07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 22, 2010

அதிரடி செவ்வாயில்....என்ன நடந்தது....?

விடுங்க சார் ....கண்டு பிடிச்சுடலாம் என்று இடிந்து போய் அழுது கொண்டிருந்த தொழிலதிபர் சகாயத்தை தேற்றிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம். ரொம்ப முக்கியமா பாதுகாத்து வச்சிருந்தேன் சார் இந்த தடவை நான் யூரோப் 3 நாள் பிஸினஸ் டூர் போறப்ப என் கூட கொண்டு செல்லவேண்டி பாதுகாத்து வைத்திருந்த பென் டிரைவ் அது. அது மட்டும் இல்லேன்னா என்னால இந்த டூரா நினைச்சு கூட பாக்கமுடியாது. புலம்பிக்கொண்டிருந்தார் அந்த 45 வயது மல்டி பிஸினஸ் மேன்.


கடைசியா நேத்து நைட் 10 மணிக்கு பாத்தேன்...11 மணிக்கு லைட்ட அணைச்சுட்டு தூங்க போகும் போது என் பிளாட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேட்டுச்சு ஓடிவந்து பார்த்தேன். அதே நேரத்தில் என்னோட செக்யூரிட்டி நமசிவாயம் என் கூட வந்து பார்த்தான்...ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சு தேடினோம் யாரையும் காணோம்.அப்புறம் நான் போய் படுத்துட்டேன் சார்.

காலையில் காம்பவுண்டுக்குள் வரும்போதே செக்யூரிட்டி நமசிவாயத்தை பார்த்திருந்தார் விக்ரம். நல்ல திடகாத்ரமான ஆள் 55 வயது என்று சொல்ல முடியாத மனிதர்.. நல்ல விபூதி பட்டையும்...ஊதா நிற சட்டையும் முறுக்கி விடப்பட்ட...வெந்நிற முரட்டு மீசையும் என்று ஒரு அட்டகாசமான உறுதியோடு இருந்தார். இன்ஸ்பெக்டர் என்று கூட பாராமல் நின்று நிறுத்தி கேட்டு உறுதி செய்து அனுப்பினார்.

ஆமாம் அவசரம் என்றவுடம் மப்டியில் வந்தது என் தப்புதானே....முன்ன எல்லாம் செக்யூரிட்டிங்க...போலிஸ் மாதிரியே..சோல்டர் பக்கதுல ஒரு கையிறு கட்டி அதில் விசில் வச்சு இருப்பாங்க..இப்போ எல்லாம் மேக்ஸிமம் ஸ்டைலுக்காக ஒரு கயிறு பட்டையா.... ஒரு போலிஸ் லுக்குக்காக... நமசிவாயமும் ஒரு சிவப்பு பட்டைக்கயிறு அணிந்து இருந்தார். போலிஸ் என்றவுடன் அவர் அடித்த சல்யூட்டில் ரிட்டயர்ட் ஆர்மி வாசனை அடித்தது.

காலையில் நடந்ததை யோசித்துக் கொண்டே.....தொழிலதிபர் சகாயத்தை நோக்கி ...வேறு யாராவது வந்தாங்களா சார் வீட்டுக்கு என்று கேட்டார். இல்ல சார்.... என்றவர்.. ஆமாம் சார்.. கேபிள் டி.வி செக் பண்ற பையன் வந்துட்டு போனான்..இரவு ஒரு 8:30 போல் என்றார் வேகமாக.....! ஓ...அப்படியா....என்று கேட்டபடி...ஆமா அந்த பென்டிரைவ்ல என்னதான் சார் இருந்துச்சு....?தொழிலதிபர் சகாயம் சொல்ல மறுத்து விட்டார்...அது தொழில் சம்பந்தமான ரகசியம் சார். ஓ ..அப்படியா...சரி விடுங்க..என்று சொல்லிய இருபதாவது நிமிடம் கேபிள் பையன் அங்கு வரவழைக்கப்பட்டான்.....

உண்மைய சொல்லு...எங்க வச்சு இருக்க அந்த பென் டிரைவ...என்று விக்ரம் கேட்ட கேள்விக்கு திரு....திரு...வென்று முழித்தான் கேபிள் டி.வி. செல்வம். சார் பென் டிரைவ்னா இன்னா சார்..?அப்பாவியாய் கேட்டதில் அவனில்லை என்று புரிந்து விட்டாலும்...சரி நீ...போ என்று சொல்லிவிட்டு அவனை கண்காணிக்க ஆள் போட்டார் விக்ரம்.

விக்ரம் தொழிலதிபர் சகாயத்தை நோக்கி கேட்டார்.....சார்......... நீங்க தப்பா நினைக்கலேன்னா உங்க மனைவியை நான் விசாரிக்கலாமா....? உங்க இரண்டு பசங்களும்....டெல்லில படிக்கிறதா சொன்னீங்கள்ள...என்று பேச்சை இழுத்தபடியே அவரது மனைவியை விசார்க்கவேண்டும் என்பதை வலியுறுதினார். சார்.. .என் மனைவி எப்படி சார் எடுப்பா...என்று கேட்டதற்கு கொஞ்சம் கடுமையாகவே விக்ரம் சொன்னார்....மிஸ்டர். சகாயம் நான் காவல் அதிகாரி பல கோணத்தில் பார்க்க வேண்டும்...கேன் ஐ சீ யுவர் வைஃப் ப்ளீஸ்.........

38 வயது எஸ்தர் ரூபி என்ற முழுப்பெயர் கொண்ட எஸ்தர் சகாயத்தின் மனைவி இல்லத்தரசிதான். விக்ரம் கேட்ட பலவிதமான கேள்விகளையும் நிதானமாக எதிகொண்டு தெளிவாய் பதில் சொன்னதில் இவருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று தீர்மானித்த விக்ரம். மொத்தத்தில் குழம்பிப் போய் நின்றிருந்தார்........செக்யூரிட்டி நமசிவாயத்தை அழைத்து விசாரித்தார். வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை.....! ஏதோ சப்தம் கேட்டதாக சகாயம் சொன்னாரே....அது என்ன சப்தம் என்று கேட்டதற்கு நிறைய பூனைகள் அங்கு திரிவதாக சொன்னார் நமசிவாயம். " சார் நான் இந்த கேட் கிட்டதான் சார் நைட் முழுதும் இருக்கேன் என்ன தாண்டி யாரும் உள்ள வரமுடியாது சார்" என்று சொன்னதை கேட்டவுடன் ஒரு வேளை தொழிலதிபர் சகாயம் நம்மை குழப்புகிறாரோ என்று கூட சந்தேகம் வந்தது விக்ரமிற்கு...

" சார் உங்க.. ரூமா பாக்கலாமா என்று சந்தேகத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர் விக்ரம்....உள்ளே போய் அவருடைய பெர்சனல் கம்ப்யூட்டர் டெஸ்க் என்று எல்லா இடத்தையும் துலாவிய விக்ரம் பார்வை பளிச்சென்று எதிலோ போய் பதிய....முகம் பிரகாசமானது......சரி சார் நான் ஸ்டேசனுக்கு கிளம்புறேன்....சீக்கிரமே குட் நியூஸ் சொல்றேன்.......பறந்து விட்டார் விக்ரம்.


அன்று இரவே போலிஸ் கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டார் செக்யூரிட்டி நமசிவாயம். மிஸ்டர் நமசிவாயம்...உண்மைய ஒத்துக்கொள்ளுங்க.....எங்க அந்த பென்டிரைவ்..? மரியாதையா சொல்லிட்டா பரவாயில்ல இல்லேன்னா நான் வயசானவர்னும் பார்க்க மாட்டென்...கோபம் காட்டினார் இன்ஸ்பெக்டர் விக்ரம். காலையில் சகாயம் சார் வீட்டுக்குள்ள வரும் போதே கவனிச்சேன்...என்னடா செக்யூரிட்டி தோள்ல கயிறு மட்டும் கட்டியிருக்காரே ஒரு வேல ஒரு ஸ்டைலா இருக்குமோன்னுதான் நினைச்சன்...சகாயம் சார் வீட்டுக்குள்ள கம்ப்யூட்டர் டேபிள் கிட்ட கிடந்த.. விசில பாத்தவுடனேதான் தோணுச்சு வாசல்ல நிக்கிற செக்யூரிட்டி விசிலுக்கு சகாயம் சார் ரூமுக்குள்ள என்ன வேலைன்னு.....சொல்லுங்க.....எங்க இருக்கு பென்டிரைவ்......

நமசிவாயம் பேசத்தொடங்கினார்... சார் என்னய மன்னிச்சுடுங்க.. நாந்தான் அந்த பென்டிரைவ் எடுத்தேன்.....அது எங்க வச்சிருக்கேன்னா.....சொல்லி முடித்த அரை மணியில் பென்டிரைன் விக்ரம் கையில்...! எதுக்கு எடுத்தார்னு விசாரிக்கும் முன்னாடி இதில் என்ன இருக்குன்னு பாத்துடுவோம்.....யாரும் பார்க்காத வகையில் பென்டிரைவ் எடுத்து தனது பிசியில் சொருகி.....கணிணியைத் தட்டிய....விக்ரம்...பென் டிரைவ் கிட்ட போய் டபுள் கிளிக் பண்ணி....விக்ரமின் கண்கள் விரியத்தொடங்கின.........ஓ மை காட்...ப்யூட்டி புல்....வாவ்...வாவ்.....ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான் விக்ரம்...!மெல்ல அதில் இருந்த விபரங்களை காப்பி பண்ணி விட்டு....விண்டோவை மூடிவிட்டு...... நமசிவாயத்தை நோக்கி நடந்தார் இன்ஸ்பெக்டர் விக்ரம்.....

" ஏன் சார்...(மரியாதையோடு) இது உங்களுக்கு இந்த வயசுல எதுக்கு......கேட்டு முடிக்கும் முன் அழுது கொண்டே சொன்னார் நமசிவாயம். சார் நான் நல்ல குடும்பத்த சேர்ந்தவன். என் பையன் தான் சொல்லி இத எல்லாம் செய்யச்சொன்னான்...வயசான காலத்துல அந்த அயர்ச்சி தெரியாம இருக்கணுமேன்னுதான்..இல்லேன்னா தேடி தேடி பார்க்கணும் சார்......அது என்னால முடியாது ...விபரம் எல்லாம் தெரிஞ்சுகிட்டா நானும் ஒண்ணு ஆரம்பிச்சுடலாம்னுதான் சார்.........

அடப்பாவமே...பரிதாபத்தோடு அவரைப்பார்த்தபடி.... சரி உங்களுக்கு ஒரு காப்பி தர்றேன் உங்கள கூட்டிகிட்டு வந்தது உங்க முதலாளிக்குத் தெரியாது.....! நீங்க போய் நாளைல இருந்து வேலைய கண்டினியூ பண்ணுங்க....என்றான் சிரித்தபடி!சட்டையை மாட்டிக் கொண்ட நமசிவாயம் கும்பிட்டபடி....அவருக்கான ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு ஸ்டேசனை விட்டு நடக்க ஆரம்பித்தார்.

விக்ரம்....சிரித்தபடி வந்து மீண்டும் ஆசையோடு கம்ப்பூட்டரைத்தட்டினான்..

குழந்தைத் தொழிலாளர் பற்றி தோலுரித்துக் காட்டும்சாத்தூர் மாக்கான்

நான் யார் என்று சிந்திக்கத் தூண்டும்
GeeVee

மனிதத்தை மிளிர்ச்செய்யும்...பெரோஸ்


வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கும்கோமாளி


புதிய கோணத்தில் குழந்தை தொழிலளர் பற்றி அலசும் மதுரை சரவணன்


பிரிதலை புரிதலோடு செய்யச் சொல்லும்
மனதோடு மட்டும்


ஆண்களின் கண்ணோட்டத்தை மாற்றச் சொல்லும்சிரிப்பு போலிஸ்


கவிதைகளால் ஆளுமை செய்யும்அ....ஆ!


மானுடத்தை மறந்து விட்டது ஏனோ? என கேள்வி கேதும்வெங்கட் நாகராஜ்

LKG அட்மிசன்....பெற்றோரின் மனோ நிலைபிச்சைப்பாத்திரம்


சினிமா..சினிமா..சினிமாதாராபுரத்தான்


தந்தையர் தின வாழ்த்துச் சொல்லணுமா...?கானகம்


கடவுளைக் காப்பாற்றியவனை....பருங்கள்!அடர் கருப்பு


மனிதம் சிலிர்த்தது...சின்னப்பயல்


யூஸ் அண்ட் துரோ...லைஃப் மாற வேண்டும்,,,,!அன்பேசிவம்


கவிதை அரசி..!Mubeen Sadhika


வலைப்பூக்களின் பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. பாவம் நமசிவாயம் ஒரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு, நிறைய நண்பர்களின் தொடர்புகள்...செய்தி மற்றும் கருத்துப் பரிமாற்றம் என்று தொடர்ந்து இயங்கினால் மனைவியை இழந்து மகன் வீட்டில் தனித்து இருக்கும் தமக்கு நேரம் செல்லும் மனசும் சந்தோசமாக இருக்கும் என்று நினைத்தார்..ஒரு நாள் தனது முதலாளி வலைப்பூக்களை துலாவிக் கொண்டு இருந்ததை பார்த்தவர்...அதன் லிங்க்களை பென் டிரைவில் காப்பி பண்ணியதை பார்த்திருக்கிறார். பூனையை விரட்டப் போனவருக்கு ஏற்பட்ட ஆசையில் அந்த பென் டிரவை எடுத்தவர்....காப்பி பண்ணி விட்டு காலையில் வைத்துவிடலாம் என்று நினைத்தார். காலையில் தன் முதலாளி போலீஸை கூப்பிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. வேறு ஏதோ முக்கிய தகவல் இருக்கும் போல என்று பயந்தவர் எப்படியாவது மாலையில் திருப்பி வைத்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்குள்....விக்ரமின் இன்டலிஜென்ட் வலைக்குள் மாட்டிக் கொண்டார்.

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் விக்ரம் மட்டும் என்ன..... அவரும் ஒரு பதிவர்தான்....புதிய வலைப்பூக்களின் தொடர்புகளைப் பார்த்தவுடன் அவர் ஒரு காப்பி எடுத்துவிட்டார்.

டிரிங்க்...டிரிங்க்...ட்ரிங்க்...போனை எடுத்த்த தொழிலதிபர் சகாயம் துள்ளினார்..கிடைச்சுடுச்சா ரொம்ப நன்றி மிஸ்டர் விக்ரம்....ஓ நீங்க ஒப்பன் பண்ணலியா...குட்...குட்....வெரிகுட்...!சரி நான் வந்து வாங்கிக்கிறேன் பென் ட்ரைவ....சரி சார்...வச்சிடுறேன் பை...பை....

துள்ளலுடன்....எஸ்தர் ஐ காட் மை பென் டிரவ் டார்லிங்க்.... ஐ வில் கோ அன்ட் கேட்ச் அப் ஃப்ரம் த போலீஸ்...ன்னு சொல்லிட்டு காரில் தாவியேறினார். அப்பாடா 3 நாள் யூரோப் போன கடுமையான வேலைகளுக்கும் மீட்டிங்க்கும் நடுவுல இந்த வலைப்பூக்கள்தான் நிம்மதி.

அதுவும் நல்ல வலைப்பூக்களை தேடுறதுலேயே நேரம் போயிடுது.... லேப்டப்புல பேவரைட்ல போட்டு வச்சா நாம என்ன படிக்கிறோம் எந்த தளத்துல உலாவுறோம்னு.வீட்டுல வைஃப் எடுத்து பார்க்குறாங்க...அதோட இல்லாம பிஸினெஸ் சம்பந்தமான பேவரிட்டே 100 க்கு மேல...அதனாலதானே பென் டிரைவ்ல தனியா வச்சுக்கிறோம்.

நிம்மதியா டக்குன்னு படிக்கிற மாதிரி நல்ல வலைப்பூக்களை மூணு நாளா தூங்காம காப்பி பண்ணி வச்சு காணமப்போனா....சும்மா எப்டி விடமுடியும்? ஒரு வி.ஐ.பி தொழிலதிபர் நான்......விட்ருவேனா..?

கடைசிவரை இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஏன் சகாயம் இந்த வலைப்பூக்களை காப்பி பண்ணி வச்சார்னு புரியல.....அட உங்களுக்கு புரிஞ்சுதுல்ல...அது போதும்....

சகாயத்தின் கார் சாலையில் பறந்து கொண்டிருந்தது....

பின் குறிப்பு: அடிக்கிறதுக்கு ஆள் அனுப்பிறாதீங்க...எல்லோரும் அருமையான பதிவர்கள்.....ஜாலியா படிச்சு என் ஜாய் பண்ணுங்க பாஸ்....!


அப்போ நான் வர்ட்டா...........!
மேலும் வாசிக்க...

Sunday, June 20, 2010

அறிமுகத் திங்கள்...!

என்னாச்சுப்பா...உலகம் பூரா இன்டர்னெட்ட தட்டுனா...ஆட்டோமேட்டிக்கா வலைச்சரம் பிளாக் பக்கம் போகுதாமே என்னா மேட்டரு?

" சிங்கத்த...சர்கஸ்ல பாத்திருப்ப, கூண்டுக்குள்ள பாத்துருப்ப, சினிமால பாத்திருப்ப, டி.வில பாத்திருப்ப....ஆனா தனியா காட்டுல வேட்டையாடி பாத்திருக்கியா....கோபமா...இரைய அடிக்கிறத பாத்திருக்கியா....பாத்தது இல்லேல்ல.... நேரா வலைச்சரத்துக்குள்ள போ......போய் பாரு....தேவான்னு ஒரு சிங்கம் ஆக்ரோசமா ஆசிரியர் பொறுப்பேற்றுகிட்டு....ஒரு வாரத்துக்கு ஆட்டம் போட நிக்கிற ஸ்டைல பாரு....ஆனா ஓரமா நின்னு பாரு தாங்க மாட்ட....இந்தியா, அமெரிக்கா...யூரோப், சிங்கப்பூரு, மலேசியா, யூ.ஏ.இ, இலங்கை, இன்னும் லிஸ்ட்ல இல்லாத எல்லா நாட்லேந்தும் யார் நெட்ட தொறந்தாலும்....வலைச்சரத்துக்குள்ள தானா வருவாங்க ஹா.......ஹா.....ஹா..........!"

அட..பில்டப் ஒவரா கொடுத்துட்டனா தப்பா நினைக்காதீங்க...அறிமுக சீனுல்ல அதான் இப்படி...(எத்தன தமிழ்படம் பாத்துருக்கோம்...!)

அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கும் இச்சமயத்தில் திரு. சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு... ஸ்ட்ரெய்ட்டா....மேட்டருக்கு வர்ட்டா.....!

வலைச்சரத்தின் நோக்கம் உன்னதமனது. மிகைப்பட்ட நல்ல இடுகைகளை எல்லோருக்கும் எடுத்துச் சென்று சேர்ப்பதோடு....அறிமுகப்படலம் என்ற திருவிழாவின் மூலம் நன்றாக எழுதக்கூடிய பதிவர்களை வெளிச்சத்துக்கும் கொண்டுவருவது ஒரு அற்புதமான விசயம்.

பல பிரபல பதிவர்கள் கம்பெடுத்து சுற்றிச் சென்றுள்ள கலம் அதனுள் மெல்ல நுழைந்திருக்கும் சிறுவனாய் நான்...! என்னால் முடிந்த அளவிற்கு நல்ல படைப்பாளிகளை...வெளிச்சத்திற்கு கொண்டு வரவும்... நல்ல படைப்புகளை இனம் காணவும் முயலுகிறேன் உங்கள் ஆதரவோடு...(அட தொடர் இல்லங்க...இன்ரொக்டக்ஷன் தான் பயப்படாதீங்க.....)

என்னுடைய இடுகைகளில் எனக்கு எல்லாம் பிடிக்கும் என்றாலும்....ஒரு தகப்பனின் வலியை, பொறூப்புகளை மெலிதாய் உணர்த்தும் " இரண்டு இட்லி கொடுப்பா...." எழுதிக்கொண்டு இருக்கும் போதே எனக்கு கண்ணீரை வரவழைத்த ஒரு கட்டுரை.

ஹெல்மெட் மிக அவசியம் அது ஒரு குடும்பத்தில் எவ்வளவு மாற்றங்களை உண்டாக்கும் என்றெண்ணிய போது ஜனித்த" விபத்து..." என்ற சிறுகதை.

பயணங்களின் போது ஏற்படும் நடைமுறை சிக்கலை எண்ணி எழுந்த கோபத்தில் விளைந்த" பணம் தேவையில்லை மனமே போதும் ..." என்ற கட்டுரை.

மது அரக்கனைப் பற்றிய விழுப்புணர்வு சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்....மேல் வர்க்கத்தினர் எல்லாம் விழிப்புணர்வோடு அளவோடு மது அருந்தும் போது எமது மக்கள் விழிப்புணர்வின்றி அதிகம் குடித்து அழிகின்றனரே.....என்ற ஆதங்கத்தில் எரிய விட்ட..."பொன்னத்தாவின் புலம்பல்..." என்று சொல்லிக் கொண்டே சுயபுராணம் வளர்க்க விருப்பமில்லை தோழர்களே....

எம் சக தோழர்களும், தோழிகளும், அதி அற்புதமான படைப்புகளை படைத்துள்ளார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த வலைச்சரம் எனும் பெரு நெருப்பின் துணையோடும், உங்களின் ஆதரவோடும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயல்கிறேன்......!

தேவா...கவுண்ட் டவுன் ஸ்டார்ட்......!அடுத்த பதிவில்.... நீங்கள் சொடுக்குமிடமெல்லாம்...இருப்பார்கள் அற்புத பதிவர்கள்......!


இப்போதைக்கு....வர்ட்டா.....!
மேலும் வாசிக்க...

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் நீச்சல்காரன், ஏற்ற பணியினை சிறப்பாக நிறைவேற்றி, மன நிறைவுடன் இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் வித்தியாசமான முறையில் பல கதா பாத்திரங்களை உருவாக்கி, அவர்களின் மூலம் பல பதிவர்களை அறிமுகம் செய்து, ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 70க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று, மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். இவரை வலைச்சரம் குழுவினர் சார்பில் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நமதருமை நண்பர்,ஜெயிக்கப்பிறந்தவனான தேவா. இவர் WARRIOR என்ற வலைப்பதிவினில் எழுதி வருகிறார். இவர் இது வரை எழுபதுக்கும் அதிகமான இடுகைகள் இட்டிருக்கிறார். பலவேறு தலைப்புகளில் எழுதி வருகிறார். இவரை எண்பதுக்கும் மேலான பதிவர்கள் பின் தொடருகின்றனர். மூன்றே மாதத்தில் இவர் வலையுலகில் ஒரு முக்கிய பதிவர் ஆகி விட்டார்.

நண்பர் தேவா துபாயில் ஒர் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குருக்கத்தி என்னும் கிராமம்.வரலாற்று நாவல்களில் அதீத ஆர்வமுடையவர். தமிழ் மொழி மீது தீராக் காதல் கொண்டவர். திருவாச்கம், தேவாரம், மணிமேகலை,நாலடியார், குறுந்தொகை, திருமந்திரம், சிலப்பதிகாரம் ஆகியவை இவரது வீட்டில் உள்ள சிறு நூலகத்தினை அலங்கரிக்கும் நூல்கள்.


நண்வர் தேவாவினை வருக வருக என வரவேற்று - பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துக என வலைச்சரம் குழுவினர் சார்பினில் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

ஞாயிற்றுக்கிழமை எலி நாடுதிரும்பல்

{அட்மின், கேம்ஸ், அட்டை, கரச்சான்,எலி ஆகிய ஐவர் குழு புதையல் எடுக்க கிளம்புகிறது}

பிலிகிரி கேம்ஸ்: எலி சீக்கிரம் வா கிளம்பனும்
எலி: இருங்க மலையேறுற ட்ராக் சூட் எடுத்துக்கிறேன்.
பிலிகிரி கேம்ஸ்: எலி நாம்ம புதையல் எடுக்க காட்டுக்குள்ள போகலை. நேர பிரவுசிங் சென்டர் போயி பாஸ்வேர்ட் கண்டுபிடுச்சு புதையலை டவுன்லோட் செய்யப்போறோம் அவளவுதான்.
எலி: ஓ அப்படியா! ஓகே 
பிலிகிரி கேம்ஸ்: அப்புறம்  முக்கியமான விஷயம் நாம புதையல் எடுக்கப் போறவிஷயம் சாவிக் கட்டைக்குத் தெரியக் கூடாது. புதையல் நம்ம கைக்கு வந்தபின்னாடி அத வச்சே இந்த சாவிக்கட்டைகிட்ட இருந்து விடுதலை வாங்கணும்.
அட்டை:சரி அந்த க்ளுவை பிரிச்சுப் படிங்க 
எலி: ம் மோதல் கேள்வி பொங்கல் வைக்கும் பானை உடைந்தால் பதிவர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்?
எ) உடைந்த பானையை செலோடேப் போட்டு ஒட்டி பொங்கல் வைப்போம்
பி) பானை உடைந்ததற்குக் காரணம் அரசு தான் என்று அறிக்கைவிட்டுவிட்டு வேலை செய்யாமல் நிவாரண நிதிக்காக காத்திருப்போம் 
சி) பொங்கல் வைப்பதை நிறுத்திவிட்டு கேசரி செய்வோம்
டி) பானை உடைந்த அனுபவம் என்று பதிவேழுதுவோம்  ஆளுக்கு ஒரு பக்கம் போய் தேடுங்க 

"நான் தேடுன வரைக்கும் பதில் கிடைக்கல ஆனால் திருடன் மண்டை உடைக்கிற மாதிரி ஒரு பதிவு கிடைச்சுருக்கு "
"இங்க பாருங்க பொங்கல் மாதிரி ஒருத்தர் பின்னூட்டத்திலே படையல் வச்சுருக்காரு சபாஸ். "
"என்னப்பாருங்க பொங்கல் போனா என்ன இதோ பாட்டி வடை இருக்கே ஏதோ திங்க கிடைச்சதேனு போங்கப்பா!"
"எனக்கென்னமோ அறிக்கை விடுறதுதான் சரின்னு படுத்து காரணம் நம்ம பதிவர்கள் எல்லாம் பெரிய அரசியல்வாதிகள்ப்பா"
"யாராவது பானை உடைஞ்சா தண்ணிக் கொட்டும்னு யோசிச்சேங்களா? தண்ணியப் பத்தி பார்த்தபின்னாடி தான் தெரிஞ்சுச்சு"
எலி: சரி கடைசிய பதிலென்ன?  ஒன்னு செய்வோம் பாயிண்டரம்மாவுக்கு போன் பண்ணி கேட்போம்....  
//பாயிண்டரம்மா: எனக்குத் தெரிஞ்சு பொங்கல் வைப்பதை நிறுத்திவிட்டு சுடுதண்ணி வைக்கலாம்.  //
எலி: ம் பதில் ஆப்சன் இல்லையே! பதில் ஒரே கஷ்டமா இருக்கே பேசாம இதையே ஒரு பதிவாப் போடலாமா? 
அட்டை:கண்டுபிடுச்சுட்டேன் பதில் 'டி' ...[எண்டர்].
கரச்சான்:ம் அதான் கரெக்ட் அடுத்த கேள்விய படிங்க 
எலி: தமிழில் மொத்தம் எத்தனைப் பதிவர்கள் உள்ளனர்?
எ)ரெண்டு
பி)இருநூறு
சி)இரண்டாயிரம்
டி) தெரியாது.
"நான் இப்பவே சொல்லிட்டேன் நான் கணக்கில வீக்கு. இந்த மாதிரி நல்ல பதிவு முப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா நான் படிச்சிருப்பேன்."
"எனக்குத் தெரிஞ்சு ஒரு பதிவர் இந்தாங்க இவரும் பதிவர்தான் "
"இவர் சொல்றமாதிரி இத்தனை தினம் இருக்கு ஆனால் பதிவருக்குனு தனியா தினம் இருக்கா? அப்புறம் எப்படி கண்டுபிடிக்கிறது."
எலி: எனக்கென்னமோ இது கஷ்டமா கேள்வியாத்தெரியுது அதனால சாட்டிங் செய்து கண்ட்ரோல் சார்கிட்ட கேட்போம். ....  **சார் இந்த கேள்விக்குப் பதிலை ஒரு யூஸ் அன் த்ரோ மெயிலில் அனுப்புங்க சார் ***
அட்டை:மெயில்ல அவருக்குத் தெரியாதுன்னு அனுப்பியிருக்கார் அப்ப தெரியாதுதான் பதில் .[எண்டர்]...ம்
கரச்சான்: அதான் கரெட் சபாஸ் அடுத்த கேள்வி,

பிலிகிரி கேம்ஸ்: கடைசி கேள்வி சரியா பதில் சொன்னா புதையல் இல்லாடி எல்லாம் போச்சு
எலி: பதில்களற்ற அடங்காத கௌரவ இலக்கியம் எது?
"எப்பா கேள்விக்கு களு எதுவும் கிடையாதா! அப்ப முடியாதுடா சாமி. மரண கேள்விடா "
"ம் தேடுங்க இதுக்கு பதில் கிடைச்சாத்தான் புதையல் விடாதீங்க.."
"ம் இலக்கியம் பத்தி இவரு அழகா சொல்லிருக்காரு இதா இருக்குமோ"
"இங்க பாருங்க பதில்களற்ற மடல் பத்தி நிறைவா இவர் சொல்லிருக்கார் இதையும் படிங்க "
"அடங்காத கவிதைய இவர் சொல்லிட்டாரு இதையும் படிங்க "
"கௌரவம் பற்றி புட்டு புட்டு வச்சுட்டாரு நம்ம பதிவர் இதையும் படிங்க "
எலி: ஏங்க பதில் இந்த நாலுல தான் இருக்கும். யோசிங்க ...
அட்டை:எனக்கென்னமோ இதுவாத்தான் இருக்கும் [எண்டர்]..
"ஐயையோ.. கம்ப்யூட்டரே எரர் ஆயிருச்சே! புதையல் போச்சா!"
"அட்டை புதையலை கோட்டை விட்ட "
"டேய் எதடா பதிலாக் கொடுத்த?  "
அட்டை: நான் ... நான் ..இலக்கியம் அப்படிங்கிறதால இந்த சோப்பு டப்பாவ கவிதைனு நினைச்சு கொடுத்தேன் அதான் டோட்டலா போச்சு!
"போடா  இவனே புதையல் எடுக்க வந்த நமக்கு டப்பாக் கூட மிஞ்சலையே!  இனி இந்த சாவிக் கட்டைய எப்படி மிரட்டுறது! போச்சு எல்லாம் போச்சு! அந்த பேப்பர்ல வேற ஏதாவது எழுதியிருக்கா?"
"ம்.. இந்த கடிதத்தின் அஞ்சல் செலவு பராம்பரிப்பு  http://tamilpoint.blogspot.com இந்த தளத்திற்கு வந்தால் இலவசமாக படிக்கலாம்."
"ச்சே! எதுக்கெல்லாம் விளம்பரம் கொடுக்கிறதுன்னு வெவஸ்தையே இல்லை. கட்டையால அடிப்பேன். "
"நான் கடைசியில செத்து பிழைச்சவன்டானு இவரப் போல பதிவு போடணும்னு நினைச்சேன் ஆனா செத்து தொலைஞ்சவனா ஆக்கிட்டேயே!"
"நான் இவர் சொல்ற டிப்ஸ் படி பிரபல பதிவராக ஆசைப்பட்டேனே இனி என்ன செய்ய? சாவிக் கட்டையோட கொடுமையிலேயே போக வேண்டியதுதான்."
"இது போல வித்தியாசமா நிறைய பாட்டை வச்சு கதை எழுத ஆசைப்பட்டேனே இப்ப என்ன செய்ய?"
"இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க ஆளில்லையா? இது போல ஒரு ஹீரோ இனி பிறந்து வருவானா?"

[[[க்ளைமேக்ஸ்சில் மழை எதிர் பார்த்து வராததால் மழைய பத்தி எல்லாரும் இங்க படிச்சுக்கோங்க - இப்படிக்கு கலை இயக்குநர்]]]

சாவிக் கட்டை: என்ன மேன் பார்க்குறீங்க! ஹீரோ வருவான்னு பாத்தா இந்த ஜீரோ கோட்டை சாவிக் கட்டை வந்துட்டான்னு பார்க்கிறீங்களா! 
கவலைப் படாதீங்க சாவிக் கட்டை திருந்திட்டான். நான் உங்களுக்கு முன்னாடியே எங்க ஆட்களை வச்சு புதையலையும் எடுத்துட்டேன்.
"எடுத்தாச்சா!"
சாவிக் கட்டை: ஆமா, அந்த புதையல்குள்ள பஸ்ட் ஸ்டாண்டர்ட்லயிருந்து ப்ளஸ் டு வரையுள்ள தமிழ் புக்கு இருந்துச்சு .
திரைக்கை:ஆமா நானும் அவரும் எழுத்துக் கூட்டி படிச்சு தமிழ் கத்துகிட்டோம். அதைப் படிச்சதும் உங்க பதிவுகள் மேல இருந்த வெறுப்பு போயி பொறுப்பு வந்திருச்சு. படிச்சுப் பார்த்ததில உங்க பதிவெல்லாம் டாப்பு 

திரைக்கை: இதைப் போல புதுப் பதிவர்களின் பதிவு இங்கிலீஸ்லையும் தமிழையும் இருப்பதால் ஈசியா படிச்சுட்டோம்.
திரைக்கை:அப்படியே தப்பு விட்டாலும் இந்த பதிவைப் படிச்சு திருத்திக்கிட்டோம். 
சாவிக் கட்டை:எல்லாத்துக்கும் காரணம் நம்ம எலிதான். எலிகிட்டையே கேளுங்க. நாங்க உங்க ஒப்பந்தங்களைஎல்லாம் எடுத்துட்டு வந்து தந்திருறோம். நல்ல நல்ல பதிவுகளெல்லாம் போடுங்க. நாங்களும் பதிவு எழுதுறோம். இப்போதைக்கு போயிட்டு வாறோம் [இருவரும் சென்று விடுகிறார்கள்.]
XXXXXXXXXXXXXXXXXXXXXXXX   
"எலி, நீ என்ன பண்ண? "
எலி: நீங்க என்னை பதிவு போட சொன்னீங்களே அதனால சந்தையிலிருந்து ஸ்கூல் புக்க வாங்கி காபி பேஸ்ட் பண்ணலாம்னு வாங்கிகிட்டு வரவழியில சாவிக் கட்டை ஆட்கள் என்னை மறிக்க, நான் அதான் புதையல் என்று உரைக்க, அதை அவர்கள் பறிக்க, நான் ரசிக்க வீட்டுக்கு வந்திட்டேன். கடைசியா  அந்த புத்தகம் உண்மையிலே அவர்களுக்கு ஒரு புதையல்தான். உண்மையான புதையலை விட உண்மையான மனிதர்கள் விலை மதிப்பற்றவர்கள் அது இங்க நடந்திருச்சு. அதனால இனி எல்லாருக்கும் மகிழ்ச்சி.
பிலிகிரி கேம்ஸ்: இந்தாங்க உங்களுக்குச் சேர வேண்டிய பேனா!  
எலி:ரொம்ப நன்றி! நானும் கிளம்புறேன்! அடிக்கடி இந்த ஊருக்கு வாறேன்.
.
"பேனாவ எடுத்துட்டு பேப்பர விட்டுட்டுப் போறேங்களே"
எலி:பேப்பர் உங்களுக்கு

பிடித்திருந்தால் ஆதரிக்க http://www.tamilish.com/story/281716/
எடிட்டர் கார்னர்:


திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே
செவ்வாய்க்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே
புதன்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே
வியாழக்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே
விளம்பர இடைவேளை
இங்கே
சனிக்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே

இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர.

அந்த பிளாக்கர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில, ப்ளாக்ஸ்பாட் காம்ப்ளெக்ஸ் கடைசி ஏரியா நம்மளோடது தான் 

http://neechalkaran.blogspot.com
http://ethirneechal.blogspot.com
ரெண்டாம் நம்பர் கூகிள் பஸ்ல ஏறி இந்த முகவரிய யார்கிட கேட்டாலும் சொல்லிருவாங்க மறக்காம வாங்க, வலைச் சரத்திலிருந்து விடை பெறுகிறேன்.
-நன்றியுடன் நீச்சல்காரன்
மேலும் வாசிக்க...

Saturday, June 19, 2010

சனிக்கிழமை எலி சேட்டை

எலி: எம்மா இந்த புறாவா வறுக்கவா? இல்ல பொரிக்கவா?
பயிண்டரம்மா: புறாவா டேய் எலி இது மைனா டா 
எலி: அப்படியா, டெக்னாலஜி ரொம்ப வளர்ந்திருச்சுமா புறாவா அனுப்பினா பொரிச்சு தின்னுருவோம்னு எவனோ மைனாவில தூது அனுப்பியிருக்கான். இருந்தாலும் பரவாயில்ல மைனாவ பிரியாணி போட்டுருவோம்.
பயிண்டரம்மா: தூதா! அது என்னனு சொல்லி?
எலி: இருங்க வாசிக்கிறேன், "அன்புக்குரிய வலைச்சர ஆசிரியருக்கு,
நான் ரொம்ப நாளா வலைச்சரத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். சமீப காலமாக நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று ரீமிக்ஸ் என்கிற பேரில் இந்த வார ஆசிரியர் போடும் மொக்கையால் அட்கொள்ளா துயரில் டெம்ப்ரவரியாக படிப்பதை நிறுத்தியுள்ளேன். அதனால் அந்த ஆசிரியரை ஞாயறு மாலைக்குள் பணி நீக்கம் செய்ய வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். உடனே என்னக் காரணம் என்று நீங்கள் கேட்டால் மேலே படிக்கவும்.
ஏழாவது அறிவு என்று ஒரு பதிவர் அருமையாக கவிதைகளை எழுதுகிறார், சிறிய வரிகளில் சிறப்பாக சொல்லும் இவரை அறிமுகப்படுத்தவில்லை.
 மன விழி என்று குறுகிய வரிகளில் நிறைவாக மனதில் தங்கும் வரிகளை எழுதும் இவரையும் அறிமுகப்படுத்தவில்லை
 அனுபவ சித்தன் குறிப்பு என்று சிறு சிறு கவிதைகளை பெரிய ரசனையோடு எழுதும் இவரையும் அறிமுகம் செய்யவில்லை 
தமிழனின் வாசல் என்று எட்டு வரிக்கவிதையை நளினத்தோடு எழுதும் ஒரு கவிஞரையும் அறிமுகம் செய்யவில்லை.
கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற மொழியோடு வார்த்தைகளால் நம்மைக் கட்டிப்போரும் ஒரு பதிவரையும் அறிமுகப்படுத்தவில்லை.
ஒற்றைச் சிறகின் பயணம் என்று வெகுநாட்களுக்கு முன்பு வரை சிறப்பாக எழுதிவந்த ஒரு பதிவரை அடையாளப்படுத்தவில்லை.
எளிய தலைப்புகளில் வலிய கருத்துக்களைச் சொல்லும் இந்த பதிவரையும் இனம் காட்டித் தரவில்லை.
ஆகையால் இவ்வார ஆசிரியரை கடுமையாக ......."
அட இது அட்ரஸ் மாறிவந்த கடிதாசி, நாங்கூட நமக்கு வந்ததோனு நினைச்சுட்டேன். 
பயிண்டரம்மா: ஆனால் இவர் குறிப்பிடுற பதிவர்கள் எல்லாம் சூப்பரு. சரி சரி மைனாவிலையே கட்டிவிடு சேர வேண்டிய இடத்தில சேர்ந்தா சரி.
எலி: அம்மா கட்டிவிட்டா அப்ப மைனா!
பயிண்டரம்மா: கட்டிவிடாலேனா நைனாகிட்ட சொல்லிருவேன்!  

{ப்ளாக்பட்டி ஊர் போஸ்ட் மாஸ்டரிடம் போன் செய்து எலி கேட்கிறார்}
எலி: ஏப்பா போஸ்ட் மாஸ்டரே! வரிஅச்சு நகர்லயிருந்து ஏதாவது கடிதாசி வந்துச்சா?
போ.மா.: இல்லையே சார் ரெண்டு நாளா எந்த கடுதாசியும் வரலையே! சபாஸ் சூப்பரு.
எலி: ஹலோ இது போஸ்ட் ஆபிஸ்தான, எதுக்கு சபாஸ்?
போ.மா.:சாரி சார், கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன் இந்த மாணவியப் பத்திப் படிச்சுகிட்டுயிருந்தேன் அதான்.
எலி: சரி சரி கடுதாசி வந்தா அனுப்பிவையுங்க 
போ.மா.:திருந்தவே மாட்டேங்களாட! ஒருதடவ சொன்னா தொரியாதா?
எலி: இங்க பாருங்க நான் என்ன கேட்டேன்னு இப்படி திட்டுறீங்க ?
போ.மா.:அய்யோ சாரி சார், விபத்துக்களைப் பத்திய அருமையான பதிவைப் படிச்சதும் கொஞ்சம் எமோசன் ஆகிட்டேன்.
எலி: சரி அப்படியே உங்க ஆபிஸ்ல எல்லார்கிட்டயும் சொல்லிருங்க 
போ.மா.:அதுக்கு சட்டத்தை தயிரியமா அனுகுங்க 
எலி: சம்மந்தமில்லாம பேசிறீங்க எதுக்கு சட்டத்தை அணுகனும் இது குடியுரிமைதானே
போ.மா.:அய்யோ நான் உங்கள் சொல்ல சார், இணைய பாதுகாப்புப் பத்தி படிச்சேன்ன அதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.
எலி: ஒக்கே என்ன வச்சு காமெடி பண்ணலைலே 
போ.மா.:பார்த்தா பாவமாத் தான் இருக்கு 
எலி: எனது பாவமிருக்கா சார் எனக்கு வந்தா கடுதாசிய படுச்சு பார்த்துட்டேங்களா
போ.மா.:சார் திரும்ப சாரி நான் மதுரை பெரியாஸ்பத்திரி பத்திப் படிச்சேனா அதான் கொஞ்சம் எமோசன் 
எலி: சார் ரொம்ப கோவம் வரவைக்காதீங்க சார்
போ.மா.:நீ கோவப்பட்டால் நானும் கோவப்படுவேன்.
எலி: இப்ப என்ன சொல்லப் போறீங்க 
போ.மா.:மறுபடியும் சரிசார் இந்த முன்னேற்ற பதிவைப் படிச்சதும் எமோஷன் ஆகிட்டேன்.
எலி: சரி வெண்ணை
போ.மா.:இங்க பாருங்க எலி, இப்படியெல்லாம் திட்டுனா உங்க கடுதாசிய கொடுக்க மாட்டேன்.
எலி: சார் நானும் ஒரு நல்ல கவிதைய படிச்சுட்டு அதோட பேரத்தான் சொன்னேன்.



கண்ட்ரோல் பாண்டியன்: என்ன எலி நம்ம பதிவர்களோட பதிவெல்லாம் வாசிச்சேங்களா?
எலி: ஆமா எதிரின்னு ஒரு பதிவப் படுச்சேன் உடனே சாவிக் கட்டைய மன்னிச்சுருலாம்னு தோனுச்சு
கண்ட்ரோல் பாண்டியன்: அய்யா! வில்லன் இல்லாட்டி கதை நகராதுய்யா  அந்தப் பதிவு நிஜ வாழ்க்கைக்குப் போருந்தும்ய்யா
எலி: அப்புறம் திடீர் உறவுகளைப் பத்திப் படிச்சேன்யா அந்த திரைக்கைய நண்பனா ஆக்கிகலாமனு யோசிச்சேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: ஆக்கிக் கலாம் ஆனா திரைக்கை உன்னை புரிஞ்சுக்கனும்ல
எலி: அடுத்து கட்டபொம்மனைப் பற்றிப் படித்தேன்ய  அப்படியே பாஞ்சாலங்குறிச்சிக்கு ஓடிருலாம்னு நினைச்சேன்யா
கண்ட்ரோல் பாண்டியன்: ஏப்பா எலி நம்ம கதைய முடிச்சுக் கொடுத்துட்டு என்கவேனாம் போ மகராசா
எலி:  ஞாபகக் குறிப்பைப் பற்றிப் படிச்சேன்யா அந்த ஊருக்குப் போகலாம்னு நினைக்கிறேன்யா 
கண்ட்ரோல் பாண்டியன்: இங்க பாரு நீ நல்ல நல்ல பதிவெல்லாம் படிக்கிற சரி ஆனால் நம்ம கதைக்கு ஏத்தமாதிரி மட்டும் நடந்துக்கோ 
கரச்சான்: எலி வரிஅச்சு நகரிலிருந்து கடிதாசி வந்திருச்சு! வந்து பாரு.
எலி: சீக்கிரம் பிரி எங்க மாமனாரு என்ன சொல்லிருக்காருன்னு படி!
கண்ட்ரோல் பாண்டியன்: எ எலி உனக்கு இன்னம் அந்த நினைப்பு இருக்கா!
எலி: ஆமா ஒரு கதையினு இருந்தா எப்படியும் க்ளைமேக்ஸ்ல ஒரு ஹீரோயின் எனக்குத்தான். அப்புறம் ஒரு டுயட் அப்புறம் இது மாதிரி கலாய்க்கிற கவிதை எல்லாம் எழுதணும் அப்படின்னு காதல்கோட்டை ரேஞ்சுக்கு நினச்சுகிட்டுயிருக்கேன்.
கண்ட்ரோல் பாண்டியன்: உண்மையில இந்த கடுதாசியில் அந்த சாவிக் கட்டை தேடுற புதையலுக்கான பாஸ்வேர்ட் க்ளு இருக்கு இங்க பாரு எலி உன்னோட சேட்டையெல்லாம் மூட்டைக்கட்டி வச்சுட்டு எங்களோட சேர்ந்து அந்த புதையல எடுக்கிற வழியப் பாரு அப்பத்தான் உனக்கு அந்த பேனாவைத் தருவோம்.
கண்ட்ரோல் பாண்டியன்: சரி அந்த வரிஅச்சு தலைவர் அட்மின்னுக்கு நாளைக்கு நம்ம ரெண்டு ஊரும் சேர்ந்து புதையலை எடுக்கலாம்னு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க 

புதையல் வேட்டை நாளையுடன் நிறையும்...


எடிட்டர் கார்னர்:


திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே செல்லவும்
செவ்வாய்க்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே செல்லவும்
புதன்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே செல்லவும்
வியாழக்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே செல்லவும்

ப்ளாக்பட்டியை சேர்ந்த கதாப்பாத்திரங்கள்.
எலி
கண்ட்ரோல் பாண்டியன்
அட்டை
கரச்சான்,
பயிண்டரம்மா:


ஜீரோ கோட்டை சேர்ந்த கதாப்பாத்திரங்கள்.
சாவிக் கட்டை
திரைக்கை


வரிஅச்சு நகரச் சேர்ந்த கதாப்பாத்திரம்
அட்மின்
இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர
-நீச்சல்காரன்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது