07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 19, 2014

சுபத்ராவிடம் இருந்து ஆசிரியர் பொறுப்பை கீதமஞ்சரி ஏற்கிறார்!!!

வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு பொறுப்பேற்றிருந்த சுபத்ரா அவர்கள் தம் ஆசிரியர் பணியை ஆர்வமுடன் ஏற்று, மிகச் சிறப்பாக செய்துள்ளார். அவர் எழுதிய பதிவுகள், கிடைத்த மறுமொழிகள், பக்கப்பார்வைகளை கீழே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


தமது பணியை சிறப்பாக செய்த சகோதரி சுபத்ரா அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 

நாளை முதல் தொடங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க, கீதமஞ்சரி எனும் வலைப்பூவை எழுதி வரும் சகோதரி கீதா அவர்களை அழைக்கின்றேன். இவர் ஏற்கனவே 2012-ம் ஆண்டிலும் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். எனவே அவரைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றாலும், அவரைப் பற்றி சில வரிகள் முந்தைய அறிமுகப் பதிவிலிருந்தே தருகிறேன். 

இவர் பெயர் கீதா மதிவாணன். பதிவுகளில் கீதா என்றே குறிப்பிட்டுக் கொண்டிருந்தவர், பதிவுலகில் பலருடைய பெயர் கீதா என்றிருப்பதால் குழப்பம் தவிர்க்க கீதமஞ்சரி என்னும் இவரது வலைப்பூவின் பெயரையே இவரது பெயராகவும் பயன்படுத்தத் துவங்கியுள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். 

வீட்டிலிருந்து ஒரு நல்லதொரு இல்லத்தரசியாக குழந்தைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கிறார். இவருக்கு தமிழின்மீது தீராத காதலே உண்டு. தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், கலைகள் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட போதும், குடும்பநலனை முன்னிட்டு, தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறார்.



கணவர் இயந்திரப் பொறியியலாளர். மகள் பன்னிரண்டாம் வகுப்பிலும், மகன் ஏழாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். கைவேலைப்பாடுகளில் இவருக்கு விருப்பம் உண்டு என்றாலும், அதைவிட எழுதுவதிலும் படிப்பதிலும் ஆர்வம் அதிகம் உடையவர்.

இவரை வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நல்வாழ்த்துக்கள் சுபத்ரா....
நல்வாழ்த்துகள் கீத மஞ்சரி....

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

21 comments:

  1. Replies
    1. அறிவிப்புக்கு நன்றி பிரகாஷ்.

      Delete
  2. நிறைவுடன் பணியாற்றிச் சென்ற சகோதரி சுபத்ராவுக்கு பாராட்டுக்கள்!
    மீண்டும் பணியேற்கும் சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  3. இன்றுடன் விடைபெற்றுச்செல்லும் இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும், நாளை முதல் புதிய பொறுப்பேற்க உள்ள வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும் என் அன்பான இனிய பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. WELCOME TO திருமதி கீதா மதிவாணன் [கீத மஞ்சரி] ;)))))

    ALL THE BEST TO YOU Madam ! ;)))))

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான நன்றி சார். உங்களுடைய பரிந்துரையின் பேரில்தான் எனக்கு முதல் வலைச்சர வாய்ப்பு கிடைத்தது. அந்த நன்றி என்றும் என்னுள்.

      Delete
  5. வருக வருக என் அருமைத் தோழியே தங்களின் ஆசிரியப்
    பணி சிறந்து விளங்க என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
    இதுவரைக் கடமையாற்றிய தோழிக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் .

    ReplyDelete
  6. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

    ReplyDelete
  7. கீதமஞ்சரி அவர்களுக்கு நல்வரவு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜூ

      Delete
  8. கீதமஞ்சரிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. கீதமஞ்சரி அக்கா வருக வருக.

    ReplyDelete
  11. பிரகாஷ்க்கும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! கீதா அக்காவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. சென்ற வார ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

    இந்த வார ஆசிரியர் கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது