07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஸ்டார்ஜன். Show all posts
Showing posts with label ஸ்டார்ஜன். Show all posts

Sunday, April 18, 2010

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்

செண்பகம் : மச்சான் மச்சான் எங்கயிருக்கீக.. எல்லோரும் நம்மள தேடுதாக..

மணி : அப்படியாபுள்ள.. ஏபுள்ள நம்ம கதை முடியிற நேரம் வந்திருச்சிபுள்ள..

செண்பகம் : அட ஆமா மச்சான்.. ரொம்ப வருத்தமா இருக்குபுள்ள..

மணி : வருத்தப்படாதபுள்ள.. நம்ம கதைக்கு அவுக மத்தியில ரொம்ப வரவேற்பு கிடைச்சிருக்கு.. அவுக மனசுல நமக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கு.. நம்மகதைய படிச்ச எல்லோரும் குழந்தைகள், பெரியவங்க, தாய்மார்கள் என்று எல்லோரும் தம்வீட்டுல ஒருத்தற நம்மள நினைச்சிருக்காங்கபுள்ள.. அதனால கவலைப்படாதே..

செண்பகம் : இத கேட்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு மச்சான்.. ஆனா பிரிவ நினைச்ச அழுகஅழுகாச்சியா இருக்கு.. ( மணியின் நெஞ்சில சாய்ந்து கொண்டு )..

மணி : செண்பகத்தின் கூந்தலை கோதியவாறே.. கவலப்படாதே புள்ள.. இந்த ஒருவாரமும் நம்ம கதை படிச்சி ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வருகைதந்த அனைவருக்கும் நம்ம நன்றியை தெரிவித்துக் கொள்வோம்புள்ள..

மணி & செண்பகம் : உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம்..

மணி & செண்பகம் : அனைவருக்கும் நன்றிகள். விடைபெறுகிறோம்.


*************************************

முழுகதையும் படிக்க‌

செண்பகமே செண்பகமே.. செண்பகமே செண்பகமே.. 2 செண்பகமே செண்பகமே.. 3 செண்பகமே செண்பகமே.. 4 செண்பகமே செண்பகமே.. 5 செண்பகமேசெண்பகமே.. 6.


இந்த ஒருவாரமும் வலைச்சரத்துக்கு வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Saturday, April 17, 2010

செண்பகமே செண்பகமே .. 6

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க‌

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்ப‌கமே செண்பகமே.. 4

செண்பகமே செண்பகமே.. 5

மச்சான் மச்சான் இன்னிக்கி யாரெல்லாம் இருக்காக..

இன்னிக்கி நிறைய வித்யாசமான வலைப்பூவ வச்சிருக்கிறவங்களோட நாம பேசப்போறோம்.. மிக வேண்டியவங்களெல்லாம் இன்னிக்கி நம்ம கதையில வருவாங்க..

அட அப்படியா மச்சான்.. ரொம்ப ஆர்வமா இருக்கு..

இவுக பேரு திரவியம் நடராசன். இவரு சட்டத்தை கையில எடுத்துட்டாருன்னு சொல்லலாம். சட்ட நுணுக்கங்களை பற்றி அலசி ஆராய்கிறார். நாம தெரிஞ்சிக்கவேண்டியது நிறைய இருக்குபுள்ள..

ஆமா மச்சான் ரொம்ப நல்லாருக்கு மச்சான்..

அடுத்தவக அமைதிசாரல். அருமையான கட்டுரைகள், கதை, அனுபவ கட்டுரைகள் நிரம்பி கிடக்குது.. போய் பாப்போமாபுள்ள..

ஆங் சரி மச்சான்.. அடுத்தவக யாரு..

ஏபுள்ள.. நேரா நில்லு.. லைட் வெளிச்சத்துக்கு நேரா நில்லு.. முக‌த்த சிரிச்சமாதிரி வச்சிக்கோ.. இந்த இடம் சரியில்லை.. ஆங இங்க நில்லு..

அட என்ன மச்சான்.. அடுத்தவகள பத்தி சொல்லுங்கன்னா.. வேறெதோ சொல்றீக.. என்னாச்சி மச்சான்.

நான் சொல்லல புள்ள.. இதோ இவுகதான் சொல்றாக.. இவுக பேரு விஜய் ஆம்ஸ்ட்ராங்.. இவரு ஒரு ஒளிப்பதிவாளர்.

என்ன மச்சான் சொல்றீக..

அட ஆமாபுள்ள.. இவரு புகைப்படம், மாத்தியோசி திரைப்படத்தோட ஒளிப்பதிவாளர். ஒரு நல்ல புகைப்பட கலைஞர்.

அட அப்படியா மச்சான்.. மேல சொல்லுங்க மச்சான்..

இவரு புகைப்பட கலையின் நுணுக்கங்களை பற்றி நமக்கு கற்றுத்தருகிறார். ஒரு படத்துல எப்படி வெளிச்சங்களை காட்டணும். திரையோட தன்மைகள்.. படத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களை கற்றுத்தருகிறார்புள்ள.. அல்ஜீரிய போரை மையமாக க்ண்ட படத்தோட விமர்சனம், பிலிம் பற்றி சொல்லித்தருகிறார், இப்படி நிறைய விசயங்களை கற்றுத் தருகிறார்.

மச்சான் மச்சான் என்னை அவர்ட்ட அறிமுகப்படுத்துங்க மச்சான்.. நானும் நாளைக்கி ஹீரோயின் ஆகலாமில்லையா..

சரிபுள்ள.. அடுத்தவகள பாப்போமா..

சரி மச்சான்..

இவுக பேரு வினையூக்கி.. இவர் பக்கத்துல நிறய விசயங்கள் இருக்கு.. கிரிக்கெட் செய்திகள்.. பொதுவிசயங்கள், கட்டுரைகள் நிரம்பிய கதம்பம் இது.

அடுத்தவக யார் மச்சான்..

இவுக பேரு அஹமது இர்ஷாத். இவரோட பக்கத்துல கதை, செய்திகள், கவிதை இப்படி நிறைய விசயங்களை பற்றி எழுதிருக்கிறாக புள்ள.. நீயே பாரேன்..

அட ஆமா மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு.. எம்பூட்டு விசயமெல்லாம் சொல்றீக.. இந்தா வாங்கிக்கோ மச்சான் இச் இச் இச் இச்...

போதும்புள்ள.. அடுத்தவகள பாப்போமா..

சரி மச்சான்..

அடுத்தவக பேரு ரேசன் ஆபிசர்.. இவரோட பக்கத்துல ரேசன் பொருள்கள் வாங்குவதுபற்றி விளக்கமா சொல்றாரு..

அடுத்தவக யாரு மச்சான்..

இவுக பேரு ஸ்ரீராம். இவங்க பக்கத்துல அனுபவ கட்டுரை, கதை, செய்திகள், அரசியல் விசயங்கள், இப்படி நிரம்பி இருக்கு புள்ள..

அட அப்படியா மச்சான்.. இன்னிக்கி நீங்க சொன்னவங்களெல்லாம் ரொம்ப அருமையானவங்க.. மீதிய நாளைக்கி பாப்போமா மச்சான்..

ஆங் சரிபுள்ள..


தொடரும்..


நாளைக்கு இந்த கதை முடியும்..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Friday, April 16, 2010

செண்பகமே செண்பகமே ..5

கதை புரியாதவ‌ங்க முதல்லருந்து வாங்க..

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்பகமே செண்பகமே.. 4



மச்சான் மச்சான் எந்திரு மச்சான்.. பொழுது விடிஞ்சி நாழியாச்சி..


ம்.. ம்.. ம்.. செத்த நேரம்.. கர்.. கர்..

மச்சான் எந்திரி மச்சான்...

நீ உம்மா கொடுத்தாதான் எந்திரிப்பேன்..

காலையிலேவா.. விளங்கும்.. நம்ம கதய படிக்கிறவக‌ தப்பா நினைப்பாங்க..

அதெல்லாம் ஒண்ணும் நினைக்கமாட்டாக..

சரி இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்.. எந்திரிச்சி பல்விலக்கிட்டுவா..

ம் ம் தூங்கவிடமாட்டியே.. இரு இரு உன்ன வச்சிக்கிறேன்புள்ள..

வா மச்சான் இன்னிக்கி யாரெல்லாம் இருக்காவ..

இன்னிக்கி வித்யாசமா எழுதுறவகளபத்தி பாப்போம்புள்ள..

அப்பஞ்சரி அருமையா இருக்குன்சொல்லு.. சீக்கிரம் மச்சான்..

இவுக பேரு ஆனந்தி.. இவங்க தேடி அலையும்போது நம்ம மனசும் தவிக்குதுபுள்ள..

அப்படியா என்னாச்சி பாப்போம்..அட ஆமா மச்சான்.. அப்புறம் நமக்கான கவிதையும் எழுதிருக்காவ மச்சான்..

ஆமாபுள்ள.. இவுகபேரு மகராசன். இவங்க வித்யாசமான பக்கங்களை கொண்டவர். அனுபவ கட்டுரை, சமூக கட்டுரைகள் நிறய இருக்குபுள்ள..

அட ஆமா மச்சான்.. அடுத்தவக யாரு மச்சான்.

இவர் பேரு எல்கே LK .. இவருடைய எண்ணங்களை நம்மட்ட பகிர்ந்துகிறாருபுள்ள.. அதோடு நம்மள உசாரா இருக்க சொல்லுறாருபுள்ள.. இப்படி நிறய கட்டுரை இருக்குபுள்ள..

வேற யாரு மச்சான்..

மேல சொன்ன நம்ம எல்கே இன்னொரு பக்கத்துல வேலைக்கு ஆள்தேவை தகவல்லலாம் சொல்லுறாரு புள்ள..

ரொம்ப நல்ல விசயந்தேன் மச்சான். அடுத்தவக யாரு மச்சான்..

இவுக பேரு மனுநீதி. இவரோட பக்கத்துல சிறுகதைகளின் கதம்பம் ரொம்ப அருமையா இருக்குபுள்ள.

ஆமா மச்சான்.. ரொம்ப விறுவிறுப்பா இருக்கு.. அடுத்தவக யாரு மச்சான்.

இவங்க பேரு சிந்தன். அருமையான சிந்தனைகள், கவிதைகள் நிர‌ம்பி இருக்குபுள்ள இவரோட பக்கம். ஒருநாள் மனிதன் என்னசெய்வான்? தெரிஞ்சிக்கனுன்னா போகலாம் இங்கே..

ரொம்ப அருமையான விசயத்தெல்லாம் எப்பூடி விலாவெரியா சொல்றீக மச்சான். என் அரும ராசா.. இச் இச் இச் இச்...

நீ மட்டும்தான் கொடுப்பியா.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச்...

போதும் மச்சான் போதும்.. அடுத்தவகள பாப்போமா..

இவுக பேரு.. யாசவி.. இவக பக்கத்தோட பேரே ரொம்ப இனிப்புபுள்ள..

அப்டியா என்ன பேரு மச்சான்..

பேரு பலாச்சுளை.. இங்கபோய் பாத்தா அசந்துருவோம்.. வாழ்க்கைக்கு தேவையான அறிவியல் சங்கதிகள்.. ஆம்பள பொம்பள விசயம் நிரம்பி கிடக்கு..

மச்சான் உனக்கு ஆம்பளபுள்ள வேணுமா பொம்பளபுள்ள வேணுமா.. படிங்க இங்கபோய்.. அடுத்து நிறய மருத்துவகுறிப்புலாம் கொடுத்திருக்காவ மச்சான்.

அட ஆமா புள்ள.. அடுத்தவகள பாப்போமா புள்ள..

சரி மச்சான்..

இவுக பேரு தமிழ்பறவை.. பக்கத்தோட பேரக்கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி வருதுபுள்ள. நிறய வித்தியாசமான கட்டுரைகள் கவிதை, கதைன்னு ஒரு கதம்பம் இது.

அட ரொம்ப அருமையா இருக்கே மச்சான்.. அடுத்தவக யாரு மச்சான்.

இவுக பேரு பிரசன்னா.. இவரோட வருத்தத்தை இங்க கேளேன் செண்பகம்.. தன்னோட மனக்குமுறலையும் சொல்லிருக்காவ..

அட ஆமா மச்சான்.. வேற யாரு மச்சான்..

இவுக ஒரு டாக்டர். பேரு கந்தசாமி..இவுக பக்கத்துல விதவிதமா கதை கட்டுரை, அனுபவ‌ங்கள் இப்படின்னு நிற‌ய இருக்கு புள்ள.. விக்கிரமாதித்தன் கதைல்லாம் எழுதுறாவ..

சே என்னருமையான விலாவரியா சொல்லிருக்கீக.. நல்லாருக்கு மச்சான்.. இந்தா வாங்கிக்கோ.. இச் இச் இச்...

போதும்புள்ள.. மீதிய நாளைக்கி பாப்போமா புள்ள..


தொடரும்...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Thursday, April 15, 2010

செண்பகமே செண்பகமே .. 4

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க..

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்பகம் செண்பகம் வீடெல்லாம் ஒரே மணம் ரொம்ப நல்லாருக்கே.. வந்தது யாரு நம்ம பக்கத்தூட்டு மாலதி மாதிரியே இருக்கு..

ஆமா மச்சான் மாலதிக்காவேதான்.. நான் இன்னைக்கி இறால்பிரியாணி செஞ்சேன்..

கொண்டா கொண்டா சாப்பிட்டிருவோம். ஓ மணமே நல்லாருக்கே..

சாப்பிடு என்ஆச மச்சான்..

ம்ம்ம்.. என்னருமையா இருக்குபுள்ள.. பரவாயில்லையே நல்ல விதவிதமா சமைக்க கத்துக்கிட்ட.. ஒண்ணு தெரியுமாபுள்ள நம்ம ரெண்டுபேருக்கும் செம பாராட்டுக்கள்.. எல்லோரும் இது நல்ல ஜோடி.. அசத்துறாங்க.. வாழ்த்துகள்ன்னு சொல்லிருக்காவ..

அப்படியா மச்சான் அவுக எல்லாத்துக்கும் நம்ம நன்றியை தெரிவிச்சிக்கிருவோம்.

ஆமாபுள்ள.. எங்க கதைய படிச்சிக்கிட்டிருக்கிற எல்லாத்துக்கும் நன்றிங்கோ..

ஆமா மாலதிக்கிட்ட சமையலபத்தி பேசிக்கிட்டிருந்தீயாபுள்ள..

ஆமா இன்னும் கொஞ்சம்பேரு பாக்கியிருக்கு மச்சான்.

அப்படியாபுள்ள... சொல்லுபாப்போம்..

இவுக பேரு.. கவிசிவா... இவுக நாம கஷ்டப்படுததுக்கு ஒரு வழிய சொல்லிருக்காவ..

என்னவழிபுள்ள.. சீக்கிரம் சொல்லு..

ஆமா மச்சான்.. நாம பணக்காரவுகளா ஆவுறதுக்கு வழி இருக்காம்.. நாம எல்லோரும் இந்தோனேசியா போனோமுன்னா பணக்காரவுகளா ஆயிடலாமா..

அட அப்படியா.. இது நல்லாருக்கே.. உடனே கிளம்பிறவேண்டியதுதான்..

இன்னும் நிறைய விஷயத்தை பத்தி எழுதிருக்காவ.. நீயே படிச்சிபாரு மச்சான்.

அட ஆமா அடுத்தவுக யாருபுள்ள.. அட இங்கபாருபுள்ள.. ஏதோ வித்யாசமாருக்கு..

ஆமா மச்சான்.. இதுக்குபேரு..ரஸா மலாய்.. இத செஞ்சவுக மனோ சுவாமிநாதன்... வித்யாசமாவும் அருமையா இருக்கும் நினைக்கிறேன்.. ஒரு நாள் செஞ்சிதாரேன்..

என் ஆச பொண்டாட்டி என்னருமையா சமையல்ல வெளுத்து வாங்குறே.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்.....

இவுக பேரு இமா.. இவுக மருதாணி வச்சிருக்கிற அழகே தனிதான்.. அப்புறம் சமையல் குறிப்பு, அழகு குறிப்புன்னு அசத்திருக்காவ..

ரொம்ப நல்லாருக்கு.. அடுத்தவுக யாருபுள்ள..

இவுக பேரு செபா மேடம்.. இவங்க தன் அனுபவ குறிப்புகள சொல்லிருகாவ.. ரொம்ப நல்லாருக்கு மச்சான்..

ஆமா என் செல்ல பொண்டாட்டி.. இச் இச் இச் இச்..

போதும் மச்சான் போதும் அடுத்தவகள பாப்போமா..

ஆங் சரி பொண்டாட்டி.. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். :))

இவுக பேரு வானதி.. ரொம்ப அருமையான கதையெல்லாம் நிறய சொல்லிருக்காவ.. சிறுகதை ரொம்ப நல்லாருக்கு மச்சான்.

ஆமாபுள்ள நாம சேர்ந்து படிப்போமா.. அடுத்தவுக யாரு..

இவுக பேரு மலர்விழி.. இவங்க அனுபவ கட்டுரைகள், அறிவியல் கட்டுரைன்னு நிறைய எழுதிருக்காவ மச்சான். நாம ஒரு தடவை போய் பாத்துட்டு வரலாமா மச்சான்..

ஆங்! சரிபுள்ள.. வேற யாரு..

இவுக பேரு இலா.. இவுக கவிதை, கட்டுரை, சிறுகதைன்னு அசத்துறாவ..

அடுத்தவக யாரு புள்ள..

இவங்க கீதா ஆச்சல்.. நல்ல நல்ல விதவிதமான சமையல் செஞ்சி அசத்துறாக.. பார்லி சக்கர பொங்கல்.. வாழைக்கா பொடிமாஸ். இப்படின்னு நிறைய தினுசுதினுசா இருக்கு..

சே எவ்வளோ விஷயமெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கே என் செல்ல பொண்டாட்டி.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...

என் ராசா என்மேல அம்பூட்டு ஆசயா.. மீதிய நாளைக்கி பாப்போமா மச்சான்..

சரி என் செல்லம்..


தொடரும்..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவானாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Wednesday, April 14, 2010

செண்பகமே செண்பகமே .. 3

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க‌..

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

மாலதி : என்ன செண்பகம்.. இவ்வளோ நேரமாச்சி..

செண்பகம் : ஆமாக்கா எங்கூட்டுக்காரர்ட்ட பேசிக்கிட்டிருந்தேனா.. அதனால செத்த நாழியாயிருச்சி..

அப்படி என்னப்புள்ள பேசுவீக.. அதான் நாள்பூரா பேசுறீங்களே..

எக்காவ் இந்த எகத்தாளம் வேண்டாங்க்கா..

சரி சரி கோவிச்சிக்காதபுள்ள.. சும்மா கேட்டேன்..

சரிக்கா.. எங்கூட்டுக்காரர் பக்கத்தூர்ல வலையுலகம்ன்னு ஒரு உலகம் இருக்காம். அங்க நிறையபேர் இருக்காவளாம். அவுக பலவிஷய்ங்களைபத்தி எழுதுறாவலாம். நாங்க இரண்டுபேரும் படிச்சிப்பாத்தோமே..

அப்டியாபுள்ள.. கடத்தெருவுக்கு போயிட்டுவரும்போது வாரேன். உங்கூட்டுக்காரவுக இருக்கமாட்டாகல்ல..

சரிக்கா வா வா.

எப்பா என்ன வெயிலு வெயிலு.. மச்சான் மச்சான்.. ஓ ஓ.. வெளியபோயிட்டீகளா..

அப்போது கதைத்தட்டும் சத்தம் கேட்குது.. டொக் டொக் டொக்..

யாரு யாரு..

நாந்தான் மாலதி..

வா வாக்கா..

என்னபுள்ள செய்யிற..

சமையல் செஞ்சிக்கிட்டிருந்தேங்க்கா..

என்னாக்குழம்பு.. வீடெல்லாம் ஒரே மணமணக்குது..

ஆமாக்கா.. இன்னிக்கி இறால் பிரியாணி செஞ்சிக்கிட்டிருந்தேன்.

ஏப்புள்ள உனக்கு இதெல்லாம் தெரியாத எப்படி தெரிஞ்சிக்கிட்டே..

நாந்தான் சொன்னேனக்கா.. வலைப்பதிவர்கள் செய்யிறபார்த்து நானும் கத்துக்கிட்டனே..

அப்படியா எப்ப்டின்னு எனக்கும் சொல்லுபுள்ள..

இந்தா பாருக.. இவுகபேரு மேனகா.. இவுக செஞ்ச இறால்பிரியாணி தான் இப்போ செஞ்சிக்கிட்டிருந்தேன். இவுக எக்கசக்கம் சமையல்லாம் செஞ்சிருக்காவ.. எல்லாமே பாக்கிறதுக்கு நல்லாருக்கு.. செஞ்சும் பாத்துப்புடனும்...

ஆமா புள்ள.. ரொம்ப நல்லாருக்கு.. வேறயாரு புள்ள..

இங்கபாருங்க இறால் சாப்ஸ்.. ரொம்ப வித்யாசமாருக்கே..

இத செஞ்சது பேரு.. பேரு.. ஆங். ஸ்டார்ஜன்னாம்..

அடுத்து யாரு புள்ள..

இங்கபாருங்கக்கா.. இவுக பேரு செந்தமிழ் செல்வி.. என்னருமையான பேரு.. இவுக வீட்டுல உள்ள மசாலா சாமானெல்லாம் எப்படி பந்துசா வச்சிருக்கனுன்னு சொல்லிருக்காக பாருங்கக்கா..

அட ஆமாபுள்ள.. சே நம்ம வீட்டுலெல்லாம் அங்க ஒன்னு இங்க ஒன்னுமா சிதறி கிடக்குது.. இவுக சொல்லிருக்கிறமாதிரி பந்துசா வச்சிருக்கனும்புள்ள.. அடுத்தவுக யாரு..

அட இங்க பாருங்கக்கா.. கேப்ப..

அட நான் கேக்கமாட்டேன்.. நீயே வச்சிக்கோ..

அட என்னக்கா.. துயதமிழ்ல கேழ்வரகு.. அதத்தான் நான் சொன்னது கேப்ப..

இங்கபாருங்கக்கா.. இவுகபேரு ஆசியாஉமர்... கேப்பையிலே கூழு.. கேப்பையிலே உருண்டை.. இந்த உருண்டைக்கு பேரு மொஃதா வாம். ரொம்ப நல்லாருக்கும்போல.. இப்படி நிறய சமையல்ல் அசத்திருக்காக..

ஆட ஆமா செண்பகம்.. செஞ்சா நல்லா சாப்பிடல்லாம்.. நல்ல ருசியா இருக்கும்.

அடுத்து இங்கப்பாருங்க..இவுக பேரு விஜி.. எக்காவ் இவுகளும் நிறய சமையல்ல்ல சும்மா அசத்திப்புட்டாக.. விதவிதமா சமையல்குறிப்புகள், போளி, பிஸிபேளாபாத், கமன் டோக்ளா, க்ரிஸ்ப்பி பாகற்காய், வாழப்பூ பருப்பு உசிலி, பைனாப்பிள் ரசம் இப்படின்னு விதவிதமா இருக்குக்கா..

அடுத்து யாரு செண்பகம்.. அட மினுங்குதே..

அட ஆமாக்கா.. மினுங்குது.. பேரு மின்மினியாம்.

அதனால மினுங்குதா.. பேரு புதுசா இருக்கே..

ஆமாக்கா இவுக புதுசுதான்.. ஆனா புதுசா வந்தன்னிக்கி அசத்திபுட்டாக... உடனடி வெள்ளானம், கோதுமை பணியாரம், அழகு குறிப்புன்னு அசத்திருக்காக..

ஆமாபுள்ள.. நிறையவே மினுங்கட்டும்... அடுத்தவுக யாரு..

இவுக பேரு காஞ்சனா ராதாக்கிருஷ்ணன். இந்தம்மாவும் சமையல்ல ரொம்ப நல்லா செய்வாங்க போல..

வாபுள்ள போய்ப்பாப்போம்..

இவுகளும் சமையல்ல கலக்கிருக்காக.. விதவிதமான சமையல்.. மாங்காய்-வேப்பம் பூ பச்சடி, பாதாம் அல்வா, பேபிகார்ன் மசாலா, நீரிழிவிற்கு நாவல்பழம், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், வல்லாரை மசியல் இன்னும் நிறைய நாம தெரிஞ்சிக்கவேண்டியதிருக்கு.. ஒரு எட்டு பாத்துட்டு வருவோமாக்கா..

ஆமா உண்மையிலே அசத்திருக்காங்க அந்தம்மா.. நாம ஒரு நாளைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வரணும்..

சரிமாலதிக்கா.. அடுத்தவுகள பாப்போமா..

ஆங்.. சரி செண்பகம்..

இவுகபேரு சுஸ்ரீ.. பேரு நல்லாருக்குல்ல..

ஆமாப்புள்ள.. இவுக என்னன்னாலாம் செஞ்சிருக்காக விலாவரியா சொல்லுப்புள்ள..

ஆங்.. இவுக.. நிறய விதவிதமா செஞ்சிருக்காவ.. பேர பூரா சொல்லுறேன் கேட்டுக்கக்கா.. Maida Halwa / மைதா ஹல்வா, குழி பணியாரம், அவகாடோ சல்சா/டிப், புடலங்காய் மிளகு கூட்டு, மின்ட் ரைஸ், உருண்டை குழம்பு, தக்காளி குழம்பு, எள்ளு உருண்டை, சாக்லேட் கேக், கத்தரிக்காய் சாதம்.. விதவிதமா இருக்குக்கா.. நாம ஒரு நாளக்கி செஞ்சிபாப்போமா அக்கா..

ஆமா செண்பகம்.. ரொம்ப வித்யாசமா இருக்கு.. செஞ்சிருவோம்..

அப்போது கதவு தட்டப்பட்டது.. டொக் டொக் டொக்..

அய்யயோ உங்கூட்டுகாரவுக வந்திட்டாகபோல செண்பகம்.. ரொம்ப நன்றி செண்ப‌கம்.. இம்பூட்டு நேரமா எனக்கு சொல்லிதந்ததுக்கு நன்றி. நான் போயிட்டு வாரேன்..

நன்றில்லாம் எதுக்குக்கா.. போயிட்டு வா..


தொடரும்..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Tuesday, April 13, 2010

செண்பகமே செண்பகமே ..2

கதை புரியாதவங்க முதல்ல இருந்து வாங்க..

செண்பகம் : மச்சான் காலையில பாதியிலே விட்டுட்டுபோன பதிவர்களை பற்றி சொல்லுங்க மச்சான்..

மணி : என்ன இது இவ்வளோ ஆர்வமா இருக்கியே.. பரவாயில்லை..

ரொம்ப பீத்திக்காத மச்சான்.. கேட்டா சொல்லுவியா..

சரிசரி சொல்லுறேன்.. காலையில பயணத்துல உள்ள அனுபவத்த பார்த்தோமா..

இவருபேரு மதார். இவரு சென்னையிலஇருந்து திருநெல்வேலி போறதுக்கு டிக்கெட் எடுத்திருக்காக.. ஆனா பாரு..

அட நம்மூரா அந்தம்மா... என்னாச்சி மச்சான் என்னாச்சி...

பாவம் அவங்கபட்ட கஷ்டத்த நீயே படிச்சிப்பாரு..

அட ஆமா மச்சான்.. அரசு பஸ்ஊழியர்கள் பண்ணுன தவறால.. சே...

சரிமச்சான் ராத்திரி 11 மணியாயிருச்சி.. படுங்க.. காலையில பாப்போம்.

பொழுது விடிகிறது.

மச்சான் ஏமச்சான்! எங்க இவரக்காணோம் காலங்காத்தால எங்கப்போனாரு...

கவிதையே தெரியுமா என்கனவு நீதானடி என்இதயமே புரியுமா...

அட அட என்னமா பாட்டெல்லாம் படிக்கிறீக மச்சான். ரொம்ப சந்தோசமாருக்கு மச்சான்.

என்ராசாத்தி அடியே உனக்காகத்தானடி இந்த உயிரே..

மச்சான் ரொம்ப புல்லரிச்சி போச்சி.. அழுகஅழுகாச்சியா வருது.

உனக்காகத்தான் கவிதை எழுதிக்கிட்டிருக்கேன். சரியா வரமாட்டேங்குது..

இதுக்கேன் கவலப்படுதே மச்சான்! கவிதை எழுதிதான் உன் அன்பை வெளிக்காட்டணுமா. எப்பவுமே நான் உன் மனசுலதான்; நீ என் மனசுல.., என்மேல இம்பூட்டு அன்புவச்சிருக்கிறத நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு மச்சான்..

சரிப்புள்ள.. நம்ம வலையுலகில பதிவர்கள் என்ன எழுதிருக்காங்கன்னு பாப்போமா..

ஆங்.. சரி மச்சான்..

நம்ம ஏஞ்சல் ஒரு கவிதை எழுதிருக்காக..

ஆமா மச்சான் இந்த கவிதை நமக்கானது மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு.

இதப்பாரு புள்ள.. இதுவும் நமக்குதான்..

அடுத்து யாரு மச்சான்..

காதல் கவிதை சரத்தை இங்க ஒருத்தர் தொடுக்கிறார் பாரு..

பேரென்ன மச்சான்..

பேரு வித்யாசாகர்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.. அருமையாக இருக்கு புள்ள..

ஆமா மச்சான்.. அடுத்து யாரு இருக்காவுக..

ஏப்புள்ள.. இதயம் பேசுறத கேட்டிருக்கியா..

ஆமா மச்சான்.. சத்தம் கேட்குது.. ( மணியின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு )

அடப்போபுள்ள.. என் இதயம் எப்பவுமே உனக்குதானே அதில் நீதான் இருக்கே..

என் ஆசமச்சான் இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...

ரொம்ப நன்றி புள்ள.. அடுத்தவுகள பாப்போமா..

சரிசரி அடுத்தவுகள பாரு.

காட்சிகள் ரொம்ப நல்லாவே இருக்கு.. படம் ரொம்ப நல்லாருக்கு புள்ள..

என்ன மச்சான் கவிதைய கேட்டா படத்தபத்தி சொல்றீக..

ஏபுள்ள இந்த சினிமா படம் எடுக்கிறாவுள்ள அவுகளேதான்.. இந்த கற்றதுதமிழ் படம் எடுத்தாகளே அவுக பேரு ராம்.

ஆமா அதுக்கென்ன இப்போ..

அவரோட பக்கத்துல சுமதி கவிதைகள்ன்னு கவிதைகளா எழுதியிருக்காரு புள்ள..

படிச்சிக்காட்டு மச்சான்.. ரொம்பவே நல்லாருக்கு மச்சான்.

அடுத்தவுகள பாரு புள்ள..

இங்க ஒருத்தரு செயின் தொலைஞ்சி போன கதைய சொல்லிருக்காகபுள்ள..

அட இது கத மச்சான்.. அடுத்தது மச்சான்..

நான் உனக்கு இந்தமாதிரி ஒரு கவிதையத்தான் தேடிக்கிட்டிருந்தேன்.

அதாரு மச்சான்.. என்ன கவித..

இவங்க பேரு ஹேமா.. இவரோ கவிதய எல்லோரும் விரும்புதாகன்னா பாத்துக்கோயேன்.

அடுத்தவுக யாரு மச்சான்

இவுக பேரு கோமா.. கவிதையை மத்தாப்பு போல அழகா சுத்தவிட்டிருக்காக பாருபுள்ள.. நல்ல ரசனை.

ஆமா மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு..


சரிமச்சான் பக்கத்துவீட்டு மாலதிஅக்கா கடத்தெருவுக்கு போறதுக்கு கூப்பிட்டாக நான் போயிட்டுவாரேன் மச்சான். எங்கயும் போயிறாதீக.. நான் வருதவரைக்கும் இத நினைச்சிக்கிட்டே இரு.. இந்தா மச்சான் வாங்கிக்கோ. இச் இச் இச் இச்...

ஓகே என்ராசாத்தி..


தொடரும்...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Monday, April 12, 2010

செண்பகமே செண்பகமே .. ( வலைச்சரத்தில் )

அன்புமிக்க நண்பர்களே!!

வலைச்சரத்தில் மீண்டும் உங்களை சந்திக்க வந்துள்ளேன். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சரத்தில் இன்று முதல்நாள். வழக்கமாக இன்றைய தினம் முதல்நாள் அன்று அறிமுகப்பதிவு தான் வெளியிடுவாங்க. நான் ஏற்கனவே கடந்தமுறை என்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளதால் அறிமுகப்பதிவு தேவையில்லை என நினைக்கிறேன்.

அதனால் நேரடியாகவே கதைக்குள்ள போவோமா. அட ஆமா கதைன்னு சொன்னதுதான் ஞாபகம் வந்தது. இப்போ கதை சொல்ற சீசன் நடந்துக்கிட்டிருக்குன்னு நினைக்கிறேன். அதனால் நான் இந்தவாரத்தில் கொஞ்சம் வித்தியாசமாக பதிவர்களின் அறிமுகத்தை தொடர்கதையாக எழுதப்போகிறேன். அதற்கு உங்கள் மேலான ஆதரவுகளை நல்குவீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது கதைக்குள் செல்வோமா நண்பர்களே!!..


ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் பெயர் மணி. அவன் மனைவி பெயர் செண்பகம். அவனுக்கு ஏராளமா சொத்துநிலபுலன்கள், இருந்தன. அதனால் அவன் வேலைக்கு செல்லாமல் உக்கார்ந்தே சாப்பிட்டு சொத்துக்களை கரைத்தான். இது அவன் மனைவிக்கு பிடிக்கவில்லை. அதனால் அவனை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தினாள்.

மணி தன் மனைவியிடம் ஏப்புள்ள!!.. 4 தலைமுறைக்கும் சேர்த்து இவ்வளோ சொத்துஇருக்கு. இதை அனுபவிக்காம நாம் வேற வேலைசெய்யவா. அதனால நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். நான் இந்த உலகை சுற்றிவர ஆசைப்படுகிறேன். அதுக்கு முன்னாடி பக்கத்து ஊர்ல வலையுலகில் நிறைய பதிவர்கள் இருக்காங்க அவங்களிடம் போய் ஐடியா கேப்போம் என்ன சரியா..

அதென்ன மச்சான்! வலையுலகம்.. அப்படின்னு ஒரு உலகம் இருக்கவா செய்யுது.. கலிகாலம்டா சாமி...

ஆமாப்புள்ள அவுகதான் இப்போ கொடிகட்டி பறக்குவுதாக.. சரிப்புள்ள நான் போய்வருகிறேன். இங்க இருந்தா நீ தொணதொணன்னு பேசிக்கிடே இருப்பே..

ஏமச்சான்! பாத்தீகளா என்னைய வுட்டுட்டு போறேன்னு சொல்றீகளே. இதென்ன நியாயம். நானும் வருவேன் ஆமா சொல்லிபுட்டேன்.

சரிசரி வா வா நாம ரெண்டுபேருமே போவோம்.

மச்சான் மச்சான் நீங்க ஊர்வழிக்கு போறேன்ன்னு சொன்னீங்களே.. அதைபற்றி யாராவது எழுதிருக்காங்களான்னு பாருங்களேன்..

இரு புள்ள பாக்குறேன்.. ஆங்.. ஆங்... அட இங்கபாரு ஒருத்தர் சிங்கப்பூர்ல இருக்காராம் அவருபேரு.. ஆங்.. கோவி.கண்ணன். இவரு சிங்கப்பூர்ல இருந்து தன் குடும்பத்தோடு ஐரோப்பாவுக்கு டூர் போயிட்டு வந்திருக்காராம்..

அப்படியா மச்சான்!! அதென்ன மச்சான் டூர்?.

மண்டு மண்டு!! டூர்ன்னா தமிழ்ல் சுற்றுலா. உன் பாஷையில சொல்லனுன்னா ஊர்வழி.

அட ஆமால்ல.. நான் ஒரு படிக்காதவ. என் ராசா எம்ப்பூட்டு விவரமா இருக்கீக. இந்தாங்க இதை வாங்கிக்குங்க. இச் இச் இச் இச்...

போதும் போதும்.. நம்ம விவகாரம் அப்புறம் பாக்கலாம். இங்க பாரு.

ஆங்! கோவி.கண்ணன் என்ன சொல்றாரு..

அவரு ஐரோப்பாவுக்கு டூர் போயிட்டுவந்ததை 9 பாகமா எழுதியிருக்காருன்னா பாத்துக்கோயேன்.

ஐரோப்பா எங்க இருக்கு மச்சான்?..

அடபோப்புள்ள! உனக்கு விளக்கம் சொல்றதுக்குள்ளே எனக்கு தாவு தீர்ந்திரும்போல சே! ஐரோப்பா, நாம இருக்கிற ஆசியா கண்டம் மாதிரி அதுவும் ஒரு சின்ன கண்டம்.

மன்னிச்சிகோ மச்சான்! இனிமே இப்படில்லாம் கேக்கமாட்டேன். மச்சான் என்னையும் கூட்டிட்டுபோ.. நானும் வருவேன் ஐரோப்பாவுக்கு.

சரி சரி.. அடுத்தவுகள பாப்போமா..

அட இங்கபாரு செண்பகம். இவங்க பேரு துளசி கோபால். இவரை துளசி டீச்சர்ன்னு எல்லோரும் அன்போடு அழைப்பாங்களாம்.

அப்போ வாத்தியாரம்மான்னு சொல்லுங்க..

இவங்க குஜராத் போன அனுபவத்தை 30க்கும் மேலான பாகங்கள் எழுதியிருக்காங்க. இவரோட வலைப்பூவில் நிறைய அனுபவ கட்டுரைகள் புதைந்து கிடக்குது.. தோண்ட தோண்ட ( படிக்க படிக்க ) ரொம்ப விறுவிறுப்பா இருக்குது. நாம் ஒரு தடவை போயிட்டுவருவோமா புள்ள.

சரிமச்சான்.. அடுத்து யாரு இருக்காகன்னு பாருங்க.

அடுத்து துபாய் ராஜான்னு ஒருத்தர் இருக்காரு..

அப்படியா இவரு துபாய்க்கே ராஜாவா?..

அட சே! என்னபுள்ள.. இவரு முன்னாடி துபாய்ல இருந்திருப்பாருன்னு நினைக்கிறேன். அதனால துபாய்ன்னு பேர்ல அடைமொழி போல. இப்போ இருக்கிறது எகிப்துல.

இவரு விமானத்துல செல்லும்போது ஏற்பட்ட அனுபவத்தை பற்றி எழுதிருக்காரு..

இது மட்டும்தானா மச்சான்!

இதுமட்டுமல்லபுள்ள.. இன்னும் நிறைய இருக்கு. குட்டிச்சாத்தானுக்கும் இவருக்கும் இடையே பெரிய சண்டையே நடந்திருக்கு..

என்ன மச்சான் குட்டிச்சாத்தானுக்கும் இவருக்கும் சண்ட நடந்திருக்கா நம்பவே முடியல..

என்னாலையும்தான் நம்பமுடியல... 6 பாகமா எழுதிருக்கான்னா பாத்துக்கோயேன். படிச்சி பார்ப்போமா..

அடுத்து இவரு எகிப்துல சுற்றுலா போனது பற்றி 8 பாகமா எழுதியிருக்காரு.

அப்ப ரொம்ப விறுவிறுப்பா இருக்குன்னு சொல்லுங்க. வேற யாரு..?.

இங்க பாரு ஒருத்தர் நம்நாட்டுல இருந்து வெளிநாட்டுக்கு போகும்போது உண்டான் அனுபவத்தை பற்றி எழுதிருக்காரு..

இது எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதானே.. இதுல என்ன புதுசா இருக்கு..

அட நீவேற புள்ள.. அவரு புதுசா கல்யாணம் ஆகி 3 மாதத்துல வெளிநாட்டுக்கு போறதுன்னா எவ்வளவு கஷ்டம். இது காணாதுன்னு இயற்கையும் சதி செஞ்சிருக்கு..

அதென்ன மச்சான்!

ஆமா புள்ள.. அவருபோன விமானத்துல ஏதோ கோளாறாம். 2 நாள் அவதிபட்டிருக்காரு.. நீயே படிச்சிப்பாரு.

அட ஆமா.. இவரு நம்ம ஸ்டார்ஜன்னுல்ல.. வேற யாருன்னு பாரு மச்சான்.

வெளிநாட்டுல இருந்து ஊருக்குத் திரும்பும்போது உள்ள சந்தோசம் இருக்கே.. அதை விவரிக்க வார்த்தையே இல்லன்னு சொல்லலாம் புள்ள..

என்ன மச்சான் சொல்றீக..

ஆமா புள்ள இவரு பேரு சரவணக்குமார்.. இவர் ஊருக்கு போகும்போது உண்டான சந்தோசத்தை பற்றி சொல்லிருக்காரு..

ஆமா மச்சான்! உண்மையிலே ரொம்ப சந்தோசமா இருக்கும்.. ஊர்ல மணைவி, பிள்ளைகளை 2 வருஷம் கழித்து பார்க்கும்போது எப்படி இருக்கும்?. வெளிநாட்டுல போய் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஊருக்கு போகும்போது ரொம்ப சந்தோசமாவே இருக்கும் மச்சான். இவரோட பக்கத்தை படிச்சி காட்டுங்க மச்சான்.

அட என் பொண்டாட்டி என்னமா பேசுற.. புல்லரிக்குது.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...

போதும் மச்சான் போதும்.. அட அடடா.. சமையற்கட்டுல ஏதோ சத்தம் கேக்குது. மத்ததை நாளைக்கு பாப்போம் மச்சான். எனக்கு கொஞ்சம் சமையற்கட்டுல வேலை இருக்கு.. வாரேன்.


தொடரும்...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Sunday, March 28, 2010

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் கடைசி நாள், ஞாயிற்றுக்கிழமை. உங்களிடம் இருந்து விடைபெறும் நாள். இந்த ஒரு வாரமும், நான் வெளியிட்ட அனைத்து இடுகைகளும் ரொம்ப விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு வாய்ப்பு அமைத்துக் கொடுத்த சீனா அய்யாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அக்பர், நட்புடன் ஜமால், ஸாதிகா, பத்மா, பிரபு.எம், கட்டபொம்மன், சித்ரா, ராகவன் நைஜீரியா, நீச்சல்காரன், ஜோதிஜி, பாலாசி, தேனக்கா, ராஜூ, ஆடுமாடு சார், பிரபாகர், சைவகொத்துப்பரோட்டா, முனைவர்.இரா.குணசீலன், துபாய் ராஜா, றமேஸ்-Ramesh , T.V.ராதாகிருஷ்ணன், கடையம் ஆனந்த், ராமலக்ஷ்மி, சேட்டைக்காரன், சிவாஜி சங்கர், SUREஷ் (பழனியிலிருந்து), விஜய், இராமசாமி கண்ணண், கண்ணா., Mrs.Menagasathia , கோவி.கண்ணன், பிரியமுடன்...வசந்த், கார்த்திகைப் பாண்டியன், சே.குமார், வானம்பாடிகள், அனானிமஸ், 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║, சுல்தான், அபுஅஃப்ஸர், நண்டு@நொரண்டு -ஈரோடு, நாஞ்சில் பிரதாப், நேசமித்ரன், கயல், மோகனன், தேவன் மாயம், அன்புடன் மலிக்கா, மதார், அமுதா, முரளிகுமார் பத்மநாபன், வெ.ராதாக்கிருஷ்ணன் சார் , AVMS Bags Private Limiteட் ,ஜலீலா, நாமக்கல் சிபி, ஹுஸைனம்மா, க.நா.சாந்தி லெட்சுமணன்., அநன்யா மஹாதேவன், மைதிலி கிருஷ்ணன், மின்மினி, ஜெஸ்வந்தி, ற்.கோபி, பவி , புதுகைத் தென்றல், என்.ஆர்.சிபி, திவ்யாஹரி, வெங்கட், மதுரை சரவணன், ஜெட்லி, A.சிவசங்கர், ஷங்கி, ஸ்ரீ.கிருஷ்ணா, ஷியாம், நாளும் நலமே விளையட்டும் சரத், மாதேவி, ஜெரி ஈசானந்தன்., நாடோடி ஸ்டீபன், ஜெய்லானி, ட்ரீமர், ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫, .....etc .


இந்த பட்டியலில் விடுபட்ட அனைவருக்கும் மேலும் சிறப்பாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் பெரியோர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நனறிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


வலைச்சரத்தில் குறிப்பிடபட்டுள்ள அனைவருக்கும், அவர்களின் எழுத்துக்கள் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கபட்டால் இந்த வாரம் சிறப்பாக அமைந்ததுபோல் வரும் வாரங்களும் சிறப்பாக அமைய பாடுபடுவேன்.


மீண்டும் ஒரு வலைச்சர வாரத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

விடைபெறுகிறேன் நண்பர்களே !!

நன்றிகளுடன் உங்கள் ஸ்டார்ஜன்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Saturday, March 27, 2010

ஸ்பெஷல் சனி - வலைச்சரத்தில்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் ஆறாம் நாள், சனிக்கிழமை. என்னடா வெள்ளிகிழமையைக் காணோமே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் என்னால் இடுகை எழுதமுடியவில்லை. இப்போது பரவாயில்லை, நலம். சுவாரசியமான, வித்யாசமான பக்கங்களை இந்த வலைச்சரம் கோர்க்கப் போகிறது.

சேட்டைக்காரன்

இந்த வலைப்பக்கத்தின் ஒரே நோக்கம் நகைச்சுவை. சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க. அருமையான எழுத்து நடையில், வலைப்பூவில் காமெடி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். சில‌ பக்கங்களை மட்டுமே குறிப்பிட முடியாத நிலையில் நான் உள்ளேன். இவர் எழுதிய அனைத்து இடுகைகளும் சுவாரசியத்துடன் கூடிய நகைச்சுவை இடுகைகள்.

இவர் கடந்த 3 மாதங்களுக்குப் பின்தான் எழுத வந்தார். வந்த அன்னைக்கே கண்ணுல கத்திய‌ விட்டுட்டுனே என்கிறமாதிரி அனைத்துமே சிரிப்பலைகள். இவர் இப்போது 100 இடுகைகள் வெளியிட்டுள்ளார்.

வாங்க நாம் அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்.


சைவகொத்துப்பரோட்டா

இந்த வலைப்பக்கமும் சுவாரசியமான காமெடி கலந்த இடுகைகளை அடிப்படையாக கொண்டது. நிறைய சுவாரசியமான இடுகைகள் உண்டு. கவிதை, கட்டுரை,திரைப்பார்வைகள் அடங்கியுள்ளன. திரிரோசஸ்,சேட்டைக்காரன், சாமி, மறுஜென்மம்,இதெல்லாம் திரைப்படங்கள் அல்ல. சுவாரசியமான இடுகைகள். நீங்களும் ஒரு தடவை சென்று வாருங்களேன்.

பனித்துளி சங்கர்.

சங்கர், சங்கரின் பனித்துளி நினைவுகள் என்ற பெயரிலும் RDX அந்நியன் என்ற பெயரிலும் உள்ள வலைப்பக்கங்களில் எழுதி வருகிறார். இது ஒரு தகவல் களஞ்சியம். செய்திகள், கட்டுரைகள் நிரம்பி வழிகின்றன. தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

சுந்தர வடிவேலு.

இவர் 100 இடுகைளுக்குமேல் எழுதியுள்ளார். மனசு என்பது எதற்கும் தயாராகிவிடும். இசையை பற்றிய விளக்கம்,பாட்டி சுட்ட வடைக்கதையில் வரும் காக்கா என்ன ஆனது? தெரியலியே... குழந்தையின் வருகை ஒரு தென்றல் வருவதை போன்றது. தென்றல் காற்றை அனுபவிங்க. அபத்தங்களையெல்லாம் பட்டியல் போட்டுள்ளார். இப்படி நிறைய சுவாரசியங்கள் உண்டு.

மங்குனி அமைச்சர். ( ஷாஜஹான் )

மீண்டும், காமெடி கல‌ந்த சுவாரசியங்கள் நிறைந்த இடுகைகளை உங்கள் முன் சமர்ப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சீரியஸ் போலிசை பார்த்திருப்பீங்க. சிரிப்பு போலிஸ் மருதமலைக்கு அப்புறம் மங்குனிஅமைச்சராக உங்கள்முன்.

கட்டபொம்மன்

இதோ உங்கள்முன் மன்னர் கட்டபொம்மன் பராக் பராக். அறிமுகம் கொடுக்கிறார் பாருங்க.

மயில் ராவணன்

கதைகள், கவிதைகள், செய்திகள், நிறைந்த சூப்பர் கதம்பம். சென்று வாருங்களேன்.

ராமசாமி கண்ணன்

இவர் சாத்தூர்மாக்கான் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். வாழ்நாள் கனவு இப்படி அமைந்தால் எனக்கு மிக்க சந்தோசம். வாசிக்கபடாமலே ஒரு கடிதமா.. காதல்கதை இப்படித்தான் இருக்குமோ?...

சே.குமார்

இவர் சிறுகதைகள், நெடுங்கவிதைகள், மனசு, கிறுக்கல்கள் பக்கங்களில் எழுதி வருகிறார். கதைகளில் மழலை இதயம், மனசு, குடும்ப விளக்கு, ஆசிரியர் இப்படி நிறைய அருமையான கதைகள் உண்டு.

சிவாஜி சங்கர்

சுவாரசியமான இறகுகளை பற்றி அறிந்து கொள்ள இங்கே வந்து போகலாமே..

ட்ரீமர் ( ஹரிஷ் நாராயண் )

சிறுகதைகள், கவிதை சுவாரசியமான தகவல்கள் நிறைந்த இந்த டிரீமர் நமக்கு ஒரு புதுவிதமான‌ அனுபவத்தை கொடுக்கிறது.


தொடந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


மீண்டும் நாளை சந்திக்கிறேன்...

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Thursday, March 25, 2010

அதிரடி வியாழன் - வலைச்சரத்தில்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் நான்காம் நாள்,வியாழன். இன்று வித்யாசமான எண்ணங்களை கொண்ட வலைப்பக்கங்களை தேடி இந்த வலைச்சரம் செல்கிறது.


கண்ணா

வித்யாசமான பக்கங்களை கொண்டது இவரது வலைப்பூ. சூடான பூமியைகுளிராக்க என்ன செய்யணும்?.. தெரிஞ்சிக்க வாங்க. வீடு கட்டணுமாஉங்களுக்கு .. பிடியுங்க கண்ணாவை!!. வாஸ்து பிராப்ளமா ...


மதுரை சரவணன்

கல்விக்கான ஒரு சிறப்பான வலைப்பூ இது. பிள்ளைகள் படிப்பு, குழந்தைகளின் பிரச்சனைகள் நல்ல மதிப்பெண்கள் பெற செல்லுங்கள் மதுரை சரவணனை தேடி. நமக்கு எட்டாதவிஷயங்களை எட்டாவது அறிவு கதைகளில் தேடலாம்.

வெங்கட்

கோகுலத்தில் சீதைதான் கேள்வி பட்டிருக்கிறேன். இங்கே சூரியன். வெளிச்சம் ரொம்ப பிரகாஷமா இருக்கு. ஆடு சைவமா?..அசைவமா?.. தெரியலியே எனக்கு.. ஹார்லிக்ஸ் * காம்ப்ளான் பட்டிமன்றம். இப்படி நிறைய சுவாரசியங்கள் உண்டு.

மேலும் இவரது பக்கத்தில் சுவாரசியமான இடுகைகள்

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
** L O V E...!!
இது எந்த ஊரு Dictionary..??
நாட்டாம.! தீர்ப்ப மாத்தி சொல்லு.!


ஷங்கி

அழகு நல்லாருக்கும் அபத்தமா.. பூலோக சொர்க்கம் அமெரிக்காவாம். தெரியலியே.. கடவுளையே கனவு காணவைத்தவர்.


நாளும் நலம் விளையட்டும் ( சரத் )

கணனிக்கு ஏற்றமொழி என்ன?.. விளக்கு வெளிச்சம் எப்படி இருக்கும்?. பொருளாதாரத்தில் முன்னேற வழிகள் சொல்லும் இடுகை. எலி ஜோசியம் எப்படி இருக்கும் ?.. போன்ற கேள்விக்களுக்கு சென்று வாருங்கள்.

ஷியாம்

அமெரிக்காவில் உள்ள பழக்கவழக்கங்கள், நடைமுறை, சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி சொல்லும் இவர், வழியும் காட்டுகிறார் இங்கே. சென்று வாருங்களேன் ஒரு தடவை.

நாடோடி ( ஸ்டீபன் )

வாழைப்பழ காமெடி நமக்கு தெரியும். விதவிதமான வாழைப்பழங்களை பற்றி சொல்லுகிறார். ஆபிஸ் எக்ஸல் பற்றி சொல்லித் தருகிறார் இங்கே. ஆள்தேவை? விளம்பரங்களினால் என்ன நடக்கும்?. அருமை

A. சிவசங்கர்

வித்யாசமான சிந்தனைகளை கொண்ட பக்கங்கள். புரூஸ்டட் சாப்பிடும்போது கவனிக்க.. வேலை இல்லாத குறையே இனி இல்லை.

ஸ்ரீ.கிருஷ்ணா

கம்யூட்டரை பாதுகாக்க என்ன் சொல்கிறார்?. நல்ல நல்ல வழிமுறைகள். அருமையான தொழில்நுட்ப பதிவுகள் கொண்ட வலைத்தளம். சென்று வாருங்களேன்.

சசிக்குமார்

இங்கே இருக்கும் கேக்குகளை பார்க்கும்போது சாப்பிடத் தோணுது. எபிசிடி யை இவர் வித்யாசமாக கற்றுத் தருகிறார்.


தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்...

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
மேலும் வாசிக்க...

Wednesday, March 24, 2010

காவிய புதன் - வலைச்சரத்தில்

>இன்று வலைச்சரத்தில் மூன்றாவது நாள், புதன்கிழமை. பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு பெரியவங்க சொல்வாங்க‌. எல்லா நல்ல காரியங்களும் புதன்கிழமையில் வைத்தால் மனதுக்கு சந்தோஷம் என்று சொல்பவர்கள் நிறையபேர் உண்டு. சரி விஷயத்துக்கு வருவோம்.

பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் தங்கள் திறமைகளை நிலைநாட்டி வருகிறார்கள். வலைப்பக்கங்களில் தனது எழுத்துக்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆம், இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை மையமாக கொண்ட வலைப்பக்கங்கள், நமது வலைச்சரத்தை அலங்கரிக்கப்போகின்றன.

ஸாதிகா மேடம்

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்கள் இங்கே பளிச்சிடுகிறார்கள்.

சாப்பிட சாப்பிட திகட்டாத ஒரு களஞ்சியமே இங்கே காணலாம். ஆபிஸில் முன்னேறக்கூடிய வழிகளையும் ஸாதிகா சொல்லிருக்காங்க.

சித்ரா டீச்சர்

தலைப்புதான் வெட்டிபேச்சு. ஆனா விவரம் ரொம்ப ஜாஸ்தி. நிறைய பயனுள்ள கட்டுரைகள் இவரின் பக்கத்தை அலங்கரிக்கின்றன. அமெரிக்கா பொளாதாரம் எப்படி இருக்குன்னு இவரிடம் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். அதேமாதிரி அமெரிக்காவில் ஷாப்பிங் போகும்போது சித்ராவிடம் ஆலோசனை கேட்டு செல்லலாம். திருநெல்வேலின்னா அல்வாதான் நமக்கு தெரியும். இவர் புட்டுபுட்டு வைக்கிறார்.

அம்பிகா

சாதனை பெண்கள் இவரது வலைப்பூவை அலங்கரிக்கின்றனர். அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கும் ஒரு சாதனை பெண் இங்கே மிளிர்கிறார்.

கணவனால் கொடுமைக்கு ஆளான‌ பெண்ணை பற்றி இங்கே. உங்க வீட்டுல ரோஜா செடி வளரணுமா?... கேளுங்க அம்பிகாவிடம்.

மைதிலி கிருஷ்ணன்

பேய்களை பற்றிய ஆய்வு நடத்திவருகிறார் மைதிலி கிருஷ்ணன். எதுவும் சந்தேகம் என்றால் கேளுங்க. வெளியூர் சென்று படிக்கும் பெண்களா நீங்க? மைதிலி என்ன சொல்கிறார் என்று கேட்டுவிட்டு செல்லுங்கள்.

ஜெஸ்வந்தி

தண்ணீரின் அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாம் வாங்க. இரண்டரை அடி உள்ள மனிதர் என்னவானார்?...

அனன்யா மகாதேவன்

யார்யாரெல்லாம் பிரபலமாகணுமோ அவங்களெல்லாம் பாலக்காட்டு பக்கம் வாங்க.. ஹிந்தியில் வெளுத்து வாங்குகிறார். நெட்லெயிருந்து சுடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். சுட்ட பழத்தையும் சுட்டிருக்கிறார். :‍-)))

லக்ஷ்மி SRK

வட இந்திய உணவுகள் இவருக்கு அத்துப்படி. வித்யாசமாக சாப்பிடணுன்னு தோணிச்சின்னா வாங்க இங்கே.

சிநேகிதி

விதவிதமான நாக்குக்கு ருசியா சமைத்து சாப்பிட விரும்புபவர்கள் வரலாம் இங்கே தயக்கமின்றி.. பொதுவா பெண்கள் பதிவுகளில் பெண்களுக்கு டிப்ஸ் நிறைய சொல்வாங்க. இவர் ஆண்களுக்கும் சொல்கிறார். அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் நிறைந்த இந்த இல்லம் ஒரு இனிய இல்லமே

பத்மா

இருளின் நிறம் என்ன?.. கேட்கலாம் வாங்க.. வித்யாசமான பக்கங்கள் கொண்ட காகித ஓடம்

பத்மினி

வித்யாசமான எண்ணங்களை கொண்ட வலைப்பூவுக்கு சொந்தக்காரர். கம்ப்யூட்டரை கதை எழுத பணிக்கிறார். பேய் பங்களாவில் என்ன நடந்தது?.. தெரியலியே.. தெரிந்து கொள்ள மந்திரவாதியின் மனைவியிடம் கேட்போமா..

க.நா.சாந்தி லக்ஷ்மணன்

அந்தமானின் அழகை இவர் வலைப்பூவில் காணலாம். தமிழோசை ஒலிக்கச் செய்திருக்கிறார். அழைப்பதில் இத்தனை அர்த்தம் உண்டா?..

ஜலீலா

எல்லாவிதமான சமையலாகட்டும், கட்டுரைகள், அழகு குறிப்புகள், ஆல்இன்ஆல் ஜலீலாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தம் பிரியாணி வாசம் இங்கே மூக்கை துளைக்குது..

பவி

வண்ணவண்ணமான எண்ணங்களை கொண்ட வலைப்பூ இது. பயனுள்ள டிப்ஸ், அருமையான கருத்துக்களை கொண்ட பக்கங்களை காணலாம். மயில் ஆடும் அழகே தனிதான்.

ஹூசைனம்மா

இவரின் சொல்வதை பார்த்தா தண்ணீர் பஞ்சமே இருக்காதுபோல.. பரம்பரை படமா இல்லையே!! ஓ ஜீன்ஸ்.. இவருக்கு பிடிக்கும் பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். கலக்குறாங்க ஹூசைனம்மா. வித்யாசமான பக்கங்கள் சென்று வாருங்களேன்.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்....

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,


மேலும் வாசிக்க...

Tuesday, March 23, 2010

காதல் செவ்வாய்- வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். இன்று செவ்வாய்கிழமை. செவ்வாய் என்று சொல்லிப்பாருங்க, என்ன தோணுது?.. காதல் காதல். காதலுக்கும் செவ்வாய்க்கும் ரொம்ப தொடர்பு உண்டு. காதல் என்றாலே கவிதை தானா வந்துவிடும். காதலைப் பொறுத்தவரை பெண்கள் அவ்வளவு சீக்கிரமா வெளிப்படுத்திவிடமாட்டாங்க. ஆனால் அதன் ஆழம் ரொம்ப மிகுதியாக இருக்கும். காதலை மையமாக கொண்ட வலைப்பூக்கள் இன்று நமது வலைச்சரத்தை அலங்கரிக்கப்போகின்றன.

முதலில் பெண்கள் எழுதிய வலைப்பூக்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.


தேனக்கா (தேனம்மை லக்ஷ்மணன்).

பொதுவா நாம்தான் பூக்களைத்தேடி போவது வழக்கம், ஆனால் இவரைத் தேடி பூக்களே வருகிறதே!!. செப்டம்பர் மாதம், அக்டோபர் மாதம், நவம்பர் மாதம் பூக்களுக்கு உகந்த மாதமோ!! தெரியலியே.. என்னவள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை எப்போ வருவ? என்றுதான்.


ஹேமா

காதலை வெளிப்படுத்தும் நாள் இதுதானாம்.


அமுதா மேடம்

இவரது எண்ணங்களிலிருந்து நிறைய தேடல்களை காணலாம். ஆனால் இவரது தேடல் வேற ஒன்றாகவல்லவோ இருக்கிறது.


மலிக்கா

எண்ணங்களை வண்ணமயமாக்கும் இவரது வலைப்பூவில் காதலின் தேடல் மழைச்சாரல் வீசும் நேரத்தில் தென்றலாய் மெல்ல பயணித்து கரிசல்காட்டின் வழியே செல்கிறது.


மதார்

காதலில் உணர்வும் புரிந்துகொள்ளலும் காதலின் வெற்றிக்கு காரணமாம்..


கயல்விழி சண்முகம்

கூர்வாள் தலைப்பை பார்த்து பயந்துட்டேன்... எழுத்துக்களில் கூர்மை, கவிதை தொகுப்புகளில் நம்மை தொலைத்துவிடுவோம். அந்தளவுக்கு கவிதை களஞ்சியம் இவரது வலைப்பூ. நீங்களும் ஒருதடவை சென்று வாருங்களேன்.


காயத்ரி சித்தார்த்

நாம் எல்லோரும் இப்போது பயணிப்பது தற்கால காதல் திசையில். ஆனால் இவரது பயணமோ சங்ககால காதலின் திசையை நோக்கி.. நாமும் அந்த திசையில் செல்வது எப்போ?..


பாக்தாத்திலிருந்து பூங்குன்றன்

காதல் மிக வலிமையானதாம்; குழந்தைகள் ரைம்ஸ்தான் சொல்வாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இவரது கவிதையில் குழந்தைகளும் கவிபாடுகின்றனர்.


க.பாலாசி

இரண்டு மலர்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது பேசும்மொழி நம்ம யாருக்கும் தெரியாது. இவருக்கு எல்லா மொழியும் அத்துப்படி.


மோகனன்

கடிகாரமும் காதலிக்கிறது இவரது கவிதையில். அதிகாலை நேர காற்றும் கவிபாடுமாம் இவர் கவிதையில்..


தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்....


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,
மேலும் வாசிக்க...

Monday, March 22, 2010

வலைச்சரத்தில் முதல் நாள் - உங்கள் ஸ்டார்ஜன்.

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..

என் உண்மையான பெயர் சேக் மைதீன். நான் இப்போது சவூதி அரேபியாவில் கணனி பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறேன். எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. 2 வருடத்துக்கு ஒருமுறை தாயகம் சென்று திரும்புவேன்.

நான் ஸ்டார்ஜன் என்ற புனைப்பெயரில் நிலா அது வானத்து மேல! என்ற வலைப்பக்கத்திலும் நாளைய ராஜா என்ற வலைப்பக்கத்திலும் எழுதி வருகிறேன். நான் இதுவரை நிலா அது வானத்துமேல யில் 134 இடுகைகள் எழுதியுள்ளேன்.

இன்று முதன்முதலாக வலைச்சரத்தில் ஆசிரியராக வாய்ப்பு அமைந்துள்ளது.இந்த பதிவுலகில் எழுதவந்த பின்னர் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் அனைவரும் கிடைத்துள்ளீர்கள். எனக்கு எழுதுவதற்கு ஊக்கமும் என்முயற்சிகளுக்கு ஆதரவும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னவென்று நன்றிகள் சொல்வதென்றே தெரியவில்லை.

நான் நாளையராஜாவில் பதிவு எழுத ஆரமபித்தவுடன் எனக்கு முதன்முதலாக என் பக்கத்துக்கு வந்து வாழ்த்திய பழனி டாக்டர் சுரேஷ் அவர்களை மறக்கவே முடியாது. அதுபோல நிலா அதுவானத்துமேல யிலும் அவர்தான் முதல் பின்னூட்டம் இட்டார். அதுமாதிரி எனக்கு முதன்முதலாக பாலோயர் ஆக ஆனவர் என் இனிய நண்பர் முரளிகண்ணன் அவர்கள்.

தொடர்ந்து புதியவர்களுக்கு தன்னுடைய ஆதரவையும் அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் அண்ணன் கோவி.கண்ணன் அவர்களும், நான் வலையில் எழுதப் போகிறேன் என்றதும் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்த என்னுடன் பணிபுரியும் என்னுடைய அருமை நண்பருமான‌ அக்பரும் மறக்க முடியாதவர்கள்.


நான் உங்களில் ஒருவனாக எழுதுவதற்கு முக்கிய காரணம் சிறுவயதுமுதல் ஆர்வம் மிகுதியாக உண்டு. எங்கள் பகுதியில் உள்ள பள்ளிவாசலின் பேஷ் இமாம் மர்ஹூம் பத்ஹுல்லாஹ் ஹஜரத் அவர்கள் தினமும் பிள்ளைகளுக்கு அரபிமொழியில் குர்ஆன் ஓதுவதற்கு கற்றுக் கொடுப்பார்கள். நான் தினமும் அவரிடம் குர்ஆன் ஓதுவதற்கு அதிகாலையில் செல்வேன். ஹஜரத் அவர்கள் பாடங்கள் மட்டுமல்லாமல் பொதுவான விஷயங்களை பற்றி பிள்ளைகளுடன் விவாதிப்பார்.

அவர் ஒரு எழுத்தாளரும் கூட, அவர் பல சமூகநல கட்டுரைகள் பத்திரிக்கைகளுக்கு எழுதுவார். அப்போது எனக்கு, அவர் எழுத்தின்மேல் ஈர்ப்பு ஏற்பட்டது எனலாம். அவர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்து நான் பள்ளி ஆண்டுவிழாவில் பேசி முதல்பரிசு பெற்றேன். தொடர்ந்து பள்ளிப் போட்டிகளில் பரிசுபெறும்போதெல்லாம் ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்தவர்.


உங்களுக்கு என் எழுத்தின்மேல் ஈர்ப்பு ஏற்பட்டதுக்கு இவரும் ஒரு காரணம். மேலும் என்னை பற்றி தெரிந்து கொள்ள நண்பர் ஷங்கி அழைத்த நானும் என் வரலாறும் தொடர்பதிவில் காணலாம்.

என்னுடைய எல்லா இடுகைகளும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகின்றேன்.

எனக்கு பிடித்த என் அறிமுக இடுகைக்கு பின்னர் திகில் அனுபவ இடுகையும் எனக்கு பிடிக்கும்.

மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பள்ளிகால நினைவுகளும் பதின்ம வயது நினைவுகளும் என்னை வந்துவந்து மறுபடியும் அந்தகால கட்டத்துக்கு செல்ல மாட்டோமா என்று ஏங்க வைக்கும்.

சினிமா விமர்சனங்கள் நான் எழுதியிருந்தாலும் இது சிந்தனை செய்யவைத்திருக்கிறது.

கவிதைகளில் நான் மூழ்கியது இதுவே முதல்முறை...

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் கேள்வி பதில் இடுகைகளில் இதுவும் ஒன்று.

தொடர்ந்து உங்கள் பூக்களைத் தூவுங்கள், அதை வலைச்சரமாக தொடுக்க ஆவலாக உள்ளேன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது