்னையில் 
குடியேற்றபட்டோம் !
படித்து முடித்ததும் வானளாவிய கனவுகளுடன் திரிந்தேன் :) ஆனால் :)

இந்தியாவுக்கு ஒரு Jane Goodall,ஒரு தலை சிறந்த .I.A.S அதிகாரி !!
ஒரு வைஜெயந்தி I.P.S ...மன்னிக்கவும் ஒரு :)கிரண் பேடி ..கிடைக்கக்கூடாது 
என்று தலை விதி :) ...படிச்சதெல்லாம் போதும் என்று மணமுடித்து 
வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சிட்டாங்க :)...
படிச்ச படிப்பு உயர்நிலை பள்ளி படிக்கும் மகளுக்கு உதவியாக இருக்கு .

நம்ம ப்ளாக் உலக பிரவேசம் ..இதற்கு முழு காரணம் எனது அன்பு கணவர் தான் ..
ஒரு ஆங்கில வலைப்பூவை எனக்கு ஆரம்பித்து கொடுத்தார் .
அதற்கு முன்பு சுமார் ஒரு வருட காலம் எல்லார்  வலைபூக்களிலும்
 பின்னூட்டம் மட்டும் அளித்து வந்தேன் .அவ்வாறு வலையில் 
 நண்பரான //அந்நியன்// புகழ்  அயுப் அவர்கள் தமிழில் வலைப்பூ துவங்கி 
எழுதசொன்னார் ..அப்படி ஆரம்பித்தது தான் காகிதபூக்கள் ..
கடந்த ஒரு வருடமாக ஆலயத்தில் VOLUNTEER வேலை செய்வதால் பதிவெழுதுவது 
கொஞ்சம் குறைந்த போதிலும் பசுமை விடியல் மற்றும் நலம் ஆகியவற்றில்
 அவ்வப்போது என்னால் இயன்ற நேரம் பதிவுகளை எழுதி வருகின்றேன் ..

நான் எழுதிய பதிவுகளில் எனக்கே எனக்கு மிகவும் பிடித்தவை 

எங்க வீட்டுக்கு எங்கிருந்தோ ஓடிவந்தது இந்த பப்லு அதற்கு நான்தான்  உயிர் !!

நம்ம தமிழ் மொழி பாரெங்கும் பரவியிருப்பதை நினைத்து புல்லரித்து போச்சு !

இந்த பதிவு ஒரு தொடர் பதிவு ஒவ்வொருவரும்  எவ்வளவு பொக்கிஷங்களை 
சேர்த்து வச்சிருக்காங்க பாருங்க :)

நான் மிகவும் நேசித்த எனது பதிவு 


நானும் அவ்வப்பொழுது சமையல் பதிவும் எழுதியிருக்கேன் 

@ஜெய் அங்கே என்ன சிரிப்பு ?  :)

 நான் க்வில்லிங் மற்றும் கைவேலை செய்வேன் என்பதுதான் அனைவரும் 
என்னைப்பற்றி அறிந்தது ..இப்படி பற்பல விஷயங்களை நான் பகிர காரணமும் 
என் கணவர்தான் :) நான் கைவேலை செய்ய சேமித்து /ஒளித்து வைத்திருந்த 
பொருட்களை நான் ஊரில் இல்லாத சமயம் குப்பைன்னு நினைத்து வீசிட்டார் !
வேறு வழி இன்றி சமையல் மற்றும் விழிப்புணர்வு பதிவுகளுக்கு மாறிவிட்டேன் .

மீள்சுழற்சி முறையில் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி நான் செய்த 
வாழ்த்து அட்டைகள் இங்கே பாருங்க 



அங்காடிகளில் உள்ள அட்டைபெட்டிகளில் காற்று புக வட்ட வடிவம் 

இந்த அணிலார் பழைய பிரவுன் என்வலப்பை வெட்டி செய்தது 

க்வில்லிங் முறையில் செய்தது 





சரி  :) நட்புபூக்களே இத்துடன் எனது அறிமுகத்தை முடித்துகொள்கிறேன் ..
நாளை முதல் புதிய பல விஷயங்களுடன் உங்களை மறுபடியும் 
சந்திக்கின்றேன் .

இதுவரைக்கும் என்னைப்பற்றி ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள் 

யாராங்கே ஒரு கை மட்டும் தெரியுது ....உன் பெயர் என்ன பாப்பா? 

 ..

ரீச்சர் ..ரீச்சர் என் பேர் கலை கலைச்செல்வி கருவாச்சின்னு சுருக்கமா 
கூப்பிடுவாங்க ..எநக்கு ஒரே ஒரு சந்தேகம்........................................

ANGEL .....கேளும்மா 

நீங்க சுய பரிசோதனைன்னு சொன்னீங்களே .!
எந்த ஹோச்ச்பிடல அட்மிட் ஆகி பரிசோதிசிட்டீங்க ரீச்சார் ??

..

                                                                            


ஏஞ்சலின் 
                                      ஆஆஆ 
                                                                                                             
                                                       

மீண்டும் சந்திப்போம்  நட்புபூக்களே :)

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது