07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 15, 2007

நாருக்கு மேலும் அழகூட்டும் மலர்கள்

மலரில் தேன் இருப்பது இயற்கையே அதனால் தான் தேன்துளி என தன் வலைமலரை பத்மா அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன். அவரது பதிவிலிருந்து:
இந்திய அறிவியல் கழக கூட்டம் மதுரையில் நடந்த போது சிறந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி பதக்கங்கள் வழங்க, அன்று மாலை பிரதமருடன் நடந்த விருந்தில் இளம் விஞ்ஞானிகள் சார்பாக என்னை பேச சொல்ல அழைத்தார்கள். ஐந்து நிமிட பேச்சு இருபது நிமிடமாக ஆனதும், ஆராய்ச்சிக்கழகங்களில் ஆய்வகங்களில் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களின் உடல்நலம் பாதிக்க கூடிய வகையில், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து எடுக்கும் இரத்தம் செல்களை அகற்றிய பிறகு கழிவுநீர்க்குழாயில் கொட்டப்படுவதும், ரேடியோ கதிர்வீசும் வேதிப்பொருட்கள் பயன்படுத்திய சாதனங்கள் சுத்தம் செய்யப்படுவதும் எத்தனை முறைகேடானது என்பது தொடங்கி, அறிவியல் திட்டங்களுக்கான நிதியில் எத்தனை முறைகேடு நடக்கிறது என்பதற்கு AIIMs இல் நடப்பதை சொன்னதும், மறுநாள் வட இந்திய பத்திரிக்கைகள் young scienctist uproar என்று எழுத, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக, என்னை நீக்கிவிடுவார்கள் என்று அண்ணன் பயப்பட, பெற்றொர் கடிந்துகொள்ள இவை யாவும் நடவாமல், ராஜீவுடன் நெருங்கி பழகவும், பாதிக்கப்பட்ட கடைநிலை ஊழியர் சிலருக்கு மருத்துவ உதவி தரவும், அதன் பின் AIIMSஇல் சில மாற்றங்கள் ஏற்பட்டதும் மறக்க முடியாதது.

பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ள பத்மாவின் தேன்துளி கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய ஒரு வலைமலராகும்.

பதினெட்டு வயதில் வீட்டை விட்டு ஓடி, பின் கட்சியை விட்டு, அதன் பின் தமிழ் அறிவு'சீவி' 'குழாத்தை' விட்டு, சீக்கிரமே தமிழ் கல்லை ... மன்னிக்க ... மண்ணை விட்டு ... என தன்னைப்பற்றி கூறும் வளர்மதியின்
வினையானதொகையில்
அரசியல் கட்டுரைகள், நவீன கவிதைகள் என படிக்கவும் யோசிக்கவும் ஏராளமான விசயங்கள் இருக்கின்றன.

அமெச்சூர் கலை ரசிகனாகப்பட்ட நான் என்னைக் கவர்ந்த, கவரும் கலைப் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவே இந்த வலைப்பதிவு என்னும் அறிமுகத்துடன் தொடங்கப்பட்டுள்ள பிறழ்வு என்னும் வலைமலரில் மிகவும் அரிதான பல ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன . சாத்தான் (புனைப்பெயர் என நினைக்கிறேன்) பின்குறிப்பாக எழுதியுள்ளது:
தமிழ்ப் பதிப்பகங்களுக்கு: உங்கள் புத்தகங்களுக்கு அட்டைப் படம் போட இந்தப் படங்களை தயவுசெய்து சுடாதீர்கள். இங்குள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். ஆம் உண்மை தான் சுடுவதும் அல்லாமல் எங்கிருந்து சுட்டோம் என்றும் கூட பலர் குறிப்பிடுவதில்லை என்பது மிகவும் வேதனையான ஒரு விசயம்.

இந்த வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்கள் மற்றும் படைப்புகளின் பட்டியல் இங்கே.

நெருப்பாக கொதிக்கும் மலர்களும் உண்டோ என சிலருக்கு சந்தேகம் வரும் அசுரனின் வலைமலரை பார்த்தால் அது உண்மையென்று புரியும். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் அக்னி துண்டங்கள் என்றால் மிகையாகாது. சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தொடர்ந்து எழுதிவரும் அசுரனின் படைப்புகள் நிதர்சனத்தை வெளிச்சப்படுத்துகின்றன.

ஈழத்து வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் பொடிச்சி. அவர் கூறுவதை கேளுங்கள்:
2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள…. ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாது சிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்கு ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல.

என்று சொல்லும் பொடிச்சியின் வலைமலரில் ஈழத்து செய்திகளுடன் வேறு பல முக்கிய படைப்புகளும் அடங்கியுள்ளன. மேலும் படிக்க: பொடிச்சியின் பெட்டைக்குப் பட்டவை அல்லது பெட்டை அலசல்


இன்னும் வரும்.

3 comments:

  1. உங்கள் மலர்கள் அனைத்தும் வாசனை தூக்குகிறது அண்ணா...
    இன்னமும் ஆவலுடன் காத்திருக்கின்றோம்...

    ReplyDelete
  2. பரிந்துரத்தலுக்கு மிக்க நன்றி. சில புதிய கவிதைப்பக்கங்களின் அறிமுகத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி! சாத்தான் என்பது புனைபெயர்தான். :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது