07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 25, 2008

செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் !

கடந்த ஒரு வார காலமாக, வலைச்சரத்தின் ஆசிரியராகப் பணியாற்றிய அருமை நண்பர் சதங்கா, புதுமையாகவும் பயனுள்ளதாகவும், இதுவரை பலருக்கு அறிமுகம் ஆகாத பதிவுகளையும் தேடிப் பார்வைக்குத் தந்தமை பாராட்டுக்குரியது. . தினம் ஒரு பதிவெனத் திட்டமிட்டு காலையில் குறித்த நேரத்தில் பதிவிட்ட கால ஒழுங்கு மிகவும் பாராட்டத் தக்கது.

தலைப்புகளே கவிதையாய் இருப்பது புதுமை அல்லவா !
பின்னுவது கவிதை
அளப்பது கதை
மணப்பது சுவை
கட்டுவது கதம்பம்
சுற்றுவது பயணம்
விடுப்பது நன்றி : அருமையான அமைப்பல்லவா !

உழைப்பிற்கும் முழு மன ஈடுபாட்டிற்கும் மிக்க நன்றி - நல்வாழ்த்துகள்
--------------------------------------------------------------------------------------------

அடுத்து, மே 26 - திங்கட் கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு அருமை நண்பர் அம்பி வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். அவர் பெங்களூரில் வசிக்கிறார். தான் மகிழ்ந்தும், பிறரை மகிழ்விக்கவும் விரும்புகிறார். அம்மாஞ்சி என்னும் வலைப்பூவிலும் பிளாக் யூனியன் என்னும் குழும வலைப்பூவிலும் எழுதி வருகிறார். பொதுவாக, சுமையில்லாது சுவைக்கக் கூடிய பகுதிகளாக, களிப்புடன் தருகிறார்.
அவரை வலைச்சரத்தின் சார்பிலும், பொறுப்பாசிரியர் என்ற முறையிலும் வருக வருக என வரவேற்கிறேன். நல்வாழ்த்துகள்

Cheena ... (சீனா)




1 comment:

  1. இப்ப தான் டூர்ல இருந்து ரிடர்ன். மிக்க நன்றி சீனா ஐயா.

    வாழ்த்துக்கள் அம்பி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது