07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சிரிக்க. Show all posts
Showing posts with label சிரிக்க. Show all posts

Thursday, August 11, 2011

ஹோட்டல் எமவிலாஸ் - சைவம்

அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம்

இன்று முட்டை இல்லா வெஜ் ஆம்லெட் செய்வது எப்படின்னு சொல்லி  தரப்போறேன்

தேவையான பொருட்கள்

1. சோளமாவு - 2 தேக்கரண்டி
2. அரிசிமாவு - 2 தேக்கரண்டி
3. வெங்காயம் - 1 பெரியது பொடியாக நறுக்கி கொள்ளவும்
4. தூள் பெருங்காயம் - தேவையான அளவு
5. உப்பு - தேவையான அளவு
6. பச்சை மிளகாய் - 2 நீளமானது பொடியாக நறுக்கி கொள்ளுங்கள் (மூலம் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது அல்லது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்)

செய்முறை

சோளமாவு, அரிசிமாவு இரண்டையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக இல்லாமலும் ரொம்ப தண்ணீராக இல்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த சோளமாவு கரைசலில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள்.

தோசை கல்லை அடுப்பில் வைக்கவும், நன்கு சூடேறிய பிறகு சிறிது எண்ணை ஊற்றி தோசை கல் முழுவதும் தேய்த்துக்கொளுங்கள். ஒரு கரண்டியில் கரைத்த மாவை எடுத்து ஆம்லெட் சைஸ்க்கு ஊற்றுங்கள்,

நன்கு சிவந்து வந்ததும் திருப்பி போடுங்கள். சூடாய் பரிமாறுங்கள்

டிஸ்கி 1 : சமைத்து மட்டும் பாருங்கள், சாப்பிடுவதற்க்கு நான் கியாரண்டி இல்லை.

டிஸ்கி 2 : மேலே வைத்த தலைப்புக்கும் கீழே சொல்லப்பட்டுள்ள பதிவர்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை, சும்மா தமாசுக்கு தலைப்பு அப்பிடி. யாரேனும் தவறாக இருக்கிறது என்று நினைத்தால் மன்னியுங்கள்.

இனி வலை உலகில் எனக்கு பிடித்த சிலர்

1. வித விதமாய் சமையல் செய்வது எப்படி என்று சொல்லிதரும் அழகான வலைப்பூ இவருடையது. பயணிக்கும் பாதை என்று தலைப்பிட்டு இஸ்லாம் / சமையல்/கைவினை/செய்திகள்/மருத்துவம்/டிப்ஸ் என்று பல சுவாரஸ்ய குறிப்புகளை தருகிறார், சமீபத்தில் இவர் பதிவிட்ட நண்டு முருங்கைக்காய் குருமா பதிவில் பல சுவாரசியமான செய்திகளையும் தருகிறார்..


2. அடுத்த சமையல் ராஜா இவர், பல உபயோகமான குறிப்புகளும் தருகிறார். இந்த பதிவு ஒரு சாம்பிள் இவர் எப்பிடி அல்வா கிண்டுறார்ன்னு தெரிஞ்சுக்க


3. அடுத்து பார்க்கபோறதும் சமையல் சொல்லி தர்றவங்க தான், காரட் ஃப்ரை எப்பிடி பண்ணியிருக்காங்க பாருங்க. கொஞ்சம் கஷ்டம் என்ன தெரியுமா, எல்லாம் இங்கிலீஷ்-ல இருக்கு அப்புறம் ஆந்திரா ஸ்டைல் மாதிரி தெரியுது

அன்புடன்
ஜ.ரா.ரமேஷ் பாபு

மேலும் வாசிக்க...

Tuesday, August 9, 2011

இது ஆம்பளைங்க சமாச்சாரம்

அன்பார்ந்த நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும்

இன்றைய செய்தி

1) எல்லா ஆண்களும் எப்போதுமே பிசி

2) சிலர் பிசியா இருந்தாலும் பெண்களுக்கு என்று நேரம் ஒதுக்குகின்றனர்

3) சிலர் பெண்களுக்கு நேரம் ஒதுக்கினாலும், அவர்களை கவனிப்பது இல்லை

4) சிலர் அவங்களால பார்த்துக்கிட முடியாலைன்னாலும் பெண் ஒருவர் துணையாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்

5) சிலர் பெண் ஒருவர் துணைக்கு இருந்தாலும், தங்களின் அதிர்ஷ்டத்தை இன்னொர பெண்ணிடம் முயற்சிக்கின்றனர்

6) சிலர் இன்னோர் பெண்ணிடம் முயற்சித்தாலும், அந்த பெண் விலகி செல்லும் போது மிகவும் மனஉளைச்சலில் மாட்டிக்கொள்கிறார்கள்

7) அந்த பெண் விலகிப்போனாலும், தன் தவறை பற்றி உணராமல் வேறு ஒருவரிடம் முயற்சி செய்கின்றனர்..

டிஸ்கி 1 : எங்க அருவாள்ன்னு தேடும் நண்பர்களுக்கு இங்க வந்து பாருங்க இது பொம்பளைங்க சமாச்சாரம்

டிஸ்கி 2 : இதை படிக்கும் போது யாருக்காவது யாரோ ஒரு பிரபலத்தின் பெயர்  ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல

இனி வலை உலகில் எனக்கு பிடித்த சிலர்

1. அட என சொல்ல வைக்கும் நகைச்சுவை செய்திகள் தரும் வலைப்பூ மனசாலி. வலைப்பூ முழுவதும் சிரிப்பு துணுக்குகள் எப்போது படித்தாலும் களுக் என சிரிப்பை வர வைக்கும் சிரிப்புகளுக்கும் பஞ்சம் இல்லை. "மனதில் பட்டதை எழுதுகிறேன்" என்று தலைப்பு வைத்துக்கொண்டு நகைச்சுவை அதகளம் செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் நான் ரசித்த அவர் பதிவுகளில் ஒன்று S என்ற வார்த்தையில் ஆரம்பித்து X என்ற வார்த்தையில் முடியும் சொல் என்ன?

2. நான் ரசித்த எழுதுக்கள் இவருடையது. இயல்பான நடை சுருக்கமாய் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு போகிறார். டெல்லிக்கு சென்று வந்த உணர்வை தரும் இவருடைய பல படைப்புகளில் சர்க்கஸ் ஒரு சிறந்த படைப்பு

3. சினிமா செய்திகள் தருவதில் சமர்த்தர். சுட சுட சினிமா செய்திகள் இவரின் வலைப்பூ முழுவதும். சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து இவருடையது, சினிமா பற்றிய கிசு கிசுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது சமீபத்திய கிசு கிசு ராகவா லாரன்ஸை காதலிக்கும் லட்சுமிராய்? 

இன்னும் வருவேன்

மேலும் வாசிக்க...

Monday, August 8, 2011

ஏவாள் படைப்பின் ரகசியம் உடைகிறது

கடவுள் ஏன் ஏவாளை படைத்தார் 10 சுவாரசியமான காரணங்கள், கீழிருந்து மேலாக வரிசைபடுத்தப்பட்டுள்ளது

10 )  அடிக்கடி ஆதாம் தோட்டதில் தொலைந்து போய்விடுகிறான், கடவுளுக்கு தெரியும் ஆண்கள் எப்போதும் வழி கேட்க தயங்குகிறார்கள்

9)    கடவுளுக்கு தெரியும் ஆதாமூக்கு எப்போதும் டி‌வியின் ரிமோட் கண்ட்ரோல்-ஐ வேறு ஒருவர் கையில் வைத்து இருக்க விருப்பம்,  ஏனெனில் ஆண்களுக்கு டிவியில் வருவதை தவிர டிவியில் வேறு என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில் ஆர்வம் அதிகம்

8)    கடவுளுக்கு தெரியும் ஆதாம் சாப்பிட உட்காரும் முன் இலை/தட்டை தானாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை அதனால் அதை எடுத்து வைக்க ஏவாள் தேவை

7)    ஆதாமுக்கு டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் எடுத்துக்கொள்ள தெரியாது என்று கடவுளுக்கு தெரியும்

6)    ஆதாமுக்கு தெரியாது எந்த இரவு வீணாய் கழிந்தது என்று, அதை ஆதாம் நினைவில் கூட வைத்து இருப்பதில்லை என்று கடவுளுக்கு தெரியும்

5)     இந்த உலகத்தில் மனித இனம் தழைக்க வேண்டும் எனில் குழந்தைகளை யாராவது பார்த்துக்கொள்ள அல்லது பராமரிக்க வேண்டும், ஆதாமுக்கு அந்த சம்ர்த்து இல்லை என கடவுளுக்கு தெரியும்

4 )    தோட்டத்தை காக்கும் பொறுப்புள்ள ஆதாம் தன் கருவிகளை அல்லது உடைமைகளை எங்கே வைத்தோம் என்பது நினைவில்  இருக்காது என்று கடவுளுக்கு தெரியும்

3)    தன்னுடைய தவறுகளுக்கு குற்றம் சுமத்த இன்னொருவர் தேவை என்று ஆதாம் நினைத்ததால்

2)    மனிதன் தனிமையில் இருப்பது பாவம், அவனுடைய எல்லா பாவங்களுக்கும் அதுவே முதல் காரணம் என்று கடவுள் நினைத்ததால்

கடைசி மற்றும் முக்கியமான காரணம்

1)    ஆதாமை கடவுள் படைத்து முடித்த பின் தலையை சொறிந்து கொண்டே சரியில்லையே இதை விட சிறப்பாய் இன்னொன்றை  என்னால் செய்யமுடியும் என்று கடவுள் நினைத்ததால்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது