07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 26, 2008

இசை இன்பமும், இனிய நண்பரும்!

இப்போக் கொஞ்சம் இசை கேட்போமா? திரு திராச அவர்களுக்கு அறிமுகம் எதுவும் தேவை இல்லை. அவர் திரு சுப்புடு என்னும் இசை விமரிசகரின் சீடர் ஆவார். அதனால் சுப்புடுவை விடக் கூடத் திறமையாக இசை விமரிசனங்களும் செய்து வருகின்றார். அந்த அளவுக்கு இசை ஞானம் என்னிடம் இல்லை, எனினும் இசையை ரசிக்க முடியுமே? அந்த அளவில் அவரின் சமீபத்திய இசை விமரிசனம் பற்றிய ஒரு பதிவின் அறிமுகம் இதோ! ஏசியாநெட்டில், அறிமுக இசைப் பாடகர் ஆன திரு துஷார் என்பவரின் இசை வெள்ளத்தை அறிமுகம் செய்து வைக்கின்றார் பாருங்கள். இசை மொழி கடந்தது என்பதற்கு இதை விடவும் சான்று உண்டோ? இதோ இங்கே: திராச

இதைத் தவிரவும் பல ஆன்மீகப் பதிவுகளும் எழுதி வருகின்றார் திரு திராச அவர்கள். என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தது சங்கிலித் தொடர் அழைப்புக்கு இணங்க அவரின் இந்த எட்டுப் பதிவும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் இந்த விஷயமும் தான். அவரின் பெருந்தன்மை மட்டுமின்றி, பழையதை மறக்காமல் அதே பணிவோடும், அடக்கத்தோடும் இருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் தன்மையையும் சுட்டுகின்றது அல்லவா?

//சென்னையில் இருந்த இருக்கப்போகும் நாட்களில் மறக்கமுடியாத நாட்கள் இந்தத் தெருவில் இருந்தபோதுதான்.இல்லாமை என்ற குறைதவிர வேறு எந்தக்குறையும் இல்லாத நாட்கள்.தி நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்தது, பின்பு ஜைன் கல்லூரியில் பி.காம் படித்து முதல் வகுப்பில் தேறியது,பிறகு சி.ஏ படித்தது எல்லாமே 8 ஆம் நம்பர் வீட்டில் மூலையில் இருந்த சிறிய 20x8 அடி 160 அடி உள்ள கார் செட்டில்தான்.வீட்டில் மொத்தம் 5 உருப்படிகள்.எப்படித்தான் 200 ரூபாயில் அம்மா ஒரு மாதத்தை ஓட்டினாளோ,கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டேன். எனக்கு நாரதகானசபா கச்சேரிக்கு போய்வரவே 200 ரூபாய் ஆட்டோ சார்ஜ்.இப்போழுதும் என்காரை கீழே கார் ஷெட்டில் விடும்போது கண் சிறிது கலங்கும் இதுதானே ஒருகாலத்தில் நமக்கு வீடே என்று. அண்ணனும் அண்ணியும் வாழ்ந்தவீடும் இதுதான் பின்பு அம்மாவுடன் அவர்கள் மறைந்ததுவும் 8 ஆம் நம்பர் வீடுதான். ஆகவே மறக்கமுடியுமா இந்த 8 ஆம் நம்பர் வீட்டை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த 8 ஆம் நம்பரை காலி செய்துவிட்டு சென்ற நங்கநல்லூர் வீடும் 8 ஆம் நம்பர்தான்.// இதோ அந்தப் பதிவு!
திராச

அடுத்த இசை இன்பம் இதே இசை பற்றிய தமிழ் ப்ரியனின் ஒரு தொகுப்பு. எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர், திராச வின் பதிவில் இருந்து சென்றேன். என்றாலும் இசைக்கு மொழி தேவை இல்லை என்பதை நினைவூட்டும் அந்தப் பதிவு இதோ!
தமிழ் பிரியன்

எனக்கும் கர்நாடக இசையும் பிடிக்கும்,எனினும் அதன் நுட்பங்கள் அவ்வளவாய்த் தெரியாது. இசையை ரசிக்கத் தெரியும் அவ்வகையில் மகாராஜபுரம் சந்தானம் குரலில் "ஆடாது அசங்காது வா" பாடலும், அருணா சாயிராம் பாடும், "மாடு மேய்க்கும் கண்ணா" பாடலும், பங்கஜ் உதாசின், "சிட்டி ஆயி ஹை" பாடலும், ஆங்கிலத்தில் நெட் வொர்க் சார்ட்டில் இருந்த, "No New Years Day" பாடலும் ரொம்பவே பிடிக்கும், No New Years Day பாடலின் அர்த்தம் பொதிந்த வரிகளும், பாடல் பாடும் பாடகரின் குரலும் கண்ணில் நீரை வரவழைக்கும். இசைக்கு மொழி ஏது?


அடுத்து நம் இனிய நண்பரும், என்னை ஆதரிக்கும் வள்ளலும் ஆன திரு அதியமான் இவர் தம் சிறப்பு சொல்லவும் பெரிது! :P எனினும் சில, பல சிறப்புக்களைச் சொல்லுவோம். முதலில் இருந்தே என்னை ஆதரித்து வரும் நாமக்கல் சிபி, குமரன், கைப்புள்ள என அன்புடன் அழைக்கப் படும் இவர் மூவரில் இவர் தான் முதலில் என்னையும், எனக்கு நானே கொடுத்துக் கொண்ட பதவியையும் அங்கீகரித்து சங்கத்தின் சார்பில் ஒரு பதிவை முதன் முதலாய் வெளியிட்டார். அந்தப் பதிவின் சில வார்த்தைகள் இதோ!
வவாச

//இன்று _ _ ஆம் பிறந்த நாள் காணும் எங்கள் சங்கத்தின் பாதுகாப்பு அரண், தங்கத்தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள், அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ சங்கத்தின் சார்பாக மனதாற வாழ்த்துகிறோம்.

சரி இப்ப மேட்டரு... "_ _"க்கு மேலே சரியான நம்பரைப் பொருத்தும் முதல் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு, சங்கத்து சட்டியில் இப்போது கிண்டப் பட்டுக் கொண்டிருக்கும் டைமண்டு கல்கண்டு 100 கிராம் டிஜிட்டலாக வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் இரண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக, சங்கத்து சார்பில் நாளை எங்கள் தானைத் தலைவியுடன் டீ நாஸ்தா பண்ணும் அரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.

Posted by கைப்புள்ள at Monday, May 22, 2006 //

இவரின் இந்தப் பதிவிற்குப் பின்னரே எனக்குப் பெரும் அங்கீகாரம் கிடைத்தது என்றால் அதில் சற்றும் மிகை இல்லை. பல பதிவுகளையும் எழுதி இருக்கும் இவரின் தனித் திறமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வட மாநிலங்களிலும் வசித்திருப்பதால் வடமொழியும் அதில் படித்து, எழுதும் வல்லமையும் பெற்றவர் என்பதை அவர் எனக்கு "சாகேத் ராமாயண்" என்னும் ஹிந்தி கவிதைத் தொகுப்பின் லிங்க் கொடுத்த போது தெரிந்து கொண்டேன். இவரின் விஷய ஞானம் வியக்க வைக்கும். எங்கள் குடும்பம் அதிகம் இருந்த ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் இவரும் இருந்ததோடு அல்லாமல் அவற்றின் சிறப்புக்களையும் திறம்பட எடுத்து உரைக்கின்றார் பாருங்கள் இதோ, ராஜஸ்தானின், சிதோட்கட் பற்றிய பதிவிலும், அடுத்து குஜராத்தின் சாலைகள் பற்றிய பதிவொன்றிலும்.
நாத்துவாரா
சித்தோட்கட்

அம்பிக்கும், இவருக்கும் ஒரே மாத இடைவெளியில் திருமணம் நடைபெற்றதால் அம்பியை இவர் தனக்குக் குருவாகக் கொண்டிருக்கின்றார். எல்லாம் தங்கமணியைச் சமாளிப்பதில் தான். அம்பி, பூரிக்கட்டை அடி வாங்குவதைப் புரிந்து கொண்ட இவர், தான் அவ்வாறு அடி வாங்காமல் தப்பிப்பதற்கு ஆவன செய்து வருவதை இதோ இந்தப் பதிவில் பாருங்கள்,
இட்லி மாவு


மற்றும் அவர் வார்த்தைகளிலேயே கேளுங்கள், தங்கமணிகள் வாழ்க! கோஷம் எழுந்து வலை உலகை நிரப்பட்டும்.

//விகிபீடியால கண்ணுல பட்ட இன்னொரு விஷயம் இவரோட 'லிஸ்ட் ஆஃப் பொண்டாட்டிஸ்". இந்த மனுசன் வாங்குன அவார்டு லிஸ்டு மாதிரியே இந்த லிஸ்டும் ரொம்ப பெருசா இருக்கு. படிச்சிட்டு வாயை மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம். தலைவர் டுபுக்கு மாதிரி தங்கமணி வாயைக் கெளறி எதாச்சும் ப்ளாக்ல எழுதனும்னு அந்த பாழாப் போன நேரத்துல மண்டைக்குள்ள மணியடிச்சுது. விதி வலியதாச்சே? எங்க வூட்டு அம்மா கிட்ட "ஒன்னே ஒன்னை வச்சிக்கிட்டே அவனவன் திண்டாடறான், இந்தாளு எப்படி தான் சமாளிச்சானோ'ன்னு வாயை விட்டேன். ப்ளாக் எழுதறதுக்காக விழுப்புண் பெற்றவன் என்ற பெயரும் பெற்றேன் :(//

தங்கமணி

கட்ட பொம்மன், ஊமைத்துரை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படித்தும் நிறையவே எழுதி இருக்கின்றார், என்றாலும் இன்னும் பூலித் தேவன் பற்றியோ, அவன் இறந்தது பற்றியோ, அதனால் தான் எட்டப்பன் கட்டபொம்மனைப் பழி வாங்க நேர்ந்தது பற்றியோ இவர் இன்னும் படித்து எழுதவில்லை என்பது எனக்குக் கொஞ்சம் வருத்தமே! இவர் மாமனார் இந்த அம்பத்தூர் தான் என்றாலும் இவர் இங்கே வரும்போது முகமூடியுடனேயே வந்து செல்வதாய்க் கேள்விப் பட்டேன்.போகட்டும், கஷ்டம் என்னும்போது தொலைபேசியில் விசாரிக்கின்றார் அல்லவா? அதற்காக மன்னிக்கலாம். :P

அடுத்துச் சில முக்கியமான தளங்கள் பற்றிப் பார்ப்போமா?

1 comment:

தமிழ் மணத்தில் - தற்பொழுது