07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 29, 2014

சிகரம் பாரதியிடம் அ.பாண்டியன் ஆசிரியப் பொறுப்பினை ஒப்படைக்கிறார்

அன்பின் சக பதிவர்களே ! 
வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த அ.பாண்டியன்  அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவர் கீழ்கண்ட தலைப்புகளில் எட்டு் பதிவுகள் எழுதி உள்ளார்.

இணைந்தே தொடங்குவோம்,  புதிய தடங்கள், சூரியனுக்கு டார்ச் அடித்துப் பார்த்திடலாமா , கடல் கடந்தும் வளரும் தமிழ், கடல் கடந்தும் வளரும் தமிழ் - 2 , வலையுலகில் ஆசிரியர்கள், தொடரும்   நட்புகள், தொடர்கிறது தொடரும் நட்புகள்.                                                                    

அறிமுகப் படுத்திய பதிவுகள்            : 90
அவருக்கு கிடைத்த மறுமொழிகள் :   329
 பக்கப்பார்வைகள்                                     :  1522

திரு ஆ,பாண்டியன் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க  சிகரம் என்னும் தளத்தில் எழுதி வரும் சிகரம் பாரதி இணக்கம் தெரிவித்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

துரைசாமி லெட்சுமணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சிகரம்பாரதி ஆகிய இவரது பிறப்பிடம்  இலங்கையின்  இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமான மலையகத்திலுள்ள கொட்டகலை என்னும் இடமாகும். தரம் 13 வரை கல்வி கற்றுள்ள இவர் பல்கலைக்கழக 
 வாய்ப்புக் கிடைத்தும் அதை ஏற்காமல் கொழும்பிலுள்ள ஈஸ்வரன் என்னும் தனியார் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் மூலப்பொருள் கட்டுப்பாட்டாளர் உதவியாளராக [Material Controller Assistant] பணி புரிந்து வருகிறார்.

 தமிழகத்தில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னாள் இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற்காக கூலிகளாக அழைத்து வரப்பட்ட இவரது  சமூகத்தின் அவலத் துயர் துடைத்து சமூகத்தை முன்னேற்றுவதே இவரது  வாழ்நாள் இலட்சியமாகும். 2012 முதல் வலைப்பதிவுகளை எழுதி வருகிறார். .  அரசியல்,இலக்கியம், விளையாட்டு, நகைச்சுவை , சுயமுன்னேற்றம் என பன்முகப்பட்ட விடயங்களையும் 
பலித்து வருகிறது.

சிகரம்பாரதி" என்னும் பெயரிலேயே பலராலும் அறியப்பட்டுள்ள இவர்  அப்பெயரிலேயே தொடர்ந்தும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என எண்ணுகிறார்.

இலங்கையின் பல்வேறு தேசிய தமிழ் நாளிதழ்கள்  சஞ்சிகைகளில் இவரது
எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளன.

இவரைப் பற்றிய  மேலதிக விபரங்களுக்கு: 

அகவை ஒன்பதில் சிகரம்!



 ” சிகரம் “ வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....

நல்வாழ்த்துகள் அ,பாண்டியன் 

நல்வாழ்த்துகள் சிகரம் பாரதி .

நட்புடன்  சீனா 

15 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் தனது பணியினை சிறப்பாக செய்து விடைபெறும் அன்பின் பாண்டியன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்..

    தொடர்ந்து - பணியேற்க வரும் அன்பின் சிகரம் பாரதி அவர்களுக்கு நல்வரவு..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்..... நண்பர் அ.பாண்டியனுக்கு.
    வரவேற்பு...... நண்பர் சிகரம் பாரதிக்கு.

    ReplyDelete
  4. வணக்கம்

    சிறப்பாக வலைச்சரப்பணியை செய்து முடித்த திரு பாண்டியன் சகோதரன் அவர்களுக்கு நன்றிகள் பல..அத்தோடு புதிதாக வந்திருக்கும் வலைச்சர ஆசிரியர் சிகரம் பாரதி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மிகவும் அருமையான வாரமாக நகர்த்திச் சென்ற சகோதரர் பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்.
    வரும் வாரத்தை கலக்கல் வாரமாக கொண்டு செல்ல இருக்கும் ஐயா திரு. சிகரம் பாரதி அவர்க்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே! வலைச்சரத்தில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும் இந்நேரத்தில் ஆசிரியப் பணியேற்கவிருக்கும் நிகழ்வு பற்றி எனது சிகரம் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு இது. வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!

    ReplyDelete
  7. இனிய சகோதரர் பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்...

    வாங்க சிகரம் பாரதி... அசத்துங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சென்ற வார ஆசிரியர் பாண்டியனுக்கு பாராட்டுகள்...

    இந்த வார ஆசிரியர் சிகரம் பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. சிறப்பாக தன் கடமையை நிறைவேற்றிய பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்.
    பொறுப்பேற்றுள்ள சிகரம் பாரதி அவர்களுக்கு வரவேற்பு.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  11. சிறப்பாகத் தம் பணி நிரைவேற்றிய
    சகோதரன் பாண்டியனுக்கு இனிய வாழ்த்துக்கள்!

    வலைச்சரப் பொறுப்பேற்கும் சிகரம் அவர்களுக்கும்
    கனிவான வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது