07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 16, 2013

உன் கதை முடியும் நேரம் இது..

இன்று வலைச்சரத்தில் என் இறுதி நாள்.. என்னிடம் அன்பின் சீனா சார் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முதலில் அழைத்த போது மிகவும் தயங்கினேன். என்னால் முடியுமா என தெரியவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒத்துக்கொண்டேன்.. இன்று வரை அதை எப்படி செய்திருக்கிறேன் என தெரியவில்லை.. உங்களுடைய பின்னூட்டங்கள் சம்பிரதாயமானதாக இருக்காது என நம்பி என் தோளில் நானே என்னை தட்டிக்கொள்கிறேன் சில நேரம்.. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.. என்னுடைய இறுதி அறிமுகங்களை இன்று பதிகிறேன்.. 

என்னை எழுத வைத்த எழுத்தாளர்களில் நண்பர் டான் அசோக்கை பற்றி சொல்லியிருந்தேன்.. அவரது தம்பி இளஞ்செழியனும் ஒரு ப்ளாக்கர் தான்.. டான் அசோக் போன்று மிக சீரியஸ் பதிவர் இல்லை என்றாலும், இவரின் நகைச்சுவை உணர்வு அந்த வயதிற்கே உரிய குத்தல்களும் நக்கல்களும் நிறைந்தது..

இந்த சமூகம் தன் கேள்விகளால் நம்மை எப்படியெல்லாம் கொடுமைப் படுத்துகிறது என்று இவரது அண்ணன் சீரியஸாக சொன்ன விசயங்களை, தம்பி, மிக மிக அசால்ட்டாக ‘போங்கடா நீங்களும் ஒங்க கேள்வியும்’ என்பது போல் அணுகியிருப்பார்.. இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு மங்கூஸ் மண்டையன் என்கிற உலகத்தர பட்டமும் கொடுத்திருப்பார்.. நல்ல காமெடியாக இருக்கும், படித்துப்பாருங்கள்..

சினிமாவில் ஒவ்வொரு நடிகனும் தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க, அதை கட்டிக்காக்க ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிப்பார்கள்.. அப்படியும் இமேஜை விட டேமேஜ் அதிகமாய் கிடைத்த நடிகர்கள் தான் இங்கு அதிகம்.. ஆனால் ஒரு நடிகன் தன் முதல் படம் முடிந்து இரண்டாம் படம் வரும் போதே, ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகரான இமேஜை தன் சொந்த காசை செலவழித்து உருவாக்கினார்.. முதலில் அவரை ஒரு மனித ஜன்மமாய் கூட மதிக்காத இந்த தமிழ் கூறும் நல்லுலகம் இன்று அவர் போகும் இடமெல்லாம் விசில் வானை கிழிக்கும் அளவிற்கு சப்போர்ட் செய்கிறது.. அவர் ஜெயிலுக்கு போனால் மக்கள் ஃபேஸ்புக்கில் வருந்துகிறார்கள்.. ம்ம்ம், யாரென்று கணித்திருப்பீர்களே? ஆம் நம்ம பவர் ஸ்டார் தான் அவர்.. இன்று அவர் அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கான காரணத்தை நம் தம்பி அலசும் பதிவு.. பவர், இன் ஃப்யூச்சர் தி தமில் நாட் இஸ் யுவர்ஸ்...

ஒரு 7,8 வருடத்திற்கு முன்பு நம் தெருவில், சொந்தத்தில் என எங்கும் பார்ப்பவன் எல்லாம் software companyல இருக்கேன் என்பான் பந்தாவாய்.. ஆனால் இன்று இந்த ஸாஃப்ட்வேர் ஆட்களை விட அதிகமாய் ரியல் எஸ்டேட் ப்ரோக்கார்கள் தான் நரசிம்மன் போல் தூணிலும் துரும்பிலும் இருக்கிறார்கள்..  நீங்கள் புது வீடு கட்டலாம் என நிலத்துகு வாஸ்து பண்ணும் போது, அது உங்கள் கொத்தனாருக்கு தெரியுமுன் இவர்கள் வந்து விடுவார்கள்.. அவ்வளவு ஷார்ப்.. இந்த ரியல் எஸ்டேட் ஆட்களால் என்னென்ன பாதிப்புகள் வருகின்றன என தம்பி கொஞ்சம் சீரியஸாக எழுதிய பதிவு..

என் பதிவுகளுக்கு King Viswa என்பவர் அடிக்கடி கமெண்ட் போடுவார்.. நான் அவரை என்னுடன் B.Sc., படித்த விஸ்வநாதன் என்று தான் பல நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தேன்.. பின்பு தான் ஒரு நாள் தெரிய வந்தது, அவர் இருப்பது சென்னையில் என்று.. அவர் மிகத்தீவிர லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் வெறியர் என்று.. 20ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தக்கால சிறுவர்களை கட்டிப்போட்ட அந்த காமிக்ஸ் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது எங்கள் சிவகாசியில் தான் என்பதை நான் அவர் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.. அந்த பிரஸ் உரிமையாளரை அடிக்கடி பார்க்க சிவகாசி வருவாராம்.. ஒரு நாள் சிவகாசி வரும் போது நிச்சயம் பார்க்க வேண்டும்..

தலைவர் சுஜாதாவின் நாவல் ஒன்று காமிக்ஸ் கதையாக வந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? அவரின் முதல் நாவலான “நைலான் கயிறு”, “என் இனிய இயந்திரா” இரண்டும் காமிக்ஸ் புத்தகமாக வந்தது எனக்கு இவரின் ‘சுஜாதாவின் பிறந்த நாளுக்கான பதிவை’ பார்க்கும் போது தான் தெரிந்தது.. இவரின் பதிவுகளை இது தான் அது தான் என்று குறிப்பிட்டு என்னால் கூற முடியவில்லை.. எல்லாமே முழுக்க முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள் பற்றியவை தான்.. அதனால் ஒன்றை சொன்னால் மற்றொன்றை விட்டது போல் இருக்கும்.. So, நீங்கள் அதை முழுதாக படித்து உங்கள் சின்ன வயது ஞாபகங்களுக்கு சென்று வாருங்கள்.. எனக்கு விபரம் தெரிந்து நான் கடைசியாக படித்த காமிக்ஸ், என் 6 வயதில் விருதுநகரில் என் ஐயம்மா வீட்டில் இரும்புக்கை மாயாவி.. அதன் பின் நான் காமிக்ஸ் கதைகளை பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை..

இப்போது மீண்டும் திருப்பூர் தொழிற்களம் சந்திப்புக்கு செல்வோம்.. அங்கு எனக்கு அறிமுகமான இன்னொருவர் நண்பர் மணிவண்ணன்.. பழகுவதற்கு மிக மிக இனிமையானவர்.. நம்ம மதுரைக்காரர்.. இப்போது எழுதுவதில்லை என்றாலும் இவர் எழுதிய ஒரு கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் தங்கள் பிள்ளைகள் வளர்ந்த பின் பிள்ளைகளை நம்பி வேலைக்கு போகாமல் இருந்தால், அந்த பிள்ளைகள் தங்கள் தாயையும் தந்தையையும் எந்த அளவில் மதிப்பார்கள் என்பதற்கு இந்த கதை தான் சாட்சி.. கதாநாயகனின் தாத்தா, அவனுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து வேலைக்கே போனது இல்லை.. ஆனால் அவர் வேலைக்கு போகும் ஒரு சூழ்நிலை வருகிறது.. அது என்ன மாதிரி சூழ்நிலை என்பதை அறியும் போது தான் இந்த சமூகம் என்ன மாதிரியான மனிதர்களை உருவாக்குகிறது என்னும் கேள்வி நம் மனதை வருத்தப்படுகிறது..\

என்னை போன்றே இவரும் ரஜினி ரசிகர் தான் என இந்தப்பதிவை படிக்கும் போது தான் தெரிந்தது.. ரஜினியின் சிறந்த பத்து படங்களை வரிசைப்படுத்தியிருப்பார்.. என்னால் அப்படியெல்லாம் வரிசைப்படுத்த முடியாது.. எப்படி சுஜாதா ஒரு பேப்பரில் சும்மா மையை தெளித்து வைத்தாலே கவனம் சிதறாமல் ரசித்து பார்த்துக்கொண்டே இருப்பேனோ, அது போல் ரஜினி திரையில் வந்தால் வேறு எங்கும் கவனம் போகாது.. ரஜினி படங்களில் இருக்கும் இன்னொரு விசயம் அவர் எல்லா படங்களிலும் ரஜினியாகத்தான் இருப்பார்.. அதாவது ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் போன்று.. அவர்களுக்காவது ஸ்பைடர் மேன் 1,2,3 என்று ஒரே பெயரில் படம் வரும்.. ஆனால் நம்ம ஆளுக்கு பாட்ஷா, முத்து, சிவாஜி, படையப்பா என்று படத்திற்கு பெயர் மாறினாலும், படத்தில் அவர் முந்தைய படத்தில் செய்த அதையே தான் செய்வார்.. ஆனால் நாம் முந்தைய படத்தில் ரசித்ததை விட இந்த படத்தில் அவரை அதிகம் ரசிப்போம்.. வேறு நடிகர் ஒரே மாதிரி தொடர்ந்து இரண்டு மூன்று படம் நடித்தாலே அவரின் நான்காவது படத்தை SMS ஜோக் வரை இழுத்து அசிங்கப்படுத்துவோம்.. ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இதை தான் செய்கிறார் ரஜினி, நாமும் ஒவ்வொரு படத்தை விட அடுத்த படத்தை இன்னும் விரும்புகிறோம்.. அது தான் ரஜினி..

மக்கள் கடன் வாங்கவே கூச்சபப்ட்ட காலம் என்று ஒன்று இருந்தது.. பின், வெளியில் தெரியாமல் கடன் வாங்கி, கடன்காரன் திருப்பி கேட்கும் முன் கொடுத்துவிடும் காலம் வந்தது.. அடுத்ததாக கடன் வாங்கி, கடன்காரன் வந்து 2,3 முறை சண்டையிட்டால் திருப்பி கொடுக்கும் காலம் வந்துவிட்டது.. ஆனால் இப்போது நம் மக்களுக்கு கடன் வாங்கும் போது கூச்சமும் இருப்பதில்லை, அதை கடன் கொடுத்தவன் திரும்ப கேட்கும் போது, கொடுக்க வேண்டுமே என்கிற குற்ற உணர்ச்சியும் இருப்பதில்லை.. வங்கிகளும், தனியார் கடன் கொடுக்கும் நிறுவனங்களும் கூவிக்குவி கடன் கொடுக்கின்றன. ஆனால் அந்த கடனை அவர்கள் திரும்ப வாங்கும் விதம், கவனக்குறைவால் நாம் சிறு தவறு செய்தாலும் அதற்கு கொடுக்க வேண்டிய விலை என தேவை இல்லாவற்றிற்கு கடன் வாங்கி பாடு படுவதை அழகாக சொல்லும் பதிவு,.,.

எனக்கு தெரிந்த முக்கியமான பதிவர்களையும், அவர்களின் சிறப்பான பதிவுகளையும் இத்தனை நாள் பகிர வாய்ப்பு கொடுத்த அன்பின் சீனா சார் அவர்களுக்கும், வலைச்சரத்திற்கும் இந்த சிவகாசிக்காரனின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. 

பி.கு: 
எங்கள் கல்லூரி இயக்குனர் அடிக்கடி ஒரு வாசகம் சொல்வார்.  "There might be thousands of reasons for not doing something.. But only one reason to do the work. It is dedication".. ஒரு வேலை செய்யாமல் இருக்க 1000 காரணங்கள் இருக்கலாம்.. ஆனால் செய்து முடிக்க ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும். அது, ‘நான் இந்த வேலையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு & ஈடுபாடு. அவருக்கு காரணங்கள் சொல்வது பிடிக்காது.. இருந்தாலும் நான் இப்போது காரணம் சொல்லி மன்னிப்புகும் கேட்க வேண்டும்..

எப்படியாவது குறைந்த பட்சம் ஏழு பதிவுகளாவது எழுதிவிட வேண்டும், இருபது பதிவர்களையாவது அறிமுகப்படுத்த வேண்டும் தான் என்று நினைத்திருந்தேன்.. வலைச்சர விதிமுறையின் படி அதை எப்படியாவது செய்ய முயன்றேன்.. ஆனால் எனது மேனேஜர் மூன்று நாட்கள் எனது மார்க்கெட்டிற்கு டூர் பிளான் போட்டு விட்டதால் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது.. அதனால் அன்பின் சீனா சார் என்னை மன்னிக்க வேண்டும்.. இன்னொரு சமயம் இதை விட சிறப்பாக செய்து தருகிறேன் சார்.. எட்டு வைக்கும் பிள்ளை ரெண்டு மூனு எட்டில் இடறி விழுந்துவிட்டது.. கொஞ்சம் வளர்ந்த பின் நீங்கள் எதிர்பார்ப்பதை போல் ஓடும் சார்.. 

முடிந்த வரை இந்த வேலையை சிறப்பாக செய்திருப்பதாகவே நம்புகிறேன்.. எனக்கு ஊக்கம் அளித்த நண்பர்களுக்கும் well wisherகளுக்கும் என் நன்றிகள்.. இவர்களிடமும் ஒரு மன்னிப்பு கேட்க வேண்டும்.. நீங்கள் போடும் பின்னூட்டத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்கும் நேரக் குறைபாடு தான் காரணம்.. மன்னித்துக்கொள்ளுங்கள்..

எனக்கு நல்ல நண்பர்களையும், சிவகாசிக்காரனை பல நல்ல ரசிகர்களை கொடுத்த இந்த ஒரு வாரத்தை நான் என்றும் மறக்க மாட்டேன்.. மிக்க நன்றி.. வணக்கம் :-)

6 comments:

  1. அன்பின் ராம்குமார் - அறிமுகப் படுத்தப்பட்ட மூவரில் இருவர் புதியவர்கள். ஒருவர் அறிமுகமானவர். பதிவுகள் அனைத்துமே புதியவை தான். பணிச்சுமை காரணமாக ராம்குமார் - குறைந்த காலத்தில் அருமையாகப் பணியாற்றி - பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். நல்வாழ்த்துகள் ராம்குமார் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ஒரு வாரமாக மிகச்சிறந்த பணி,வாழ்த்துகள்

    ReplyDelete
  3. பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. அருமை ராம்குமார். உங்கள் அனைத்து பதிவுகளுமே அற்புதம். 2 நாட்களுக்கு ஒரு முறை எனது நண்பர்களுக்கு gmail இல் அனுப்புகிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வுகள்.அனைத்து அறிமுகங்களும் மிக அருமை.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது