07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 5, 2011

மிக்ஸியில் போட்டு அரைச்சிட்டோம்ல.!!

ஹலோ.! என்னடா பதிவு தலைப்புனு யோசிக்கிறீங்களா.? அதாங்க மிக்ஸியில் எல்லா பொருளையும் போட்டா ஒரே கலவையா வரும்ல அது மாதிரி வித்யாசமான பதிவர்கள போட்டு மிக்ஸிங் அடிச்சிருக்கேன். நேரா போய்டுவோம்.

விஜயகாந்தை கூடுதல் பாதுகாப்பு ஏற்க சொல்லி அவரது தொண்டர்கள் சொல்வதாக நம்ம பதிவர் அன்புதாசன் கூறுகிறார். அந்த லெப்டு கால சுவத்துல வச்சு ரைட்டு காலால சுத்தி சுத்தி அடிக்கிற ஸ்டைலு மறந்துட்டாங்க போல.

இந்த வலைப்பூ சற்று வித்யாசமானது. பலதரப்பட்ட செய்திகளை படித்து அதை விமர்சிப்பது போன்று அமைந்தது தான் இந்த ஆணிவேர் வலைப்பூ. இது உண்மையில் ஒரு சிறப்பான யுக்தி. அரசியல்வாதிகளுக்கு அறிவுரை போன்ற அவரது பதிவு உண்மையில் சிறிது நகைப்பு.

இந்திய கருப்பு பணத்தை அயல்நாட்டில் கொண்டுள்ள 15பேர் பட்டியல் இருக்கிறது. வராகன் என்னும் பதிவர் குறிப்பெடுத்து வெளியிட்டிருக்கார். போய் எல்லாரையும் வசை பாட ஆரம்பிக்க வேண்டியது தானே!

இறைவன் யேசு பற்றிய முழு வலைப்பூ என்றே சொல்லலாம். முற்றிலும் அவரை பற்றிய சிந்தனை ஓட்டமாகவே இருக்கிறது. உலகத்தை என்ன பாதுகாக்கும் என்று அவர் பாணியிலே சொல்கிறார்.

INAS என்ற பதிவர் அபேகஸ் உபயோகபடுத்தி நொடிபொழுதில் விடையை சொல்லும் மாணவர்களின் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அருமையாக இருக்கிறது. போய் பார்க்கலாமே.!!

ஒரே ஒரு பதிவு. நச்சென்று மனிதகடவுள் டாக்டர்களை விமர்சிப்பது போல இருக்கிறது. குறைகளை சொல்லி தீர்வு கிடைக்குமா என்று ஏங்குகிறார். கடலாமை பதிவரை கொஞ்சம் போய் ஊக்குவியுங்க.

இது ஒரு வித்யாசமான வலைப்பூ. இந்த வலைப்பூ மக்கள் எழுதுவதை நிறுத்திவிட்டனர். இது சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்தியது. தொடங்கிய சில நாட்களிலே கைவிட்டு விட்டனர் போலும். ஆதிகால மனிதன் மொழியை விளக்குகின்றனர்.

செழுங்காரிகையாக தமிழை சொல்லிக்கொடுக்க வருகிறார். இங்கு இருக்கும் பலருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொன்றிர்க்கும் குறள் வைத்து சொல்லிகொடுப்பது மேலும் சிறப்பு.

கிச்சா என்ற பதிவர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பின்னர் நடந்த ஒரு நிகழ்வை நக்கலடித்து ஒரு சிறிய பதிவு போட்டிருக்கார். வேலை இல்லாதவர்கள் இவர் பதிவை படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

''கியூப புரட்சி நிலைக்குமா இல்லையா என்று எனக்கு தெரியாது. அப்படி நிலைக்காமல் போனால் என்னை என்னை அகதிகளிடத்து தேடாதே.! என் கை துப்பாக்கியை எடுத்துக்கொண்டு விடாமல் எதிரிகள் முகாமில் போர் செய்துகொண்டிருப்பேன்''-சே குவேரா

5 comments:

  1. ஆஹா...அரசியல் அதிரடிப் பதிவுகளை,
    அரைச்சுக் கொடுத்திருக்கிறீங்களே,

    நன்றி சகா.

    ReplyDelete
  2. அன்பு நண்பருக்கு என்னுடைய ப்லொக்கில் followets விட்ஜெட் இல்லை எப்படி இணைப்பது
    பார்க்க www.sparkkarthi.blogspot.com

    ReplyDelete
  3. பல்சுவை பதிவர்கள் தொகுப்பு அருமை சகோ...வித்யாசமான பதிவுகள், தெரியாத பதிவர்கள், என பலரை அடையாளம் காட்டியுள்ளீர்கள்...நன்றி சகோ உங்களுக்கும்...உங்கள் தேடலுக்கும்

    ReplyDelete
  4. நன்றி அறிமுகத்திற்கு.

    தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்

    வலைதலம் வர நேரம்

    கிடைக்காததே காரணம்

    அன்புடன்

    வராகன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது