07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 4, 2007

விடுபட்டவை! இதுவே கடைசி பதிவாகவும் இருக்கலாம்!!

எப்போதோ படித்த சுஜாதாவின் கதையை என்னால் இன்னும் மறக்க முடியாது. நண்பன் ஒருவனைத்தேடி அவன் வீட்டுக்கு வருவார் ஒருவர். திண்ணையில் அமர்ந்து வாசலில் விளையாடிக்கொடிருக்கும் நண்பனின் குழந்தையிடம் பேச்சுக்கொடுப்பார்.

"ஒம் பேர் ன்னா?"
"ச்சூல் போறியா?"
"எத்தனாப்பூ?"
"அப்பா இக்காரா?"
"உன்க்கு அப்பா பிக்குமா? அம்மா பிக்குமா?" என்று குழந்தைகளில் பேசுவது போலவே அதனோடு பேசிக்கொண்டிருப்பார். அந்த குழந்தையோ..

"ரம்யா"
"ஸ்கூல் போகிறேன்"
"தேர்ட் ஸ்டாண்டேர்டு படிக்கிறேன்"
"உள்ளே வேலையாக இருக்கிறார்"
"ரெண்டு பேரையும் பிடிக்கும்" என்று தெளிவான மொழியில் பதில் சொல்லிக்கொண்டிருக்கும். இவரோ குழந்தை போல அதனுடன் கதைத்துக்கொண்டு இருப்பார். "அப்பாவை பாக்க லாஜூ வந்திருக்கேன்னு சொல்லு.." என்று குழந்தையை வீட்டுனுள் அனுப்பி வைப்பார் அவர். உள்ளே வந்த குழந்தை அப்பாவிடம், "அப்பா, ராஜூன்னு உன்னோட ப்ரண்ட் வந்திருக்கார் உன்னை பார்க்க. திண்ணையில உட்கார்ந்திருக்கார். ஆமாப்பா.. அவரு ஏன் தம்பி பாப்பா மாதிரியே பேசுறார்? என்று ஒரு கேள்வியைக்கேட்பதுடன் கதை முடிந்து போகும்.

குழந்தைகள் உலகம் அலாதியானது. நம் எல்லோராலும் அவர்கள் உலகினுள் பிரவேசிக்க முடியாது. ஆனால் அவர்கள் அநாயசமாக நம் உலகினுள் நுழைந்துவிடுவார்கள். இதோ அஞ்சலி பாப்பாவின் குட்டிக்கதை. உலகினுள் நுழைய முயன்று பாருங்கள்!

☃☃☃☃☃☃☃☃☃

தான்யா எழுதிய இந்த பதிவு குறித்து பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். தொடர்ந்து இச்சமூகம் பெண்கள் மீது தொடுக்கும் தாகுதல் குறித்தும் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால்.. வலி! இதை உணர்ந்தவர்களால் மட்டுமே சரியாக சொல்லமுடியும். தீயில் எரிபவனைப் பார்த்து. ச்சுகொட்டிக்கொண்டு.. அவன் வலியை உணர்ந்து விட்டேன் என்பதற்கும், எரிந்துகொண்டிருப்பவன் அந்த வலியை உணர்வதற்கும் பில்லியன் வித்தியாசங்கள் உண்டு!

☃☃☃☃☃☃☃☃☃

சிறுகதைகள் வாசிப்பதில் ஆர்வம் மிக்கவரா, புனைவுகள் ஒரே வட்டத்துக்குள் சுற்றிவருவதான புலம்புகின்றவரா.. அப்படியானால் நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டிய சிறுகதை இது. மொழியும் நடையும் வித்தியாசமானவை. பத்தி பிரிக்காமல் இருப்பது வாசிப்பதற்கான இடையூறு! :(

☃☃☃☃☃☃☃☃☃

எதுபற்றியும் ஆண்கள் மட்டும் பேசலாம். பெண்கள் எதைப்பேசினாலும் உடனே மண்ணை கீறி பூதங்கள் வெளியே வரத்தொடங்கி விடும். அவற்றைக்கண்டு பயப்படாமல் இருப்பவர்கள் குறைவு. பெண் உடலுக்குள் ஆண் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்க. அதன் குரலை அதன் இயல்பில் பதிவாக்கி இருக்கிறார் கறுப்பி.

{தொடரலாம்.. தொடர முடியாமலும் போகலாம். அதலான இப்பவே சொல்லி விடுகிறேன்}

வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி!

2 comments:

  1. அந்தக்கதை எழுதியது ராஜேஷ்குமார் பாலபாரதி :)

    ReplyDelete
  2. பதிவின் தலைப்பைப் பார்த்து திகைத்துப் போனேன் சில விநாடிகள். :-))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது