07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label RVS. Show all posts
Showing posts with label RVS. Show all posts

Sunday, July 3, 2011

டிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்

நறுக் - 6 

obama car driver


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவிற்கு வந்தார். தடபுடலாக பல ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். சொந்த ஊரில் இருப்பது போல மிகவும் மகிழ்ச்சியாக ஒரு சொகுசுக் காரில் பவனி வந்தார் ஒபாமா. தான் பயணித்துக் கொண்டிருந்த ப்ளஷர் காரை ஒபாமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. டிரைவரை பின்னாடி உட்காரச் சொல்லிவிட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு நகர்வலம் வந்தார். அழுத்து அழுத்தென்று அழுத்தி ஊரெங்கும் பறந்தார். ஒரு சின்சியர் டிராபிக் போலீஸ் அந்த வண்டியை மடக்கினார். உள்ளே டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஆளைப் பார்த்தவுடன் மிரண்டு "ஐயா"விற்கு போன் பண்ணினார்.

"சார் ஓவர் ஸ்பீட்ல போன ஒரு முக்கிய புள்ளிய பிடிச்சிருக்கேன்"

"யாருயா... கலெக்டரா..."

"இல்லீங்க..."

"மினிஸ்டரா?"

"இல்லீங்க..."

"முதலமைச்சரா?"

"இல்லீங்க.."

"கவர்னரா?"

"இல்லீங்க...."

"யோவ்.. வேற யாருயா சொல்லித்தொலை..."

[அட்டகாசமான அவரது பதில் கடைசியில்...]

**********
சிவகுமாரன் என்ற ஒரு கவிஞர் பதிவுலகில் சிங்கமென உலவுவது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். மனிதனுடைய எல்லா உணர்வுகளுக்கும் கவிதை எழுதும் அவரது பேனா. அவர் பக்திமணம் கமழ எழுதும் இன்னொரு வலைப்பூ அருட்கவி.

தக்குடு என்று ஒரு துடுக்கு. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை. அலுவலகத்தில் இவரது பதிவுகளை திருட்டுத்தனமாக படிப்பது கடினம். வாய்விட்டு சிரித்து மாட்டிக்கொள்வீர்கள். உம்மாச்சி காப்பாத்து என்று இன்னொரு பதிவில் பக்திப் பழமாகவும் எழுதுகிறார். கணேசா காப்பாத்து!

இது என் எழுத்து. இது என் கருத்து. இது என் மைத்துளிகள் என்று கவிதாப்பூர்வமாக எழுதுபவர் மாதங்கி.(मातंगी). திடீரென்று ஒரு நாள் தத்துவ விசாரணை நடக்கும் மறுநாள் துப்பாண்டி புராணம் இருக்கும். இசையில் தேர்ந்த ஞானம் பெற்றிருக்கிறார். அவரின் மைத்துளிகள் இங்கே.

பதிவுலகில் எல்.கேயைத் தெரியாதவர் எவருமிலர். ஒரு நாளில் எல்லா நண்பர்கள் பதிவுகளையும் படித்து சுருக்கமாக கருத்துரையிடுவார். ரெண்டு மூணு ப்ளாக் வைத்திருக்கிறார். கூடிய விரைவில் எழுத்துக்கு விடுமுறை விடப்போகிறேன் என்று மிரட்டுகிறார். ஓடிச்சென்று படித்துவிடுங்கள்.

தம்பி இளங்கோவுக்கு ஊரு கோயம்புத்தூரு. விழுதுகள் என்ற இயக்கத்தில் சமூகத் தொண்டுகள் புரிகிறார். அவ்வப்போது வலையில் எழுதி கலைத்தொண்டும் ஆற்றும் இப்படிக்கு இளங்கோவை இங்கே சென்று பாருங்கள். சிறு சிறு துளியால் பெரு வெள்ளம் ஆக்க எழுதுகிறார். ரெண்டு நாள் முன்பு எழுதிய ராமர், லெட்சுமணர், அனுமாரு நன்றாக இருக்கிறது.

சுரங்க ஊரான நெய்வேலியிலிருந்து பொக்கிஷமாக வெங்கட் நாகராஜ். தற்சமயம் டில்லிக்கு ராஜாவாக இருக்கிறார். மனைவியையும் பதிவிடச் சொல்லி கால்கட்டு போட்டுக்கொண்ட பதிவர்கள் மத்தியில் சந்தோஷமாக உலவுகிறார். தில்லியைப் பற்றி இருவருமே அவ்வப்போது எழுதுகிறார்கள்.

தற்போது விம்பிள்டன் பார்த்துக்கொண்டிருக்கும் மெட்ராஸ் பவன் உரிமையாளர் சிவகுமார் நன்றாக எழுதுகிறார். நிறைய படங்களுக்கு விமர்சனம் எழுதும் இவரை வருங்காலத்தில் பிலிம் மேக்கராக பார்க்க வாய்ப்பிருக்கிறது. இவரும் நண்பன்டா என்று இரண்டாவது வீடு ஒன்று வைத்துள்ளார்.

மன்னார்குடியில் இருந்து மொத்தம் ஐந்து வலைப்பதிவர்கள் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெசொவி என்று பெயர் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் சீனியர் ஒருவர், மன்னை மைந்தர்களில் ஒருவன் என்று மாதவன், மன்னார்குடி மதிலழகு என்றெழுதும் ராஜமன்னார்குடி , ஆயுத எழுத்தாக பல துறைகள் பற்றியும் பதிவெழுதும் கோப்லி என்கிற ஏ.ஆர்.ராஜகோபாலன், மன்னையின் செல்வன் சிவா என்று ஒரு பட்டாளமே வலை உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், நகைச்சுவை, கவிதை என்று பின்னி பெடலெடுக்கிறார்கள். மன்னையின் அனைத்து இடங்களுக்கும் போய்வந்தது போல இருக்கும்.

பதிவு ராஜராஜேஸ்வரி போல நீள்கிறது.

எங்கள் ப்ளாக் பல்சுவை பதிவுகள் வழங்கும் உங்கள் ப்ளாக். மூன்று பேர் சேர்ந்து எழுதுகிறார்கள். நிறைய புதிர், போட்டி என்று நடத்தி ஊக்குவிப்பார்கள்.
திருவாளர்கள் ஸ்ரீராம் மற்று கௌதமனை தெரியும். பத்மனாபனப் போல பதிவுலகம் முழுக்க சென்று ஊக்குவிப்பது ஸ்ரீராமின் பொழுபோக்கு. வாழ்க அவரது பணி. என்னுடைய ஜட்டிப் பதிவு யூத் புல் விகடனில் வெளிவந்தது அவரால் தான் எனக்கு தெரிய வந்தது.

ராஜபாளையம் லாஜி ஸாரி ராஜி. கோடை விடுமறை முடிந்து மீண்டும் எழுதத் துவங்கியிருக்கிறார். அம்மணி இடும் பின்னூட்டங்கள் பதிவைப் பிளக்கின்றன. கதை, கவிதை போன்றவற்றை சுவையாக எழுதுகிறார்.

பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் எழுத்துப் பணியை விடாமல் செவ்வனே செய்து வருபவர் வை. கோபாலக்ருஷ்ணன். வையகம் புகழ கதைகள் எழுதுகிறார். எவ்வளவு பார்ட் வரும் என 1 of 4  என்று தலைப்பில் போட்டு எழுதும் யதார்த்த கதைக்காரர். இவரது சிறுகதைகள் சில கல்கியில் வெளிவந்துள்ளது.

பொன்மாலைப் பொழுதில் எழுதிவருபவர் அண்ணன் கக்கு மாணிக்கம். கும்பகோணத்துக்காரர். அரசியில் திருடர்களை வஞ்சனை இல்லாமல் வைது பதிவுகள் போடுவார். வீரதீரப் புலி.

அவ்வப்போது எழுதும் சாய் ராம் கோபாலன். இவருக்கு தற்சமயம் கையில் ஆப்பரேஷன் நடந்துள்ளதால் இலக்கியப் பணி ஆற்றுவதற்கு கொஞ்சம் சமயம் பிடிக்கும். மனதில் பட்டதை அப்படியே ஒளிவுமறைவின்றி எழுதும் அசாத்திய துணிச்சல்காரர்.

யாதோ ரமணி எதையும் கவி புனைவதில் வல்லவர். கட்டுரையைக் கூட கவிதையாக எழுதுவார். வார்த்தைகள் இவர் கவிதைகளில் விளையாடும். இவர் எழுதிய ஜான் அப்துல் நாராயணன் எனக்கு விருப்பமான ஒன்று.

வானவில் எழுதும் வீடு திரும்பல் மோகன்குமார் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர். நீடா பார்ட்டி. நல்ல தரமான பல பதிவுகள் எழுதி திண்ணை போன்ற தளங்களில் வெளியிடுகிறார். தன்னம்பிக்கை பதிவுகள் பல எழுதுகிறார். அதுவே அவரது பலம்.

கொஞ்சநாளாக இவங்க வலையுலகத்துக்குப் பக்கம் வரவில்லை என்பதால் நானெல்லாம் தைரியமாக உலவ முடிகிறது. வித்யாவின் கிறுக்கல்கள் என்று எழுதுபவர். நல்ல நேர்த்தியான நடையில் அழகாக எழுதும் சகோதரி. சமீபத்தில் கண்ணில் படவேயில்லை. ரொம்பவும் ஆணி போலிருக்கிறது.

அமைதிச்சாரல் என்று புயலென எழுதும் ஒரு எழுத்தாளர். ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் புதுத் தெம்போடு எழுதுகிறார். படிக்கப் படிக்கப் பரவசம் இவர் எழுத்துக்களில். பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.

*********
"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையே டிரைவரா வச்சுருக்கிற ஒரு பெரும்புள்ளி" என்றாரே பார்க்கலாம்.

பின் குறிப்பு: நறுக் நறுக்கென்று பல்லு படமால் கடித்த என்னை இத்தோடு வலைச்சரத்திலிருந்து சீனா சார் நறுக்கி விடப்போகிறார். வாய்ப்பளித்தமைக்கு அவருக்கு ஒரு நன்றி. என்னால் இயன்றவரை அளித்திருக்கிறேன் என்ற மன நிறைவோடு விடைபெறுகிறேன். மீண்டும் ஒருமுறை சீனா சாருக்கு ஒரு தானா. தாங்க்ஸ்ன்னு சொன்னேன்.

பட உதவி: http://www.sodahead.com . படத்துல ஒபாமா கார்லேர்ந்து வெளியில போறா மாதிரி.. நானும் ஜூட் விட்டுக்கறேன்.


-

மேலும் வாசிக்க...

Saturday, July 2, 2011

பிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று

நறுக் - 5 
பிகாரசமான வனதம்
நறுக் 5 (a )
first and last

நறுக் 5 (b)
கிளச்ர்சியூடுட்ம் பிகாரசமான வனதம். புடிஷ்யான கிளள்ச்சொலுல்ம் ஆபிப்ள் கனன்ங்கள். சோயானின இடை. இச்ன்டேப்  இலால்மலேயே இப்டுபு மறுற்ம் தொயடைளவை பப்ளிகாக்க காடுட்ம் ஜீன்ஸ் பேன்ட். பஸ்ஸ்ண்டாடில் அபெப்ண், பகக்தித்ல் அவ்லிவாபனும்  எதேசைச்யாக உடை உசுரம் நெருகக்தித்ல் நின்றிந்ருர்தாகள். மூகோக்டு ஆயுளைம் சேத்ர்து இழுதத்து அளிவன் நறுணமம். அம்ங்மகை குத்திது விழும் புஸ்புஸ் கேத்சதை ஒதுகுக்ம் விலிரல் அணிதிந்ருந்த நீலநிற மோரதிம் கனன்த்தை நெருகுங்ம்போது பளபளதத்து.  செம்வபள வாயிருலிந்து முத்திதுர்ந்து "எக்கிஸ்யூஸ் மீ" என்றாள். காதுளிகல் ஓயிராரம் வயலிகன்ள் டூயட் வாசிதத்ன. பாதிரஜாராவின் வெணுண்டை தேவகதைள் குழுமி நின்று லாலில்லலி பாடிர்னாகள். அவனையுறிமயாமல் தரையிருலிந்து ஆசகாதித்ர்க்கு பக்றக ஆரபிம்த்ருதிந்தான்.
மேற்கண்ட இரு பாராக்கள் என்னவென்று தெரிகிறதா? புரிந்திருக்கும். விளக்கம் கடைசியில்.

**********
இந்தப் பதிவில் நான் எழுதப்போகும் சில பேர் வலையில் நான் வளைத்துப் பிடித்த ரத்தினங்கள். வலைச்சொந்தங்கள். பாசக்காரர்கள். இவர்கள் எழுத்துக்களைப் பார்த்து நான் நிறைய பொறாமைப்பட்டதுண்டு. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற ரீதியில் நான் எழுதும் எழுத்துக்களை படித்துவிட்டு உற்சாகப்படுத்தும் பெருந்தன்மை இவர்களுக்கு உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

தேன் தமிழில் ஒவ்வொரு எழுத்தாக தோய்த்து எழுதும் பாங்குடையவர் திருவாளர் மோகன்ஜி. வானவில் மனிதன் என்று எழுதும் இவர் கற்பனை மேகத்தின் ஊடே அலையும் ஒரு வான்வெளி மனிதர். நேசம், பாசம், சோகம் என்று தோளில் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்து உருக்கமாகக் கதை சொல்லி ஒரு குரல் அழவிடுவார். ஆனந்தக் கண்ணீர் சில சமயம். உணர்ச்சி பெருக்கில் அழுகைக் கண்ணீர் சிலசமயம். சமீபத்தில் கிசுகிசு எழுதி எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டினார். இந்தக் கிசுகிசு பதிவைப் படிப்போர் தவறாமல் பின்னூட்டக் கும்மியைப் படித்து ரசிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். நிறைய அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கும் அதிகார ஆசான். இவரோடு சேர்ந்து நான் அடித்தக் கொட்டத்தை நினைத்தால் சிறுவர்களுடன் கூட அவருடைய எளிமையான பழகும் மாண்பு எனக்கு புரிகிறது.

தமிழில் கவிதை என்பது என்னை ஏமாற்றும் அடங்காப்பிடாரி காதலி. ஒருதலைக் காதலில் நெருங்கி நெருங்கிப் பார்ப்பேன். "ச்.சீ. போ.. நீ அஞ்ஞான அசிங்கம்" என்று என்னை விட்டு காத தூரம் விலகி ஓடிவிடும். கவிதையாய் பேசினாள் என்று பெண்களைக் கூறுதல் கவிஞர்களின் இயல்பு. கவிகள் சுந்தர்ஜியிடம் ஐந்து நிமிடம் பேசினால்  சுந்தர்ஜியாய் பேசினாள் என்று அடி மாற்றி எழுதுவார்கள். எதைப் பார்த்தாலும் கவிதை புனையும் அவரது விசைப்பலகையில் ஏதோ மந்திர கவிவிசை இருக்கிறது. சுந்தர்ஜி பத்து வார்த்தை பேசினால் ஐந்தைந்து வார்த்தைகளாய் இரண்டு ஹைக்கூக்கள் பிறக்கின்றன. கைகள் அள்ளிய நீர் என்று அடக்கம் தெறிக்கும் தலைப்பில் எழுதிவருகிறார். இல்லையில்லை.. கவிக்கிறார்.

லிக என்று கலியை திருப்பிப் போட்ட கதை மூலமாக எனக்கு அறிமுகமானார் அப்பாதுரை. அவர் 'அப்பப்பா'துரை. அடேங்கப்பா! மூன்றாம்சுழி என்ற வலைப்பூவின் ஆசிரியர். ஒரு முறை உள்ளே மாட்டிக்கொண்டால் மீள முடியாமல் ஆளை உள்ளே இழுக்கும் சுழி மூன்றாம் சுழி. கட உபநிஷத்தை வெண்பாவினால் எழுதி தமிழ்ப் ப்ரியர்களுக்கு அருந்தொண்டு புரிந்திருக்கிறார். மாடர்ன், ஹிஸ்டாரிக், சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பல தரப்பட்ட தமிழ் படைப்புகள் தங்குதடையில்லாமல் அருவியாய் கொட்டுகிறது. சுழித்துக்கொண்டு வலையெங்கும் ஓடுகிறது. உள்ளே போனால் அட்லீஸ்ட் அரை மணிநேரம் நீங்கள் ஒதுக்கவேண்டியிருக்கும். உலகை மறக்கலாம். சுழிக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

தேகத்தை கட்டுடைத்து எழுதும் எழுத்து போகனுடையது. மன உணர்ச்சிகளை கிசேலங்களை வார்த்தைகளாய் புட்டுபுட்டு வைக்கிறார். பிகினி அணிந்த கவர்ச்சியான கவி எழுத்துக்கள். சிலசமயம் எட்டிப்பார்க்கத் துடிக்கும் பிறந்தமேனியாய். எழுத்துப்பிழை என்று முரண்நகையாக பெயர் வைத்துக்கொண்டு பிழையில்லாமல் எழுதுகிறார். எதையாவது ஒன்றைக் கொடுத்து அவரது வலையை தொடுக்க வேண்டுமே என்று இங்கே ஒரு லிங்க் தருகிறேன். நிறைய வாசிப்பனுபவம் மிக்கவர். படிக்க படிக்க போதையேறும் எழுத்துக்கள் இவரது. முதிர்ந்த வாசகர்கள் நாடும் தளமிது. முதிர விரும்பும் வாசகர்களும் படிக்கலாம்.

ஒரு சிறிய பொறியென இருக்கும் கருவை வளர்த்து சுமந்து பெற்றுப்போட்டு பெயர் வைத்துவிடுவார் ரிஷபன். கதையோ, கவிதையோ பிரமாதப்படுத்துகிறார். காற்றை நேசிக்கும் இவருக்கு எழுத்து சுவாசமாக இருக்கிறது. சமீபத்தில் எழுதிய ஆண்டாள் நாச்சியார் பற்றிய பதிவும் கல்கியில் அச்சாகியிருக்கிறது. நம் நெஞ்சத்தில் அச்சாவாக அச்சானவை ஏராளம்.

ஆனந்த வாசிப்பு என்று வெறும் தலைப்பு பெயராக மட்டுமல்லாமல் பல பதிவர்களின் பதிவுகளை ஊன்றி படித்து ஊக்கமூட்டும் பின்னூட்டங்களைப் பதியும் பத்மநாபனைப் பற்றி வலைப்பூவில் தெரியாதவர் உண்டோ? அத்தி பூத்தார் போல அவரது வலைமனையில் எழுதினாலும் தினமும் பின்னூட்டங்களால் பல அற்புதப் பதிவு பல வலைப்பூக்களில் கொண்டிருக்கிறார். பதிவை எழுதிவைத்துவிட்டு வலைமனை வாசலில் பத்துஜின் கமேன்ட்டுக்காக காத்துக்கிடப்போர் ஏராளம். அதில் நானும் ஒருவன். சில பின்னூட்டத்தைப்  பார்த்தால் நாம் எழுதாமல் விட்ட சில கருத்துக்கள் அங்கே கண்ணடித்துக் கதை சொல்லக் காத்திருக்கும்.


தமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் வித்யாசுப்ரமணியம் வலைப்பூவில் எழுதுகிறார். எழுதுவதோடு மட்டுமல்லாமல் வளரும் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்துகிறார்.  கதையின் கதை என்று எழுதும் அவரது வலைப்பூ அர்த்தத்தின் அர்த்தத்தை அனாயாசமாக விளக்குகிறது. ஒரு சீனியர் ரைட்டர் பல தளங்களுக்கு சென்று கருத்திடுவது போஸ்டர் அடித்து போற்றத்தக்க பெருஞ் செயல்.

ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்னும் இவரை மூவார் முத்தே என்று விளிப்பார்கள். நகைச்சுவை மிளிரும் பதிவுகளும் எழுதுவார், கலங்கடிக்கும் கதைகளும் எழுதுவார். உள்ளே போனால் எழுத்தாரண்யத்தில் மாட்டிக்கொள்வீர்கள். ஜாக்கிரதை!


பின் குறிப்பு: சிலர் முன்பே உங்களுக்கு அறிமுகமாயிருக்கலாம். என் முகத்தில் இவர்கள் எப்படித் தெரிகிறார்கள் என்று எழுதியிருக்கிறேன். சலித்துக்கொள்ளாமல் நான் கொடுத்த இணைப்புகளை படித்து இன்புறுக.

பாராக்களின் விளக்கம்.
முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் மட்டும் சரியாக இருந்தால் அந்த வார்த்தை மூளைக்கு சரியாக போய்ச்சேரும், பிழைகள் இருந்தாலும் என்று காம்ப்ரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதுவும் சில வருஷங்களுக்கு முன்னால் மின்னஞ்சலில் பல கண்டங்கள் சுற்றிய படம். இரண்டாவது பாராவாக இதை தமிழில் முயற்சி செய்தது அடியேனின் அதிக ப்ரசங்கித்தனம். பாராவில் செய்தால் பரவாயில்லை.. தலைப்பிலும் செய்தது சரியா? முறையா? என்று நீங்கள் காதைக் கிள்ளாதீர்கள்! வலிக்குது.

-

மேலும் வாசிக்க...

Friday, July 1, 2011

ஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்

six face

நறுக் - 4 

ஆறு+கழுத்துக்கு மேல....
"உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன?"

(ஆறு விரலைக் காட்டினார் அவர்)

"ஆறு"

"அதோட கழுத்துக்கு மேல இருக்கறதைச் சேர்த்துக்கோங்க"

"தலையா?"

"உஹூம்.. அது இல்ல.. முன் தல.. இது...இது..."

"ஓஹோ...முகம்... உங்க வீட்டுக்காரர் பேர் ஆறுமுகம் சரிதானுங்களா?"
(ம. தொகை கணக்கெடுக்கும் அதிகாரி நெஞ்சு பத பதைக்க அந்தப் பதிபக்தி நிறைந்த பெண்மணி சொன்ன பதில் கடைசியில்.....)

*********
சைக்கிள் என்று ஆயிரமாயிரம் கால் உள்ள 'வலை'சைக்கிளில் எழுதுபவர் மிருணா. நிறைய கவிதைகள் எழுதுகிறார். "இங்கே எழுத்தாக நான்" என்று கவித்துவமாக அறிமுகம் செய்து கொள்கிறார். சமீபத்தில் பயணம் என்ற தலைப்பில் இவர் எழுதுவது அற்புதமாக இருக்கிறது. இவரது எழுத்து ஆளில்லா சாலையிலே சுகமான ஜன்னலோரப் பயணம்.


திரு காஷ்யபன் அவர்கள் தீக்கதிர் பத்திரிக்கையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தன் எழுத்துக்கு ஓய்வில்லாமல் தொய்வில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ், ஹிந்தி ஆங்கிலத்தில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பெரியவர். எனது சேஷ்டைகளை ஒதுக்கிவிட்டு மரியாதையாக நான் படிக்கும் ஒரு ப்ளாக். http://kashyapan.blogspot.com/

இது என் ரஃப் நோட்டு என்று எழுதிவரும் பதிவர் டோடோ. ஜப்பானியப் பதிவரா என்று கேட்கிறீர்களா? இல்லை. அருந்தமிழ்ப் பதிவர். ஆங்கிலப் படங்களையும் பாடல்களையும் பற்றிக் கூட ஒரு பதிவு வைத்திருக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய ஒரு கிளாஸ் அஞ்சலி நன்றாக இருக்கிறது. ஒரு கிளாஸ் சைசில் சிறிய சிறிய கவிதைகள் ரம்மாக. ச்சே. ரம்மியமாக எழுதுகிறார்.  திகட்டாமல் இருக்கிறது.

The Roots என்று தான் சுய விவரத்தில் போட்டிருந்தது. நல்ல ஆணி வேர். ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான தனது அப்பத்தா கதையை நமக்காக உண்மை புதிததன்று  என்ற தனது வலைத்தளத்தில் ப்ரசூரித்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

கென்யாவிலிருந்து ராகவன் எழுதும் வலைத்தளம் கூடல்கூத்தன்.ப்ளாக்ஸ்போட் .காம்.  வால்நட்சத்திரம்  என்ற இவரது சமீபத்திய கதை அற்புதமாக இருக்கிறது. ரசிகன் என்ற தளத்திலிருந்து என்கிறார்....

பிரசன்னா ராஜன் ஒரு பயோ மெடிக்கல் பொறியாளர். ஒளியுடையோன் என்ற வலைப்பூவில் அவர் எழுத்துக்களால் ஒலியெழுப்பாமல் பிரசன்ன ஒளி எழுப்புகிறார். மாசத்துக்கு ஓரிருமுறை எண்ணங்களை பதிவாக பிரசவிக்கிறார். அற்புதமான நடையில் மிளிர்கிறார். ஒலக சினிமா நிறைய பார்க்கிறார். ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடல என்ற இவரது சிறுகதையை மார்கோனி படிக்கவேண்டும். ரேடியோவின் பல பயன்பாடுகள் தெள்ளெனத் தெரிகிறது. நல்ல வாசிப்பனுபவம்.

சங்கப்பலகையில் எழுதிவருபவர் திரு. அறிவன். அல்லவை தள்ளி நல்லவை கொள்ள என்று உப தலைப்பு வைத்திருக்கிறார்.  பெண் எழுத்துப் பற்றி பொன் எழுத்தாக அவர் எழுதியதின் சுட்டி இங்கே. நிறைய அரசியல் எழுதுகிறார். தமிழில் நன்கு தேறியவர் என்பது அவரது தேர்ந்த எழுத்துக்களில் தெரிகிறது. ஒரு முறையாவது சங்கப்பலகையில் உட்கார்ந்து பாருங்கள். சுகமாக இருக்கும்.

*********
"அந்த நாய எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க."
இது இரா முருகனின் ராயர் காப்பி கிளப்பில் இருந்து சுட்டது.

-
மேலும் வாசிக்க...

Thursday, June 30, 2011

உரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று



நறுக் - 3 
நிச்சயதார்த்ததிற்கு பிறகு.....
அவள்: அப்பாடி... இதுக்கு தான் ரொம்பநாளா நான் தவம் கிடந்தேன்.


அவன்: நீ என்னை பிரிந்துவிடுவாயா?

அவள்:  ச்சே.ச்சே.. கிடையவே கிடையாது 

அவன்: நீ என்னை விரும்புகிறாயா? 

அவள்: நிச்சயமாக. செய்தேன், செய்கிறேன். இன்னமும் செய்வேன்

அவன்: நீ என்னை ஏமாற்றினாயா? 

அவள்: ச்சே.ச்சே. அதற்கு நான் செத்தே போய்விடுவேன்.. 

அவன்: எனக்கு ஒரு உம்மா கொடுப்பாயா

அவள்: நிச்சயமாக. அது எனக்கு பேரின்பம். 

அவன்: நீ என்னை ஹிம்சிப்பாயா? 

அவள்: ச்சே.ச்சே. நான் அதுபோல ஆள் இல்லை... 

அவன்: நான் உன்னை நம்பலாமா? 

அவள்: உம். 

அவன்: ஹோ டார்லிங்.. 


திருமணத்திற்கு பிறகு அவளும் அவனும் என்ன பேசிக்கொண்டார்கள்?

கடைசியில் பார்க்கவும்..

******
போன பதிவில் உங்கள் ரசிகனைப் பார்த்தோம். இந்தப் பதிவில் ஒரு ரசிகன் இருக்கிறார். பர்மிங்க்ஹாமில் இருக்கும் புதுச்சேரிக்காரர். காதல் ரசிகன் என்று முத்தாய்ப்பாக சொல்லலாம். சின்ன சின்ன தப்புப் பண்ணுவேன் என்று ப்ளாக் சுயவிவரத்தில் சொல்கிறார். அதுவே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஈர்க்கிறது. துரையின் லேட்டஸ்ட் பொய்க்கால் காதலி.

கரந்தையில் பேராசிரியராக இருக்கிறார் ஹரணி. ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் தமிழேற்றுகிறார். தூய தமிழில் அழகாக எழுதுகிறார். என்றைக்காவது அத்தி பூத்த்தார்ப்போல நான் நன்றாக எழுதினால் வந்து நல்லாயிருக்கு என்று கருத்துரைப்பார். கடிதம் எழுதுவது பற்றி மடலேறுதல் என்று இவர் எழுதிய பதிவு, அந்தக்காலத்தில் கடிதாசி போட்ட எல்லோருக்கும் உரைக்கும். 

ஆதிரா ஒரு தமிழ் டாக்டர். தமிழுக்கு டாக்டர் இல்லை பைந்தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் பற்றி இருப்பவைகளை அந்தந்த வரிகளை மேற்கோள் காட்டி ஔஷதக் கட்டுரைகள் எழுதும் டாக்டர். அவை எல்லாம் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளியாவது சிறப்பு. நெல்லிக்கனியின் விசேஷ மருத்துவக் குணங்கள் பற்றி தேவலோக அமுதத்துளி என்று எழுதிய பதிவு இங்கே.

சிமுலேஷன் படைப்புகள் என்று எழுதுகிறார் சுந்தரராமன். நிறைய இபாவின் நூல்களை படித்து நூல்நயம் எழுதுகிறார். சில புதிய புத்தகங்கள் என் போன்ற புழுக்களின் கண்களுக்கு தென்படுகிறது. பத்து பதினைந்து சைட் வைத்திருக்கிறார். வலையுலக வலைப்பூ கிருஷ்ணன் போலிருக்கிறது. கர்நாடக சங்கீதம் கரைத்துக் குடித்திருப்பார் போல தெரிகிறது. சினிமாப் பாடல்களில் கர்நாடக சங்கீத மெட்டுக்கள் பற்றி புஸ்தகம் வெளியிட்டிருக்கிறார்.

ரேகா ராகவன் ஒரு பக்க கதை எழுதும் வித்தகர். நிறைய அவரது சிறுகதைகளை பார்த்து வியந்திருக்கிறேன். இருநூறு முன்னூறு வார்த்தைகளில் சாகசமாய் நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். ஒரு மாதிரி இண்டர்வியு இங்கே. 

நானும் ஒரு நாள் இலக்கியவாதி ஆகவேண்டும் என்ற பெருந்தீ குபுகுபுவென்று உள்ளே பற்றி எரிகிறது. கீழே இருக்கும் பெரும் பேனாக்காரர்களின் எழுத்துக்களை படித்தால் மனதில் அச்சமும் ஐயமும் எழுகிறது. இரும்படிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலை என்றாலும்... பாழாய்ப் போன மனது கேட்காமல் அவ்வப்போது நான் சைட் அடிக்கும் திருத் தளம்.
 உலக இலக்கியம். என்ற வலைத்தளத்தினில் இந்த இலக்கியச் சேவை புரியும் "அழியாச் சுடர்கள்" ராம் புகழ் இணையதள வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றிருக்கும்.

******
தி.பிறகு..

திருமணத்திற்கு பிறகு ஆதர்ஷ தம்பதிகளாக இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக சம்பாஷித்தது கீழிருந்து மேல்.


-

மேலும் வாசிக்க...

Wednesday, June 29, 2011

ரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்


dog sits at bar


 
நறுக் - 2 - ரொம்பப் பிடிக்கும்
"டார்லிங்."

"என்னப்பா"
 
"டா-ர்-லி-ங்.."

"ம்..."

"டா--ர்--லி--ங்...."

"எ-ன்-ன-டா."

"டார்லிங் உங்கவீட்லயே எனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?"

"கைய நோண்டாம யாருன்னு சொல்லு"

"சொல்லட்டா"

"சொல்லுப்பா"

"சொ-ல்-ல-ட்-டா----"
"சொல்லித்தொலையேண்டா.."

"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும் இருப்பாங்களே..."

"நின்னா சின்னதா... உக்காந்தா பெருசாவா... ச்சே.. யாரு.."

"ஆமாம் டார்லிங்.. நெசமாத்தான்..."

"யாருப்பா..."

சொன்னான். (கடைசியில் பார்க்கவும்)

பதிலைக் கேட்டவுடன் ஆசையாய் இருந்த டார்லிங் ஆவேசமாய் பீச்சில் கஷ்டப்பட்டு ஒரு கல்லை தேடி பொருக்கி எடுத்துக் கொண்டு அடிக்க துரத்துகிறார்.. 

ஆம்பளை டார்லிங் சொன்னது கடைசியில்...

***********
என்.கணேசன் என்பவர் என்.கணேசன்.பிளாக்ஸ்பாட்.காமின் ஓனர். ஆனந்த விகடனில் எழுதியதிலிருந்து எழுத்தாளராக மிளிர்கிறார். பால் பிரண்டனின் பார்வையில் இந்தியப் பக்கிரிகள் பற்றியும் சயனைடு விழுங்கியும் சாகாத சாமியார்கள் பற்றியும் எழுதியிருப்பது படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்னும் நிறைய எழுதியிருக்கிறார். அவசியம் பாருங்கள். என் கணேசன் உங்கள் கணேசனாகி விடுவார்.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையில்லை என்ற ரமண மகரிஷியின் அநுபூதியை வலைமுகப்பில் எழுதி வைத்து வ.ஸ்ரீநிவாசன் கனவு மழையில் எழுதுகிறார். தினம் ஒரு பதிவு போட்டு அதகளப்படுத்தாமல், மாதம் ஒன்று போட்டாலும் அமர்க்களமாக போடுகிறார். அசோகமித்ரனுடன் தி.ஜா பற்றிய இவரது பேட்டியில் தி.ஜாவை பற்றி கால்வாசியும் அ.மி பற்றி முக்கால்வாசியும் தெரிந்துகொள்ள முடிகிறது. அசோகமித்ரனின் எவை இழப்புகள் என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு அ.மியின் பல முகங்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு முறை சென்ற நம்மை va. srinivasan பலமுறை வா வாவென்று அழைக்கிறார்.

திருவாளர் ரவி பிரகாஷ் எழுதும் வலைப்பூ உங்கள் ரசிகன். விகடனின் காலப் பெட்டகத்தை இத்தலைமுறைக்கு பொக்கிஷமாக தொகுத்தவர் இவர். வலைப்பூவிற்கு உங்கள் ரசிகன் என்று பெயர் வைத்திருந்தாலும் பதிவை படிக்கும் நம்மையெல்லாம் அவருடைய ரசிகனாக மாற்றுகிறார்.  என்னைக் கவர்ந்த அழகிகள் என்று இவர் எழுதிய ஒரு பதிவு படங்களுடன் பந்தாவாக இருக்கிறது. இமைக்காமல் 'பார்த்து', படித்து இன்புறுங்கள்.

பயமறியாப் பாவையர் சங்கம். தலைப்பே சுண்டி இழுத்தது. ஒரு கூடை நக்கல். ஒரு கூடை சிரிப்பு. ஒன்றாக சேர்த்தால் என்று தலைப்புக்கு கீழே டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். ஐந்தாறு பேராக சேர்ந்து கூட்டணி அமைத்து தாக்குகிறார்கள். சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. நக்கல் நாட்டியமாடுது. காக்க காக்க ரீமேக் ஒரு வெள்ளிவிழா ஹிட். 2009 க்கு பிறகு இந்த வலைப்பூ அப்டேட் ஆகவில்லை என்றாலும் இடது பக்க மார்ஜினில் இருக்கும் இந்த வலைப்பூவின் டீம் மெம்பர்கள் வலைப்பதிவை படித்து மகிழுங்கள்.

வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்று தத்துவார்த்தமாக பெயர் வைத்து சமுத்ரா சுகி என்று சுயமாக பெயர் சூட்டிக் கொண்டு எழுதுகிறார் இவர். கலைடாஸ்கோப் என்று இவர் எழுதும் பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இவரது வாசிப்பின் வீச்சு ரேடியோ கதிர்களாக வீசுகின்றன. அணு அண்டம் அறிவியல் என்று ஒரு விஞ்ஞானத் தொடர் வீராசாமியாக எழுதுகிறார். ரசிக்க வைக்கும் பதிவுகள். பிறருக்கு பின்னூட்டம் மட்டும் Super, Good One என்று போடுவார். மௌனம் அவ்வளவு பேசியதே ஜாஸ்தி தானே! 

******

கடைசியில் பார்க்கச்சொன்னது:

"உங்க வீட்டு டாமிதான்". போன பதிவில் எழுதிய வாத்தியாரைப் பார்த்து நான் கிறுக்கினது. புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட வல்லிய ச்சூடு. சரியா?

பட உதவி: http://stuffistolefromtheinternet.com

-
மேலும் வாசிக்க...

Tuesday, June 28, 2011

ஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று

communication


நறுக் - 1- ஹலோ யார் பேசறது

"ஹலோ"

"ஹலோ"

"யார் பேசறது?"

"நான்தான்"

"நாந்தான்னா யாரு?"

"நான்தான் ரேவதி"

"ரேவதி அப்பா இல்லையா?"

"இல்லை"

"அம்மா இல்லையா?"

"இல்லை"

"சரி அப்பா வந்தா ராமன் டெலிபோன் பண்ணினதாகச் சொல்லு.."

"யாரு?"

"ராமன். எழுதிக்கோ ரா-ம-ன்"

"ரா எப்படி எழுதறது "

"சரிதான் பாப்பா வீட்ல வேற யாரும் இல்லையா?"

"சேகர் இருக்கான்."

"சரி சேகரைக் கூப்பிடு..."

"சேகர் இந்தா.."

இதுல என்னவா? கடைசியில பாருங்க....

*****************
திருமதி இராஜராஜேஸ்வரிக்கு பிறகு வலைச்சர அறிமுகம் எழுதுவது தலைகீழாக அந்தரத்தில் நடப்பதற்கு சமானம். அவரது கடந்த ஏழு நாள் பதிவை யாரேனும் மொத்தமாக திரட்டி வைத்திருந்தால் அதுதான் ஒரு நிகழ்காலத் தமிழ்ப் பதிவர்கள் கையேடு.

என்னால் முடிந்த அளவிற்கு தொடுக்கப்பட்ட அறிமுகங்கள் கீழே..

பார்த்தது கேட்டது படித்தது என்று ஒரு வலைப்பூ. பழைய சென்னையைப் படம் பிடித்து நிறைய இடங்களில் பிரேம் போட்டு மாட்டியிருக்கிறார்கள். பழைய தமிழகத்தை அதாவது, தஞ்சையை, மதுரையை யாரோ படம் பிடித்ததை எடுத்து பொக்கிஷமாக அந்தக் கால தமிழகம் என்று ஒரு பதிவாக போட்டிருக்கிறார் பிகேபி. வருடத்திற்கு வருடம் தஞ்சையின் பரிணாம வளர்ச்சி தெரிகிறது. திருச்சி அப்போதே தஞ்சையை விட பிக் சிட்டி என்று புரிகிறது. மலைக்கோட்டை மேலிருந்து பார்த்தால் காவிரி கரைபுரண்டு ஓடுவது தெரிகிறது. அற்புதம். அற்புதம். நிறைய டெக்னாலஜி கூட எழுதுகிறார். சுவாரஸ்யமான வலைப்பூ.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்று ஒரு எழுத்தாளர். விகடன் பிரசூரம் இவர் எழுதிய இரண்டு புக் போட்டிருக்கிறார்கள். பெரிய ஆள். எழுத்திலும், ஏற்றத்திலும். போன வருடம் ஜூலையில் கல்கி பத்திரிகை செல்லும் இடமெல்லாம் ஒரே மசால் வடை வாசனை. என்னடான்னு எல்லோரும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் அதில் செவ்வடையான மசால்வடையே! அப்டின்னு ஒரு செம்மொழிக்கட்டுரை. மனுஷர் கலக்கிட்டார்.


ராமச்சந்திரன் உஷா ஒரு எழுத்தாளர். நுனிப்புல் என்று வலைத்தளத்திற்கு பெயர் வைத்து விட்டு வாசிக்க வருகிறவர்களுக்கு முழு விருந்து வைக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய இரவுக் கட்டுரை மதுமிதா அவர்கள் தொகுத்த "இரவு" புத்தகத்தில் இடப்பெற்றது. அது இங்கே.  இமை மூட மறுக்கும் இரவுகள்

காதலிப்பது பற்றி ஒரு பொறுப்பான அக்கா என்னவெல்லாம் எண்ணுவாள். முப்பது வரியில் வரிக்கு ஓரிருவரி எழுதி ஒரு கவிதையில் அசத்துகிறார் ஜகன். காதலிப்பது பற்றி இவர் எழுதிய ஒரு கவிதை அப்படியே அடித்துப்போடுகிறது. இரண்டிரண்டு வரிகளில் வீட்டிற்கு மூத்தவளின் கடமைகளை பட்டியலிட்டுள்ளார்.

நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அவர்களது வலைப்பூ வாரணம். வலை முகப்பில் மூன்று சுழி ணவோடு சேர்த்து ஒரு யானையைக் கட்டி வைத்திருக்கிறார். ஆடிக்கும் அமாவாசைக்கும் எழுதினாலும் நிறைய அமாவாசை பல ஆடிக்கள் தாங்கும் பதிவாக வெயிட்டாக எழுதுகிறார். சாம்பிளுக்கு ரெண்டு.
1. எழுத்து எங்கிருந்து வருகிறது?
 2. தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டம்

இன்றைய வரிசையில் பிகேபியை தவிர மீதமிருப்போர் அபூர்வமாகத்தான் எழுதுகிறார்கள். ஆனால் எழுத்து அபூர்வமாக இருக்கிறது.




**********
என்னவா? சேகருக்கு 1 வயசு.
இது வாத்தியார் எழுதியது.

பின் குறிப்பு: முடிந்த வரையில் புதுப்புது அறிமுகமாக தருவதற்கு முயற்சிக்கிறேன்.  தினமும் இந்தப் பதிவில் ஆரம்பித்தது போல சில நறுக் கதைகள்/டயலாக்  பதியலாம் என்று எண்ணம்.

படக் குறிப்பு: நாம ஒன்னு கேட்டா அவங்க ஒன்னு செஞ்சுத் தரும் அனைத்து தொழில்நுட்ப விற்பன்னர்களுக்கும் மேற்கண்ட படம் சமர்ப்பணம். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி எல்லா ஈமெயில் இன்பாக்ஸ்சையும் சகட்டுமேனிக்கு நிரப்பிய படம்.

-

மேலும் வாசிக்க...

Monday, June 27, 2011

அடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.

self portrait

ஆசிரியர் என்றாலே ரொம்ப பயந்தவன் நான். அதுவும் நான் படித்த மீசை வைத்த அத்யாபக்(अथ्यापक) என்றால் 50% அடிஷனல் மரியாதையான பயம். நான் தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபாவினர் வைத்த மத்திமா தேர்வில் கோட் அடிக்காமல் செகண்ட் கிளாசில் ஒரே முயற்சியில் தேறிய பண்டிட். சிலம்பம் சுற்றும் வாத்தியாரைக் கூட பவ்யமாக காலைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வேன். குருவிற்கு ஒஸ்தி மரியாதை ஜாஸ்தி கொடுப்பவன். அவர்களிடம் மரியாதையை சரி சமமாக ஊற்றிக் கலந்த பயம் என் ரத்தத்தில் ஓடுகிறது. திருடன் கையில் சாவி கொடுப்பது போன்ற சீனா சாரின் அழைப்பை ஏற்று ஆசிரிய நாற்காலியை  அலங்கரிக்க(?!) (அ) அபகரிக்க (அ) அமர ஒத்துக் கொண்டேன். ஒரு வாரம் நான் உட்காரும் சீட்டில் யாரும் 'பின்' சொருகாமல் இருந்தால் மிக்க சந்தோஷப்படுவேன். 

சுயபுராணம், சுயதம்பட்டம், சுயவிளம்பரம், சுயசொரிதல் என்று சுயம் இருக்கும் எல்லாவற்றையும் முதல் நாள் இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று சொன்னார் சீனா. ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை. ஆனால் கடை விரித்துவிட்டேன். என்னுடன் பள்ளி, கல்லூரி படித்தவர்களுக்கு தெரியும். நான் ஒரு வாயரட்டை. பேச்சுப் பட்டறை. பாட, பேச, கெட்ட வார்த்தையால் திட்ட, சிரிக்க, சாப்பிட, கொறிக்க, குடிக்க, ஊத, உறிஞ்ச, முத்தமிட, கொட்டாவி விட, பிளந்து குறட்டை விட்டு தூங்க, சிலரை கடிக்க என்று வாயைப் படைத்த பரம்பொருள் எனக்கு மட்டும் முக்கால்வாசி நேரம் பேசுவதற்காக மெனக்கெட்டு செய்து அம்சமாக பொருத்திவிட்டான்.

நாளுக்கு நாள் கடியின் வீச்சு அதிகமானதால் தாங்கள் தப்பிப்பதற்காக சுயநலம் மிகுந்த நண்பர்கள் சிலர் என்னை எழுதத் தூண்டினார்கள். பொதுவெளியில் வலைப்பூ ஆரம்பிக்கும் போது இதுவரை நான் கடந்து வந்த தமிழாசிரியர்கள் கையில் பிரம்புடன் கண்ணில் முறைப்புடன் ஒருமுறை என் கண்முன்னே பரேட் நடத்தினார்கள். போதும். இத்தோடு நிறுத்திக்கொள்வோம். இனி எழுதிக் கொல்வோம். இதுவரை எழுதிக் கிழித்தவைகளை கொஞ்சம் பார்ப்போம்.

2007-ம் வருஷம் "ப்ளாக்ன்னா இன்னாபா?" என்பதற்காக அரசியல்வாதிகள் போல ஊர்ப்பெயரை முன்னால் சேர்த்து ஒரு வலைப்பூ பின்னி எனது திருமுகத்தை (பயந்துடுவீங்க! ஜாக்கிரதை!) மட்டும் ஏற்றி முதல் பதிவிட்டேன். பதிவுலகம் அப்போது லேசாக அதிர்ந்தது எனக்கு அப்பட்டமாக தெரிந்தது. அப்புறம் சுமார் மூன்று வருடம் தமிழில் நன்றாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டு 2010- பிப்பில் கச்சேரியை ஆரம்பித்தேன். "இப்போது நீ என்ன முத்தமிழறிஞரா?" என்று என் நெஞ்சுக்கு நேராக விரல் நீட்டுபவர்கள் சற்றே மன்னிக்க. பதிவுலகில் என்னுடைய வலைப்பூவின் பெயர் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்காக பெயர்க்காரணம் சொன்னேன். நிறைய குடும்பங்களில் உறவுகள் பிச்சுப்போட்டது போல உலகெங்கும் விரவியிருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க இஷ்டமித்திர பந்துங்கள் எழுதினேன். என் மானசீக ஆசான் சுஜாதாவின் நினைவு தினத்தன்று ராஜனுக்கு ராஜன் இந்த ரெங்கராஜன் தான் என்று அஞ்சலி செலுத்தினேன். 

பரமசுகர் என்ற போலிச்சாமியார் பற்றி நானெழுதிய முதல் கதை இரண்டு பின்னூட்டங்களுடன் அமோக வரவேற்பை பெற்றது. மகளிர் தினம் ஒன்று வந்ததில் ஜிப்பா போடாத கவிப்பேரரசாக அவதாரம் எடுத்தேன். வலைக் கவிஞர்கள் வருத்தம் கொண்டனர். சொல்லனாத் துயர் அடைந்தனர். வாளென வீசிய எனது கவிதைப் பேனாவுக்கு ஒய்வு கொடுத்தேன். எஃப் டிவியின் கலைச்சேவை நிறுத்தியபோது பொது நிகழ்வுகள் பற்றி எழுதிப் பார்த்தேன். மீண்டும் இரண்டு பின்னூக்கங்கள் கிடைத்தது. லோக்கலில் ஆஞ்ஜூ கோயிலுக்கு போய்விட்டு வந்ததும் Fair & Lovely பூசிய ரயிலில் சென்று வந்ததும் சமகால பயண இலக்கியங்கள் ஆயின. சாமியாரைப் பற்றி கதை எழுதிய நான் வீடியோ 'பிட்டில்' வாத்து மேய்த்த நடிகையுடன் பின்னிக்கொண்ட ஆனந்தமயமானவருக்கு பத்து நெத்தியடி யோசனைகள் சொன்னேன். எல்லோரும் நீங்களே ஒரு ஆஸ்ரமம் அமைக்கும் அளவிற்கு திறன் படைத்தவர் என்று உளமார பாராட்டினார்கள். இரண்டு சிஷ்யர்கள் வீட்டு வாசல் கதவை தட்டினார்கள்.

ஜட்டி இல்லாமல் ரயில் பயணம் செய்த மக்களை பற்றி நான் எழுதியதை தேடிப் பிடித்து "நல்லாயிருக்கு" என்று யூத்ஃபுல் விகடனில் பிரசூரித்தார்கள். குஷ்பூவும் நானும் சேர்ந்து பார்த்த விண்ணைத் தாண்டி வருவாயா பற்றி நான் எழுதிய விமர்சனம் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு அச்சடித்து ஸ்பெஷலாக வழங்கப்பட்டது. கும்பமேளாவைப் பற்றி போர்ஃப்ஸ் பத்திரிகையில் அபிஷேக் ரகுநாத் எழுதியது என்னை வெகுவாகக் கவர அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப்'படுத்தினேன்'. கோடைக்கால சிறப்பு முகாம்கள் எதிலும் என் பிள்ளைகளை சேர்க்காமல் கொடைக்கானலுக்கும் மதுரைக்கும் சென்று மீனாட்சியின் அருள் பெற்று திரும்பியதை பற்றி பதிவிட்டிருந்தேன். 

உலக வலைப்பூக்களில் முதன் முறையாக கார்த்திக்கின் காதலிகள் என்று காதல் ரசம் சொட்டும் தொடர் எழுதி மக்கள் மீது மன்மத அம்பு போட்டேன். பால் தி ஆக்டோபஸ் ஆருடம் சொல்லிக் கலக்கிய காலத்தில் அதை ஒரு பிரத்யேக பேட்டி எடுத்தேன். மகாபாரதத்தில் வரும் நகுஷனைப் பற்றி சர்ப்ப..சர்ப்ப.. என்று எழுதி காப்பியம் படைத்தேன். ஆகஸ்ட்டில் சென்னையில் அடித்த பெருமழையில் பத்திரமாக நீந்திக் கரையேறி நான் இப்பெரு நகரத்தில் திரவியம் தேடுவதை பற்றி அங்கலாய்த்தேன். சினிமாவிற்குப் பெயர் வைக்க திணறுபவர்கள் இங்கே அணுகவும். போதாத காலமாகிய ஓரிரவில் மணியின் ராவணன் பார்த்துவிட்டு நான் பட்ட பாடு இங்கே.

மோகன்ஜி பதிவில் யானை ஜோக் ஒன்றிற்கு நானும் பத்மநாபனும் பின்னூட்டமிடப் போய் அது யானை மீது சத்தியம் என்ற பதிவாக மலர்ந்தது. வலையுலகில் பின்னூட்டங்களை திரட்டி பதிவிட்ட பெருமை என்னையே சாரும். (எழுத ஒன்னும் இல்லாமல் பதிவாகப் போட்டுவிட்டு பெருமை வேறு.. என்று யாரோ பேசுவது தெளிவாகக் கேட்கிறது) 2010 அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தது ஊரைப் பற்றிய பதிவு. மன்னார்குடி டேஸ். இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சைத் தரணியின் திண்ணைக் காற்றின் பெரும் சுகத்தை அனுபவித்தவனாதலால் திண்ணைக் கச்சேரி என்று ஒன்றை ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை வம்பளக்கிறேன்.

ரொம்ப நாட்களாக கவிதையை விட்டுவைத்த நான் திரும்பவும் பித்துப் பிடித்து ஆக்ரோஷமாக எழுதியது ஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை. மஹாபாரத கேரக்டர்கள் பற்றி கதைகள் எழுதலாம் என்று எண்ணியதில் விளைந்தவை யார் அந்த யோஜனகந்தி? மற்றும் பாகுகன்?.  காலை நேர நடைப்பயிற்சியின் போது பைரவர்களுடன் நட்பு பாராட்டிய பழக்கத்தில் எழுதியது நாய்கள் ஜாக்கிரதை!.

ஜி போட்டு எழுதினால் தனக்கு சம்மதமில்லை என்ற அப்பாஜிக்கு எதிராக மோகன்ஜி என்னை ஏவிவிட்டு முடிந்தவரை ஜகாரம் வைத்து எழுதச்  சொன்ன சிறுகதை ஜாலிலோ ஜிம்கானா. ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் பல மேலாண்மைப் பாடங்கள் எடுக்க வல்லது. ரஜினி - தி மானேஜ்மென்ட் குரு பதிவு அதன் விளைவே! கால் கடுக்க ஒரு ரிஷப்ஷனில் நின்றதால் ஒரு பதிவு, புதிய கார் வாங்கப் போகிறேன் என்று ஒன்று, சேப்பாயியாக வாங்கியபின் ஒன்று என்று கிறுக்கியிருக்கிறேன்.

அறிவியல் புனைவுக் கதைகள் எனக்கு மிகவும் விருப்பம். வாத்தியார் பேனாவால் புகட்டியது. சிலிகான் காதலி என்று ஒன்று ஒரு சிறு அறிபுனைவுத் தொடர் எழுதினேன். கிராமத்து தேவதை மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை என்று இரு காதல் குறுந் தொடர்கள் அப்புறம் ஒரு துணை நடிகையின் கதை என்ற க்ரைம் தொடர் என்று பல கதைகள் எழுதி பாடாய்ப்படுத்தினேன். ஆண்டவன் இப்பதிவுலகைக் காக்கட்டும்.

உப்புமா பற்றி எழுதிய துரித உணவுகளின் தலைவன் லேட்டஸ்ட் ஹிட். யாக்கை திரி  என்ற அறிபுனை கதைக் கூட பரவாயில்லை என்று பேசிக்கொண்டார்கள்.

என்னுடைய ஸ்கோர் போர்டு:

பார்வையாளர்கள்: 110650 + நாளையிலிருந்து வரப் போகிறவர்கள்
மொத்த பதிவுகள் : 364
பின்தொடர்பவர்கள்: 170
மொத்த பின்னூட்டங்கள்:  8000 + இனிமேல் வரப்போகும் அர்ச்சனைகள்

வால்மீகி ராமாயணத்தை விட ஆர்.வி.எஸ்ஸாயணம் பெரிதினும் பெரிது என்பதால் இத்தோடு எண்டு கார்டு போட்டுவிட்டேன். தப்பித்தீர்கள். ஆயுஷ்மான் பவ! நாளை முதல் நீங்கள் அறிமுகத்தில் விழிக்கப் போகிறீர்கள். நன்றி!

பட உதவி: http://www.saturdayeveningpost.com. நார்மன் ராக்வெல்லின் triple self portrait மிகவும் பிரசித்தி பெற்ற ஓவியம். என்னை நானே ஓவர் டோஸாக விளம்பரப்படுத்திக் கொன்றதால் ச்சே.. கொண்டதால் இது இந்தப் பதிவில்.

-

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது