07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday, October 31, 2014

மெஞ்ஞானம் எனும் தத்துவன்

"பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில் ஆயிரம் கோயில்கள் தேவையா ?"

"பூமியைப் படைத்தது சாமியா? இல்லை சாமியைப் படைத்தது பூமியா?" என‌ பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய கேள்விக் கணைகளால் தொடுத்த‌ கவியரசு கண்ணதாசனின் வரிகள் இவை.

ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன, ஏழைகள் இருக்கிறார்களா ?

மெஞ்ஞானம் என்றவுடனே நம்மில் பலருக்கும் தெய்வம், ஆலயம், வழிபாடு தான் முதலில் வருகின்றன.  அதனையும் தாண்டி நம் பிறப்பின் தேடலின் பின் சென்றால் பல அதிசயங்களைக் காணமுடியும்.  இது பல ஞானிகள், யோகிகள், மோனிகள், தத்துவ வித்தகர்களின் (போலிச் சாமிகள், மற்றும் கார்ப்பரேட் சாமிகள் தவிர்த்து :)) வாழ்க்கை வரலாறு மூலம் அறியப் பெறலாம்.  ஒரு அறைக்குள் சென்று பின் திறந்து பார்க்கையில், உள் சென்ற ஞானியின் சுவடு அறவே இல்லை.  காற்றில் கற்பூரமாய் கரைந்து போனார்கள் என்று படிக்கிறோம்.  சில நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்தார் என்று வரலாற்றுப் பதிவுகள் இருப்பதாக அறிகிறோம்.  சரி, இதற்குள் பயணித்தால் போய்க் கொண்டே இருக்கலாம்.  நமது பதிவர்களின் சில மெய்ஞானம், தத்துவம், ஆன்மிகப் பதிவுகள் இன்று.

Arinthathum Ariyathathum - JVC-OSA Community தளத்தில் இருந்து.  பல அறிய செய்திகள் மெஞ்ஞான விளக்கங்கள் கொண்ட தளம்.

ஆறுபடை வீடும், ஆறாதாரமும் - ரிச்மண்ட் கவிநயா அவர்களின் தளத்தில் இருந்து, முருகன், அம்மன், ஆன்மிகம், பக்தி என கவிதை கதைகளில் கலக்கும் பதிவுகள் கொண்ட தளம்

முருகனருள் தளத்தில் இருந்து கவிநயவின் பல பாடல் பகிர்வுகள் (சுப்புத் தாத்தா பாடியது) மற்றும் முருகன் பெருமைகள் பல கொண்ட தளம்.

திருமந்திரம் - Rie அவர்கள் தளத்தில் இருந்து திருமந்திரம், அட்டாங்க யோகம், என பல பாடல்கள், அதன் விளக்கங்கள் என நுண் கருத்துக்கள் கொண்ட தளம்.

முருகனருள் முன்னிற்பதாக..!! ‍ - Kamala Hariharan அவர்கள் தளத்தில் இருந்து ,முருகனின் பெருமை கூறும் பதிவுகள்.

விஞ்ஞானம் வெற்றிதான்! ஆனால் மெஞ்ஞானம்... - Sasi Rama அவர்கள் தளத்தில் இருந்து, விஞ்ஞானத்தின் வெற்றி சொல்லி, மெஞ்ஞானம் பற்றிய சிறுகுறிப்பு அருமை!

நெருப்பில்லாமல் புகையாது ! - Chittarkottai Sunnath Jamath அவர்கள் தளத்தில் இருந்து,  மெஞ்ஞானம் பற்றி இஸ்லாத்தின் பார்வை.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் - ஹைஷ் அவர்கள் தளத்தில் இருந்து அருமையான சிறிய விளக்கம் அனைவருக்கும் புரியும் வண்ணம்.

விஞ்ஞானம் வியக்கும் வேதநெறி - ‍சிவத்தமிழோன் அவர்கள் தளத்தில் இருந்து, பல சிந்த்திக்க வைக்கும் கருத்துக்கள் அடங்கிய தளம்.

விஞ்ஞானம் - மெஞ்ஞானம் ! -  SIVAPRAKASAM SRINIVASAN அவர்கள் தளத்தில் இருந்து.  சிறிய விளக்கம் என்றாலும், கடைசி வரி படக்கென்று நம்மைப் பற்றிக் கொள்கிறது.

ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்! - விவேகாநந்தன் அவர்கள் தளத்தில் இருந்து.  ஓம் என்னும் ப்ரணவம் குறித்த நுண் விளக்கங்கள் கொண்ட பதிவு.

மெஞ்ஞானத் தெளிவு பெற்று விஞ்ஞானம் போற்றி நல்வாழ்வு வாழ்வோமாக!  நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!!
மேலும் வாசிக்க...

Monday, December 17, 2012

வலைச்சரத்தில் முதல் நாள்-காரஞ்சன்(சேஷ்)

வலைச்சரத்தில் முதல் நாள்! -காரஞ்சன்(சேஷ்)
 
இந்த உலகினில்  என்னை அறிமுகப் படுத்திய என் தாய், தந்தை, மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு என் முதல் வணக்கம்! வலைச்சர அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்!
 
 
17-12-2012 முதல் 23-12-20012 வரை  வலைச்சர ஆசிரியர் பணிக்கு என்னைஅழைத்து இந்த அரிய வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்து, என்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நெகிழ்வோடு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைச்சரத்தில் நானும் ஒரு வாரத்துக்கு ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடத்தில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இயன்ற வரையில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்கிறேன். 

பணிச்சுமையும், பிணிகளும் வாட்டிடும் இன்றைய உலகில், மன அமைதி விழையும் தருணங்களில், சிந்தனைகளுக்கு ஒரு வடிகாலாக ஒரு வலைப்பூ எனக்கென உருவாக்க விழைந்ததில், உருவானது தான்காரஞ்சன் சிந்தனைகள்”.  இந்த வலைப்பூ தொடங்க என்னைத் தூண்டிய என்னுடைய மாமனார் திரு, இ.சே.இராமன் அவர்களுக்கு இத் தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை ஒரு வலைப்பூ ஆரம்பிக்கத் தூண்டிய திரு. வெங்கட்நாகராஜ் அவர்களுக்கும் இத்தருணத்தில் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

எழுத ஆரம்பித்து  ஓராண்டுகள் ஓடிவிட்டதை எண்ணிப்பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. அன்றாடப் பயணத்தில் நான் காணும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள், சுற்றி நடக்கும் நிகழ்வுகள், நான் கண்டு இரசித்த புகைப்படங்கள் இவையே என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன.  இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியுள்ளேன்.. இந்த வலைப்பூ மூலம் கிடைத்த அறுபதுக்கும், மேலான அருமையானதோழமைகள், அவர்களின் அன்பான பின்னூட்டங்கள், எல்லாமே எனக்குக் கிடைத்திருக்கும் செல்வங்கள்! .விரும்பித் தொடரும் நல்லுளங்களின் கருத்துரைகள் எனக்கு ஊக்கமளிப்பவையாக அமைகின்றன.. என்னுடைய படைப்புகள் யாரையும் புண்படுத்தாவண்ணம் ஏதாவது ஒரு பயனுள்ள கருத்தைச் சொல்லக்கூடியதாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறேன்.

 இப்படி ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தவுடன் எட்டிப் பார்த்து பிரமித்துப் போனேன். எத்தனை விதமான படைப்பாளிகள்! பல வண்ணத்தில் படைப்புகள்! இந்த வண்ணங்களின் கூட்டணியில் என் எண்ணங்களுக்கும் ஒரு இடம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். "பேனா முனை போர்வாளைவிட வலிமையானது" என்பார்கள்! வன்முறைகளும் கலாச்சார சீரழிவுகளும் பெருகி வரும் இந்நாளில், பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சகற்றும் நற்பணியினை நாம் செய்யத் துணிவோம்,துவங்குவோம்  என வேண்டுகோள் விடுக்கிறேன்!
என்னுடைய பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு!. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
 
1) உழவின் பெருமையை , இன்றைய நிலையை உணர்த்தும் கவிதைகள்!

1. கனவு மெய்ப்பட வேண்டும்!
2. வாழவை!
3. நம்பிக்கைக் கீற்று!

2)  காதல்

1. நேச மலர்கள்
2. மீட்டிட வருவானோ?
3. தாகம்!
4. இமைகள்!
5. இதயத்தில் நீ
6. தனிமை!

3)  விழிப்புணர்வு/சமுதாயம்/தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள்

1) விழுந்ததும் எழுந்திரு!
2) கா!கா!கா!
3) கடைக்கண்பார்வை!
4) வேர்களை மறவா விழுதுகள்!
5) கழிவிரக்கம்!
6) முதியோர் இல்லம்!
7) நாளை நமதே!
8) வெற்றிப்பாதை!
9) எது ஊனம்?
10) புற்றுநோயைப் புரையோடவிடலாமா?

4)ஆன்மிகம்

1.  நலம் தருவாய் நரசிம்மா!

5) இயற்கைச் சீற்றம்!

1)  ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா?
2)  "தானே" உன்னால்தானே?
3)  பேய்மழை

படித்து மகிழுங்கள்!
தங்களின் மேலான கருத்துக்களைப் பகிருங்கள்!
தொடர்ந்து இந்த வாரத்தில் என் பணி சிறக்க ஆதரவு தாருங்கள்!
மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி !
 நாளை சந்திப்போம்!


என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)
 
மேலும் வாசிக்க...

Friday, August 10, 2012

அரசியலும் , ஆன்மீகமும் ...


ம் நாட்டில் அரசியலும் , ஆன்மீகமும் ஒன்றுடன் ஒன்று நேரடியாகவோ , மறைமுகமாகவோ பின்னிப்  பிணைந்திருப்பதாகவே கருதுகிறேன் ... அரசியலில் இருப்பவர்கள் ஆன்மீகவாதிகளை நாடுகிறார்கள் , ஆன்மீகவாதிகளில் பலரோ  பொய் , பித்தலாட்டம் என்று அரசியல் செய்கிறார்கள் ... கடவுளே இல்லை என்று சொல்லி அரசியல் செய்பவர்களும் ஆன்மீகத்துக்குள் அடக்கம் , ஏனெனில் கடவுள் இல்லை என்கிற வாதம் ஒன்றும் புதிதல்ல , பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்து மத ரிஷிகளால் அது பேசப்பட்டிருக்கிறது ... இன்று நாம் தன் பதிவுகள் மூலம் ஆன்மீக ஒளி பரப்பும் ஒருவரையும் , அரசியல் , ஆன்மிகம் இரண்டையுமே திறம்பட கையாளும் இருவரையும் பார்க்கப் போகிறோம் ...

கடவுளே இல்லை 
சொன்னவருக்கு சிலை வைத்தான் 
பகுத்தறிவுவாதி ... 

( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ ) 

அறிமுகம் 1

அநேகமாக பதிவுலகில் உள்ள பெரும்பான்மையோருக்கு இவரை தெரிந்திருக்கும் ... மூன்றாம் கோணம் நடத்திய கட்டுரை போட்டியில் முதல் பரிசு இவருக்கு கிடைத்ததன் மூலம் நான் இவரை அறிந்து கொண்டேன் ... இவரின் பதிவுகளை படித்தாலே உலகில் உள்ள நிறைய ஆலயங்களை தரிசனம் செய்த திருப்தி கிடைக்கும் ... நம்மூரில்  நமக்கே  தெரியாத பல ஆலயங்களை நமக்கு http://jaghamani.blogspot.com அறிமுகப்படுத்துவது ராஜேஸ்வரி அவர்களின் சிறப்பம்சம் . நான் படித்துப் பரவசமடைந்த சில பதிவுகள் இதோ :

http://jaghamani.blogspot.in/2012/06/blog-post_30.html       ஓம் சிவோஹம் 
http://jaghamani.blogspot.in/2012/06/blog-post_20.html       சுதர்சன சக்கரம் 
http://jaghamani.blogspot.in/2012/05/blog-post_06.html       மதுரை அரசாலும் மீனாட்சி 

அறிமுகம் 2

குருஜியாக இருந்து கொண்டு ஆன்மீக விளக்கங்களோடு நின்று விடாமல் அரசியலையும் அலசிப் பார்ப்பது உஜிலாதேவியின் சிறப்பம்சம் ... மதங்களை பற்றிய விளக்கங்கள் கொடுக்கும் இவர் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை ... உஜிலாதேவியின் மனதை கவர்ந்த சில பதிவுகள் ...

http://www.ujiladevi.in/2012/06/blog-post_15.html           என்னை ஜனாதிபதி 
http://www.ujiladevi.in/2012/03/blog-post_22.html           கலைஞர் வழியில் 
http://www.ujiladevi.in/2012/05/blog-post_18.html           சிவப்பழமான ஆஞ்சநேயர் 

அறிமுகம் 3

பத்மன் பதிவுலகிற்கு புதியவராக இருக்கலாம் , ஆனால் தான் எழுதிய " மூன்றாவது கண் " என்ற முதல் புத்தகத்திற்கே தமிழக அரசின் விருது பெற்றதால் எழுத்துலகில் பரிச்சயமானவர் , அத்தோடு பத்திரிக்கை , மீடியா உலகில் இருபத்தைந்து வருட அனுபவம் பெற்றவர் ... சில காலங்களில் பதிவுலகிலும் பரிச்சயமாவர் என்பது என் அபிப்ராயம் ... பத்மனின் நற்கூடல்  தளத்தில் மீண்டும் படிக்க வைக்கும் சில பதிவுகள் ...


நாளை மற்ற மூவருடன் மீண்டும் சிந்திப்போம் ... 

இப்படிக்கு
அன்புடன் அனந்து ... 





மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது