07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 5, 2013

அகலிகன் - ஆறாவது பந்து


என்னைப்பற்றிய நாடகம்
நடக்கிறது - எனக்குமுன்பாய்

காட்சிகள் எதுவும் தொடர்பில்லை
கடந்தநிமிட காட்சிவரை
அரங்கத்தில் - நானில்லை,

தொடரப்போகும் காட்சிகளின்
ஆருடத்தை - அலசுகின்றன
அறிவுபிண்டங்கள்,

பார்வையாளர் வரிசையில்
என்னைப் பார்த்த சிலரிடமும்
நான் இல்லை எனபதான
கள்ளத்தமே பல் இளிக்கிறது.

========================================================================

வையவன் ஒரு எழுத்தாளர் அவரின் ஒரு கட்டுரையின் வாயிலாக அவருக்கு வயது 70 வதை தாண்டியிருக்கும் என அறியமுடிகிறது. அடிப்படையில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.

அடிமாடுகளும் சினையாடுகளும் கட்டுரையில் கிராமப்புரத்தில் மக்கள் வாழ்ந்த இயற்கையோடு இயைந்தவாழ்வை மிக தெளிவக எடுத்துரைக்கிறார்.

                                                                     படம் அகலிகன்

மாநகரங்களை நோக்கி லாரி லாரியாக மாடுகள் போகின்றன. ஆடுகள் போகின்றன. சினையாடுகளும் கூட. நான்கு வழிச்சாலைகள் உள்ள எந்த தேசீய நெடுஞ்சாலையிலும் அன்றாடம் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நின்று, உட்கார்ந்து கவனித்துப் பார்த்தால் அவை தென்படும். மலங்க மலங்க விழிக்கும் கண்கள். ஆடுகளாகவும் மாடுகளாகவும் பிறக்க நேர்ந்த அவலத்தை அவை மௌனமாக முறையிடுவது போல் தென்படும் காட்சி அது.

பாரதியைப்பற்றி சிலாகிக்கையில்

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாரதியின் நன்கொடை என்ன என்பதுதான் நமது கேள்வி. சில நம்பிக்கை நட்சத்திரங்களுக்குப் பின் ஒரு சூரியன் போன்று உதித்த பாரதியின் பேராற்றலை, நான்கு பிரிவுகளில் பார்ப்பதே அதற்குரிய மரியாதையைச் செய்வதாகும். மிகக் குறுகிய (1904 முதல் 1921 வரை) காலமான சுமார் 18 ஆண்டுகளில் கவிதை, வசனம், வசன கவிதை, ஜர்னலிஸம் ஆகிய நான்கு துறைகளில் பாரதி ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்திருக்கிறார். ஒவ்வொன்றாக அத்துறைகளைப் பார்க்கும்போது, பாரதி நடத்திய மஹாயக்ஞமும் அதன் விளைவும் நமக்குத் தெளிவாகும்.பாரதியின் முக்கியமான வெளியீடு கவிதையே. அதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். “நமக்குத் தொழில் கவிதை” என்று நிலை நாட்டிச் சொன்னார், பாரதியின் கவிதைகளில் கருப்பொருள், உருவம் இரண்டிலும் அவர் காலம் தொடங்குவது வரை, தமிழ் கண்டிராத புதுமைகள் பல உண்டு.இதில் கருப்பொருள் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். அன்று வரை, தமிழ்க் கவிதை பாரத நாடு முழுவதும் தழுவிய தேச பக்தியை பிரதிபலித்ததில்லை. நாம் அனைவரும் பாரதத்தின் மக்கள் அதன் மீது பக்தி கொண்ட புதல்வர் என்ற வெளியீட்டையே தமிழிலக்கியம் முதன் முறையாகப் பாரதி மூலம் தான் அனுபவித்தது

இவரின் கட்டுரைகள் நிச்சயமாய் பல கதவுகளுக்கு இட்டுச்செல்லும்.

ஒரு சிறப்புத்தகவல் இவர் 

வையவன் மெய்ஞனம், வையவன் அழகியல், வையவன் குறுங்கதைகள், வையவன் காவிய வானம் என ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் வைத்திருக்கிறார். 

========================================================================

மகாபாரதத்தில் கண்ணன் நல்லவனா, கெட்டவனான்னு கேட்டா ஆத்திகர்கள் அவன் நல்லவன் மட்டுமல்ல வல்லவன்னும்கூடன்னு சொல்வாங்க. நாத்திகர்கள் அவன் ஒரு பக்கா ஃப்பிராடுன்னு முகத்தில் அரையராப்போல சொல்வாங்க. அலுவலக மேளாண்மை வகுப்புகளில் மகாபாரதத்தில் கண்ணனின் சமயோஜிதங்கள் அத்தனையும் நிறுவனத்திற்கு நல்ல பலனை தரும் என வாதிடுவார்கள். இப்படியும் இன்னும் பல கோணங்களிலும் மகாபாரத கண்ணன்  இன்றுவரையிலும் திகட்டாத பேசுபொருளாகவே இருக்கிறான்.

இன்னிக்கி இருந்திருந்தா அந்த கண்ணனின் நிலையும் தருமனின் நிலையும் என்னவ்வாய் இருக்கும்னு ஒரு கதை சொல்றாரு விந்தமனிதன்

லூசு கதைகள் 

“தங்கச்சி.. கொஞ்சம் சில்லுன்னு தண்ணி கொண்டுட்டு வாம்மா”ன்னு குரல்கொடுத்த கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் கடுப்பா “அவ நடுலவன்கூட காட்டுக்கு சுள்ளி பொறுக்கப் போயிருக்கா போல.. உம்ம அத்தையும் மேலுக்கு நோவுதுன்னு படுத்திருக்கு.. இரும்.. நானே போயி எடுத்தாரேன்”ன்னு சொல்லி மறுவடி எந்திரிச்சிப் போயி தண்ணி கொண்டாந்து கொடுத்த யுதிர்ஷ்டிரன்

“என்ன மச்சான் சலிச்சிப்போயி வந்திருக்கீரு.. போன காரியம் என்னாச்சுகாயா பழமா?” ன்னான்.

“எங்கய்யா... நீரு விடாக்கண்டன்னா உம்ம பங்காளி கொடாக்கண்டனா இருக்கான்.. “அவந்திமிரு... சீட்டாடித் தொலைச்சதை என்ன உரிமைல திருப்பிக் கேக்குறான்.. அப்டியே பாவம்புண்ணியம் பாத்து கொடுக்கலாம்னு பாத்தாக்கூட எங்கப்பன் வதவதன்னு நூறுபேத்த பெத்துப் போட்டுட்டான்.. அம்பது வேலி நெலம்.. மிராசுதார்னு பேருதான்.. எழவு பாகப்பிரிவினை பண்ணா குடிசை போடக்கூட ஆளுக்கு முப்பது குழி நெலம்தான் தேறும்.. இதுல சித்தப்பன் மக்களுக்கு எங்கேருந்து குடுக்குறது?”ன்னு திரும்பிக் கேக்குறான் மச்சான்.. நானும் என்னன்னமோ அகடவிகடம்லாம் பண்ணிப் பாத்துட்டேன்.. பய அசையலையே.. வயல் என்ன வரப்புகூட தரமுடியாதுங்கிறான்..ஊருல இருக்குற பெரிய மனுசன் பூரா அவம்பக்கம்தான் பேசுறானுவோ”ன்னான் கிருஷ்ணன்.

                                               ரசித்தேன் சிரித்தேன்




பாண்டவர்களின் ஆண் என்ற அகந்தையை துடைத்தெரிய செய்யும்

பரந்தாமன் புன்னகைத்தான். "ஏன் கிருஷ்ணை... பொய் சொல்கிறாய்" வார்த்தைகளை கனமாக இறக்கினான்.திரௌபதியின் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மெல்லக் கணவர்மார்களைப் பார்த்தாள். லேசாய்ப் பெருமூச்சும், குரூரமும் கலந்தெழ மெல்ல... மெல்ல வார்த்தைகளை எண்ணிக் கோர்க்கத் துவங்கினாள். தீ பரவியது... வடவாமுகாக்கினியாய்...."ஐந்து கணவன்மார்களும் என் ஐந்து புலன்கள் போலத்தான் அண்ணா! ஆனாலும் மனிதர் ஆறாம் அறிவை நாடி ஏங்குவதுபோல என் மனமும் ஆறாவதாய் ஒருவனுக்காய் ஏங்குகிறதே.... என்ன செய்வேன்?!"கிருஷ்ணன் சிரிக்கத் தொடங்கினான்... அண்டமதிர...அண்ணண்தம்பி ஐவரும் சிலையாகினர்....அவர்களது ஆண்மையின் கர்வம் செத்திருந்தது...அதன்பின் திரௌபதியைத் தொடும்போதெல்லாம் அவர்கள் இறந்து இறந்து உயிர்ப்பிக்கப்படுவதே விதிக்கப்பட்டதானது.

                                                                                                                                       அதிர்ந்தேன்

========================================================================
கலாச்சாரம் நாட்டுக்கு நாடு , ஊருக்கு ஊர் , காலத்திற்கு காலம் மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. இன்று கலாச்சரமாக நாம் கற்பித்துக்கொண்டிருப்பவை எல்லாம் சில நூற்றாண்டுகளுக்குமுன் நம்மேல் திணிக்கப்பட்டதுதான். சிலவற்றை நாம் விரும்பியும் ஏற்றுக்கொண்டோம். கற்பு பற்றிய குஷ்புவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தவர்களும், கலாச்சாரத்தை காப்பாற்ற பெங்களூரு நட்சத்திர விடுதியில் பெண்களை அடித்து துரத்தியவர்களும் காட்டுமிராண்டிகளே.

நினைவுகளும் சிந்தனைகளும் நம்பள்கி
என் தமிழ் சுமார் தான்! எனது தமிழின் ஆழத்தை, அகலத்தை, நீளத்தை சுருங்கச்சொல்லி விளங்கவைக்க என் நண்பன் கூறிய ஒரு வரி போதும்: "நீ தமிழ் நல்லா பேசறே; ஆனா, எழுதும் போது கோட்டை விட்டுரே!" தமிழ்நாட்டில் மருத்துவராவதற்காக தமிழை கல்லூரியில் எடுத்த அவன், தமிழில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவன். எனக்கு தமிழை இலகுவாக எழுதக் கற்றுக் கொடுத்த சேட்டு நண்பனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே இங்கு இந்த "நம்பள்கி."

தமிழன் கலாச்சாரத்தில் தாலியும் இல்லை; முதல் இரவும் இல்லை!


பதிவில் கலாச்சாரம் குறித்து கவலைப்படுபவரை கலங்கடித்திருக்கிறார்.

மாமா பெண்ணை கட்டும் போது சித்தப்பா பெண்ணையும் கட்டலாமே...!


என்ற இடுகையிலும் சடங்கு சம்பரதாயம் பற்றிய நீள அகலங்களை கிண்டலடிக்கிறார். இடுகை என்னவோ மேலோட்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இடுகைக்கு வதிருக்கும் பின்னூட்டங்கள் ஒரு புத்தகமே போடும் அளவிற்கு ஆழமானதாகவும், அகலமானதாகவும் உள்ளது. 

நல்ல பதிவு என்பது பல கேள்விகளை எழுப்பக்கூடியது. விடைகளை தேடவைப்பது.

========================================================================  
கடவுளின் படைப்புக்களிளேயே அழகான படைப்பு எது என்றால் அது பெண்கள்தான். இது ஒரு ஆணின் பார்வையாகூட இருக்கலாம். பெண்களின் பார்வையில் ஆண்தான் அழகு என சொல்லக்கூடும். எப்படியானாலும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்காமல் இருந்ததில்லை இருக்கப்போவதுமில்லை. அதன் சுவாரஸ்யம் ஆளுக்கு ஆள் கூடுமோ குறையுமோ தவிர  சுரத்து இல்லாமல் போகாது. ஆண்கள் பேண்களை சைட் அடிப்பதையும் பெண்கள் ஆண்களை சைட் அடிப்பதும் அவர் அவர் பிறப்புரிமை, இதை எவரும் தடுக்கவோ, ம்றுக்கவோ முடியாது.

பத்துவருடங்களாய் தொடர்ந்து பதிவெழுதிக்கொண்டிருக்கும் திரு டுபுக்கு அவர்கள் தானும் தன் நண்பர்களும் பெண்கள்பின்னால் துள்ளித்திரிந்த காலத்தை மிக அழகாயும் நேர்மையாயும்

நான் சொல்லும் ஜொள்ளு எனப்படுவது யாதெனின், அகலாது அனுகாது, மனதைப் புண்படுத்தாமல், அப்புறம் நினைத்துப் பார்க்கும் போது உதட்டின் ஓரத்திலோ, மனதின் ஓரத்திலோ சம்பந்தப்பட்ட பெண்மணி உட்பட எல்லாருக்குமே ஒரு புன்முறுவல் வரவைக்குமே...அது..அந்த குறும்பு, சேட்டை, ஃபீலீங்...அதே தான். இந்த சேட்டை சில நேரங்களில் காதலாக டெவலப் ஆகி சில அபாக்யவான்களுக்கு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. 
அது நாங்கள் ஜொள்ளித்திரிந்த காலம் என ஜொள்ளுகிறார்.இது பல பதிவுகளாய் தொடர்கிறது.


குண்டலினி யோகம் இருப்பவர்களுக்கு மட்டுமே லேடீஸ் காலேஜில் போய் தேவுடு காக்கும் சந்தர்ப்பம் கிட்டும் என்று ஜோதிட சம்பூஷணம் தினமலரிலும், இதே யோகத்திற்கு கோடியில் ஒருத்தருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய நாலாம் பிறை மச்சம் புட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஜோதிடலேகாவில் மச்சேந்திரரும் சொல்லியிருப்பதால், இல்லாதவர்கள் "சொக்கா சொக்கா இல்ல இல்ல எனக்கில்லை" என்று மனதை தேர்த்திக் கொள்ளுதல் நலம். அசூயையால் மேற்கூறிய இடத்தில் வரைந்து கொண்டு கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு லீவு நாட்களில் அதே லேடீஸ் காலேஜில் தேவுடு காக்கும் தண்டணை தான் கிட்டும் என்று மச்சேந்திரர் அன்பாய் எச்சரிக்கிறார்.  
என காத்திருப்பதின் சுக துக்கங்களை தேவுடு காத்தல் பதிவு ஆவணப்படுத்துகிறது.

========================================================================

14 comments:

  1. அழகான தொகுப்பு...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. எனக்கே கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு. அழகான தேடல்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உங்களுக்கு மகிழ்ச்சின்னா எனக்கு ரோம்ப மகிழ்ச்சி.

      Delete
  4. அழகான தொகுப்பு.

    ReplyDelete
  5. விந்தமனிதனின் தளம் ரசனை!.. அறிமுகங்கள் அனைத்துமே சிறப்பு.. நன்றி!..

    ReplyDelete
  6. Replies
    1. உங்கள் பதிவுகள் சிம்பிளி சூப்பர்.

      Delete
  7. அழகான அறிமுகத்திற்கு மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது