07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 21, 2007

படித்ததில் பிடித்த இடுகைகள்

படித்ததில் பிடித்த இடுகைகள்

தமிழ்ப் பதிவுகளில் படித்த இடுகைகளில் பிடித்தவை அதிகம் இருப்பினும் அவற்றில் சிலவற்றை இங்கே அளிக்கிறேன்.

உங்களைப்போலவே தனித்துவமான இளவஞ்சியை வலையுலக வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர்.

காவல்துறையிலிருந்த தன் அப்பாவின் என்ஃபீல்ட் புல்லட் குறித்த இடுகையைச் சாதாரணமாக ஆரம்பித்து இறுதியில் வாசிப்பவரின் மனதைக் கவர்ந்திருப்பார்.

வென்று வாடி என் மகளே என்று தன் மகளிடம் சொல்லி அவளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைக்கும் இனிய முதல் நாளில் அவளுடன் இல்லாமல் இப்படி அயல்நாட்டில் இருக்கிறோமே என்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை இங்கே.

திருமணம் செய்துகொள்ளப்போகும் ரங்கமணி தங்கமணிகளுக்காகக் கல்யாணமாம் கல்யாணம் என்ற சிறு தொடர் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6 வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது எனலாம்.

எமிலி என்றொரு தோழி என்ற இடுகையில் தோழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க அது மிக வறட்சியாக இருக்கும் என்று தன் கட்சிக்கு ஆள் சேர்க்கிறார்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நாராயண் வாசகர்களைக் கவருவதற்காகவே உருப்படாதது என்பதைப் பதிவின் தலைப்பாக வைத்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

கணினி க்ராஷ் ஆனால் வரக்கூடிய பெரும் பிரச்சனை எதுவும் வராமல் காத்துக்கொள்ளும் சர்வம் செர்வர் மயம் விவரத்தைத் தருகிறார்.

இந்த இடுகையில் இந்தியாவின் சமச்சீரின்மைக்குக் காரணமாக பல கேள்விகளை எழுப்புகிறார்.

இறை நம்பிக்கையற்ற தன்னைப் போன்றவர்களுக்குக் கூட கடவுள் எனக் கருதப்படும் ஒரு உருவத்தினை இப்படிப் போட்டிருப்பது சங்கடத்தினை உண்டாக்குகிறது என்கிறார்.

எங்கோ போகிறோம் ஆனால் எங்கு போகிறோம் என்று தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார் இந்த இடுகையில்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

நகைச்சுவைக் கலக்கல் பதிவர்கள் என்றால் எனக்கு முதலில் நினைவிற்கு வருபவர் டுபுக்கு அவர் எழுதியுள்ள ஜொள்ளித்திரிந்ததொரு காலம் தொடர் பதிவுகள் நகைச்சுவையின் உச்ச கட்டம்.

தனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி தனக்கே உரிய நையாண்டியுடன் படிச்சவன் பதிவக் கெடுத்தான் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

தங்கமணிக்காக டிஷ்வாஷர் வாங்கியதன் பின்புலத்தினை இங்கே வாசிக்கலாம்.

இந்த இடுகையைப் படித்தவுடனே நமக்கு எழும் எண்ணம் நாமும்தான் பல திருமணங்களுக்குச் சென்றிருக்கிறோமே இதுபோல நாம் ஏன் முன்னமே எழுதவில்லை என்பதாக இருக்கக்கூடும்.

பெரியவனா(ளா)னதும் என்னவா ஆகப் போற? என்பதற்குக்கூட இவ்வளவு நகைச்சுவையாக எழுத இயலுமா ?

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

அடுத்ததாக என்னைக்கவர்ந்த பதிவு மடத்துவாசல் பிள்ளையாரடி (பதிவர் கானா பிரபா)

கடந்த இரு வருடங்களாக வலை பதிந்து வரும் இவர், வருட இறுதியில், தான் அந்த வருடத்தில் எழுதிய இடுகைகளைத் தொகுத்து ஒரு இடுகையாகத் தருகிறார். மற்ற பதிவர்களும் இந்த உத்தியைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 2007ஆம் ஆண்டிற்கான தொகுப்பினுள் 2006ஆம் ஆண்டிற்கான தொகுப்பின் சுட்டியையும் அளித்திருக்கிறார்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

மனதைக் கவர்ந்த பல பதிவுகளில் ஒன்று வே.சபாநாயகம் அவர்களின் நினைவுத் தடங்கள்

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

2 comments:

  1. வணக்கம் பாலராஜன்

    தங்கள் வாசிப்பில் என் பதிவும் இணைந்தது குறித்து மகிழ்ச்சி. சில வார இடைவெளிக்குப் பின் வலைச்சரப் பதிவுகளைத் ஓரளவு தொடர்ந்து அளிக்கும் பதிவராக இருப்பதற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்பின் பாலராஜன்கீதா,
    நீங்கள் கொடுத்துவரும் ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் மிக் மிக நன்றி. கடமைப்பட்டுள்ளேன்.
    நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது