07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 7, 2007

இளைஞர் ஸ்பெஷல்

அடுத்தது இளைஞர் ஸ்பெஷல். அப்போ இது வரை குறிப்பிட்டவங்க எல்லாம் இளைஞர்கள் இல்லையான்னெல்லாம் யாரும் சிண்டு முடிய பாக்கக் கூடாது. நான் இளைஞர்கள் என்று சொல்ல வருவது - வயதினால் இளையவர்களைப் பற்றி அல்ல. நம் வலையுலகைப் பொறுத்தவரை முதியோர் என்று தன் மேல் முத்திரை குத்திக் கொண்டு பழமை வாதம் பேசுபவர் மிகக் குறைவு. எனவே வயதை வைத்து ஒருவரை எடை போடுவது இங்கு செல்லாது. அதனால், பதிவெழுத ஆரம்பித்து குறைந்த நாட்களே ஆனவர்களை பற்றியதே இந்தச் சரம்.

நான் எழுத வந்தே ஒரு வருடம் கூட முழுமையாக ஆகாத நிலையில் இதை நான் எழுதுவது சரிவருமா என்று யோசித்திருந்தேன். மதியும் பொன்ஸும் போலாம் ரைட்னு சிக்னல் கொடுத்த தைரியத்தில் இந்த வகைப்படுத்துதலைத் தொடர்கிறேன். :)

வள்ளி - கேலியும் கிண்டலும் விரவிய இவரது எழுத்து நடை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளின் உபயோகம் அதிகமாய் இருக்கிறது இவரது எழுத்துக்களில் - போகப் போகக் குறைத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.

1. இவர் தனது வலைப்பூ ஆரம்பித்த கதையைச் சொல்கிறார் இங்கே.
2. ப்லாகுக்கே வாஸ்து பார்க்கிறார் இவர் - இப்பதிவில்.

இன்னொரு வள்ளி - இவர் இ.கா. வள்ளி. பெரும்பான்மையான பதிவர்களைப் போலவே இவரும் மென்பொருள் துறைக்காரர்தான். தனித்துவமாய் இருப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தன் அனுபவங்களை பதிவுகளாய் இடுகிறார்.

1. தனக்குப் பிடித்தவர்களைப் பட்டியலிடுகிறார் இப்பதிவில்.
2. மென்பொருள் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா என்ற கேள்விக்கான தன் பதில்களைத் தருகிறார் இங்கே. (இதில் எனக்குச் சற்றே மாறுபட்ட கருத்திருப்பினும் அப்போது நேரமின்மை காரணமாக விரிவாகப் பின்னூட்டமிட முடியாது போனது)
3. இவர் அடிப்படையில் விளையாட்டில் ஈடுபாடுடையவர். இவரது பார்வையில் கிரிக்கெட் என்கிற விளையாட்டை விமர்சிக்கிறார்.

பொற்கொடி - பெங்களூருவிலிருந்து வலைப் பதியும் இவர் முதலில் கவிதைகளை தொகுப்பது மட்டுமே செய்து வந்தார். பிறகு சொந்தமாய்ப் பதிவுகளும் எழுத ஆரம்பித்தார். ரொம்ப எளிய எழுத்து நடையில் சொல்ல வருவதை அழகாய்ச் சொல்கிறார். ஒரு மாதத்திற்கும் மேலாக இவரிடமிருந்து இடுகைகளே இல்லை. விரைவில் மீண்டும் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

1. பெண்ணியம் பற்றி இவர் முன்வைக்கும் வாதம் இப்பதிவில் காணக் கிடைக்கிறது. எனக்கு உடன்பாடில்லாத வாதமெனினும், அவரது ஒரு முக்கியமான இடுகையென இதைக் கருதுவதால் இங்கே.
2. ஒரு அழகிய மலரும் நினைவுப் பதிவு.
3. ஒரு முனை காத்திருத்தலின் வலியைச் சொல்லும் கவிதை.

இது என்னுடைய வெளி. நம்ப வைத்துள்ள எல்லா மதிப்பீடுகளையும் கட்டுக்களையும் விரும்பாத வெளி. எது குறித்தும் விவாதிக்கலாம் முழுமையாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பற்று சாதாரணமான உரையாடல்கள் தொடரும் - என்று தன்னுடைய தளத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்தாரா.

1. சில்லுனு ஒரு காதல் திரைப்படம் குறித்த தன்னுடைய பார்வையை முன்வைக்கிறார்.
2. பாலியல் ரீதியிலான வசவு வார்த்தைகள் குழந்தைகளை எப்போது வசீகரிக்கவே செய்யும் - அர்த்தம் புரியாத காரணத்தினால். அதைப் பற்றிப் பேசுகிறது இப்பதிவு.
3. அடர்த்தியான சொற்களாலான இவரது ஒரு கவிதை.
4. மெனோபாஸ் காலகட்ட பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார் இப்பதிவில்.

எல்லோருமே நம்பிக்கையூட்டும் வண்ணம் எழுதுகிறார்கள். ஆனால் பதிவர் பட்டறையின் காரணமாய் நாம் எதிர்பார்த்த அளவு புது ஆட்கள் வந்திருப்பது போல் தெரியவில்லை. அன்று அத்தனை ஆர்வத்தோடு வந்து கற்றுப் போனவர்கள் அனைவரும் விரைவில் நம்முடன் வந்து இணைந்தால் சூழல் இன்னமும் களை கட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது