07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label செய்தாலி. Show all posts
Showing posts with label செய்தாலி. Show all posts

Sunday, May 27, 2012

அகம் தொட்ட க(வி)தைகள்



ஆசிரியர் 
மேடை ஏறியதில் காணமுடிந்தது 
நிறைய வலை உறவுகளின் அடையாளங்களை 
உணர முடிந்தது அவர்களின் அன்பை 

ஆசிரியர் 
மேடையேற்றி பெருமைப் பருத்திய 
வலைச்சர உறவுகளுக்கு அகம் கனிந்த 
 நன்றி... நன்றி.. நன்றி... 

நாளைமுதல் 
வலைச்சர வகுப்பில் 
மீண்டும் மாணவனாக  தொடர்வேன் 


 உறவுகளின்  
வருகைக்கும் கருத்திற்கும் 
மாசற்ற நல் அன்பிற்கும் 
என் பிராத்தனைகள் 


 மனதை 
இளக்கி புருவத்தை உயர்த்திய 
அழகிய ஆழமான கவிதை ,கதைகள் 


தமிழ் 
மரபு வழியே 
ஐயா ராமானுசம் இசைக்கும் பாடல்கள் 
தரமான வாழ்வை சொல்கிறது


ரமணி சாரின் 
அதன் அடினாதத்தின் வெளிப்பாடும் 

நம் 
விலை நிலங்கள் தரிசாக 
மனம் கனக்கும் வேதனையை உடைக்கிறார் 


 நெஞ்சை 
உறுத்தும் நவ பள்ளி வாழ்க்கை 
மழலை கேட்கும் மயிலிறகில் விச்சு சார் 


சத்ரியனின் 
மனவிழியில் மனதை இளக்கிய

ஹாசிமின் 
சிந்தனை சிதறலில் 


சொகுசு கைதிகளான 
அக்கரை வாசிகளின் வாழ்கையை 
சொல்கிறார் சகோ யாசர் அரபாத் 


தான் 
வரிகளில் நமக்கு காட்டுகிறார் 
தோழர் பிரேம் 


விளை நிலத்தின் 
மனமுருகி சொல்கிறார் தோழர் அரசன் சே 


முதியோர்  இல்லத்தில் 
அனாதையாகும் பெற்றோர்கள்
வலிகளை உணர்த்துகிறார் தோழர் சீனி 


தமிழ் மீரானின் 
வாழ உதவாத உறவுகளின் 
மரணச் சடங்கு 


என் 
தங்கை கலை கருவாச்சியின் 
முதல் கவிதை நேசிக்கிறேன் 


தன் 
சொல்லிலும் பொருளிலும் 
நம்மை வியக்கவைக்கும் தோழி ஹேமாவின் 
 தன் 
எழுத்தொளியில் வெளிச்சமிடுகிறார் 
சகோ ரேவா 


 களை 
பிடுங்கப் போனவனின் மனசாட்சியோடு 
களையின் வினவல் தென்றலின் வருடலில் 
தோழி சசிகலா 




கீத மஞ்சரியில் 
ஒரு தாய் பறவையின் 



கணேஷ் சாரின் 
மின்னல் வரிகளில் 


தோழர் 
சே குமாரின் மனசில் 
எல்லா உறவுகளுக்கும் என் அகம் கனிந்த நன்றிகள்
சுபம் .
மேலும் வாசிக்க...

Saturday, May 26, 2012

நளபாக கலையரசிகள்




நளபாகம் 
அழகிய ரசனைக்  கலை 
அது சிலருக்குமட்டுமான வரபிரசாதம் 


விலைகொடுத்து 
பொருள் வாங்கி விடலாம் 
தரமாய் ருசியாய் சமைப்பது 
அரிது 


ருசியால் 
வயிறு நிறைந்தால் 
மனம் தானாக நிறையும் 


அழகிய 
பரிமாறுதலில் ருசியற்ற 
உணவும் அமிர்தமாய் தித்திக்கும்

நாம் 
உண்ணும் உணவு
நாளைய ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் 
மருந்து, விஷம்


நல்லுணவும் 
நல்லாரோக்கியமும் நீண்ட ஆயுளும் 
நம் பாட்டன் முப்பாட்டர்களின் 
அடையாளங்களில்


இன்றைய 
நவவுலகில் ஐம்பதை கடக்கும்முன் 
ஓராயிரம் சீழ் சீக்குகள் காரணமோ 
நவ உணவுக் கலாச்சாரம்


விலையுள்ள உணவை 
வெறும் பகட்டிற்காக தேடி உண்ணுகிறோம் 
 தரமும் ஆரோக்கியமும் மறக்கிறோம் 
அறிவில் மேலோங்கிய மனிதர்களாகிய நாம் 


நல்லுணவு 
நல்லாரோக்கியம் நீண்ட ஆயுள் 
ஆரோக்கிய வாழ்கையின் அழகிய அடையாளம்


இதோ 
ருசியுள்ள 
நளபாகத்தை சொல்லிகொடுக்கிறார்கள் 
சமையல் கலை வல்லவர்கள்


 நளபாகம் 
எத்தனையோ கலையரசிகளின் 
தித்திக்கும் ருசி சங்கமம்


சகோ ஆமினா வின் 
கற்றும் ருசித்தும் கொள்ளலாம் 
நளபாகத்தை 





ரசனையில் விதவிதமாய் கோர்க்கப்பட்ட 
ருசியுள்ள உணவுகள் பாருங்கள் ருசியுங்க 

சகோ 
மலிக்காவின் கலைச்சரலில் 
ருசியோ ருசி பாருங்கள் ருசியுங்க 



சைவ சமமையலை சமைக்க ருசிக்க 
நமக்கு சொல்லி தாரங்க 
சகோ ஆயிசா ஓமர் 

அட்டகாசமான ருசியை சமைக்க 
கத்து தாராங்க சகோ ஜலிலா கமால் 

சாப்பிட வாங்க 
நல்ல சமைத்து அசத்துறாங்க 

தோழி     கோவை டு டெல்லி பாருங்க 



அன்பாக 
உணவை சமைக்க சொல்லித் தாரங்கள் 




நிறைய 
சமையல் வித்தைகளையும் 
அதன் குணா நலன்களையும் சொல்லிகொடுகிறாங்க 
சின்னு ரெஸ்ரி  தோழி  மாதவி 


தோழி 
சுண்டி இழுக்கும் வாசமும் 
சுவையான உணவுகளும் 


விதவிதமான குழம்பு வகைகள் 
பாருங்க சமையுங்க ருசிங்க


சகோ யாஸ்மியின்


ருசியுள்ள நல்ல அசைவ உணவுகள் 


நாளை 
பணியின் இறுதி நாள் 
வாசித்ததில் பிடித்த  ரசித்த 
கதை, கவிதைகளுடன் வருகிறேன் (:

மேலும் வாசிக்க...

Friday, May 25, 2012

பல்சுவை வேந்தர்கள்





இன்று 
நாம் பார்க்கப்போவது 
பல்சுவை வேந்தவர்கள்

குறிப்பா 
ஒருசிலர் வல்லவராக இருப்பார்கள் 
ஒரு சில விஷயங்களில் மட்டும் 

நான் 
அதிகம் வாசிப்பதும் இரசிப்பதும் 
கவிதை... கவிதை... கவிதை... 
அதுமட்டும்தாங்க 
வேற எல்லாத்திலுமே வட்ட 
பூஜ்யம் 


நாம் 
ஒரு விஷயத்தை சொன்னால் எழுதினால் 
மற்றவர்களை செண்டடையுதல் பயனடையுதல் 
நமக்கான திருப்தி  

நம் 
வலையுலகில் 
பல்சுவைப் பதிவுகளில் 
கொடிகட்டிப் பறக்கிறார்கள் இவர்கள் 



சில
வலைகளைப் 
பார்க்கையில் வாசிக்கையில்
பொறாமை வரும் 
அவ்வளவு அருமையா அழகா எழுதுறாங்க 
இவங்க 



ஒரு 
கல்வித் தொடராக 
பயனுள்ள நல்ல விஷயங்களை 
பட்டியலிடுகிறார் நம்ம  மதுமதிசார் 



அஞ்சறை பெட்டியில் 
கிளைகளாய் குவிந்து கிடக்குகிறது 
நம் நாட்டு நடப்பு 


வலையில் 
எதை எடுப்பது எதை விடுவது 
குழப்பமல்ல அவ்வாளவு நல்ல பதிவுகள் (சிந்தனைகள் )
தருகிறார் திண்டுக்கல் தனபால் சார் 


சினிமா 
நிறைய செய்திகளை தருகிறார் 
ராஜபாட்டை ராஜா பாருங்க 
ஆனால் இவருக்கே போட்டியா 
நாளை இவர் வாருவார் பாருங்க


கிழிகிழி ன்னு 
கிழிக்கிறார் நம்மளை இல்லங்க 
அரசியல் நாற்றங்களை 
விகடனின் அங்கிகாரமும் பாருங்கோ 

நிறைய 
நல்ல கல்வி சம்பந்தப்பட்ட 
அறிவை கற்றுத் தருகிறார் 
நம்ம மதுரை சரவணன் சார் 

உலகம் 
பற்றய வரலாறை 
எளிதான வார்த்தைகளில் விளக்குகிறார் 
நம்ம வரலாற்றுச் சுவடுகள் பாருங்கள் 


சீனாவின்
விலை மலிவும் இந்தியாவின் விலையேற்றமும் 
நமக்கு விளக்குகிறார் நம்ம உழவன் 


தொழில் நுட்பமும் 
சமூக நுட்பங்களையும் நமக்கு 
எளிதாக சொல்லி தருகிறார் தங்கம் பழனி 

நல்ல 
நிறைய கட்டுரைகள் 
அதற்க்கான விகடனின் அங்கிகாரமும் 
வாங்க பலாசார் பக்கம் 


தன் 
கைவண்ணத்தில் 
நிறைய விஷயங்களை கையாளுகிறார்

நிறைய 
தூக்கமும் கொஞ்சமா விழிப்பும் 
சோம்பேறி இல்லங்க நான் 
இன்று வார விடுமுறை (:

நாளை 
உடல் நலத்திற்க்காக 
 சுவையும் மருந்தும் 

ம் (:

மேலும் வாசிக்க...

Thursday, May 24, 2012

நவரச புன்னகை


சுட்ட 
பழம் இனிக்குமாம் 
கடி ....?


*நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும், 
அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது? 


*வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம், 
ஏன் காவிரி ஆத்துல‌ கூட மீன் பிடிக்கலாம்! 
ஆனால் அய்யர் ஆத்துல மீன் புடிக்க முடியுமா?


*கோலமாவில் கோலம் போடலாம்! 
ஆனால் கடலை மாவில் கடலை போடமுடியுமா?


*லைப்ல ஒன்னுமே இல்லனா போர் அடிக்கும்! 
தலையில ஒன்னுமே இல்லனா கிளார் அடிக்கும்!

கேரட்-டை "பச்சை"யா சாப்பிட்ட உடம்புக்கு நல்லதுன்னு டா‌க்ட‌ர் சொன்னாரு நல்லதுதானேஎல்லா கடையிலும் தேடிப்பார்த்துட்டேன் சிவப்பு நிற கேரட்தான் இருக்குது


*இட்லி சாஃப்டா இருக்குமா? 
சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!




நகைச்சுவை 
அது ஒரு சிலருக்கே கிடக்கும் வரப்பிரசாதம் 
என்னை கேட்டால் நகைச்சுவைகளை படித்து ,பார்த்து சிரிப்பேன் 
மற்றவர்களை சிரிக்க சிந்திக்க வைக்க தெரியாது 



தன் 
நகைச்சுவைகளில் நம்மை 
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார் 
பழம்பெரும் நடிகரில் எனக்கு பிடித்தவர் என் எஸ் கே தான் 


அதன்பின் 
வார்த்தை முக ஜாலங்களில் 
ஆடிப் பாடிசிந்திக்க  சிரிக்கவத்தவர் சந்திரபாபு அவர்கள் 


நவரச 
நகைச்சுவை வல்லவர் அப்படின்னா 
நம்ம நாகேஷ் சார்தான் 
நகைச்சுவை நடிப்பில் 
நடிப்பும் துடிப்பும் சொல்லி அடங்காதது 


கவுண்டமணி செந்தில் 
பெயரை சொன்னாலே சிருப்புதான் வரும் 
பெரிய இடைவெளிக்குப் பின் சினிமாவுக்கு கிடைத்த கூட்டணி 


 விவேக் 
பெயரைப்போலவே விவேகாமான 
ஆழ்ந்த கருத்துக்களை சொல்லி சிரிக்க சிந்திக்க வைத்தார் 

இன்று 
அவரும் சிலரைப்போல கூட்டம் சேர்த்ததால் 
 கருத்தும் நகைச்சுவையும்  துவக்கிறது 

அடி 
வாங்குதலிலும் 
காமச் சொல்லிலும் நகைச்சிவை என்று 
சொல்லிக்கொண்டு எத்தனையோபேர்   


சந்தானம் 
டைமிங் காமெடி என்றுதான் சொல்லலாம் 
சொல் செயலும் மனதில் நிற்கும் 



வலையில் 
தங்கள் பதிவுகளால் 
சிரிக்க சிந்திக்க வைக்கிறாங்க இவங்க 


பெயர வச்சுப்புட்டு 
கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 
 நகைச்சுவை  அட்டூழியம் செய்கிறார் 

லொள்ளு & ஜொள்ளில்
வாணியாய் வடிக்கிறார் 
கவிதைகளை 

இவர் எழுத்தில் 
நக்கலும் நையாண்டியும் 
எப்படி எப்படியெல்லாம் கலைக்கிறார்  பாருங்க 


 மனைவிகிட்ட 
நல்லபேர் வாங்க 
ஐடியா சொல்கிறார் நம்ம ஐடியா மணிசார் 



அப்பப்பம் சின்னதா சொட்டுகிறது 
கடி (கள்)


 மின்னல்
வரிகளில் 
அனுபவ தொகுப்புக்களை 
அழகாய் சவராசியமாய்  சொல்லிச்செல்லும் 
கணேஷ் சார்  
சிரிங்கள் 
இல்லை சிறை என்கிறார் பாருங்கள் 


சிரிப்பின் 
குண நலங்கள் சொல்கிறார் 
நம்ம துறை டேனியல் சார் பாருங்க சிரிங்க 

சகோ 
ராஜியின்  கற்பனை நகைச்சுவை 
பாருங்க சிரிங்க 

நிறைய 
நல்ல தகவல்களுடன் 

நாளை வருகிறார்கள் 
பல்சுவை வேந்தர்கள் 

ம்(:

மேலும் வாசிக்க...

Wednesday, May 23, 2012

நவ காளிதசர்கள்



கம்பன் 


காளிதாசன் 



ஷெல்லி 

 இவர்களின் 
 வரிகள்  
கற்றுக் கொடுத்தது 
கவிதையை 



பாரதி 


காற்று வெளியிடைக் கண்ணம்மா ,-- நின்றன் 
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் ;-- அமுத 
தூற்றினை யொத்த இதழ்களும் --நில
வூறித் ததும்பும் விழிகளும் --பத்து 
மாற்றும்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த 
வையத்தில் யானுள்ள மட்டிலும் --எனை 
வெற்று நினைவின்றித் தேற்றியே -இங்கோர் 
விண்ணவ னாகப் புரியுமே!--இந்தக் (காற்று )

நீயென தின்னுயிர் கண்ணம்மா!--எந்த 
நேரமும் நின்றனைப் போற்றுவேன் --துயர் 
போயின, போயின துன்பங்கள் --நினைப் 
பொன்னெனக் கொண்ட பொழுதிலே --என்றன் 
வாயினி லேயமு துருதே --கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே --உயிர்த் 
தீயினி லேவளார் சோதியே!-என்றன் 
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று )

 என் முண்டாசுக் கவிஞனின் கண்ணாம்மா பாடல், எப்போது வாசித்தாலும் கேட்டாலும் தித்திக்கும் தேன் அமுது 

''அந்த'' 
இந்த 
கவிஞர்கள் பேச்சில் வீரியம் குன்றா 
சாய மனிதர்கள் சிலர் நாட்டினில் 
வெட்கிறேன்
என் பாரதிக்கு நிகர் பாரதியே 
மெய்யறிவார்கள்
பாரதியை வாசித்தவர்கள் 



எத்தனயோ 
கவிஞர்கள்.. கவிதைகள்...
எழுத்து, சொல், நடை 
 வாசிப்பில் எனை ஆழ்த்திய 
தற்கால கவிஞர் 



இதோ 
காதல் நீர் 
கொண்டு வருகிறார்கள் 
நம் நவ காளிதர்கள்  

காதலியில் 
வெண் நிறத்தை தேடும் 
நவ உலகில் திராவிடம் தேடுகிறார் 
துரிகைத் தூரலில் கவிஞர்  மதுமதி 



இளகி உதிரும் துளிகளில் 
காதல் ரசங்கள் 

 கவிஞர் சத்ரியன்
 மனவிழியில் ஈர்க்கும் 
தாய்ப் பசு 
 

கவிதை வீதியில் 
 காதல் நியாயம் கேட்கிறார் 
  கவிஞர் சௌந்தர்

காதலின் 
வேதியல் மாற்றத்தை 
சொல்லிச் செல்கிறார் முனைவர் குணசீலன் 


காதல் ஞாபகங்களுடன் 
தோழர் மனசு சே குமார் 


மழையாடிய 
பொழுதுகளில் 
நம்மையும் நனைக்கிறார் 


 மிதிவண்டி காலங்களில் 
 நினைவுத் துளிகளை 
உதிரச் செய்கிறார் தோழர் அரசன் 


காதல் 
நினைவுச் சத்தத்தை 
அழகாய் சொல்கிறார் தோழர் அனீஷ்




 நாளை 
சிரிக்க சிந்திக்க வைக்க 
வருகிறார்கள் வலையுலக வல்லவர்கள் 

மேலும் வாசிக்க...

Tuesday, May 22, 2012

குயில் பாட்டு




இறைவன் 
உதிர்த்த ஒருதுளி  கருணை 
''ஈரம்''
ம(பெ)ண்ணில் 

 ..ம்மா 
என்று அழுத்தி சொல்லிப்பாருங்கள் 
ஈரம் உள்ள நெஞ்சின் சுரக்கும் 
கண்ணீர் 

கருசுமந்து 
உயிரூட்டி 
இறை காட்டி 
வழிகாட்டி 
வாழ்வுடுத்தும் 
மென்மை மேண்மை பெண்மையை 
போற்றி பெருமைப் படுத்துவோம் 

பாழ்
சடங்கு சிறைக்குள் 
இன்னும் அடிமையாய் துகில்கொள்ளும் 
பெண்கள் 

பெண்ணே....
நீ ''எழு''
சுடும் அனல் வரிகளில் 
புயலாய் புறப்பட்ட 
கவி புதுமைப்பெண்கள் 

பெண் 
சமூகத்தை தட்டி எழுப்பிய 
அடிமையை உணர்த்தி 
உரிமைக்கு கவிக் குரல்கொடுத்த 
கவிக்குயில்கள் 


நான் 
மௌனமாய் வாசித்த  வாசிக்கும் 
கவி நாதர்கள் 



ஒரு 
வெறும் பதிவை (மலரை)  அல்ல 
தமிழ் நறுமணம் வீசும் 
பூந் தோட்டத்திற்கான 
வழிவீதி

வலையில் 
கவி வரிகளால் 
நம் சிந்தனையயும் வழிப் புருவத்தையும் 
உயர்த்துகிறார்கள் 
இந்த கவிக் குயில்கள் 

இந்த  
குயில்களின் இசைப்பில் 
நயமாய் இசைக்கிறது 
பெண் 
உரிமையும் 
உணர்வும் 


தேன் கவிதையும் 
நல் சிந்தனைகளும் 
சும்மா சொல்லி செல்கிறார் கவிதாயினி  தேனம்மை லஷ்மன் 



மெய்யின் 
அனல் சொல்லால் 
சொற்சித்திரங்கள் தீட்டுகிறார் தோழி லதா ராணி 

வெளித்த 
வானத்தில் ஆழ் உணர்வுகளை 
சிறகடிக்க செய்கிறார் தோழி ஹேமா 

சகோ 
சிந்தனை அலசலில் 
நீரோடையில் 
தெளிந்து ஓடுகிறது கவிதை நீர் 

தன் 
வலைத் தலைப்பில் மட்டுமல்ல 
உயிர்த்தேழுப்பும் எழுத்திலும் உணர்வின் 
புதுமை சொல்கிறார் தோழி மு .சரளா 

ஆழமான 
உணர்வுகளை வரிகளில் 
இதமாய் இசைக்கிறார் தோழி கீதமஞ்சரி 

உணர்வின் 
அடி நாளத்தின் துடிப்பை 
தான் இயற்றும் வரிகளில் செருகுகிறார் தோழி ரேவா 

எழுத்தில் 
கயவ சமூகத்திற்கான 
புரட்சியின் அனல் வேட்கையுமாய் தோழி மாலதி 

காதல் 
சுகங்கள் சுமைகள் 
வாசிப்பில் அகம் இளகும்
இதமான கவிதை படைக்கிறார் தோழி பிரஷா 

நாளை 
வருகிறார்கள் 
நவ ''காளிதாசர்கள்'' 

ம்(:

மேலும் வாசிக்க...

Monday, May 21, 2012

உங்களில் ஒரு(வன்)மலர்

தாய்த் தமிழ் உறவுகளுக்கு 
என் அகம் கனிந்த இனிய தமிழ் வணக்கம் 

தமிழ் 
மாமேதைகள் 
சங்கமிக்கும் தமிழ் சபையில் 
எளியவனுக்கு ஆசிரியர் 
''மகுடம்''

ஆசிரியர் 
மகுடம் சூடி என்னையும் என் தமிழையும் பெருமை படுத்திய 
சீனா ஐயா மற்றும் வலைச்சர குழுமம் மற்று தமிழ் உறவுகளுக்கு 
என் அகம் கனிந்த நன்றிகள் 

வலச் சரத்தில் 
கோர்க்கப்பட்ட தமிழ் மலையாய்
தரணியில் பூத்து சிதறிய புன்னகைக்கும் 
தமிழ்பூக்கள்

நான்
உங்களில் ஒரு(வன்)மலர் 
''செய்தாலி'' 

''தமிழ்''
எனக்கும் 
என் உறவுகளுக்கும் 
என் சார்ந்த சமூகத்திற்கும்மான 
அடையாளம் 

அலைக் குழந்தைகள் 
துள்ளி விளையாடும் கேரளக் கடலோரத்தில் 

வீர
 இதிகாசங்கள் சுமக்கும் ''நெல்லைச்'' சீமையில் 
தமிழ் அருந்தி இளமையை 
வளர்ந்தவன் 

அனல் 
மணல் வீசும் அமீரக வீதிகளில் 
நாளைய வாழ்க்கைக்கான தற்கால 
திரவியம் தேடல் (தொடர்கிறது )

நம்மை 
சுற்றிய வாழ்கையில் 
சில நினைவுகள் மட்டும் தேங்குவதுண்டு
வடுக்களாய்... 
 
அகத்தில் 
உறங்கும் நினைவுகள் உணர்கையில் 
வலியில் விழிகள் உதிற்கும் 
கண்ணீரை 

எழுத்தை 
உணர்ந்த பால்ய பருவமுதல் 
குறிப்பேட்டில் எழுதிக் கிறுக்கினேன் 
நினைவில் இறக்காத உணர்வுகளை 

என் 
என் சார்ந்த சமூகத்தின்  வ(லி)டுக்களை 
இன்றும் எழுதி கிறுக்கிறேன் குறிப்பேட்டில் அல்ல 
வலைத்தளத்தில் 

 பால்யத்தில் 
அறியாது தொலைத்த 
அம்மாவின் கூலிப்பணம் இருபதுருபாய் நோட்டு 

வலிக்கு 
மருந்தாய் சீனா ஐயாவின் முதல் 
கருத்து துளி 

 என்னை 
வலைச்சரத்தில் முதன் முதலாய் 
கோர்த்து பெருமை படுத்திய 

பின் 
எத்தனையோ நன் உறவுகளால் 
அழகாய் அலங்கரிக்கப்ட்டேன் 
வலைச்சரத்தில் 

நெஞ்சில் 
உறங்கும் நினைவுத் துளிகளில் 
சிலவை 

தளிர் செடியை 
பிடுங்கி நட்ட இரவும் 

ஒரு 
இரவு அகதியாய் குடியேறிய 
நினைவுகள் உறங்கும் பழைய வீடும் 
 
இளமையில் 
தளிர்ந்து ஆயுளற்று இறந்த 
  முதல் ''காதல்''  

அறிவையும் 
வாழ்கையின் அழகையும் கற்றுகொடுத்து 
காலச் சுழலில் பிரிந்துபோன 
இனிய ''தோழி'' 

திருமணமும் 
பிரிவின் வலியும்

என் 
எழுத்துக் கிறுக்கலின் நிழல்களில் 
ஒழித்து வைத்து இருக்கிறேன் 
என்னையும் என் சார்ந்த சமூகத்தையும் 

என் 
கிறுக்கலின் விதிப்பில் 
வலையுலகில் சம்பாதித்தேன் 
நல் உறவுகளை 

வலை 
உறவுகளின் அன்பை எழுதமுயன்றால் 
வற்றிப்போகும் வார்த்தைகள் 

உறவுகளின் 
அன்பில் விளைந்த ஆசிரியர் 
தகுதி 

நன்றியை 
வெறும் வார்த்தையில் பதிவது 
அழகற்றது 

நன்றிக்கு 
கடமைப் பட்டவன் 
மரணம் வரை நினைப்பதே 
நன்னழகு 

உங்களுடன் 
உறவாடவரும் இம்மலருக்கு 
நன்னீராய் ஊற்றுங்கள் அன்பின் 
புன்னகையை 

வலையில் 
இசைபாடும் கவிக் குயில்களோடு 
வருகிறேன் ''நாளை'' 

ம்(:
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது