07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 23, 2007

வண்ண மாலை 5 - கவி(தை) மாலை !

புரிதல்கள் அல்லது தகவல் பரிமாற்றம், அறிவு சார் பரிமாற்றம் என்பதை மக்கள் மன்றத்தின் முன்வைப்பதில் 'படம்' போட்டு விளக்குவது முதன்மையானது. கார்டூன்கள் எனப்படும் கேலிச்சித்திரங்கள் புகழ்பெற்றதற்குக் காரணம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி. அதற்கு அடுத்த நிலையில் இருப்பவை கவிதைகள் கவிதைகள் இயற்கையை, சமூக அவலங்களை, நடப்புகளை, உறவுகளை சிறிய வடிவத்திற்குள் பொருள்பட செதுக்கி வெளிக் கொணருபவை, அதன் பிறகு கட்டுரைகள், சொற்பொழிவுகள்.

மற்றவற்றைவிட நான் ரசிப்பது, நேசிப்பது கவிதைகளைத்தான். உணர்வுகளும், மொழியும் ஒரு சேர இருப்பதால் கவிதைகள் என்றுமே உணர்வு பூர்வமானவை, மொழிகளின் ஆதாரமானவை. உலக மொழிகள் தம்மை புதிப்பித்துக் கொள்ளும் போது புதினங்கள் தோன்றுகின்றன. அப்படி தோன்றிய புதினங்கள் மூலம் மொழி வளர்சிக்கு ஊற்றாக அமைந்துவிடுகின்றன. புதினங்களை தோற்றுவித்து வளரும் உலக மொழிகளுள் ஒன்றானதும், இந்திய மொழிகளுக்குள் முதன்மையானதும் நம் தமிழ் மொழிக்கு அதில் என்றுமே நிலையான இடம் உண்டு.

செய்யுள், மரபுகவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ எனப்படும் குறும்பா போன்றவை எண்ணில் அடங்காவண்ணம் தமிழ் அன்னையின் மலர்படுக்கையாகவே கிடக்கின்றன. நாள்தோறும் வண்ணப் பூக்கள் போல் கவிக் கொத்துகளாக அவை மலந்து கொண்டே இருக்கின்றன.

80 களில் புதுக்கவிதை புதிய வடிவம் பெற்றது அதற்கு முன்பும் இருந்தது ஆனால் கவனம் பெறவில்லை. புலவர்கள் நா.காமராசன், மு.மேத்தா, அப்துல்ரகுமான், முத்துலிங்கம், வைரமுத்து,வாலி மற்றும் பலருடைய கவிதைகள் தமிழர்களை கவிதையின் பக்கம் திரும்ப வைத்தது.

ந.காமராசன் எழுதிய விளைமகளிர் பற்றிய கவிதையின் சில வரிகள் என்றும் நினைவில் நிற்கிறது.

'நாங்கள் ஆடை வாங்குவதற்காக நிர்வாணத்தை விற்கிறோம் ! "
"நாங்கள் மன்மத அச்சகத்தின் மலிவு பதிப்புகள் ! "

என்பது போன்ற சுடும் வரிகளுக்குச் சொந்தக்காரர் அவர். மற்றவர்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போக முடியும்.

அது போல ஹைக்கூ கவிதைகள் ஊசி வெடிபோல சுருக்கென்று தைக்கும். நானும் சில ஹைக்கூ கவிதைகளை எழுதி இருக்கிறேன்.

"மார்கழி மாத கடுங்குளிரில், வெள்ளை மாவெடுத்து
புள்ளியும் பூவுமின்றி
தன் கோலத்தைப் போட்டுக் காட்டினால் விதவைத்தாய்"

பூவும் பொட்டுமின்றி இருக்கும் தன்னுடைய நிலையை கோலத்தின் மூலம் வரைந்து காட்டுகிறாள் என்ற மறைபொருளுடன் அது அமைந்தது. மற்றுமொரு கவிதை அதே போன்றுதான்

"அப்பாவுக்கு அருகில் படமாக சேர்ந்ததும்
இன்றுதான் என் அம்மா
மீண்டும் மங்களகரமாக மாறி இருக்கிறாள்"


நம் நாட்டில் விதவை என்பது சாபக்கேடான ஒன்றாக இருக்கிறது. கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்து வைப்பதில்லை என்ற சோகம் ஒருபக்கம் இருந்தாலும், அவளின் தோற்றத்தையே மாற்றி வைத்து முடக்கிப் போட்டு வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் கொடுமையாக இருக்கிறது. அதைத்தான் சொல்ல முயன்றேன். அப்பா இறந்த பிறகு பொட்டையும் பூவையும் இழந்தவள், உயிருடன் இருந்த போது கிடைக்காத ஒன்று அவள் இறந்த பிறகு மீண்டும் ஒட்டிக் கொள்கிறது. தற்பொழுது இந்நிலை அவ்வளவாக இல்லை என்பது, நம் வாழும் காலத்தில் உணர்ந்து கொள்ளும் வகையில் நடந்த நல்மாற்றம். விதவைகள் மறுவாழ்வும், பெண் கல்வியும் இந்திய சமூகத்திற்கு இன்றியமையாதவைகள்.

பதிவுலகில் என்னைக் கவர்ந்த கவிஞர் பலர், அவற்றில் பிச்சனிக்காடு இளங்கோ போன்ற சிலர் தமிழ்மணத்திற்கு வெளியிலும் இருக்கிறார்கள். அவர்களை தின்னை, பதிவுகள், தமிழோவியம் போன்ற இணைய இதழ்களில் வாசிக்கிறேன்.

தமிழ்மணப் பதிவர்களில் ப்ரியன், அருட்பெருங்கோ ஆகியவர்களில் எல்லா கவிதைகளுமே சிறப்பாக இருக்கும், எனவே குறிப்பிட்டு சொல்வதை தவிர்கிறேன். தமிழ்நிதி அவர்கள் எழுதிய கற்பின் இருப்பு, ஆண்மை மற்றும் அவருடைய பல கவிதைகள் கண்ணுள் புகுந்து மனதை எரிக்கும் ஆற்றல் பெற்ற தீப்பிழம்புகள். ஆண்களும் பிரசவிக்கிறார்கள் ... உண்மைதான்.... இளாவின் ஜனனம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். சுகுனா திவாகரின் ஆசிட் கவிதைகள் கண்ணையும் பொசுக்கும். கை கொடுக்கும் கை எது ? கொடுப்பவர் எவர் பெற்றவர் எவர் ? அசைப்போட்டு கொண்டு இருக்கிறார் விஎஸ்கே ஐயா. கொல்லிமலைச் சாரலில் என் எஸ் ஜெயகுமார் - புதிய பதிவர்களில் சிறப்பாக புதுக்கவிதை புனைபவரில் குறிப்பிடதக்கவர். இதைத்தவிர எனது மற்ற இரு நண்பர்களான பெண்ணிய கவிதைகள் எழுதும் / வெளியிடும், சுகிர்தராணி புகழ் மகி என்கிற பெ.மகேந்திரன், நாமக்கல் சிபியார் ஆகியோரும், ஆசிப் மீரான் அவர்களும் நல்ல கொலைவெறி கவிஜையாளர்கள்.



வலைச்சரத்தில் நான் தொகுத்தவை அனைத்தும் எனக்கு நினனவுக்கு வந்தவற்றில் சில வலைப்பூக்கள். இத்துடன் எனது வலைச்சர தொகுப்பு நிறைவுறுகிறது. இது சிறந்த வலைப்பதிவுகள் எது என்பதற்கான அளவுகோள் அல்ல மறாக சில பரிந்துரைகள் மட்டுமே. வாய்பளித்த பொன்ஸ் மற்றும் வலைச்சரம் குழுவினருக்கும், வலைச்சர வாசகர்களுக்கும், பின்னூட்டத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பாராட்டிய பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. அடுத்து வரும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது