07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 2, 2011

கவிதைகளா எழுதுறாங்களாமாம்..!!

நானும் புதுசா பண்ணுவோம் புதுசா பண்ணுவோம்னு எங்கெங்கோ தேடி திரிஞ்சாலும் மைண்ட்ல ஒரே வாய்ஸ் தான். கவிதைகள விட்டுடாதடா கூர்னு கூவிகிட்டே கிடக்கு. இருந்தாலும் கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம்னு முதல்ல நான் நினைத்திருந்தாலும் என்ன செய்ய கவிதை என் கூடவே புறந்திடுச்சே.! என்ன தான் நான் கவிதைய தூக்கி எறிய பாத்தாலும் நான் ஒரு அதிரிபுதிரி கவிஞன் ஆதலால் கவிதை என்னை விடமாட்டேங்குது. ஹி ஹி.

கவிபாரதி- மறந்ததோடு விட்டுவிடு என்னும் தலைப்பின் கீழ் ஒரு காதல் கவிதையை எழுதியிருக்கிறார். இயல்பாக அமைக்கப்பட்ட வார்த்தைகளில் இந்த கவிதை மிக சிறப்பு என்று சொல்லமுடியாவிடிலும் சிறப்பு என்று சொல்லிக்கொள்ளலாம்.

ja.franklin kumar- சிதைவுகள் என்று அவர் எழுதியிருக்கும் இக்கவிதையை கண்டிப்பாக அனைவரும் படித்தாக வேண்டும். கோபத்தை பக்காவாக சொல்லியிருக்கிறார். படிக்கையில் கோபம் புலப்படாத வகையில்-அதை கோபம் என உணரவைத்திருப்பது சிறப்பு.

நீலநிலா- நீல நிலா இதழில் வெளியான கவிதைகள் என்னும் தலைப்பில் சிறு சிறு கவிதைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு படைப்பாளிகளின் கவிதை இது.

விஜய்- கல்லூரிப் பிரிவு என்னும் கவிதை தலைப்பில் கல்லூரியின் இறுதி கனத்த வார்த்தைகளை குறிப்பிடுகிறார். மிக்க சிறப்பு. ஒருமுறை என் கல்லூரியின் வாழ்க்கை ஞாபகம் வருகிறது.

புலவர் சா இராமானுசம்- எதையும் தாங்குவோம் என்னும் தலைப்பின் கீழ் அருமையாக கச்சத்தீவினை கொடுத்ததன் கோபத்தை வெளிப்படுத்துகிறார். மரபு வழியில் அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது வார்த்தைகள்.


அம்பாளடியாள்- அக்கா அக்கா மயிலக்கா என்னும் இக்கவிதை ஒரு பாடல் போல இருக்கு. சிறியதாக இருந்தாலும் படிக்க நல்லாவே இருக்கு. இத படிச்சிட்டு ஒரு குத்தாட்டம் கூட போடலாம். ஹி ஹி. 

யாழினி- நீ மட்டும் சொந்தம் என்னும் கவிதையின் தனக்கு யாருமே சொந்தமில்லை நீ மட்டும் தான் சொந்தம்னு அன்பு மழையை பொழியிராறு. காதல் வந்தாலே இப்படி ஆயிடும் போலிருக்கு.


உமர்- இவரு ரொம்ப குறிப்பிடத்தக்கவர். 2003ல வலைப்பூ தொடங்கி விட்டுட்டார். பல வருடங்களுக்கு பிறகு இந்த 2011ல அவருக்கு ஏதோ தோணியிருக்கு போல. நமக்கும் வலைப்பூ இருக்கனு வந்துட்டார். சீறப்படும் சமச்சீர் கல்வி என்னும் தலைப்பில் ஜெ., ஆட்சியில் சமச்சீர் கல்வி நிலை குறித்து பேசுகிறார்.


அருள்- சிகரெட் புகைவழியே வந்தேறிய பாடல் என்னும் தலைப்பில் அருமையான கவிதை. கிட்டதட்ட இதில் எல்லா கவிதைகளும் அதீத நேர்த்தியோடு இருக்கிறது. 


கீதா- பரிதாப வாழ்க்கை யாருக்கடி.? என்னும் கவிதையில் இக்கால குழந்தைகள் இழக்கும் சந்தோசங்களை பற்றி விவரிக்கிறார். அப்படியே என்னை மெய்சிலிர்த்து என் கிராமத்துக்கு அழைத்து சென்றுவிட்டார். கண்டிப்பாக பாருங்கள்.


இப்போது இதோட முடிச்சுகிடுறன். மேலும் ஒரு சில கவிஞர்களோடு உங்களை நாளை சந்திக்கிறேன். நன்றி.!!


''வாழும் வாழ்க்கை உன் வெற்றியை கொண்டாடி வாழாதே, தோல்விகளில் இருந்து மீண்டு வந்து வாழு''-சே குவேரா

10 comments:

  1. Your post is very useful to know the so many new blog

    ReplyDelete
  2. கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்கிறீர்கள், வாழ்த்துக்கள் !
    சே குவாரா சொல்லியதை சொல்லி முடிப்பதும் அழகு

    ReplyDelete
  3. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தம்பீ
    வலைச்சரத்தில் என்னையா--?
    அறிமுகப்படித்தி யிருக்கிங்க--
    நீங்க நல்ல குறும்புங்க
    வயதாலதாங்க நான்
    மூத்தவன் வலைப்பூவிலே என்
    புலவர் குரல் மிகவும் சின்னதுங்க
    எப்படியோ பழி வாங்கிட்டிங்க
    நன்றி தம்பீ நன்றி

    அன்பு அண்ணன்
    இராமாநுசம்

    ReplyDelete
  5. கவிகளுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சே ன் வார்த்தைகளோடு முடிப்பது அழகு.புதியவர்களோடு கைகள் கோர்த்துக்கொள்வோம் !

    ReplyDelete
  7. வித்தியாசமான அறிமுகங்கள் சகோ.

    பல படைப்பாளிகள் புதியவர்களாகவும், இது வரை அறியப்படாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

    உங்கள் முயற்சிக்கு நன்றி மாப்ளே.

    ReplyDelete
  8. en kavidhaikku thaangal koduthirukkum vimarsanathirkku nandri :)

    ReplyDelete
  9. வலைச்சரத்தில் மீண்டுமொரு அறிமுகம். மிகவும் மகிழ்வோடு நன்றி கூறுகிறேன். மற்ற வலைப்பூக்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வலைச்சரத்தில் என்னை அறிமுகம்செய்த
    தங்களுக்கு ஒரு நன்றி சொல்லக்கூட
    இத்தனை தாமதமா!... என்னுள் நானே இதற்காகக்
    கொவித்துக்கொள்கிறேன் சகோதரரே.... தங்களுக்கு
    நான் எப்படி நன்றி சொல்வேன்!!!!.....இருந்தும்
    என்கவிதைமீது தாங்கள் காட்டிய கவனத்திற்கு
    என் மனப்பூர்வமான நன்றிகள்.வாழ்க என்றும் வளமுடன்..........

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது