07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 10, 2009

கனிக் கூட்டம்


இன்றைய பாரதி மொழி

”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து துணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”


இன்றைய குறள்

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு



வலைச்சரம் அறிமுகமன்று இங்கு வெளியிட்ட “என்னச் செய்யப் போகிறோம்” நேற்று இளமை விகடனில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மேலும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்
...
http://youthful.vikatan.com/youth/tamilarasipoem07072009.asp
இனி கனிரசம் பருகலாம் வாருங்கள்



காதலை தன் வசமாக்கி அதற்கென்றே புது மொழி புனைந்தவர்.இவர் பதிவுகள் அத்தனையும் அக்மார்க் காதல் பதிவுகளே.குறிப்பிட்டு இது தான் சிறந்தது என சொல்லவே இயலாது.அத்தனையும் தேன் சிந்தும் காதல் கவிதைகள்.ஒட்டு மொத்த வெட்கத்தையும். முத்ததையும் தனது கவிதைக்காக உரிமை கொண்டவர்.இவர் காதல் மொழி பொழியவே நிலவு ஒளியை பொழிகிறது, நட்சத்திரம் வெட்கத்தை மொழிகிறது,தென்றல் முத்தம் இட்டு அணைக்கிறது.தன்னை பற்றி அதிகம் வெளிபடுத்தாத இவர் மிகவும் எளிமையும்,அமைதியுமானவர்.இதுதானோ என்னவோ இவர் அனைவரையும் கவர்ந்திருக்க ஒரு காரணம் அதே சமயம் நட்புக்கு மரியாதை தருவதில் இவருக்கு இவர் நிகர்.எந்த வம்பு வலையில் சிக்காத மீன் இவர்..என் பதிவில் இருக்கும் சொற்பிழைகளை குறிப்பிட்டு திருத்தும்
ஐந்து நக்கீரர்களில் இவரும் ஒருவர். இன்று ஓரளவு பிழை இல்லாமல் நான் எழுத இவரும் ஒரு காரணம்.. புதியவன் வானம் உன் வசப்படும் என்னும் வலைப்பூவை தனதாக்கி கொண்ட இவர் காதல் என் வசப்படும் என்றே இதற்கு பெயர் சூட்டி இருக்கலாம்.இவர் பதிவில் சில இங்கு
பெய்யெனப் பெய்யும் காதல் மழை…
காதல்..ஒரு அழகிய முரண்பாடு



மழையில் நனைதல்
நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று ஆனால் நனைய மாட்டோம்
ஆயிரம் காரணம் சொல்வோம்..ஆனால் ஒதுங்க இடம் தந்து நனைந்தால் நம்முள் யாருக்கும் கோவம் வராது. அப்படிப்பட்ட தலம் இது இது ஒரு நக்கீரனின் தலம்,ஆம் நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என கர்ஜிக்கும் இந்த இளஞ்சிங்கம் என் தம்பி இவர் .ஆனால் காசுக்கு கூட கருணை கிடையாது இங்க தப்பு அங்க தப்புன்னு சொல்லி என்னை திருத்திய ஆசான்களில் ஒருவர்... இவர் பதிவுகள் எல்லா வகையையும் சார்ந்தது ஆம் கதை காதல், கவிதை, கட்டுரை பின் நவீனத்துவம் என இவர் ஒதுங்காத இடமில்லை..கீர்த்தி சிறிது மூர்த்தி பெரிது இந்த மேதைக்கு...மழைக்கு ஒதுங்கியவை ஆனால் இங்கு நாம் ஒதுங்க மனம் வராது சொட்ட சொட்ட நனைந்தே திரும்புவோம் இங்கிருந்து,,இவர் பதிவுகள் மழையில் நனைந்த சுகம் தரும் சில ஜீரம் வரும் அத்தனை இனிமை.என் கவிதைகளுக்கு பயந்தவர்களில் இவரும் ஒருவர்..பாவம் என்று தோன்றும் நான் என்ன செய்ய எனக்கு தெரிந்தது கவிதை மட்டும் .அன்பை பெருவதிலும் தருவதிலும் இவருக்கு நிகர் இவரே..இனிக்க இனிக்க சிரிக்க சிரிக்க பேசுவார். இவர் தான் அ.மு.செய்யது மழைக்கு ஒதுங்கியவை... எனும் வலைப்பூவை கொண்டவர்.இவர்பதிவுகளில் ஆட்டோ ஜூன் 10 இன்னும் மனதில் இந்த பதிவு ஏதோ ஆறாத காயமாய்....

ஜூன்-10 சில‌ ஞாப‌க‌ குறிப்புக‌ள்

ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்













உறவை நேசிப்பவர்கள் உண்டு ஆனால் இவர் சற்று வித்தியாசமானவர் பிரிவை மட்டுமல்ல அன்பு கொண்ட அனைவரையும் நேசிப்பவள்.வலைப்பூவில் வாசம் செய்யும் அனைவரும் இவருக்கு சகோதர சகோதரிகளே. நான் மகள் என்று செல்லமாய் அழைக்கும் இவர் பதிவில் அனைத்து காதல் கவிதையும் அற்புதமாய் இருக்கும்.32 கேள்வி பதிலில் அனைவரையும் சிரிக்கவைத்தவர். நம்ம அபுவை மிஞ்சிய கும்மி திலகம்
வாயாடி அனைவருக்கும் அன்பு தங்கை என்னை அன்போடு அம்மா என்று அழைக்கும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். காதல் கவிதையில் மிகையாக திகழ்பவர்..ஆம் இவருடைய பல கவிதைகள் இளமைவிகடனில் வந்துள்ளது.ஆமாங்க இதெல்லாம் பிரிவையும் நேசிப்பவள் காயத்ரி பற்றி தாங்க.சிறந்த பல பதிவுகளில் ஒரு சில இங்கு

நானும் பெங்குவினும்

என்னை பற்றி உங்களுக்கு
இதழ் தொட்ட பட்டாம்பூச்சி





இன்னுமொரு நட்பின் இலக்கணம் இவர்..அமைதியா இருப்பது போல இருக்கும் இவர் ஒரு அமைதி புரட்சி...இவர் அடிக்கும் கும்மி சத்தம் தான் வராது வார்த்தைகளில் யுத்த மிரட்டல் இருக்கும்.. இவர் ஒரு மனித நேயமிக்கவர் என்பதற்கு இவரது பதிவின் கேப்ஷனும் ஒரு சாட்சி..வலி தாங்காதவரை
அறிந்திருப்போம் வறுமையை தாங்காதவர். வறியோர்க்கு இரங்கும் வானவில் இவர்...மனமெல்லாம் வண்ணம் கொண்ட எண்ணம் கொண்டவர்....அவர் அறிந்த
அனைத்து பதிவர்களயும் ஊக்குவிப்பதில் வல்லவர்....ஆம் எல்லாப் பதிவையும்
அவசியம் படித்து பின்னுட்டமிடுவார்....இவர் தியாகம் சொல்லி மாளாது
தாய் நாட்டை விட்டு அயல் நாடு போனாலும் இவர் தன் நண்பர்களாகிய
நமக்காக இவர் ஆற்றும் தொண்டு நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும்
அலுவலகம் வந்த உடன் நண்பர்கள் மனம் நோகாமல் அனைவரின் பதிவை
படித்து விட்டு பின்னுட்டமிட்டு நேரமிருந்தால் மட்டுமே அலுவலப் பணிபுரியும்
அற்புத மனிதம் இவர்..இத்தகைய தியாகத்தை நாமும் பயில்வோமாக....அபு அவர்களே உங்கள் அண்டை நாட்டு நண்பரிடம் இதை கற்றுக் கொள்ளுங்கள்
இவர் பதிவின் பெயரே நமக்குள் வாழும் ஒன்று.இவர் பதிவுக்குள் சென்றால் ஒரு தோட்டத்தில் உள்ள உணர்வு தோன்றும் வண்ணமலரும் வண்ணத்துப்பூச்சியும் இவர் வசமே இதுவே இவர் விலாசமே மன விலாசம்
S.A நவாஸுதீன்.இவர் பதிவுகளில் சில இங்கு
தைரியம்
எதிர்பார்ப்பு
அதிர்ஷ்டம்



இவர் மிகச் சிறந்த மனோதத்துவர் ஆம் எதையும் ரிஷிமூலம் நதிமூலம்
என்போம் அதையும் ஆராய்ந்து எழுதுவதில் இவருக்கு குரு இவரே...முதலில்
ஆச்சிரியமான விஷயம் இவர் எப்படி எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்குகிறார்
என்று தான் ஆம் நண்பர்களை சந்திப்பதில் அவர்கள் அழைக்கும் அழைப்பை
ஏற்றுச் செல்வதில் பதிவிடுவதில் அனைவருக்கும் பின்னுட்டமிடுவதில் மற்றும்
பல வித்தியாசமான் கோணங்களில் பல பதிவுகள் எழுதியிருக்கிறார்.இவருடைய
பல படைப்புகள் பத்திரிக்கை மற்றும் இளமை விகடனில் வெளிவந்துளளது.முக்கியமான விஷயம் என் லிஸ்டில் இருக்கும் ஐந்து நக்கீரர்களில் இவரும் ஒருவர். ஆம் தமிழாக இருந்தாலும் ஹஹாஹா தண்டனை
உண்டு...இவர் பதிவுகளை குறிப்பெடுத்து பலருக்கும் நாம் பரிமாறலாம் அத்தனை
அவசியமானது .ஆனாலும் எனக்கு இவர் மேல் கோவம் இவர் எல்லாம் இவர் இனத்திற்கு தேவையான எச்சரிக்கை பதிவுகளே தான் போடுகிறார் என்ற குற்றச்சாட்டு ஆம் பெண்களிடமிருந்து ஆண்களை காத்துக் கொள்ளும் அனைத்து
வழிகளயும் சொல்லி மனைவிகளிடமிருந்து கணவர்களை காப்பாற்றிய பெருமை இவரையே சாரும் இவர் ஒரு மருத்துவர் மனோதத்துவரும் கூட என்பது இவர்
பதிவை படித்தால் போதும் அறியலாம்..ஆம் இவர் தான் தமிழ்துளி தேவன்மயம்.இனி உங்கள் அடுத்த பதிவு எங்களுக்காக
இல்லையென்றால் என்னிடமிருந்து ஒரு கவிதை பார்சல் வரும்..... தமிழ்த்துளி
இவர் பதிவுகளில் சில இங்கு

ஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா?
மதுவால் என்ன ஏற்படுகிறது?
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!!
மங்கையற்கு தந்தை செய்ய வேண்டியவை 14!!



காதலுக்கு மரியாதை போல தான் நட்புக்கு மரியாதை தருவார் இவர்.
என் பிழைகளையும் குறிப்பிடும் நக்கீரர்களில் இவரும் ஒருவர்.சுமார் 200க்கும்
மேற்பட்ட ஃபாளோயர்ஸ் கொண்டுள்ள இவர் அத்தனை பேரின் பதிவுகளையும்
படித்து பின்னுட்டம் இடுவார் என்பது வியக்கத்தக்கது..இவருடைய நண்பர் வட்டம்
மிகவும் பெரிது... சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்..எந்த பதிவாக இருந்தாலும் நம்ம சுப்புடு மாதிரி தைரியமாக தன் கருத்தை முன் வைப்பார்..
குற்றமிருந்தால் சுட்டிக் காட்ட தயங்கமாட்டார் அது நட்பாக இருந்தாலும் சரி..
பழகுவதற்கு இனிமையானவர் அவர் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம்
இருக்காது...என்ன தான் நட்பாக இருந்தாலும் அவர்களுடைய சொந்த விஷயங்களுக்கு செவி சாய்க்க மாட்டார்..இவர் என்ன பின்னுட்டம் விடுவார் என்ற
ஆர்வமும் ஹிஹிஹி அச்சமும் இருக்கும்...ஆம் வால் மட்டும் தான் இல்லை இந்த பையனுக்கு ....32 கேள்வி என்ற மிக சமுக நலம் வாய்ந்த பதிவு நடமாட
தொடங்கிய நேரத்தில் ரம்யாவிடம் இவர் கேட்டு அனுப்பிய கேள்விகள் மிகவும் பயனுள்ளதாகும். ரம்யா வால்பையன் இவர்கள் மேல் ஈர்ப்பு கூட இந்த பதிவு ஒரு காரணமாகும். அதில் வரும் பதில்கள் பெண்களுக்கு மிகவும் பயன்படும்... வால்பையன் இவர் பதிவுகளில் சில இங்கு.....


நீதிமான் Vs பயில்வான்
ஆனந்தவிகடனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!
என்கேள்விக்கென்ன பதில்?(மாட்டியவர் ரம்யா)












இந்த புனைப் பெயரே இவர் தமிழ் பற்றை குறிப்பிடும்..எளிமையானவர் ஆனால் இவர் எழுத்துகள் வலிமையானவை.பாரதி பிறந்த மண்ணில் பிறந்தவர் இவர்.இவரும் கதை,கட்டுரை,கவிதை,அரசியல் என அனத்திலும் வலம் வந்தவர்.இவர் உளறுவது எல்லாம் உண்மைகளே!!பொறுப்பான அவசியமுள்ள அதிக பட்ச கிராமப் பிண்ணனி அதன் இயல்பு,வறுமையின் வலி, நகரத்தின் பார்வை அரசியல் போர்வை இவைகளை சார்ந்திருக்கும் இவர் பதிவுகள் அனைத்தும் அருமை..இந்த அறிமுகத்தில் இவர் பதிவை எட்டி பார்க்க போகும் நீங்கள் கனத்த மற்றும் நிறைந்த மனதோடு தான் வெளிவருவீர்கள் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.கிரமத்து சூழலும் அதன் எதார்த்தம்,அழகு,வலி,வறுமை நம்மை சிறிது வருத்தினாலும் அவர்களோடு வாழ்ந்து விட்டு வந்த ஒரு உணர்வு நம்முள் தோன்றும்.மிகச் சிறந்த தமிழ் பற்றாளாரான இவர் தன் மகளுக்கு சூட்டி இருக்கும் பெயர் நம் சங்ககால் இலக்கியத்தை நினைவு கூறும்.ஆம் இவர் மகளின் பெயர் அகமதிவெண்பா.இவர் தான் உழவன்.இங்கு அளித்துள்ள பதிவுகளில் காளியாத்தா,டீ-காபி,மஞ்சள் சட்டை விகடனில் வெளிவந்துள்ளது உழவனின் உளறல்கள்
இவர் பதிவுகளில் சில இங்கு

அன்னையே மன்னித்து விடு!
காளியாத்தா...
டீ ... காபி ...
மஞ்சள் சட்டை - நன்றி விகடன்

இன்று இத்தோடு முடித்துக் கொள்கிறேன்...அதிக அளவு நல்ல எழுத்தாளர்களை அறிமுகப் படுத்த எண்ணியதால் நான் தனித்து எந்த பதிவும் போடவில்லை,ஆம் நண்பர்களும் தங்களுடைய பணிச்சுமையையும் கடந்து வந்து இங்கு எனக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது..ஆதலால் வழக்கப்படி எழுத்தோசையில் ஹ்ஹஹஹா உங்களை விடற எண்ணமேயில்லை என் பதிவுகளை தொடர்கிறேன்.. நன்றி நேசம் கொண்ட நட்பூக்களே.....

145 comments:

  1. வலைச்சர ஆசிரியருக்கு ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. கனிக் கூட்டங்களை நிதானித்து ருசிக்க அவகாசம் தேவை தோழி :))

    ReplyDelete
  3. நல்ல பழங்கள் போட்டு அறிமுகம்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. //இன்றைய குறள்

    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு”//

    அதென்ன இன்ரைய குறள், நாளைக்கு சொன்னா காதை பொத்திகனுமா?

    ReplyDelete
  5. //காதலுக்கு மரியாதை போல தான் நட்புக்கு மரியாதை தருவார் இவர்.//


    காதலுக்கும் மரியாதை தருவேங்க!

    ReplyDelete
  6. //..இவர் என்ன பின்னுட்டம் விடுவார் என்ற
    ஆர்வமும் ஹிஹிஹி அச்சமும் இருக்கும்.//

    அந்த பயம் இருக்கட்டும்!

    ReplyDelete
  7. வால்பையன் said...
    //இன்றைய குறள்

    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு”//

    அதென்ன இன்ரைய குறள், நாளைக்கு சொன்னா காதை பொத்திகனுமா?

    வால்பையன் said...
    //இன்றைய குறள்

    “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு”//

    அதென்ன இன்ரைய குறள், நாளைக்கு சொன்னா காதை பொத்திகனுமா?

    அன்னைக்கு அவன் சொன்னதே இன்னைக்கு வரை.....இதில் எல்லாம் சமத்துவம் பேச மாட்டீங்களே.....

    ReplyDelete
  8. //வலைச்சரம் அறிமுகமன்று இங்கு வெளியிட்ட “என்னச் செய்யப் போகிறோம்” நேற்று இளமை விகடனில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மேலும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்
    ...
    http://youthful.vikatan.com/youth/tamilarasipoem07072009.asp
    இனி கனிரசம் பருகலாம் வாருங்கள்//

    வாழ்த்துக்கள்

    உங்க வலைப்பூல எழுதுறதுதான் மொத்தமா யூத்ஃபுல்விகடன் குத்தகை எடுத்துட்டாங்கன்னு பாத்தா வலைச்சரத்திலுமா?

    ReplyDelete
  9. அறிமுக கனிகள் சுவையாய்......

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தமிழக்கா

    ReplyDelete
  11. இன்றைய வலைச்சர தோட்டத்தின் ஞானப்பழங்கள் புதியவன், செய்யது, காயத்ரி, நவாஸுதீன், தேவன்மயம், வால்பையன் மற்றும் உழவனுக்கு இன்னும் பழமாகாத இந்தக்காய் மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது.

    ReplyDelete
  12. உங்க வலைப்பூல எழுதுறதுதான் மொத்தமா யூத்ஃபுல்விகடன் குத்தகை எடுத்துட்டாங்கன்னு பாத்தா வலைச்சரத்திலுமா?\\


    அதானே!


    வாழ்த்துகள் ...

    ReplyDelete
  13. இங்கு நவாஸ் பற்றி சிறிது நான் கூறியே ஆகவேண்டும், நாங்கள் ஒரே ஊர்க்காரர்களாக இருந்தாலும், அவ்ரை பாலர் பள்ளி நாடகளில் சந்தித்தது, வலைப்பூந்தோட்டத்தின் மூலம் 25 வருடம் கழித்து சமீபத்தில் தான் சந்தித்தோம்.

    என்னை வலைபபதிவு இடும்படி ஊக்கப்படுத்தியவர் (அவரை திட்டாதீங்க...) பழகுவதர்க்கு நல்ல அன்பான மனிதர். நான் பதிவிட்டு வெனறேனோ இல்லையோ ஆனால் அவர் நட்பு கிட்டியதில் நான் வெற்றி பெற்றேன்.

    ReplyDelete
  14. //என்னை வலைபபதிவு இடும்படி ஊக்கப்படுத்தியவர் (அவரை திட்டாதீங்க...)//

    திட்டுறதெல்லாம் சின்ன புள்ளைங்க விளையாட்டு நாங்க ஒன்லி ஆட்டோ தான்!

    ReplyDelete
  15. //என் கவிதைகளுக்கு பயந்தவர்களில் இவரும் ஒருவர்..பாவம் என்று தோன்றும் நான் என்ன செய்ய எனக்கு தெரிந்தது கவிதை மட்டும் .//

    பயந்தவர்களில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  16. வால்ஸ்..என்னது ஆட்டோவா? யோவ் நாங்க உருக்கு புதுசுயா, எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்கய்யா

    ReplyDelete
  17. //அமைதியா இருப்பது போல இருக்கும் இவர் ஒரு அமைதி புரட்சி..//

    உங்களை விடவா?

    ReplyDelete
  18. கனிக்கூட்டத்துக்கு நன்றி. சுவைத்து விட்ட கனிகள் அருமை. சுவைக்காதவையும் அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  19. //இவர் பதிவுகள் மழையில் நனைந்த சுகம் தரும் //

    அதான் என் மானிட்டரிலிருந்து சாரலா அடிச்சுதா?

    ReplyDelete
  20. //ஷ‌ஃபிக்ஸ் said...

    வால்ஸ்..என்னது ஆட்டோவா? யோவ் நாங்க உருக்கு புதுசுயா, எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்கய்யா//

    சரி.. இப்போவே சொல்லிடுறேன்.

    ஒரு லாரிக்கு தாங்குவீங்களா? இல்ல ரெண்டு லாரி ஆளு கூட்டிட்டு வரட்டுமா?

    ReplyDelete
  21. //வால்பையன் said...

    //என்னை வலைபபதிவு இடும்படி ஊக்கப்படுத்தியவர் (அவரை திட்டாதீங்க...)//

    திட்டுறதெல்லாம் சின்ன புள்ளைங்க விளையாட்டு நாங்க ஒன்லி ஆட்டோ தான்!//


    சைக்கிளுக்கே தாங்குவாரான்னு தெரியலை. பார்போம்.

    கிகிகி..

    ReplyDelete
  22. //அத்தனையும் தேன் சொறியும் காதல் கவிதைகள்//

    அது சொரியும்னு வரணும்.. சொறியும் அல்ல..

    ReplyDelete
  23. கனி க்கூட்டம் எவ்வளவு சுவைத்தாலும் திகட்டாது
    இன்று திகட்டாமல் அறிமுகப்படுத்திய தமிழரசிக்கு 1000 வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. இன்று அறிமுகமான அனைவரும் எனது அன்பர்கள் புதியவன், செய்யது, காயத்ரி, நவாஸுதீன், தேவன்மயம், வால்பையன் மற்றும் உழவனுக்கு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    அனைத்து நண்பர்களும் என்னுடைய அபிமானிகள்

    ReplyDelete
  25. ஷ‌ஃபிக்ஸ் said...வலைப்பூந்தோட்டத்தின் மூலம் 25 வருடம் கழித்து சமீபத்தில் தான் சந்தித்தோம். //


    வ‌லையிலே மாட்டிக்கிட்டீங்க‌...

    ReplyDelete
  26. //அபு அவர்களே உங்கள் அண்டை நாட்டு நண்பரிடம் இதை கற்றுக் கொள்ளுங்கள்//

    நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை

    ReplyDelete
  27. //அனைவரின் பதிவை
    படித்து விட்டு பின்னுட்டமிட்டு நேரமிருந்தால் மட்டுமே அலுவலப் பணிபுரியும்
    அற்புத மனிதம் இவர்..//

    ஹா ஹா உங்களுக்கும் தெரிஞ்சிப்போச்சா ஆஆஅவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. hai வந்துட்டோம்ல.....யார் யார்ப்பா இருப்பது வீட்டில....

    ReplyDelete
  29. பிரியமுடன்.........வசந்த் said...
    //வலைச்சரம் அறிமுகமன்று இங்கு வெளியிட்ட “என்னச் செய்யப் போகிறோம்” நேற்று இளமை விகடனில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மேலும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்
    ...
    http://youthful.vikatan.com/youth/tamilarasipoem07072009.asp
    இனி கனிரசம் பருகலாம் வாருங்கள்//

    வாழ்த்துக்கள்

    உங்க வலைப்பூல எழுதுறதுதான் மொத்தமா யூத்ஃபுல்விகடன் குத்தகை எடுத்துட்டாங்கன்னு பாத்தா வலைச்சரத்திலுமா?

    அதுக்காக தான் பதிவுகள் இல்லை....
    வெறும் பதிவர்கள் மட்டுமே

    ReplyDelete
  30. ஷ‌ஃபிக்ஸ் said...
    ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தமிழக்கா

    அக்காவா இப்பத் தான் நவாஸ்க்கு நண்பன்னு சொல்லிட்டு அடி வாங்குவீங்க நானும் தெரியாத தனமா தம்பி போட்டேன் எல்லாம் வாபஸ்...

    ReplyDelete
  31. அபுஅஃப்ஸர் said...
    //அனைவரின் பதிவை
    படித்து விட்டு பின்னுட்டமிட்டு நேரமிருந்தால் மட்டுமே அலுவலப் பணிபுரியும்
    அற்புத மனிதம் இவர்..//

    ஹா ஹா உங்களுக்கும் தெரிஞ்சிப்போச்சா ஆஆஅவ்வ்வ்வ்வ்

    தெரிந்தால் போதாது பா அபு கத்துக்கோங்க.....

    ReplyDelete
  32. ஷ‌ஃபிக்ஸ் said...
    இங்கு நவாஸ் பற்றி சிறிது நான் கூறியே ஆகவேண்டும், நாங்கள் ஒரே ஊர்க்காரர்களாக இருந்தாலும், அவ்ரை பாலர் பள்ளி நாடகளில் சந்தித்தது, வலைப்பூந்தோட்டத்தின் மூலம் 25 வருடம் கழித்து சமீபத்தில் தான் சந்தித்தோம்.

    என்னை வலைபபதிவு இடும்படி ஊக்கப்படுத்தியவர் (அவரை திட்டாதீங்க...) பழகுவதர்க்கு நல்ல அன்பான மனிதர். நான் பதிவிட்டு வெனறேனோ இல்லையோ ஆனால் அவர் நட்பு கிட்டியதில் நான் வெற்றி பெற்றேன்.

    உங்களை ஊக்கப்படுத்தினால் நீங்க பாராட்டுங்க...ஒரு வேலை சொன்னால் செய்யலை அவரைப் போய் திட்ட வேணாம் என்று சொல்கிறீர்கள் நான் திட்டுவேன் என்னால முடியலைன்னா ஜமால் அபு எல்லாம் சேர்ந்து திட்டுவோம்....

    ReplyDelete
  33. வால்பையன் said...
    //என்னை வலைபபதிவு இடும்படி ஊக்கப்படுத்தியவர் (அவரை திட்டாதீங்க...)//

    திட்டுறதெல்லாம் சின்ன புள்ளைங்க விளையாட்டு நாங்க ஒன்லி ஆட்டோ தான்!

    அப்படி போடுங்க....

    ReplyDelete
  34. ரங்கன் said...
    //என் கவிதைகளுக்கு பயந்தவர்களில் இவரும் ஒருவர்..பாவம் என்று தோன்றும் நான் என்ன செய்ய எனக்கு தெரிந்தது கவிதை மட்டும் .//

    பயந்தவர்களில் நானும் ஒருவன்.

    அடப்பாவி அப்பாவியா இருந்த நீயுமா?

    ReplyDelete
  35. ஷ‌ஃபிக்ஸ் said...
    வால்ஸ்..என்னது ஆட்டோவா? யோவ் நாங்க உருக்கு புதுசுயா, எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்கய்யா

    அது அப்படி வாங்க வழிக்கு ஆமா 25 வருஷமா நண்பனை மிஸ் பண்ணிட்டு இப்ப சப்போர்ட்டா...

    ReplyDelete
  36. ஜெஸ்வந்தி said...
    கனிக்கூட்டத்துக்கு நன்றி. சுவைத்து விட்ட கனிகள் அருமை. சுவைக்காதவையும் அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

    ஆம் இங்கு எல்லாக் கனிகளும் சுவைக்கும் எண்ணக் கனிகள் எல்லாம் வண்ணக் கனிகள்...

    ReplyDelete
  37. அபுஅஃப்ஸர் said...
    கனி க்கூட்டம் எவ்வளவு சுவைத்தாலும் திகட்டாது
    இன்று திகட்டாமல் அறிமுகப்படுத்திய தமிழரசிக்கு 1000 வாழ்த்துக்கள்


    உங்கள் அன்புக்கு நன்றி அபு...

    ReplyDelete
  38. //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    ReplyDelete
  39. chellathuku ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  40. //gayathri said...
    chellathuku ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!!
    //

    செல்லமா ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  41. அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா

    ReplyDelete
  42. அபுஅஃப்ஸர் said...
    //gayathri said...
    chellathuku ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!!
    //

    செல்லமா ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    என்னப்பா டைஜஷன் ப்ராப்ளமா?

    ReplyDelete
  43. அபுஅஃப்ஸர் said...
    //gayathri said...
    chellathuku ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!!
    //

    செல்லமா ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


    eaan ivalavu periya feeellllllllliiinnngggg

    ReplyDelete
  44. //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    ReplyDelete
  45. ஜெஸ்வந்தி said...
    கனிக்கூட்டத்துக்கு நன்றி. சுவைத்து விட்ட கனிகள் அருமை. சுவைக்காதவையும் அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.


    ada summa suvachi than parungalen

    ReplyDelete
  46. //தமிழரசி said...

    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா//


    ஆமா..அப்புறம் தமிழக்காவுக்கும் கொஞ்சம் குடுத்துடுங்க..பாவம் பொண்ணு.

    ReplyDelete
  47. //gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    //gayathri said...
    chellathuku ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!!
    //

    செல்லமா ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


    eaan ivalavu periya feeellllllllliiinnngggg
    //

    செல்லம்னு சொன்னீங்களே அதான்

    ReplyDelete
  48. அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    July 10, 2009 4:43:00 PM IST


    enna ithu chinnapulla thanama

    ReplyDelete
  49. அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    மதியம் சரியா சாப்பிடலைன்னு நினைக்கிறேன்...பசிபோல..

    ReplyDelete
  50. //ரங்கன் said...
    //தமிழரசி said...

    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா//


    ஆமா..அப்புறம் தமிழக்காவுக்கும் கொஞ்சம் குடுத்துடுங்க..பாவம் பொண்ணு.
    //

    ஆமாம் இல்லேனா தனி பதிவு போட்டுடுவாங்கோ... கனி தராமல் தனியே தின்ன..... அப்படினு ஹா ஹா

    ReplyDelete
  51. gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    July 10, 2009 4:43:00 PM IST


    enna ithu chinnapulla thanama

    ஹேய் உங்க அண்ணாத்தான விடு சாப்பிடட்டும்...

    ReplyDelete
  52. அபுஅஃப்ஸர் said...
    இன்று அறிமுகமான அனைவரும் எனது அன்பர்கள் புதியவன், செய்யது, காயத்ரி, நவாஸுதீன், தேவன்மயம், வால்பையன் மற்றும் உழவனுக்கு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    அனைத்து நண்பர்களும் என்னுடைய அபிமானிகள்


    naanum naanum

    ReplyDelete
  53. அபுஅஃப்ஸர் said...
    //ரங்கன் said...
    //தமிழரசி said...

    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா//


    ஆமா..அப்புறம் தமிழக்காவுக்கும் கொஞ்சம் குடுத்துடுங்க..பாவம் பொண்ணு.
    //

    ஆமாம் இல்லேனா தனி பதிவு போட்டுடுவாங்கோ... கனி தராமல் தனியே தின்ன..... அப்படினு ஹா ஹா

    ரொம்ப உஷார் ஆயிட்டார் போல அபு...

    ReplyDelete
  54. gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    இன்று அறிமுகமான அனைவரும் எனது அன்பர்கள் புதியவன், செய்யது, காயத்ரி, நவாஸுதீன், தேவன்மயம், வால்பையன் மற்றும் உழவனுக்கு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    அனைத்து நண்பர்களும் என்னுடைய அபிமானிகள்


    naanum naanum

    அப்ப நான்...?

    ReplyDelete
  55. //ஆமாம் இல்லேனா தனி பதிவு போட்டுடுவாங்கோ... கனி தராமல் தனியே தின்ன..... அப்படினு ஹா ஹா//

    அபு..
    தனி பதிவு போட்டா கூட பரவாயில்லே..
    அதில் கவித போடுவாங்க பாரு..

    ஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்!!!

    அலறிட்டு ஓடிடுவேன்.

    ReplyDelete
  56. அபுஅஃப்ஸர் said...
    //ரங்கன் said...
    //தமிழரசி said...

    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா//


    ஆமா..அப்புறம் தமிழக்காவுக்கும் கொஞ்சம் குடுத்துடுங்க..பாவம் பொண்ணு.
    //

    ஆமாம் இல்லேனா தனி பதிவு போட்டுடுவாங்கோ... கனி தராமல் தனியே தின்ன..... அப்படினு ஹா ஹா


    antha payam irukattum

    ReplyDelete
  57. //gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    July 10, 2009 4:43:00 PM IST


    enna ithu chinnapulla thanama
    //

    நான் சின்னபுள்ளதான் பாருங்க என் ஃபோட்டோவை

    ReplyDelete
  58. ரங்கன் said...
    //தமிழரசி said...

    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா//


    ஆமா..அப்புறம் தமிழக்காவுக்கும் கொஞ்சம் குடுத்துடுங்க..பாவம் பொண்ணு.

    அண்ணாத்தே பாவமா இரு நாளைக்கு உன் கதையிருக்கு இங்க...

    ReplyDelete
  59. //ரங்கன் said...
    //ஆமாம் இல்லேனா தனி பதிவு போட்டுடுவாங்கோ... கனி தராமல் தனியே தின்ன..... அப்படினு ஹா ஹா//

    அபு..
    தனி பதிவு போட்டா கூட பரவாயில்லே..
    அதில் கவித போடுவாங்க பாரு..

    ஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்!!!

    அலறிட்டு ஓடிடுவேன்.
    //

    ரங்கன் நல்லா அனுபவிச்சிருக்கிய போல‌

    ReplyDelete
  60. //
    நான் சின்னபுள்ளதான் பாருங்க என் ஃபோட்டோவை//

    நம்பிட்டோம்...

    ReplyDelete
  61. அபுஅஃப்ஸர் said...
    //gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    July 10, 2009 4:43:00 PM IST


    enna ithu chinnapulla thanama
    //

    நான் சின்னபுள்ளதான் பாருங்க என் ஃபோட்டோவை

    ஹேய் சீட்டிங்....

    ReplyDelete
  62. அபுஅஃப்ஸர் said...
    //gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    July 10, 2009 4:43:00 PM IST


    enna ithu chinnapulla thanama
    //

    நான் சின்னபுள்ளதான் பாருங்க என் ஃபோட்டோவை


    photova pathu en kannuku etho aidichi anna

    ReplyDelete
  63. //தமிழரசி said...
    gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    இன்று அறிமுகமான அனைவரும் எனது அன்பர்கள் புதியவன், செய்யது, காயத்ரி, நவாஸுதீன், தேவன்மயம், வால்பையன் மற்றும் உழவனுக்கு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    அனைத்து நண்பர்களும் என்னுடைய அபிமானிகள்


    naanum naanum

    அப்ப நான்...?
    //

    கிளம்பிட்டாங்க்ய்யா கிளம்பிட்டாங்ய‌

    ReplyDelete
  64. அபுஅஃப்ஸர் said...
    //ரங்கன் said...
    //ஆமாம் இல்லேனா தனி பதிவு போட்டுடுவாங்கோ... கனி தராமல் தனியே தின்ன..... அப்படினு ஹா ஹா//

    அபு..
    தனி பதிவு போட்டா கூட பரவாயில்லே..
    அதில் கவித போடுவாங்க பாரு..

    ஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்!!!

    அலறிட்டு ஓடிடுவேன்.
    //

    ரங்கன் நல்லா அனுபவிச்சிருக்கிய போல‌

    விடுங்க அபு அவருக்கு இன்னும் பிறந்த நாள் வரலை அப்ப பார்த்துக்கலாம்

    ReplyDelete
  65. //
    அண்ணாத்தே பாவமா இரு நாளைக்கு உன் கதையிருக்கு இங்க...//

    யக்கோவ்..வேணாங்கோவ்.. விட்டுடுக்கோவ்..

    அய்யயோ.. காப்பாத்துங்க..

    அபு பாத்துட்டே போறியே காப்பாத்து பா.

    ReplyDelete
  66. //enna ithu chinnapulla thanama
    //

    நான் சின்னபுள்ளதான் பாருங்க என் ஃபோட்டோவை


    photova pathu en kannuku etho aidichi அன்ன//

    என்னாப்ப ஆச்சி.....

    ReplyDelete
  67. gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    //gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    July 10, 2009 4:43:00 PM IST


    enna ithu chinnapulla thanama
    //

    நான் சின்னபுள்ளதான் பாருங்க என் ஃபோட்டோவை


    photova pathu en kannuku etho aidichi anna

    காயு வதந்திகளை நம்பாதே...

    ReplyDelete
  68. //

    விடுங்க அபு அவருக்கு இன்னும் பிறந்த நாள் வரலை அப்ப பார்த்துக்கலாம்//

    நாங்க பொறக்கவே இல்லியே டைரக்டா வந்தவங்க..
    இப்போ என்னா செய்வீங்க.. இப்போ என்னா செய்வீங்க..!!

    ReplyDelete
  69. ரங்கன் said...
    //
    அண்ணாத்தே பாவமா இரு நாளைக்கு உன் கதையிருக்கு இங்க...//

    யக்கோவ்..வேணாங்கோவ்.. விட்டுடுக்கோவ்..

    அய்யயோ.. காப்பாத்துங்க..

    அபு பாத்துட்டே போறியே காப்பாத்து பா.

    நான் ஒரு முறை கமிட் ஆயிட்ட என் பேச்சை நானே கேக்க மாட்டேன் தண்டனை உண்டு...

    ReplyDelete
  70. ”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து துணிந்தது காடு தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ?
    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

    aha aha aha

    ஆரம்பமே அசத்தல்

    ReplyDelete
  71. ரங்கன் said...
    //

    விடுங்க அபு அவருக்கு இன்னும் பிறந்த நாள் வரலை அப்ப பார்த்துக்கலாம்//

    நாங்க பொறக்கவே இல்லியே டைரக்டா வந்தவங்க..
    இப்போ என்னா செய்வீங்க.. இப்போ என்னா செய்வீங்க..!!

    ஹஹஹ விதி வலியது....

    ReplyDelete
  72. அத்தனையும் தேன் சிந்தும் காதல் கவிதைகள்.ஒட்டு மொத்த வெட்கத்தையும். முத்ததையும் தனது கவிதைக்காக உரிமை கொண்டவர்.இவர் காதல் மொழி பொழியவே நிலவு ஒளியை பொழிகிறது, நட்சத்திரம் வெட்கத்தை மொழிகிறது,தென்றல் முத்தம் இட்டு அணைக்கிறது.தன்னை பற்றி அதிகம் வெளிபடுத்தாத இவர் மிகவும் எளிமையும்,அமைதியுமானவர்


    ஆமா பாவம் எனக்கு இப்படியும் ஒரு அண்ணா என்ன செய்ய

    ReplyDelete
  73. தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //gayathri said...
    அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //கனிக் கூட்டம்"//

    "கனி" ஆவ் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது இது

    எல்லாத்தையும் நீங்களே தின்னாதீங்கப்பா
    //

    எனக்கு மட்டும்தான் அது

    July 10, 2009 4:43:00 PM IST


    enna ithu chinnapulla thanama
    //

    நான் சின்னபுள்ளதான் பாருங்க என் ஃபோட்டோவை

    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்

    ReplyDelete
  74. sakthi said...
    ”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து துணிந்தது காடு தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ?
    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

    aha aha aha

    ஆரம்பமே அசத்தல்

    அட நம்ம சக்தி...வாடா வா... நம்ம கவிதையை நோக்கி இங்க போர் கொடி தூக்கறாங்க பார்டா...

    ReplyDelete
  75. தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //ரங்கன் said...
    //ஆமாம் இல்லேனா தனி பதிவு போட்டுடுவாங்கோ... கனி தராமல் தனியே தின்ன..... அப்படினு ஹா ஹா//

    அபு..
    தனி பதிவு போட்டா கூட பரவாயில்லே..
    அதில் கவித போடுவாங்க பாரு..

    ஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்!!!

    அலறிட்டு ஓடிடுவேன்.
    //

    ரங்கன் நல்லா அனுபவிச்சிருக்கிய போல‌

    விடுங்க அபு அவருக்கு இன்னும் பிறந்த நாள் வரலை அப்ப பார்த்துக்கலாம்


    avaraoda birthadayku eaan chellam unaku intha kola veri

    ReplyDelete
  76. இவர் பதிவுகள் எல்லா வகையையும் சார்ந்தது ஆம் கதை காதல், கவிதை, கட்டுரை பின் நவீனத்துவம் என இவர் ஒதுங்காத இடமில்லை..கீர்த்தி சிறிது மூர்த்தி பெரிது இந்த மேதைக்கு...மழைக்கு ஒதுங்கியவை ஆனால் இங்கு நாம் ஒதுங்க மனம் வராது சொட்ட சொட்ட நனைந்தே திரும்புவோம்

    ஆமாங்க எங்கள் அருமை தம்பி செய்ய்து

    சும்மா எந்த தலைப்பிலும் தூள் பரத்தும் சிங்கம்...

    ReplyDelete
  77. //அத்தனையும் தேன் சிந்தும் காதல் கவிதைகள்.ஒட்டு மொத்த வெட்கத்தையும். முத்ததையும் தனது கவிதைக்காக உரிமை கொண்டவர்.இவர் காதல் மொழி பொழியவே நிலவு ஒளியை பொழிகிறது, நட்சத்திரம் வெட்கத்தை மொழிகிறது,தென்றல் முத்தம் இட்டு அணைக்கிறது.தன்னை பற்றி அதிகம் வெளிபடுத்தாத இவர் மிகவும் எளிமையும்,அமைதியுமானவர்//

    முடியல
    முடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியலமுடியல

    ReplyDelete
  78. sakthi said...
    அத்தனையும் தேன் சிந்தும் காதல் கவிதைகள்.ஒட்டு மொத்த வெட்கத்தையும். முத்ததையும் தனது கவிதைக்காக உரிமை கொண்டவர்.இவர் காதல் மொழி பொழியவே நிலவு ஒளியை பொழிகிறது, நட்சத்திரம் வெட்கத்தை மொழிகிறது,தென்றல் முத்தம் இட்டு அணைக்கிறது.தன்னை பற்றி அதிகம் வெளிபடுத்தாத இவர் மிகவும் எளிமையும்,அமைதியுமானவர்


    ஆமா பாவம் எனக்கு இப்படியும் ஒரு அண்ணா என்ன செய்ய

    கவிதையை படித்தால் பாவம் தோன்றாது இல்லையா...

    ReplyDelete
  79. //sakthi said...
    ”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து துணிந்தது காடு தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ?
    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

    aha aha aha

    ஆரம்பமே அசத்தல்
    //

    ஆரம்பத்துலேயே ரொம்ப அசந்துடாதீங்க இன்னும் நிறைய தாங்கவேன்டி இருக்கு இன்னும் ரெண்டு நாள்ளே

    ReplyDelete
  80. sakthi said...
    ”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து துணிந்தது காடு தழல்
    வீரத்தில் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ?
    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

    aha aha aha

    ஆரம்பமே அசத்தல்


    vada vada va vava

    ReplyDelete
  81. 32 கேள்வி பதிலில் அனைவரையும் சிரிக்கவைத்தவர். நம்ம அபுவை மிஞ்சிய கும்மி திலகம்
    வாயாடி அனைவருக்கும் அன்பு தங்கை என்னை அன்போடு அம்மா என்று அழைக்கும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    எனக்கும் .....
    என் அருமை சகோதரி கவிதை அத்தனையும் அழகு....

    ReplyDelete
  82. sakthi said...
    இவர் பதிவுகள் எல்லா வகையையும் சார்ந்தது ஆம் கதை காதல், கவிதை, கட்டுரை பின் நவீனத்துவம் என இவர் ஒதுங்காத இடமில்லை..கீர்த்தி சிறிது மூர்த்தி பெரிது இந்த மேதைக்கு...மழைக்கு ஒதுங்கியவை ஆனால் இங்கு நாம் ஒதுங்க மனம் வராது சொட்ட சொட்ட நனைந்தே திரும்புவோம்

    ஆமாங்க எங்கள் அருமை தம்பி செய்ய்து

    சும்மா எந்த தலைப்பிலும் தூள் பரத்தும் சிங்கம்...

    ஆமா அக்கா அக்கான்னு சொல்லியே கவுத்துடும் ....திட்டறதுக்கு தான் தம்பி இது,,,,

    ReplyDelete
  83. //அய்யயோ.. காப்பாத்துங்க..

    அபு பாத்துட்டே போறியே காப்பாத்து பா.

    நான் ஒரு முறை கமிட் ஆயிட்ட என் பேச்சை நானே கேக்க மாட்டேன் தண்டனை உண்டு.../

    விஜய் க்கு பிறந்த்நாள் கவிதை எழுதும்போதே நினைத்தேன் கொள்கைப்பரப்பு செயளலர் பதவி நிச்சயம் உண்டு

    ReplyDelete
  84. ஆரம்பத்துலேயே ரொம்ப அசந்துடாதீங்க இன்னும் நிறைய தாங்கவேன்டி இருக்கு இன்னும் ரெண்டு நாள்ளே


    என்ன கொடுமை சாரே.. ஈ.. ரெண்டு நாளே எந்தா மனசு எப்படி தாங்கும்..

    என்ட குருவாயூரப்பா..!!

    ReplyDelete
  85. இவர் பதிவின் பெயரே நமக்குள் வாழும் ஒன்று.இவர் பதிவுக்குள் சென்றால் ஒரு தோட்டத்தில் உள்ள உணர்வு தோன்றும் வண்ணமலரும் வண்ணத்துப்பூச்சியும் இவர் வசமே இதுவே இவர் விலாசமே மன விலாசம்

    அருமை அழகான விளக்கம்
    எங்கள் அண்ணாவிற்கு

    ReplyDelete
  86. sakthi said...
    32 கேள்வி பதிலில் அனைவரையும் சிரிக்கவைத்தவர். நம்ம அபுவை மிஞ்சிய கும்மி திலகம்
    வாயாடி அனைவருக்கும் அன்பு தங்கை என்னை அன்போடு அம்மா என்று அழைக்கும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    எனக்கும் .....
    என் அருமை சகோதரி கவிதை அத்தனையும் அழகு....

    ஆமாம் வாயாடி தோழி நேசத்தால் நம் நெஞ்சம் நிறந்த தோழி.....

    ReplyDelete
  87. //ஆமாங்க எங்கள் அருமை தம்பி செய்ய்து

    சும்மா எந்த தலைப்பிலும் தூள் பரத்தும் சிங்கம்...//

    ஏங்கெ சிங்கம்னு சொல்லி அவரை ஜூலே போய் அடைக்க சொல்றீங்க‌

    ReplyDelete
  88. 32 கேள்வி பதிலில் அனைவரையும் சிரிக்கவைத்தவர்.

    :))))))))
    நம்ம அபுவை மிஞ்சிய கும்மி திலகம்

    yaru nampa abuva

    வாயாடி அனைவருக்கும் அன்பு தங்கை

    nanne naana

    ReplyDelete
  89. sakthi said...
    இவர் பதிவின் பெயரே நமக்குள் வாழும் ஒன்று.இவர் பதிவுக்குள் சென்றால் ஒரு தோட்டத்தில் உள்ள உணர்வு தோன்றும் வண்ணமலரும் வண்ணத்துப்பூச்சியும் இவர் வசமே இதுவே இவர் விலாசமே மன விலாசம்

    அருமை அழகான விளக்கம்
    எங்கள் அண்ணாவிற்கு

    ஆமாம் பா இவர் தோட்டத்து பூவுக்கும் மலருக்கும் ரசிகை நான்...

    ReplyDelete
  90. //gayathri said...
    ஜெஸ்வந்தி said...
    /கனிக்கூட்டத்துக்கு நன்றி. சுவைத்து விட்ட கனிகள் அருமை. சுவைக்காதவையும் அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன்./

    //அட சும்மா சுவச்சித் தான் பாருங்களேன்//

    சுவைக்காது உங்கள் கனிகள் மட்டும் தான் தோழி. விரைவில் சுவை பற்றிச் சொல்லுகிறேன்.

    ReplyDelete
  91. // நம்ம அபுவை மிஞ்சிய கும்மி திலகம்
    வாயாடி அனைவருக்கும் அன்பு தங்கை என்னை அன்போடு அம்மா என்று அழைக்கும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்//

    எனக்கே ஒரு போட்டியா தாங்காது இந்த பூமி

    ReplyDelete
  92. இவர் மிகச் சிறந்த மனோதத்துவர் ஆம் எதையும் ரிஷிமூலம் நதிமூலம்
    என்போம் அதையும் ஆராய்ந்து எழுதுவதில் இவருக்கு குரு இவரே...முதலில்
    ஆச்சிரியமான விஷயம் இவர் எப்படி எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்குகிறார்
    என்று தான் ஆம் நண்பர்களை சந்திப்பதில் அவர்கள் அழைக்கும் அழைப்பை
    ஏற்றுச் செல்வதில் பதிவிடுவதில் அனைவருக்கும் பின்னுட்டமிடுவதில் மற்றும்
    பல வித்தியாசமான் கோணங்களில் பல பதிவுகள் எழுதியிருக்கிறார்.இவருடைய
    பல படைப்புகள் பத்திரிக்கை மற்றும் இளமை விகடனில் வெளிவந்துளளது


    ஆமாங்க

    பல வித்தியாசமான படைப்புகள்

    எப்படி நேரம் கிடைக்கின்றது இவருக்கு மட்டும் என யோசிக்க வைக்கின்றார்

    ReplyDelete
  93. gayathri said...
    32 கேள்வி பதிலில் அனைவரையும் சிரிக்கவைத்தவர்.

    :))))))))
    நம்ம அபுவை மிஞ்சிய கும்மி திலகம்

    yaru nampa abuva

    வாயாடி அனைவருக்கும் அன்பு தங்கை

    nanne naana

    நீ தானடி செல்லம்....

    ReplyDelete
  94. 32 கேள்வி என்ற மிக சமுக நலம் வாய்ந்த பதிவு நடமாட
    தொடங்கிய நேரத்தில் ரம்யாவிடம் இவர் கேட்டு அனுப்பிய கேள்விகள் மிகவும் பயனுள்ளதாகும். ரம்யா வால்பையன் இவர்கள் மேல் ஈர்ப்பு கூட இந்த பதிவு ஒரு காரணமாகும். அதில் வரும் பதில்கள் பெண்களுக்கு மிகவும் பயன்படும்... வால்பையன் இவர் பதிவுகளில் சில இங்கு.....

    அப்படியா தமிழ்

    ReplyDelete
  95. //ஆமாம் பா இவர் தோட்டத்து பூவுக்கும் மலருக்கும் ரசிகை நான்...//

    இப்படி சொல்லிட்டா.. அவர் தோட்டல இருந்து பூவ பறிச்சு வெச்சுக்கலாம்னு பாக்கறீங்களா.. நடக்காது!!

    ReplyDelete
  96. //ஜெஸ்வந்தி said...
    //gayathri said...
    ஜெஸ்வந்தி said...
    /கனிக்கூட்டத்துக்கு நன்றி. சுவைத்து விட்ட கனிகள் அருமை. சுவைக்காதவையும் அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன்./

    //அட சும்மா சுவச்சித் தான் பாருங்களேன்//

    சுவைக்காது உங்கள் கனிகள் மட்டும் தான் தோழி. விரைவில் சுவை பற்றிச் சொல்லுகிறேன்.
    //

    என் "கனி" யை எல்லோரும் பிச்சி மேய்றீங்களே ஆஆவ்வ்வ்

    ReplyDelete
  97. @ சக்தி,


    அப்படியா தமிழ்


    அப்படித்தான் சக்தி.

    ReplyDelete
  98. sakthi said...
    இவர் மிகச் சிறந்த மனோதத்துவர் ஆம் எதையும் ரிஷிமூலம் நதிமூலம்
    என்போம் அதையும் ஆராய்ந்து எழுதுவதில் இவருக்கு குரு இவரே...முதலில்
    ஆச்சிரியமான விஷயம் இவர் எப்படி எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்குகிறார்
    என்று தான் ஆம் நண்பர்களை சந்திப்பதில் அவர்கள் அழைக்கும் அழைப்பை
    ஏற்றுச் செல்வதில் பதிவிடுவதில் அனைவருக்கும் பின்னுட்டமிடுவதில் மற்றும்
    பல வித்தியாசமான் கோணங்களில் பல பதிவுகள் எழுதியிருக்கிறார்.இவருடைய
    பல படைப்புகள் பத்திரிக்கை மற்றும் இளமை விகடனில் வெளிவந்துளளது


    ஆமாங்க

    பல வித்தியாசமான படைப்புகள்

    எப்படி நேரம் கிடைக்கின்றது இவருக்கு மட்டும் என யோசிக்க வைக்கின்றார்

    நான் எல்லாம் வெட்டியா உக்காந்து கிட்டு boreனு புலம்பிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  99. மிகச் சிறந்த தமிழ் பற்றாளாரான இவர் தன் மகளுக்கு சூட்டி இருக்கும் பெயர் நம் சங்ககால் இலக்கியத்தை நினைவு கூறும்.ஆம் இவர் மகளின் பெயர் அகமதிவெண்பா.இவர் தான் உழவன்

    அருமையான பெயர்

    அகமதி

    உழவருக்கு கொடுத்திருக்கும் அறிமுக உரை அருமை தமிழ்

    ReplyDelete
  100. வூவ்... மீ த சென்சூரி..

    எப்பூடிடிடிடிடிடிடிடிடி!!!!!!

    ReplyDelete
  101. அபுஅஃப்ஸர் said...
    //ஜெஸ்வந்தி said...
    //gayathri said...
    ஜெஸ்வந்தி said...
    /கனிக்கூட்டத்துக்கு நன்றி. சுவைத்து விட்ட கனிகள் அருமை. சுவைக்காதவையும் அப்படித் தான் இருக்கும் என்று நம்புகிறேன்./

    //அட சும்மா சுவச்சித் தான் பாருங்களேன்//

    சுவைக்காது உங்கள் கனிகள் மட்டும் தான் தோழி. விரைவில் சுவை பற்றிச் சொல்லுகிறேன்.
    //

    என் "கனி" யை எல்லோரும் பிச்சி மேய்றீங்களே ஆஆவ்வ்வ்

    கொண்டுட்டு ஒடுங்க அபு..

    ReplyDelete
  102. //எப்படி நேரம் கிடைக்கின்றது இவருக்கு மட்டும் என யோசிக்க வைக்கின்றார்

    நான் எல்லாம் வெட்டியா உக்காந்து கிட்டு boreனு புலம்பிட்டு இருக்கேன்...//

    நாங்க.. காப்பாத்துங்கன்னு பொலம்பிட்டு இருக்கோம்.

    அவ்வ்வ்வ்!!

    ReplyDelete
  103. //ரங்கன் said...
    வூவ்... மீ த சென்சூரி..

    எப்பூடிடிடிடிடிடிடிடிடி!!!!!!
    //

    வாழ்த்துக்க்ள்

    ReplyDelete
  104. sakthi said...
    மிகச் சிறந்த தமிழ் பற்றாளாரான இவர் தன் மகளுக்கு சூட்டி இருக்கும் பெயர் நம் சங்ககால் இலக்கியத்தை நினைவு கூறும்.ஆம் இவர் மகளின் பெயர் அகமதிவெண்பா.இவர் தான் உழவன்

    அருமையான பெயர்

    அகமதி

    உழவருக்கு கொடுத்திருக்கும் அறிமுக உரை அருமை தமிழ்

    நன்றி டா...

    ReplyDelete
  105. ரங்கன் said...
    //எப்படி நேரம் கிடைக்கின்றது இவருக்கு மட்டும் என யோசிக்க வைக்கின்றார்

    நான் எல்லாம் வெட்டியா உக்காந்து கிட்டு boreனு புலம்பிட்டு இருக்கேன்...//

    நாங்க.. காப்பாத்துங்கன்னு பொலம்பிட்டு இருக்கோம்.

    அவ்வ்வ்வ்!!

    இரு அம்மாவுக்கு போன் பண்ணி இங்க நீங்க சொன்ன வேலை செய்யமா அரட்டை அடிக்கிறார்ன்னு சொல்றேன்...

    ReplyDelete
  106. //இரு அம்மாவுக்கு போன் பண்ணி இங்க நீங்க சொன்ன வேலை செய்யமா அரட்டை அடிக்கிறார்ன்னு சொல்றேன்...//

    கவிதையில் மிரட்டுவது போதாதென்று இப்படி வேறு மிரட்டலா..

    வேண்டாம்.. சிரிச்சுடுவேன்.

    ReplyDelete
  107. //அபுஅஃப்ஸர் said...

    //ரங்கன் said...
    வூவ்... மீ த சென்சூரி..

    எப்பூடிடிடிடிடிடிடிடிடி!!!!!!
    //

    வாழ்த்துக்க்ள்//

    தாங்க்ஸ் அபு.. தாங்க் யூ சோ மச்.. !!

    ReplyDelete
  108. இன்றைக்கு "வால்" தவிர்த்து அனைவரும் எனக்கு புதியவர்களே..
    அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தமிழ் அக்கா..

    ReplyDelete
  109. சுரேஷ் குமார் said...
    இன்றைக்கு "வால்" தவிர்த்து அனைவரும் எனக்கு புதியவர்களே..
    அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தமிழ் அக்கா..

    ஆமா சாட்ல போட்டு தாக்கறது இங்க பவ்யமா அக்கான்னு சொல்றது எல்லாம் இந்த தம்பிகளின் கூட்டுச் சதி,,,,

    ReplyDelete
  110. //ஆமா சாட்ல போட்டு தாக்கறது இங்க பவ்யமா அக்கான்னு சொல்றது எல்லாம் இந்த தம்பிகளின் கூட்டுச் சதி,,,//

    அப்போ ரசம் சதி...?!

    ReplyDelete
  111. //ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    ஹேய் சீட்டிங்....
    //

    அல்ல அபு சீட்டிங்க்..!!

    ReplyDelete
  112. தமிழரசி said...
    sakthi said...
    32 கேள்வி பதிலில் அனைவரையும் சிரிக்கவைத்தவர். நம்ம அபுவை மிஞ்சிய கும்மி திலகம்
    வாயாடி அனைவருக்கும் அன்பு தங்கை என்னை அன்போடு அம்மா என்று அழைக்கும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    எனக்கும் .....
    என் அருமை சகோதரி கவிதை அத்தனையும் அழகு....

    ஆமாம் வாயாடி தோழி

    நேசத்தால் நம் நெஞ்சம் நிறந்த தோழி.....


    adada ithula ethum ulkuthu illaye

    ReplyDelete
  113. sakthi said...
    இவர் மிகச் சிறந்த மனோதத்துவர் ஆம் எதையும் ரிஷிமூலம் நதிமூலம்
    என்போம் அதையும் ஆராய்ந்து எழுதுவதில் இவருக்கு குரு இவரே...முதலில்
    ஆச்சிரியமான விஷயம் இவர் எப்படி எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்குகிறார்
    என்று தான் ஆம் நண்பர்களை சந்திப்பதில் அவர்கள் அழைக்கும் அழைப்பை
    ஏற்றுச் செல்வதில் பதிவிடுவதில் அனைவருக்கும் பின்னுட்டமிடுவதில் மற்றும்
    பல வித்தியாசமான் கோணங்களில் பல பதிவுகள் எழுதியிருக்கிறார்.இவருடைய
    பல படைப்புகள் பத்திரிக்கை மற்றும் இளமை விகடனில் வெளிவந்துளளது


    ஆமாங்க

    பல வித்தியாசமான படைப்புகள்

    எப்படி நேரம் கிடைக்கின்றது இவருக்கு மட்டும் என யோசிக்க வைக்கின்றார்

    நான் எல்லாம் வெட்டியா உக்காந்து கிட்டு boreனு புலம்பிட்டு இருக்கேன்...

    July 10, 2009 5:03:00 PM IST///

    அந்த நேரத்தை எனக்குக் கொஞ்சம் அனுப்புங்க!!!

    ReplyDelete
  114. அபுஅஃப்ஸர் said...
    //ஆமாங்க எங்கள் அருமை தம்பி செய்ய்து

    சும்மா எந்த தலைப்பிலும் தூள் பரத்தும் சிங்கம்...//

    ஏங்கெ சிங்கம்னு சொல்லி அவரை ஜூலே போய் அடைக்க சொல்றீங்க

    அதை பண்ணுங்க முதல்ல....

    ReplyDelete
  115. அறிமுகப் படுத்தப் பட்டவர்கள் அனைவரும் அருமையா எழுதக் கூடியவங்க.

    அவர்களுக்கெல்லாம் அருமையான கனிகளுடன் கொடுத்த தோழியின் வாசகங்கள் அருமை.

    எல்லாரும் நல்ல பிரபலமானவர்கள்தான். இருப்பினும் மறுபடியும் வலைச்சரத்தின் வழியாக இன்று இவர்களின் இடுகைகளும் களை கட்டி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    நன்றி தோழி!!

    அவர்களின் சார்பில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

    மறுபடியும் என்னோட பெயர் வலைச்சரத்துலே வந்திருக்கு. வால்பையனின் இடுகை வழியாக வந்த கேள்வி பதில் இடுகை.

    எனக்கு மிகவும் பிடித்த, ரசித்த இடுகை இதுதான். என் நண்பர்கள் பலராலும் பாராட்டப்பட்டேன் என்றால் அதற்கு முழு காரணம் வால்பையன்தான்.

    வால்பையனின் கேள்விகள் அருமையா இருந்திச்சு. பதில்களை நான் மிகவும் ரசித்து எழுதினேன். பலரின் பாராட்டுகளும் கிடைத்தன. நன்றி வால்ஸ்.

    தமிழ் இன்று உங்கள் வலைச்சரம் அருமையான தொகுப்பு.

    வாழ்த்துக்கள் தோழி!!

    ReplyDelete
  116. //எனக்கு மிகவும் பிடித்த, ரசித்த இடுகை இதுதான். என் நண்பர்கள் பலராலும் பாராட்டப்பட்டேன் என்றால் அதற்கு முழு காரணம் வால்பையன்தான்.

    வால்பையனின் கேள்விகள் அருமையா இருந்திச்சு. பதில்களை நான் மிகவும் ரசித்து எழுதினேன். பலரின் பாராட்டுகளும் கிடைத்தன. நன்றி வால்ஸ்.//


    நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை!
    அந்த பெருமை அனைத்தும் ரம்யாவுக்கே சேரும், எனது பங்கு திருவிளையாடல் தருமி போன்று கேள்வி கேட்டது மட்டுமே!

    ”ஆசைக்கு நீ”(வால் தான்)
    ”அறிவுக்கு நான்” என்று நிறுபித்தது ரம்யா தான், எனக்கு அந்த வாய்ப்பளிததற்கு நான் தான் நன்றி சொல்லனும்!

    ReplyDelete
  117. யப்பா, காலயிலே எட்டிப்பார்த்துட்டு போனது, இப்பொ வந்து பார்த்தால் போடோ போடுன்னு போட்டுத்தாக்கியிருக்காங்கடோய்!!

    ReplyDelete
  118. வால்ஸ் & ரங்கன், ஆட்டோ, லாரி, சைக்கிள் பேரனியெல்லாம் வேன்டாம்ப்பா, நீங்க அங்கிருந்தே ஆதரவு கொடுங்க, அதுவே போதும்..ஹீ..ஹீ!!

    ReplyDelete
  119. //அபுஅஃப்ஸர் said...
    ஷ‌ஃபிக்ஸ் said...வலைப்பூந்தோட்டத்தின் மூலம் 25 வருடம் கழித்து சமீபத்தில் தான் சந்தித்தோம். //


    வ‌லையிலே மாட்டிக்கிட்டீங்க‌...//

    அன்பான‌ உங்க‌ளைப்போன்றோர் உள்ள வலைத்தான் அபூ!!

    ReplyDelete
  120. //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தமிழக்கா

    அக்காவா இப்பத் தான் நவாஸ்க்கு நண்பன்னு சொல்லிட்டு அடி வாங்குவீங்க நானும் தெரியாத தனமா தம்பி போட்டேன் எல்லாம் வாபஸ்...//

    அப்பட்டமான அரசியல்வாதி, உங்களைச்சொல்லி குத்தமில்லை!!

    ReplyDelete
  121. //தமிழரசி said...
    உங்களை ஊக்கப்படுத்தினால் நீங்க பாராட்டுங்க...ஒரு வேலை சொன்னால் செய்யலை அவரைப் போய் திட்ட வேணாம் என்று சொல்கிறீர்கள் நான் திட்டுவேன் என்னால முடியலைன்னா ஜமால் அபு எல்லாம் சேர்ந்து திட்டுவோம்....//

    ஒரு குரூப்பாத்தேன் திரிதுங்க..அப்பட்டமான கூட்டனி அரசியல், அபூ எங்க கட்ச்சிக்கு தாவுறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, பார்த்துக்கோங்க‌

    ReplyDelete
  122. இன்று முழுவதும் இணையம் பக்கமே வரமுடியவில்லை.மன்னிக்கவும்.

    அழகான அறிமுகத்திற்கு மிக்க நன்றி தமிழரசி அக்கா.

    மற்ற அனைவரும் நம் நண்பர்கள் என்பதால் அவர்களை அறிமுகப் படுத்தியதற்கும் என் நன்றிகளை தெரிவித்து
    கொள்கிறேன்.

    அன்புடன்,
    அ.மு.செய்யது.

    ReplyDelete
  123. This comment has been removed by the author.

    ReplyDelete
  124. ரொம்ப நாள் கழித்து வலைச்சரம் களைகட்டியுள்ளது!!

    ReplyDelete
  125. //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    வால்ஸ்..என்னது ஆட்டோவா? யோவ் நாங்க உருக்கு புதுசுயா, எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்கய்யா

    அது அப்படி வாங்க வழிக்கு ஆமா 25 வருஷமா நண்பனை மிஸ் பண்ணிட்டு இப்ப சப்போர்ட்டா...//

    சொன்னதை சரியா படிங்கப்பா...25 வருஷம் முன்னாடி ஊர்க்காரர், இப்போ நன்பராயிட்டார்ப்பா.........யப்பா வெளக்கஞ்சொல்லி வெளக்கஞ்சொல்லி...ஷ்ஷ்ஷ்ஷ்!!

    ReplyDelete
  126. அபூ தலைமையில் பழத்துக்காக பெரிய சன்டையே நடந்து இருக்கு போல, anyway i am too late, எனக்கு இல்ல, எனக்கு இல்ல!!

    ReplyDelete
  127. வலைச்சர ஆசிரியருக்கு ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  128. ஷ‌ஃபிக்ஸ் said...

    //தமிழரசி said...
    உங்களை ஊக்கப்படுத்தினால் நீங்க பாராட்டுங்க...ஒரு வேலை சொன்னால் செய்யலை அவரைப் போய் திட்ட வேணாம் என்று சொல்கிறீர்கள் நான் திட்டுவேன் என்னால முடியலைன்னா ஜமால் அபு எல்லாம் சேர்ந்து திட்டுவோம்....//

    ஒரு குரூப்பாத்தேன் திரிதுங்க..அப்பட்டமான கூட்டனி அரசியல், அபூ எங்க கட்ச்சிக்கு தாவுறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, பார்த்துக்கோங்க‌

    hahahhaha அவரை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது ஏன்னா இப்ப எல்லாம் கட்சி தாவலுக்கு தண்டனை கவிதை படித்தல் அதனால் அவர் கண்டிப்பா கட்சி மாறமாட்டார்....

    ReplyDelete
  129. ஷ‌ஃபிக்ஸ் said...
    அபூ தலைமையில் பழத்துக்காக பெரிய சன்டையே நடந்து இருக்கு போல, anyway i am too late, எனக்கு இல்ல, எனக்கு இல்ல!!

    அதனால தான் சொன்னாங்க பந்திக்கு முந்தி படைக்கு பிந்தின்னு ஹிஹிஹி படிச்சதில்லையா அண்ணா...

    ReplyDelete
  130. ரெண்டு நாள் லீவ் போட்டா பழம் எல்லாம் ஜூஸ் ஆயிடுச்சேப்பா. வந்ததுக்கு ஒரு க்ளாஸ் குடிச்சிட்டு போறேன்

    ReplyDelete
  131. அலுவலகம் வந்த உடன் நண்பர்கள் மனம் நோகாமல் அனைவரின் பதிவை
    படித்து விட்டு பின்னுட்டமிட்டு நேரமிருந்தால் மட்டுமே அலுவலப் பணிபுரியும்
    அற்புத மனிதம் இவர்..

    ஹா ஹா ஹா. உண்மைய இப்படி அப்பட்டமா போட்டு உடைச்சாச்சா. நல்ல வேலை என் கூட வேலை பார்க்குற எல்லா பயலும் ஹிந்திக்கார பயலுங்க. அதுனால தப்பிச்சேன்.

    ReplyDelete
  132. புதியவன் - காதலுக்கு பல அழகிய முகங்களைக் கவிதைகளில் வடித்தவர். எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.

    ReplyDelete
  133. அ.மு. செய்யது - இவருடைய படைப்புகள் அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்ததவை. இவர் எழுதும் அனைத்திலும் கவிதையும் காதலும் நிறைந்திருக்கும். இவரின் மூளை சாதாரண எடையை விட நூறு கிராம் எடை கூடுதலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.

    ஜூன்-10 சில‌ ஞாப‌க‌ குறிப்புக‌ள் - எத்துனை முறை படித்தாலும் தெவிட்டாத வரிகள். மிக அருமையான படைப்பு.

    ReplyDelete
  134. பிரிவையும் நேசிப்பவள் காயத்ரி - எங்கள் எல்லோருக்கும் செல்லம். அன்புத் தங்கை.

    ReplyDelete
  135. இவர் ஒரு மருத்துவர் மனோதத்துவரும் கூட என்பது இவர்
    பதிவை படித்தால் போதும் அறியலாம்..ஆம் இவர் தான் தமிழ்துளி தேவன்மயம்.

    மிக அற்புதமான, அவசியமான பதிவுகளை மட்டும் தருபவர். எல்லோருடைய பதிவையும் பொறுப்புடன் படித்து ஊக்கம் தரும் பின்னூட்ட்டம் இட என்றும் தவறாதவர்.

    ReplyDelete
  136. நக்கீரர்களில் இவரும் ஒருவர்.சுமார் 200க்கும்
    மேற்பட்ட ஃபாளோயர்ஸ் கொண்டுள்ள இவர் அத்தனை பேரின் பதிவுகளையும்
    படித்து பின்னுட்டம் இடுவார் என்பது வியக்கத்தக்கது..இவருடைய நண்பர் வட்டம்
    மிகவும் பெரிது... சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்..எந்த பதிவாக இருந்தாலும் நம்ம சுப்புடு மாதிரி தைரியமாக தன் கருத்தை முன் வைப்பார்..
    குற்றமிருந்தால் சுட்டிக் காட்ட தயங்கமாட்டார் அது நட்பாக இருந்தாலும் சரி..

    இவரின் பதிவிற்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். இவரின் பதிவும் சரி பின்னூட்டமும் சரி, தில்லாவும் இருக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது.

    ReplyDelete
  137. வால்பையன் said...
    //என்னை வலைபபதிவு இடும்படி ஊக்கப்படுத்தியவர் (அவரை திட்டாதீங்க...)//

    திட்டுறதெல்லாம் சின்ன புள்ளைங்க விளையாட்டு நாங்க ஒன்லி ஆட்டோ தான்!

    அட்ரஸ் மாரிட்டேங்கோ.

    ReplyDelete
  138. பொறுப்பான அவசியமுள்ள அதிக பட்ச கிராமப் பிண்ணனி அதன் இயல்பு,வறுமையின் வலி, நகரத்தின் பார்வை அரசியல் போர்வை இவைகளை சார்ந்திருக்கும் இவர் பதிவுகள் அனைத்தும் அருமை..

    இவர் நல்ல, அழகிய, மென்மையான பதிவுகளை மட்டும் விதைப்பவர். இவரின் ஜெமினி குதிரை - சென்னை அனுபவம் ரொம்ப சுவாரசியமா இருக்கும். குறிப்பாக சென்னையில் வசிக்கும் பலரின் பின்னூட்டம் கூடுதல் சுவாரசியம் உண்டாக்கும்.

    ReplyDelete
  139. இப்போதுதான் என்னால் இந்தப் பதிவைப் பார்க்க முடிந்தது தமிழ்.. மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். தங்களுக்கும், என்னையும் இந்த வலையுலகில் ஒரு பதிவராக ஏற்றுக்கொண்ட அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    அன்புடன்
    உழவன்

    ReplyDelete
  140. S.A. நவாஸுதீன் said...
    ரெண்டு நாள் லீவ் போட்டா பழம் எல்லாம் ஜூஸ் ஆயிடுச்சேப்பா. வந்ததுக்கு ஒரு க்ளாஸ் குடிச்சிட்டு போறேன்

    எல்லாம் இந்த அபுவும் ஷபியும் தான் காலி பண்ணது போய் கேளுங்கள்..

    ReplyDelete
  141. S.A. நவாஸுதீன் said...
    அலுவலகம் வந்த உடன் நண்பர்கள் மனம் நோகாமல் அனைவரின் பதிவை
    படித்து விட்டு பின்னுட்டமிட்டு நேரமிருந்தால் மட்டுமே அலுவலப் பணிபுரியும்
    அற்புத மனிதம் இவர்..

    ஹா ஹா ஹா. உண்மைய இப்படி அப்பட்டமா போட்டு உடைச்சாச்சா. நல்ல வேலை என் கூட வேலை பார்க்குற எல்லா பயலும் ஹிந்திக்கார பயலுங்க. அதுனால தப்பிச்சேன்.

    என்னங்க தமிழுக்கு ஹிந்தியும் தெரியும் அடுத்த பதிவு ஹிந்தியில் தான்....

    ReplyDelete
  142. " உழவன் " " Uzhavan " said...
    இப்போதுதான் என்னால் இந்தப் பதிவைப் பார்க்க முடிந்தது தமிழ்.. மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். தங்களுக்கும், என்னையும் இந்த வலையுலகில் ஒரு பதிவராக ஏற்றுக்கொண்ட அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    அன்புடன்
    உழவன்

    நன்றிங்கோ....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது