07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label தூயா. Show all posts
Showing posts with label தூயா. Show all posts

Saturday, August 25, 2007

வலைச்சரத்தில் கொஞ்சம் சமையல்


இணையத்தில் எங்கு போனாலும் தூயா என்றால் சமையல் குறிப்பு எழுதவில்லையா என கேட்கும் நிலை. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பதிவில் சில உறவுகள் கேட்டிருந்தார்கள். ஆக சமையல் இல்லாமல் போகுமா!?

சமையல் மட்டுமல்லாது, சின்ன தோட்டமும் வைத்திருக்கும் ரேவதி:
En Ulagam - My Culinary World

கவிதை மட்டுமல்ல எனக்கு சமையலும் வரும் என சொல்பவர் எங்க வரவனையான்:
மிளகு கோழி கறி

நியூரோர்கில் இருந்து சமையலில் கலக்கும் சுதா:
சுதா சமையல்கட்டு (உடனடி மாங்காய் ஊறுகாய் முறையை பார்க்க தவறாதீர்கள்)

எங்க லக்கிண்ணாவின் சமையல் குறிப்பையும் பாருங்க:
போண்டா செய்வது எப்படி?

விஜியின் ஆப்பிள் சலட், மிகவும் இலகுவான முறை:
புதுசு இது

எங்க பொன்ஸுக்கும் சமைக்க தெரியும்:
அப்பளம் சுடுவது எப்படி?

சமைக்க வாங்க என அழைத்து:
இஞ்சி மொரபா சமைக்கிறாங்க

[இந்த பதிவை லக்கிண்ணாக்காக பதிக்கிறேன்.] தூயாவின் வாரத்தில் சமையல் இல்லாமலா என அதிசயம் அடைந்தவர்களுக்கு இப்பொழுது நிம்மதியாக இருக்குமே!
மேலும் வாசிக்க...

Thursday, August 23, 2007

சில கவிதைகளும் நானும்

இந்த பதிவில் எனக்கு பிடித்த சில கவிதைகளுக்கான இணைப்புக்களை தரலாம் என நினைத்து தொடர்கிறேன்:

வரவனையான் கவிதைகள்: எனக்கு மிகவும் பிடித்தவை வரவனையானின் கவிதைகள். காரணம் தினமும் நடப்பவற்றை சின்னதாக, அதே சமயம் படிப்பவர் புரியும் வகையில் எழுதுபவர். இப்பொழுது எழுதுவதில்லை போல. இருப்பினும் இவரின் கவிதைகள் சில இங்கே எனது வலைப்பூவில் உள்ளது.
வரவனை கவிதைகள்







அடுத்து பிரியன் கவிதைகளின் ரசிகை நான். சொல்லா வந்த விடயத்தை எளிமையாக சொல்வதில் இவரை வெல்ல எனக்கு தெரிந்து யாருமில்லை:
பிரியன் கவிதைகள் - விழுதுகள்










சுகுணாதிவாகரின் கவிதைகளில் எனக்கு புரிந்தது ஓரிரண்டு தான். அதில் மிகவும் பிடித்த ஒன்று:
மிதக்கும் வெளி - மண்
மேலும் வாசிக்க...

Wednesday, August 22, 2007

உறவுகளின் உணர்வுகள்

வலையுலகத்தில் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னை நெகிழ வைத்ததும், ஆச்சரியப்பட வைத்ததும் "நீங்கள்" தான்.

ஒரு தசாப்த காலமாக சிங்கள அரசின் இனவாதத்தால் அழிந்துவரும் ஈழத்தமிழர்கள் உணர்வாக பதியும் போது, அதற்கு பல காரணங்கள் இருக்கும். அவர்கள் வீட்டில் அரசினால் குறைந்தது ஒரு உயிர், ஒரு கற்பு, ஒரு வீடு அழிந்திருக்கும். ஆனால் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் நீங்கள் , வெறுமே எங்கள் கஸ்டங்களை பார்த்து மனமுடைவதை என்னவென்று சொல்வது. அப்படி நீங்கள் உருகும் போது எங்களுக்கு கிடைக்கும் அன்பும், ஆதரவும், மன ஆறுதலும் வேறெங்கும் கிடைக்காது.

செஞ்சோலை கொடுமையை பார்த்து உலகமே கண்ணை மூடிக்கொள்ள, எம்மை அணைத்து ஆறுதல் சொன்ன உறவுகளில் சிலர்:

சிபிஸ்
கோவை கண்ணன்
ஆழியூரான்


-------------------------------------------------------------------------------------------
ஈழத்தில் பிறந்து, வளர்ந்து, தற்போது வெளிநாடொன்றில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழனின் சிங்கள சிறை அனுபவம்:

ஈழ நிலம்

------------------------------------------------------------------------------------------
வலைப்பூவில் உடனுக்குடன் ஈழத்து செய்திகளை பார்க்க:
ஈழபாரதி
மேலும் வாசிக்க...

Monday, August 20, 2007

வலைச்சரத்தில் பூவாக நான்


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

வலைச்சரத்தை தொடுக்கும் பெருமை எனக்கு இந்த வாரத்தில் கிடைத்திருக்கின்றது. முதலில் சிந்தாஸ் என்னை வலைச்சரத்தில் ஆசிரியராக அழைத்த போது, மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நானா?எனக்கு ஆசிரியராக இருக்கும் தகுதி இருக்கா சிந்தாஸ் என கேட்டேன். என்னால் முடியும் என கூறி அழைத்துவந்த சிந்தாஸுக்கு தான் முதலில் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.

முதல் பதிவு அறிமுகப்பதிவாக அமைய வேண்டும் என கேட்டிருந்தார்கள். என்னை பற்றிய அறிமுகத்தை என் பதிவுகள் மூலமே செய்யலாம் என்ற எண்ணத்தில்:

என்னை பற்றி அறிந்துகொள்ள:Weird Post By a weirdo

எனக்கு சரியாக எழுத வருகின்றதோ இல்லையோ, மற்றவர்களின் ஆக்கங்களை விமர்சித்து பாராட்டுவதில் எனக்கு அலாதி பிரியம்: சயந்தனின் ஒலி பதிவுகள் பற்றிய ஒரு கருத்து குறிப்பு

சின்ன வயதில் இருந்து ஆங்கிலத்தில் கல்விகற்று, ஆங்கிலத்தில் ஆக்கங்கள் எழுதி வந்த எனக்கு தமிழிலும் எழுதலாம் என ஊக்கம் தந்தது யாழ் இணையம் தான். கவிதை, கட்டுரை போன்றவை எனக்கு தூரத்தில் நின்றுவிட, என்னை தனக்குள் இழுத்துக்கொண்டது சிறுகதைகள் தான். ஒரு கை பார்த்துவிடுவது என களத்தில் இறங்கி முயற்சி செய்தவற்றில் சில:

* மானமும், உயிரும் போன கதை: விதையானால் முளையாகும்
* மாவீரன் கதையொன்று:மதியண்ணாவின் கண்ணம்மா
* புலம்பெயர் [சிட்னி] கதையொன்று: இது யார் தப்பு?
* என் உயிர் நண்பன்: என் நண்பன் என் கடவுள்
* ஒதுக்கப்படும் உணர்வுகள்: சிறகுகள் வேண்டும் எனக்கு


தமிழீழத்தை தாய்நாடாக கொண்ட எனக்கு, மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்திய பயணம் எனில் அது "என் சென்னை பயணம்" தான். எங்கள் ஈழத்தை போல பல ஒற்றுமைகள் கொண்ட ஒரு இடம் என்றால் அது சென்னை தானே! எம் அனுபவத்தை ஒரு பயணத்தொடராக பதிந்துள்ளேன்:
சென்னையில் தூயா - 2005 - பகுதி1
சென்னையில் தூயா - 2005 - பகுதி2


புலத்தில் தமிழ் கற்ற தமிழீழத்து வாரீசான எனக்கும், என் தாய் நாட்டிற்குமான உறவை ஒரு அனுபவத்தொடராக எழுதி வருகின்றேன்:

"நானும் என் ஈழமும் - இதுவரை எழுதிய 5 பகுதிகள்"

------------------------------------------------------------------------------------

சமையல் மீதான என் காதலை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். இதுவரை எனது சமையல் கட்டை பார்க்காதவர்களுக்காக:
தூயாவின் சமையல்கட்டு

-----------------------------------------------------------------------------------

தமிழ் அல்லாத, தமிழ் படிக்க தெரியாத சில நண்பர்களுக்கென ஆரம்பித்த எனது ஆங்கில வலைப்பூ. இந்த வலைப்பூவின் மூலம் தான் உலக வலைப்பதிவர் ஒன்றியத்தில் இணைந்து, தமிழீழத்தின் பிரதிநிதியாக எழுதிவருகின்றேன்:
Thooyas World

-----------------------------------------------------------------------------------

இசை மீதான என் காதலில் உருவாக்கிய ஒரு வலைப்பூ:
தூயாவின் இசையுலகம்

-----------------------------------------------------------------------------------

இதுவரை நான் எழுதியவற்றில் சிலவற்றை உங்களுக்காக மீட்டெடுத்து தந்திருக்கேன். வலைச்சரத்தை தொடுப்பதோடு நிற்காமல், சரத்தில் ஒரு பூவாக நானும் மாறும் ஆசையில் எனது அறிமுக பதிவை நிறைவு செய்கின்றேன்.

தூயா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது