07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 24, 2007

கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம்

வணக்கம் வணக்கம் வணக்கம்...



கொக்கரக்கோ கும்மாங்கோ!!!( ஆமாங்க மூன்று முறை வணக்கம் சொன்ன பிறகு சிட்டி பாபு இப்படிதான் சொல்லுவாரு) வாங்க இப்ப டக்குன்னு நிகழ்சிக்கு போய்டலாம்!!!



இதுக்கு முன்னாடி வலை சரம் தொடுத்த கோவி.கண்ணன் பக்தி மாலை, தமிழ்மாலை, சிறுகதை மாலை, கதம்பமாலை, கவிதை மாலை என வண்ணமாலைகளைத் தொடுத்து என்னை கலவர படுத்திவிட்டார்.





என்னை தொடுக்க சொன்னா என்ன செய்வது...

இப்படி ஒரு நிலைக்கு என்னை ஆளாக்கிய கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம் சொல்லாமல் என்ன சொல்வது.

இருந்தாலும் விடமாட்டோம்ல!!

முதல் பதிவு அறிமுக பதிவாக இருக்கட்டும் என்றார்கள், மேலே இருக்கும் படம் அறிமுகம் போதுமா இல்ல கொஞ்சம் வேண்டுமா?

சும்மா மத்தவங்களை கலாய்சே பொழுதை கழித்துக்கொண்டு இருக்கேன், எல்லா பதிவும் அப்படிதான் போட்டு இருக்கேன்.

நம்ம ஊர் அரசியல்வாதி முதல் புஷ் வரையும், கிரிக்கெட், நம் வலை பதிவர்கள் என்று அனைவரையும் கலாய்த்து தான் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. இதுல அதிகமாக நான் கலாய்பது நம்ம அய்யனாரைதான் மனுசன் ரொம்ப நல்லவர் ஏதும் சொல்லமாட்டார்.

முதன் முதலில் அவரை கலாய்த்தது துபாயில் ஒரு ஜாலி கவிதை திருவிழா!!!

அதுபோல் சொந்தமாக ஒரு வரியில் கவிதை எழுத வராது ஆனா எதிர் கவுஜ அல்லது எதிர் பாட்டு என்றால் சூப்பராக வரும்.

ஆனா யாரும் மனம் வருந்தும் படி இதுவரை செய்தது இல்லை!!!

இந்த வாரம் என்ன இங்க தொடுக்க போகிறேன் என்றால் நான் ரசித்த காமெடி, கதை, கவிதை அம்புட்டுதேன்!!!

30 comments:

  1. மேலே இருக்கும் படம் சூப்பர் என்று யாராவது கமெண்ட் போட்டீங்க, கடிச்சுவச்சு விடுவேன் ஆமா!ஜாக்கிரதை!!!

    ReplyDelete
  2. கலக்கல் தலைப்பு... ( கோவி கோச்சுக்காதீங்க)
    இப்படி போட்டாலாச்சும் இன்னிக்கு இங்க கொஞ்ச பேரு எட்டிப்பாப்பாங்கன்னு தலைப்பு வச்சிட்டீங்க..போலயே...

    ReplyDelete
  3. நல்லவேளை படத்தை பத்தி எதுவும் எழுதலை முத்ல் கமெண்டில் போட்டுட்டு திரும்பி பாத்தா இப்படி ஒரு கமெண்டு வந்திருக்கு முன்னால..

    ReplyDelete
  4. //மேலே இருக்கும் படம் சூப்பர் என்று யாராவது கமெண்ட் போட்டீங்க, கடிச்சுவச்சு விடுவேன் ஆமா!ஜாக்கிரதை!!!//

    மேலே இருக்கும் படம் சூப்பர் இல்ல. :-P

    ReplyDelete
  5. /மேலே இருக்கும் படம் சூப்பர் என்று யாராவது கமெண்ட் போட்டீங்க, கடிச்சுவச்சு விடுவேன் ஆமா!ஜாக்கிரதை!!!//

    யோவ்... அது சூப்பரு இல்ல.... எக்சலண்ட்... மார்வலஸ்.... :)


    ஹிம் அவ்வளோதான் இங்கிலிபிஸிலே வார்த்தைகள் தெரியும்.... :(

    ReplyDelete
  6. குசும்பர்மாமா,
    படம் சூப்பருங்க உண்மை தான், படம் சூப்பரு…..
    அய்யோ கடிச்சிட்டிங்களே மாமா(பாசத்தில மாமா என்று சொன்னனுங்க.)

    ReplyDelete
  7. ஆஹா.. குசும்பரே எதுக்கு 14 வரில மேட்டரெல்லாம்..? இந்த ஒரு படத்தை மட்டும் போட்டிருந்தாலே போதுமே.. நாங்க யார் வந்திருக்கிறதுன்னு கண்டு பிடிச்சிருப்போமே..?

    ReplyDelete
  8. நன்றி சொல்வேன் நான் உங்களுக்கு
    கண்ணருகே மாலையுடன் வந்து நின்றதற்கு!

    ReplyDelete
  9. குசும்பா உன் காமிராவின் முதல் கவிதை படத்தை விட இதுதான் ஜூப்பரோ ஜூப்பர்.எப்படி ராசா இத்தனை அழகா இருக்க.

    ReplyDelete
  10. அண்ணே.

    வாழ்த்துக்கள் அண்ணே.

    ReplyDelete
  11. \\குசும்பன் said...
    மேலே இருக்கும் படம் சூப்பர் என்று யாராவது கமெண்ட் போட்டீங்க, கடிச்சுவச்சு விடுவேன் ஆமா!ஜாக்கிரதை!!!
    \\\\

    சித்த"ஆப்பு"க்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  12. பதிவுல இருக்கற படம் சூப்பர் :)))

    //மேலே இருக்கும் படம் சூப்பர் என்று யாராவது கமெண்ட் போட்டீங்க, கடிச்சுவச்சு விடுவேன் ஆமா!//
    நான் மேல இருக்கற படத்த பத்தி ஒன்னுமே சொல்ல.. பதிவுல இருக்கற படத்த பத்தி மட்டும் தான் சொல்லியிருக்கேன்.. சோ என்ன கடிக்கபுடாது :P

    ReplyDelete
  13. //மேலே இருக்கும் படம் சூப்பர் என்று யாராவது கமெண்ட் போட்டீங்க, கடிச்சுவச்சு விடுவேன் ஆமா!ஜாக்கிரதை!!!//

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...மேல இரூக்கற போட்டோ உங்க புதுக்கேமிராவுல எழுதின கவிதை தானே??

    ReplyDelete
  14. குசும்பா குசும்பா..
    தோள் கொடு நானும் சாய்ஞ்சிக்கிறேன்..
    வலைசரம்..கட்டுறத பாத்துக்கிறேன்..
    ஒன்னொன்னா படிச்சிக்கிறேன்..
    நீயும் தான் தொடுத்துபுட்டா அது வலைச்சரம் ஆகுமா
    சரம் சரமா குசும்பு வெடித்து அது பட்டாசு (குசும்பு) ஆகுமா
    (இதை தோழா தோழா என்று பாண்டவர் பூமி மெட்டில் படிக்கவும்..)

    ReplyDelete
  15. //இதுக்கு முன்னாடி வலை சரம் தொடுத்த கோவி.கண்ணன் பக்தி மாலை, தமிழ்மாலை, சிறுகதை மாலை, கதம்பமாலை, கவிதை மாலை என வண்ணமாலைகளைத் தொடுத்து என்னை கலவர படுத்திவிட்டார்.
    //

    அடடே.... வலைச்சரம் உங்க கையில் விழும் என்று தெரியாமல் போச்சே.

    :))

    வாழ்த்துக்கள் குசும்பரே.....
    சிரிப்'பூ' மாலையாக மாற்றும் கலைதான் உங்களிடம் இருக்கிறதே.
    :)

    ReplyDelete
  16. முத்துலெட்சுமி said...
    கலக்கல் தலைப்பு... ( கோவி கோச்சுக்காதீங்க)
    இப்படி போட்டாலாச்சும் இன்னிக்கு இங்க கொஞ்ச பேரு எட்டிப்பாப்பாங்கன்னு தலைப்பு வச்சிட்டீங்க..போலயே...

    உண்மையை எல்லாம் இப்படி பப்ளீக்கா சொல்லபுடாது:)))


    முத்துலெட்சுமி said...
    நல்லவேளை படத்தை பத்தி எதுவும் எழுதலை முத்ல் கமெண்டில் போட்டுட்டு திரும்பி பாத்தா இப்படி ஒரு கமெண்டு வந்திருக்கு முன்னால...

    தெரியும் எனக்கு நம்ம மக்கள், முதலில் நான் போட்டோ போட்டோவுக்கு என்ன மாதிரி கமெண்ட் போட்டார்கள், இதுக்கு என்ன மாதிரி போடுவார்கள் என்று, அதுக்குதான் கடி மிரட்டல்:)))

    ReplyDelete
  17. .:: மை ஃபிரண்ட் ::. said...
    ///மேலே இருக்கும் படம் சூப்பர் இல்ல. :-P///

    மை பிரண்ட் :)))

    ReplyDelete
  18. இராம்/Raam said...
    ///யோவ்... அது சூப்பரு இல்ல.... எக்சலண்ட்... மார்வலஸ்.... :)

    ஹிம் அவ்வளோதான் இங்கிலிபிஸிலே வார்த்தைகள் தெரியும்.... :(///

    இராம் நான் ஊருக்கு வரும் பொழுது நீங்கதான் எனக்கு சைடிஸ்:))

    ReplyDelete
  19. மருதமூரான். said...
    குசும்பர்மாமா,
    படம் சூப்பருங்க உண்மை தான், படம் சூப்பரு…..
    அய்யோ கடிச்சிட்டிங்களே மாமா(பாசத்தில மாமா என்று சொன்னனுங்க.)"

    மச்சான் தெய்வ மச்சான் நீங்களூமா:((( அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  20. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஹா.. குசும்பரே எதுக்கு 14 வரில மேட்டரெல்லாம்..? இந்த ஒரு படத்தை மட்டும் போட்டிருந்தாலே போதுமே.. நாங்க யார் வந்திருக்கிறதுன்னு கண்டு பிடிச்சிருப்போமே..?"

    உண்மைத் தமிழன் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

    ReplyDelete
  21. SP.VR. SUBBIAH said...
    நன்றி சொல்வேன் நான் உங்களுக்கு
    கண்ணருகே மாலையுடன் வந்து நின்றதற்கு"

    யாருங்க எனக்காக இதை பாடுவது? பெரியவங்க நாலு பேர் இப்படி ஏதாவது சொன்னாலாவது ஏதாவது நடக்குதான்னு பார்க்கல்லாம்:)))

    ReplyDelete
  22. கண்மணி said...
    குசும்பா உன் காமிராவின் முதல் கவிதை படத்தை விட இதுதான் ஜூப்பரோ ஜூப்பர்.எப்படி ராசா இத்தனை அழகா இருக்க."

    அக்கா நீங்க என்னத்த இருந்தாலும் உங்க தம்பி அழகை இப்படி பப்ளிக்கா புகழ கூடாது அக்கா அக்கா அக்கா அக்கா!!!

    (அப்பாடி இத்தனை முறை அக்கான்னு கூப்பிட்டாச்சு)

    ReplyDelete
  23. J K said...
    அண்ணே.

    வாழ்த்துக்கள் அண்ணே."

    நன்றி JK தம்பி

    ReplyDelete
  24. கோபிநாத் said...

    //சித்த"ஆப்பு"க்கு வாழ்த்துக்கள் ;)//

    நன்றி தம்பி:))

    ReplyDelete
  25. G3 said...
    //பதிவுல இருக்கற படம் சூப்பர் :)))//

    ராசாத்தி!!! பொட்டி தட்டிற புள்ளைக்கு இம்புட்டு அறிவான்னு திகைத்து போய்விட்டேன்:))

    ///பதிவுல இருக்கற படத்த பத்தி மட்டும் தான் சொல்லியிருக்கேன்.. சோ என்ன கடிக்கபுடாது :P///

    சீசீ கடிக்க மாட்டேன் உருட்டு கட்டையால அடிப்பேன்:)))

    ReplyDelete
  26. காயத்ரி said...
    ///எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...////

    என்ன உண்மை தெரிஞ்சாகனும்? கூட நாம எல்லாம் சேர்ந்து எடுத்த குரூப் போட்டோவை எப்படி கட் செஞ்சு போட்டேன் என்றா? போட்டோ ஷாப் உதவியால் தான்!!!!

    ///மேல இரூக்கற போட்டோ உங்க புதுக்கேமிராவுல எழுதின கவிதை தானே??///

    என்னங்க இப்படி மறந்துட்டீங்க நம்ம பாசகார குடும்ப தலைவர் அபி அப்பா வாங்கின கேமிராவால் ராம் எடுத்த போட்டோங்க இது:)))

    ReplyDelete
  27. TBCD said...
    //(இதை தோழா தோழா என்று பாண்டவர் பூமி மெட்டில் படிக்கவும்..)//

    பாட்டு சூப்பர்!!! ஆனா பயங்கர கடுப்போடதான் படிச்சேன்!!! ஏன்னா பாட்டு பாடினது ஒரு பையன் ஆச்சே அதான்!!! நிஜ பாட்டில் வரும் பொண்ணு போல ஒரு பொண்ணு பாடி இருந்தா நல்லா இருந்து இருக்கும்:))

    ReplyDelete
  28. கோவி.கண்ணன் said...
    //அடடே.... வலைச்சரம் உங்க கையில் விழும் என்று தெரியாமல் போச்சே.:))///

    இந்த அடடே வருத்தமாக சொல்வது போல் இருக்கு!!! தெரிஞ்சு இருந்தா இன்னும் கொஞ்சம் பெரிய ஆப்பா வச்சு இருக்கலாம் போல என்று வருத்த படுவது போல் இருக்கு!!!

    வாழ்த்துக்கள் குசும்பரே.....
    சிரிப்'பூ' மாலையாக மாற்றும் கலைதான் உங்களிடம் இருக்கிறதே.
    :)

    நன்றி கண்ணன்

    ReplyDelete
  29. மேலே இருக்கற படத்த தவிர மத்தது எல்லாமே கொஞ்சம் சுமார்தான் :)

    ReplyDelete
  30. "அனுசுயா said...
    மேலே இருக்கற படத்த தவிர மத்தது எல்லாமே கொஞ்சம் சுமார்தான் :)"

    இப்ப சந்தோசமா? போங்க போய் நிம்மதியா தூங்குங்க:))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது