07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 25, 2013

கோவையிலிருந்து அகிலா – 7

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை

விடியலை காணாத ஓர் இரவு
விழித்திருந்தது உன்னோடு
விடிந்துவிட்ட மறு இரவு
விழித்திருந்தது உன் நினைவுகளோடு...
....

எழுத்தும் அதன் அழகும் : நவீனம்   
சிந்திக்கும் தன்மையை நுண்ணிய மன உணர்வுகளை தர்க்க ரீதியாக பகுத்தறிவை மட்டுமே பிரதானப்படுத்தி எழுதாமல் நளினமாகவும் சுருக்கமாகவும் படைப்பின் புரிதலை அவரவரின் கோணத்தில் கொண்டு வரும் இலக்கியமே நவீனமாகிறது. பின்நவீனத்துவம் தத்துவத்தை சாராமல் மன ஓட்டங்களை மட்டுமே முதன்மைப்படுத்தி நவீனத்துவத்தின் வழி சார்ந்திருக்கும்.  

படித்ததில் பிடித்த பதிவுகள் சில...  


கே ரவிசங்கர்

நகைசுவையாய் ஒரு கவிதை ஆறாவது பூதம் இவரது பதிவில்.

ஆகாயத்திலிருந்து
தொப்பென்று விழுந்து
புழுதி கிளப்பி
தொடுவானத்தைக் குத்தியபடி
படுத்திருக்கிறது ஒரு தண்டவாளம்


என்று ஆரம்பித்து அதை அவரின் டெஸ்க்டாப்பில் ஆறாவது பூதமாக்கியதை அழகாய் சொல்கிறார்.

ரவி ஆதித்யா என்னும் இந்த வலைப்பூவில் இவர் எழுதியிருக்கும் அம்மாவின் இழப்பு  என்னும் பதிவு நம் வீடுகளில் சாவின் விளிம்பில் இருக்கும் முதியோரின் நிலையைச் சொல்லிச் செல்கிறது. 



தேவாதிராஜன்

நற்குணங்களை பார்த்து வருவதே காதல் என்கிறார் இதுதான் காதல் என்னும் கவிதையில் மணவை தேவாதிராஜன் வலைப்பூவின் ஆசிரியர்.

அகிம்சையே வெற்றி என்னும் பதிவில் எளிய நடையில் கவிதையாய் நாம் அகிம்சாவாதியாக வாழ வழிச் சொல்லியிருக்கிறார்.


தவறு 

பார்க்க ரசிக்க என்று 
மான் சண்டை
சிங்கங்களின் குங்பூ
புகைபடங்களாய்த் தொகுத்து பதிவாக்கி இருக்கிறார் அறியது வலைப்பூவில்...
எழுத்துக்களின் அணிவகுப்பை மறந்து
கொஞ்சம் இதையும் சுகமாய் வேடிக்கைப் பார்த்தேன் என்பதே நிஜம்...
அருமை... 


மண்டையன்

கலகலப்பாய் இருக்கிறது படிக்க இவரின் கன்னி கணணி அனுபவம் 

மரியான் விமர்சனம், சினிமா துணுக்குகள் என்று இவர் தன் அஞ்சா சிங்கம் வலைப்பூவில் எழுதியிருக்கிறார்.


அவை நாயகன் 

இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் இவர் தனது அவை நாயகன் வலைப்பூவில் 

நான்கு சக்கர ஓட்டுனர்களுக்கும்  எடுத்துரைக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரியாக இருப்பதால் விபத்துக் குறித்தும் ஸ்டாப் லைன் குறித்தும் எழுதியிருக்கிறார். பயனுள்ள பதிவு...


நன்றிகள் அனேகம் :

இந்த வாரம் முழுவதுமாய் ஆசிரியர் பொறுப்பேற்று எத்தனையோ வலைப்பூக்களைப் படித்து தமிழோடு வாழ்ந்திருக்கிறேன். 

பதிவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நிகழ்வை, அனுபவத்தை, அறிவுரையை இந்த சமூகத்துக்குச் சொல்லியிருக்கிறார்கள். 

இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பர்களே...
படிப்பதுவும் எழுதுவதும் நம் மொழியை அழகாக்கும்...





நன்றி வலைச்சரம் ஆசிரியருக்கு 
என்னை தமிழ் சுவாசிக்க வைத்ததற்கு... 




10 comments:

  1. அன்பின் அகிலா - அறிமுகங்கள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அறிமுகங்கள் அனைத்தும் அருமை...
    அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
    அருமையான வாரமாக கொண்டு சென்றீர்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கொடுத்த பணியை
    செவ்வனே செய்துமுடித்த
    சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    இன்றைய அறிமுகங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பல புதிய அறிமுகங்களையும் தந்திருந்தீர்கள். நன்றி.

    உங்கள் பணிக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இந்த வாரம் முழுவதும் சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. சிறப்பான கவிதைகளுடன் - நல்ல வலைத்தளங்களை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி!..வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
  7. சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள்

    ReplyDelete
  8. ஒரு வாரம் சிறப்பான பணி செய்தீர்கள்.
    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் இவர் தனது அவை நாயகன் வலைப்பூவில் //
    எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளமைக்கு நன்றிகள்.
    ''விடியலை காணாத ஓர் இரவு
    விழித்திருந்தது உன்னோடு'' ரசித்துப் படித்த வரிகள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. "நான்கு சக்கர ஓட்டுனர்களுக்கும் எடுத்துரைக்கிறார். ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரியாக இருப்பதால் விபத்துக் குறித்தும் ஸ்டாப் லைன் குறித்தும் எழுதியிருக்கிறார். பயனுள்ள பதிவு" எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளமைக்கு நன்றி (வியபதியாக ஏற்கனவே நன்றி தெரிவித்துள்ளேன்)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது