07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 25, 2014

உன் சமையல் அறையில்...


நேற்றைய பகிர்வான 'கதை சொல்லப் போறேன்' குறித்து தங்களது கருத்துக்களைச் சொன்ன உறவுகளுக்கு நன்றி.

----------------------------------------

மையல் செய்வது என்பது ஒரு கலை. அந்தக் கலை எல்லாருக்கும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. ஆண்களை விடுங்கள்... பெண்களில் கூட எல்லாரும் நல்லாச் சமைப்பதில்லை. மீன் குழம்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்றாலும் ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தால் நான்கு பேரின் கைவண்ணமும் ஒன்றாக இருப்பதில்லை. சமையலில் கைப்பக்குவம் மிகவும் முக்கியம். எங்க ஐயா (அப்பாவின் அப்பா) ஒரு சமையல் மேஸ்திரி. மிகச் சிறந்த சமையல்காரர். இவரின் கைப்பக்குவத்துக்கே தனி மரியாதை இருந்தது. எங்கப்பாவுக்கும் சித்தப்பாவும் சமையல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம்.

எங்க வீட்டில் அக்காக்கள் சமையல் அப்போது அருமையாக இருக்கும். இப்போது பிள்ளைகளுக்காக காரம் குறைத்து உணவில் சுவை குறைத்து விட்டார்கள். எங்கள் நால்வரில் தம்பி தவிர மற்ற மூவரும் நன்றாகச் சமைப்போம். சும்மாவே செட்டிநாட்டுக்காரர்கள் என்றால் சாப்பாட்டுப் பிரியர்கள் என்பார்கள். விதவிதமாக சமைப்பதில் எங்க ஆளுங்க கில்லாடிங்க. விருந்து உபச்சாரத்திலும் குறை வைக்க மாட்டார்கள். இப்போ இங்கு கூட நான் சமைக்கப் போனால் பக்கத்து அறை நண்பர்கள் செட்டிநாட்டு வாசனை மூக்கைத் துளைக்குது என்று சொல்லியபடி இன்று என்ன சமையல் என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

சாப்பாட்டு விஷயத்துல கடவுள் நமக்கு குறையே வச்சதில்லை. திருமணத்துக்கு முன்பு வரை அம்மாவுடன் அதிகம் இருந்தது நான்தான். அம்மாவின் கைப்பக்குவம் சான்ஸே இல்லை. என்ன செய்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிடணும் போலத்தான் இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது வாரச்சந்தைக்குப் போவது நான்தான். எனவே இப்போது ஊருக்குப் போனாலும் காய்கறியாக இருந்தாலும் மீனாக இருந்தாலும் தம்பிய போய் வாங்கிட்டு வரச்சொல்லுங்க நல்லா பாத்து வாங்கிக்கிட்டு வருவான்னு சொல்லுவாங்க. திருமணத்துக்குப் பின் மனைவியின் சமையல்.... அம்மாவின் சமையல் செட்டிநாட்டுச் சுவை என்றால் மனைவியின் கைப்பக்குவமோ மதுரைச்சுவையுடன் செட்டிநாட்டுப் பாணி... ஆஹா... என்ன செய்தாலும் சூப்பரா இருக்கும். இப்போ விஷாலின் ஆசிரியைக்குப் பிடித்துப் போய் தினமும் விஷாலின் சாப்பாட்டில் ஒரு வாயாவது அவன் கையால் வாங்கி சாப்பிட்டு விடுவாராம். அந்தளவுக்கு ருசி.... மதுரை அம்சவல்லிபவான் கைவண்ணமாச்சே... சும்மாவா.

இன்றைக்கு வலையில் சாப்பாடு குறித்துப் பகிரும் ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. எத்தனை விதமான சமையல்களை எத்தனை கோணங்களில் சொல்கிறார்கள் என்பதை சில தளங்களை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட சில தளங்களைப் பற்றியும் அவற்றில் பகிரப்பட்ட சமையல் குறிப்புக்களைப் பற்றியும் இன்றைய பகிர்வில் பார்க்கலாம்.

முதலில் எப்பவும் போல் நட்புக்கு மரியாதை...

மீரகத்தில் இருந்து சமைத்து அசத்தலாம் என்ற வலைப்பூவில் சமையல் குறிப்புக்களை பகிர்ந்து வரும் ஆசியா அக்கா அவர்கள், அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிடுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் கூட நெத்திலி மீனின் முள்ளை எப்படி நீக்குவது என்பதை அழகான வீடியோ பகிர்வாகத் தந்திருந்தார். இவர் ஒவ்வொரு குறிப்பையும் செய்து பார்த்து அதை படிப்படியாக போட்டோ எடுத்து ஆர்வமுடன் அருமையாகப் பகிர்ந்து வைப்பார். இவர் மனோ அம்மாவின் பகிர்வில் பார்த்து இவர் வைத்த மீன் குழம்பு குறித்த பகிர்வில்...
புளியை 2 கப்  கொதி நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி ரெடியாக வைக்கவும்.மீன் குழம்பு வைக்கும் பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும்.எண்ணெய் சூடானவுடன் வெந்தயம் போடவும்,பொன்னிறமாக சிவந்து வரும் பொழுது வெங்காயம்,கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.


பிரான்சில் இருந்து Sashiga Kitchen என்ற வலைப்பூவில் சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வரும் சகோதரி மேனகா சத்யா அவர்கள், விதவிதமான சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வருகிறார். இவரது வலைப்பூவில் எண்ணற்ற சமையல் குறிப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. இவரின் சோயா உருண்டைப் பிரியாணி எப்படிப் செய்யலாம் என்பது குறித்த பகிர்வில்...
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து குளிர்ந்த நீரில் 2-3 தடவை கழுவவும்.உருண்டைகள் பெரிதாக இருந்தால் 2-ஆக நறுக்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


தெரிந்து கொண்ட விஷயங்களுக்காக சமையல் எக்ஸ்பிரஸ் என்னும் வலைப்பூவில் சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வரும் ஆமினா அக்கா அவர்கள், பெருசா சொல்ற அளவுக்கு எந்த விஷயமும் இல்லைங்க.... எல்லாமே அரைகுறை தான். பதிவு பார்த்தா உங்களுக்கே தெரியும் என்று சொல்லி மிகச் சிறப்பான சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வருகிறார். இவர் நூனே ஓங்காய் அதாவது ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய் எப்படிச் செய்யலாம் என்பது குறித்த பகிர்வில்...
கடாயில் எண்ணெய்விடாமல் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு மல்லி சேர்த்து வறுக்கவும்.நிலக்கடலையை தனியாக வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் தேங்காய், பூடு, மஞ்சள் தூள் சீரகதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.


ஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும் என்று சொல்லி சமையல் அட்டகாசங்கள் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் ஜலீலா அக்கா அவர்கள், ஏகப்பட்ட சமையல் குறிப்புக்களைப் பகிர்ந்து வைத்திருக்கிறார். இவரது ஹெல்தி காய்கறி குருமா / வெஜ் குருமா / காய்கறி சால்னா / பரோட்டா சால்னா என்னும் பகிர்வில்...
காய் கறி வகைகளை பொடியாக அரிந்து அத்துடன் ,புரோக்கோலி,காலிப்ளவர், கார்ன் சேர்த்து நன்கு அலசி , இரண்டு முன்று தண்ணீரில் அலசி வடித்து வைக்கவும். ( முடிந்தால் லேசான வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு அலசவும்)அடுப்பில் சட்டியை ஏற்றி காயவிட்டு, தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கருகாமல் தாளித்து காய்கறிகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.


புதுகைத் தென்றல் என்ற வலைப்பூவில் எழுதும் சகோதரி (புதுக்கோட்டை) தென்றல் , வீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி?  என்றும் நீங்கள் படித்துக்கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ என்றும் சொல்லியபடி சிறப்பான சமையல் குறிப்புக்களைத் தருகிறார்.  இவரின் தற்போதைய வாசமோ ஆந்திராப்பக்கம். சிவகங்கைப் பக்கம் அடுப்படியில் போடுவதற்காக கருப்புக்கலரில் ஒரு கல் வாங்குவார்கள். அது இப்போது மார்பிள்ஸ், டைல்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. முன்னர் ஆத்தங்குடி பக்கமிருந்து வாங்கி வருவார்கள். அதை கடப்பா கல்லுன்னு சொல்வார்கள். இவரு என்னடான்னா கடப்பான்னு ஒரு உணவு வகையைப் பற்றி பகிர்கிறார். எங்க ஊரு கடப்பா என்கிற பகிர்வில்...
பரோட்டாவுக்கு குருமாவும் நல்லா இருக்குன்னாலும் கடப்பாவோட ருசியே ருசிதான். ஊருக்கு போகும்போதெல்லாம் பசங்க கண்டிப்பா ஒரு கை பாத்துடுவாங்க. எங்க ஊர்ல ராதாகபேன்னு ஒரு ஹோட்டல் இருக்கு, பிருந்தாவனம் ஸ்டாப் பக்கத்துல இருக்கு. அங்கே ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டும் இட்லியோட சட்னி, சாம்பார் ஏதும் கிடையாது. கடப்பா மட்டும்தான் தருவாங்க. இங்கயும் கூட்டம்னு சொல்லணுமா என்ன?


ம்முவின் சமையல் என்ற தளத்தில் எழுதும் சகோதரி அம்மு (பெயர் பதியப்படவில்லை) இது சைவ சமையல் குறிப்புகளுக்கான தளம் என்று சொல்வதுடன் சமையலில் அனுபவம் இரண்டு வருடங்கள் தான். பல விதமான சைவ உணவுகளை தெரிந்து கொண்டு செய்து பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் செய்து ருசித்தவற்றை உங்களுடன் பகிரவே இந்தத் தளம் என்று சொல்கிறார். இவர் சௌ சௌ கூட்டு எப்படி வைக்கலாம் என்று சொல்லும் பகிர்வில்...
சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.


மையல் என்னும் கலை என்ற வலைப்பூவில் மூன்று பேர் சேர்ந்து சமையல் குறிப்புக்களைப் பகிர்கிறார்கள் என்று நினைக்கிறேன். இம்மூவரில் சகோதரி சித்ரா அவர்கள் நிறையக் குறிப்புக்களைப் பகிர்ந்திருக்கிறார். அனைத்தும் அருமையான குறிப்புக்கள். அதில் தக்காளி பொரிச்ச குழம்பு எப்படி வைப்பது என்ற பகிர்வில்...
தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.


பெட்டகம் என்னும் வலைப்பூவில் எழுதும் சகோதரர் முகமத் அலி அவர்கள் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற சமூக சிந்தனை வரிகளுடன் சமையல் குறித்த சின்னச் சின்ன குறிப்புக்களை அருமையாக பகிர்ந்திருக்கிறார். இவரின் டிப்ஸ்... டிப்ஸ்... சமையல் குறிப்புகள் என்ற பகிர்வில்....
வெள்ளை மற்றும் மஞ்சள் பூசணிக்காய் துண்டுகளை ஒரு வாரம் வரை பாதுகாக்க வேண்டுமா? காய்களைத் தோல் நீக்கிவிட்டு, விதையுள்ள மென்மையான மேல் பாகத்தையும் களைந்து, சதை பாகத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் பூசணித் துண்டுகளை மூழ்கவிட்டு, பாத்திரத்தை மூடாமல், ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். பல நாட்கள் அப்படியே இருக்கும்.


சிக்க ருசிக்க என்னும் வலைப்பூவில் எழுதும் பிரியா ராம் அவர்கள், நாம் ரசிக்க மட்டும் அல்ல அந்தக் குறிப்புக்களைப் படித்து அதை செய்து ருசிக்கவும் அருமையான விளக்கங்களுடன் அழகான குறிப்புக்களைப் பகிர்கிறார். இவர் வைத்த பொடி போட்ட வத்தக்குழம்பு பற்றிய பகிர்வில்...
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு  போட்டு தக்காளி, கத்தரிக்காய் போட்டு வதக்கி, புளி தண்ணீர் கரைத்து விட்டு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக கொதிக்க விடனும். திக்காக வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி,
3  ஸ்பூன் வறுத்து பொடி பண்ண பவுடர் போட்டு, 2  ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு கிளறினால், பொடி போட்ட வத்த குழம்பு ரெடி....


மையல் களஞ்சியம் என்னும் தளத்தில் எழுதிய சகோதரி சித்ரா அவர்கள், 2008-ல் தளம் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் மட்டுமே வலைப்பூவில் இருந்திருக்கிறார். இட்ட இடுகைகள் மொத்தம் 9. இவரும் சமையல் என்னும் கலையில் மூவரில் ஒருவராக எழுதும் சகோதரி சித்ராவும் ஒன்றுதானா என்பது தெரியவில்லை. இவரது லட்டு என்ற பகிர்வில்...
கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.


இங்கு நமக்கு சமையல் கலைகளை அள்ளித் தரும் அன்பு உள்ளங்களின் தளங்களில் இருந்து கொஞ்சமாக சுவைக்கக் கொடுத்துள்ளேன். இதை வாசிக்கும் அனைத்து உறவுகளும் அந்தந்த தளங்களுக்குச் சென்று விருந்து சாப்பிட்டு வாருங்கள். அதுக்கு முன்னால எப்பவும் போல இந்த பாட்டையும் மதுரை வலைப்பதிவர் மாநாட்டு நிகழ்ச்சிநிரலையும் பார்த்துட்டுப் போங்க...

உன் சமையல் அறையில்


மதுரை வலைப்பதிவர் மாநாடு-2014 நிகழ்ச்சி நிரல் உங்கள் பார்வைக்கு... நாளை மதுரை தெப்பக்குளத்தில் பதிவர் உற்சவம்...



நன்றி.

-'பரிவை' சே.குமார்.

20 comments:

  1. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. சுவையான தளங்களின் அறிமுகம்..
    சமையலைப் போலவே அருமை!..
    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. சிறந்த அறிமுகங்களுக்கு மிக்க நன்றி! பாடல்களும் அருமை அதற்கு ஏற்றார் போல்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி சார்...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. எனது வலைப்பூவின் அறிமுகத்துக்கு மிக்க நன்றி. நம்ம பக்கத்து ஊர்க்காரரா சூப்பர். நான் பள்ளத்தூர் ஆச்சி காலேஜ் ஸ்டூடண்ட். தங்களின் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி...
      வணக்கம்.
      ரொம்ப சந்தோஷம்.... வலையில் தொடர்வோம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    ReplyDelete
  6. சுைவ மிகுந்த அறிமுகங்கள்!
    சிறப்பான தொகுப்பு!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. சுவையான சமையல்தளங்கள் நிறைய பேர் என் நட்புகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அம்மா, மனைவி சமையலை விமர்சித்தவிதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...
      வாங்க அம்மா
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  8. ருசிகர சமையல் குறிப்புகள் அருமை குமார் :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...
      வாங்க அக்கா
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  9. நல்வாழ்த்துக்கள் தம்பி..நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...
      வாங்க ஆசியாக்கா
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. எனது வலைப்பூவின் அறிமுகத்துக்கு மிக்க நன்றி. தங்களின் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி please continue sir.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...
      வாங்க சகோதரா
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது