07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 4, 2011

படைப்பாளிகளின் படையெடுப்பு!!

ஹலோ.!! வலைச்சரத்துல நமக்கென்று ஒருவாரம் என்றதும் நாம இதுவரைக்கும் என்ன என்ன படிச்சோம். என்ன என்ன எட்டி பாத்தோம்னு பாத்தா ஹி ஹி பாதி படைப்புகளா இருக்கு. என்ன செய்ய..? நான் ஒரு பிரபலமான கவிஞன் என்பதால் நான் தேடிபோகும் இடமும் அப்படி கிடக்கு. சரி பின்ன என்ன செய்யலாம்.? ஒன்றும் பெரிதாய் இல்லை. நான் படிச்சதெல்லாம் அப்படியே அல்லாக்கா தூக்கிட்டு வந்து இங்க மல்லாக்க படுக்க வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

Lali- தண்டசோறு என்னும் கவிதை தலைப்பை பார்த்தும் இவுங்க ப்ளாக்குக்கு ஓடினவன் நான். ஏதோ என் பெயரிலே ஒரு கவிதை இருப்பது போன்ற உணர்வு. ஆனால் அங்கே போனால் தண்டசோறை கூட வேகம் கொள்ள செய்யும் வரிகளாக இருந்தது. பாவும்.!! ஆனால் அந்த வரிகளால் என்னை வேகம் கொள்ள செய்யமுடியவில்லை.ஹி ஹி.

சுல்தான்- முத்தம் பற்றிய கவிதை. படிக்கும் போது உண்மையிலே காட்சி கண் முன்னே வந்து ஓடுது. என்னை உருவகபடுத்தியானுலாம் நீங்க கேட்க கூடாது. அப்பரம் நான் இல்லனுலாம் சொல்லமாட்டேன்.

செல்வம் முனியாண்டி- ஒரு இரவு என்னும் தலைப்பில் ஒரு சிறிய காதல் கவிதை. வெறும் எஸ்.எம்.எஸ்.,களாக போட்டு தாக்கும் ப்ளாக் இது. சற்று எட்டி பாருங்கள்.

சௌமியா- ஜப்பான் நகர் (அ)வலம் என்னும் கவிதையில் சப்பானில் நிலநடுக்கம், சுனாமி வந்தபோது இருந்த நிலையை ஒருவித சோகத்தோடு விவரிக்கிறார். சிறப்பு.

செந்தில் கீதா- கண்ணீர். இந்த கவிதை என்றோ எங்கோ பார்த்த ஒரு புகைபடத்தை ஞாபகபடுத்துகிறது. அதாவது அந்த புகைபடத்தில் மழையில் நனையும் போது ஒருவன் அழுவது போலிருக்கும். அந்த படம் கவிதையாக இருக்கிறது.

கிருபா- சுதந்திரம் என்னும் தலைப்பின் கீழ் பறவை மற்றும் மனிதர்களின் சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்புகிறார். அருமையாக எளிமை நடையில் அமைத்திட்ட வார்த்தைகள். சிறப்பாக இருக்கிறது.

தேவாதிராஜன்- வேண்டும் இதுவே நமக்கு வேண்டும் என்னும் கவிதையில் மனிதர்களுக்கு என்ன வேண்டும் என்று பட்டியலிடுகிறார். இதில் எனக்கு சில முரண்பாடுகள் இருக்கின்றன. உங்களுக்கு எப்படி.?

பூமகள்- அறிமுகமில்லாதவள் என்னும் இவரது கவிதை சற்று சிறப்பு அதிகமாக பொருந்தி இருக்கிறது. நச்சென்று ஒரு கருத்து இந்த கவிதை சொல்லி நிற்கிறது. என்ன என்று சொல்லுங்க பாப்போம்.!!?


வலிப்போக்கன்- நீ என்ன ஆளு.? என்னும் தலைப்பின் கீழ் இவரது கவிதை சற்று நடை தளர்ந்து இருப்பது போல உணர்கிறேன். மனிதனின் இயல்பை கூறி நிற்கிறது இந்த கவிதை.

இப்போதைக்கு இவ்வளவு தான். அப்பரமா பாப்போமா.?

''ஒற்றை புரட்சியின் முடிவு ஒருவனுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கவேண்டும் அல்லது வீரமரணமாக வேண்டும்''-சே குவேரா

15 comments:

  1. புதியவர்கள் பட்டியல்.
    பார்க்கவேண்டும்.நன்றி தம்பி !

    ReplyDelete
  2. பலர் புதியவர்கள்....பார்க்கிறேன்...

    ReplyDelete
  3. அறியப்படாதவர்களாய் அறிமுகப் படுத்துவதற்கு நன்றி

    ReplyDelete
  4. வந்துவிட்டேன் சகோ இன்னும் படிக்கவில்லை மற்ற கவிதைகளை
    படித்துவிட்டு ம்றுமொழி இடுகிறேன்

    என்னை வலையுலக உறவினர்களுக்கு
    அறிமுகப்படுத்தியத்ற்கு நன்றி

    ReplyDelete
  5. பாஸ்....தேடல் புதுமையாக இருக்கு.

    கலக்குறீங்க.

    ReplyDelete
  6. செல்வம் முனியாண்டி அவர்களின் ப்லாக் சூப்பர் ரூ கூர்...மற்ற படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்...வெகுவாய் உங்கள் உழைப்பு தெரியுது...

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியற்கு மிக்க நன்றி நண்பரே..

    ReplyDelete
  8. கவிதைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையாய் உள்ளன
    உங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்
    மீண்டும் இணைவோம்

    ReplyDelete
  9. புதியவர்கள் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. திறமையுள்ள புதியவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி கூர்.

    ReplyDelete
  11. சகோ புதிய படைப்பாளிகள் பற்றிய தேடல் அருமை...பலர் வெகு நாட்களாய் பதிவுலகில் இருந்தாலும், உன் படைப்பிலே, முகவரி அறிந்தோம்...நல்ல உழைப்பு....வாழ்த்துக்கள்... இந்த பதிவுக்கும்...பதிவில் பகிர்ந்த பதிவருக்கும்...சுல்தான் அவர்களின் கவிதையை படித்தேன்...மேலும் அவர் எழுத முயற்சிக்கலாம்...கண்ணீர் பற்றிய கவிதையும் சூப்பர்...அனைத்து கவிதையும் அருமை....அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம் சகோ .....

    ReplyDelete
  12. அறியாமல் இருந்த என்னை
    அறியவைத்த கூர்மதிக்கு நன்றி!நன்றி!

    ReplyDelete
  13. என்னுடைய வலைத்தளத்தில் முதல் முதலில் கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி. மேலும் இந்த கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு மிக மிக நன்றி.மறைந்துகிடக்கும் கவிதைகளை வெளிகொணர்ந்த உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. நன்றி கூர்மதியன்! :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  15. நன்றி கூர் மதியன்.
    :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது