07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 24, 2013

கோவையிலிருந்து அகிலா – 6

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை

தொட்டு செல் காற்றே
உரசினால் பற்றிக் கொள்வேன்
நான் பெண்....

எழுத்தும் அதன் அழகும் : வரலாறு
கடந்தகால நிகழ்வுகளைக் குறிக்கும் இலக்கியமே வரலாறு என்றாலும் அதிலும் புனைவுகள் அதிகமே. அதன் எழுத்துக்களில் தான் சமுகத்தில் நிகழும் பொருளியல் மற்றும் மனித இனத்தின் பண்பாடு முதலியவை அறியப்படுகின்றன. வளரவும் செய்கின்றன. நம் கருத்துக்களை வலியுறுத்தவும் வரலாற்று வாதமே பயன்படுகிறது...  .

இன்று நான் விரும்பிப் படித்த பதிவுகளின் அறிமுகங்கள் 

ஜெயராம் தினகரப்பாண்டியன்

மழை, கண்ணாடி, தளிர் என்று படிமங்களை கவிதையில் வடித்திருக்கிறார் நல்லவன் என்னும் இவரது வலைப்பூவில். அனாதை எழுத்துக்கள் எண்ணும் பதிவில் வாசிக்கபடாத புத்தகங்களின் நிலையையும் அதன் எழுத்தாளர்களின் உணர்வையும் அருமையாக வடித்திருக்கிறார்.  
வீழாதே என்னும் கவிதையில்,

பகலும் முடியும் 
இரவும் விடியும் 
தோல்வியும் உரமாகும் 
வெற்றியின் விதைக்கு 

என்று நம்பிக்கை ஊட்டுகிறார். நன்று... 


சிதம்பரநாதன்  

மிக யதார்த்தமான எழுத்துக்களில் பரிச்சை எழுத ஜீன்ஸ் பேன்ட் போட அனுமதியில்லாதது, 
சென்னை அங்காடித் தெருவின் அடிமை விலங்குகள்
என்று அக்கறையுடன் தன் கண்முன் நடப்பவைகளை வாசித்துச் செல்கிறது 
இவரது சிதம்பரநாதனின் வலைப்பூ... தொடருங்கள்...


அருள்செல்வ பேரரசன்

கணணி தொழில்நுட்ப வேலைகளை செய்வது எப்படி என்பதைக் குறித்த பதிவுகள் இவருடையது. 

நல்ல போடோஷாப் டிசைனராக வர என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என தெளிவாகக் கூறியிருக்கிறார். பிளண்டிங், பில்டர் கேலரி போன்ற நுணுக்க வேலைகள் பற்றி எழுதியிருக்கிறார். 

தமிழ் கீபோர்ட்டை நாமே உருவாக்குவது பற்றியும் சொல்லிச் செல்கிறார் தன் அரசன் வரைகலை தளத்தில்...


ஒளவை

கவிதையும் அறிவியலும் கணிதமும் கலந்துகட்டி இருக்கிறது ஒளவையின் உளறல்கள் வலைப்பூவில். எழுதுபவர் கணிதப் பேராசிரியை அல்லவா.

பாறையின் வகைகள் பற்றி ஒரு பதிவில் தீப்பாறை, உருமாறியபாறை, படிவப்பாரை என்று எல்லாம் பிரித்து எழுதி அதை கவிதையிலேயே விளக்கி விட்டு முடிவில் கருத்தும் சொல்லியிருக்கிறார்.

கோடையை பற்றிய கவிதையொன்று...

எப்போதோ ஈரங்கண்ட கரிசக்காட்டுப் படிவு
பாய்போல் சுருண்டு பிளந்த வெடிப்பில்
நொடுக் வெடுக் கென்று கேட்ட சப்தம்
நடக்கையில் சுட்டபடி கோடையிது என்றது


படிக்கும் போதே சுடுகிறது. அருமை... 



ஷாஜஹான்

எது தேசிய கீதம் என்னும் பதிவில் வந்தே மாதரம், ஜனகண மன போன்ற பாடல்கள் தோன்றிய வரலாறு, அவற்றின் சுதந்திர போராட்ட பின்னணி போன்றவற்றைத் தெளிவாய்ச் சொல்லி ஜன கண மன வே தேசியகீதம் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.  

எண்களின் வலைகளில் என்னும் கவிதை என்னை ஆச்சிரியப்படுத்தியது. 

மதிப்பெண் வைத்தே மாணவர் திறமை
பிரதிகள் வைத்தே நாளிதழ் பெருமை
வண்ணங்களை வைத்தே இதழ்களின் பெருமை
பார்ப்பவர் எண்ணிக்கை சானலுக்குப் பெருமை


என்று அடுக்கிக் கொண்டே போகிறார். சுவாரசியமான அதே சமயம் கனமான எழுத்து.இந்த புதியவன் பக்கம் வலைப்பூவில்... 





என்றும் இனியவை இந்த பதிவுகள்
படித்து சந்தோஷமா இருங்க...

நாளைக்கு வரேன்...

22 comments:

  1. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மூன்று தளங்கள் எனக்குப் புதியவை...
    நிச்சயம் சென்று பார்க்கிறேன் .சகோதரி..
    வாழ்த்துகள் உங்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மகேந்திரன்...

      Delete
  3. சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் ...

      Delete
  4. அறிமுகங்க பதிவர்ளுக்கு எனது வாழ்த்துக்கள்,
    ''தொட்டு செல் காற்றே
    உரசினால் பற்றிக் கொள்வேன்
    நான் பெண்....''
    அருமையான குட்டிக் கவிதை

    ReplyDelete
    Replies
    1. கவிதையை பாராட்டுக்கு நன்றி...

      Delete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குட்டிக் கவிதை கூறும்
    பட்டுக் குட்டி பாட்டு
    தொட்டுச் சென்ற தென்றல்
    தட்டிச் சொல்லிச் சென்றதே!

    அருமையான குட்டிக் கவிதை தோழி! என்னை கவர்ந்தது. வாழ்த்துக்கள்!

    அறிமுகங்கள் அனைவரும் அருமை. எனக்கு அறிமுகமில்லாதவர்கள்.
    என் கணினியில் கோளாறு எல்லோரிடமும் செல்ல முடியவில்லை.
    ஒவ்வொருத்தராகச் சென்று பார்க்கின்றேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கவிதையும் அருமை இளமதி...நன்றி

      Delete
  7. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
    உங்களது குட்டிக் கவிதை அருமை....

    ReplyDelete
  8. நண்பரே http://graphics.arasan.info அரசன் வரைகலை என்ற எனது வலைப்பூவிற்கு உங்கள் வாசகர்களிடையே ஒரு அறிமுகம் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி...

      Delete
  9. தேர்தெடுக்கப்பட்ட விஷயங்கள் நிறைந்த வலைப் பதிவுகளின் அறிமுகம்.. காற்றைக் கூட தீயாய்ச் சுடும் கவிதை!..நன்று!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜு அவர்களே...

      Delete
  10. வித்தியாசமான அறிமுகங்கள்- அறியாத பதிவர்கள்!!! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  11. பல நல்ல தளங்களை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி!
    பதிவர்களுக்கு பாராட்டுக்கள்!
    குட்டிக் கவிதை அருமை!

    ReplyDelete
  12. பலரையும் அறிமுகம் தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது