07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜாலிஜம்பர். Show all posts
Showing posts with label ஜாலிஜம்பர். Show all posts

Saturday, October 20, 2007

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.

ஜாலியா,சீரியஸா என்று வலைச்சர பொறுப்பாளர் முத்துலெட்சுமி அவர்கள் குழம்பாமல் இருந்திருந்தால் சீரியஸ் பதிவுகளை
மட்டுமே சுட்டிவிட்டு இருந்திருப்பேன்.
பெயரில் ஜாலியை வைத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸான ஆளாக இருக்கிறானே என்று
உலகம் பழித்து விடக் கூடாது என்பதற்காக இந்த காமெடிப்பதிவு.

முதலில் ஆழியூரானின் இந்தப்பதிவு.
http://nadaivandi.blogspot.com/2007/08/blog-post_18.html

கவுண்டமணி,வடிவேலு காமெடி தான் காமெடியா?இது அதைவிட டக்கரான காமெடி.லக்கி,வரவனை,சுகுணா,செந்தழல்,
அய்யனார்,பாலபாரதி போன்றவர்களை அவர்களின் பாணியிலேயே கலாய்த்திருப்பதும்,பதிவின் உத்தியும்,சொல்லாடல்களும் மிகவும்
அருமையான ஒன்று.

அடுத்து,அரசியல் கருத்துக்களை நேரடியாக சொல்லி சண்டை போடுவதை விட அங்கதமாக சொல்வது மிகுந்த
சிரிப்பை வரவழைக்கும்.பாரி.அரசின் இந்தப்பதிவு
http://pktpariarasu.blogspot.com/2007/08/blog-post_01.html

இந்தித்திணிப்பை கிண்டல்
செய்யும் விதம் அட்டகாசம்.

அடுத்தது,தமிழ் வலையுலகை துவம்சம் செய்து கொண்டிருக்கும் கட்டிளங்காளையான டோண்டு அய்யா அவர்களை வெளுத்து
வாங்கும் இந்தப்பதிவு
http://aiyan-kali.blogspot.com/2007_02_01_archive.html

இதை அடிக்கடி திறந்து வாசித்துக்கொள்வேன்.இது மிகவும் சீரியஸாக எழுதப்பட்டிருந்தாலும் எனக்கு மிகுந்த சிரிப்பையே வரவழைக்கும்.
தமிழ் துள்ளி விளையாடும் இந்தப்பதிவை தயவு செய்து தவற விடாதீர்கள்.

இத்துடன் நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும்,தொடர்ந்து வாசித்து
ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் நன்றி.
மேலும் வாசிக்க...

Friday, October 19, 2007

அப்பாவாகப் போகும் ஆண் சிங்கங்காள்

இந்த உலகில் பிறக்கும் உயிர்களுக்கு எல்லாம் பொதுவான ஓர் இலட்சியம் இருக்கிறது.தன் சந்ததிகளை உருவாக்குவதே
அந்த இலட்சியம்.எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை குழந்தை இல்லாமலிருந்து அதன் பிறகே பிறந்தது.

அந்த இரண்டாண்டுகளில் நானும் என் மனைவியும் பட்ட மனவேதனை சொல்லிமாளாது.குழந்தை பிறந்தவுடன் அளவில்லா
மகிழ்ச்சியை அது அள்ளித்தந்தது.முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே அது நீடித்தது.அடுத்த ஒரு வருட காலம் மாபெரும் சோதனைக்
காலமாக அமைந்து விட்டது.குழந்தை பிறந்தது எவ்வளவு மகிழ்ச்சியை தந்ததோ அதைவிட இரண்டு மடங்கு துயரத்தை அனுபவிக்க
ஆரம்பித்து விட்டோம்.

என்ன சோதனையடா சாமி என்று வெறுத்துப் போய் நாட்கள் கடந்து கொண்டிருந்த போது தான் செல்வநாயகி
அவர்களின் இந்தப்பதிவை படித்தேன்.எங்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணம் என்ன என்பதை அந்தப் பதிவின் மூலம்
தான் தெரிந்து கொண்டேன்.

"POST NATAL DEPRESSION" எனப்படும் பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் மனவழுத்தம் தான் அதற்கெல்லாம் காரணம்.அதைப் பற்றிய
தெளிவான விளக்கத்தை இந்தக் கட்டுரை

http://selvanayaki.blogspot.com/2006/08/blog-post_03.html

தருகிறது.
பிரசவத்துக்குப் பின் பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் மாற்றங்களை ஆண்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இந்தக் கட்டுரை எனக்குப் பேருதவி செய்துள்ளது.செல்வநாயகி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வாசிக்க...

Thursday, October 18, 2007

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.

எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு,கெட்டதும் உண்டு.அல்லவை விடுத்து நல்லதை மட்டும் எடுத்து போய்க்கொண்டு இருந்தால்
பிரச்சினையே இல்லை.ஒருவர் நமக்கு மாற்றுக்கருத்து உள்ளவராய் இருப்பதாலேயே அவர் சொல்லும் நல்ல விஷயங்களையும்
ஏற்க மறுப்பது மடமை.

இராமாயணம்,மகாபாரதம்,பகவத்கீதை போன்ற இதிகாசங்களில் இலக்கியச் சுவையும் , உயர்ந்த தத்துவங்களும் நிரம்பியுள்ளன.
அதைக் கடைப்பிடிக்காமல் தங்கள் சுயநலத்திற்காக அதில் இடைச்செருகப்பட்ட மனுதர்மம் போன்றவற்றை மட்டும் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டு அதை வைத்து மக்களை அடக்கி,ஒடுக்கும் மனநிலையே இப்போதும் இருக்கிறது.

இந்து மதத்தில் உள்ள இந்த இழிநிலையை பெரியார் போன்றவர்கள் நேரடியாகவே எதிர்த்து போராடினார்கள்.
ஆனால் இந்து மதத்திற்குள்ளேயே இருந்து போராடி,அதிலுள்ள குறைகளைப் போக்க முடியும் என்று நம்புகிற நேர்மையாளர் பலர்
இருக்கின்றனர்.அவர்களில் ஒருவர் அரவிந்தன் நீலகண்டன்."RIGHT MAN IN THE WRONG PLACE" என்று கலைஞர் ஒருமுறை வாஜ்பாயைப்
பற்றி குறிப்பிட்டிருந்தார்.அது இவருக்கும் அப்படியே பொருந்தும்.
இவரது
http://arvindneela.blogspot.com/2007/02/blog-post_06.html

இந்தப்பதிவு அப்படியே மனதில் ஆணி அடித்து நின்று விட்டது.ராமர் பாலம் பற்றிய ஒரு நேர்மையான
ஆத்திகரின் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்து தன்னை வலதுசாரி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பதிவர் அதியமான்.பொருளாதாரம் பற்றிய இந்தக்கட்டுரை

http://athiyaman.blogspot.com/2005/05/to-communists-socialists-of-india.html

மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தமிழில் அதிகமாக தொடர்ந்து எழுத வேண்டும் என்று அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Wednesday, October 17, 2007

சிந்தனை செய் மனமே

முற்போக்கு என்றால் என்ன?பிற்போக்கு என்றால் என்ன என்று கேட்டால், வாந்தி என்பது முற்போக்கு,வயிற்றுப்போக்கு தான்
பிற்போக்கு என்று யாராவது சொன்னால் பின்நவீனப்போக்கின் படி அது சரி தான்.

ஆனால் உண்மையான முற்போக்கு என்பது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு,வளர்ச்சிக்கு உதவும் சிந்தனைகள்.பிற்போக்கு
என்பது வளர்ச்சிக்கு தடைக்கல்லாகவும்,பின்னோக்கிய பாதையிலும் சிந்திப்பது.

எனக்குத் தெரிந்த அருமையான பிற்போக்காளர் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி அவர்கள்.ஜோதிடத்தை
ஒரு பாடமாக பல்கலைக்கழகங்களிலே கற்றுத்தர அவர் முனைந்த போது இந்தியாவின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினேன்.

பிற்பட்டவர்கள் எல்லாம் முற்போக்கர்களாகவும் ,முற்பட்டவர்கள் எல்லாம் பிற்போக்கர்களாகவும் இருப்பது ஒரு முரண்சோகம்.இதில்
விதிவிலக்குகள் உண்டு.

மனிதநேயம்,சாதிமறுப்பு,கடவுள் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துவது போன்றவை முற்போக்கு எண்ணங்கள்.
தமிழ் வலையுலகில் முற்போக்காக சிந்தித்து எழுதும் நிறைய பேர் இருக்கின்றனர்.எனக்கு பிடித்த இருவர் தருமி,கல்வெட்டு.

உடல் தூய்மை என்று பார்த்தோமானால் பெண்கள் ஆண்களை விட ஒருபடி கீழ் தான் என்று பிரபல டாக்டர் கமலா செல்வராஜ்
அவர்களே , விஜய் டிவியின் நீயா,நானா? நிகழ்ச்சியில் ஒருமுறை திருவாய் மலர்ந்தார்.

எவ்வளவு அபத்தமான கருத்து இது என்பதை கல்வெட்டின்
http://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html
இந்தப் பதிவிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

"உலகத்தை இறைவன் படைத்தான்.நாமெல்லாம் சிறு பொம்மைகள்.உலகம் மிகவும் பெரியது.நாம் அனைவரும் சிறு துரும்பே.
இறைவன் காணும் கனவு தான் இந்த வாழ்க்கை" என்றெல்லாம் மனிதன் தான் உணர்ந்ததை ,அறிந்ததை வரலாறு முழுவதும்
பதிவு செய்து வருகிறான்.மனிதனின் அறிவு வளர்ச்சி அபரிமிதமான வேகத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது.
50 வருடங்களுக்கு முன்னால் இருந்த அறிவு வளர்ச்சியை விட இப்போது உள்ள அறிவு மேம்பட்டிருக்கிறது.
ஆனால் கடவுள் விசயத்தில் மட்டும் 1000 வருடங்களுக்கு முந்தைய அறிவையே இப்போதும் பின்பற்றுகிறோம்.
இதையும் காலத்திற்கு ஏற்றவாறு மனிதன் மேம்படுத்திக்கொள்ள வேண்டாமா என்று கேட்டால் வேண்டாம் என்று ஒரு
கூட்டம் எப்போதுமே சொல்லிக்கொண்டு வருகிறது.

வலைப்பதிவுகளில் இறைநம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியவர்களில் முதன்மையானவர் தருமி அய்யா.அவரின் இந்தத் தொடரை
http://dharumi.blogspot.com/2005/09/49-1.html
படித்துப் பாருங்கள்.கடவுள்,மதம் போன்றவை பற்றிய புதிய எண்ணங்கள் மண்டைக்குள் வெள்ளமாகப் பாய்ந்தோடும்,
உங்கள் அறிவுக்கு அணை போடாமலிருந்தால்.

நாளை சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Tuesday, October 16, 2007

எனக்குப் பிடித்த எழுத்துச் சண்டைகள்

வலைப்பதிவுகளின் சிறப்பம்சம் பின்னூட்டங்கள்.எழுத்தாளர் தமது படைப்பை வெளியிட்டவுடன் வரும் வாசகரின் கருத்துக்கள்
மிகவும் சுவையாரமானவை.ஒரு பொருளுக்கு பலவிதமான கோணங்களில் கருத்துக்கள் வெளிப்படுவதை படிப்பதே ஒரு பேரின்பம்.
அதுவும் அந்த மாற்பட்ட கருத்துக்கள் தீவிரமடைந்து விவாதமாகி,சண்டையில் போய் முடிவதுண்டு.அது சமயங்களில் மிகவும்
இரசிக்கத்தக்க ஒன்றாகி விடுவதும் உண்டு.
வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த பின்னர் ,நண்பர்களிடத்தில் பேசும் போது என்னுடைய வாதம் செய்யும் திறன் அதிகரித்திருப்பதை
நானே நன்றாக உணர்கிறேன்.வலைப்பதிவுகள் தான் நிச்சயம் அதற்குக் காரணம்.
எத்தனையோ விவாதங்களை விரும்பிப் படித்திருக்கிறேன்.
அதில் நம் சிந்தையைக் கவரும் ஒரு விவாதமாக தங்கமணிக்கும்,பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் இடையிலே நடந்த
இவ்விவாதங்கள்

http://thatstamil.oneindia.in/art-culture/essays/thangamani2.html

http://thatstamil.oneindia.in/art-culture/essays/jayamohan.html

தங்கமணி ,தமிழ் வலைபதிவர்களில் ஒரு முன்னோடி.அவரைப் போன்றவர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் தான் இன்று பெரும்பாலான
பதிவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.புதிதாய் வந்திருக்கும் பதிவர்கள் அவருடைய அனைத்து பதிவுகளையும்
வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த சண்டை ஹெவி வெயிட் சாம்பியன்கள் கலந்து கொள்ளும் மாபெரும் சண்டை.சன்னாசி,செல்வன் ஆகியோருக்கு இடையிலான
இந்த விவாதம்.இதை முழுவதும் படித்து முடிக்க எனக்கு இரண்டு நாள் ஆனது.சண்டையைக் காண இங்கே

http://satrumun.com/?p=1993 செல்லவும்.

நாளை சந்திப்போமா!
மேலும் வாசிக்க...

Monday, October 15, 2007

அறிமுகம்

இவ்வார வலைச்சரத்தை தொகுத்தளிக்கும் பொறுப்பு மலைக்க வைக்கிறது.இருந்தாலும் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?உங்களுக்குப் பிடித்த நிறம் என்ன?
என்ற கேள்விகளுக்கு எளிதாக பதில் சொல்வது போல் உங்களுக்கு பிடித்த வலைப்பதிவர் யார் என்று என்னை நானே கேட்டுக்கொண்டு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ்வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த போழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கும்,ஆச்சரியத்துக்கும் அளவேயில்லை.உலகெங்கும்
பரவியுள்ள தமிழர்கள் தங்கள் தணியாத தமிழார்வத்திற்கு வடிகாலாக வலைப் பதிவுகளை பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் விருந்து படைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வலைச்சரத்தின் முதல் பதிவில் என்னுடைய இடுகைகளை அறிமுகப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இரு இடுகைகள் உங்கள் பார்வைக்கு.

ஒன்று ,ஓரளவிற்காவது நல்ல இடுகை என்று சக பதிவர்களால் பாராட்டப் பட்ட இந்த இடுகை.
http://jaallyjumper.blogspot.com/2007/09/blog-post_17.html

இரண்டு,ஒருத்தர் கூட கண்டு கொள்ளாத , ஆனால் நல்ல இடுகை என்று நானே நினைத்துக் கொண்ட இந்த இடுகை.
http://jaallyjumper.blogspot.com/2007/10/blog-post.html

மீண்டும் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது