கோவையிலிருந்து அகிலா – 7
➦➠ by:
அகிலா
இனிய வணக்கம் நண்பர்களே...
இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் இவர் தனது அவை நாயகன் வலைப்பூவில்
நான்கு சக்கர ஓட்டுனர்களுக்கும் எடுத்துரைக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரியாக இருப்பதால் விபத்துக் குறித்தும் ஸ்டாப் லைன் குறித்தும் எழுதியிருக்கிறார். பயனுள்ள பதிவு...
நன்றிகள் அனேகம் :
நன்றி வலைச்சரம் ஆசிரியருக்கு
குட்டிக் கவிதை
விடியலை காணாத ஓர் இரவு
விழித்திருந்தது உன்னோடு
விடிந்துவிட்ட மறு இரவு
விழித்திருந்தது உன் நினைவுகளோடு...
விழித்திருந்தது உன்னோடு
விடிந்துவிட்ட மறு இரவு
விழித்திருந்தது உன் நினைவுகளோடு...
....
எழுத்தும் அதன் அழகும் : நவீனம்
சிந்திக்கும் தன்மையை நுண்ணிய மன உணர்வுகளை
தர்க்க ரீதியாக பகுத்தறிவை மட்டுமே பிரதானப்படுத்தி எழுதாமல் நளினமாகவும்
சுருக்கமாகவும் படைப்பின் புரிதலை அவரவரின் கோணத்தில் கொண்டு வரும் இலக்கியமே
நவீனமாகிறது. பின்நவீனத்துவம் தத்துவத்தை சாராமல் மன ஓட்டங்களை மட்டுமே
முதன்மைப்படுத்தி நவீனத்துவத்தின் வழி சார்ந்திருக்கும்.
படித்ததில் பிடித்த பதிவுகள் சில...
கே ரவிசங்கர்
நகைசுவையாய் ஒரு கவிதை ஆறாவது பூதம் இவரது பதிவில்.
ஆகாயத்திலிருந்து
தொப்பென்று விழுந்து
புழுதி கிளப்பி
தொடுவானத்தைக் குத்தியபடி
படுத்திருக்கிறது ஒரு தண்டவாளம்
என்று ஆரம்பித்து அதை அவரின் டெஸ்க்டாப்பில் ஆறாவது பூதமாக்கியதை அழகாய் சொல்கிறார்.
ஆகாயத்திலிருந்து
தொப்பென்று விழுந்து
புழுதி கிளப்பி
தொடுவானத்தைக் குத்தியபடி
படுத்திருக்கிறது ஒரு தண்டவாளம்
என்று ஆரம்பித்து அதை அவரின் டெஸ்க்டாப்பில் ஆறாவது பூதமாக்கியதை அழகாய் சொல்கிறார்.
ரவி ஆதித்யா என்னும் இந்த வலைப்பூவில் இவர் எழுதியிருக்கும் அம்மாவின் இழப்பு என்னும் பதிவு நம் வீடுகளில் சாவின் விளிம்பில் இருக்கும் முதியோரின் நிலையைச் சொல்லிச் செல்கிறது.
தேவாதிராஜன்
நற்குணங்களை பார்த்து வருவதே காதல் என்கிறார் இதுதான் காதல் என்னும் கவிதையில் மணவை தேவாதிராஜன் வலைப்பூவின் ஆசிரியர்.
நற்குணங்களை பார்த்து வருவதே காதல் என்கிறார் இதுதான் காதல் என்னும் கவிதையில் மணவை தேவாதிராஜன் வலைப்பூவின் ஆசிரியர்.
அகிம்சையே வெற்றி என்னும் பதிவில் எளிய நடையில் கவிதையாய் நாம் அகிம்சாவாதியாக வாழ வழிச் சொல்லியிருக்கிறார்.
தவறு
புகைபடங்களாய்த் தொகுத்து பதிவாக்கி இருக்கிறார் அறியது வலைப்பூவில்...
எழுத்துக்களின் அணிவகுப்பை மறந்து
கொஞ்சம் இதையும் சுகமாய் வேடிக்கைப் பார்த்தேன்
என்பதே நிஜம்...
அருமை...
மண்டையன்
கலகலப்பாய் இருக்கிறது படிக்க இவரின் கன்னி கணணி அனுபவம்
அவை நாயகன்
இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் இவர் தனது அவை நாயகன் வலைப்பூவில்
நான்கு சக்கர ஓட்டுனர்களுக்கும் எடுத்துரைக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரியாக இருப்பதால் விபத்துக் குறித்தும் ஸ்டாப் லைன் குறித்தும் எழுதியிருக்கிறார். பயனுள்ள பதிவு...
நன்றிகள் அனேகம் :
இந்த வாரம் முழுவதுமாய் ஆசிரியர் பொறுப்பேற்று எத்தனையோ வலைப்பூக்களைப் படித்து தமிழோடு வாழ்ந்திருக்கிறேன்.
பதிவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நிகழ்வை, அனுபவத்தை, அறிவுரையை இந்த சமூகத்துக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பர்களே...
படிப்பதுவும் எழுதுவதும் நம் மொழியை அழகாக்கும்...
நன்றி வலைச்சரம் ஆசிரியருக்கு
என்னை தமிழ் சுவாசிக்க வைத்ததற்கு...
.jpg)

.jpg)
.jpg)

.jpg)



.jpg)

