விருந்து சாப்பிடலாம் வாங்க (கண்டிப்பா சமையல்குறிப்பு பற்றி அல்ல ..)
➦➠ by:
என் ராஜபாட்டை,
பல்சுவை பதிவர்கள் 3,
வலைசரம்
இன்று நாம் பார்க்க போவது பல்சுவை விருந்து படைக்கும் பதிவர்கள் வரிசையில் மூன்றாம் பாகம் . மூன்றாம் பாகம்னு தலைப்பு வைக்க போரடச்சிச்சு அதான் இப்படி தலைப்பு . இவர்களில் சிலர் உங்களுக்குமுன்பே அறிமுகமானவர்களாக இருக்கலாம் ஆனாலும் இவர்கள் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும் . கவிதை , கட்டுரை , சினிமா , நகைசுவை , அரசியல் என அனைத்திலும் கொடிகட்டி வரும் இவர்கள்பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள் .
அவர்கள் உண்மைகள் :
நண்பர் மதுரை தமிழனின் வலைபூ இது . அருமையான சமுக கட்டுரைகள் மட்டும் இன்றி செம ஜாலியான நகைசுவை கட்டுரைகள் வரை அனைத்தும் எழுதும் பதிவர் இவர் . இவரின் பதிவுகள் ஒரு புத்தகம் போன்று அமைப்புடன்இருக்கும் . செம நக்கல் பதிவுகள் இவரின் சிறப்பு .
உங்கள் பார்வைக்கு சில :
விடிவுகாலமே இல்லையா ?
இது எப்படி இருக்கு ?
==========================================================================
LIGHT IT UP GIRLS:
அன்பு நண்பர் மதுரை தமிழனின் மகள் எழுதும் வலைத்தளம் இது . இதில் பல வகையான உணவு குறிப்புகளை வழங்குகிறார் . என்ன இது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கு , அதுதான் வருத்தம் .
உங்கள் பார்வைக்கு சில :
Oatmeal cookies: Oatmeal Crunch
Don't Change
==========================================================================
மூங்கில் காற்று :
பிரபலபதிவர் டி .என் . முரளிதரன் அவர்களின் கைவண்ணத்தில் மிளிரும் வலைபூ இது . மூன்னுருக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதிய சாதனை பதிவர் இவர் . நீங்களும் சென்று இவரின் படைப்புகளை ரசியுங்கள் .
உங்கள் பார்வைக்கு சில :
பிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2
புரோகிதரே போதும் -சொன்னவர் யார்?
==========================================================================
பழைய பேப்பர் :
நண்பர் விமல் ராஜ் எழுதிவரும் வலைபூ இது . இவர் சென்னையில் பணிபுரிகிறார் . இவர் வலைப்பூவில் சிறுகதைகள் , இவர் ரசித்த , இட்ட டுவிட்டுகள் என அனைத்து வித பதிவுகளும் கிடைகின்றன . வாருங்கள் ரசிக்கலாம் .
உங்கள் பார்வைக்கு சில :
சிறுகதை - கனவு கலைந்தது
எவன் அப்பன் வீட்டு சொத்து ?
==========================================================================
ஊமைக்கனவுகள் :
இந்த வலைதளத்தை எழுதுபவர் பற்றிய விவரங்கள் இல்லை . இவர் யார் தளத்தையும் பின்பற்றவில்லை . ஆனாலும் இவர் பதிவுகள் மிக அருமையாக உள்ளது . கவிதைகள் , கட்டுரைகள் என அனைத்தும் எழுதுகிறார் .
உங்கள் பார்வைக்கு சில :
வீழும்வரை போதும்!
உள்ளங்கவர் களவன்
================================================
புன்னியவன் :
தேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள் என தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார் . இவரின் எழுத்துநடை மிக அருமையாக உள்ளது .
உங்கள் பார்வைக்கு சில :
முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 13
காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?
=============================================
விக்னேஸ்வரனின் வாழ்க்கை பயணம் :
நண்பர் விக்னேஸ்வரன் எழுதும் வலைபூ இது . அருமையான எழுத்துநடையில் பல வித்தியாசமான கட்டுரைகள் இங்கு உள்ளது . சென்று படித்து பாருங்கள் .






