07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 19, 2007

மாலையை அலங்கரிப்பவை

வலைச்சரத்தின் நாராக இருந்து இந்த ஒரு வாரத்தில் ஒரு மலர்மாலை தொடுக்க முயற்சி செய்தேன் அந்த முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேனா என்பது உங்களுக்கு தான் தெரியும். இறுதி நாளான இன்று முத்தமிழ் குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ள சில நண்பர்களின் வலைமலர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

நிலாரசிகனின் கவிதைகள் பொதுவாகவே இளம் நெஞ்சங்கள் பலராலும் விரும்பப்படும் கவிதைகள். காதல் கவிதைகளை தனக்கே உரித்தான விசேஷ நடையில் எழுதிவருபவர். உதாரணமாக:

*இந்த ஊரில் யாருக்கும்
இரக்கம் இல்லை.
உன் பாதச்சுவடுகளை
மிதிப்பவர்களைத்தான்
சொல்கிறேன்.

காதலை மட்டும் அல்லாது வேறு பல நல்ல கவிதைகளையும் நிலாரசிகன் எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாக:
விபத்தில் கிழிந்த உடலின்
வலியை விட
எப்போதும் அதிகமாகவே
இருக்கிறது மருத்துவமனையின்
சூழல் தருகின்ற மனவலி!
மனவலி


“தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்தது பாரில் நீடிய பெருமை சேர்பதி பழையாறை”. பெரிய புராணம் புகழ்ந்த இந்த பழையாறை எங்க இருக்கு? என்று கேட்டு அதை பற்றி விவரமாக ஒரு தமிழனின் பதிவுகள் என்ற தன் பதிவில் எழுதியிருக்கும் ஹலோ தமிழா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகைப்பட வல்லுனர். திருத்தலங்களை பற்றிய இவரது கட்டுரைகள் மிகவும் புகழ்பெற்றவை. அதிகம் எழுதாமல் இருக்கும் இவர் தொடர்ந்து எழுதவேண்டும்.


வேண்டாத வளர்ச்சி

ஆடாமல்
அசையாமல்
ஒட்ட வைத்தாற் போல
ஓரிடத்தில் பச்சென அமர்ந்து
காலால் நடப்பதை மறுத்து
படிக்கட்டுகளை மறந்து
குப்பை உணவால்
ஊரில் வளருது
வித வித அளவில்
சின்னதாகவும் பெரியதாகவும்
வட்ட வட்ட தொப்பைகள்
வல்லுனர் குறிப்புகள் என தனது விழியன் பக்கம் என்ற பதிவில் தொடர்ந்து எழுதிவரும் விழியன் வளர்ந்துவரும் பதிவாளர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட. இவரது தோழியே உன்னை தேடுகிறேன் என்னும் முதல் படைப்பு பரவலான வாசகர்களை இவருக்கு பெற்று தந்திருக்கிறது. சிறுவர்களுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ள இவர் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞரும் கூட.


"ஆதாம் ஏவாள் கம்யூனிஸ்டா? என்ன சொல்றீங்க தோழர்?" என்றார் பாண்டியன்.
"அட ஆமாம் பாண்டியா...அவங்க ரெண்டுபேருக்கும் உடுத்த ஒட்டுதுணியில்லை. காலில் போட செருப்பில்லை. தலைக்கு மேலே கூரை இல்லை. சாப்பிட இருந்தது ரெண்டு பேருக்கு ஒரே ஆப்பிள். இப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்தும் கூட சொர்க்கத்தில் இருப்பதா நம்பினாங்களே? இவங்க கம்யூனிஸ்ட் இல்லைன்னா வேற யாரு கம்யூனிஸ்டு?" என்று ஆவேசத்துடன் கேட்டார் மாவோ. மாவோவும் பேண்டேஜ் பாண்டியனும்

சுவையாகவும், விறுவிறுப்பாகவும், விவரமாகவும் எழுதும் நண்பர் செல்வனின் உலகின் முதல் கடவுள் என்னும் வலைப்பதிவில் அவர் தொடாததே இல்லை என்னும் அளவிற்கு பல விசயங்களை எழுதியிருக்கிறார். அடிக்கடி பரப்பரப்பாக விவாதிக்கப்படும் பதிவுகளில் இவரது பதிவும் ஒன்று.

நான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்! நான் வில்லனல்ல! நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி! என்று கூறும் ரசிகவ் ஞானியார் எந்த ஒரு விசயத்தையும் நகைச்சுவையுடன் மனதில் தைக்கும் வண்ணம் எழுதுவதில் வல்லவர்.
"தம்பி! நேத்து ஒரு பிணம் வந்துச்சு ஆளைப்பார்த்தா முறுக்கு மீசையோடு சும்மா திடகாத்திரமா இருந்தார். ஆனால் சாதாரணமாக நாங்கள் கிழித்து தைத்துக்கொண்டிருந்தோம். வாழும்பொழுதுதான் நீ நான் என்று மல்லுக் கட்டிக்கொண்டு நிற்கின்றோம். ஆனால் இப்ப பாருங்க எல்லாருக்கும் இந்த நிலைமைதான்" என்று அவர் சாதாரணமாக சொன்னாலும் அவருடைய பேச்சில் நிறைய பக்குவம் தெரிந்தது.
பிணத்தோடு விளையாடி..பிணத்தோடு உறவாடி..

இவரது கவிதைகளும் அப்படியே..

எங்கள்
கரடுமுரடான
சாலைகள் எல்லாம்...
சரியாக வேண்டும்!
மத்திய அரசே! ஒரு
மந்திரியை மட்டும்...
ஊருக்குள் அனுப்பு!

நியூட்டனின் மூன்றாவது விதி என்னும் கவிதையே அதற்கு சாட்சி.


தில்லை நகருக்கு "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்னும் காரணப் பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து உணவு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை செய்யவோ என்னமோ, ஒருமுறை துர்வாச முனிவர் நடு இரவில், தன் சிஷ்யர்களுடன் தில்லைச் சிற்றம்பலம் வந்தடைகிறார். வரும்போதே நல்ல பசி முனிவருக்கு. கோவிலின் அர்த்தஜாம பூஜையும் அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே துர்வாசரின் பசியைப் போக்க யாருமே முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர். அப்போது அன்னை தானே முன் வந்து அவர் பசிப்பிணி தீர்க்க வரவும், துர்வாசர் நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார்.
சிதம்பர ரகசியம் -கோபுர வாசலிலே!
எப்படித்தான் இவ்வளவு விசயங்களையும் புள்ளிவிவரங்களையும் மனதிற்குள் வைத்திருக்கிறாரோ என்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கீதா சாம்பசிவம் மிகவும் நகைச்சுவை உணர்வுள்ளவரும் கூட. என்ன சொன்னாலும் கோவித்துக்கொள்ளாமல் தான் சொல்லவந்ததை சொல்லிவிடும் இவரது ஆன்மீக கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.

பிரியன் கவிதைகள் என தன் வலைமலரை குறிப்பிடும் பிரியன் என்னும் விக்கி வளர்ந்து வரும் கவிஞர்களில் ஒருவர். இவரது ஆரம்பக்கால கவிதைகளுடன் ஒப்பிடும்பொழுது இவரிடம் ஏராளமான மாற்றங்கள் தெரிகிறது.
இவரது காதல் கவிதைகள் பலராலும் பாராட்டப்பட்டவை.

என்னுடன் ஓடிவருவதானால் -
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
மேலும் படிக்க

ராமாயணமும் மகாபாரதமும் ஒரு கற்பனைக் கதை என்பது என் கருத்து.
என்னையும் ராமாயணமும் மகாபாரதமும் செம்மை படுத்தின என்பதினை மறக்க முடியாது என்றாலும் கூட வேதாத்திரி மகரிஷி சொன்னது போல் இவைகள் கட்டுக்கதை என்பதில் நானும் உடன்படுகின்றேன்.
என்று சொல்லும் ரிஷி ரவீந்திரனின் கிறுக்கல்கள் என்னும் தன் பதிவில் பல நல்ல விசயங்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இதை தவிர மேலும் பல பதிவுகள் நடத்திவரும் இவர் தனது இணைய பக்கத்தில் பல முக்கியமான வணிகசம்பந்தமான விசயங்களையும் எழுதிவருகிறார்.

நிறைவு பெறுகிறது. அனைவருக்கும் நன்றி.

2 comments:

  1. மஞ்சூர் அண்ணா

    நன்றி.காலதாமதமாகத்தான் இந்த பதிவை படிக்க நேர்ந்தது.உங்கள் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  2. உங்களது உற்சாக வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது