நாள்-7-பல்சுவை வேந்தர்கள்,வல்லவர்கள்!
➦➠ by:
சென்னை பித்தன்
இந்த வலைச்சரம் தொடுக்கும் முன்பே இருமுறை என் வலைப்பதிவில் வலைப்பூ மாலை கட்டியிருக்கிறேன்.பதிவுகளின் தலைப்பை வைத்துக் கட்டப்பட்ட மாலைகள் அவை. அம்மாலைகளில் ரோஜா,மல்லிகை,முல்லை,ஜாதி,சம்பங்கி எனப் பல மலர்களிருக்கின்றன.அனைத்தும் என்னைக் கவர்ந்த மலர்கள். எனக்குப் பிரியமானவை அந்த மலர்களில் சிலவற்றையும் வேறு சில மலர்களையும் எடுத்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். வெல்லப் பிள்ளையாரில் எந்தப்பக்கம் இனிப்பு என்று சொல்வது? எனவே வலைப்பூக்களில் எந்தப் பதிவையும் குறிப்பிட்டுச் சொல்லாது, வலைப்பூக்களை மட்டும் பகிர்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படித்த பின்னும் நினைத்துப் பார்க்கத்தூண்டும் பதிவு--நினைத்துப்பார்க்கிறேன்
படித்த பின்னும் நினைத்துப் பார்க்கத்தூண்டும் பதிவு--நினைத்துப்பார்க்கிறேன்
நெஞ்சில் தங்கும் மனோகரப் பதிவுகளுக்கு- நண்பர் நாஞ்சில் மனோ.
இது வெறும் கவிதைவீதி மட்டும் அல்ல, கலக்கல் வீதி!
நல்ல பதிவுகளின் சரணாலயம் இந்த வேடந்தாங்கல்
இது நாமெல்லாம் உணர வேண்டிய உலகம் .நல்லதை உணர்த்தும் உலகம்- உணவு உலகம்
நம்மை வலை வீசி இழுக்கிறார் இந்த வலைஞன்.
நம் நினைவிலிருந்து வெட்டி விட முடியாத பேச்சு இந்த கொஞ்சம் வெட்டிப்பேச்சு!
இவர் எழுதும் ஒவ்வொரு வரியும் பளீரென்று ஒளிரும் மின்னல் வரிகள்
இந்த மெட்ராஸ் பவன்ல ஸ்பெசல் மீல்ஸ் சாப்பிட்டுப் பாருங்க! அறுசுவை.
ஃபிலாசஃபி என்றால் தத்துவம்.ஆனால் அது என்ன தத்துப் பித்துவம் ?தெரிஞ்சுக்கலாமா?
இவர்,ஒரு ராஜபாட்டைக்கு என் ராஜபாட்டை என்று சொந்தம் கொண்டா டுகிறார். ராஜ நடைதான்!
நண்பர்கள் கூட்டம் என்றால் கொண்டாட்டம்தான்!எத்தனை சுவையான பேச்சுக்கள்!ரசிக்கலாம்!
உலகே மாயம் என்பர்..மாய உலகத்தில் எத்தனை எத்தனை ரசிக்க வைக்கும் காட்சிகள்!
நாற்றில்லாமல் பயிருண்டோ!இந்த நாற்று இல்லாமல் பதிவுல குண்டோ!
நல்ல பயனுள்ள கருத்துக்களை அனைவருக்கும் ஆணித் தரமாகச் சொல்பவர் இவர்.அவரே சொல்வது போல் counsel for any..
சிறகுகள் காற்றில் பறந்தால் வானம் தாண்டுமோ!மென்மையான பறக்கும் சிறகு போல் இந்த வலைப்பூஜீ
வலைப்பூவின் தலைப்பே எவ்வளவு அழகு!நுனிபுல்லில் ஓர் பனித்துளி!அழகான பதிவுகளும்.
இவர் எழுத்துகள் ஆயுதம்தான்.நம இதயத்தில் நுழையும் ஆயுதம்
இந்த சிட்டுக்குருவியின் சமூகம் சார்ந்த சொற்சித்திரங்கள் அருமை.
இவர் ஒரு nighthawk.சமூகப் பிரச்சினைகளை எழுதுபவர்.அதிகம் எழுத வேண்டும்
இவை சில பகிர்வுகள் மட்டுமே!
நன்றி! வணக்கம்!
-------------------------------------------------------------------
எந்நன்றி கொன்றார்க்கும்!
-----------------------------------------
இந்த ஒரு வாரம் வலைச்சரப் பொறுப்பை என் மீது நம்பிக்கை வைத்து எனக்களித்த சீனா அவர்களுக்கும்,
நான் பகிர்ந்ததைப் படித்துப் பின்னூட்டமிட்டவர்க்கு,படித்து ஆனால் பின்னூட்டமிடாதவர்க்கும்,
தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்றைய பதிவு பற்றிக் கருத்துரைத்த அன்பு நண்பர்க்கும்,
ஏதோ ஒரு விதத்தில் ஆதரவு தந்த அனைத்து அன்பு நெஞ்சங் களுக்கும்,
நன்றி,நன்றி,நன்றி.
இன்று தமிழர் திருநாள்.
அனைவருக்கும் என் மனங் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!
