07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 4, 2014

தளிரின் இறைவணக்கம்!

தளிரின் இறைவணக்கம்!


எதைத்தொடங்கும் முன்னும் இறைவனை வணங்கித்
தொடங்குவது தொல் தமிழர் நம்பிக்கை!
உலகப்பொதுமறை தந்த வள்ளுவனும் இறைவாழ்த்து பாடித்தான்
ஆரம்பித்தான் இரண்டடி திருக்குறளை!
மளிகைச் சாமான் பட்டியலை எழுதும் போது
முதலில் விழுகிறது பிள்ளையார் சுழி!
இன்று எல்லோரும் ஓடுகிறார்கள் இறைவனைத் தேடி!
அன்றோ நம்முடனே இருந்தான் இறைவன்!
நம்மை மீறிய ஒரு சக்தி! அது நடத்துகிறது நம்மை!
அதைத்தான் கடவுள் என்கிறோம்! எல்லா மதங்களும் இதை
உணர்ந்திருக்கின்றன! உணர்த்துகின்றன! ஆனால்
உணராமல் உதைபடுகிறோம் உயர்ந்த கடவுள் யார்? என்று!
கடவுள் உயர்ந்தவன் எனில் உயர்ந்தவனில் உயரம் எவன்?
புரியாமல் போரிட்டுக் கொள்கிறோம்!
 திருவிழாக்கள் எதனால் தோன்றியது! வாழ்நாளெல்லாம் உழைக்கும்
வர்கங்களுக்கு ஒருநாள் விழா! ஏழைகளுக்கும் எளியோர்க்கும்
அது திருவிழா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
அதனாலே பலருக்கும் ஒருநாள் வருமானம்!
கொண்டாடுவோருக்கு கிடைப்பதோ வெகுமானம்!
இதைக்கொடு! இதைத்தருகிறேன் என்பதல்ல பக்தி!
கொடுப்பதும் அவனே! எடுப்பதும் அவனே! இதை உணர்ந்தால்வரும் முக்தி!
எத்தனையோ மகான்கள் அவதரித்த பூமி!
எத்தனையோ கடவுளர்கள் கோயில் கொண்ட பூமி!
பக்திரசம் ததும்பும் பாரத பூமி! நாமும் கொஞ்சம் பக்திரசம் அருந்துவோம் இன்று!


 சாஸ்திர சர்மா என்பவர் நடத்தும் வலைப்பூ இது! ஆன்மீகம் என்பது வலைப்பெயர்! திருவருளை வேண்டாதார் யார்? திருமகளின் புகழ்பாடும் ஸ்ரீ சூக்தம்! இதை தமிழில் பகிர்ந்துள்ளார் அழகாக இங்கு ஸ்ரீ சூக்தம் தமிழில்
அவசர யுகத்தில் இன்று சிறியவர் பெரியவர் என்று பார்ப்பது இல்லை! மரியாதை மறந்துபோன உலகாகிவிட்டது. பெரியவரை எப்படி மதிக்கவேண்டும் என்று கற்றுத்தருகிறார் இங்கே! பெரியவர்களை கேலி செய்யாதீர்
பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி இது நமக்கு இன்று மிகவும் முக்கியம் யோகிகள் இதைச்செய்துதான் நூறாண்டு நோயில்லாமல் வாழ்ந்தார்கள் அதைப்பற்றி இங்கு! மூச்சுப்பயிற்சி


தோழி என்பவர் நடத்தும் சித்தர்கள் ராஜ்யம் வலைப்பூவில் கொட்டிக்கிடக்கின்றன தகவல்கள் ஏராளம்! அதில் சில இங்கே! ஆன்மீகம் என்றால் என்ன? கற்றுத்தருகிறார் இங்கே! ஆன்மீகம் என்றால் என்ன?
ஆறாத புண்களையும் குணமாக்க வைத்தியம் சொல்கிறார் இங்கே! புண்கள் குணமாக்க வைத்தியம்இன்று எங்கு எந்த சுவரை பார்த்தாலும் மூல நோய் விளம்பரம்தான் முதலில் நிற்கிறது. மூலத்தை கட்டுப்படுத்த சிறப்பான வைத்தியம் இங்கே! ஆறுவகையான மூல நோய்க்கு தீர்வு

முத்துக்குமார் என்பவர் நடத்தும் இந்த தளத்தின் பெயரும் ஆன்மீகம்! சிலரை பார்க்க செல்லும் போது தியானத்தில் இருக்கிறேன் என்பார்கள்! வீட்டில் டீவி ஓடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் கத்திக் கொண்டிருப்பார்கள் ஆனால் தியானம் செய்துகொண்டிருப்பார் தியானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகளை இங்கே சொல்கிறார் இவர். தியானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
இறைவனை எப்படி அடைவது? அதற்கு ஐந்துவழிகள் இருக்கின்றனவாம் இதோ அந்த ஐந்துவழிகள்! இறைவனை அடைய ஐந்து மார்கங்கள்

அன்ன பூரணி என்பவர் நடத்தும் வலைப்பூ இது! இதன் பெயரும் ஆன்மீகம்! வரவேற்பில்லாமல் போனதால் எழுதுவதை நிறுத்திவிட்டார் போலும் சமயக்குரவர்கள் நால்வர் அவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே சமயக்குரவர்கள் நால்வர்

ஆன்மீகக் கடல் என்றொரு வலைப்பூ இதில் குற்றாலத்தில் நிகழ்ந்த அதிசயம் என்று ஒரு பகிர்வு! குற்றாலத்தில் நிகழ்ந்த அதிசயம் ஆச்சர்யமாயிருக்கிறது இதைப்படித்தால் இதே வலைப்பூவில் சர்ப்ப தோஷங்கள் திருமணத்தடை நீக்கும் கோயில் பற்றி ஒரு பதிவு இது.
விச்சு என்பவர் எழுதும் வலைப்பூ சித்தர்கள் முக்தி அடைந்த இடங்களை ஜீவ சமாதிகள் என்று கூறுவர். அந்த ஜீவ சமாதிகளை எப்படி வணங்க வேண்டும் என்று கூறுகிறார் ஜீவ சமாதிகளை எப்படி வணங்க வேண்டும்
இன்று விருந்தாளி என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கிறது! ஆனால் விருந்தாளியை எப்படி உபசரிக்கவேண்டும் என்று சொல்கிறது இந்தக் கதை! அதிதி போஜனம்
நிறைய கடன் இருக்கு தீரவே மாட்டேங்குது என்று சொல்பவரா நீங்கள் இதை படித்து தீர்வு காணுங்கள்! உங்க கடன் தீர வேண்டுமா?

மணிராஜ் என்ற தளத்தில் அருமையான ஆன்மீகத்தகவல்களை தருகிறார் சகோதரி இராஜ இராஜேஸ்வரி!  தோரணகணபதியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் என்னவெல்லாம் தருவார் இங்கு ஜோரான வாழ்வளிக்கும் தோரண கணபதி
பாதுகைகள் பரதன் வாழ்வில் பெரும் திருப்பம் உண்டாக்கியவை! பாதுகா சஹஸ்ரம் பற்றி இங்கே படியுங்கள்! பாதுகா சஹஸ்ரம் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை வரம் கேளாதார் எவர்?சென்னை முகப்பேரில் உள்ள மகப்பேறு அளிக்கும் கோயில் பற்றிய தகவல்கள் இங்கே! மகப்பேறு அளிக்கும் முகப்பேர் கோயில்

புதியதோர் உலகம் செய்வோம் என்று முழங்குகிறார் சக்திவேல் பாலசுப்ரமணியன் இவர் தோல்வியைத் தாங்குவது எப்படி என்று கற்றுத்தருகிறார் இங்கே! தோல்வியைத் தாங்குவது எப்படி? வேதங்கள் ஏதோ ரகசியம் சொல்கின்றனவாம் இங்கே போய் அறிந்துகொள்ளுங்கள்! வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

ரமணன்ஸ் என்பவர் நடத்திவரும் உண்மையைத்தேடி என்ற வலைப்பூவில் வள்ளலார் பற்றிய வரலாறு சுவையானது. அவதார புருஷர் வள்ளலார் ஆதித்ய ஹிருதயம் சொல்லியே இராமன் இராவணனை வென்றார். சூரியவணக்கம் எப்படி செய்வது இங்கே கற்றுத்தருகிறார். சூரிய வணக்கம்

வளரும் ஜோதிடம் என்றொரு தளம் இடைப்பாடி கருணாகரன் நடத்துகிறார் வழிபாடு எப்படி செய்யவேண்டும் இங்கே விரிவாக கூறுகிறார் வழிபாடு செய்வது எப்படி? நமது உயிர் எப்படி வருகிறது பின் எப்படி புறப்படுகிறது இங்கே சென்று அறிந்துகொள்ளுங்கள்!
தஞ்சையம்பதி என்ற தளத்தை நடத்தி வரும் துரை செல்வராஜ் எழுதியஅருட்பெரும் ஜோதி என்ற அருமையான பதிவை இங்கு படியுங்கள்! அருட்பெருஞ்ஜோதி  சபரி மலை ஐயப்பனை வணங்காதோர் யார்? ஹரிஹர சுதனான ஐயப்பனைப் பற்றி தொடர் எழுதிவரும் இவர்காட்சிகளாய் விவரித்து கண் முன் நிறுத்துகிறார் இங்கு ஹரிஹரபுத்ரன்   திருப்பாவை, திருவெம்பாவை விளக்கத்துடன் தஞ்சையை சுற்றியுள்ள நாம் அறியாத சில கோயில்களை காட்டுகிறார் இங்கு  மார்கழிப்பனியில்
கிருஷ்ணாலாயா என்ற வலைப்பூ அருமைநண்பர் ரவி நடத்தும் ஆன்மீகத்தளம்! விநாயகரை பற்றிய சில சுவையான தகவல்கள் இங்கு விநாயகனே வினை தீர்ப்பவனே  தொல்லைகள் அகல செய்யும் நிகும்பலா யாகம் குறித்து இங்கே சொல்கிறார் தொல்லைகள் தீர   ஏகபாத மூர்த்தி பற்றி அறிய ஏகபாத மூர்த்தி

செந்தில்குமார் என்பவர் நடத்தும் வலைப்பூ ஆன்மீகச் சுடர்
சிவவழிபாடு குறித்த சில தகவல்கள் இங்கே! சிவ வழிபாடு  

 இறைவணக்கத்தோடு துவக்கியுள்ளேன்! இன்னும் அருமையான வலைப்பூக்களையும் பதிவுகளையும் நாடி தேடி பகிர நல்வாழ்த்துக்களை பகிருங்கள்! நன்றி!

 இறுதியாக ஒர் செய்தி: இன்று 4-2-2014 அன்று எங்கள் ஊர் நத்தம் வாலீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தினை முன்னிட்டு விசேஷ பூஜைகளும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனுக்கு  அன்னப்பாவாடை வைபவமும் நடைபெற உள்ளது. வலைச்சர வாசக அன்பர்கள் அனைவரையும் எங்கள் ஊர் மக்கள் சார்பாக விழாவிற்கு வருக வருக என்று அழைக்கின்றேன்! வருக அம்மன் அருளை பெறுக! நன்றி!

மேலும் வாசிக்க...

Monday, February 3, 2014

தளிர் சுரேஷின் சுயதம்பட்டம்!

வலைச்சரம்! அறிமுகம்! தளிர் சுரேஷின் சுயதம்பட்டம்!


வலைகள் பலவுண்டு வகைகளும் சிலவுண்டு!
ஆழியில் உலவுகின்ற மச்சங்களை மிச்சமின்றி
பிடித்திடும் மீன்வலை!
புழக்கமில்லா வீட்டினில் புகுந்து
புதிதாய் கூடு அமைத்திடும் சிலந்திவலை!
கொடுமையான நோய் பரப்பும் கொசுக்களை
குடிபுகவிடாமல் தடுத்திடும் கொசுவலை!
உலகமெலாம் பரவிக்கிடக்கும் தகவல்களை
ஒரு நொடியில் தந்திடும் இணையவலை!
எங்கோ யாரோஎழுதிவரும் இணையப்பக்கங்களையும்
எளிதாக எல்லோரையும் சென்றடையவைக்கும்
வலைச்சரம் எனும் அன்புவலை!

இணையத்தில் எழுதும் எல்லோருக்கும்
என்றாவது ஒருநாள் வலைச்சரத்தில் இடம்பிடிக்கவேண்டும்
என்பதே ஆசை! இடம்பிடித்தபின் அதன்
ஆசிரியர் ஆகும் நாள் என்னாளோ என்பது பேரவா!
எல்லோர்க்கும் அது கிட்டச்செய்வது வலைச்சரக் குழுவின்
ஈடில்லா பெறுமுயற்சி!

இச்சரத்தில் இடம்பிடிக்க துடித்தவர்களில் நானும் ஒருவன்!
முதன் முதலாய் இச்சரத்தில் என்னை கோர்த்தவர்
மேலையூர் ராஜா! ராஜபாட்டையில் பயணிப்பவர்! ஓராண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் என்னை அறிமுகம் செய்தார் சிவஹரி! அதன்பின் பல அன்பர்கள் என்னை பரிந்துரை செய்தனர்! இந்தவாரமும் மணிமாறனால் நான் சுட்டப்பட்டேன்!
வலைச்சரத்தில் நான் கட்டப்பட்டேன்! பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல இந்த நாறும் இன்று மணக்கிறது
இச்சரத்தில் பல முறை பலரால் இடம்பிடித்ததில் மகிழ்ந்தவன்.
இந்நாளில் இதன் ஆசிரியராய் பலரை சரத்தில் கோர்க்க உள்ளேன்!

இப்பொறுப்பை எனக்கு நல்கிய அன்பின் சீனா ஐயாவிற்கும்
என்னை பரிந்ந்துரை செய்தோருக்கும் என் அன்பான நன்றிகள்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அமைந்துள்ளது என்கிராமம். பொழில் சூழ எழிலாக இருந்து இன்று சற்றே மாறிவருகிறது பொட்டல்காடாய்!
கிராமத்தின் இறுதியில் அமைந்துள்ள வாலீஸ்வரர் கோயில் அருகே என் வீடு! வாலீஸ்வரரை பூஜிப்பதே என் தொழில்! இடையில் சில காலம் தனியார் பள்ளியில் ஆசிரியர் தொழில்! பத்தாண்டுகள் கல்விநிலையம் நடத்தினேன்! பள்ளியில் பல முதல் மாணாக்கர்களை உருவாக்கினேன்! அவர்கள் படிப்பில் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் முதல்வர்கள்!
எழுத்து என்னை ஈர்த்தது என் பதின்ம வயதில்! பள்ளிக்காலத்தில்
நண்பர்களோடு இணைந்து கையெழுத்து பிரதி படைத்தது உண்டு.
இளந்தளிர் என்பது அதன் பெயர்! அக்காலத்தே என் வட்டத்தில் அது பிரசித்தம்! அது எனக்கு தந்தது எழுத்துப்பயிற்சி! வளர்ந்ததும் முளைத்தது தேன்சிட்டு என்ற மற்றொரு இதழ்! அதில்தான் முதன்முதலில் கவிதைகள் படைத்தேன்!
கோகுலம் என்னும் சிறுவரிதழில் ஒன்றிரண்டு கதைகள் பிரசுரமானதும் உண்டு.
  பின்னர் சிறிது இடைவெளி! 2011ல் இணைய வெளி எனக்கு அறிமுகமானது! தளிர் என்ற வலைப்பூ உதயமானது! தளிரில் எழுதும் சமயம் தமிழ்தோட்டம் என்ற தளம் அறிமுகமானது அதில் கவிஞர் ரமேஷின் அறிமுகம் உதயமானது! என்  ஹைக்கூக்கள் அதில் பூத்தது. பூவின் களைகள் ரமேஷால் திருத்தமானது.
இதுவரை  தளிரில் இடுகைகள் 1400க்கும் மேல்! இடையில் சில களைகள் கலையப்பட்டன! இதனால் இன்று தளிர் தழைத்துவருகிறது! இத்தனை இடுகைகள் இருப்பினும் நான் எழுதிய சில இடுகைகள் எனக்கு திருப்தி அளித்தவை சில!
எல்லோரும் ஒன்றிரண்டு இடுகைகளை சொல்வார்கள்! என்
சுயதம்பட்டம் கொஞ்சம் பெரிது! அரிது இங்கு என் படைப்புக்களை பகிர்வது! அதனால் என் படைப்புக்களின் வரிசை பெரிது!
அவற்றை பட்டியல் இடுகிறேன் கீழே! படியுங்கள்! களியுங்கள்!
கருத்துக்களை நிரப்புங்கள்! நாளை முதல் என் வலைச்சரத்தில் மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் பூக்கும்! வாசம் பரப்பும்!


 சிறுவர்களுக்கு எழுதுவது ஒரு கலை! நான் முதலில் சிறுவர் எழுத்தாளனாகத்தான் உதயமானேன்! கோகுலம் இதழில் பிரசுரமான கதை ஒன்றினை தளிரில் பாப்பாமலர் என்ற தலைப்பில் கொடுத்தேன்! அண்ணன் தம்பிகள் அடித்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லும் இந்தக்கதை மரியாதையாக் கொடுத்திடு!
காதல் யாரையும் விட்டுவைப்பதில்லை!காதலுக்குகாக எதை எதையோ செய்கிறார்கள்.இதோ இவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள்! இதில் ஒரு எழுத்துபிழை செய்து பிலாசபி பிரபாகரால் குட்டும் வாங்கினேன் அவள்சொன்னாள் என்பதற்காக நகைச்சுவை எல்லோரும் ரசிப்பது! நானும் நகைச்சுவையாக எழுத முயற்சித்தேன்! சிரிப்பு வருகிறதா என்று பாருங்கள் தமன்னாவிற்கு பிடிக்காத தமிழ்மாதம் எது?நான் எழுதிய சில கதைகளில் எனக்குப் பிடித்தமான கதை! என் சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்றை கொஞ்சம் கற்பனை கலந்து வடித்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான கதை நீயுமா?ஹைக்கூ கவிதைகள் எனது ஸ்பெஷல்! தமிழ் தோட்டத்தில் 500 ஹைக்கூக்கள் வரை எழுதியிருப்பேன்! என் ஹைக்கூவில் கூர்மை அதிகம் என்று நிகழ்காலம் எழில் பாராட்டியதை மறவேன்! இதோ உங்கள் பார்வைக்கு சில ஹைக்கூக்கள் தளிர் ஹைக்கூ கவிதைகள் நான் எப்படி பிகரை மெயின்டெய்ன் பண்ணியிருக்கேன்னு பாருங்கள் நான் ‘பிகர்’ மெயிண்டெய்ன் பண்ண கதைஇதுவும் ஒரு மொக்கை பதிவு கொஞ்சம் காமெடியும் கலந்த பதிவு கலா சிஸ்டர்ஸை பார்த்து காளையன் ஜொள்ளுவிட்ட கதை  நான் எழுதிய உருப்படியான பதிவுகளில் இதுவும் ஒன்று. பெரியவங்க சொன்னதையும் புத்தகத்தில் படிச்சதையும் கலந்து எழுதினது. குழந்தைகளுக்கு திருஷ்டிவந்தா என்ன செய்யறதுன்னு தெரிஞ்சிக்க உதவும் திருஷ்டிகளும் பரிகாரங்களும்என்னை கொஞ்சம் புகழ் ஏணியில் ஏற்றிவிட்ட தொடர்! ஒரு சின்ன செய்தியை பெரிய தொடராக மாற்றினேன். இதன் முடிவை சரியாக எழுதவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு பேய்கள் ஓய்வதில்லை!  பாராட்டுக்கு எல்லோரும் ஏங்குவார்கள்! நான் எப்படி ஏங்கறேன்னு கொஞ்சம் படிச்சு பாருங்கள்  எக்ஸ்க்யுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்!  என் பள்ளிக்காலத்து நினைவுகளை சொல்லும் இந்த தொடர்கொஞ்சம் பரபரப்பு ஏற்றியது  சரவணன் - மீனாட்சி  நான் எழுதிய கதைகளில் சரித்திரக்கதை இது.கலிங்கத்துப்பரணியின் சிலவரிகள் படித்தமையால் எழுந்தது இந்தக் கதை  குலமகள்!  பிரதோஷம் பற்றிய ஆன்மீகத்தகவல்கள் இங்கே! பிரதோஷம் கும்பிடப்போறவங்க தெரிஞ்சிக்கங்க! சமீப காலமாக எனக்கு பெரிதும் பெயர் சொல்லும் பதிவு இது! ஒரு ரகசியம் சொல்லட்டுமா? இதை புத்தகமா வெளியிடலாமான்னு ஒரு யோசனையும் இருக்கு! புகைப்பட ஹைக்கூ 63  வலைப்பூ ஆரம்பித்த காலத்தில் எழுதிய கவிதை எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை! நீங்களும் படிச்சு பாருங்களேன்!   குழந்தை! அப்பாவின் கட்டில்!

 சீனா ஐயா வானமே எல்லைன்னு சொன்னதாலே
சொல்லிக்கிட்டே இருந்தால் அனுமார் வால் போல நீண்டுகிட்டே போகும்! அதனால இத்தோட நிறுத்திக்கிறேன்! என் சுயதம்பட்டம் கொஞ்சம் அதிகமா… இல்ல.. இல்ல நிறையவே அதிகமா ஆயிடுச்சு! கொஞ்சம் மன்னிச்சுக்கங்க! அப்பாடா!ன்னு நிம்மதி பெருமூச்சு விடறது இங்கே கேட்குது! சரி! சரி! நாளைக்கு நிறைய நண்பர்களோட பதிவுகளோட சந்திக்கிறேன்! உங்க கருத்துக்களை பகிர்ந்துகொண்டு உற்சாகப்படுத்துங்கள்! நன்றி! வணக்கம்!
மேலும் வாசிக்க...

Sunday, February 2, 2014

சா.சுரேஷ் பாபு நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே ! 

நாளை முதல் எஸ்.சுரேஷ் ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

இவர் தளிர் என்னும் தளத்தில் எழுதி வருகிறார்.

இவரது  பெயர்: சா. சுரேஷ்பாபு. 
ஊர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள நத்தம் கிராமம்.
தொழில் : கோயில் குருக்கள், டியுசன் ஆசிரியன்,
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தளிர் என்னும் வலைப்பூவில் பல்சுவை பகுதிகளை எழுதி வருகிறார். இவரை  முதன் முதலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியவர் என் ராஜபாட்டை மேலையூர் ராஜா அவர்கள். அதற்குப்பின் ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து சிவஹரி மூலம் மீண்டும் அறிமுகம் ஆனார். எல்லோருக்கும் பிடித்த காப்பி பேஸ்ட் நோய் இவருக்கும் பிடித்து தற்போது அதிலிருந்து மீண்டு நல்ல பதிவுகளை கொடுக்க முயற்சித்து வருகிறார். படித்தது இளங்கலை வணிகவியல். சுமார் பத்து வருடங்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டியுசன் எடுத்து பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவராக வரச்செய்துள்ளார். இவரது  மாணவர்கள் இப்போது நல்ல பணியில் உள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. பல்சுவை எழுதினாலும் ஹைக்கூ கவிதைகளும், குட்டிக்கதைகளும் இவருக்கு பிடித்தமானவை. 

சா.சுரேஷ் பாபுவினை வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சா.சுரேஷ் பாபு

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

இணையத்தின் அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்) - என் பணி முடியும் நேரமிது..


ந்த நீண்ட பதிவை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி...

ஒரு வார காலமாக வலைச்சரத்தை 'வளவளச்'சரமாக மாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். இரத்தின சுருக்கமாக பதிவு எழுத வேண்டும் என்றுதான் நினைத்திரு- ந்தேன். ஆனால் ஏனோ முதல் முறை வாய்ப்பு, சரியான திட்டமிடல் இல்லாமை, ஆபிஸின் ஆணி, குடும்பப்பொறுப்புகள் போன்ற சில காரணங்களால் எதிர்பார்த்த அளவு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்.. சீனா அய்யா இன்னொரு வாய்ப்பு கொடுக்காமலா போய் விடுவார்.. அப்போது கலக்கலாம்..

80 களின் இறுதியில் என்று நினைக்கிறேன். குமுதம் அப்போது நம்பர் ஒன் வாரப்பத்திரிக்- கையாக இருந்தது. நிறைய புதிய முயற்சிகள் செய்வார்கள். அதில் ஒரு முயற்சியாக வாரம் ஒருவர் அந்த இதழை தயாரிப்பதாக ஆரம்பித்தார்கள். முதல் இதழை டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தயாரித்ததாக நினைவு. தமிழகத்தின் அனைத்து ஆளுமைகளுக்கும் அப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஒருவரின் தனித்திறமையையும், எண்ணங்க -ளையும் வெளிக்கொணரும் வித்தியாசமான முயற்சி அது.நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு வருடத்தின்  தீபாவளி இதழை குஷ்வந்த் சிங் தயாரித்தார். அதுவரை அவரை யாரென்றே தெரியாது. அதன்பிறகுதான் அவர் எவ்வளவுப் பெரிய இலக்கிய ஆளுமை என்பதைத் தெரிந்து கொண்டேன்...

வலைச்சரமும் அப்படிப்பட்ட பணியைத்தான் தொடர்ந்து செய்துவருகிறது. நிறைய பதிவர்களுக்கு விசிட்டிங் கார்டு ஆக இருக்கிறது. இப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

தற்போதெல்லாம் வலைப்பூவில் புதிய பதிவர்கள் எழுத வருவது குறைந்துவிட்டது. அப்படி யாராவது ஒருவரை தேடிக்கண்டுபிடித்தால் , அங்கே " உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது" என்று திண்டுக்கல்லாரின் பின்னூட்டம் இருக்கிறது. நான் பதிவெழுத வந்து ஒரு வருடம் கழித்துத்தான் அதாவது நூறு பதிவுகளுக்கு மேல் எழுதியபிறகுதான் வலைச்சரத்தில் என் வலைப்பூவை அறிமுகப்படுத்தினார்கள்.

பதிவுலகின் பொற்காலம் என்று 2008-2011 ஆம் ஆண்டு மத்தியில் வரை சொல்லலாம். நிறைய பதிவர்கள். அத்தனைப்பேரும் மிகச்சிறந்த, தனித்துவமான, எழுத்தாளுமை உடையவர்கள். ஒவ்வொரு பிரிவுகளிலும் கலக்கினார்கள். நகைச்சுவையான எழுத்துத் திறன் உள்ளவர்கள் குழுவாக சேர்த்து பட்டையைக் கிளப்பினார்கள். பிற்பாடு பேஸ்புக், ட்வீட்டர் களின் தாக்கம், தமிழ்மணத்தோடு ஊடல், சொந்தப் பிரச்சனைகள் என்று சில காரணங்களால் பதிவுலகத்தைவிட்டு விலகியவர்கள் திரும்பவே இல்லை.. நான் பதிவெழுத வந்தது 2011 இறுதியில். ஒருவேளை அதற்கு முன் வந்திருந்தால், சுனாமியில் சிக்கிய படகு போல காணாமற்போயிருப்பேன்..!

போகட்டும்..

ன் ஒருவாரகால வலைச்சர ஆசிரியப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. என் வலைப்பூவில் மாதத்திற்கு நான்கைந்து பதிவுகள் எழுதுவேன். அவ்வளவுதான் எழுதமுடியும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் தினம் ஒரு பதிவுகூட எழுதமுடியும் என்கிற நம்பிக்கை வலைச்சர ஆசிரியப் பொறுப் பேற்ற பிறகுதான் வந்திருக்கிறது.

முதலில் இதுவரை எழுதிய பதிவுகளில் எனக்கு பின்னூட்டமிட்ட நண்பர்களின் பட்டியல் இது . ( இனி பின்னூட்டமிடுபவர்களை அடுத்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்). முதலில் இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.


இன்னொரு முக்கியமான விசயம்... நான் எழுதிய பதிவுகளில் நண்பர்களின் வலைப் பூவின் லிங்கைக் கொடுத்துவிட்டு அடுத்த வேலைக்கு தயாராகிவிடுவேன். ஆனால், நான் கொடுத்திருந்த லிங்க்-க்கு சென்று அங்கு, "உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது" என்று  பின்னூட்டமிட்டு அவர்களுக்குத் தெரியப்படுத்தும் அற்புதப்பணியை இருவர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் துரை செல்வராஜூ சார், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி..

 இத்தோடு முடித்துக்கொண்டு எனக்குப் பிடித்த பதிவர்களும் பதிவுகளைக் காணலாம். 

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

சில நாட்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். "முன்பெல்லாம் வேற்று மொழித் திரைப்படங்களை காப்பியடித்து ஒரு தமிழ்ப் படம் எடுக்கப்பட்டால், அது காப்பி என்று தெரிய பத்து வருடங்கள் கூட ஆகும். இப்போதெல்லாம் படம் ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் சொல்லிவிடுகிறார்கள் "

மூடர்கூடம் படத்தை எல்லோரும் ஆஹா.. ஓஹோ.. அற்புதம் என புகழ்ந்து கொண்டிருக்கையில், அடிச்சாரு பாருங்க நம்ம ராஜ் ,  " மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !! ".

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
வெங்கட் நாகராஜ் சார் ..நவரசப் பதிவர்..! எல்லாம் விசயங்களைப் பற்றியும் தெளிவாக, சுவையாக பதிவு போடுவார்  சிவாஜி சிலை..... 

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
சகோ ராஜி நான் ஆச்சர்யப்படும் பதிவர்களில் ஒருவர். தினம் எழுதிக்கொண்டிருந்தால் எழுத்தில் ரசனை குறைந்துவிடும் என்பார்கள். ஆனால் இவர் பதிவுகள் அனைத்தும் தரத்தில் ஒன்றுக்கொன்று போட்டிப்போடுபவை.. இனி அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் நடக்குமா!? - கேபிள் கலாட்டா   

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------
சேட்டைக்காரன் சிறந்த பதிவர் என்று நான் எழுதினால் சிவாஜிக்கு நடிக்கத்தெரியும் என்று சொல்வது மாதிரி. சினிமாவுக்கு நடிப்புப் பட்டறை போல இவரது பதிவுகள் புதிதாக பதிவுலகில் நுழைபவர்களுக்கு எழுத்துப் பட்டறை.. எவ்வளவோ இருக்கு.. ஏதாவது ஒன்னை சொல்லியாகனும் இல்லையா...கிட்டாமணியும் ’கிட்நாப்’ மணியும்  (இதைப் படிக்கும்போது உங்களுக்கு மனுஷ்ய புத்திரன் ஞாபகம் வந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல  ..)
-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

ரமணி அய்யா அவர்களின் கவிதைகள் கருத்துச்செறிவு மிக்கது. தமிழ்மணத்தில் மகுடம் சூடுகிறது அவரது பதிவுகள். காலம் கடக்க நினைப்பது

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

 கவிஞர் முத்து நிலவன். பட்டிதொட்டியெங்கும் பரிச்சயமான பெயர். பட்டிமன்றங்களை கிராமங்களுக்கும் எடுத்துச்சென்ற லியோனி அவர்களின் தளபதிகளில் ஒருவர். செம கேள்வி கேட்கிறாரு பாருங்க..அம்மா உணவகத்தை “மோட்டல்”களில் தொடங்கலாமே?

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

பிரதிபா பிரதி. பேஸ்புக் பிரபலம். ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்தரங்க விசயங்களையும் துணிந்து எழுதுவார்.  அதில் ஓன்று ஒரினச்சேர்க்கை...குடும்பத்திற்கு ஒவ்வாத சேர்க்கை......! 


-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

இரண்டு நாட்களுக்கு முன்பு ஷோபா சக்தியின் தங்க ரேகை சிறுகதை வெளிவந்திருக்கிறது. உலகத்தரம் என்று சாரு பாராட்டியிருக்கிறார். அவரது 'கெப்டன்' சிறுகதைக்குப் பிறகு மிகவும் ரசித்துப் படித்தது. என்ன மொழிநடை பாருங்கள்..!!!

-----------------(((((((((((((((((<<<<<<>>>>>>))))))))))))))))--------------

இணையத்தின்  அப்பாடக்கர்ஸ் (ஃபைனல் ஷாட்)

பொதுவாக என் பதிவுகளில் நக்கல் நையாண்டிகள் நிறைய இருக்கும். அதானால் நிறைய இணையப்போராளிகள் பின்னூட்டத்தில் பொங்கோ பொங்கு என்று பொங்கல் கிண்டிவிட்டு போவார்கள். கடைசில பார்த்தால் அதெல்லாம் டம்மி பீசாக இருக்கும். அதை நக்கல் செய்து ஒரு சிறுகதை (மாதிரி) எழுதினேன். நவீனத்துவ போராளி...

இது வலைச்சரம் என்பதால் அரசியல் நையாண்டிகள் இல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்தேன். இருந்தாலும் நம்ம  நக்கல் நையாண்டி இல்லாமல் வலைச்சரத்தை நிறைவு செய்வது கொஞ்சம் நெருடலாக இருப்பதால்... சும்மா ஒரு பைனல் 'பன்ச்' . ஏற்கனவே என் வலைப்பூவில் இட்டது. வலைச்சரத்திற்காக சிறு மாற்றங்களுடன்.

சமூக வலைத்தளங்களில் நிறைய அப்பாடக்கர்ஸ் இருக்காங்க.. சொந்த போட்டோ மற்றும் பெயரில் வரமாட்டாங்க.. குறிப்பா சேகுவரா,காஸ்ட்ரோ,பிரபாகரன் போன்ற போராளிகளின் பிறந்த நாளின் போது அவர்களின் படத்தை  ப்ரொபைல் படமா வச்சிப்பாங்க  ..மற்ற நாட்களில் நயன்தாரா , திவ்யா, பாவனா, நஸ்ரியா, ஹன்சிகா  போன்ற மறத்தமிழச்சிகளின் போட்டோ..

நூறு வருடமாகத்தான் நான் இந்தியன் .. ஆயிரம் வருடமாக நான் தமிழன். அதனால் இந்தியன் என்கிற அடையாளம் கேவலம் என்பாங்க.. இதை எங்கிருந்து சொல்றான் என்று பார்த்தால், இந்தியாவில் இடஒதுக்கீட்டு சலுகையில் இஞ்சினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பான். அவுங்க அப்பா சென்ட்ரல் கவர்மண்ட் பென்சன் வாங்கிகிட்டு இருப்பாரு.

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று ஸ்டேடஸ் போடுவான். இதுவரை தமிழ்நாட்டை தமிழனே ஆளவில்லை என்பான்.ஆனால்,  டிசம்பர் 12 அன்று உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ஸ்டேடஸ் போடுவான். அதைவிடக்கொடுமை நம்ம சுவரில் வந்து புரட்சி புண்ணாக்குன்னு கமெண்ட் போடுவான் . நாம திருப்பி கேள்வி கேட்டா அந்தப் பக்கமே வர மாட்டான். சரி அவன் சுவரில் போயி ஏதாவது கேள்வி கேட்கலாம்னு ஒரே ஒரு கமெண்ட் போட்டா போதும். உடனே பிளாக்தான். அப்படிப்பட்ட அப்பாடக்கரைப் பற்றிய பதிவுதான் இது. பாவம் இவருக்கு பிளாக் பண்ணவும் தெரியாம..பதில் சொல்லவும் தெரியாம திண்டாடுவதைப் பாருங்கள்.

@ Tweeter..
@ G +
@
@ FACEBOOK...

@ BLOGGER

அம்புட்டுதேன்.. சும்மா நகைச்சுவைக்காக பதிந்தது..

என் பணி இனிதே முடிந்தது. இதுதான் என் வலைப்பூ..  மனதில் உறுதி வேண்டும்

உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள்...!

என்றும் அன்புடன் ..

மணிமாறன்.

--------------------THE END-----------------------
மேலும் வாசிக்க...

Saturday, February 1, 2014

டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்.-பாகம் -2

சென்ற பதிவின் தொடர்ச்சி... 

வண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்...( முதல் பாகம்)

6.கோவை  சரளா.. 

தமிழ்த் திரையுலகில்  நகைச்சுவை நடிகைகள் மிகக்குறைவு.ஆச்சி மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர், நடிகை கோவை சரளா.வேறு எவரும் போட்டிக்கு இல்லாததால் தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதில் சிறந்த நகைச்சுவை நடிகை என்ற பிரிவையே எடுத்துவிட்டார்கள். பின்ன.. இவர் ஒருவர் மட்டுமே அந்த விருதை வாங்கிக்கொண்டிருக்க முடியுமா...?   

முந்தானை முடிச்சில் அறிமுகம். பிறகு சிறு சிறு வேடங்கள். எஸ்.எஸ்.சந்திரன்- செந்தில் இணை கலக்கிய காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்தார். அதன் பிறகு இவருக்கு சுக்கிர திசை. செந்தில்- கோவை சரளா ஜோடியுடன் கவுண்டர்  இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பிக்க, 80-90 களில்  புகுந்து விளையாடியதுதான் இந்த ஜோடி. பிறகு வைகைப்புயலுடன் அடுத்த இன்னிங்க்ஸ். இந்த ஜோடி இருந்தாலே போதும். படம் வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்த காலகட்டமும் உண்டு.

ஆரம்பத்தில் கொங்கு தமிழில் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருந்த இந்த 'சின்ன ஆச்சி' , பிற்பாடு தன் குரலமைப்பை மாற்றிக்கொண்டார்.. பிரியாணியைக் கூட "ப்ப்பிர்ர்ரியாணி..." என்று தான் சொல்லுவார். கமலுடன் ஜோடி சேர்ந்தது பெரிய பாக்கியமாகக் கருதுகிறார்.

இவரது புகழ்பெற்ற வசனங்கள் சில...

’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’, ‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’, ' ஹி..ஹி..நானா யோச்சிச்சேன்..'.. 

5.செந்தில்

தமிழ் சினிமாவில் எல்லா நகைச்சுவை நடிகர்களுக்கும் முதல் இன்னிங்க்ஸ், இரண்டா- வது இன்னிங்க்ஸ் என்ற காலகட்டங்கள் இருக்கும். ஆனால் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் செந்தில். லாரல்- ஹார்டி போல் புகழ்பெற்ற comedy duo -வை தமிழ்ச் சினிமாவில் சாத்தியப்படுத்தியது கவுண்டமணியும் செந்திலும். இவர் "அண்ணே...." என்க, பதிலுக்கு கவுண்டர்,"என்னடா..நாயே.."என்பதில் தொடங்கி எல்லா விலங்குகளின் பெயரை இழுத்துத் திட்டும்போது தமிழ் ரசிகர்கள் பூரித்துப்(!) போவார்கள். எந்த ஈகோவும் இல்லாமல் கவுண்டருடன் இணைத்து இவர் கலக்கிய காலங்கள் தமிழ் சினிமாவின் பொற்காலம். 


4.விவேக்..



சின்னக் கலைவாணர்... சனங்களின் கலைஞன் இப்படிப்பட்ட அடைமொழிகளை விரும்பிப் போட்டுக்கொள்வார். ஹீரோவுக்கு இணையாக 'பன்ச்' அடிப்பவர். சில நேரங்களில் ஹீரோவையே ஓவர் டேக் செய்வார். சமூகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் தனது நகைச்சுவையில் நக்கலடித்து,சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். அதே நேரத்தில், நகைச்சுவையில் இரட்டை அர்த்த வசனங்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இன்னும் கமலுடன் இணையாதது மட்டும் இவருக்கிருக்கும் ஒரே குறை.

இவரது புகழ்பெற்ற வசனங்களில் சில... 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' , 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்', 'கோபால்.. கோபால்..', 'நான் எஸ்.ஐ-யா இருக்கேன்..', ' உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா..' 'அட பனியன் போட்ட சனியன்களா...', 'நீங்க வெறும் தாஸா..இல்ல லாடு லபக்கு தாஸா...' , நான் தான் அப்பவே சொன்னேனடா..', ' சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கே..', ' சிவா நீ எங்கேடா இருக்க..' இப்படி நீளும்.....
 
3.ஜனகராஜ்..

கதாநாயக ஆசையோடு திரையுலகில் நுழைந்து நகைச்சுவை நடிகரானவர். பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு. தனித்தன்மையான குரலமைப்பு உடையவர். மிமிக்ரி ஆர்டிஸ்டுகளின் செல்லப்பிள்ளை. 80 களில் கவுண்டமணிக்கு கடும் சவாலாக விளங்கியவர். 80-90 களில் தனி காமெடியா அல்லது கதானாகனோடு இணைந்த பாத்திரமா எதுவென்றாலும்  முன்னணி நடிகர்களின் முதல் தேர்வு ஜனகராஜ்தான்.  இணையத்தில் மனைவி 'தங்கமணி' ஆனது இவரால்தான்..

பாட்சாவில் ரஜினியுடனும், நாயகனில் கமலுடனும் குணச்சித்திர வேடங்களில் நடித்தது இவரது நடிப்புப் பயணத்தில் மைல்கல்.

இவரது புகழ் பெற்ற சில வசனங்கள்.."என்னமோ போடா மாதவா.."  'தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா'.." ” நோ தங்கமணி எஞ்சாய்”.. வேற சில இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.

2.கவுண்டமணி...

'கோயமுத்தூர் குசும்பு' என்கிற சொல்லாடல் கவுண்டரால்தான் வந்திருக்கவேண்டும். கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. சினிமாவில் வாய் ஓயாமல் பேசியே மக்களை கொள்ளை கொண்ட கவுண்டமணி, சிறு வயதில் பேசவே மாட்டாராம். ஒரு வார இதழுக்கு அவரது அக்கா அளித்துள்ள பேட்டியில் இப்படி கூறியுள்ளார்.

"இப்பதான் சினிமாவுலதான் இவ்ளோ வாய் பேசுறான். சின்ன வயசுல பேசவே மாட்டான். பேசினாலும் மெதுவாதான் பேசுவான். சின்ன வயசுல எப்ப பாத்தாலும் பள்ளிக்கூடம் போகாம நாடகம் பாத்துட்டே சுத்திட்டு இருப்பான். பதினஞ்சு வயசுலயே "நாடகத்துல நடிக்க போறேன்" அப்படின்னு அவன் அடம பிடிச்சதால நான்தான் அவன கொண்டு போய் சென்னைல விட்டுட்டு வந்தேன். பின்னாடி பாய்ஸ் நாடக கம்பனியில சேர்ந்து அப்றமா எம்.ஆர்.ஆர்.வாசு, ஒ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடிச்சு அப்ரமாதான் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சான். பாரதிராசா படத்துல நடிச்ச பிறகுதான் வெளிலயே அவன் முகம் தெரிய ஆரம்பிச்சது"

மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர் போன்ற சிகரம் தொட்ட இயக்குனர்களின் முதல் படத்தில் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாதான் காமெடி பாத்திரம் ஏற்றிருப்பார். தமிழ் சினிமாவில் 'நாள் சம்பளம்' என்கிற புதிய அத்தியாத்தை அறிமுகப்படுத்தியது கவுண்டர்தான். கவுண்டமணி -செந்தில் ஜோடி போல் இன்னொன்று இனி தமிழ் சினிமாவில் சாத்தியமே இல்லை என்கிறார்கள்.

கவுண்டரின் புகழ்பெற்ற வசனங்களில் சில... “பத்த வெச்சுட்டியே பரட்டை” ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி’ , ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ , ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’, ‘நான் ரொம்ப பிஸி’, ‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்’,‘பெட்டர்மாஸ் லைடேதான் வேணுமா, கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை’, ‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது.’... இப்படி சொல்லிகொண்டே போகலாம்..


1.வடிவேலு :

மண்மணம் மாறாத தனித்துவமான மதுரைத்தமிழ் தான் வைகைப்புயலில் பலம். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். தமது  நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, இரட்டை அர்த்த வசனமில்லாமல் , பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன் இந்த இரண்டாம் புலிகேசி. பல படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவரது நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். எந்தப்புள்ளியில் கவுண்டரை வடிவேல் முந்துகிறார் என்று பார்ப்போம்.

நாகேஷுக்குப் பிறகு உடல் அசைவு, முகபாவனை கலந்த நகைச்சுவை வடிவேலுக்கு மட்டும்தான் வாய்த்திருக்கிறது. அதனால்தான் கருப்பு நாகேஷ் என்று இயக்குனர் இமயத்தின் மோதிரக்கையால் குட்டுவாங்கினார். சந்திரபாபுக்குப் பிறகு நல்ல குரல்வளம் உடைய சிரிப்பு நடிகர். நாகேஷுக்குப் பிறகு கதாநாயகனாக இமாலய வெற்றி கண்ட ஒரே காமெடி நடிகர். ( திண்டுக்கல் சாரதி எல்லாம் வெற்றிப்படம் என்று சொல்லாதீங்க). நடனத்தில் கூட தனி ஸ்டைல். சூப்பர் நடிகர்களுக்கெல்லாம் 'பன்ச் டயலாக்' வைக்க ரூம் போட்டு யோசிக்கும் சூழலில், இவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் 'பன்ச்' ஆக பரிணாமம் காண்கிறது. வைகைப்புயலில் 'பன்ச்' மட்டும் இல்லை என்றால் தமிழ்கூறும் பேஸ்புக் மற்றும் டிவீட்டர் உலகத்திற்கு வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

கவுண்டரின் ஹைடெசிபல் காட்டுக்கத்தலும்,சகட்டுமேனிக்கு உதைக்கும் வன்முறையும் குழந்தைகளை பயமுறுத்தும் காட்சியமைப்புகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குழந்தைகளையும் வசீகரித்திருக்கிறது வடிவேலின் குரல். என் மூன்று வயது மகனுக்கு நடிகர்களில் வடிவேலு மட்டும்தான் தெரியும். தொலைக்காட்சியில் வடிவேல் தோன்றினாலே "அய்... வடிவ்வ்வேலு.." என்று உற்சாகமாகிறான். சமகாலத் தமிழ் சினிமாவில் வடிவேலு விட்டுச்சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது. அதை யாராலும் நிரப்ப முடியாது...

 உங்களின் அடுத்த இன்னிங்க்ஸ்-க்காக காத்திருக்கிறோம் ...   

-----------------------((((((((((()))))))))))))))))-------------------

டுத்து எனக்குப் பிடித்தப் பதிவுகள்... ( புதிய பதிவர்கள் எங்க தேடினாலும் கிடைக்க மாட்டேங்குறாங்கப்பா.. கடல்லே இல்லையாம்..)

1. உள்ளூர் சினிமாவுக்கும் உலக சினிமாவுக்கும் எப்படி ஹாரி  வித்தியாசம் சொல்கிறார் பாருங்கள். மிகவும் ரசித்த பதிவு.  உள்ளூர் சினிமா, உலக சினிமா டாப் 10 வித்தியாசங்கள்

---------------X--------------

2. மெட்ராஸ்பவன் சிவாவின் சினிமா விமர்சங்களை விரும்பிப் படிப்பேன்..நல்ல நகைச்சுவையாக எழுதக்கூடியவர் என்பது பதிவுலகம் அறிந்ததுதான். வெடி விமர்சனம்  அதில் கிளாஸ்...!

 ---------------X--------------

3. எழுதி மூன்று வருடங்கள் ஆகிறது.. ஆனால் பிட்டு நகைச்சுவைகள் நிறைய இருக்கிறது.. படித்து சிரித்துவிட்டு வாருங்கள் . இளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்

 ---------------X--------------

4. மதுரைத் தமிழன் செய்யும் அதகளம் தாங்க முடியவில்லை..மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?

 ---------------X--------------

5. எங்கள் மண்ணின் மைந்தன். சிங்கையில் நான் சந்திக்க நினைத்தப் பதிவர்களில் பட்டாபட்டியும் , வெளியூர்க்காரனும்  முக்கியமானவர்கள். பட்டா நம்மிடம் இல்லை. வெளியூர்க்காரன் ஏனோ பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். எல்லா பதிவுகளும் பிடிக்கும்.. எதைச்சொல்ல...? 

கையப்புடிச்சு இழுத்தியா..? - பேஸ்புக் போராளிகள் சங்கம்..!

 பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...!

நேரம் கிடைத்தால் எல்லா பதிவுகளையும் படித்துப் பாருங்க..

 ---------------X--------------

6. அதிரடிக்காரன் முத்துசிவா..  என்னைக் கவர்ந்த பதிவுலக எழுதாளுமைகளில் இவரும் ஒருவர். மடைதிறந்த வெள்ளம் போல நகைச்சுவைகள் இவர் பதிவுகில் பாயும்.. அதில் நான் வெகுவாக ரசித்தது.

வைரமுத்து BLOG எழுதுறத பத்தி என்ன சொல்றாருண்ணா.

 இவங்கல்லாம் பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சா...


கவுண்டர் டனார்.. கேப்டன் பனார் 

 ---------------X--------------

7. காமெடி கும்மி. நம்ம ஆளுகதான்... நல்ல தொடக்கம். பின் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்று புரியாமல் விழிக்கிறேன்.

 வெறியான சங்க முதுகெலும்பு.... 

 சொல்லுங்க அண்ணே சொல்லுங்க ...

 ---------------X--------------

8. கும்மாச்சியின்  அனைத்துப் பதிவுகளும் நவரசமானவை.. நகைச்சுவையான நிறைய பதிவுகள் இருக்கிறது. ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வாருங்க.

காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி...18++

 ---------------X--------------

9. வார இதழ்களில் வந்த நகைச்சுவைகளை தொகுத்து எழுதுகிறார்கள்... காப்பி பேஸ்ட் நமக்கு எதுக்கு..? சிரிக்க வச்சா போதுமே..

 ---------------X--------------

10. கலகலப்பாக எழுதுவதற்கு நம்ம அருவா மனோவை விட்டா வேற யாரு....?

பதிவர்கள் வர்க்கமும் ஆளும்வர்க்கமும் காமெடி கும்மி...!

 ---------------X--------------

 மீண்டும் சந்திப்போம்...

வழக்கம்போல பின்னூட்டமிட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்..

அன்புடன்...


மணிமாறன் ..

 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது