07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 25, 2007

சீரியஸ் பதிவர்கள் & கும்மி பதிவர்கள்

எனக்கு ரொம்ப சீரியசான விசயம், அல்லது அழுகாச்சி காவியம் என்றாலே நாம அந்த பக்கத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, நம் பணி கும்மியும் கும்மி சார்ந்த மக்களுமே என்று ஒதுங்கிவிடுவது நம் இயல்பு.

வலையுலகில் கும்மி, மொக்கை மக்கள் அடிக்கடி சொல்வது எங்களுக்கு சீரியசாக எழுத வரும் ஆனால் சீரியஸாக எழுதும் மக்களே உங்களுக்கு நகைசுவை யாக எழுத வராது, ஒருவரை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம், அப்படி இப்படி என்று பில்டப் கொடுப்பார்கள்.

ஆனால் அப்படி சீரியசான நண்பர்கள் சிலர் செம காமெடியாகவும் எழுத வரும் என்று நிருபித்து இருக்கிறார்கள் ஆகையால் அப்படி பட்ட சீரியசான ஆட்கள் எழுதிய நகைசுவை பதிவுகளை முதலில் பார்ப்போம்.

ரொம்ப சீரியசான அரசியல் விவாதங்களிலும், சூடான இடுகைகளிலும் மட்டுமே இவரை பார்கலாம்அப்படியா பட்ட குழலி அவர்கள் எழுதிய புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது படிக்கும் அனைவரையும் சிரிக்கவைத்தது.

அடுத்து பின்நவீனத்துவ ஆள் புரியாத கவிதைகளை போட்டு கலக்கும்(வயிற்றை), கலங்க (மூலையை) வைக்கும் கட்டுடைக்கும் ஆள் சுகுணாதிவாகர் எழுதிய "சீரியசாக எழுதுவது எப்படி? - கும்மிப்பதிவாளர்களின் அவசரக்கூட்டம்" இதை படித்தால் சிரிக்காத ஆள் கூட நிச்சயம் சிரித்துவிடுவார்கள்.

வரவனையான் எழுதிய "யார் வீடு " (இவரு எப்ப சீரியஸ் எப்ப காமெடி செய்வார் என்று ஒன்னுமே புரியமாட்டேங்குது. ரன் அவுட் டவுட்டா இருந்தா அதன் பலனை பேட்ஸ் மேனுக்கு கொடுப்பது போல், இங்கு வரவனையானை சேர்த்து விட்டேன்)

அடுத்து செந்தழல் ரவி எழுதிய டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் 'கவிஜ'ர்கள் (என்னது நான் சீரியசான ஆளா என்று என்னை அவர் அடிக்க வந்தாலும் வரலாம் அவர் கடைசியாக எப்பொழுதுமொக்கை பதிவு போட்டார் என்றே அவருக்கே மறந்து போய் இருக்கும். அதனால் தான் அவர சீரியசான ஆட்கள்லிஸ்டில் சேர்த்தாச்சு.(திரும்ப பழைய பார்முக்கு வரவேண்டுகிறேன்).

அடுத்து இவர்களை எல்லாம் விட மிகவும் சீரியஸான ஆள் ஒருவர் இருக்கிறார் , அவர் செம டென்சன் பார்ட்டி திடிர் என்று பயங்கர சீரியஸ் ஆகிவிடுவார், சோ மரியாதையாக சார் என்றே சொல்வோம், சார் பயங்கர சீரியஸ் எப்ப பார்த்தாலும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு தான் இருப்பார். அவரு செஞ்ச லொள்ள பாருங்க அவரு பேரை கூட சொல்ல பயமாக இருக்கு. அதான் பேரை சொல்லவில்லை. பதிவை பாருங்க.


**********************

அடுத்து நம் மக்கள் அதாங்க மொக்கை பதிவர்கள் போட்டு தாக்கி கண்ணில் நீர் வரும் படி சிரிக்க செய்தஆட்கள் பற்றி பார்கலாம்.

முதலில் கலாய்த்தல், நக்கல் என்றாலே வலையுலகில் நினைவுக்கு வருபவர் நம்ம சிபிதான். அவர் பால பாரதி பற்றி எழுதிய நரசிம்ம ராவ் போன்ற ஆட்களையே சிரிக்க வச்சிடும். பாலபாரதி : சும்மா கேட்டவுடன் அதிருதில்ல!

அடுத்து நம்ம தேவ் எழுதிய எம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர் என்ற பதிவு.

நம்ம லக்கி எழுதிய தமிழ்மணம் – இந்த வாரம்

அபிஅப்பாவோட 'அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும்' இவரு பேச்சும் அதே போல் இருக்கும், ஆளும் நாகேஷ் மாதிரிதான் இருப்பார் அதனால் இவரை பார்த்தாலே சிரிப்பு வரும், ஒரு முறை மீசையை எடுத்துவிட்டு அவர் முகத்தை குளோசப்பில் காட்டினார் அன்னைக்கு அழுகையே வந்துச்சுன்னா பார்த்துகுங்களேன் ஆள் எப்படி இருப்பாருன்னு அன்னைக்கு தேம்பி தேம்பி அழும் பொழுதுதான் நண்பர் கொடுத்த லிங் அது.


கண்மணியோட 'ச்சுப்ரமணிக்கு இனிஷியல்' இப்படி நிறைய பேர சொல்லிக்கிட்டே போகலாம்.

தம்பி கோபி எழுதிய நாங்களும் ஓட்டுவோம்ல.... பதிவு கொசுவத்திதான் ஆனா தம்பி எழுதியவிதம் கமெடியாகவும் அதே சமயம் நம்மளையும் கொசுவத்தி சுத்தவச்சுடுச்சு!!!

ஆனா பாருங்க நாம எல்லாம் படிச்சோமா மறந்தோமா, பிட் வச்சு அடிச்சு பாஸ் செஞ்சோமா என்று இருக்கிற ஆளுங்க, அப்படி பட்ட நான் மறக்காம நினைவில் வைத்து இம்புட்டு பேரு லிங் கொடுத்து இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது என்னையே நம்ப முடியவில்லை.

உங்களுக்கு தெரிந்த சூப்பர் காமெடி பதிவு இருந்தா சொல்லுங்களேன்!!!

9 comments:

  1. இவ்வார வலைச் சரத்தில் நம்ம பதிவையும் இணைத்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் குசுமபரே !

    ReplyDelete
  2. நல்ல கும்மிகளா தொகுத்து கொடுத்ததுக்கு நன்றிங்கண்ணா.

    ReplyDelete
  3. எனக்கு ரொம்ப சீரியசான விசயம், அல்லது அழுகாச்சி காவியம் என்றாலே நாம அந்த பக்கத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு// namma caseu :-)

    ReplyDelete
  4. \\அடுத்து இவர்களை எல்லாம் விட மிகவும் சீரியஸான ஆள் ஒருவர் இருக்கிறார் , அவர் செம டென்சன் பார்ட்டி திடிர் என்று பயங்கர சீரியஸ் ஆகிவிடுவார், சோ மரியாதையாக சார் என்றே சொல்வோம், சார் பயங்கர சீரியஸ் எப்ப பார்த்தாலும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு தான் இருப்பார். அவரு செஞ்ச லொள்ள பாருங்க அவரு பேரை கூட சொல்ல பயமாக இருக்கு. அதான் பேரை சொல்லவில்லை. பதிவை பாருங்க.\\

    அண்ணே...நீங்க குசும்புன்னு மீண்டும் நிருப்பிச்சிட்டிங்க...

    அப்புறம் ஒரு பெரிய நன்றி :))

    ReplyDelete
  5. குசும்பன் இப்படி கூட எழுத முடியுமா??

    ReplyDelete
  6. தேவ் | Dev said...
    இவ்வார வலைச் சரத்தில் நம்ம பதிவையும் இணைத்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் குசுமபரே !"

    தேவ் என்னா இப்படி நன்றின்னு ஒரு வார்த்தையில் சொல்லிட்டீங்க, அபி அப்பா இதுக்கு எம்புட்டு செலவு செஞ்ச்சாருன்னு கேட்டு பார்த்து அதை DD எடுத்து அனுப்பவும் ( இன்கம் டாக்ஸ் பிராபிளத்துக்காக இங்கு நான் தொகையை சொல்லவில்லை:))

    ReplyDelete
  7. J K said...
    நல்ல கும்மிகளா தொகுத்து கொடுத்ததுக்கு நன்றிங்கண்ணா."

    தங்கள் வருகைக்கு நன்றி JK:)

    ReplyDelete
  8. ramachandranusha(உஷா) said...
    எனக்கு ரொம்ப சீரியசான விசயம், அல்லது அழுகாச்சி காவியம் என்றாலே நாம அந்த பக்கத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு// namma caseu :-)"

    அப்ப சியர்ஸ்:)))

    ReplyDelete
  9. கோபிநாத் said...
    \\செஞ்ச லொள்ள பாருங்க அவரு பேரை கூட சொல்ல பயமாக இருக்கு. அதான் பேரை சொல்லவில்லை. பதிவை பாருங்க.\\

    அண்ணே...நீங்க குசும்புன்னு மீண்டும் நிருப்பிச்சிட்டிங்க..."//

    இதான் தம்பி சீரியசான்னு சொன்னா வெளையாட்டா எடுத்துக்கிற, விளையாட்டா சொன்னா சீரியசா எடுத்துக்கிற!!! அது நிஜம்!!!

    அப்புறம் ஒரு பெரிய நன்றி :))

    தேவுக்கு போட்ட போட்ட கமெண்டுக்கு உன் பாணியில் ரிப்பீட்டே போட்டுக்க!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது