07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 14, 2012


         மரு மருட்கை  (வியப்பு))

சப்பானை  உலுக்கியது 
ஆழிப்பேரலை 
அணுக்கதிர்வீச்சு 
நாசப்படுத்தும் எனதெரிந்தும் 
கண்  காணிக்க 
மேல் அலுவலர்கள் 
இல்லாத நிலையிலும் 
பணியினை  பலர் தொடர்ந்தே 
செய்து கொண்டு 
இருந்தார்களாம்.

உணவு இல்லாதபோதும் 
விலையேற்றம் 
 இல்லவே இல்லை .

அரசு வந்து சோறு 
ஊட்ட வில்லையென 
மக்கள் ஒப்பாரி 
வைக்கவில்லை 
அங்குள்ள அரசு 
நம் அரசுபோல இல்லை 
என்பது வேறு செய்தி.

கலவரங்களை 
தூண்டிவிட்டு 
ஆட்சி யாளர்க்கு 
எதிராக எவரும் குரல் 
எழுப்பவில்லை..

குறைந்த அளவே 
உணவு கையிருப்பு 
இருந்தபோதும் 
கட்டுப்பாட்டுடன் 
இருந்தார்களாம் 
மீண்டும் மீண்டும் 
வாங்கி வைத்துக் 
கொள்ளவில்லை

இடிபாடுகளில் 
சிக்கிய பெண்ணை 
காப்பாற்றியபோது 
என்னால் தானே 
இத்தனை தொல்லை 
உங்களுக்கு என்றாராம்.

உயிர்போராட்டத்திலும் 
சாலைவிதிகள் 
மீரவேயில்லை..

கொள்ளையடித்தல் 
இல்லை ....
இல்லவே இல்லை .

ஒழுங்கு ஒழுங்கு ...
கட்டுப்பாடு .

எங்கிருந்து கற்றார்கள் 
அந்த கட்டுப் பாட்டை ?

 இவற்றை எல்லாம் 
கேட்டபோது
வியப்பு கொள்ளவே 
செய்ததது  .

       கண்களில்  உடையும்  நதி  அப்படின்னு  ஒரு கவிதை  போட்டு இருக்கிறார்  இவரின் இடுகைகள் எல்லாமே  சமூக சிந்தனை கொண்டதாக இருக்கறது  என்ன வென்று  பார்ப்போமா http://krpsenthil.blogspot.in/2012/09/blog-post_9297.html

     இவரின்   இடுகைகளும்  மாறுபட்ட  கோணத்தில்  இருக்கிறது நெல்சன்   மன்டோலா  பற்றி ஒரு இடுகை  பாருங்களேன் http://urssimbu.blogspot.sg/2012/10/nelson-mandela-historical-legends.html

   இவர் சமூக சிந்தையுடன்  கட்டுரையையும்  கவிதையும்  வழங்கிவருவது  இவரின் இடுகைளே   காட்டுகிறது  என்ன வென்று  போய்  பாருங்களேன் http://kiramthukakkai.blogspot.in/

     என்டர் ப்ளஸ்  அப்படின்னு  ஒரு சிறந்த   வலைப்பூ    பாருங்க  என்னைபோல உள்ளவங்க அதாவது கணினியைப்  பற்றிய புரிதல் இல்லாதவங்க படிக்க  நல்ல  செய்தி கிடும் போல தெரிகிறது  பாருங்களேன் http://wesmob.blogspot.com/

    குழந்தை  வரம்  அப்படின்னு  ஒரு இடுகை  கண்களில்   நீரை  வரவழைத்தது நீங்க போய் பாருங்களேன்   http://arvraaji.blogspot.com/2012/10/blog-post.html

    வெற்றி வெற்றியே  என ஒரு இடுகை  சுவாமி விவேகனந்தர்  நீ எதாக ஆக நினைக்கிறாயோ  அது ஆகிறாய்   என்பார்  அதுபோல  வெற்றியின்  ரகசியத்தை நமக்கு தருகிறார்  http://yaathoramani.blogspot.in/2012/11/blog-post.html

       உ .சகாயம் ஒரு பயங்கர  டேட்டா  ஒரு  பதிவு  அரசு  அலுவலர் அதும் மாவட்ட ஆட்ச்சியாளர் எப்படி  இருக்க  வேண்டும் என்பதற்கு  சிறந்த  உதாரணமாக  இருக்கின்றவர்  இவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு  இடமாருதல்கள்   நேர்மைக்கு நாம் கொடுக்கும்  பரிசு  இதுதானா  என எண்ணத்தூண்டுகிறது  நீங்களும் போய் பாருங்களேன்http://reverienreality.blogspot.in/2012/09/i-s.html 

     ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்ன்னு  ஒரு இடுகை  இவரின் மற்ற  இடுகைகளும் எதாவது ஒரு செய்தியை சொல்லுது போய்  பாருங்களேன் http://vijayandurai.blogspot.com/2012/11/internethistory10.html

தினசரி வாழ்க்கை  அப்படின்னு  ஒரு வலைப்பூ  பாருங்களேன் http://mayvee.blogspot.in/2012/09/blog-post.html

ஆச்சரியங்கள்  நிறைந்த  மாய உலகம்ன்னு  ஒரு வலைப்பூ பாருங்களேன்  http://vijayandurai.blogspot.com/2012/11/internethistory10.html


       என்ன உறவுகளே  படித்தீர்களா  எதோ என்னால் இயன்றவரை  தொகுத்து இருக்கிறேன்  நேரமின்மை நான் போகும் நேரத்தில்  கணினி  மையங்களில்  எனக்கு இடம் கிடைக்க வேண்டும்  இப்படி பல இன்னல்கள்ஊடே  எனது பணி  தொடருகிறது இன்னும் மூகமையான  பதிவர்களை  நாம் சந்திக்கவே இல்லை  என்பது வேறு செய்தி  அடுத்த  நாள்   களில்  அவர்களையும் சிந்திப்போம்  அதுவரை வாய்ப்பு வழங்கிய சீனஐயா   அவர்களுக்கும் வாழ்த்திய நல்ல  உள்ளங்களுக்கும் பணிவான  நன்றியும் பாராட்டுகளையும் சொல்லி  விடை கேருகிறேன் .

தமிழன்புடன் ....

மாலதி .

12 comments:

  1. சோதனை மறு மொழி

    ReplyDelete
  2. ஜன நாயகம், சுதந்திரம் எனப்படுவது யாதெனில், உங்களின் இந்தக் கருத்தில் உள்ளது. இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜப்பானியர்களின் எல்லா செயல்களுக்கும் எதிர்மறையாக உள்ளது எல்லாமே ஜன நாயகம், சுதந்திரம் ஆகும். அவர்கள் வாழப் பிறந்தவர்கள் நாம் எப்படியும் வாழ்லாம் எனப் பிறந்தவர்கள். என்ன சரிதானே? இந்த முட்டுக் கட்டையாய் நாம் தாண்டிவிட்டால் நாம் வல்லரசாகிவிடுவோம். அணு உலை செய்வதாலும், அணு குண்டு தயாரிப்பதாலும் லக்ஷம் கோடிகளில் கொள்ளையடிப்பதாலும் நாம் வல்லரசாகி விட முடியாது.

    ReplyDelete
  3. வெற்றி வெற்றியே என தொகுத்தளித்த அருமையான தள்ங்களுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. மருட்கை சிறப்பான வரிகள் சகோ. அறிமுகப்பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அதிக மின் வெட்டு காரணமாகவும், கணினி மையங்களில் உங்களுக்கு இடம் கிடைக்காவிட்டாலும் பல தளங்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி...

    அனைத்தும் நல்ல தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    tm1

    ReplyDelete
  6. அப்பாடா தங்கள் புதன் பதிவு வரை வந்து விட்டேன்.
    உங்கள் சிரமம் புரிகிறது மாலதி..
    அத்தனை அறிமுக அன்புள்னளங்களிற்கு
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. பணிச்சுமையிலும் பல்சுவை பதிவாளர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. நினைவில் வைத்து என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...

    மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    சிரமம் பார்க்காமல் நீங்கள் இங்கு தொடர்வது உங்கள் கவிதைகளில் உள்ள வீரியத்துக்கு நிகர்...

    வாழ்த்தும் நன்றியும் மீண்டும்...ரெவெரி

    ReplyDelete
  9. தேர்ந்தெடுத்த பதிவர்கள் அனைவரும்
    சிறப்பானவர்கள்..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. மிக்க நன்றி மாலதி..

    ReplyDelete
  11. இதுவே எனது முதல் வருகை. தொடர்ந்து வருகிறேன். பயனுள்ளதாய் இருக்கின்றது.

    எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  12. நல்ல பல அறிமுகங்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது