07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 7, 2007

நான் பரிமாறிய பதார்த்தங்கள்-1

உப்புமா கிண்டினதோட காணாமல் போயிட்டானே! ஊசிப்போச்சுடா சீக்கிரம் வா-ன்னு எல்லாரும் கூப்பிடுற அளவுக்கு ஆகிப்போச்சு... ரெண்டு நாளா ஆணி புடுங்குற வேலை! மறுமொழிகளில் என் மேல நம்பிக்கை வச்சு வாழ்த்தி(!?)க் கூப்பிட்ட அனைவருக்கும் நன்றிங்க! உப்புமாவோட சுவையைப்பற்றி காசிலிங்கம் அவர்கள் எழுதிய பதிவுக்கு ஒரு சுட்டி கொடுத்து அவரே சரம் தொடுக்கிற பணியில உதவியிருக்காரு! அவருக்கும் நன்றி!

வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பித்த பிறகு அதில் என்னைக் கவர்ந்த விசயங்களைத் தொகுத்து வைத்ததோடு மட்டுமல்லாமல், 'உண்மை' இதழிலும் அவற்றைப் பிரசுரித்து வலைப்பூக்களைப் பற்றிய அறிமுகத்தை எங்கள் வாசாகர்களுக்கு வழங்க விரும்பினேன். வலைப்பூக்களில் நமக்கே நமக்கு என்று இடம் இருந்தாலும் அச்சு ஊடகத்தில் வெளிவருவதும், யாரோ ஒருவர் நம்முடைய படைப்பை சிறந்ததென்று தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் பெரும் மகிழ்ச்சிதானே! யாரோ சமைத்து நான் பரிமாறிய பதார்த்தங்களை ('உண்மை'யில் வெளிவந்த வலைஞர்களின் படைப்புகளை) இங்கு பட்டியலிடுகிறேன்.

சமா.இளவரசனின் இந்தக் கட்டுரை பல இடங்களிலும் மீண்டும் பதிக்கப்பட்டது. தங்களுக்கெதிரான எதன்மீதும் காகித அம்புகளால் போர்தொடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் புதிய குருஷேத்திரமாக இணையம் மாறிவிடுமோ என்ற எச்சரிக்கையின் காரணமாக உண்மையில் எழுதப்பட்ட கட்டுரை. பிறகு வலைப்பதிவாக இடப்பட்டது.

ஊடகங்களில் உயர்ஜாதியினரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி, அப்படியிருப்பின் அவற்றில் சமூக நீதிக்கெதிரான குரல் தானே ஒலிக்கும் என்பதனை தெளிவுபடுத்திய சுந்தரவடிவேல் அவர்களின் கட்டுரை 2007 அக்டோபர் 16-31 உண்மை இதழில் வெளிவந்தது.

ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது நான் நன்கு அறிந்ததே. திராவிடர் கழக மாநாட்டு அலுவலகத்தைத் தாக்கி, அதன் பின்னும் மாநாட்டிற்கு ஒத்துழைத்த ரிக்சாகாரரை தாக்கிய 1980-களில் இருந்து, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அண்ணன் சிகாமணி அவர்களை பாம்பன் பாலத்தின் நடு வழியில் அரிவாள் கொண்டு தலையில் வெட்டி, அரை மயக்க நிலையில் அவர் காவல் நிலைய வாசலில் வந்து விழுந்த 1990, தி.க. பிரச்சாரக் கூட்டத்தில் வந்து கலகம் செய்த 2000 வரைக்கும், ஏன் இன்றைய ராமன் பால விவகாரம் வரை, வடநாட்டுக் காசு ஆர்.எஸ்.எஸ்.-சை அங்கு எப்படி வளர்த்திருக்கிறது என்பதை தொடர்ந்து கவனித்தே வருகிறேன். இதோ ராமேஸ்வரம் மண்ணின் மைந்தரும், ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி எடுத்தவருமான பாலபாரதி (இப்படிச் சொல்லி பா.க.ச தலையை அசிங்கப்படித்திட்டியேடா..பிரின்சு) அவர்களின் "பிஞ்சுகளைக் குறிவைக்கும் மதவாதம்" (டிசம்பர் 1-15, 2006 உண்மை)

வரதட்சணை வாங்குவதை குடும்பத்தின் பேர்சொல்லி அனுமதிக்கும் பொறுப்பற்றதனத்தை (எஸ்கேப்பிசத்தை) சாடிய பொன்ஸ்-ன் "இலவசமாய் ஏதுமில்லை" சிறுகதை. (உண்மை டிசம்பர் 16-31, 2006)

தனது வெப் ஈழம் இணையதளத்தின் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளையும், ஈழச்செய்திகளையும் பகிர்ந்து வந்த தோழர் வி.சபேசன் அவர்களின் படைப்புகள் அவ்வப்போது உண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில "பெண்களை இழிவுபடுத்தும் ஜோதிடம்" (உண்மை பிப்ரவரி 16-28, 2007 & எனது பதிவில்..)

பெண்னடிமைச் சின்னமான தாலி உருவானது பற்றிய குறுங்கதை (உண்மை மார்ச் 1-15, 2007)

இதன் அடுத்த பாகம் இன்னிக்கே போட்டுறேங்க. அப்புறம் இன்னிக்கு காலையில கூட உப்புமா தான் சாப்பிட்டேன். நிஜம்மா!

1 comment:

  1. பரிமாறிட்டேன்.. யாரும் பசியாறலையா?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது