07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சுய அறிமுகம். Show all posts
Showing posts with label சுய அறிமுகம். Show all posts

Monday, October 13, 2014

காப்புப் பருவம்!!!







ண்ணே! கனியமுதே!
காணக்கிடைக்காத
கருங்கடல் முத்தே! - என
கருவினில் எனைச்சுமந்து
கருப்பொருட்களை
கனகத் தூரிகையில்
கருத்தாய் சமைக்கும்
சபைநிறை ஆன்றோர்கள்
புகழ்நிறை சான்றோர்கள் - நிறைந்த
நிகழ்நிறை வலைச்சரத்தில்
ஆசிரியனாய் என்னையும்
பணியாற்ற இப்புவியினில்
பிறவியெடுக்கச் செய்த - எனைப்
பெற்ற தெய்வங்களுக்கு
முதல் மரியாதை!!!!





சொற்களாலும் பொருட்செறிவினாலும் பல்சுவைப் படைப்புகளை இனிதாய்ப் படைக்கும் பல பிரம்மாக்கள் மத்தியில் நீயும் ஒரு எழுத்தாளன், என என் எழுத்துக்களை அங்கீகரித்து இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியப் பணியினை எனக்கு உவந்தளித்த ஐயா.சீனா அவர்களுக்கும், நண்பர் தமிழ்வாசி.பிரகாஷ் அவர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல.


ன்னைச் செம்மையாய் செதுக்கிய ஆசான்களுக்கும், என்னுடன் தோளோடு தோள்கொடுத்து தவங்கியபோது தாங்கியும் துவண்டபோது நம்பிக்கை கொடுத்தும் என் மெய்யோடு உயிராய் இருக்கும் என் மனைவிக்கும் இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


பிறந்தது அங்கயற்கண்ணி ஆட்சி செய்யும் நான்மாடக்கூடல். வளர்ந்ததும் வாழ்வதும் முத்துநகராம் திருமந்திரநகர். படித்தது இளங்கலை வேதியியல். பணிபுரிவது அமீரகத்தில் கச்சா எண்ணெய் எடுக்குமிடத்தில். அன்பான மனைவி, அழகான இரு குழந்தைகள் ஆதரவாக அன்னை இப்படி பன்னீர் சோலையில் ஆறுமாதம், ஆழ்கடலில் பணிநிமித்தம் ஆறுமாதமென விக்கிரமாதித்தன் போல வாழ்க்கை ஓட்டம். இடையிடையே தமிழின் தாகம் கொண்டு படைக்கும் படைப்புகளே வசந்த மண்டபம்.

சந்த மண்டபம் தொடக்கி மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. 2011 ம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதலாம் நாள் தொடங்கினேன். இன்று 174 பதிவுகள் ஏற்றி இருக்கிறேன். நான் வலைப்பதிவு எழுத வந்த காலத்தில் பத்து பதிவுகளுக்கு மேல் யாரும் கருத்து போடவில்லை. முதல் முதலாக முத்தான கருத்தாக சகோதரி கீதமஞ்சரி அவர்கள் தெரிவித்தார்கள். அந்தப் பொற்கரத்தால் கருத்து பெற்ற நான் இன்னும் பல பொன்னான கருத்தாளர்களுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன். சகோதரி கீதமஞ்சரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.





முதன்முதலில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் கவிதைவீதி.சௌந்தர் அவர்களுக்கும், முதலில் என் எழுத்துக்களை அங்கீகரித்து இலக்கியச் சிந்தனையாளர் விருது வழங்கிய முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் பல விருதுகள் அளித்த நண்பர் நாஞ்சில்.மனோ, நண்பர் பாலகணேஷ், அன்புத் தங்கை சசிகலா, நண்பர் தனசேகரன், சகோதரி குழந்தைநிலா ஹேமா, மற்றும் அன்பிற்குரிய வேதம்மா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ன் எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து வசந்த மண்டபத்தை தொடரும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நாட்டுப்புறக் கலைகள் என் எழுத்துக்களின் உயிர்மூச்சு. அந்த பொன்னான கலைகளை ஆணிவேர் போல இல்லாவிட்டாலும் சல்லிவேர் போலவாவது இருந்து வாழ்விக்க தணியாத விருப்பம். பல கலைகளை பற்றி கவிதை வடிவில் எழுதிவிட்டேன். தெருக்கூத்து எனும் மிகப்பெரிய கலை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய சமுத்திரம் அக்கலை. என்னால் இயன்ற அளவுக்கு செய்திகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறேன். முழுமையாக அக்கலை பற்றி எழுதி முடிக்கும் அந்த பொன்னான திருநாளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

நாட்டுப்புறக் கலைகள் பற்றிய என்னுடைய பதிவுகள்:

பொய்க்கால்குதிரை ஆட்டம்!!
முளைப்பாரிக்கும்மி!!
பூங்கரகம் ஆடிவந்தேன்!!
துடிப்பான புலியாட்டம்!!

தமிழன்னையின் பாதகமலங்களுக்கு நான் எழுதிய சில கவிதைகள்:
மருளும் மான்விழி!!
திணை மயக்கம்!!
ஆழிப்பேரலை அமைதி!!

நிழற்படக் கவிதைகள் சில:
நிழற்படக் கவிதைகள்...!!!
நிழற்படக் கவிதைகள்...3!!!


பூமிப்பந்தின் அங்கமடி

தீந்தமிழின் செல்வனடி!
தங்கமே தங்கம்!
பிள்ளைத்தமிழ் பாடவந்தேன்
தங்கமே தங்கம்!!

பாற்கடலின் நாரணனே
அலைமகளின் காதலனே!
தங்கமே தங்கம்!
பாடும் பிள்ளை காத்தருள்வாய்
தங்கமே தங்கம்!!

லைப் பூந்தோட்டத்தில்
பூத்திருக்கும் பூக்கள் கொண்டு
தங்கமே தங்கம்!
வலைச்சரம் தொடுக்க வந்தேன்
தங்கமே தங்கம்!!






ந்த வாரம் முழுதும் உங்களோடு பயணிக்க இருக்கிறேன். குறைகள் ஏதும் இருப்பின் அறிவுறுத்துங்கள். இதோ இன்றுமுதல் பிள்ளைத்தமிழ் நாட்டுப்புற நடையில் வலைச்சரமாய் உங்களுக்கு. காப்புப் பருவத்துடன் தொடங்கும் இந்த வார ஆசிரியப்பணி சிறக்க உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் நன்றியுடன் எதிர்நோக்கி தொடர்கிறேன்....


அன்பன்
மகேந்திரன்

மேலும் வாசிக்க...

Monday, June 16, 2014

ஆரம்பம்!!!

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். வலைச்சர பொறுப்பாசிரியராக ஒரு வார காலம் பணியாற்ற அழைத்த அய்யா சீனா அவர்களுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும் நன்றிகள் பற்பல. பதிவுலகிற்கு வந்த ஐந்தாண்டுகளில் எனக்குக்  கிடைத்த முதல் அங்கீகாரமாக இதை ஏற்று முடிந்த வரை பணியை சிறப்பாகத்  தொடர முயல்கிறேன்.

சீனா அய்யாவிடமிருந்து அழைப்பு வந்த உடனே நா கேட்ட முதல் கேள்வி "அய்யா பேச்சு வழக்கில் பதிவுகள் எழுதலாமா?" ங்குறதுதான். "ஆமா தூய தமிழ்ல தான் எழுதனும்னு சொன்னா மட்டும் அப்டியே வெண்பாவா எழுதித் தள்ளிடப் போறியா... எப்டியாது எழுதித் தொலை" அப்டின்னு மனசுல இருக்கத வெளில  சொல்லாம "உங்க விருப்பம் எப்டியோ அப்படியே எழுதுங்க" என்றார். அதுவே பெரிய தைரியத்த குடுத்துச்சி. ஏன்னா பேச்சுவழக்கில் இல்லாம நா எழுதுன சில பதிவுகள இப்போ படிக்கும் போது இது நா எழுதுன  மாதிரியே இல்லியேன்னு ஃபீல் பண்ணிருக்கேன்.

என்னைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம். எனக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல உள்ள மதுக்கூர். இப்போ சென்னையில ஒரு தனியார்  நிறுவனத்துல வேலை பாத்துகிட்டு இருக்கேன். 2009ல நண்பர் ஒருவர் மூலமா வலையுலகத்துக்கு வந்து  "அதிரடிக்காரன்" ங்குற பேர்ல இதுவரைக்கும் 200க்கும் அதிகமான பதிவுகளை எழுதியிருக்கேன்.
பெரும்பாலும் சினிமா தொடர்பான விமர்சனங்களும், நகைச்சுவைப் பதிவுகளுமே அதிகம். சினிமா விமர்சனமா இருந்தாலும் சரி அல்லது வேறு எதேனும் அனுபவப் பதிவா இருந்தாலும் சரி, சொல்ல வந்த விஷயத்தைத் தாண்டி ஏதோ ஒரு இடத்தில் படிப்பவர்களுக்கு ஒரு சிரு புன்னகையையோ அல்லது சுவாரஸ்யத்தையோ வரவழைக்க வேண்டும் என்ற முயற்சியோட எழுதிக்கிட்டு இருக்கேன். சிரிப்பு வரவைக்க முயற்சி தான். சிரிப்பு  வரலன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

நகைச்சுவை மன்னன் கவுண்டரின் தீவிர ரசிகனாதாலல் பெரும்பாலும் பதிவுகளில் அவர் பயன்படுத்திய  வசனங்களையும் அவர் ஸ்டைல் காமெடிகளையுமே முயற்சிக்கிறேன். கவுண்டமணின்னு ஒருத்தர் இருந்தா செந்தில் ஒருத்தர் அடி வாங்கித்தானே ஆகனும். அந்த மாதிரி இதுவரைக்கும் பல முறை பதிவுகளில்  அடிவாங்கியிருப்பது விஜய்யும் சிம்புவும் தான். நா ரொம்பவும் ரசிச்சி எழுதுறது கவுண்டரை மையமா வச்சி  வர்ற பதிவுகளைத் தான்.

ஒரு சில சாம்பிள்கள் இதோ...

கவுண்டரின் அ.இ.ஆ.மு.க (அகில இந்திய ஆம்ளைஸ் முன்னேற்ற கழகம்)


எந்திரனில் கவுண்டர் நடித்திருந்தால்



பதிவுலகில் பெரும்பாலனவங்களுக்கு இப்படி ஒரு வலைப்பதிவு இருப்பதே இன்னிக்கு தான் தெரியும். ஏன்னா  ரொம்ப நாளா பதிவுலகத்துல இருந்தாலும், பதிவுலகில் நெருங்கிய நண்பர்கள்னு எனக்கு யாருமே இல்லை.  ஒரு சிலர்கிட்ட பேசிருக்கேன். ஆனா நெருக்கமான நட்புங்குறது இல்லை. இது என்கிட்ட உள்ள மிகப்பெரிய  குறை. வலைப்பதிவர்கள் சந்திப்புக்குக்கூட போனதில்லை. ரெண்டு தடவ போகலாம்னு முயற்சி செய்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால கடைசில போக முடியாம போயிடுச்சி.


பெரும்பாலும் பதிவுகளில் நடக்குற விவாதங்கள்லயும் நான் பங்கெடுத்துக்கிட்டது இல்லை.  கொஞ்ச நாளுக்கு முன்னால "கமெண்ட் கூனியா" ன்னு ஒரு வியாதி  நம்ம பதிவுலகத்துல இருந்துச்சி.  அதாவது பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போடுவதே அந்த வியாதி.  "மொத வெட்டு" " த.ம.1"  "me the first" "வடை எனக்கு" கமெண்ட் போடனும்ங்குறதுக்காக என்னென்னவோ போட்டுக்கிட்டு இருந்தாங்க. இந்த மாதிரி கமெண்ட் போடுறவங்க உண்மையிலயே எத்தனை பேர் பதிவ முழுசா படிக்கிறவங்கன்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்

சில பதிவுகள்ல நாற்பது அம்பது கமெண்ட்ட பாத்துட்டு போய் பாத்தா அங்க இருக்க பதிவுக்கும் அந்த கமெண்டுகளுக்கும் சம்பந்தமே இருக்காது. சிலர் அவங்க அந்த week end எங்க போகலாம்னு கூட அந்த பதிவுலயே டிஸ்கஸ் பண்ணிருந்தாங்க. பொதுவா ஒரு பதிவுல எவ்வளவு கமெண்ட் இருக்கோ அந்த அளவு அந்தப் பதிவு சுவாரஸ்யமாகவோ இல்ல விவாதத்திற்குறிய கருத்துக்கள் அடங்கியிருப்பதாகவோ தான் அர்த்தம். ஆனா நமக்கு அது வேற.. நம்ம SMS சர்வீஸ் மாதிரி ஆட்களை தொடர்பு கொள்றதுக்கு கமெண்ட் பாக்ஸூம் ஒரு வழி


எனக்கு நடந்த ஒரு சின்ன சம்பவம்.  ஊர் பெயரை முதலில் கொண்ட ஒரு பதிவர் (திண்டுக்கல் அண்ணே.. நீங்க இல்லை.. ஹி ஹி ). ஒரு நாள் அவரோட பதிவு ஓண்ண படிச்சிட்டு ஒரு கமெண்ட் போட்டேன். அடுத்த 10 நிமிடத்தில் அவர்கிட்டருந்து என்னோட ஒரு பதிவுக்கு ஒரு கமெண்ட் "வந்துட்டேன்,, இனி டெய்லி வருவேன்" ன்னு. என்னடா பதிவுக்கும் இந்த கமெண்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லியேன்னு யோசிச்சிட்டு விட்டுட்டேன். திரும்ப மறுநாள் அவரோட இன்னொரு பதிவுக்கு எதேச்சையா கமெண்ட் போட அடுத்த 10 வது நிமிஷத்துல என்னோட இன்னொரு பதிவுக்கு அதே போல சம்பந்தமில்லாத இன்னொரு கமெண்ட் அதே பதிவர்கிட்டருந்து வந்துருக்கு. ரைட்டு..

ஆஹ்க நம்ம ஒண்ணு போட்டா நமக்கு ஒண்ணு வரும். சூப்பர். இப்டியே போனா நம்ம போட்ட பதிவு நல்லாருக்கா இல்லையான்னே  நமக்கு சந்தேகம் வந்துடுமேன்னு நெனைச்சி பதிவு புடிச்சவங்க போட்டா போடட்டும் இல்லைன்னா  இருக்கட்டும்னு மிகவும் பிடித்த பதிவுகளுக்கோ இல்லை பதிவுகளுக்கு மாற்றுக்கருத்தோ , விவாதங்களோ இருந்தாலொழிய கமெண்ட் போடுறத நிறுத்திட்டேன்.  இப்புடியெல்லாம் ஓவரா பண்ணா உங்கூடல்லாம் யாருடா நட்பா இருப்பான்னு தானே யோசிக்கிறீங்க. உங்க மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணிட்டேன். 

என்னுடைய பதிவுகள்ல கதைகள், காமெடிப்படங்கள், அனுபவங்கள்னு என்னதான் எழுதினாலும் சினிமா விமர்சனங்கள் மூலமே பெரும்பாலும் அறியப்படுகின்றேன்.அவற்றில் சில..

 

மேலும் நண்பர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட சில பதிவுகள் 





இந்த மாதிரி அடுத்தவங்களை உரண்டை இழுக்குற பதிவுகளையே எழுதிக்கிட்டு இருந்த என்னை கொஞ்சம் மாத்துனது நண்பர் விமல் தியாகராஜன். சமூகத்திற்கு சில விழிப்புணர்வு கருத்துக்களையும், பாசிடிவ் விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக அவரால் நடத்தப்படும் www.bepositivetamil.com என்னும் மாதாந்திர e-magazine ல எனக்கும் ஒரு பகுதி எழுத வாய்ப்பளித்திருக்கிறார். ஓவ்வொரு இதழிலும் இளைஞர் பகுதியில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். "இதெல்லாம் நாஞ்சொன்னா சிரிச்சிருவாய்ங்கப்பா" ன்னு சொல்லியும் என் மேல நம்பிக்கை வச்சி எழுதச் சொன்ன அவருக்கும் நன்றிகள். நேரமிருக்கும்போது நீங்களும் படிச்சி உங்க கருத்துக்கள சொல்லுங்க. 

சரி.... அடுத்த பதிவிலிருந்து பதிவர்கள் அறிமுகங்களைப் பார்க்கலாம்.  அடுத்து உங்களை சந்திக்கவிருப்பவர்கள் சரவெடிப் பதிவர்கள்!!! காத்திருங்கள்!!


மேலும் வாசிக்க...

Monday, January 13, 2014

சுபத்ரா பேசுறேன்

            

வணக்கம்! இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் மூலமாக உங்களிடம் நான் தான் பேசப் போகிறேன். என்னுடைய வலைத்தளம் ‘சுபத்ரா பேசுறேன்’. ‘பேசு’றதுன்னா இந்தப் பொண்ணுக்கு ரொம்ப இஷ்டமோ என நீங்கள் நினைப்பது புரிகிறது. நான் நிஜத்தில் மிகவும் அமைதியான(?) பெண். அதனால் பேசாத வார்த்தைகளை எல்லாம் என் ப்ளாகில் பதிந்து வருகிறேன் :-)

            முதலில், சீனா அய்யாவுக்கு மிக்க நன்றி! நாம் ரசித்துச் செய்தால் கூட ஒரு ப்ளாகில் தொடர்ந்து எழுதுவதே எவ்வளவு சிரமமாக இருக்கிறது? ஆனால் ‘வலைச்சர’த்தை முறையாக வாராவாரம் ஒருத்தரிடம் ஒப்படைத்து அவரை அறிமுகம் செய்துவைத்து அவர்மூலம் மற்ற பதிவர்களையும் பதிவுலகத்துக்கு அறிமுகப்படுத்துவது ஒன்றும் சாதாரண வேலையல்ல. அவரையும் அவரது உழைப்பையும் அன்பையும் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். இப்போது என்னைப் பற்றிய ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

            2008 வாக்கில் எனக்கு ப்ளாக் அறிமுகமானது. ஆனந்த விகடன் மூலமாக. அப்போது எனக்குத் தெரிந்தது ‘இட்லிவடை’ ப்ளாக் மட்டுமே. அதன் பதிவுகளையும் அவற்றுக்கு வரும் பின்னூட்டங்களையும் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் நாமும் நமக்கென்று தனியாக ஒரு ப்ளாக் தொடங்கினால் என்ன என்று தோன்றியது. 2010 இல் இட்லிவடையை மாதிரியே ஒரு அனானிமஸ் ப்ளாகை உருவாக்கி வெறும் கவிதைகள்(?) மட்டும் எழுதிவந்தேன். அந்தத் தளம் சிலமுறை பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது ‘நிலவே முகம் காட்டு’ என்ற பெயரில் இயங்கி வருகிறது.

            கவிதை மட்டும் எழுதினால் போதுமா? கதை எதிலே எழுதுவது :-) எதிலே மொக்கை போடுவது போன்ற சிக்கல்கள் வந்ததால் ‘சுபத்ரா பேசுறேன்’ உருவானது. முதல் ப்ளாக் உருவானபோதே என்னைப் பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்துவைத்து ‘நானும் ரவுடி தான்’ என்று ஜீப்பில் ஏற்றிவிட்டது நம் வலைச்சரம் தான். அதற்கு அப்புறம்தான் ‘தமிழ்மணம்’, ‘இண்ட்லி’ போன்ற வலைதிரட்டிகளும் எனக்கு அறிமுகம். அப்போது ஒரு ப்ளாக்கர்ஸ் கூட்டமே என்னை உற்சாகப்படுத்தியது. அந்தக் கூட்டத்தில் பலர் இப்போது ‘டெர்ர் கும்மி’யில் இருக்கின்றனர் :-)

            எனக்குப் பிடித்த எனது பதிவுகளைப் பார்ப்போமா? இட்லிவடை ப்ளாகில் வெளிவந்த எனது கட்டுரை இந்தியாவின் ஒரு பகுதி குஜராத்அதுக்குக் கிடைத்த பின்னூட்டங்களும் அதன்பின் என் ப்ளாகுக்குக் கிடைத்த வாடிக்கையாளர்களும் நான் தொடர்ந்து ப்ளாக் எழுத காரணமாக அமைந்தன என்று சொல்லலாம். என்னுடைய மற்ற பதிவுகளைப் படிக்க அங்கேயே ‘சுபத்ரா’ என்று ஒரு லேபிள் இருக்கிறது. படித்துவிட்டு அவசியம் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

            அதுபோக, தற்செயலாக என் ப்ளாகுக்காக நான் எழுதிய ஒரு சிறுகதை ‘டெர்ர்கும்மி’ சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றபோது மிகவும் மகிழ்ந்தேன். நம் எழுத்துக்குக் கிடைக்கும் ஓர் அங்கீகாரத்துக்கு முன் வேறெதுவும் ஈடாகுமா? அந்தக் கதை ‘இங்கே’ இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கதை.

            முகநூலில் ‘சாருநிவேதிதா-விமர்சகர் வட்ட’த்திலிருந்து ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினார்கள். அதற்காக நான் எழுதியதுதான் ‘இந்தக் கதை’. நடுவர்கள் இதற்கு மூன்றாம் தரம் கொடுக்க, ‘லைக்ஸ்’ அதிகமானதால் முதலிடத்துக்கு வந்தது. அதுவும் எனக்குக் கிடைத்த மற்றுமோர் அங்கீகாரம்.

            திடம்கொண்டு போராடு ப்ளாகின் சொந்தக்காரர் சீனுவை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எங்க ஊர்க்காரர் தான். அட்டகாசமான ஒரு போட்டியை நடத்தினார். ‘காதல் கடிதம்’ பரிசுப் போட்டி. போட்டியில் கலந்துகொண்ட கதைகளை வைத்துப் பல படங்களை இயக்கலாம். அவ்வளவு அழகான களங்கள். அந்தப் போட்டியிலும் முதல் பரிசு வென்றதை நினைத்து மிகவும் மகிழ்ந்தேன். அந்தக் கடிதம் இங்கே.

            நிறைய பதிவுகள் எழுதினாலும் மேலுள்ள பதிவுகள் என் ப்ளாக் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை. இவை போக, என் ப்ளாகில் நீங்கள் ‘மிஸ்’ பண்ணவே கூடாத பதிவு என நான் நினைப்பது தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா? என்ற என் பதிவு. அவசியம் அதை எல்லோரும் படிக்க வேண்டுகிறேன். அதனோடு தொடர்புடைய மற்ற பதிவுகள் இங்கே இருக்கின்றன.

            காதல் கவிதைகளுக்கென நிலவே முகம் காட்டு இருப்பதால் மற்ற கவிதைகளை என் ப்ளாகிலேயே எழுதிவருகிறேன். அவை இங்கே இருக்கின்றன. பிடித்திருந்தால், நேரமிருந்தால் என்னுடைய மற்ற பதிவுகளையும் படித்துவிட்டுக் கருத்திடுங்கள் நண்பர்களே!

            பரீட்சை இருந்ததால் வேண்டுமென்றே ப்ளாக் பக்கம் வராமலிருந்தேன். கடைசியாக என் ப்ளாகில் எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவராததால் அந்த ‘டென்ஷன்’ இன்னும் குறையவில்லை :-) இப்போது வலைச்சரம் மூலமாக ஒரு மாறுதல் கிடைத்துள்ளது.


            வரும் நாட்களில் தமிழில் எழுதப்பட்டுவரும் பல வலைத்தளங்களைப் பற்றியும் வலைப்பதிவர்களைப் பற்றியும் பார்க்கலாம். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன். உங்கள் அருமையான நேரத்தை ஒதுக்கி என் பதிவுகளைப் படிப்பதென்பது சும்மாவா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது