07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 24, 2009

வலைச்சரத்தில் வாலி

வலைச்சரத்தில் சிறப்புப் பதிவுக்காகக் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய* கவிதை.

 

11.kavinjar vali

சாளரம் திறந்து வைத்தாய் பவனந்தி கார்க்கி

பல நேரம் பலருக்கு நீதானே ஊக்கி (2)

உனக்குப் போட்டியாய் மலேசியாவில் விக்கி

வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா ஜக்கி (2)

சறுக்கல் வருவதுண்டு ஊட்டிமலைச் சரிவில்

சிறு விரிசல் வரலாமா பரிசல்காரன் பதிவில் (2)

கடல் நடுவே நிற்கின்றார் குறள் தந்த அய்யன்

பகிரங்கக் கடித மன்னன் நம்ம வால்பையன் (2)

மந்தைவெளி தி.நகர் 5-பி பஸ்சு

பதிவுன்னா என்னைக்கும் கே.ஆர்.எஸ்சு.... (2)

திருவல்லிக்கேணின்னா பார்த்தசாரதி - சுவையா

விடுபட்டவை சொல்ல பாலபாரதி (2)

கதையெல்லாம் நிதர்சனம் கேபிள் சங்கர்

உண்மை தான் ஒத்துக்குறேன் மாபெரும் திங்க்கர் (2)

பதிவுலகில் கிச்சன் குயின் எப்போதும் நீயா...

உன்னைத்தான் கேக்குறேன் பதில் சொல்லு தூயா (2)

ஏழும் மூணுந்தான் எப்போதும் பத்தா?

அடிக்கடி எழுதய்யா லதானந்த சித்தா (2)

அபியும் நானும், டி. ஃபார் திரிஷா

இன்பக்கதை இன்ஃபினிட்டி ஏ. ஃபார் அதிஷா

சாமியே ஐயப்பா சிவஹரி பாலா...

பல வருஷம் எழுதப்பா வடகரை வேலா (2)

கிறிஸ்துவின் கவலையெல்லாம் பாவியரைக் குறித்து

என் விருப்பம் எப்போதும் சேவியரின் எழுத்து (2)

மார்கழியில் திருப்பூரில் எப்போதும் வெயிலாம் - அது

எரிக்கின்ற வெயிலல்ல விருதுநகர் வெயிலான்

 

 

எல்லாருக்கும் சொன்னேன், உன்னைச் சொல்ல மறப்பேனா?

பதிவா உன்னை நான் வாழ்த்தாம இருப்பேனா? (2)

கலைஞர் காவியமாய், எழுதிவைத்த ஓவியமாய் (2)

சென்னை சங்கமமாய், மாங்காட்டுக் குங்குமமாய் (2)

வாழ்க நீ எந்நாளும் விஜயகோபால் சாமி

என் மணையாளைப் பெற்றவளே என்னோட மாமி

 

*தாகக் கற்பனை செய்துகொண்டு நானே எழுதிய... என்ன பாக்குறீங்க நட்சத்திரத்த நட்சதிரத்தோட பொருத்துங்க... எனக்கு வேண்டியதெல்லாம் நீங்க சொல்லும் கருத்துங்க...

12 comments:

  1. ஆஹா

    கவிதை வழி - அறிமுகமா.

    அருமை.

    ReplyDelete
  2. மற்றதெல்லாம் சரி! கடேசி நாலைந்து வரிகளில் வாலி குறிப்பிட்டிருப்பது கொஞ்சம் அதிகமாயிருக்கிறது :)

    ReplyDelete
  3. வாலியை வம்புக்கிழுத்த கோபாலசாமி்
    நீ வாழி

    ReplyDelete
  4. பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னா இருக்கே !!

    ReplyDelete
  5. வித்தியாசமான அறிமுகம்
    வெளித் தெரிக்கிறது சந்தோஷம் !!!

    அருமை.

    ReplyDelete
  6. நல்லாருந்தது:)

    ReplyDelete
  7. வித்தியாசமான அறிமுகம் - வாலியின் ஸ்டைலில் -நன்று நன்று விஜயகோபால்சாமி

    ReplyDelete
  8. ஒரே பதிவிலேயே எல்லோருடய வலையும்! அருமை!

    பகிரங்க கடிதத்தை ஆரம்பித்தது லதானந்த் அங்கிள், பரிசலதை எனக்கு திருப்பி விட்டார், நான் பிடித்து கொண்டேன்

    ReplyDelete
  9. கலக்கீட்டீங்க சாமி :)

    ReplyDelete
  10. மிக மிக ரசித்தேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது