இணையத்தின் அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்) - என் பணி முடியும் நேரமிது..
இந்த நீண்ட பதிவை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி...
ஒரு வார காலமாக வலைச்சரத்தை 'வளவளச்'சரமாக மாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். இரத்தின சுருக்கமாக பதிவு எழுத வேண்டும் என்றுதான் நினைத்திரு- ந்தேன். ஆனால் ஏனோ முதல் முறை வாய்ப்பு, சரியான திட்டமிடல் இல்லாமை, ஆபிஸின் ஆணி, குடும்பப்பொறுப்புகள் போன்ற சில காரணங்களால் எதிர்பார்த்த அளவு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்.. சீனா அய்யா இன்னொரு வாய்ப்பு கொடுக்காமலா போய் விடுவார்.. அப்போது கலக்கலாம்..
80 களின் இறுதியில் என்று நினைக்கிறேன். குமுதம் அப்போது நம்பர் ஒன் வாரப்பத்திரிக்- கையாக இருந்தது. நிறைய புதிய முயற்சிகள் செய்வார்கள். அதில் ஒரு முயற்சியாக வாரம் ஒருவர் அந்த இதழை தயாரிப்பதாக ஆரம்பித்தார்கள். முதல் இதழை டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தயாரித்ததாக நினைவு. தமிழகத்தின் அனைத்து ஆளுமைகளுக்கும் அப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஒருவரின் தனித்திறமையையும், எண்ணங்க -ளையும் வெளிக்கொணரும் வித்தியாசமான முயற்சி அது.நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு வருடத்தின் தீபாவளி இதழை குஷ்வந்த் சிங் தயாரித்தார். அதுவரை அவரை யாரென்றே தெரியாது. அதன்பிறகுதான் அவர் எவ்வளவுப் பெரிய இலக்கிய ஆளுமை என்பதைத் தெரிந்து கொண்டேன்...
வலைச்சரமும் அப்படிப்பட்ட பணியைத்தான் தொடர்ந்து செய்துவருகிறது. நிறைய பதிவர்களுக்கு விசிட்டிங் கார்டு ஆக இருக்கிறது. இப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
தற்போதெல்லாம் வலைப்பூவில் புதிய பதிவர்கள் எழுத வருவது குறைந்துவிட்டது. அப்படி யாராவது ஒருவரை தேடிக்கண்டுபிடித்தால் , அங்கே " உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது" என்று திண்டுக்கல்லாரின் பின்னூட்டம் இருக்கிறது. நான் பதிவெழுத வந்து ஒரு வருடம் கழித்துத்தான் அதாவது நூறு பதிவுகளுக்கு மேல் எழுதியபிறகுதான் வலைச்சரத்தில் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தினார்கள்.
பதிவுலகின் பொற்காலம் என்று 2008-2011 ஆம் ஆண்டு மத்தியில் வரை சொல்லலாம். நிறைய பதிவர்கள். அத்தனைப்பேரும் மிகச்சிறந்த, தனித்துவமான, எழுத்தாளுமை உடையவர்கள். ஒவ்வொரு பிரிவுகளிலும் கலக்கினார்கள். நகைச்சுவையான எழுத்துத் திறன் உள்ளவர்கள் குழுவாக சேர்த்து பட்டையைக் கிளப்பினார்கள். பிற்பாடு பேஸ்புக், ட்வீட்டர் களின் தாக்கம், தமிழ்மணத்தோடு ஊடல், சொந்தப் பிரச்சனைகள் என்று சில காரணங்களால் பதிவுலகத்தைவிட்டு விலகியவர்கள் திரும்பவே இல்லை.. நான் பதிவெழுத வந்தது 2011 இறுதியில். ஒருவேளை அதற்கு முன் வந்திருந்தால், சுனாமியில் சிக்கிய படகு போல காணாமற்போயிருப்பேன்..!
போகட்டும்..
என் ஒருவாரகால வலைச்சர ஆசிரியப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. என் வலைப்பூவில் மாதத்திற்கு நான்கைந்து பதிவுகள் எழுதுவேன். அவ்வளவுதான் எழுதமுடியும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் தினம் ஒரு பதிவுகூட எழுதமுடியும் என்கிற நம்பிக்கை வலைச்சர ஆசிரியப் பொறுப் பேற்ற பிறகுதான் வந்திருக்கிறது.
முதலில் இதுவரை எழுதிய பதிவுகளில் எனக்கு பின்னூட்டமிட்ட நண்பர்களின் பட்டியல் இது . ( இனி பின்னூட்டமிடுபவர்களை அடுத்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்). முதலில் இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.
இத்தோடு முடித்துக்கொண்டு எனக்குப் பிடித்த பதிவர்களும் பதிவுகளைக் காணலாம்.
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
சில நாட்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். "முன்பெல்லாம் வேற்று மொழித் திரைப்படங்களை காப்பியடித்து ஒரு தமிழ்ப் படம் எடுக்கப்பட்டால், அது காப்பி என்று தெரிய பத்து வருடங்கள் கூட ஆகும். இப்போதெல்லாம் படம் ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் சொல்லிவிடுகிறார்கள் "
மூடர்கூடம் படத்தை எல்லோரும் ஆஹா.. ஓஹோ.. அற்புதம் என புகழ்ந்து கொண்டிருக்கையில், அடிச்சாரு பாருங்க நம்ம ராஜ் , " மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !! ".
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
இணையத்தின் அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்)
பொதுவாக என் பதிவுகளில் நக்கல் நையாண்டிகள் நிறைய இருக்கும். அதானால் நிறைய இணையப்போராளிகள் பின்னூட்டத்தில் பொங்கோ பொங்கு என்று பொங்கல் கிண்டிவிட்டு போவார்கள். கடைசில பார்த்தால் அதெல்லாம் டம்மி பீசாக இருக்கும். அதை நக்கல் செய்து ஒரு சிறுகதை (மாதிரி) எழுதினேன். நவீனத்துவ போராளி...
இது வலைச்சரம் என்பதால் அரசியல் நையாண்டிகள் இல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்தேன். இருந்தாலும் நம்ம நக்கல் நையாண்டி இல்லாமல் வலைச்சரத்தை நிறைவு செய்வது கொஞ்சம் நெருடலாக இருப்பதால்... சும்மா ஒரு பைனல் 'பன்ச்' . ஏற்கனவே என் வலைப்பூவில் இட்டது. வலைச்சரத்திற்காக சிறு மாற்றங்களுடன்.
சமூக வலைத்தளங்களில் நிறைய அப்பாடக்கர்ஸ் இருக்காங்க.. சொந்த போட்டோ மற்றும் பெயரில் வரமாட்டாங்க.. குறிப்பா சேகுவரா,காஸ்ட்ரோ,பிரபாகரன் போன்ற போராளிகளின் பிறந்த நாளின் போது அவர்களின் படத்தை ப்ரொபைல் படமா வச்சிப்பாங்க ..மற்ற நாட்களில் நயன்தாரா , திவ்யா, பாவனா, நஸ்ரியா, ஹன்சிகா போன்ற மறத்தமிழச்சிகளின் போட்டோ..
நூறு வருடமாகத்தான் நான் இந்தியன் .. ஆயிரம் வருடமாக நான் தமிழன். அதனால் இந்தியன் என்கிற அடையாளம் கேவலம் என்பாங்க.. இதை எங்கிருந்து சொல்றான் என்று பார்த்தால், இந்தியாவில் இடஒதுக்கீட்டு சலுகையில் இஞ்சினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பான். அவுங்க அப்பா சென்ட்ரல் கவர்மண்ட் பென்சன் வாங்கிகிட்டு இருப்பாரு.
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று ஸ்டேடஸ் போடுவான். இதுவரை தமிழ்நாட்டை தமிழனே ஆளவில்லை என்பான்.ஆனால், டிசம்பர் 12 அன்று உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ஸ்டேடஸ் போடுவான். அதைவிடக்கொடுமை நம்ம சுவரில் வந்து புரட்சி புண்ணாக்குன்னு கமெண்ட் போடுவான் . நாம திருப்பி கேள்வி கேட்டா அந்தப் பக்கமே வர மாட்டான். சரி அவன் சுவரில் போயி ஏதாவது கேள்வி கேட்கலாம்னு ஒரே ஒரு கமெண்ட் போட்டா போதும். உடனே பிளாக்தான். அப்படிப்பட்ட அப்பாடக்கரைப் பற்றிய பதிவுதான் இது. பாவம் இவருக்கு பிளாக் பண்ணவும் தெரியாம..பதில் சொல்லவும் தெரியாம திண்டாடுவதைப் பாருங்கள்.
@ Tweeter..
சமூக வலைத்தளங்களில் நிறைய அப்பாடக்கர்ஸ் இருக்காங்க.. சொந்த போட்டோ மற்றும் பெயரில் வரமாட்டாங்க.. குறிப்பா சேகுவரா,காஸ்ட்ரோ,பிரபாகரன் போன்ற போராளிகளின் பிறந்த நாளின் போது அவர்களின் படத்தை ப்ரொபைல் படமா வச்சிப்பாங்க ..மற்ற நாட்களில் நயன்தாரா , திவ்யா, பாவனா, நஸ்ரியா, ஹன்சிகா போன்ற மறத்தமிழச்சிகளின் போட்டோ..
நூறு வருடமாகத்தான் நான் இந்தியன் .. ஆயிரம் வருடமாக நான் தமிழன். அதனால் இந்தியன் என்கிற அடையாளம் கேவலம் என்பாங்க.. இதை எங்கிருந்து சொல்றான் என்று பார்த்தால், இந்தியாவில் இடஒதுக்கீட்டு சலுகையில் இஞ்சினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பான். அவுங்க அப்பா சென்ட்ரல் கவர்மண்ட் பென்சன் வாங்கிகிட்டு இருப்பாரு.
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று ஸ்டேடஸ் போடுவான். இதுவரை தமிழ்நாட்டை தமிழனே ஆளவில்லை என்பான்.ஆனால், டிசம்பர் 12 அன்று உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ஸ்டேடஸ் போடுவான். அதைவிடக்கொடுமை நம்ம சுவரில் வந்து புரட்சி புண்ணாக்குன்னு கமெண்ட் போடுவான் . நாம திருப்பி கேள்வி கேட்டா அந்தப் பக்கமே வர மாட்டான். சரி அவன் சுவரில் போயி ஏதாவது கேள்வி கேட்கலாம்னு ஒரே ஒரு கமெண்ட் போட்டா போதும். உடனே பிளாக்தான். அப்படிப்பட்ட அப்பாடக்கரைப் பற்றிய பதிவுதான் இது. பாவம் இவருக்கு பிளாக் பண்ணவும் தெரியாம..பதில் சொல்லவும் தெரியாம திண்டாடுவதைப் பாருங்கள்.
@ Tweeter..
அம்புட்டுதேன்.. சும்மா நகைச்சுவைக்காக பதிந்தது..
என் பணி இனிதே முடிந்தது. இதுதான் என் வலைப்பூ.. மனதில் உறுதி வேண்டும்
உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள்...!
என்றும் அன்புடன் ..
மணிமாறன்.
என் பணி இனிதே முடிந்தது. இதுதான் என் வலைப்பூ.. மனதில் உறுதி வேண்டும்
உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள்...!
என்றும் அன்புடன் ..
மணிமாறன்.
--------------------THE END-----------------------


@


























