07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 11, 2014

தமிழ் முகில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மழைக்காகிதத்திற்கு தருகிறார்!!!

வணக்கம் வலை நண்பர்களே,

இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த திருமதி தமிழ் முகில் பிரகாசம் அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவர் கீழ்கண்ட தலைப்புகளில் ஏழு பதிவுகள் வரை எழுதியுள்ளார். அவருக்கு கிடைத்த மறுமொழிகள் மற்றும் பக்கப்பார்வைகளை கீழே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
திருமதி தமிழ் முகில் பிரகாசம் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க மழைக்காகிதம் என்ற வலைப்பூவை எழுதி வரும் பதிவரை அழைக்கின்றேன். ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள அவரைப் பற்றி சொல்வதென்றால் பிறந்தது விருதுநகரில். வளர்ந்தது மதுரை அருகே இருக்கும் திருவேடகம். படித்தது பெருந்துறை மற்றும் சென்னை. முனைவர் பட்டம் வாங்கியது கான்பூர் IIT. விஜயவாடா மற்றும் அமெரிக்காவில் பணியாற்றிய இவர் தற்பொழுது வேலூர் தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 
இவரது வலைப்பூவை ஆரம்பிக்க அவரது தம்பி பலராமன்(ஏறுழ்வலி) காரணம் என சொல்கிறார்.

 மழைக்காகித வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்....

நல்வாழ்த்துகள் மழைக்காகிதம்

நல்வாழ்த்துகள் சுரேஷ் குமார்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

 



9 comments:

  1. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த திருமதி தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    புதிய ஆசிரியர் சுரேஷ் குமார் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கும் பாராட்டுதல்கட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. ஒருவார வலைச்சரப்பணியை அழகாக அற்புதமாக இனிமையாக வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இன்றுடன் விடைபெற்றுச்செல்லும் திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    வலைச்சர புதிய ஆசிரியராக பொறுபேற்பவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கும் பாராட்டுதல்கட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  3. சகோதரி தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு நன்றி!
    மழைக்காகிதம் - சுரேஷ் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பணியை சிறப்பாக நிறைவு செய்த
    தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு பாராட்டுக்கள்...
    பணியினை ஏற்க வரும் சுரேஷ் குமார் அவர்களுக்கு நல்வரவு..
    நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் சகோதரர் சுரேஷ் குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  6. இருவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது