07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 6, 2008

சூரியகாந்திப்பூ - கதைகள்.

சூரியன் சென்ற பக்கமெல்லாம்
சுழன்று பார்க்கும் சூரியகாந்தி
கதையென்று சொன்னாலே
வயது மறந்து திரும்பிப்பார்க்கும்
அனைவரின் குழந்தை மனம்.

மாதங்கி கூறும் உடனடி கதையில் தன் அம்மாவைப் பற்றிக் கவலைப்படும் மகள்..ஏன்?

உஷாவின் ஐந்தும் ஆறும் என்ற கதை மனிதனின் இயல்பு, பறவைகளின் இயல்பு பற்றி என்ன பேசுகிறது? இரு வேறு இழைகள் இணைத்து உஷா நெகிழ வைக்கிறார்.

சீமாச்சு எங்கேயோ கேட்ட ஒரு சின்னஞ்சிறு கதையை நீங்களும் கேளுங்களேன். இத்தனை சிறிய கதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ரிஷான் ஷெரிப்பின் பள்ளிக்கூடம் கதை ஒரு சிறுமியின் மனநிலையைச் சித்தரிக்கிறது..
சின்னக்கதைதான்..ஆனால் சொல்லும் விஷயம் பெரியது.

ஜீவியின் நீர் மோர் என்ற கதையில் நீர் மோருக்கும் கிருஷ்ணகாந்துக்கும் என்ன சம்பந்தம்? உணர்வுப்பூர்வமான இயல்புகள்..தாக்குகின்றன.

சுல்தானின் கதையில் கணவன் மனைவி டைரிக்குறிப்பு, கணவன் சஞ்சரிக்கும் உலகம் மனைவி சஞ்சரிக்கும் உலகம் பற்றிப்பேசுகிறது. சிந்திக்கவும், ரசிக்கவும் ஒரு கதை.
மேலும் வாசிக்க...

ட்யூலிப் பூ - சற்றே வித்தியாசமாய்

இயல்பில் சற்று மாறும் எதுவும்
எளிதில் கவனம் ஈர்க்கும்..
ட்யூலிப் மலர்கள் போல்தான்
இவையும்!

கையேடு எழுதிய சற்றே வித்தியாசமான கடிதம் பல உண்மைகள் பேசிச் சிந்திக்க வைக்கிறது.

அப்பாவி இந்தியன் பதிவிட்ட இந்த வித்தியாச அழைப்பிதழ் பாருங்கள்..உயிரோடு இருப்பவர்களையே மதிக்காத இந்தக் காலத்தில்..

காண்டீபனின் இயற்கை வலைப்பூவில் வரும் பதிவுகள் அனைத்தும் சற்றே வித்தியாமான காட்சிகள்தான். வெள்ளை உயிரினங்கள் எத்தனை பார்த்திருக்கிறீர்கள் இதுவரை?

குலவுசனப்பிரியனின் அப்பாவின் பிரசவம் வித்தியாசமான அனுபவம்..புல்லரிக்க வைக்கிறது.
மேலும் வாசிக்க...

Wednesday, March 5, 2008

ஆர்கிட் பூ - புகைப்படம் / ஓவியம்

ஆர்கிட் மலர்கள்
வண்ணங்களுடன் அழகு போலவே
புகைப்படங்கள் செய்தியுடன்..

சதங்காவின் பதிவில் சதுரம் சதுரமாய் தர்பூசணிகள் சாதனைப் புகைப்படங்கள் பாருங்கள்...செய்திகளுடன் ஆலோசனையும்..அவரின் சித்திரங்களை சித்திரம் பேசுதடி
வலைப்பூவில் பாருங்கள்.

த‌மிழ்ப்பிரிய‌னின் பதிவில் இய‌ற்கையாக‌ சில‌ கின்ன‌ஸ் சாத‌னைக‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் அவற்றின் சாதனை விளக்கத்துடன்..

இலக்கியாவின் பதிவில் அழகிய மண்டையோடு பெறுமதி 100 மில்லியன் புகைப்படம்.
என்ன இது, 35 வயது ஐரோப்பியரின் மண்டையோட்டுக்கு வந்த வாழ்வு?

நானானி காண்பிக்கும் ப‌ட‌ம் அமெரிக்க‌க் காத‌ல் ஆர்ச்..காத‌லைச் சொல்லும் விதம் பற்றிய செய்திகள்..

கபீரன்பனின் இந்த ஓவியம் பாருங்களேன்..புகைப்படம் போலவே தத்ரூபமாய்

சேவியர் வழங்கும் காதலர் தினச் சிறப்பு ரோஜா புகைப்படங்கள் செய்திகளுடன்.
மேலும் வாசிக்க...

காட்டுமல்லிப்பூ / நித்யமல்லிப்பூ - வளைகுடா

காட்டுமல்லி..அழகுதான்
என்றாலும் மணமில்லைதான்..
இங்கு தனி(வி)த்திருப்போர்க்குப்
பணம்தான் என்றாலும் ரணம்தான்.

நித்யமல்லி.. அழகும் வாசமும் உண்டு

சட்டென்று வாடும் குணமுண்டு
குடும்பத்தோடு இங்கு இருப்போர்க்கு
வசதியும், மகிழ்ச்சியும் உண்டு
சட்டென்று சலிப்பும் வருவதுண்டு..

நிலவு நண்பனின் பதிவில், வளைகுடாவிலிருந்து விடுமுறைக்கு வரும்போது காணும் காட்சிகளை நகைச்சுவையுணர்வோடு விவரித்துள்ளார்..

கீழை ராஸாவின் சிறகுகள் தொலைத்த சிட்டுக் குருவிகள் "எண்ணெய் தேசத்தில் இளமை தொலைத்தவர்" கதை. பலரின் அனுபவம் பேசும் கதை இது.

ஜெயக்குமார் ஷேக்குகளுடனான அனுபவங்கள் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.
ஷேக்கு என்றால் திரைப்பட ஷேக்கு போலவா? காவா, மஜ்லிஸ் இதெல்லாம் என்ன?

லொடுக்குவின் பாலைவனப் பயணம் பாருங்கள். மணலில் அந்த வாகனங்களில் போகும் போது உள்ளுறுப்புகள் அனைத்தும் இடம் மாறி மீண்டும் தன்னிலைக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

ரியாத் பதிவர் இம்னுஹம்துன் ஒரு பயணத்தின் பின்னால் என்ன கதை இருக்கிறது என்று கூறுகிறார். இங்கே வருவதற்குப் பல கஷ்டங்கள்..வந்த பின் பல கஷ்டங்கள்..
மேலும் வாசிக்க...

Tuesday, March 4, 2008

செவ்வந்திப்பூ - கவிதைகள் 1

வலை மொத்தம் பூத்திருக்கும்
வண்ணச் செவ்வந்திக்
கவிஞர் கூட்டம்!

காயத்ரியின் இந்த மரண தரிசனம் கவிதை..தோழியின் தந்தை மரணமடைந்த போது தேற்ற முடியாமல் நிற்கும் இயலாமை...இந்த நிலை எல்லோரும் அனுபவித்ததுதான் எப்போதோ ஒரு முறை.

ஜ‌மால‌னின் அக‌திக‌ளின் காடு என்ற‌ க‌விதை காடுகளைப் ப‌ற்றிய‌ இருவேறு பார்வைகள் - காடு ஒரு குறியீடாக, காடு ஒரு காடாக..பகிர்கின்றது.

கென் என்னும் கவிஞரின் எல்லோரின் மடியிலும் அடுத்தவர்க்கான கற்கள், மனிதனின் இயல்பான வன்மம் பேசுகிறது. இவர் பதிவில் பல நயமான கவிதைகள் கொட்டிக் கிடக்கின்ற‌ன.

யாழ் அகத்தியன் காதல் கவிஞர்தான். என்றாலும் அவர் அன்னையர் தினம் என்ற கவிதை எடுத்துரைக்கும் அன்னையின் அன்பு அவர் கவிநயத்தின் மற்றொரு கோணம் காட்டுகிறது.

ரியாத் பதிவர் முபாரக் எழுதிவரும் கவிதைகள் தனிமையின் தன்மையைப் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகள் கடக்கும் காலை என்ற கவிதை குடும்பத்தைப் பிரிந்து வாழும் தகப்பனின் சோகம் தொட்டுப் போகிறது.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது