07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 23, 2014

வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் 2 ஆம் நாள் - செவ்வாய் - சமூக விழிப்புணர்வு(கள்)


உலகின் எல்லையற்ற சக்தி உங்களுக்கே சொந்தமானது. உங்கள் மனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். நமது மனத்தை பலவீனமாக்கி, மூடநம்பிக்கையில் ஆழ்த்தி, மந்தமானவர்களாக்கி, சாத்தியமில்லாதவற்றை ஆசையுறச் செய்பவர்களாகவும் அற்புதச் செயல்களை நம்புவர்களாகவும் நம்மை ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை. அவற்றின் பலன் அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணர, உண்மைவழியில் வாழ முடியாத அளவுக்கு மனத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன.

சுவாமி விவேகானந்தர்

அன்பர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்தின்  காலை வணக்கம்! வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் இரண்டாம் நாள்! என்ன அன்பர்களே எல்லோரும் நலம்தானே! விவேகானந்தரின் மேற்கோளைக் கண்டதும் உங்களுக்குப் புரிந்திருக்கும் இன்றைய தலைப்பு!

இன்று செவ்வாய்! செவ்வாய் என்றவுடன், திருமணத்திற்குத் தடையாக இருக்கும் முக்கிய தோஷம், செவ்வாய் தோஷம் என்று கருதப்படுவதுதான் நினைவுக்கு வருகின்றது!  திருமணத்திற்கு, ஒத்த இரு மனங்கள் தானே வேண்டும்?! இப்போது செவ்வாய் கோளிற்கே சென்று குடியேறலாமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரும் வேளையில், நம்மூர் ரியல் எஸ்டேட் போல், அமெரிக்காவில், தனியார்கள் “செவ்வாய்க்கு ராக்கெட் விடுகின்றோம் அங்கு செட்டிலாக விரும்புவோர் வாருங்கள்” என்று பயணச் சீட்டு பதிவு செய்ய விளம்பரம் கொடுக்கும் வேளையில், இங்கு செவ்வாய்தோஷத்தைப் பற்றிய பேச்சு! திருமணத்திற்கு மனம் ஒத்திருந்தால் பேசாமல் செவ்வாய் கோளுக்கு ஒரு பயணச் சீட்டு பதிவு செய்து குடியேற்றி விடலாமோ?! தோஷம் நீங்கி விடும்! போகிற போக்கைப் பார்த்தால், நாம் இங்கு பூமியின் சுற்றுப் புறச்சூழலை மாசு படுத்தியது போதாது என்று அங்கும் சென்று “செவ்வாய் தோஷமா?  “செவ்வாய்க்கே நாங்க தோஷம் கொடுத்துருவோம்ல” என்று புகுந்து பூமியாக மாற்றி விடுவோம் போல! பூமியில் இனி கட்டிடங்கள் கட்ட இடமில்லையாம்!

சமூக விழிப்புணர்வு என்பது உலகில் உள்ள எல்லோருக்கும் வேண்டும் என்றாலும், இந்தியராகிய நம் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக விழிப்புணர்வு இருக்க வேண்டும். பொருளாதார அடிப்படையிலும், விஞ்ஞான அடிப்படையிலும் வளர்ந்த மேலை நாடுகளிலும் மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன எனும் போது, பல மொழிகள், சாதிகள், மதங்கள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் என்று கலந்த ஒரு சமூக அமைப்பு உடைய நம் நாட்டில் சமயம், மதங்கள் சார்ந்த மூட நம்பிக்கைகளும், அறியாமையினாலும், சமூக அக்கறையின்மையினாலும், விழிப்புணர்வு இல்லாமையினாலும் ஏற்படும் மூட நம்பிக்கைள் பெருகித்தான் கிடக்கின்றன!

சமூக விழிப்புணர்வு என்பது மூடநம்பிக்கைகள் சார்ந்தது மட்டுமின்றி, சமுதாய சீர்கேடுகளைக் குறித்துப் பேசி அதை அறிவு பூர்வமாக உணர்ந்து, உள்வாங்கி மாற்றம் எற்படுத்த முனைதலும் தான்! தீண்டாமை, மரங்களையும், காடுகளையும் அழித்து பூமியை பாலைவனமாக்கி சுற்றுப் புறத்தை மாசுபடுத்துதல், நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சம், மருத்துவத் துறையிலும், கல்வித்துறையிலும், வியாபாரத் துறையிலும் நடக்கும் தில்லு முல்லுகள், கலப்படங்கள், போலிகள், பலாத்காரங்கள், நம்முடன் வாழும் சக மனிதர்களை இழிவு படுத்துதல் என்று, இன்னும் சொல்லவொணா பல சமுதாயச் சீர்கேடுகள் நம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்றன. இதற்காகத்தான், இவற்றில் ஏதேனும் மாற்றம் வராதா, மக்கள் விழிப்புணர்வு பெற மாட்டார்களா என்ற நப்பாசையில், இவற்றையெல்லாம் வலியுறுத்தி பலர் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்றனர். (மனிதர்கள் நாம் மேடைப் பேச்சுகளிலும், எழுதுவதிலும் கில்லாடிகள்தான். ஆனால், செயல்களில்?) நாம் சமயம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதும் போது, அறிவியல் அடிப்படையில் சிந்திக்கச் சொல்லி, அறிவியல் என்ன சொல்லுகின்றது என்று எழுதுவது வழக்கம்! ஆனால், அந்த அறிவியல் சார்ந்த மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன! நாங்களும்,  இது போன்று எழுதுபவர்களில் ஒருவராக எங்களால் இயன்ற வகையில், ஏதோ எழுதியுள்ள சுட்டிகள் இதோ....

மூடநம்பிக்கையால் இழிவு படும் மக்களைக் குறித்த ஒரு இடுகை.  அதன் சுட்டி

“பூமித்தாயின் கண்ணீர்” (பல வருடங்களுக்கு முன் கவிதையாக எழுதியது ஆனால் அந்தக் கவிதை தொலைந்து போனதால் கட்டுரையாக....இந்தச் சுட்டியில்

சரி! தில்லைஅகத்தின் சமூக விழிப்புணர்வு பற்றிய அறிமுகங்களைப் பார்ப்போமா! சமயம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் சில ஏற்றுக் கொள்ள கடினமாகக் கூட இருக்கலாம்! ஏனென்றால் நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை!  அது எல்லை மீறி சமூகத்தில் புற்று நோயாய் பரவும் போதுதான் விழித்துக் கொள்ள வேண்டியதாகிவிடுகின்றது! அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரிப்பது போல நாம் அதில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் உள்வாங்கிக் கொள்வோமே! விவாதங்களைத் தவிர்த்து!

நா முத்துநிலவன்

ஐயாவைப் பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது!  நல்ல உயர்வானக் கருத்துக்களைச் சொல்லி வருபவர்!  அவரும், ஊமைக்கனவுகள் விஜு ஐயா அவர்களும், சகோதரி தேன்மதுரக்ரேஸ் அவர்களும் இடுகைகளில், பின்னூட்டங்களில் உரையாடுவதை நாங்கள் மிகவும் ரசிப்போம், அதில் தமிழ் விளையாடுவதால்!  கொஞ்சம் யோசிக்க, கேள்வி கேட்க வைக்கும் ஐயாவின் ஒரு இடுகை இதோ, இங்கு இந்தச் சுட்டியில் “ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும்”.

அ பாண்டியன்

அரும்புகள் மலரட்டும் வலைத்தளத்தின் பெயர்.  என் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்” அவரது வாசகம்! உங்கள் அரும்புகள் மலர்ந்து மணம் வீசுகின்றன! என்றும் வீசும் நண்பரே!
மனித நேயம் மிக்க ஆசிரியர். பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.  போலி பூசாரிகளும் அதில் ஒரு உதாரணச் சுட்டி இதோ

டி என் முரளிதரன்

மூங்கில் காற்று இவரது வலைத்தளத்தின் பெயர்.  மிகவும் அருமையான வலைப்பதிவர்.  தற்போது இவரைக் காணவில்லை!  அவரது காணாமல் போனக் கிணறுகள் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசித்துப் பாருங்களேன்! அருமையான பதிவர்.  சமீபகாலமாக அவரது வலைத்தளத்தில் காணவில்லை!  மீண்டும் வருவார் என்று நினைக்கின்றோம்!

உலகளந்த நம்பி

வலைத்தளம் - மூடர் உலகம்.  மூட நம்பிக்”கைகளை” அடித்து நொறுக்குபவர்! இவரது சில பதிவுகள் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், அதில் உள்ள நல்ல கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே என்ற நன் நோக்குடன்...இதோ இந்தச் சுட்டியைக் கிளிக்கிப் பாருங்களேன்...சுஜாதாவின் அறிவியல் விளக்கங்களுடன்
வருமுன் உரைத்தலும் அபூர்வம் நிகழ்த்தலும்’ [ஈ.எஸ்.பி] சாத்தியமா? போட்டு உடைக்கிறார் சுஜாதா!

கில்லர்ஜி
பூவைப் பறிக்க கோடரி எதற்கு என்ற கேள்வியுடன் இவரது வலைத்தளம்
வனமா? பணமா?  காட்டமான இந்த அருமையான கட்டுரையை வாசிக்கச் சுட்டி
இந்தச் சுட்டியை கிளிக்கிப் பாருங்களேன்!  ஒரு நல்ல, வித்தியாசமான மனித நேயப் பதிவு! .....மனிதர் செம ஸ்பீடு! அவர் எழுத்துக்களிலேயே அது தெரியும்!

நான்கு பெண்கள்

நான்கு பெண்கள். இந்தத் தளத்தில் திருமதி ரஞ்சனி அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை இது.  இவர் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகளும் தொடர் பதிவுகளாக எழுதிவருகின்றார்  அதன் சுட்டி இதோ


உறுப்பு தானம் பற்றிய அவரது அழகான விழிப்புணர்வுக் கட்டுரை


மதிஸ் ப்ளாக்
    
நாங்கள் வலையில் விழிப்புணர்வுக் கட்டுரைகளைப் பற்றித் தேடிக் கொண்டிருந்த போது, “மரங்களை வெட்டுங்கள்” என்ற தலைப்பைப் பார்த்த்தும் ஆச்சரியமாக இருந்தது!  மரங்களை நடுங்கள், வளருங்கள், காடுகளை வளருங்கள் என்று சொல்லிவரும் காலகட்டத்தில்...வாசித்த போதுதான் தெரிந்தது எவ்வளவு அருமையான கட்டுரை! வயலில் களைகளைப் பிடுங்கித்தானே ஆக வேண்டும் அது போன்று!  வாசித்துத்தான் பாருங்களேன்!


புவி

பூவுலகை பூப்போல் காத்திடுவோம்
பூமிப்பந்தையே பூஞ்சோலையாய் மாற்றிடுவோம்
நம் தாய் மடியை (பூமி)
சேதப்படுத்துவதை அடியோடு தவிர்த்திடுவோம்
என்ற அருமையான கருத்துடன், இந்த வலைத்தளம் முழுவதும் புவி காப்பது பற்றிய அருமையான விழிப்புணர்வுக் கட்டுரைகள். பல இன்றியமையாத தகவல்கள்! சுட்டி இதோ
     
கீதா  எம்

தென்றல் வலைத்தளத்தின் பெயர். 

பல விழிப்புணர்வுக் கருத்துக்களை கவிதைகள் வழியாகவே சொல்லி அடிக்கும் இவரது ஒரு உதாரணச் சுட்டி இங்கே!

நிகழ்காலத்தில் சிவா

நிகழ்காலத்தில் (அறிவே தெய்வம்) வலைத்தளத்தின் பெயர்.

அவர் எழுதியிருக்கும் விழிப்புணர்வு என்பது என்ன? என்பது பாமரனுக்கும் புரியும் வகையான அருமையான கட்டுரை அதன் சுட்டி இதோ!

யாழ்பாவாணன்

யாழ்பாவாணனின் எழுத்துக்கள் என்பது வலைத்தளத்தின் பெயர்

சமூக சீர்கேடுகளை புதுப்பாவினால் அடுக்குபவர்.  இதோ ஒரு சுட்டி.

ஆயிஷா ஃபரூக்

திருநங்கைகள் பற்றிய மிக அழகான ஒரு விழிப்புணர்வுத் தளம், பெண்களின் பாலியல் கொடுமைகளைப் பற்றியும் பேசுகின்றார் மிக அருமையாக, ஆண்களுக்கு அறிவுரை கிடையாதா என்றும் கேட்கின்றார்!!!


மணவை ஜேம்ஸ்

மனிதனுக்குள் மனிதம் என்ற அழகிய கவிதையின் சுட்டி இதோ

சுந்தர் ராஜன்

மூட நம்பிக்கையை ஒழிப்போம் என்று அவர் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்களேன்!
  
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

இதில் பலர் பங்களிக்கின்றார்கள்
சமூக நலம் காப்போம், கல்வியைக் கற்போம்-கற்பிப்போம், சுகாதாரத்தைப் பேணுவோம் என்று பலர் சேர்ந்து இந்த வலைத்தளத்தில் எழுதி வருகின்றார்கள்.  விழிப்புணர்வுக் கட்டுரைகள் கொட்டிக் கிடக்கின்றன.  ஒரு சில சுட்டிகள் இங்கே..
லஞ்ச ஒழிப்பு பற்றிய சுட்டி  அதிரை மெய்சா

போலி உற்பத்தி பற்றிய தொடர் பதிவின் சுட்டி. நபிதாஸ் (மனிதர்களிலேயே போலிகள் இருக்க பொருள் உற்பத்தியில் இல்லாமலா போய்விடும்? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது!)

(கொஞ்ச வருஷம் முன்னாடி பச்சைக் கலர் ஜிங்குச்சா நு பச்சைக் கலர் புடவை வாங்கிக் கொடுத்தால் அமோகம் அப்படின்னு வதந்தி பரவி சுத்திச்சுல!)
வதந்தியைப் பரப்பாதீர் என்ற ஒரு வித்தியாசமான விழிப்புணர்வுக் கட்டுரை.  சுட்டி இதோ.  வாசித்துத்தான் பாருங்களேன்! அதிரை மெய்சா 

புதுகைசீலன்

“இவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது! அன்றும்! இன்றும்! என்றும்!” மிக மிக உண்மையே. எத்தனை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கட்டுரைகள் வந்தாலும் எந்த மாற்றமும் நிகழவில்லையே! இவரது, எரிபொருள் பற்றிய கருத்து மிக்க கட்டுரையைப் படிக்க இதோ சுட்டி

தமிழ்வாசிபிரகாஷ்

தமிழ் வாசி வலைத்தளத்தின் பெயர்.  தமிழை நேசிப்பவர்களுக்கு வாசிப்பதற்கு!  ஆஹா

வீட்டிற்கு வெளியே சிக்கன் சாப்பிடறவங்க கொஞ்சம் ஜாக்கிரதையா சாப்பிடுங்கப்பா...இங்க பாருங்க கலப்படத்தை  சிக்கன்ல எலிக்கறியாம்பா.  இந்தச் சுட்டில போய் பாருங்கப்பா...

தமிழ்வினை

பாலியல் வன்முறையைத் தவிர்க்க ஐந்து யோசனைகள் மிகவும் விழிப்புணர்வைத் தூண்டும், சமூகத்திற்கு மிகவும் அவசியமான இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் வந்ததைத் தமிழ்வினையில் தமிழில் மொழி பெயர்த்து பகிர்ந்துள்ளவர் தமிழானவன் அவர்கள். சுட்டி இதோ


சேவியர்

சாலை : பயணிக்கவா ? மரணிக்கவா ?  வாசிக்க வேண்டிய கட்டுரை. இங்கே கிளிக்குங்கள்

மழலைப்பிரியன்

குழந்தைகளுக்கான பக்கம் என்றாலும் நாமும் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் சாலை பாதுகாப்பு குறித்த மிகவும் நேர்த்தியான கட்டுரை. இந்தச் சுட்டியில்

Vathees Varunan

வதீஸ் in கிறுக்கல்கள் வலைத்தலத்தின் பெயர். 

மூடநம்பிக்கைகளைப் பற்றிய ஒரு கட்டுரையின் சுட்டி.

கீற்று

எழுத்தாளர்: தியடோர் பாஸ்கரன்
தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
பிரிவு: சுற்றுச்சூழல்
சுட்டி இதோ

வாசகர் கூடம்

என்னடா சமூக விழிப்புணர்வு அறிமுகப் பகுதியில் வாசகர் கூடம் எப்படி வந்தது என்று எண்ண வேண்டாம்!  அதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்  வன உயிரியலாளரும், திரைப்பட ஆராய்ச்சியாளருமான திரு. தியோடார் பாஸ்கரன் எழுதிய இன்னும் பிறக்காத தலைமுறைக்கு என்ற விழிப்புணர்வுப் புத்தகத்திற்காகத்தான்! அதன் சுட்டி இதோ

பிழை இருப்பின் மன்னிக்க!  சுட்டிக்காட்டவும் தயங்க வேண்டாம்!

எல்லா வலை அன்பர்களுக்கும் இந்த நாள் ஒரு இனிய நாளாக அமைந்திட எங்கள் நல் வாழ்த்துக்கள்! நாளை மீண்டும் சந்திப்போம்! 

60 comments:

  1. எத்தனை எத்தனை தளங்கள்.... சமூக அக்கறையுடன் கூடிய தொகுப்புகளைத் தொகுத்தளித்த விதம் நன்றாக இருக்கிறது. இதில் வாசகர்கூடத்துக்கும் ஓர் இடம் என்பதைப் பார்த்ததும் மிகமிக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வாங்க வாத்தியார் சார்! காலை வணக்கம்! தங்கள் பாராட்டிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி! உங்கள் எல்லோரது ஆதரவும்தானே சார் எங்கள பொழக்க வைக்குது!!!!

    ReplyDelete
  3. எத்தனை அறிமுகங்கள்... மகிழ்ச்சியாக இருக்கிறது துளசிதரன் ஜி!

    சில பதிவுகள் படித்திருக்கிறேன். மற்ற பதிவுகளும் படிக்க வேண்டும்....

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! வெங்கட் ஜி! தங்களைப் போன்ற சிறந்த பதிவர்கள் எங்களை ஊக்கப்படுத்துகின்றீர்களே அதுவே எங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவும், சக்தி பல கொடுப்பதாகவும் உள்ளது!

      மிக்க நன்றி!

      Delete
  4. சாதனை படைக்கப் போகிறீர்கள் அதிகமான வலைப் பூக்களை அறிமுகம் செய்வதில் ...வாழ்த்துகள்!
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. பகவான் ஜி! சத்தியமாகக் கூச்சமாக இருக்கிறது! சாதனை எல்லாம் இல்லை! எத்தனை அன்பும், நல்ல உள்ளமும் கொண்ட பதிவர்கள் நீங்கள் எல்லோரும் கிடைத்திருக்கின்றீர்கள்! அதுதான் எங்களை மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கின்றது! சாதனை எல்லாம் வேண்டாம் ஜி! அது வரும் போகும்! அன்பு ஒன்றே போதும்!

      Delete
    2. மிக்க நன்றி பகவான் ஜி! தங்கள் வாழ்த்திற்கு!

      Delete
  5. சமூக விழிப்புணர்வுகள் தாங்கிய
    காவியம் படைத்த பதிவர்களின் அறிமுகங்கள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி நண்பரே தங்கள் வாழ்த்துக்களுக்கு!

      Delete
  6. நன்றி எந்த மொழியிலும் சொல்லத்தெரியாது தவிக்கின்றேன் நண்பரே... எனது இரண்டு பதிவுகளுமே நான் மிக மிக மிக நேசித்து எழுதிவை ஆனால் அதை தேடிப்பிடித்து கண்டு பிடித்த தங்களின் தேடுதல் வேலையின் சுமையறிந்து பிரமிப்பாக இருக்கிறது தங்களால் எனக்கு(ம்) அங்கீகாரம் கிடைத்தமையால் ? எனக்கும் எழுத தெரிகிறது 80 மனதுக்கு தோன்றுகிறது நண்பரே இந்தப்பதிவுகளை மீண்டும் வெளியிடவேண்டுமென நினைத்திருந்தேன் அந்தச்சுமையை இறக்கி வைத்து விட்டீர்கள் இனி நானும் எழுதப்போகிறேன்.
    இன்றையை 23.09.2014 அனைத்து அறிமுகங்களுக்கும் எமது வாழ்த்துக்கள் தங்களுக்கு நன்றி சொல்லும் வழியை (மொழியை) ஆராய்ந்து கொண்டே....................... இருக்கிறேன் நண்பரே......

    ReplyDelete
    Replies
    1. கில்லர் ஜி! கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கங்க! நன்றி எல்லாம் வேண்டாம் ஜி! மொழியெல்லாம் ஆராய வேண்டாம் ஜி!! உங்கள் அன்பும் நட்பும் போதும்! அதற்கு மொழி தேவை இல்லையே! உங்களுக்கும் எழுத வரும் 80 எங்களுக்கும் தெரியும்!!! அதில் என்ன சந்தேகம்! எழுதுங்கள்! எழுதுங்கள்!

      மிக்க நன்றி ஜி!

      Delete
    2. 80 மனசுக்கு... 80 எங்களுக்கும்....பாவிகளா...! தயவுபண்ணி இப்டில்லாம் தமிழைக் கொல்லாதீங்கய்யா... புள்ள குட்டிகளோட நல்லா இருப்பீங்க...

      Delete
    3. நம் இனிய தமிழைக்கொல்லும் எண்ணம் ஒருக்கிலும் இல்லை ஐயா, அப்படி நினைத்தால் ? நான் தமிழனே அல்ல ! வார்த்தைகளை மிச்சப்படுத்துவோம் என்ற சிக்கனமே காரணம்.

      (பொதுவாக எனது எழுத்தில் ஒரு வித்தியாசம் இருக்கும் இது எமது இனிய நண்பர் திரு.துளசிதரன் அவர்கள் அறிவார்கள்) தவறெனில் மன்னிக்க.

      Delete
    4. ஹாஹாஹாஹ் ! சத்தியமாக தமிழைக்கொல்ல மாட்டோம் சார்! வர்வாத்தியார் சார்! தயவாய் மன்னித்தருளவும்! சத்தியமாக நீங்க வாத்தியாரேதான்! நாங்களும் எங்கள் இடுகைகளில் அது போன்று செய்வதில்லை சார்! அது சும்மாவேனும் கில்லர் ஜி கொடுத்த பின்னூட்டதில் அவரையும் கலாய்க்கத்தான் கொடுத்தோம் சார். உங்க சீடர்கள் எங்களை மன்னிச்சுருங்க சார்! கில்லர்ஜிக்கும் சேர்த்துதான் சார்! பாவம் நாங்க கொஞ்சம் பொழச்சு போறோம் சார்! சார் இம்பொசிஷன் உண்டா சார்!! ஹஹாஹஹ்

      Delete
  7. விழிப்புணர்வுதரும் தளங்களின் அணிவகுப்பு .. பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களது பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும்!

      Delete
  8. வீரத்துறவி விவேகானந்தரின் பொன்மொழியுடன் இன்றைய தொகுப்பு கம்பீரம்!..
    மனம் நிறைந்த பாரட்டுகளும் நல் வாழ்த்துக்களும்!..

    நேற்றைய தொகுப்பினை இன்று தான் காண முடிந்தது.
    ஆன்மீக மணம் கமழும் பதிவுகளை முன்வைத்த மங்களகரமாக தொகுப்பு!..
    எடுத்த எடுப்பிலேயே - தஞ்சையம்பதியையும் அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி..
    மீண்டும் நல்வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! தங்களது பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும்!

      அவன் இல்லையேல் ஓரணுவும் அசையாதே! தங்களது பல பதிவுகளைப் படித்து இன்புற்றிருக்கின்றோம் ஐயா! சிவனையும் அவரது குடும்பத்தாரைப் பற்றியும் தாங்கள் எழுதும் பதிவுகள்!

      மிக்க நன்றி ஐயா!

      Delete
  9. சிறப்பான தொகுப்பு...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க! மிக்க நன்றி டிடி!

      Delete
    2. அது சரி டிடி தங்களது சீடரைக் காணவில்லையே! அதாங்க நம்ம ரூபன் தம்பி!!!

      Delete
  10. விவேகானந்தரின் பொன்மொழியுடன் இன்றைய பதிவில் தான் எத்தனை தளங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சரவணன் சார்! தங்கள் பாராட்டிற்கு!

      Delete
  11. விவேகானந்தரின் பொன்மொழிகளோடு ஆரம்பித்த விதமே அருமை.
    நண்பர் கில்லர்ஜீ மற்றும் மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்துக்களுக்கும்!

      Delete
  12. முதற் கண் வலைச்சர ஆசிரியர் பணி ஏற்றமைக்கு வாழ்த்து! அருமையான தொகுப்பு!
    ஆய்ந்து தேடியளித்துள்ளீர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி புலவர் ஐயா! தங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும்!

      Delete
  13. பல புதிய தளங்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் சகோதரா !
    அனைத்துத் தளங்களும் மிகச் சிறந்தவையே .அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்துக்களுக்கு!

      Delete
  14. அறியாத பல தளங்களை அறிந்து கொண்டேன் ஐயா!! என்னுடைய வலைப்பக்கத்தையும் பகிர்ந்து கொண்டு அறிமுகம் செய்து வைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா....

    ReplyDelete
    Replies
    1. ஜெயசீலன்/புதுகைசீலன் தம்பிக்கு எங்கள் நன்றிகள் தங்கள் வருகைக்கு!

      Delete
    2. ஜெயசீலன்/புதுகைசீலன் தம்பிக்கு எங்கள் நன்றிகள் தங்கள் வருகைக்கு!

      Delete
  15. நான் தொடரும் பதிவர்களோடு புதியவர்கள் சிலரையும் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! ரெண்டு வாரமாவே கொஞ்சம் ஆணிபுடுங்கல் அதிகம்! வலைப்பக்கம் சரியாக வர முடியவில்லை! நேரம் கிடைக்கையில் புதிய தளங்களுக்குச் செல்கின்றேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்! வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்!

      Delete
  16. கடலில் சுழியோடிப் பொறுக்கிய முத்துக்களாக
    சிறந்த பதிவுகளைப் பொறுக்கிப் பகிர்ந்துள்ளீர்கள்
    அதற்குள் எனது பதிவும் சிக்கி இருக்கிறது
    சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      Delete
  17. ஆஹா...
    எத்தைஎத்தனை அறிமுகங்கள்!
    பயனுள்ள தொகுப்பு!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சார் தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்!

      Delete
  18. வாழ்த்துக்கள் சார், வாழ்த்துக்கள் மேடம். நிறைய பேரை அறிமுகப்படுத்திவிட்டீர்கள்.... அதில் எங்கள் வாசகர் கூடமும் இடம்பெற்றதில் மகிழ்ச்சி.... மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! ஸ்பை! தங்களு வருகைக்கும், கருத்திற்கும்!

      Delete
  19. வணக்கம் நல்ல தொகுப்பு.என் வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! தகள் வருகைக்கும், கருத்திற்கும்!

      Delete
  20. என்னையும் என் தளத்தையும் அறிமுகப்படுத்திப் பாராட்டியமைக்கு நன்றி நண்பரே. மிக்க நன்றி.

    தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏனைய நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! தங்கள் வாழ்த்துகளுக்கு! தங்கள் கருத்துக்கள் பாராட்டப்படவேண்டியவையே!

      Delete
  21. எத்தனை தளங்கள்...
    பல தொட்ர்பவை... சில புதியவை...
    அனைவருக்கும்... பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தங்கள் வாழ்த்திற்கு! வலைச்சரம் எங்களுக்கும் பல புதிய தொடர்புகளையும் பெற்றுத் தந்தது!

      Delete
  22. அறிமுகங்கள் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு!

      Delete
  23. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.

    பல புதிய வலைப்பூக்களை தங்களின் அறிமுகத்தினால் தெரிந்துகொண்டேன்.

    தொடரட்டும் உங்கள் பணி !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சாம் சார்! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      Delete
  24. ஆஹா! நம்ம அண்ணன் தம்பி அவ்ளோ பேரையும் இந்த பதிவில அறிமுகம் செய்திருகீங்களே!!! நன்றி சகாஸ்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி! ஆமாங்க! மிக்க நன்றி வந்ததுக்கு! ஆமாம் நாளைக்கும் வருவீங்க தானே!

      Delete
  25. மிக அருமையான பதிவர்கள் அறிமுகம்!
    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. மிக்க நன்றி! சகோதரி! தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும்!

    ReplyDelete
  27. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
    வணக்கம். எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  28. எத்தனை தளங்கள்.... நிறையத் தெரியாத தளங்கள்...

    ReplyDelete
  29. வாசகர் கூட அறிமுகத்துக்கு நன்றி சார்!

    ReplyDelete
  30. நன்றி! நன்றி! ஆவி!

    ReplyDelete
  31. அப்பப்பா! இத்தனை பேரா!! அதுவும் ஒரே பதிவில்!! இந்த ஒரு பதிவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களைப் படித்துப் பார்க்கவே ஒரு வாரமாகும் போலிருக்கிறதே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது