07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label Geetha Sambasivam. Show all posts
Showing posts with label Geetha Sambasivam. Show all posts

Sunday, November 10, 2013

பவளமல்லியைக் கோர்த்து விட்டு விடை பெறுகிறேன்.

அடுத்து ஏற்கெனவே பல முறைகள் சொல்லி இருக்கும் ஒரு தளம். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய தளம்.  இதனை ஆய்வு செய்து எழுதியவர் காந்தியவாதியான திரு தரம்பால் என்பவர்.  நம் நாட்டின் இன்றைய நிலைமைக்கு இத்தகைய ஆய்வுகள் தேவை என்பது என் கருத்து என்பதோடு இளைய சமுதாயம் பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியாவை நன்கறிந்து புரிந்து கொண்டால் இன்றைய இந்தியாவை சிறப்பான முறையில் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். வழிகாட்டியாகவும் இருக்கும். திரு தரம்பால் 2006 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் தான் இறந்தார்.

இந்தத் தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் இதன் செய்திகள் பரவலாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.  இவரின் "The Beautiful Tree" என்னும் புத்தகம் அனைவராலும் படிக்கப்பட வேண்டும். இதை இளைய நண்பர் திரு ஆமாச்சு என்பவர் தமிழில் மொழி பெயர்த்து வருகிறார்.

http://tinyurl.com/knf35cm/தரம்பாலின் படைப்புகள்

தரம்பால் குறித்த தளத்தின் சுட்டி

http://www.samanvaya.com/dharampal/தரம்பால்

இங்கே சென்று பார்க்கவும்.  ஆண்டவன் ஒருவனுக்கே அர்ப்பணம் செய்யப்படும் பவளமல்லியை ஒத்த இந்தத் தளத்தின் செய்திகள் அனைவருக்கும் சென்று பயனடையப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்து எனக்கு இணையம் வந்த சில நாட்களிலேயே அறிமுகம் ஆன மழலைகள் தளம்.

http://www.mazhalaigal.com/tamil.php/மழலைகள்

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளி வரும் இந்த இணைய இதழ் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.  இதில் எழுதி வரும் அனைவருமே ஐம்பது வயதைக் கடந்தவர்கள்.  தமிழ் மழலைகளில் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் புராணக்கதைகளில் இருந்து அறிவியல் தகவல்கள் வரை அனைத்தும் அளிக்கப் படுகிறது.  ஆங்கிலத்திலும் அவ்வாறே தரப் படுகிறது.  தமிழ் மழலைகளில்

 "http://www.mazhalaigal.com/ பிள்ளையார் பாட்டி

 என்ற பெயரில் என் படைப்புகளைக் காணலாம்.  அதோடு மற்ற எழுத்தாளர்களின் படத்துக்கு நேரே சுட்டினால் அவர்களின் படைப்புகளைக் காண முடியும்.

http://www.mazhalaigal.com/management/team/team-001/mglta007gss_geetha.php/

என் படைப்புகளை இந்தச் சுட்டியில் காணலாம்.

இதை நிர்வகிப்பது திரு ஆகிரா என்னும் ஏ.கே. ராஜகோபாலன் அவர்கள். பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர்  பொறியியலில் பட்டம் வாங்கி சில ஆண்டுகள் வேலை பார்த்த பின்னர்  வேலையை விட்டுவிட்டுப் பல தளங்களையும் நிர்வகித்து வருகிறார்.

இன்று வரையிலும் தொடுத்த கோர்த்த பூச்சரங்களில்  தாழம்பூவைப் பாவாடையாகவும், பவளமல்லியை அர்ச்சனைக்கும் பயன்படுத்தி மற்றவற்றை இணைய தேவதைக்கு மாலையாக்கிவிட்டு அடுத்து வரப் போகும் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விடை பெறுகிறேன்.

ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி, வணக்கம்.
மேலும் வாசிக்க...

தாழம்பூ மணக்குது! தொடுக்க இயலாது! பறிக்கலாம் வாங்க!

அடுத்ததாக மறைந்திருக்கும் தாழம்பூப் புதர்களில் இருந்து தாழம்பூ மலருகையில் வெடித்துக் கிளம்பும் மணம் எங்கும் பரவுவது போலப் பரவ வேண்டிய சில பதிவுகள்.  இவை அனைத்தும் கலைப்பதிவுகள். சில தொழில் நுட்பப் பதிவுகள்.  என்றாலும் தொழில் நுட்பமும் ஒரு கலை தானே! முதலில் ஒரு ஓவியக் கலை குறித்த பதிவு.

இது ஆங்கிலத்தில் இருக்கிறதாலே வலைச்சரத்தில் ஒத்துப்பாங்களானு தெரியலை;  என்றாலும் இந்த உயர்ந்த கலை அனைவருக்கும் தெரியணும்னு கொடுக்கிறேன். திரு ராகவேந்திர ப்ரசாத் என்னும் இளைஞரால் வரையப்படும் இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.  அதுவும் அந்தப் பிள்ளையார்!  ஆஹா!  தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயிலில் இருக்காராம்.  நீங்களும் பாருங்களேன்!

 http://raga-artblog.blogspot.in

  http://raga-artblog.blogspot.in/2013/04/vighnaharta.html/Art Blog

அடுத்ததும் கிட்டத்தட்ட ஓவியம், சிற்பம் சம்பந்தப் பட்ட பதிவு தான்.  இவரைக் குறித்து அநேகமாய் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  என்றாலும் மீண்டும் அறிமுகம் செய்கிறேன்.  சிங்கைவாசியான திரு விஜயின் ஆர்வம் சோழர், பல்லவர், முற்காலச் சோழர், பாண்டியர் காலச் சிற்பங்கள், சிலைகளைத் தேடி எடுத்து அவை குறித்த புராணக் கதைகளோடு பகிர்வதோடு அல்லாமல் எந்த எந்தச் சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்ற குறிப்பையும் தருகிறார்.  சிலைகள் திருட்டுப் போவதைத் தடுக்கவும் முயன்று வருகிறார்.  திவாகர் மூலம் அறிமுகம் ஆன இவரின் பதிவுகள் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் வருகின்றன.  இவரின் ஒரு சில பதிவுகளின் புராணக் கதைகளை நான் தொகுத்து அளித்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை.  தற்சமயம் இவரோடு தொடர்பு இல்லாவிட்டாலும் பதிவுகளைப் பார்க்கத் தவறுவதில்லை.  பின்னூட்டம்  எப்போவாவது கொடுக்கிறேன். :)))


http://poetryinstone.in/lang/ta/2009/03/05/seduction-of-the-deer-headed-sage.html

இங்கே ரிஷ்ய சிருங்கர் குறித்த சிற்பங்களையும் நான் தொகுத்து அளித்த விளக்கங்களையும் காணலாம். தற்சமயம் அவருக்கும் நேரமில்லை; எனக்கும்! :))))

http://poetryinstone.in/lang/ta/கல்லிலே கலைவண்ணம் கண்டோம் சிங்கப்பூர் விஜய்

அடுத்து இணையத்துக்கு வந்த நாளில் இருந்து நண்பரான திரு விழியன் என்னும் உமாநாத்.  சிறந்த புகைப்படக் கலை நிபுணர்.  இவரின் படங்களை இவரின் பதிவுகளில் கண்டு அசந்து போயிருக்கேன். எங்க வீட்டுக்கு வரேன்னு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாகச் சொல்லிட்டு இருக்கார்.  வந்தால் தான் நிச்சயம்.  காமேஷ் கல்யாணத்தின் போது நேரில் சந்தித்தேன். குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதில் நிபுணர்.  குழந்தைகளுக்கான புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். இவரின் செல்ல மகள் குழலியும் ஒரு குழந்தை எழுத்தாளர்.  அவளின் மழலை மொழியில் பல கதைகளைச் சொல்கிறாள் இப்போதே.


அவருடைய புகைப்படப் பதிவுகளின் சுட்டியை மட்டுமே எடுக்க முடிந்தது. அங்கே சென்றால் உங்கள் விருப்பம் போல் எந்த ஆல்பத்தை வேண்டுமோ திறந்து பார்க்கலாம்.

  http://vizhiyan.wordpress.com/vizhiyan-clicks/விழியன் பக்கம்/

அடுத்துக் கோலங்கள் உதயன்.  இவரும் அருமையாகப் புகைப்படங்கள் எடுக்கிறார். மதுரைக்கருகிலுள்ள சுற்று வட்டார கிராமங்களுக்குச் சென்று அரிய புகைப்படங்களை எடுத்து வருகிறார்.  அவற்றில் பலவும் அடங்கும்.  அந்தக் காலச் சமணப்பள்ளிகள், படுக்கைகள் போன்றவற்றையும் எடுத்துள்ளார்.  அனைத்தும் மூதாதையரைத் தேடி என்ற தலைப்பில் தொகுத்து வருகிறார்.

 http://udhayan-photos.blogspot.in/ உதயனின் உதார்கள்/

 உதயனின் உதார்கள் என்ற பதிவுகளில் இவற்றைக் காணலாம்.  இவருடைய கோலங்கள் குறித்த தளத்தின் சுட்டியின் வழியே அந்தத் தளம் கிடைக்கவில்லை.

அடுத்ததாக நாம் ஏற்கெனவே பார்த்த கவிதைகளிலும், தூதுக்குறளிலும் கலக்கிய திரு துரை அவர்களின் புகைப்படத் தொகுப்புகள். இவரும் அரிய பல காட்சிகளைப் படமாக்குவதோடு ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும் அவங்க வீட்டு சமையல் காட்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்வார். :)))))

http://www.flickr.com/photos/duraian/ துரை ந.உ.

அடுத்துத் திரு தங்கம் பழநியின் வலைப்பூ தொழில் நுட்பம்.

http://www.tholilnutpam.com/தொழில் நுட்பம்

சில வருடங்களாகப் படித்து வருகிறேன்.  அதிலும் முக்கியமாய்ப் ப்ரின்டர் தகராறு செய்தால் இந்தப் பதிவைப் படிப்பேன். புரியுதா என்னங்கறது வேறு விஷயம். :)))

http://www.tholilnutpam.com/2013/11/HP-OfficeJet-Pro-3620-with-ePrint4-and-HP-mobile-printing-apps-8.html/

அடுத்து தி.வா. வின் "தொண்டு கிழங்களுக்கு கணினி" வலைப்பூ.  இவரும் பல அரிய தகவல்களைத் தருகிறார்.  ஸ்க்ரீன் ஷாட்டெல்லாம் எடுத்துப் போட்டு மெனக்கெட்டு நேரத்தைச் செலவழித்து என் மரமண்டையில் ஏற்றப் பார்ப்பார்.  ஆனால் மண்டையில் ஏறாது என்பதே உண்மை.  எதையும் ஒரு முறை நேரில் பார்க்கணும் என்று எனக்குத் தோணும்.  அதிலும் முக்கியமா மின்னாக்கம் செய்யும் வழிமுறைகள். நேரம் அவருக்குக் கிடைப்பது கஷ்டம். பார்க்கையில் கேட்கவெனப் பல கேள்விகள் வைச்சிருக்கேன்.  ஆனால் எப்போவோ பார்க்கும்போது அது எல்லாமும் மறந்துடும். :)))

இதைப் பலரும் அறிமுகம் செய்திருக்காங்க என்றாலும் தொண்டு கிழம் அல்லாத என் மூலம் அறிமுகம் ஆவதில் பெருமை அடைகிறேன். இளைஞர்களுக்கு கணினி னு சொல்லி இருந்தால் புரிஞ்சிருக்குமோ? சந்தேகமா இருக்கு! :)))

http://techforelders.blogspot.in/தொண்டு கிழங்களுக்கு கணினி

அடுத்தது ஒரு முக்கியமான தளம் கணியம்.

திரு ஶ்ரீநிவாசன் என்பவரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு பல இளைஞர்களால் எழுதப்பட்டு வெளிவரும் இந்த இதழில் எளிய தமிழில் லினக்ஸ் இயங்கு தளம் குறித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள்.  இங்கே பார்க்கவும்.

http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1/எளிய தமிழில்

மேலும் இவற்றை க்ரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடுவதால் யார் வேண்டுமானாலும் காப்பி, பேஸ்ட் செய்து வெளியிடலாம்.  திருத்தவும் திருத்தலாம்  வணிக ரீதியிலும் வெளியிடலாம்.  ஆனால் மூலப் புத்தகம், அதன் ஆசிரியர், http://www.kaniyam.com/ ஆகியன பற்றிக் குறிப்பிடுவதோடு மற்றவர்களுக்கும் இதே உரிமையைத் தர வேண்டும்.  வெளியிடுவதை க்ரியேடிவ் காமன்ஸ் பெயரில் வெளியிட வேண்டும்.

அவ்வளவு ஏன்?  உங்கள் பதிவுகளைக் கூட நீங்கள் இம்முறையில் மின் புத்தகமாக வெளியிடச் செய்யலாம்.  உங்கள் பதிவுகளில் காப்பி ரைட்டுக்கு உள்ளாகும் பதிவுகள் இல்லாமல் சொந்தப் பதிவுகளாய் இருந்தால் க்ரியேடிவ் காமன்ஸ் மூலம்  வெளியிட்டு அனைவரையும் பயனடையச் செய்யலாம்.

அடுத்துக் கீழுள்ள சுட்டி இன்று (9--11--13) தற்செயலாகப் படிக்க நேர்ந்த ஒரு பதிவு இது.  திரு ஶ்ரீநிவாசன் (கணியம்) இதழின் பொறுப்பாசிரியர் குழுமத்துக்கு அனுப்பி இருந்த சுட்டிகளில் படித்தேன். நீங்களும் படிச்சுப் பாருங்க.  :)))

http://othisaivu.wordpress.com/2013/10/19/post-267/ஒத்திசைவு

இதிலே மூன்றாவது பகுதி வந்தாலும் முதலிரு பகுதிகளுக்கான சுட்டியும் முதலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.  படித்துவிட்டுக் கருத்துப் பரிமாற்றம் செய்யவும்.  நன்றி. :)))))))

அடுத்ததாக இளைஞர் விநோத் ராஜனின் புதிய ஆக்கம் அவலோகிதம்.  அது குறித்து அவர் கூறுவது:

அவலோகிதம் - ஒரு தமிழ் யாப்பு மென்பொருள் ஆகும். உள்ளிடப்பட்ட உரையினை தமிழ் யாப்பு விதிகளின் படி ஆராய்ந்து - எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய யாப்பு உறுப்புக்களை வெளியிடும். இவற்றைக்கொண்டு உள்ளீட்டின் பாவகையினையும் கண்டுகொள்ளும்.
பண்டைய தமிழ் மஹாயான பௌத்தர்கள் தமிழ் மொழியை அகத்தியருக்கு உபதேசித்தவராக கருதிய, சர்வபுத்தர்களின் மஹாகருணையின் உருவகமாக விளங்கும் பகவான் போதிசத்துவர் அவலோகிதேஸ்வரரின் பெயர் இம்மென்பொருளுக்கு இடப்பட்டது.
இம்மென்பொருள் பெ.ஹெச்.பி'ல் [PHP] இயற்றப்பட்டு கூகிள் ஆப் இஞ்ஜினில் இயங்குகிறது. இதற்கு ரெஸ்ட் ஏ.பி.ஐ'யும் உள்ளது. கூடவே டெர்மினலில் இருந்தும் இதை செயல்படுத்தலாம்.
நீங்கள் இம்மென்பொருளினை விரும்பி, அதற்கு உதவ விரும்பினால் கீழ்க்கண்ட பே-பால் இணைப்பை சொடுக்கவும் அல்லது எனது அமேசான் விருப்ப-பட்டியலில்உள்ளதையும் கொடுக்கலாம் !
இம்மென்பொருள் தற்போது கிட்ஹப்பில் உள்ளது. நீங்கள் இந்த மென்பொருளின் வளர்ச்சியில் பங்களிக்க விரும்பினால், நிச்சயம் செய்யலாம்.
இது ஒரு கட்டற்ற மென்பொருள்.

தளம் - http://www.avalokitam.com/

மூல நிரல் - https://github.com/virtualvinodh/avalokitam

ஆக்கம் - வினோத் ராஜன்.
மேலும் வாசிக்க...

Saturday, November 9, 2013

ரோஜாப் பூவைத் தொடுக்கிறேன்.

இதழ்களைத் தொட்டாலே கையெல்லாம் மணக்கும் பூ ரோஜாப் பூ.  அதோடு மட்டுமின்றி அதிலிருந்து குல்கந்து, மணக்கும் அத்தர், பன்னீர், வாசனை திரவியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.  அதோடு மருத்துவ குணங்களும் நிறைந்தது ரோஜாப் பூ.  மலமிளக்கியாகவும் செயல்படும் ரோஜா, மலச் சிக்கலுக்கும் செயல்படும்.  அதே போல் இங்கே சில வலைப்பூக்கள் நமக்குப் படித்தாலே என்றென்றும் பயன்படும் விதத்தில் உள்ளதோடு அல்லாமல், இன்றைய கடின வாழ்க்கை முறையை எளிதாகக் கடக்கும் முறைகளையும் கற்றுக் கொடுக்கிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை எளிதாக்கும் பல்வேறு யோசனைகளை மறைமுகமாகச் சொல்லிக் கொடுக்கின்றனர் பல பெரியவர்கள்.  அவர்களில் நன்கறிந்த சிலரை இன்று பார்க்கலாம்.

அடுத்துச் சில பெரியவர்களின் வலைப்பூக்கள்.  சொல்லுகிறேன் என்ற தலைப்பில் எழுதும் காமாட்சி அம்மாள் எனக்குத் தான் புதியவரே தவிர இணையத்தில் பலருக்கும் நன்கு அறிமுகமானவராகவே இருக்கிறார்.  எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அறிமுகம் செய்து நான் அங்கே சென்றேன்.  இந்த வயதிலும் கணினி கற்றுக் கொண்டு பதிவுகள் எழுதி வரும் அம்மா போற்றுதலுக்கு உரியவர். அவரிடமிருந்து நாம் கற்க வேண்டியவை நிறைய உள்ளது. அவங்களோட வலைப்பூ

 காமாட்சி அம்மாள்http://chollukireen.wordpress.com/சொல்லுகிறேன்

இதை அடுத்து இன்னொரு   பெரியவங்களோட வலைப்பூ, பாட்டி சொல்லும் கதைகள். இவங்களோட வலைப்பூப் பத்தி வெங்கட் நாகராஜ் சொல்லி அறிந்து கொண்டேன். இவங்க இப்போ ஶ்ரீரங்கத்தில் தான் இருப்பதாகவும் அறிந்தேன்.  குழந்தைகளுக்கு ஒரு அருமையான பாட்டியாக இவங்க சொல்லும் கதைகள் எல்லாமே மிக அருமையானவை.

http://chuttikadhai.blogspot.in /ருக்மிணி சேஷசாயி  பாட்டி சொல்லும் கதைகள்.



அடுத்து என் நீண்ட நாள் நண்பரான திரு நடராஜன் கல்பட்டு அவர்கள். 82 வயதாகும் இவரின் முதுமைக்கால வாழ்க்கை பற்றிய பேட்டியைப் பொதிகைத் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பினார்கள். மிகச் சிறு வயதிலிருந்தே  பறவைக் காதலரான இவரின் வலைப்பூ

http://kalpattaarpakkangkal.blogspot.in/கல்பட்டார் பக்கங்கள்

பறவைகளைப் பற்றி எந்தத் தகவல் வேண்டுமானாலும் இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பறவைகள் மட்டுமில்லாமல் பூச்சிகள், பல்லி வகைகள், காட்டு மிருகங்கள் என அனைத்தையும் குறித்து இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வண்டி வண்டியாகத் தகவல் சுரங்கமாக இருக்கிறார்.  அதோடு புகைப்படக் கலையிலும் நிபுணர் இவர். அந்தக் காலக் கறுப்பு, வெள்ளைப் படங்களிலிருந்து இக்காலத் தொழில் நுட்பம் வரை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

அடுத்த பெரியவர்

 http://gmbat1649.blogspot.in/2013/11/blog-post_3.html/அலைகள் ஓய்ந்த பிறகு

இவரும் பல அரிய பதிவுகளை எழுதி இருக்கிறார்.  இவரின் பதிவுகளில் அவதாரக் கதையும் ராமாயணம் குறித்து இவர் எழுதியதும் முக்கியமானது.  பதிவில் தேட முடியவில்லை.  தேடுதலுக்கான ஆப்ஷன் இல்லை.  திரு ஜிஎம்பி அவர்களே பின்னூட்டத்தில் அளித்திருக்கும் சுட்டிகளை இங்கே இணைக்கிறேன்.
gmbat1649.blogspot.in/2011/06/blog-post_11.htm/சாதாரணன் ராமாயணம்

gmbat1649.blogspot.in/2011/10/blog-post_21.html/கிருஷ்ணாயணம்

அடுத்ததாக நாம் அனைவரும் நன்கறிந்த திரு சுப்புத்தாத்தா அவர்கள்.  அவருடைய மனதுக்குப் பிடித்த வண்ணம் யாராவது பதிவு எழுதினால் தாத்தா விளம்பரம் செய்வார்.  அதே போல் கவிதைகள் எழுதினாலும், இறைவன் மேலும், இறைவி மேலும் பாடல்கள் எழுதினாலும் சுப்புத்தாத்தா அவர்கள் அதைப் பாடலாகப் பாடி வெளியிடுவார்.  அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்டது பார்வதி ராமச் சந்திரனின் தீபாவளிக் கவிதை.

https://www.youtube.com/watch?v=cfSeZSZdUY8/சுப்புத்தாத்தா பாடல்v=cfSeZSZdUY8

  http://subbuthatha72.blogspot.in/2013/10/blog-post_29.html/சுப்புத்தாத்தாவின் வலைப்பூ

இதோடு விட்டாரா?  சினிமாப் பாடல்களின் ஆதார ராகங்களைக் கண்டறிந்து அது குறித்தும் எழுதி வருகிறார் இங்கே.

http://movieraghas.blogspot.in/Movie Raghas (or) Moving Raghas


இன்னும் நிறையப் பெரியவங்க இருக்கலாம்.  ஆனால் நானறிந்தவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்.  மத்தவங்க மன்னிக்கணும்.

மேலும் வாசிக்க...

Friday, November 8, 2013

ஜாதிப் பூவைத் தொடுக்கிறேன்.

ஜாதிப் பூக்கள் சீக்கிரம் வாடினாலும் அதன் மணம் குன்றாது.  அப்படிச் சில எழுத்தாளர்களின் எழுத்தை நாம் பல நாட்கள் ஆனாலும் அசை போட்டுக் கொண்டு ரசித்து யோசிக்கலாம்.  அப்படிப் பட்ட எழுத்தாளர்களுள் சிலரின் எழுத்துக்களைக் காண்போம்.


அடுத்து அனைவரும் நன்கறிந்த "வல்லமை"மின்னிதழின் ஆசிரியர் திருமதி பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்களின் வலைப் பூ. பெண்களைக் குறித்தும் அவர்களின் முன்னேற்றங்கள் குறித்தும் அதீத அக்கறை கொண்ட பவளசங்கரியின் எழுத்தும் அதைச் சார்ந்தே இருக்கும்.  அது மட்டுமின்றிக் கவிதை, கதை எனக் கலக்குவார். வல்லமையைச் செம்மையாகச் செலுத்திச் செல்லுவதில் இவரின் வல்லமையும்  பஙக்ளிக்கிறது என்பது இணைய உலகம் அறிந்ததொரு விஷயம். இசைக்கவி ரமணனோடு "கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் பொதிகையில் தோன்றித் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டினார்.

இவருடைய நூல்கள் விடியலின் வேர்கள்,  வெண்ணிலவில் ஒரு கருமுகில், நம்பிக்கை ஒளி ஆகியன புத்தகமாக வெளி வந்திருக்கின்றன.. http://coralsri.blogspot.in/2013/10/blog-post_27.html#more நித்திலம்:சித்தன்னவாசல்


அடுத்தவராக மைத்துளிகள் எழுதும் மாதங்கி மாலி.  இவர் எழுதும்போது அந்த எழுத்தில் ஆழம் தெரியும் இவரின் அபாரமான  மன முதிர்ச்சியும் வெளிப்படும்.  ஆனால் நேரில் பார்க்கையில் குழந்தை மாதிரிப் பழகுவார். தான் பார்த்த ஒரு திரைப்படம் குறித்த இவரின் விமரிசனம் இங்கே.

http://maiththuli.blogspot.in/2012/11/omg-oh-my-god.html மைத்துளிகள் ....OMG பட விமரிசனம்

அடுத்ததாகவும் அனைவருக்கும் நன்கு தெரிந்தவரே.  எங்கள் ப்ளாக் ஶ்ரீராம். இவர் கதை, கவிதை, கட்டுரை என அனைத்துத் துறையிலும் கலக்குகிறார். அதீதம் மின்னிதழில் வந்த இவரின் வெங்கிட்டு அனைவரையும் கவர்ந்த ஒன்று.

http://www.atheetham.com/ வெங்கிட்டு/அதீதம்

அடுத்தவர் எனக்குப் புதியவர், பலருக்கும் அறிமுகம் ஆகி இருக்கலாம்.

 http://antharaththottam.blogspot.in/2013/10/co_31.html#gpluscommentsதீபாவளி, C/O ???

ரிஷபன் சாரின் + ஐ பார்த்துத் தான் தீபப் ப்ரியாவின் இந்தப் பதிவுக்குப்போய் அவங்களின் கதைகளைப் படிக்கிறேன்.  இம்முறை அவங்க எழுதிய தீபாவளிச் சிறப்புச் சிறுகதை.  அம்மாடியோவ்!  என்ன ஒரு கற்பனை! சிந்தனை! உண்மையில் முடிவு  நான் எதிர்பாரா ஒன்று. நீங்களும் போய்ப் படிச்சுப் பாருங்களேன்.


அடுத்து திரு க.ரா. அவர்களின் வலைப்பூ.

 க.ரா. அப்பா காணாமல் போனார் http://satturmaikan.blogspot.in/2013/11/blog-post.html#gpluscomments

அடுத்ததாக திரு க.ரா. வின் வலைப் பூ.  இதுக்கும் ஶ்ரீராம் + விட்டிருந்தாரோ? ஆமாம்னு நினைக்கிறேன்.  வெகு சரளமான நடை.  தேர்ந்த எழுத்தாளரைப் போன்ற சிந்தனை.  அம்மாவின் பயமும், அப்பாவின் கண்டிப்பும் கண்ணெதிரே கொண்டு வந்த திறமை. முடிவு அருமையோ அருமை.


அடுத்ததாக நாம் அனைவரும் நன்கறிந்த வலைப்பூவான

http://azhiyasudargal.blogspot.in/  அழியாச் சுடர்கள்

இதில் பல்வேறு  எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் குறித்த விமரிசனங்கள், பல்வேறு நேர்காணல்கள் எனக் கொட்டிக் கிடக்கின்றன. நமக்கு எது விருப்பமோ அதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.  நீங்களும் நீங்கள் படித்த கதையையோ, கட்டுரையையோ குறித்த விமரிசனங்களை அனுப்பி வைக்கலாம்.

தேர்ந்த எழுத்தாளரான ஜீவி அவர்களின் வலைப்பூ இன்னொரு உதாரணம்.  இதில் இவர் பல எழுத்தாளர்களையும் அவர்களின் முக்கிய ஆக்கங்களையும் குறித்துப் பகிர்ந்திருக்கிறார் என்பதோடு அவ்வப்போது யோசித்து யோசித்து அருமையான கதைகளை எழுதி வருகிறார்.  இது எப்படி எனில் ஒரு சிற்பி தன் மனதுக்குப் பிடித்த சிற்பத்தைச் செதுக்குகையில் எவ்வாறு கொஞ்சம் செதுக்கி விட்டுப் பின்னர் தள்ளி நின்று ரசித்து அதைச் சரி பண்ணி விட்டு மீண்டும் செதுக்கிவிட்டு மீண்டும் ரசனையோடு பார்த்தவண்ணம் செதுக்குவானோ அப்படி யோசித்து யோசித்துச் சொற்களால் பின்னல் போட்டு அதை அழகாக்குக்கிறார். ஒவ்வொரு கதைகளும் ஒரு சிறு குறுநாவல். இப்போதெல்லாம் பத்திரிகைகள் கதைகளே வெளியிடாமல் இருக்கும் காலத்தில் இவ்வாறான கதைகளை இணையத்திலாவது படிக்க முடிகிறதே என்ற திருப்தியும் ஏற்படுகிறது.


பூ வனம்: இனி (பகுதி 14) http://jeeveesblog.blogspot.in/2013/10/14.html
மேலும் வாசிக்க...

Thursday, November 7, 2013

முல்லைப் பூவைத் தொடுக்கிறேன்!

முல்லைப்பூக்கள் பார்க்கச் சிறியவையாக இருந்தாலும் காத தூரத்துக்கு மணம் வீசுவதோடு விரைவில் வாடாது.  அது போல சில மணம் வீசும் வலைப்பூக்களை இப்போது பார்க்கலாம்.  இவர்களில் திரு இன்னம்பூராரும் சரி, சுபாவும் சரி, கண்ணனும் சரி மற்றும் மிருதங்க வித்வான் திரு ஈரோடு நாகராஜன் அவர்களும் சரி, பார்க்கச் சாதாரணமானவர்களாகவே இருந்தாலும் அவர்கள் செய்யும் செயல்கள் அரியவை, அபாரமான ஒன்று.

ஏற்கெனவே திரு இன்னம்புராரைக் குறித்து என்னோட பதிவிலே எழுதி இருக்கேன். கும்பகோணத்துக்கு அருகிலுள்ள இன்னம்பூரைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் தந்தையின் வேலை நிமித்தம் சுற்றியது பல ஊர்களில்.  பிறந்தது அரியக் குடியில்.  சமீபத்தில் அரியக்குடி சென்று தான் பிறந்து வளர்ந்த வீட்டைப் பார்வையிட்டு வந்தார். 81 வயசிலும் சுறுசுறுப்பாகத் தமிழ் கற்றுக் கொள்வதோடு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாணவராகவும் சேர்ந்திருக்கிறார்.  யாப்பருங்கலக் காரிகையும், நற்றிணையையும் ஒரு கை பார்த்துட்டார். மத்திய அரசில் தணிக்கையாளராக மிகப் பெரிய பதவியில் பணியாற்றிய இவர் தற்சமயம் லண்டன்வாசி.  அங்கே சென்ற பின்னரே வலைப்பதிவு ஆரம்பிச்சார்னு நினைக்கிறேன்.  தணிக்கைத் துறையில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து வந்த இவர் இந்த வலைப்பதிவு மூலமும் அரிய பல செய்திகளைத் தருகிறார்.

http://innamburan.blogspot.co.uk/  அன்றொரு நாள்

என்ற தலைப்பிலே ஒவ்வொரு ஒவ்வொரு தேதியிலும் நடைபெற்ற குறிப்பிட்ட பிரபலமான சம்பவங்களையும், நினைவுகளையும் அருமையாகப் பகிர்ந்து வருகிறார்.  உன்னதமான எழுத்து.  உணர்வு பூர்வமாகவும் இருக்கும். இதைத் தவிரவும்

http://innamburan.blogspot.de/view/magazine/    பலபட்டறை

என்ற பெயரில் பல்வேறு விஷயங்களையும் தொகுத்து அளிப்பதோடு தமிழை ஒலி வடிவிலும் அளிக்க முயன்று வருகிறார்.

http://www.olitamizh.com/

அங்கே ஒரு முறை சென்று பாருங்கள்.  நாதஸ்வர இசை மனதை மயக்கும். உள்ளே சென்றும் கேட்கலாம்.


அடுத்ததாக தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைத்தளம்.

http://tamilheritagefoundation.blogspot.com/வலைப்பூங்கா

இங்கே என்னதான் கிடைக்காது!  எல்லாமும் கிடைக்கும்.  பல்வேறு எழுத்தாளர்களின் பகிர்வுகள், இலக்கியப் பகிர்வு, ஆன்மிகப் பதிவு, வரலாறு, நாட்டார் வழக்கங்கள் குறித்த பதிவுகள் என அனைத்தையும் காணலாம். மலேசியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து சில காலம் வேலை பார்த்துப் பின்னர் எம். எஸ்.சி படிப்புக்காக ஜெர்மனி வந்து பணியாற்றிப் பின்னர் திருமணம் மூலம் ஜெர்மனியில் வந்து குடியேறி இருக்கும் திருமதி சுபாஷிணி ட்ரெம்மலும்,

http://subaillam.blogspot.in/ மலேசிய நினைவுகள்

http://subahome2.blogspot.com/  ஜெர்மனி நினைவலைகள்


கொரியாவில் பணியாற்றித் தற்சமயம் மலேசியாவில் பணியாற்றி வரும் விஞ்ஞானி

 நா. கண்ணன்   http://emadal.blogspot.in/ கவினுலகம்

காசுமிசான்  http://nakannan.subaonline.net/poem/philk2.html 

அவர்களும் இணைந்து ஆரம்பித்தது தமிழ் மரபு அறக்கட்டளை
இவர்கள் இருவரின் சுறுசுறுப்பும், உழைப்பும் ஈடு இணையற்றது.  தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்ட வலைப்பூக்கள் தான் கீழே உள்ளவை.யும் மேலே சொன்னதும். அறக்கட்டளையின் மடலாடல் குழுமம் மின் தமிழ்.

http://voiceofthf.blogspot.in/ மண்ணின் குரல்

பல்வேறு நபர்களின் பேட்டிகளையும் தமிழ் மண்ணின் குரலாக இங்கே ஒலிப்பதிவாகக் காணலாம்.  இதிலே சைகோன் மாரியம்மன் கோயில் பூசாரியின் ஒலிப்பதிவும் அடங்கும்.  பிரபலக் கல்லூரியின் தலைவரின் ஒலிப்பதிவும் பற்பல தமிழ் ஆன்றோர்களின் ஒலிப்பதிவுகளும் அடங்கும்.

http://video-thf.blogspot.com/ விழியக் காட்சிகள்


இங்கே பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களின் முக்கியத்துவங்களையும் தமிழ் மண்ணுக்கே உரிய பல கலாசாரங்களின் பதிவுகளையும் கோயிலின் திருவிழா நிகழ்வுகளையும் படக்காட்சிகளாகக் காணலாம்.

http://image-thf.blogspot.in/ மரபுப் படங்கள்

மரபு சார்ந்த படங்கள், வரலாற்றுச் சின்னங்கள், அரிய சிற்பங்கள், சிலைகள் ஆகியவற்றின் நிழற்படங்களை இங்கே காணலாம்.  இதைத் தவிர அரிய பல பழைய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியன சுபாஷிணியாலும், கண்ணனாலும்  மின்னாக்கம் செய்யப்பட்டும் வெளியிடப் படுகின்றன.

http://erodenagaraj.blogspot.in/2013/09/blog-post.html/எல்லாப் பூக்களையும்

மிருதங்கக் கலையில் வல்லவரான ஈரோடு நாகராஜ் அவர்கள் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். பல்வேறு விஷயங்களையும் நுணுக்கமாகக் கவனித்து அதை விவரிப்பதில் தேர்ந்ததொரு எழுத்தாளர் எனலாம்.  தன் குருநாதரின் மறைவைக் குறித்துத் தனக்கு ஏற்பட்ட உள்ளுணர்வை வார்த்தைகளில் வடிப்பதைப் பாருங்கள்.

த்யானம் செய்ய பெரியவாளின் எதிரில் அமர்ந்ததும் ஏதும் கோவையாகச் செய்ய விடாமல் முற்றிய இரவொன்றில் அடர்வனத்தின் ஆழ்ந்த கருமை, இமை மீது ஏறிப் படர்ந்ததைப் போன்ற உறக்கம் வந்து தள்ளியது. விளக்கேற்ற விடாமல், மந்திரத்தில் மனம் லயிக்க விடாமல், மயங்கிக் கிடக்கையிலும் ப்ரக்ஞை தோன்றும் நன்கறிந்த ஒரு பாராயணத்தின் வரிகளை மறந்துபோய் மலங்க மலங்க விழிப்பதைப் போன்று, தைல தாரையொன்று நீர்த்துப் போய் குழாய் ஜலமாய்த் தெறிப்பதைப் போல நிலைபடாமல் தவித்தது.
மேலும் வாசிக்க...

Wednesday, November 6, 2013

மகிழம்பூவைத் தொடுக்கிறேன்.

மகிழம்பூ நாள் ஆக ஆக மணம் வீசும் வகை.  அது போல் மலர்ந்து பன்னாட்கள் ஆனாலும் மணம் வீசும் மகிழம்பூவைப் போலவே தமிழும், தமிழ்க் கவிதைகளும்.  எந்நாளும் மணம் வீசிப் பரப்பும் வகையைச் சேர்ந்தவை. அதிலும் மரபுக் கவிதைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலே எனக்கு மிகவும் பிடித்த சில நண்பர்களின் கவிதைகளைப் பார்ப்போம்.

இப்போ சில நண்பர்களின் வலைப்பூக்களைப் பார்ப்போம். தமிழில் கவிதைகள் அதுவும் மரபுக் கவிதைகள் எழுதி வருபவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் தங்கமணி அம்மாள்.  புத்தகம் ஒன்றும் வெளியிட்டிருக்கிறார். என் பணி அரன் துதி என்ற பெயரில். அம்மா அவர்களின் பதிவுக்கு இப்போது அதிகம் போகமுடியவில்லை. சந்தவசந்தத்திலேயே படிச்சுடறேன்.  ஆகையால் பதிவிலே போய்ப் பாராட்டுக்கள் சொல்ல முடியலை. எல்லாம் சோம்பல் தான் காரணம். திடீர்னு ஒரு நாள் நினைச்சுண்டு போய் மறுபடி படிச்சுட்டுப் பின்னூட்டம் போடுவேன்.  என்றாலும் அம்மா அவர்கள் என்னிடம் தனி அன்பு கொண்டவர். சமீபத்தில் படித்ததில் பிடித்தது.

எமது கவிதைகள்http://kavidhaithuligal.blogspot.in/2013/10/3.html

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--5

துடியோ டொலிக்கும் பம்பையுடன்
...சுழன்றே ஆடும் நடம்கண்டு

அந்த முதல் வரியில் சுழன்று ஆடும் நடராஜன் கண்முன்னே தெரிகிறான் இல்லையா?


அடுத்து அருமை மகன் திரு துரை அவர்களின் வலைப்பூ. தூத்துக்குடி இஞ்சினியர் ஆன இவரின் வலைப்பூப் பத்திப் பலதினசரிகளிலும் வந்துள்ளது.

http://marabukkanavukal.blogspot.in/மரபுக் கனவுகள்

இங்கே இவர் இருவரியில் தூதுக்குறள்களைச் சொல்கிறார் பாருங்கள். ஆசான் குறித்த இந்தக் குறள் என்னை மிகவும் கவர்ந்தது.

 ஆசான்
ஏணியாய் நிற்பாராம்; ஏற்றி விடுவாராம்;
தானிருப்பார் தன்நிலைமா றாது [340]

குறளும் காட்சியும் என்ற இந்த வலைப்பூவில்,
குறளும் காட்சியும்
http://visualkural.blogspot.in/

குறளுக்கு விளக்கமாகக் குறளும் அதற்கேற்ற படங்களையும் காட்சியாகக் காணலாம்.  இதைத் தவிர,

 http://duraikavithaikal.blogspot.in/கனவு மெய்ப்பட வேண்டும்

இந்தப் பதிவிலும் தன் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்கிறார்.

அடுத்து புதிதாக அறிமுகம் ஆகி இருக்கும் அன்பு மகள் தமிழ்ச் செல்வி.

http://vinmugil.blogspot.in தமிழ்ச்செல்வி.
விண்முகில்

இவருடன் கடந்த ஆறுமாதங்களாகத் தான் பழக்கம்.  திருவண்ணாமலை செங்கத்தில் வசிக்கும் இவரின் மன உறுதியும், எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லும் மனமும் அதிசயிக்கத் தக்கது. நீண்டநாள் பழகியவர் போல பாசம் காட்டிப் பழகுவார்.  இவரின் கவிதைத் தொகுதி திரு ஜெயபாரதன் ஐயாவின் முயற்சியால் வெளி வந்துள்ளது என்பது சிறப்பான செய்தி.  இவரின் இந்த வலைப்பூவில்

http://vinmugil.blogspot.in/2013/10/blog-post_242.html

குறிப்பாய் இந்தக் கவிதையில் இந்த வரிகள்

காதல் உயிர் ஊற்றி எனை
உணர்வு ஊட்ட வா
அன்பின் வெற்றிட வறட்சியில்
நீரூற்றாக ஈரப்படட்டும் நம் காதல்

காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதும் இவரின் கவிதைகளின் சில வரிகள் நம்மால் என்றும் மறக்க இயலாவண்ணம் அமைந்திருக்கும். இப்படித் தவிக்க விட்டுப் போன அந்தக் காதலன் வந்து இந்தக் காதலியை மகிழ்விக்க மாட்டானா என்ற எண்ணம் தோன்றும்.

 http://bhageerathi.in/ பாகீரதி

இளைய நண்பர் எல்கே அவர்களின் பதிவு.  ஒரு காலத்தில் கவிதையிலும், கதையிலும் கலக்கிக் கொண்டிருந்தார்.  இப்போது நேரமின்மையால் இணையத்துக்கே வர முடியாமல் தவிக்கிறார். இவர் பதிவிலிருந்து குறிப்பிட்ட கதையையோ, கவிதையையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

http://maniyinpakkam.blogspot.com/ பழமைபேசியின் வலைப்பூ

எழிலாய்ப் பழமை பேச

எழிலாய்ப் பழமை பேசும் பழமைபேசியின் வலைப்பக்கம்.  கோவைப் பகுதிகளில் பழமை பேசுதல் என்பது அளவளாவுவது என்ற பொருளில் வருமாம்.  கொங்குத் தமிழில் நம்மோடு இனிமையாக அளவளாவும் பழமைபேசியின் கதைகளும் சரி, கவிதைகளும் சரி என்னை மிகவும் கவர்ந்தவை. இவரின் மகள்களின் கொஞ்சு தமிழ் கேட்க மிக இனிமை. இவருக்கு மிகவும் பிடித்தது ஏரிகளும் அதைச் சுற்றிய பசுமைக் காட்சிகளும். :))))

http://maanbu.blogspot.in/

மலர்கள்

பழமையின் இந்த வலைப்பக்கத்தில் உள்ள  நான் யார் பதிவு எனக்கு மிகவும் பிடித்தது

http://maanbu.blogspot.in/2010/11/blog-post.html 


நான் யார்
மேலும் வாசிக்க...

Tuesday, November 5, 2013

சம்மங்கிப் பூவைத் தொடுக்கிறேன்.

வாசமுள்ள சம்மங்கிப் பூவைப் போல என்றென்றும் ஆன்மிகம் மணம் வீசும் சில வலைப்பூக்கள் இப்போது பார்க்கலாம்.

முதலில் என் அருமை நண்பர் நடராஜ தீக்ஷிதரின் வலைப்பூ.  சிதம்பர ரகசியம் தொடர் எழுதுகையில் அறிமுகம் ஆனவர்.  இன்று வரை நேரில் சந்தித்தது இல்லை.  என்றாலும் இவரிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்திருக்கிறேன்.  வயதில் சிறியவர் ஆனாலும் கீர்த்தி பெரிது.  வலைப்பூ ஆரம்பிக்கையில் தெரிந்தவற்றைச் சொல்லிக் கொடுத்தேன்.  இப்போது 2,3 வருடங்களாக எழுதுவது இல்லை.  நேரப்பற்றாக்குறை என்றாலும் அவ்வப்போது புதுப்பிக்கிறார். இவரின் வலைப்பூ ஒரு தகவல் களஞ்சியம்.

http://natarajadeekshidhar.blogspot.inNATARAJA DEEKSHIDHAR


அடுத்தும் சிதம்பரம் நடராஜரின் பெயரிலேயே வரும் வலைப்பூ.

http://aadalvallan.blogspot.in/ Aadalvallan

ஏதோ தேடுகையில் இந்த வலைப்பூக் கிடைத்தது.  பின்னர் சகோதரர் தி.வா.வும் இதைக் குறிப்பிட்டிருந்தார். சிவபாதசேகரன் என்ற பெயரில் எழுதி வரும் இந்த அன்பர்  முழுக்க முழுக்க சிவன் பற்றியே வலைப்பூக்கள் வைத்திருக்கிறார்.

சிவார்ப்பணம், Shivaarpanam

சிவ க்ருபா,        English Blog

சிவ சங்கர விஜயம், English Blog

சிவ தீபம்,

தெய்வத் தமிழ் Deiva Thamizh

என்ற பெயர்களில் வலைப்பூக்கள் வைத்திருக்கிறார்.  ஒவ்வொன்றும் அருள் அமுதங்கள்.  சிவபுராணங்கள் குறித்த பல சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்ளலாம்.

அடுத்து நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன சகோதரர் தி.வா.வின் வலைப்பூ.

http://anmikam4dumbme.blogspot.in/2013/10/blog-post_21.html
ஆன்மீகம்4டம்ப்மீஸ்

அத்வைதத்தில் தோய்ந்து போன இவரின் வலைப்பூவில் பல விஷயங்களையும் பார்க்கலாம்.  கர்மா, ஞானம், பக்தி ஆகியவற்றையும் படிக்கலாம். கல்யாணம், சீமந்தம் போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் தெளிவு செய்து கொள்ளலாம்.  அவ்வப்போது சில குட்டிக்கதைகளும் போனசாகக் கிடைக்கும்.

அடுத்து நம்ம டாக்டர் சங்கர்குமாரின் ஆத்திகம் வலைப்பூ.

http://aaththigam.blogspot.in/
ஆத்திகம்

கந்தர் அநுபூதியை மயிலை மன்னார் மூலம் வெகு சரளமாகச் சொல்லுவார். குழுமத்தில் படிச்சுடுவதால் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதில்லை. என்றாலும் இந்த வலைப்பூவும் அரிய தகவல்களைக் கொண்டது. நேரே பேசுவதைக் கேட்பதுபோல் அனைவருக்கும் புரியும் வண்ணம் சொல்லி இருப்பார். இப்போது சில மாதங்களாக அங்கு எதுவும் பதியவில்லை.



அடுத்ததாக சமீபத்தில் அறிமுகம் ஆன இளைய சிநேகிதி பார்வதியின் ஆலோசனைகள் அடங்கிய வலைப்பூ.

http://www.aalosanai.blogspot.in/AALOSANAI

உங்களுக்கு ஏதேனும் விரதம் குறித்து சந்தேகம் இருக்கா?  இவரின் வலைப்பூவைப் போய்ப் பாருங்கள்.  தெளிவாக எல்லா விஷயங்களையும், அந்த அந்த விரதத்துக்கான கதைகளோடு கொடுத்து வருகிறார். இதோடு குவியல்கள் என்றொரு வலைப்பூவிலேயும் பலவற்றையும் தொகுத்து வருகிறார்.

http://www.kuviyalgal.blogspot.in
தொகுப்பு.....

இவரின் தீபாவளிக் கவிதை சுப்புத்தாத்தாவால் பாடப்படும் பெருமையைப் பெற்றது.

அடுத்ததாக இளைய சிநேகிதர் ஜீவாவின் வலைப்பூ.

http://jeevagv.blogspot.in/2013/10/peace.htmlஎன் வாசகம்

என் வாசகம் என்ற பெயரில் எழுதி வரும் ஜீவாவை வலைப்பக்கம் ஆரம்பித்த போதிலிருந்தே அறிவேன். சுவாதி நக்ஷத்திரத்தில் பெய்யும் மழைத் தாரையில் விளையும் அபூர்வ முத்தைப் போல் என்றாவது தான் எழுதுவார். அந்தப் பதிவுக்கு அத்தனை சிறப்பு இருக்கும். சமீபமாக எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன தி.ரா.ச. அவர்களின் வலைப்பூ.

http://trc108umablogspotcom.blogspot.in
கெளசிகம்

வேலைப்பளு, அடிக்கடி ஊர் சுற்றல் என இவரின் எழுத்தும் இப்போது குறைவாகவே காண நேரிட்டாலும் பல உண்மையான சம்பவங்களையும், அருமையான கர்நாடக சங்கீதப் பாடல்களையும் தொகுத்துத் தருவதில் இவருக்கு ஈடு, இணை இல்லை.


http://vediceye.blogspot.in/2013/10/blog-post_7.html

சாஸ்திரம் பற்றிய திரட்டு

ஸ்வாமி ஓம்கார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  தியான மையம் நடத்தும் இவர் சமீபத்தில் நடைபெற்ற கும்பமேளா குறித்து எழுதிய பதிவுகள் மனதைக் கவர்ந்தவை.

http://vediceye.blogspot.in/2012/12/7.html

மேலும் வாசிக்க...

Monday, November 4, 2013

பூத் தொடுக்க வருகிறேன், பூத்தொடுக்க வருகிறேன்!

வணக்கம். என்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளப் பெரிதாக ஒன்றுமில்லை.  2005 ஆம் வருடம் நவம்பரில் வலைப்பூ ஆரம்பித்தேன்.  ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இருந்த வலைப்பூவைப் பின்னர் தமிழில் மாற்றினேன்.  எண்ணங்கள் என்ற அந்த வலைப்பூ தான் பிரபலம் ஆன ஒன்று.  அதன் பின்னர் சில வலைப்பூக்களை ஆரம்பித்து எழுதி வந்தாலும், இன்றளவும் எண்ணங்கள் வலைப்பூவுக்குத் தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம். :))     வரும் வாரத்துக்கான வலைச்சர ஆசிரியராக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  ஏற்கெனவே கயல்விழி இருக்கையிலே ஒரு முறை வலைச்சரம் தொடுத்தாச்சு.  அப்போ அவசரமாக் கட்டின சரம் என்பதாலோ என்னமோ சீனா ஐயா மீண்டும் பொறுப்பைக் கொடுத்திருக்கார். சரியாக நிறைவேற்ற விநாயகன் அருள்வானாக. .

வலைப்பதிவுகள் 2005 ஆம் வருஷம் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தமிழில் எழுத முடியலை. அதுக்கு அப்புறமா சில, பல முயற்சிகள் செய்து ஆசான் ஜீவ்ஸோட உதவியோட தமிழில் எழுத ஆரம்பிச்சேன். அவர் இங்கே வெண்பா வடித்துக் கொண்டிருந்தார்.

 <a href= "http://payananggal.blogspot.in" >Jeeves</a>

இப்போ இங்கே எண்ணங்களை இனிமையாகப் பதிகிறார்.

 <a href = "http://kaladi.blogspot.in" >எண்ணங்கள் இனியவை</a>

அது என்னமோ தெரியலை இரண்டு வருடங்களாக லிங்க் கொடுத்தால் போகிறதே இல்லை. :( பின்னூட்டத்தில் வருது.

ஆரம்பத்தில் எல்லோருடைய பதிவுகளிலும் போய்ப் பின்னூட்டம் மட்டுமே போட்டுட்டு இருந்தேனா!  ஒரு மாதிரியா எல்லாருக்கும் தெரிஞ்சவளா ஆயிட்டேன். ஆகவே பதிவு போடும்போது நிறையப் பின்னூட்டங்கள் வரும்னு எதிர்பார்த்தால்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போணியே ஆகலை. :)) அப்புறமா ஒவ்வொருத்தர் கிட்டேயும் போய்க் கடை திறந்துட்டு உட்கார்ந்திருக்கேன், போணி பண்ணுங்கனு கூப்பிட்டேன்.  கொஞ்ச நாட்கள் தான்.  அப்புறமா தானா போணி ஆக ஆரம்பிச்சது. அப்போத் தொடங்கினது தான் இந்தப் பதிவு

http://sivamgss.blogspot.in/ எண்ணங்கள்.

அப்படி ஒண்ணும் அதிகமாப் பின்னூட்டங்கள் வரதில்லை என்றாலும் ஹிட் லிஸ்ட் பல சமயங்கள் எகிறும்.  ஆகவே வர கமென்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு புரிஞ்சு போச்சு!  இப்போ இந்த வலைப்பக்கத்திலே 1642 பதிவுகள் வெளியிடப் பட்டிருக்கின்றன.  அதிகம் பின்னூட்டம் வந்தது என்றால் தமிழ் மணம் நக்ஷத்திரம் ஆன வாரம் தான்.

http://sivamgss.blogspot.in/2009/07/blog-post_13.html/ இங்கே பார்க்கவும்.

இந்த தைரியத்தில் ஆரம்பிச்சது மட்டுமில்லாமல், நிறையக் கோயில்கள், சுற்றுலானு போக ஆரம்பிச்சதாலே அதை எழுதத் தனியா ஒண்ணு தேவைப் பட்டது.  எண்ணங்கள் பதிவிலே மொக்கைகளும் போடுவதாலே, நல்ல பதிவுகளையும் இங்கே போட்டு அதன் தரத்தை வீணாக்கணுமானு தோணவே நாகை சிவா உதவியோடு திறந்த இன்னொரு பதிவு இது. http://aanmiga-payanam.blogspot.in  ஆன்மிகப் பயணம்.  ஏதோ சொல்லிட்டிருந்த

 http://tsivaram.blogspot.in/ ஏதோ சொல்கிறேன்

நாகை சிவா தொழில்நுட்ப ரீதியாக என் தேவைகளைப் பல முறை நிறைவேற்றிய நல்ல நண்பர் இன்றளவும். ஆன்மிகப் பயணம் வலைப்பக்கத்திலே  தான் என் கைலை யாத்திரை குறித்தும் எழுத ஆரம்பித்தேன்.  ஓரளவுக்கு என்னையும் என் எழுத்தையும் எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சது.  அதுக்கப்புறமா சிதம்பர ரகசியம் தொடர். அதைப் பெரிதும் பிரபலம் செய்தது நம்ம விசாகப்பட்டினம்  திவாகர்.

 http://www.vamsadhara.blogspot.com/வம்சதாரா

கதையின் தலைப்பையே தன் வலைப்பக்கத்துக்கும் வைச்சிருக்கார். நமது அடுத்த வீடான  ஆந்திரா குறித்த தகவல்களைப் பதிவது இங்கே!

http://www.aduththaveedu.blogspot.in/அடுத்த வீடு

அடுத்துப் பயணங்கள் குறித்து மட்டும் எழுதவென நான் ஆரம்பித்தது இந்தப் பதிவு.

http://geethasmbsvm6.blogspot.in/ என் பயணங்களில்

இதிலே தான் அஜந்தா, எல்லோரா பத்தி எல்லாம் எழுதி இருக்கேன். ஆனாலும் நோ போணி! இதிலேயே மற்றப் பயணங்களையும் எழுதலாம்னு நினைச்சு ரசிகப் பெருமக்களை ஒரு ஆலோசனை கேட்டால் என்ன அநியாயம்!  யாருமே இதுக்கு வந்து போணி பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க. :P :P ரொம்ப தூரமா இருக்காம். :))) இப்போ எண்ணங்கள் பதிவிலேயே எல்லாமும் போட்டுட்டு இருக்கேன். அதிலே நிறைய பென்டிங். கல்யாணப் பதிவுகள் முடிக்கணும். திருமயம் போனது பத்திப் போடணும். கிடக்கட்டும்.  விடுங்க! :)))

சாப்பாட்டுக்கு ஆரம்பிச்சேன், முக்கியமாப் பாரம்பரிய உணவு வகைகள் குறித்து இந்தத் தலைமுறைக்காகச்  சொல்ல ஆரம்பிச்சது இந்தப் பதிவு

 http://geetha-sambasivam.blogspot.in/ சாப்பிடலாம் வாங்க.

இதுக்கு ஓரளவுக்கு ரசிகர்கள் இருக்காங்க என்பதோடு ஹிட்லிஸ்டும் சமயத்தில் எகிறும். இதன் தொடர் ரசிகர் நம்ம

 டிடி. http://dindiguldhanabalan.blogspot.com/திண்டுக்கல் தனபாலன்

வலை உலகில் டிடியை அறியாதவர் இல்லை.  இவரோட பதிவுகளும் ஆக்க பூர்வமானவை.  பலதும் படிக்கிறதோடு சரி. எல்லாத்தையும் ஸ்போர்டிவா எடுத்துப்பார்.  வெங்காய விலை போல் நம் வாழ்க்கையையும் உயரச் சொல்லி வாழ்த்தும் மனம் கொண்டவர்.
.

ரேவதி/வல்லி சிம்ஹன்  படங்கள் போடுவதைப் பார்த்துட்டுப் புலியைப்பார்த்துச் சூடு போட்ட பூனையாட்டமா நானும் என்னோட அழகான படங்களைப் பகிரவென்று ஆரம்பிச்சது இந்தப் பதிவு.

 http://gsambasivam.blogspot.in/ பேசும் பொற்சித்திரமே

இதன் ஒரே ரசிகை நம்ம ரா.ல. தான். என்னை ஆறுதல் படுத்தவென்றே வரார்னு நினைச்சுப்பேன். முத்துச் சரமாகத் தொடுக்கும் அந்த வலைப்பூ

 http://tamilamudam.blogspot.com/ முத்துச்சரம்

இந்த வருஷக் கல்கி தீபாவளி மலரில் அவங்க படங்கள் வந்திருக்கின்றன என்கிறார். ரா.ல. படம்னா கேட்கணுமா என்ன?

 எப்போவானும் தி.வா. எட்ட்ட்டிப் பார்ப்பார்.

 http://chitirampesuthati.blogspot.in/சித்திரம் பேசுதடி

 இதே பெயரில் மீனாக்ஷி சுந்தரம் கிருஷ்ணசாமி என்பவரின் வலைப்பூவும் பிரபலம்.
http://chitirampesuthadi.blogspot.in/ இதுவும் அதே சித்திரம் பேசுதடி தான்.

இங்கே  படங்களை எடிட் செய்யவும் சொல்லிக் கொடுக்கிறார்.


என் புகைப்படப் பதிவுக்கு ரேவதி வந்ததே இல்லைனு நினைக்கிறேன். :)

 http://pukaippadapayanangal.blogspot.in/புகைப்படப் பயணங்கள்.

 அவங்களோட உடல்நிலையிலும் அருமையாகப் படங்களை எடுக்கிறார்.


அந்தப் பதிவுக்கு  அவ்வப்போது ரம்மியமாக எழுதும் மாதேவியும்,

http://ramyeam.blogspot.in/ ரம்யம்

அப்புறமா டிடியும் வராங்க.


இதைத் தவிரவும் சில வலைப்பூக்கள் ரகசியமா வைச்சிருக்கேனே!  ஆனால் சொல்ல மாட்டேனே!  :)))))))

கொடுத்திருக்கும் லிங்கில் இருந்து பதிவுகளுக்குச் செல்ல முடியலைனா தயவு செய்து காப்பி, பேஸ்ட் செய்துக்குங்க மக்களே! :( நானும் அரை மணி நேரமா முயன்று பார்த்துட்டேன். 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது