07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 15, 2012

தொடரும் பயணம்

தொடரும் பயணம் 

பயணங்கள்  தொடருகிறது ...  இன்று நமது வலைசரத்தை  அலங்கரிக்கப் போவது யார் என பார்போமா ?

அதற்க்கு முன்பாக  ஒரு சிறிய  கவிதை ...

தமிழல் உயர்வோம் .....பெருமிதம் 

ஐம்பதாயிரம்  ஆண்டுக்கு 
முன்னமே  தோற்றங்கொண்ட 
மொழி ....

அறிவியலை 
உள்ளடக்கிய  மொழி ....

பத்தாயிரம்  ஆண்டுகளுக்கு 
முன்னமே 
சிந்துவெளியில் 
நாகரீகத்தின்  உச்சத்தில் 
இருந்தமொழி .....

இந்த உலகினுக்கு 
அறிவியலை கொடையாக
வழங்கிய  சீரிய மொழி ....

வானவியல்... 
இசை ...
நடனம் ...
மருத்துவம் ....
நீரியல் மேலாண்மை ....
தங்கத்தையும் ...
தகட்டையும் ...முதலில் 
கண்டெடுத்த மொழி ....

வானவீதியில் ...
ஊர்தியை 
முதலில் ஓடவிட்ட 
மொழி ....

அப்பப்பா 
பழந்தமிழில் 
இல்லாதிருந்த  கலைதான்  என்ன?

இன்று தமிழன் 
சிந்திக்காமல் 
 போகச்  செய்ததது 
எது ?
சிந்திப்போம் .

     
      இந்த சமூகம்  உயிரோட்டம்  உள்ளதாக  இருக்க வேண்டுமா  அதற்க்கு என்ன செய்ய வேண்டும்? எதையும்  கேள்வி  கேட்க வேண்டும்  தனி  பெண்ணாக  தமிழன்னை   கண்ணகி அரசர்களின்  ஆட்சி காலத்தில்  அதாவது  சனநாயகம் இல்லாத  காலத்தில்  சர்வாதிகாரம்  தலை தூக்கிய காலத்தில்    மன்னன்  பாண்டியன்   நெடுஞ்செழியனை  நோக்கி  தேராமன்னா  செப்புவது  ஒன்றுடையேன் என  அறத்தை நிலை நாட்டினாள்  ஆக அறத்தை நிலை நட்ட துணிவு  இருக்க வேண்டும்  அச்சப் பட்டால்  பிணத்திற்கு  சமமாக  ஆகிவிடுவோம்  தவறு  என தெரிந்தால்  எதிர்க்கப்  பழகுவோம் .


       இவர் பாருங்களேன்  இன்றய  சமூக சீரழிவை  அரசியலை  சாக்கடைகளை  அழகாக  பதிவு செய்கிறார்   பாருங்கள் http://sivakumarankavithaikal.blogspot.in/2012/10/blog-post.html


    இன்றய பெண்கள்  முறையில்லாத  உணவு பழக்கத்தினாலும் முறையில்லாத வாழ்க்கையினாலும்  உடலை எப்படி கெடுத்துக் கொண்டு  நோவை  பெற்றுக் கொள்ளுகிறார்கள்   என்பதை  அழகுற பதிவு செய்கிறார்  மார்பக  புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை   தருகிறார்  என்ன வென  பார்ப்போமா  http://ayeshafarook.blogspot.in/2012/10/blog-post_23.html

     இவரின்  வலைப்பூவும்   தனித்திறன்  வாய்ந்தவை வலைப்பூவின் பெயரைப் போலவே... ஆம் வரலாறை  வரலாறாய்  நிற்கும் வலைபூ varalaatrusuvadugal.blogspot.in

    பழந்தமிழ்  திரைகடல்  ஓடியும்  திரவியம் தேடு என்கிறது  அப்படி  புலம் பெயர்ந்தாலும்  வாழும் மண்ணையும் மொழியையும்  மறந்து விடாமல்  இருக்க வேண்டும்  காலங்கடந்த தமிழன்  தன்னுடைய  அரிய  செல்வங்களை எல்லாம்  வெளிநாடுகளுக்கு   கொண்டு  சேர்த்தானே  தவிர  தன்னுடையது  என  நிலை நாட்ட  மறந்தான்  அனால்  மேலைநாடு  சென்றாலும் இன்னும் தமிழை  மறக்காமல்  அடிமைத்தமிழன்  என நம்மை  பேசவைக்கிறார்  என்ன வென பார்ப்போமா http://bharathidasanfrance.blogspot.com/2012/11/blog-post_7.html 

    பாலுறவை வள்ளுவம்  அழகாக  பதிவு  செய்கிறது மலரினும்  மெல்லிது காமம்  என்கிறது இதை எல்லோரும் படிப்பார்களா என தெரிய வில்லை இன்று பாலுறவு குறித்தே பல வீடுகளில் சண்டை நிகழுகிறது  அப்படித்தான் பாருங்க முதலிரவில்   முறைதவறி நடந்து தனது மனைவியையே  கொன்று  விட்டாராம் ஒருவர்  http://desiyamdivyam.blogspot.in/2012/09/blog-post_19.html

   சிலர் பக்கம் பக்கமாக  கவிதை  எழுதி  தள்ளுவார்கள்  என்ன காரணத்திக்காக  எழுதப் பட்டது என தெரியாது  அனால் சிலர் சுருக்கமாக  சொல்லி முடித்து விடுவார்கள்  அப்படித்தான்  இவரும்  பாருங்களேன்  காதலை எவ்வளவு  சிறப்பாக சொல்லி இருக்கிறார்  http://karaiseraaalai.blogspot.in/2012/08/blog-post_30.html

    இதும்  ஒரு கவிதைதான்  சிறந்த கவிதை  என்ன உள  நிலையில் பதிவு  செய்தார் என புரிய வில்லை  இன்றைக்கு தேவையான பதிவு  என்ன வென  பார்ப்போமா ? http://seeni-kavithaigal.blogspot.in/2012/11/blog-post_8.html

     கண்ணைக்  கவரும் வண்ண வண்ணப்  படங்களுடன்  அழகிய பயணக் கட்டுரை  உண்மையில்  மிகச்சிறந்த  படங்கள்  உள்ளைத்தை கொள்ளை கொள்ளுகிறது  நீங்களும் பாருங்களேன் http://muthusidharal.blogspot.in/2012_11_01_archive.html

    ஒரு  நாடு  எப்படி இருக்க வேண்டும்   புலம்  பெயர்ந்து பெயர்ந்து  இருந்தாலும்  அந்  நாட்டின்  சிறப்பு வளங்களை  அழகுற பட்டியல் இடுகிறார்  பாருங்களேன் http://rupika-rupika.blogspot.com/2012/11/blog-post_4.html 


      உறவுகளே  பலவேறு பணிகளுக்கு இடையே  இந்த பணியை  தொடருகிறேன்  அருள்  கூர்ந்து  குறைகளை சொல்லி என்னை ஊக்கப் படுத்துங்கள்  அடுத்து  உங்களோடு சந்திக்கும் வரை விடை  பெறுகிறேன் நாளை சிந்திப்போம் 

 பணிவான வணக்கங்களுடன்... 
 மாலதி .

11 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. உயிரோட்டமுள்ள அறிமுகப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. வணக்கம்
    மாலதி

    இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து தளங்களும் அருமைதொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நல்லதளங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி! தொடருங்கள்!

    ReplyDelete
  5. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஒவ்வொரு தளத்தின் விளக்கமும் அருமை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    tm1

    ReplyDelete
  8. வணக்கம் சகோ...நலம் தானே?

    தங்களுடைய அறிமுக பட்டியலில் நானும் இடம் பெற்றிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது...இன்று அறிமுகம் பெற்ற ஏனைய அறிமுகங்களுக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    மிக்க அன்புடன்,
    வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  9. அறிமுகப் பட்டியல் கண்டு மகிழ்ச்சி. தங்கள் முயற்சிக்கும் அறிமுகவாளர்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. இன்றும், மேலும் நல்ல பல அறிமுகங்கள்.

    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete

  11. வணக்கம்!

    இன்றமிழ் மாலதிக்கு என்வணக்கம்! நன்றிகள்!
    உன்றமிழ்த் ஓங்கி உயருகவே! - நன்றே
    வலைச்சரம் காட்டும் மணமிகு பூக்கள்!
    கலைச்சரம் காட்டும் கமழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது