07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 27, 2014

சனி: வலைச்சரத்தில் தில்லைஅகத்துக்ரோனிக்கள்சின் 6 ஆம் நாள் பொழுதுபோக்கு - நகைச்சுவை, பல்சுவை


தில்லஅகத்து க்ரோனிக்கள்சின் இனிய, அன்பான காலை வணக்கம்!

இன்று சனிக் கிழமை!  வாராவிடுமுறை! கொண்டாட்டம் தொடங்குகின்றது! நாளை வரை! எல்லோரும் மகிழ்வுற்று இருப்பதே எமது விருப்பம்!
நகைச்சுவை என்பது எளிதல்ல! மிகவும் கடினமான ஒரு ஆய கலை! அது இயல்பாக வரவேண்டிய ஒன்று! சங்க கால இலக்கியத்தில் நகைச்சுவை அதிகம் இருக்கின்றது! புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் இருண்ட வீடு சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்களை, எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட கவிதை நூல். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களும் நிறைய நகைச்சுவைப் பாடல்கள் எழுதி உள்ளார். சங்க காலத்திலிருந்து இக்காலம் வரை நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை! காலத்திற்கு ஏற்றார் போல மாற்றம் அடைந்தாலும்!
சொற்பொழிவாளர்களில் நகைச்சுவையுடன் ஆன்மீகம் பேசுவதில் கிருபானந்த வாரியாரை மிஞ்ச முடியாது! அது போல சிலேடை பேசுவதில், கி.வா.ஜ! இன்னும் நிறைய பேசலாம்…பிறிதொரு சமயத்தில்!  இதெல்லாம் இலக்கியம்……இங்க பாருங்க
ராஜாதி ராஜ, ராஜகுலத் திலக, ராஜ கம்பீர அன்பின் சீனா அரசே!  உங்கள் கொற்றம் வாழ்க! உங்கள் புகழ் ஓங்குக! தங்கள் வலைச்சரம் பல்லாண்டு வாழ்க!

போதும் வாழ்த்தியது! இப்படி வாழ்த்துவதற்கே ஒரு அரை மணி நேரம் போய்விடும் போல! நமக்கு நேரமே போறவில்லை....... விஷயத்துக்கு வாருங்கள்!

தங்களைக் காண நம் அரண்மனைக்கு இருவர் வந்திருக்கின்றனர்

என்னது ?  என்னைக் காணவா?  யார் அவர்கள்? கேட்டீர்களா?

ஆம் மன்னா, தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் என்று சொல்லுகின்றனர்

ஓ! அவர்களுக்குத்தான் இந்த ஒரு வாரம் என் அவைப் பணிக் கொடுத்திருக்கின்றேனே! இப்போது என்ன? இன்னும் நாளை வரை பணி உள்ளதே! ம்ம் சீகிரம் வரச் சொல்லுங்கள்! எனக்குப் பணி நிறைய இருக்கின்றது! நம் கொற்றவை மதுரையில் கூடும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது!

(தில்லைஅகத்தினர் உள்ளே வருகின்றார்கள்)

ராஜாதி ராஜ...

ஓ! போதும் போதும்...கேட்டு கேட்டுப் புளித்துவிட்டது!...தில்லை அகத்தவர்களே! என்ன திடீர் வருகை இங்கு? உங்கள் பணி என்னாயிற்று?

அதை ஏன் கேட்கின்றீர்கள் மன்னா!  நாளை நகைச்சுவை என்ற ஒரு பகுதி போடலாமே என்று நினைத்து முட்டோ முட்டு என்று முட்டிக் கொள்கின்றோம் மன்னா. ஏதோ 2 வார்த்தை நகைச்சுவை எழுதலாமே என்றுதான்!  நமக்கும் நகைச் சுவைக்கும் ஏழாம் பொருத்தம்! முட்டிப் பார்த்து முழைச்சுதுதான் மிச்சம்!  நகைச்சுவை வந்தால்தானே மன்னா!

அதுக்கு என்ன முட்டல்!  நீங்கள் எழுத வில்லை என்றால் என்ன?! என் கொற்றத்தில்தான் நகைச்சுவை, நையாண்டி தர்பார் நடத்த நிறைய பேர் இருக்கிறார்களே! அவர்களை அறிமுகப்படுத்தி விடுங்கள்! அதுவும் தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து 2 பேர் கோலோச்சுகின்றனரே! பின்னர் என்ன கவலை!

புதிதாய், நம் நண்பர் குழாமுக்குத் தெரியாதவர்களை அறிமுகப் படுத்தலாமே என்ற நல்ல எண்ணத்தில் நினைத்துத் தேடினால் எல்லா தளத்திலும் நம் வலைசித்தர் டிடியும், அவரது சீடர் ரூபன் தம்பியும் சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இப்போது போதாக் குறைக்கு கில்லர் ஜியும் சேர்ந்துள்ளார் மன்னா!

பரவாயில்லை இந்த 3 பேர்தானே.... மற்றவர்களுக்கு? யாரங்கே? டிடியை அழைத்து வாருங்கள்! மற்ற இருவரும் வெளிநாடு! இப்போதுதான் நினைவுக்கு வருகின்றது! டிடியுடன் கொற்றவை கூட்டம் பற்றிப் பேச வேண்டும்!

மன்னா! நம் டிடிக்குத் தெரியாத வலைத்தளம் அறிமுகப் படுத்தலாமேனு ஒரு ஆராய்ச்சி....அவருக்கும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்றுதான்...

அப்படி என்றால், பேசாமல் மதுரை மண்டபத்தில் போய் புலம்புங்கள், அங்கு யாராவது வந்து உங்களுக்கு “பிட்” கொடுத்து உதவுவார்கள்!

பிட் அடித்துப் பழக்கமில்லையே! நம் கொற்றவையில் வீண் விவாதம் வேண்டாம் மன்னா! எல்லோரும் நண்பர்கள்!

டிடி ஃபோன் பேசிக் கொண்டே வருகின்றார்....

ஆமாம் சகோதரி நான் இப்போ வலைச்சர அவையில் இருக்கேன்

உங்க பேர்ல வலைத்தளம் இருக்கு சரி...அடுத்த மாதம் தானே உங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகின்றது.....அதுக்குள்ள உங்க குழந்தைக்கும் வலைத்தளம் ஆரம்பிக்கணும்னு சொன்னா?!!.........சரி ரூல்ஸ் கேட்டுக்கங்க...குழந்தைக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வளர்க்கணும்.  பிறந்த உடனேயே, நீங்க “அ” நா “ஆ”வன்னா கத்துக் கொடுக்கறீங்களோ இல்லையோ, திருக்குறள் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.....அப்பதான் குழந்தை வளர்ந்து வரும் போது என் தளத்தையும் வாசிக்க முடியும்.  நான் என் வாழ்க்கையில் எல்லாத் திருக்குறளையும் என் பதிவுல கொண்டு வந்துரணும்னு பார்க்கறேன்.  அதனாலதான்...

மன்னர்:  தில்லைஅகத்தவர்களே கேட்டுக் கொண்டீர்கள் அல்லவா....அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பை....பேசாமல் சென்று அறிமுக வேலையைப் பாருங்கள்.

தில்லைஅகத்தவர்கள் என்ன செய்ய என்று ஒரு பதட்டத்துடன் வெளியேறல்! மன்னர் ஆணையை மீற முடியுமா?  அதுவும் அன்பின் மன்னர்!!!!!!!

25 வருடங்களுக்குப் பிறகு.....

அம்மா நீ ஏதோ டிடி அண்ணன் அப்படினு சொல்லுவியேமா...அவரு இந்த வலைத்தளத்துல யாரும்மா?

இந்தப் பாருடா டிடி நு சொல்லக் கூடாது அவரு இப்ப தாத்தா உனக்கு!  இதோ இவருதான் டிடி...ஹை! நம்ம டிடி அண்ணன் அப்ப எப்படி இருந்தாரோ அப்படியே இருக்காரு!  இப்பவும்!! .ஏண்டா....இப்ப இன்னும் புதுசா நிறைய தளம் வந்துருச்சுல்ல....சரி தம்பி ரூபன்....அதான் உனக்கு ரூபன் மாமா இருக்காருன்னு பாரு!  அவரு நிறைய போட்டி எல்லாம் வைப்பாரு!  பரிசு கொடுப்பாரு! ...நீ கலந்துக்கலாம்!  அப்படியே அந்த மீசைக்கார சகோதரர்....அதான் உனக்கு மீசைக்கார தாத்தா இருக்காரானு பாரு!...

அம்மா இவர்தானே டிடி தாத்தா? இவரு நான் போற தளத்துல எல்லாத்துலயும் இருக்காருமா....வலைசித்தர்னு நீ சொல்றது சரிதாம்மா... வலைய விட்டு வெளில வராம ஒரு வலைத்தளத்துலருந்து கூடுவிட்டுக் கூடு பாயற மாதிரி...இன்னுரு வலைத்தளத்துக்கு போய்டுவாரு போல....அப்புறம் ரூபன் மாமாவும் இருக்காரும்மா...பெரிய போட்டி எல்லாம் வைக்கிறாரு போல...மீசைக்கார தாத்தா இதுதானே...அதே மீசை (டை அடிச்சுருப்பாரு போல!!!) அதே தொப்பி...


ஆமாண்டா! டிடி அப்பவும் அப்படித்தாண்டா! அவரு ரொம்ப நல்ல மனசு படைச்சவருடா!  வலைத்தளத்துள நிறைய செய்யறாருடா.!  இப்பவும் சொல்லித் தந்துகிட்டுருக்காராம்டா.....! இவ்வளவு ஹைடெக்கையும் கத்துக்கிட்டு.......உதவின்னா ஓடி வருவாருடா....ம்ம்ம் நீ என்ன சந்தேகம் இருந்தாலும் டிடி தாத்தா கிட்ட கேட்டுக்கடா....அவரு ரெடியா இருந்து உதவுவாரு...
அரசர் ஆணையின் பேரில் அறிமுகங்கள் ஆரம்பம்!  நகைச்சுவையில் கோலோச்சுபவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

திரு.பாக்கியம் ராமசாமி

நகைச்சுவை மன்னர் இவரைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.  இவரது இயற் பெயர் ஜ.ரா. சுந்தரேசன். இவரது கதைகள் மிகவும் பிரபலம்!!!

பகவான் ஜி

ஜோக்காளி வலைத்தளம். ஜோக்காளியைத் தெரியாதவர் யாரும் உளரோ?!! முதல் இடத்தில் இருந்து ராஜாங்கம் நடத்துபவர்!!

சமூகம் அனுபவம்...சிந்திக்க வைக்கின்றது!

மதுரைத் தமிழன்

அவர்கள் உண்மைகள் வலைத்தளம். இவர் மிக மிகப் பிரபலம்! பூரிக்கட்டை எனும் ஒரு சின்ன விடயத்தை வைத்து உலகில் எல்லோர் இதயங்களிலும் வீற்றிருப்பவர்! நாம் சின்னக் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால் சர்க்கரையோ, தேனோ தடவிக் கொடுப்பது போல், கனமான விஷயங்களையும் கூட நகைச்சுவை தடவிக் கொடுத்து மனதில் பதிய வைப்பவர்! நாங்கள், நமக்குச் சுட்டு போட்டாலும், முட்டிப் பார்த்தாலும் வர மாட்டேங்குதேனு நினைப்பதுண்டு!  அரிய கலை!

உங்கள் எதிர்காலம் எப்படி? (இது ஜோசியம் அல்ல, ஜாதகம் அல்ல, நியூமராலஜி அல்ல) இந்தப் பதிவில் ஸ்னேஹா படமும் அதில் ஒரு வாசகமும் இருக்கின்றது!  வாசகம் மிக மிக அருமை! உண்மை! போய்த்தான் பாருங்களேன்!
தமிழனுக்கு ஒரு சில நக்கல் தகவல்கள்.  எல்லாமே செம நக்கல்...நையாண்டி பதில்கள்!
இந்த “நகைச்சுவை அரசனின்” சிந்திக்க வைக்கும் பதிவையும் பாருங்கள் இதோ!

வாத்தியார் பாலகணேஷ்

மின்னல் வரிகள் வலைத்தளம். நம் எல்லோருக்கும் வாத்தியார், இவர் எது எழுதினாலும் ரசனையோடும் நாம் ரசித்து ரசித்து வாசிக்கும் படியும் இருக்கும்! அவரது எல்லா பதிவுகளிலுமே நகைச்சுவை இரண்டறக் கலந்து, இழையோடும்! சிரித்து, சிரித்து ரசிக்கலாம்!  இவரது நகைச்சுவைச் சுட்டியைப் பாருங்களேன்!

 
பல்சுவை, பல நல்ல நூல்களைப் பற்றியும், அதை எழுதியவர்கள் பற்றியும் சொல்லி அறிமுகப்படித்திருக்கின்றார்.

சூரிய சிவா எனும் சுப்புத் தாத்தா

அவரது இழையோடும் நகைச்சுவைக்குச் சுட்டி

இத லவ்வு என்பாக.....அருமையான பதிவு
இவரைப் பற்றி என்ன சொல்ல?  எப்படிச் சொல்ல!  வியக்கின்றோம்! இந்த வயதிலும் ஸிக்சர் அடிக்கின்றார்.  முதலில் ஆன்மீகத்தில் தாத்தாவை அறிமுகப் படுத்தலாம் என்றுதான் நினைத்தோம்.  இந்த வயதிலும் நகைச்சுவை! தாத்தா பல்சுவை விற்பன்னராகவும் பல தளங்கள் நிறுவுகின்றார். எனவே அவரது வலைத்தளங்களை பல்சுவைப் பகுதியில் இங்கு தருகின்றோம்.

“எதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..”  சொல்லிட்டோம் தாத்தா!

பரிதி முத்துராசன்

கவிதை வானம் வலைத்தளம்.  செம சிரிப்பு வெடிகள் ட்விட்டர்லருந்தும் இவருமாக அடிக்கும் கீற்றுகள். 

பட்டைய கிளப்பலாம் வாங்கன்றாரு போய்தான் பாருங்களேன்...செம...

மங்கல்யான் கீற்றுகளைப் பாருங்க...

வேணுகோபாலன்

சேட்டைக்காரன் வலைத்தளம்.  மனிதர் பொளந்து கட்டுறார் பா. நக்கல், நையாண்டி என்று வரிசை கட்டி.  அருமை அருமை!  சேட்டைக்கு வலைத்தளம் வேண்டாம், முகநூல் போதும் என்று நினைத்துவிட்டார் போலும்.  புத்தகம் மொட்டைத்தலையும், முழங்காலும்.  கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளோம்
கிட்டாமணியை வெட்டென மற
நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...!

தினமணி வலைப்பூ

ஆட்டோக்கு  என்னதான் ஆட்டோ’ன்னு பேர் வச்சாலும், அதனை டிரைவர் மேனுவலாத்தான் ஓட்டணும்…… ஆட்டோ ஓட்டுநர் சங்கம்
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வருது, ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வர மாட்டின்தே… !  பொய் சொல்லி லீவு போடுவோர் சங்கம்… இது உதாரணங்கள்தான்…சுட்டியைச் சொடுக்குங்கள்….மொக்கை சக்கை பொடுது அங்க .ரசிங்க…

இப்படிக்கு இஆரா

இஆரா என்றும் இனியவன் வலைத்தளம்.  நகைச்சுவைத் துணுக்குகள் நிரம்பியத் தளம்..ஹைக்கூ, கவிதகளும் எழுதுகின்றார் கலந்து கட்டி

கும்மாச்சி

இவரும் நகைச்சுவை நையாண்டியில் கலக்குபவர்....இதோ சுட்டிகள் நகைச்சுவைக்கு ஒன்று...நையாண்டிக்கு ஒன்று...

நாஞ்சில் மனோ

செம கும்மி அடிக்கின்றார்.  இப்போது ஓடும் கும்மி, நம் மதுரை பதிவர் மாநாடு வரவேற்புக் கும்மி!  போய் பாருங்க!  இப்ப இங்க சுட்டி ஒண்ணு...நம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில்
ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா இது. யாரையும் புண்படுத்த வில்லை தமாஷா எடுத்துகோங்க...” அப்படின்னு மனுஷன் பொளந்து கட்டுறார்பா...தாங்கலடா சாமி!...

http://nanjilmano.blogspot.in/2011/02/5.html


வலிப்போக்கன்

வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.
பல அரசியல், சமூக வலிகளையும் நகைச்சுவையுடன் சொல்லும் தளம்


ஹாரி

காமெடிக் கும்மி வலைத்தளம்.  யம்மாடியோவ்!  செம டெரர்பா
வாழ்க விஜய் டிவி
தீவிரவாதியும், கூடவே தலைவா வும்  இதப் பாருங்க இந்த சுட்டில


ஸ்டார்ட் ம்யூசிக் வலைத்தளம். தன்னைப் பற்றிச் சொல்லுவதே அதிரடியாகத்தான் இருக்குப்பா...என்னப் பத்தி தெரியுமில்ல? ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!”  கவுண்டமணி ரசிகர் போலும்....

ஒலகம் அழியாமல் தடுக்கனுமா.....?
விஜய் டிவி யை கும்மி அடித்தல் இந்தச் சுட்டி...செம...

நாய் நக்ஸ்

கேட்டான் பாருங்க ஒரு கேள்வி அப்படினு இந்தப் பதிவ....மிகவும் ரசித்தோம்...அதற்கான சுட்டி இது..இவர் வலை முழுதும் சிரிப்புதான்...கலக்கல்ஸ்

சித்தையன் சிவகுமார்

நகைச்சுவை.காம் வலைத்தளம்.  “சார்!  உங்களுக்கு உங்க மூளைக்குள்ள  இதுக்குனு தனியா ஒரு ரூம் போட்டு வைச்சிருக்கீங்களா? சூப்பர் சார்!”
பஞ்ச் டயலாக் இந்தச் சுட்டிய சொடுக்கிப் பாருங்க
  
பனித்துளிஷங்கர்

பனித்துளி ஷங்கர் வலைத்தளம்.  நகைச்சுவை மட்டுமன்றி பல நல்ல கட்டுரைகளும், கவிதைகளும் உள்ளன.
நகைச்சுவைச் சுட்டி

அருமையான தளம்

கோகுல்

இளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள் வலைத்தளம்.  சாமியோவ் எத்தனை கொட்டிக் கிடக்குது இங்க….(டிடி இங்கும் இருக்கின்றார்..ச டிடிக்குத் தெரியாத வலைத்தளம் இருக்கானு ஆராய்ச்சி நடக்குது)

அகஸ்டின்

தமிழ் இணைய முகவரிகள் வலைத்தளம். இத்தளத்தில் நகைச்சுவைக் காணொளிகள், குட்டி ஹரியின் நகைச்சுவை என்ற ஒரு காணொளி, ஜோக்குகள் என்று இருக்கின்றன. சுட்டி இதோ

ரமேஷ்
தமிழ் நகைச்சுவை வலைத்தளத்தின் பெயர்.  நல்ல நகைச்சுவை எழுத்துக்கள்
சிக்ஸ் பேக்- ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஜே.சூர்யா, டி.ஆர் சுட்டி இதோ…


நகைச்சுவைக் கதைகளுக்கு ஒரு உதாரணச் சுட்டி இங்கே

Rammalar’s Weblog

இதோ ஒரு சுட்டி


மலர்வண்ணன்

மலரின் நினைவுகள் வலைத்தளம் நம் எல்லொருக்கும் தெரிந்த பதிவர். நல்ல பதிவர். ஏனோ இவரையும் காணவில்லை. இங்கு இட்டால் யாரேனும் அவரிடம் சொல்லி அவர் மீண்டும் வருவாரோ என்ற நினைப்பில்….  ஒரு நகைச்சுவை இடுகையின் சுட்டி…


தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் ஒரு சுட்டி இதோ

ஒரு திரைப்படம் ஹிட் ஆனால் அதைத் தொடர்ந்து பல படங்கள் அதே போல வரும் இல்லையா? ஓநாயும் ஆட்டுக் குட்டியும் வந்த புதிதில் அதைப் போன்று டைரக்டர்கள் ஒரு சீசன் போல எடுக்க முனைந்தால் என்ற கற்பனை இடுகையின் சுட்டி   

 பிழை இருப்பின் மன்னிக்கவும்! சுட்டிக்காட்டவும்!

இன்னும் நாம் சிரித்துக் கொண்டே இருக்க பல பதிவர்கள் இருக்கின்றார்கள். பதிவு மிகவும் நீண்டு விடும் என்பதால் சொல்லவில்லை. பிறிதொரு சமயத்தில்!

நாளை மீண்டும் கொண்டாடுவோம்!  இந்த நாள் எல்லோருக்கும் சிரித்து சிரித்து, இனிய நாளாக அமைய தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் வாழ்த்துக்கள்!






41 comments:

  1. நன்றி .

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க சந்தோஷம் தாத்தா! தாங்கள் வருகை தந்ததற்கு! மிக்க மிக்க நன்றி நாங்கள்தான் சொல்ல வேண்டும் தாத்தா!

      Delete
  2. ஹா... ஹா... கலக்கல் + ரசித்தேன்...

    இன்றைய அறிமுக அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    DD தாத்தாவின் வணக்கம்... ஹிஹி...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி தாத்தா...சாரி சாரி அது அடுத்த தலைமுறைக்கு!!!!!! நண்பரே ரசித்ததற்கு மிக்க நன்றி! தங்கள் வாழ்த்துகளுக்கும்!

      Delete
  3. என்னை அதுக்குள்ளே... தாத்தா ஆக்கிட்டீங்களே.... இப்படியொரு ஆசையா ? ( 25 வருஷம் கழிஞ்சும் அதே தொப்பியா ? ) இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான என்னை கழுத்து வரை கல்லாக்கிய எனது இனிய நண்பர் திரு.பகவான்ஜி மற்றும், நண்ர்கள் திரு. வலிப்போக்கன், திரு. இஆரா. கிங்ராஜ் மற்றும் அனைவருக்கும் கில்லர்ஜியின் வாழ்த்துக்களும்.... அறிமுகப்படுத்திய ''நண்பர்களுக்கு'' நன்றி & நன்றி.

    ReplyDelete
    Replies
    1. 2 மிக்க நன்றி கில்லர் ஜி!

      Delete
  4. ''நண்பர்களுக்கு'' நன்றி & நன்றி. ஹாஹஹ...கில்லர் ஜி சும்மா உங்கள தமாஷ் பண்ணியது அது! அதுக்காக நீங்க ரெண்டு தடவ நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம் ஜி! ...முதலில் நன்றிக்கு எல்லாம் அவசியம் இல்லை....அப்படியே சொன்னாலும் எங்களில் யாருக்குச் சொன்னாலும் ஒன்றுதான்! அது தில்லைஅகத்திற்கு செல்லும்!

    ReplyDelete
  5. அது சரி நண்பர் டிடி மட்டும் அப்படியே இருப்பாரு... நான் மட்டும் மீசைக்கு டை அடிச்சு தாத்தா ஆயிட்டேனா ?அப்படீனாக்கா ரூபன் ?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா...கில்லர் ஜி டிடியும் தாத்தாதான், ரூபன் தான் மாமா ஆயிட்டாரே! ஹிஹிஹி...அது சும்மா உங்கள தமாஷ் பண்ண....ம்ம்ம் தெரியும்..... இப்பவே அப்படித்தானே! ஹிஹிஹி...ஸ்வாமி .ஸ்ரீபூவு இதப் பத்தி எல்லாம் கண்டுக்க மாட்டருன்னுல நினைச்சோம்....

      Delete
  6. அருமை! அருமை! நகைச்சுவை இழையோடப்
    பதிவர்கள் அறிமுகம் மிக அருமை!
    ரசிக்க வைக்கும் எழுத்து நடை மிகச் சிறப்பு சகோதரரே!

    அறிந்தவர்களும் அறியாதவர்களும் இன்று காண்கிறேன்.
    அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்!

      Delete
  7. வலைச்சரத்தில் தங்கள் பணி சிறப்பாக இருக்கிறது அய்யா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இரண்டாவது முறை சரத்தில் கோர்க்கப்பட்டுள்ள பாலகணேஷுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள் கூறி,

    இம்முறை கோர்க்கப்பட்டுள்ள வலைப்பதிவர்களில் அறிந்தவர் அறியாதவர் பாதிப்பாதி என்றும் கூறி,

    ரசித்தேன் என்று சொல்லி அமைகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! (நண்பரே என்று சொல்லலாம் இல்லையா? இருவருமே கேட்பதுதான்) ரசித்ததற்கும் சேர்த்து!

      Delete
    2. //நண்பரே என்று சொல்லலாம் இல்லையா?//

      ஏன்? அதில் என்ன தவறு? :))))))

      Delete
    3. மிக மிக நன்றி நண்பரே! இந்த சார் என்று சொல்வது எல்லாம் ரொம்ப ஃபார்மலாக இருப்பதால் தான்.....

      Delete
  9. வித்தியாசமான நகைச்சுவை பதிவர்கள் அறிமுகம்..
    அருமையான தொகுப்பு..
    மனமார்ந்த பாராட்டுகள்..
    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்!

      Delete
  10. அட அசத்திட்டேள் போங்கோ... ரசித்து சிரித்து மகிழ்ந்து... நகைச்சுவை அறிமுகங்களைக்காணச் செல்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    சினிமா பார்த்து விட்டு வளைத்தளம் வந்தது போல் இருக்கிறது. தாதா - 2, மாமா-1 கற்பனை காலவோட்டத்தில் உண்மையாகலாம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும்! உண்மையானால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்!

      நன்றி நன்றி!!

      Delete
  11. உங்களுக்கு கமெண்ட் போடுறதுக்கு முன்னால அந்த மூணு பேருக்கிட்டையும் கொஞ்சம் பேசி வேண்டி இருக்கு:) இருங்க வரேன்.
    @டி.டி.அண்ணா
    தாத்தா ஆனா விஷயத்தை என்கிட்டே சொல்லவே இல்லையே:))
    @கில்லர்ஜி அண்ணா.
    இருபத்தி அஞ்சு வருசமா ஒரே தொப்பியவா போட்டுவீங்க:))) தொப்பிய மாத்துங்க அண்ணா:)))
    @தமிழன் சகா
    நகைச்சுவை அரசன் பட்டத்தை கவனித்தீர்களா?? வாழ்த்துகள்!
    @தில்லை சகாஸ்
    பாலா அண்ணா, பகவான் பாஸ் ,சுப்பு தாத்தா, கும்மாச்சி சகோனு காமெடி கிங்க்ஸ் பட்டாளத்தில் களைகட்டுது பதிவு! வாழ்த்துகள் சகாஸ்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! டிடி அவரே ரொம்ப சந்தோஷப்பட்டாரு தாத்தா ஆனதுக்கு....ஆனா சகோதரி அது 25 வருஷத்துக்கு அப்புறம் பார்த்தீங்கல்ல...

      கில்லர் ஜிய கிளப்பி விட்டுட்டீங்களே! இப்ப அவரு பறந்து வருவாரு எங்க கிட்ட பாருங்க....

      முதலில் அந்த ஸ்கிட்டில் மதுரைத் தமிழன், பகவான் ஜி யும் இருந்தார்கள்....ஆனால் இடுகை மிகவும் நீண்டு விட்டதால்....அப்படியே அதை சுருக்கோ சுருக்குனு சுருக்கியும்.....இந்த நீளத்துல தான் முடிக்க முடிஞ்சிச்சு.....டைம் வேற ஷார்ட் ஆயிடுச்சு.....ஸோ.....

      ரொம்ப நன்றிங்க சகோதரி!

      Delete
    2. கொஞ்சநேரம் வெளியில ஷாப்பிங் போயிட்டு வந்தேன் அதுக்குள்ளே சகோதரி மைதிலியும், நீங்களும் (3 பேர்) என்னைப்பற்றி பொறனி பேசுறீங்களா ?

      Delete
    3. ஹாஹாஹா....நினைச்சோம்! மூக்குல வேர்த்துருக்கும்னு! ஷாப்பிங்க் போயிருக்கலனா இங்க தானே சுத்திக்கிட்டிருந்திருப்பீங்க!!!!

      Delete
    4. அண்ணனை போய் புரணி பேசுவேனா? நேரடியா உங்களை தான் கேட்டேன்:)))

      Delete
  12. முட்டிப் பார்த்து முழைச்சுதுதான் மிச்சம்! ----படித்து பார்த்து சவுண்டு விட்டு சிரித்தபோது ... கரண்ட் ஒடிப்போச்சு...சிரிப்பை நிறுத்தின பிறகுதான் கரண்டடு திரும்பி வந்தது... என்னை லூசு நிணைச்சிருக்குமோ.....நண்பரே..!!

    ReplyDelete
    Replies
    1. இல்லை இல்லை நண்பரே! அதுக்கு பொறாமையா இருந்துருக்கும்! புகைஞ்சுருக்கும்.....நாம வெளிச்சம் கொடுக்கறதுனால தான இவரு சிரிக்கறாரு.....வெளிச்சம் கொடுக்கற நம்மாலயே சிரிக்க முடியல....இவரு மட்டும்....அப்படின்னு நினைச்சு ஓடிப் போயிறுக்கும்....நீங்க நிறுத்தின உடனே...அது ஹப்பாடானு வந்துருக்கும்.....சிரித்ததற்கு, அதுவும் சவுண்டு விட்டு....மிக்க நன்றி! நண்பரே! சிரிப்பதும் கலைதான!

      Delete
  13. எனக்கு நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும்...
    இன்று நல்ல நகைச்சுவையாளர்களை (எனக்கு)
    அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு நன்றிகள்!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

      Delete
  14. அறிமுகம் செய்தமைக்கு நன்றி !
    எனக்கொரு வருத்தம் ...கொற்றவையில் நான் காண நினைத்த அங்கவை ,இங்கவையைபார்க்க முடியவில்லை என்று !
    #வலைச்சரத்தில் அறிமுகமான என்னை கழுத்து வரை கல்லாக்கிய எனது இனிய நண்பர் திரு.பகவான்ஜி #நண்பர் கில்லர்ஜியின் இப்படி சொல்லி இருப்பதுதான் புரியவில்லை ,உங்களுக்காவது புரிகிறதா துளசி தரன் ஜி ?
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. அங்கவை, சங்கவை மதுரைக் கொற்றவை மாநாட்டிற்கு ஒருவேளை வருவார்களா என்று கேளுங்கள் ஜி! பிசியோ என்னவோ?!!!

      கில்லர்ஜி சொன்னது புரியவில்லையே ஜி! நாங்களே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்....நீங்களே கேட்டுவிட்டீர்கள்!!! இப்ப வருவார் பாருங்கள்!

      Delete
    2. இப்ப இங்கதான் சுத்திக்கொண்டு இருக்கிறார்!

      Delete
    3. கீழே கிளிக்கினால் புரியும் நண்பரே...

      http://www.killergee.blogspot.ae/2014/07/blog-post_14.html

      Delete
    4. ஹலோ எங்களுக்கும் தெரியாமல் இல்ல...உங்கள சும்மா சொல்லி வேடிக்கை பார்க்கத்தான் ஜி...அதுக்குத்தான் !!!!!! இப்படி ஒரு குறி வைத்திருக்கின்றார்கள்!!

      Delete
  15. இந்த வார வலைச்சர ஆசிரியராய் மிக சிறப்பாக செயல்பட்டதற்கு பாராட்டுதல்கள்.

    தொடருவோம்
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டுகளுக்கு! கண்டிப்பாகத் தொடருவோம் நண்பரே!

      Delete
  16. நம்ம ஸ்ரீராம் சொன்ன மாதிரி என்னை நினைவுகூர்ந்து அழகாய் அறிமுகம் தந்த உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிதான் சொல்லியாகணும். நமக்குப் பிடித்தவர்கள் நம்மைப் பற்றிப் பேசுவதைக் கேட்பதே தனி மகிழ்வுதான். அந்த மகிழ்வை அள்ளித் தநத் உங்களிருவருக்கும் மிகமிக மகிழ்வுடன் என் மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்புடி சொல்லிப்புட்டீக! வாத்தியார (2 வாத்தியாரையும்) மறக்கறதாவது! //நமக்குப் பிடித்தவர்கள் நம்மைப் பற்றிப் பேசுவதைக் கேட்பதே தனி மகிழ்வுதான். // அதே! அதே! இப்ப நீங்களும் தான் பேசுறீக! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது சார்! இல்லை இல்லை நண்பரே!

      மிக்க நன்றி சார்!

      Delete
  17. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை! டி.டி-க்குத் தெரியாத வலைப்பூக்கள் தமிழில் ஒன்றிரண்டுதான் இருக்கும். எங்கே போனாலும் இருக்கிறாரப்பா மனிதர்!

    ReplyDelete
  18. அருமையான தொகுப்பு..
    மனமார்ந்த பாராட்டுகள்..
    நல்வாழ்த்துக்கள்..
    அறிமுகம் செய்தமைக்கு நன்றி !

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது