குயில் பாட்டு
➦➠ by:
குயில் பாட்டு,
செய்தாலி
இறைவன்
உதிர்த்த ஒருதுளி கருணை
''ஈரம்''
ம(பெ)ண்ணில்
..ம்மா
என்று அழுத்தி சொல்லிப்பாருங்கள்
ஈரம் உள்ள நெஞ்சின் சுரக்கும்
கண்ணீர்
கருசுமந்து
உயிரூட்டி
இறை காட்டி
வழிகாட்டி
வாழ்வுடுத்தும்
மென்மை மேண்மை பெண்மையை
போற்றி பெருமைப் படுத்துவோம்
பாழ்
சடங்கு சிறைக்குள்
இன்னும் அடிமையாய் துகில்கொள்ளும்
பெண்கள்
பெண்ணே....
நீ ''எழு''
சுடும் அனல் வரிகளில்
புயலாய் புறப்பட்ட
கவி புதுமைப்பெண்கள்
பெண்
சமூகத்தை தட்டி எழுப்பிய
அடிமையை உணர்த்தி
உரிமைக்கு கவிக் குரல்கொடுத்த
கவிக்குயில்கள்
நான்
மௌனமாய் வாசித்த வாசிக்கும்
கவி நாதர்கள்
ஒரு
வெறும் பதிவை (மலரை) அல்ல
தமிழ் நறுமணம் வீசும்
பூந் தோட்டத்திற்கான
வழிவீதி
வலையில்
கவி வரிகளால்
நம் சிந்தனையயும் வழிப் புருவத்தையும்
உயர்த்துகிறார்கள்
இந்த கவிக் குயில்கள்
இந்த
குயில்களின் இசைப்பில்
நயமாய் இசைக்கிறது
பெண்
உரிமையும்
உணர்வும்
தன்
வலைத் தலைப்பில் மட்டுமல்ல
உயிர்த்தேழுப்பும் எழுத்திலும் உணர்வின்
புதுமை சொல்கிறார் தோழி மு .சரளா
ஆழமான
உணர்வுகளை வரிகளில்
இதமாய் இசைக்கிறார் தோழி கீதமஞ்சரி
நாளை
வருகிறார்கள்
நவ ''காளிதாசர்கள்''
ம்(:
