இன்னைக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்... :))
➦➠ by:
அப்பாவி தங்கமணி
செய்தி :
ப்ளாக் வைத்திருக்க வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும்... கூகிள் நிர்வாகம் அறிவிப்பு
செய்தியின் பாதிப்பு :
செய்திய கேட்டதும் பிளாக்கர்'கள் எல்லாம் பொங்கி எழுகிறார்கள். கூகிள் நிர்வாகிக்கு கண்டன செய்திகள் அனுப்பப்படுகின்றன. போராட்டம் வலுப்பெறுகிறது. கூகிள் சமரசம் பேச அப்பாவி தங்கமணிக்கு சம்மன் அனுப்புகிறது
இனி...
கூகிள் நிர்வாகி : நீர் தான் அப்பாவி தங்கமணியோ?
அப்பாவி தங்கமணி : நீர் தான் கூகிள் நிர்வாகியோ?
கூகிள் : ஏது, வெகுதூரம் வந்து விட்டீர்?
அப்பாவி : நட்புறவு நாடியதாக அறிந்தேன், அதை விரும்பியே நானும் வந்தேன்
கூகிள் : நட்பு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தையில்லை உன்னிடம்
அப்பாவி : கற்றுக்கொடுக்கும் இனம் தமிழினம், நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.
கூகிள் : இறுமாப்பு இன்னும் அடங்கவில்லை
அப்பாவி : அது என் உடன் பிறந்தது, அடங்காது, உரக்க உரக்க மேலெழும்.
கூகிள் : உன் மீது குற்றம் சுமத்துகிறேன்
அப்பாவி : என்னவென்று?
கூகிள் : எடுத்துரைத்தால் கணக்கிலடங்காது
அப்பாவி : எண்ணிக்கை தெரியாத குற்றம்
கூகிள் : எனக்கா எண்ணிக்கை தெரியாது, அகம் பிடித்தவளே, கூறுகிறேன் கேள், நீ எழுதி கிழிக்கும் வலைப்பூவுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் Server'ஐ உபயோகிக்க திரைப்பணம் செலுத்தவில்லை, நெடுநாளாக கேட்டும் subscription பணம் வந்து சேரவில்லை, இந்தப் பாக்கிக்கெல்லாம் இன்னும் வட்டியும் கூடக் கட்டவில்லை.
அப்பாவி : கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை! கமெண்ட் பொழிகிறது, போஸ்ட் விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு டிஸ்கசன்'க்கு வந்தாயா? டிசைன் செய்தாயா? விரல் வலிக்க டைப் அடித்தாயா? Follow செய்தாயா? கமெண்ட் போட்டாயா? மாய்ந்து மாய்ந்து போஸ்ட் போடும் பிளாக்கர்க்கு டீ கப் சுமந்தாயா? அங்கு ஓடி ஓடி ப்ளாக் படிக்கும் எம் குல பிளாக்கர்களுக்கு கரண்ட் சார்ஜ் கட்டினாயா? அல்லது நீ follower'ஆ? கூகிள் ரீடரா? யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை?
கூகிள் : போதும் நிறுத்து... பைசா செலவின்றி வெட்டியாய் பொழுதை கழிப்பது மட்டுமின்றி என்னையே எதிர்த்து பேச என்ன இறுமாப்பு உனக்கு
அப்பாவி : வெட்டியாய் பொழுதை கழிக்கிறோமா... என்ன தெரியும் உனக்கு... பட்டியலிடுகிறேன் கேள்...:-
புதுகை தென்றல் அவர்கள் பள்ளி பிள்ளைகளுக்கான இந்த புது கருவி EDUTOR பத்தி சொன்னது, எவ்ளோ உபயோகமான விஷயம் தெரியுமா?
ராமலக்ஷ்மி அவர்களோட எத்தனை படைப்புகள் பல பத்திரிக்கைகளில் வந்திருக்கு தெரியுமா? அருமையான படிப்பினை கதை ஒண்ணு தினமணி கதிரில் வந்திருக்கு மே தினத்துக்கு கூட
கூட்டு குடும்ப வாழ்க்கை குறைந்து விட்ட இந்த நாளில் அம்மாக்களின் பதிவுகள்னு இந்த வலைப்பூவில் உள்ள விஷயங்கள் எத்தனை இளம் தாய்மார்களுக்கு நல்ல வழி காட்டியாய் இருக்கிறது தெரியுமா?
அப்பப்போ என்னை போல மொக்கை போஸ்ட் போட்டாலும் (ஹி ஹி), சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசி பிழியும் ஹுஸைனம்மாவின் பதிவுகளை படித்து பார், வலைப்பூக்கள் பற்றிய உன் எண்ணம் மாறி விடும்
எல்.கேவோட இந்த பதிவை பாத்தா புரியும், நல்ல பல காரியங்கள் கூட வலைப்பூக்களின் மூலம் நடக்குதுன்னு
பதிவுலகில் கேணிவனம் கதை எழுதி புகழ் பெற்ற ஹரீஷ் ஒரு இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பது தெரியுமா உனக்கு
வயதில் சிறியவராய் இருந்தாலும் பெரிய விஷயங்கள் பற்றி எழுதும் மாதங்கியின் வலைப்பூவை ஒருமுறை படித்து பார்... இவரின் அழகு தமிழுக்கு நீயும் ரசிகையாகி விடுவாய்
இத்தனை ஏன், சொர்கத்தில் நிச்சியக்கப்பட்ட திருமணங்கள் நரகத்தை நோக்கி செல்லாமல் பாதுகாக்கும் முக்கியமான விடயம் இன்றைய நாளில் சமையல் வலைப்பூக்கள்...:))
இன்று பெரும்பாலான வீடுகளில் அடுப்பெறிவதே ப்ளாக் உபயம் என நீ அறிவாயா... நானே ரசம் வெக்கறதுக்கு மகி ப்ளாக் போய் ரெசிபி எடுத்து இருக்கேன், கீதா ப்ளாக்ல பாத்து கைமா இட்லி பண்ணி இருக்கேன், மேனகாவோட புளிசாதம் செய்து சாப்பிட்டு ஆனந்த கண்ணீர் விட்டு இருக்கேன்...
தெய்வசுகந்தியோட மொச்சை கொட்டை கத்திரிக்காய் குழம்பு சுவை இன்னும் நாக்குல இருக்குனா பாரேன்... கிருஷ்ணவேணியோட எலுமிச்சை ஊறுகாய் செய்து பாரு, அப்புறம் நீயே நாலு பேருக்கு சொல்லுவ இதை பத்தி... இத்தனை ஏன்? திரட்டிப்பால் என்ற ஒன்று வழக்கொழிந்து வரும் இந்த நாளிலும் மக்கள் திரட்டிப்பால் செய்து உண்டு மகிழும் ரகசியம் அறிய தக்குடுவின் இந்த பக்கத்தை பார்...
கூகிள் : போதும் அப்பாவி போதும்... அககண்ணை திறந்து என் அகந்தையை அகற்றி விட்டாய்... இனி ஒரு போதும் திரை / கப்பம் என கேட்க மாட்டோம்... மன்னித்து விடுங்கள்... நான் போய் வருகிறேன்
அப்பாவி : வெற்றி நமதே... ஸ்வீட் எடு.... கொண்டாடு...:)))
பின் குறிப்பு:
இன்றைய அறிமுகங்கள்... அறிமுகங்கள் என சொல்ல இயலாது, ஏனெனில் இவர்கள் பதிவுலகளில் பிரபலமானவர்கள் தான்... ஆனால் அவர்களின் சில முக்கிய பதிவுகளை தொகுத்து சேமித்து கொள்ளும் ஆவலில் இந்த சரத்தை தொடுத்தேன்... நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புறேன்... நன்றி...









