07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 5, 2010

கத விடுறாங்க!! - வலைச்சரம் 3

நேத்து மருத்துவ தகவல்கள் எல்லாம் படிச்சீங்களா!
பயனாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

வாங்க இன்னைக்கி கொஞ்சம் கதைகள் படிக்கலாம்.

சின்ன வயசுல தாத்தா (அல்லது) ஆச்சிகிட்ட கதை கேட்டு
இருக்கீங்களா. அவங்க கதையில வர்ற கேரக்டர்களுக்கு ஏத்த
மாதிரி, குரலை ஏத்தி, இறக்கி கதை சொல்லும் பாணியே
அழகு!! இதெல்லாம் மிஸ் பண்ணிட்டோமேன்னு
நினைக்கிறீங்களா. கவலையை விடுங்க அதுக்கும் நம்ம கிட்ட
ஆள் இருக்கு!! நம்ம வலையுலக தாத்தா (ஹி....ஹி....கோபபடாதீங்க Dr.P.கந்தசுவாமி அய்யா) சொல்ற
விக்ரமாதித்தன் கதையை கேளுங்க.
தளம்:சாமியின் மன அலைகள்.
*******************************************

ஒரு பில்லா இருந்தாலே தாங்க முடியாது, இங்கே பாருங்க
நாலு பில்லா இருக்காங்க.கொஞ்சம் பயமில்லாம இவங்கள
பாலோ பண்ணி பாருங்களேன் .

அந்தப்பெண் பஸ்ல போனா பின் தொடருகிறான், சினிமா போனா
அங்கேயும், பீச்க்கு போனா அங்கேயும் ஆஜர். எங்க போனாலும்,
மீண்டும் மீண்டும் அவன்!!! . நீங்க கொஞ்சம் இவனை பாலோ
பண்ணுங்க.
தளம்:விசா பக்கங்கள்
*************************************

ரொம்ப ரசிச்சு உங்களுக்கு பிடிச்ச ஐஸ் கிரீம், சாக்லேட் அல்லது
திருநெல்வேலி அல்வா சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க. அப்போ எதிர்பாராமல் யாராவது அதை தட்டி விட்டால் எப்படி இருக்கும். அந்த உணர்வு ஏற்படும், இந்த lஜீவசமாதி கதை படித்தால்.

சூரிய "கிரகணம்" பார்த்ததால் இவருக்கு கண் பார்வை போய்
விடுகிறது, அதன்பின் இவர் படும் பாட்டை பாருங்கள்.
தளம்:DREAMER
********************************************

மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை நம் கண்
முன்னே நிறுத்தி, இறுதியில் நம் மனதை கணக்க வைத்து விடுகிறார்
இந்த சம்பவாமி யுகே..யுகே..! தளம்:ராஜு
**********************************************

திருடப்போன இடத்துல இந்த திருடருக்கு என்ன நடந்துச்சுன்னு
தெரியனுமா, நம்ம சிநேகிதன் அக்பர் கிட்ட கேளுங்க.
**********************************************

இப்போ, கத விடுற புது வரவுகளை பார்ப்போம்.

புது மலர் 1, தளம்:பிச்சைக்காரன், இந்த தளம் March - 2010 -இல்
தொடங்க பட்டிருக்கிறது.

நம்ம ஹீரோ, சும்மா டைம் பாசுக்காக ஒரு பெண்ணை காதலிக்கிற மாதிரி
நடிக்கிறார், அப்புறம் நிஜமாவே அவளை காதலிக்க
ஆரம்பிக்கிறார். அப்போ வருது ஒரு ட்விஸ்ட், அது என்னன்னு
தெரிஞ்சுக்க பாருங்களேன் இந்த மலர மறந்த மொட்டுக்களை

புது மலர் 2, தளம்:MANO, இந்த தளம் பிப்ரவரி - 2010 - இல்
தொடங்க பட்டுள்ளது.

பஸ்சில் இவர் பயணம் செய்யம்போது, தேவதை மாதிரி ஒரு
பெண்ணை பார்க்கிறார். அப்புறமென்ன நம்ம தமிழ் சினிமா
கதாநாயகன் மாதிரி கற்பனையில டூயட் பாட ஆரம்பிக்கிறார்.
அப்புறம் என்ன நடக்குதுன்னு தெரியனுமா, படிங்களேன்
இந்த உலகின் சின்னஞ்சிறு காதல் கதை...யை.


நாளை, வேறு களத்தில் சந்திப்போம்.

நன்றி.

27 comments:

  1. ha haa கிடைச்ச்ச சந்தர்ப்பத்த பயன் படுத்தி பரோட்டாவ வித வித மா சுட்டு தள்றீஙக் போல்.

    ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

    ReplyDelete
  2. அறிமுக‌ க‌தை எல்லாம் ந‌ல்லா இருக்கு. சை.கொ.ப..

    ReplyDelete
  3. செம‌ கொத்துதான் ;)

    ReplyDelete
  4. உங்களின் கதை வடிவிலான அறிமுகங்கள் அனைத்தும் அருமை . உங்களின் கடந்த பதிவுகளை இன்னும் படிக்கவில்லை .
    இன்றே அனைத்தையும் வாசித்து விட்டு மறுமொழி இடுகிறேன் .

    ReplyDelete
  5. மூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    எல்லோருமே நல்லாத்தான் கத விடறாங்க அண்ணே. கத விடறதையும் ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க.

    நீங்க சொல்லியிருக்கின்ற பதிவர்களை முன்னமே அறிந்து இருந்தாலும், நீங்க அறிமுகப் படுத்தியவிதம் அழகு.

    ReplyDelete
  6. அறிமுகப்படுத்திய விதம் அழகு.

    ReplyDelete
  7. // Chitra said...
    super! Good ones!//

    மகிழ்ச்சி!! நன்றி சித்ரா.


    // Jaleela said...
    ha haa கிடைச்ச்ச சந்தர்ப்பத்த பயன் படுத்தி பரோட்டாவ வித வித மா சுட்டு தள்றீஙக் போல்.

    ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.//

    வாங்க!! ஜலீலா அக்கா....ரைட்டு.........நன்றி.



    // நாடோடி said...
    அறிமுக‌ க‌தை எல்லாம் ந‌ல்லா இருக்கு. சை.கொ.ப....

    படிச்சிட்டீங்களா!! நன்றி ஸ்டீபன்.


    // ர‌கு said...
    செம‌ கொத்துதான் ;)//

    அப்போ மீண்டும், மீண்டும் வந்து சாப்பிடுங்க ரகு :))


    // ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    உங்களின் கதை வடிவிலான அறிமுகங்கள் அனைத்தும் அருமை . உங்களின் கடந்த பதிவுகளை இன்னும் படிக்கவில்லை .
    இன்றே அனைத்தையும் வாசித்து விட்டு மறுமொழி இடுகிறேன் .//

    வாங்க சங்கர்!! உங்களையும் தேடி கொண்டிருந்தேன்,
    படிச்சிட்டு வாங்க, நன்றி.


    // இராகவன் நைஜிரியா said...
    மூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    எல்லோருமே நல்லாத்தான் கத விடறாங்க அண்ணே. கத விடறதையும் ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க.

    நீங்க சொல்லியிருக்கின்ற பதிவர்களை முன்னமே அறிந்து இருந்தாலும், நீங்க அறிமுகப் படுத்தியவிதம் அழகு.//

    ஆஹா!! மகிழ்ச்சி!!
    நன்றி இராகவன் அண்ணா.


    // அமைதிச்சாரல் said...
    அறிமுகப்படுத்திய விதம் அழகு.//

    மகிழ்ச்சி!! மிக்க நன்றி.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. வித்தியாசமான அறிமுகங்கள்!!

    ReplyDelete
  10. பட்டைய கெளப்புங்க வெஜ் :)ரொம்ப நல்லா இருக்கு அந்த பதிவுகள்..

    ReplyDelete
  11. //கண்ணகி said...
    வாழ்த்துக்கள்...//

    நன்றி கண்ணகி.


    //Mrs.Menagasathia said...
    வித்தியாசமான அறிமுகங்கள்!!//

    மகிழ்ச்சி!! நன்றி Menagasathia.


    //பிரசன்னா said...
    பட்டைய கெளப்புங்க வெஜ் :)ரொம்ப நல்லா இருக்கு அந்த பதிவுகள்..//

    படிச்சிட்டீங்களா!! நன்றி பிரசன்னா.

    ReplyDelete
  12. என்னையும் அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிதல‌

    அறிமுகப்படுத்தும் விதம் ரொம்ப அருமையா இருக்கு.

    ReplyDelete
  13. நல்ல அறிமுகங்கள் நண்பரே. தொடரட்டும் உங்கள் நற்பணி.

    ReplyDelete
  14. ப்ரோட்டா இன்று நல்ல ருசி, டேஸ்டா இருக்கு.. எல்லாமே நல்ல அறிமுகங்கள்.

    அக்பரை இன்று குறிப்பிட்டதுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  15. ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    நீங்க வலைச்சரம் சென்று இடுகையிட்டாலும் சுவாரசியம்
    குறையவில்லை கலக்குங்க

    ReplyDelete
  16. ரைட்டு
    கண்டிப்பா இந்த வலைச்சரம் டாப்பு தான்

    இந்த மாதிரயே நச்சுனு பதிவர்களை ஊக்குவித்தால் சூப்பர்

    நன்றி புரொட்டா!!

    எல்லாரையும் இப்பவே ஃபாளோ பண்றேன்

    ReplyDelete
  17. புதுப்புது பரோட்டாவா இருக்கே..

    ReplyDelete
  18. விசா பக்கங்கள் கதை இரண்டுமே அட்டகாசம்...

    ReplyDelete
  19. // அக்பர் said...
    என்னையும் அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிதல‌

    அறிமுகப்படுத்தும் விதம் ரொம்ப அருமையா இருக்கு.//

    வாங்க!!! அக்பர், மகிழ்ச்சி!!
    நன்றி அக்பர்.


    // r.v.saravanan said...
    ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    நீங்க வலைச்சரம் சென்று இடுகையிட்டாலும் சுவாரசியம்
    குறையவில்லை கலக்குங்க//

    மிக்க நன்றி சரவணன்.


    // ஜில்தண்ணி said...
    ரைட்டு
    கண்டிப்பா இந்த வலைச்சரம் டாப்பு தான்

    இந்த மாதிரயே நச்சுனு பதிவர்களை ஊக்குவித்தால் சூப்பர்

    நன்றி புரொட்டா!!

    எல்லாரையும் இப்பவே ஃபாளோ பண்றேன்//

    மகிழ்ச்சி!!! நன்றி ஜில்தண்ணி.


    //ஜெய்லானி said...
    புதுப்புது பரோட்டாவா இருக்கே..//

    அப்புறம் என்ன, நல்லா சாப்பிடுங்க :)
    நன்றி ஜெய்லானி.


    // philosophy prabhakaran said...
    விசா பக்கங்கள் கதை இரண்டுமே அட்டகாசம்...//

    படிச்சாச்சா!!! நன்றி பிரபாகரன்.




    // இராமசாமி கண்ணண் said...
    நல்ல அறிமுகங்கள் நண்பரே. தொடரட்டும் உங்கள் நற்பணி.//

    தொடர் ஊக்கங்களுக்கு நன்றி ராம்.


    // Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    ப்ரோட்டா இன்று நல்ல ருசி, டேஸ்டா இருக்கு.. எல்லாமே நல்ல அறிமுகங்கள்.

    அக்பரை இன்று குறிப்பிட்டதுக்கு மிக்க நன்றி..//

    அப்படியா!!! அப்போ, ஸ்டார்ஜன் சாருக்கு ரெண்டு பரோட்டா பாசல் :))
    நன்றி ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  20. மூன்றாம் நாள் அறிமுகங்கள் நல்ல அறிமுகங்கள்...

    ReplyDelete
  21. // ஸ்ரீராம். said...
    மூன்றாம் நாள் அறிமுகங்கள் நல்ல அறிமுகங்கள்...//

    நன்றி, ஸ்ரீராம் அண்ணா.

    ReplyDelete
  22. மூன்றாம் நாள் அறிமுகங்கள் நல்ல அறிமுகங்கள்...

    ReplyDelete
  23. // சே.குமார் said...
    மூன்றாம் நாள் அறிமுகங்கள் நல்ல அறிமுகங்கள்...//

    நன்றி குமார்.



    // ஜெஸ்வந்தி said...
    வாழ்த்துக்கள்...//

    நன்றி ஜெஸ்வந்தி.

    ReplyDelete
  24. நண்பா,
    //ரொம்ப ரசிச்சு உங்களுக்கு பிடிச்ச ஐஸ் கிரீம், சாக்லேட் அல்லது
    திருநெல்வேலி அல்வா சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க. அப்போ எதிர்பாராமல் யாராவது அதை தட்டி விட்டால் எப்படி இருக்கும். அந்த உணர்வு ஏற்படும், இந்த 'ஜீவசமாதி' கதை படித்தால்//

    என் கதையை இப்படி ஒரு சூப்பரான உணர்வுடன் விளக்கியிருப்பதற்கு மிக்க நன்றி நண்பா!

    -
    DREAMER

    ReplyDelete
  25. // DREAMER said...
    நண்பா,
    //ரொம்ப ரசிச்சு உங்களுக்கு பிடிச்ச ஐஸ் கிரீம், சாக்லேட் அல்லது
    திருநெல்வேலி அல்வா சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க. அப்போ எதிர்பாராமல் யாராவது அதை தட்டி விட்டால் எப்படி இருக்கும். அந்த உணர்வு ஏற்படும், இந்த 'ஜீவசமாதி' கதை படித்தால்//

    என் கதையை இப்படி ஒரு சூப்பரான உணர்வுடன் விளக்கியிருப்பதற்கு மிக்க நன்றி நண்பா!

    -
    DREAMER//

    நன்றி ஹரீஷ்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது