07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 14, 2010

நான்காவது நாள் - அதிரடி வியாழன்

அதிரடி தான் எனக்கு வழக்கம்.தொடர்ந்து மூன்று நாட்கள் வலைச்சரத்தில் அடக்கி வாசித்து இருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சர்யமே.இன்று பிறந்த நாள் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷல் அதிரடிகள் இருக்குமா என்று பார்ப்போம்.

வெண்ணிற இரவுகள் கார்த்தி - இதுவரை எந்த பதிவரையும் ஒருமையில் விளித்தது இல்லை என்ற சரித்திரம்,பூகோளம் உடைந்தது இவனிடம் தான்.ஏதோ ஒரு ஈர்ப்பு இவன் மேல் இருக்கிறது.இரும்புத்திரை,நர்சிம்,சாரு என்று வரிசையாக அறிமுகம் கொடுத்ததில் இருந்தே தெரிந்திருக்கும் அவனுடைய வளர்ச்சி.நான் அறிமுகம் செய்யும் போது தான் கவனித்தேன் அவனுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைகளை - அதிரடி,அவசரம் இரண்டுமே இருவருக்கும் பொருந்தும்.பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் என்பது உண்மை தான் போலும்.பதிவுகளில் அனல் தெறிக்கிறது.

பொங்கல் பண்டிகையை கூட விட்டு வைக்கவில்லை.

போர்வாள் - பெயரை உச்சரிக்கும் போது கொஞ்சம் என்ன நிறையவே அதிர்கிறது.ஒரு பதிவு தான் எழுதி இருக்கிறார்.அறிமுகமே குத்திக் கிழிக்கிறது.

போர்களம்புக வேண்டியதொரு நேரம்
புணர்ச்சியில் ஆழ்ந்த வீரர்களும்,
காதல் கணங்களில் போர்மொழி புரியும் நரிகளும்
தலைதூக்கக்கண்டு, கவலை கொள்கிறதிவள் மனம்.

இந்த வரிகளில் மனம் இன்னும் லயித்து தான் கிடக்கிறது.

இவ்வலையைப் பூக்கள் தூவி நிரப்புதல் விட
வாள்கள் கொணர்ந்து வளர்க்க முனைகிறேன்.

அடுத்த பதிவிலும் சூடு ஆறாமல் இருக்கும் என்று நட்போடு பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

அறிமுகமே அதிரடியாக இதோ

வெற்றி - நெஞ்சினிலே என்ற பெயரில் பதிவு எழுதுகிறார்.குரு நாதருக்கே பாடம் எடுக்கும் சிஷ்யப் பிள்ளை.எண்டர் கவிதையை என்ன செய்யலாம் என்று நானும்,அத்திரியும் புரியாமல் தவிக்க அவர் இந்த பதிவிலும் குருவை கவிதையை வேறு தளத்தில் காமம் தவிர்த்து எழுத சொல்லி தூண்டி விடுகிறார்.

தெரியாமல் தான் கேட்கிறேன்.ஏன் இந்த கொலைவெறி.நான் சரியா தானே பேசுறேன்.

பராசக்தி வசனத்தை நினைவு படுத்தும் பதிவு இங்கே


ஊடகன் - இத்தனை நாளாக எங்கு தான் போனாயோ என்று பாடத் தோன்றுகிறது.பின்ன என்ன அவர் ஆண்களுக்கு இடஒதுக்கீடு என்ற பதிவில் அவர் சொன்ன கருத்துகளை நான் முன்னர் சொல்லி உதை வாங்கி இருந்தேன்.என்னை மாதிரி இன்னும் ஒருவர் கருத்து சொல்லி உதை வாங்கும் போது ஏற்படும் சந்தோஷமமே அலாதி தான்.

மும்பையில் பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் சில உண்டு.அது தவிர எதுவும் கிடையாது.இருவரும் அருகருகில் அமர்ந்து பயணம் செய்வார்கள்.இதுவரை பிரச்சனை வந்தது போல் எனக்கு தெரியவில்லை.காரணம் அங்கு இருக்கும் பெண்களுக்கு தைரியம் ஜாஸ்தி.மீறி கை வைப்பவன் முகத்தை ஒரு முறை பதம் பார்த்தால் அவன் வைப்பானா.பயந்து நடுங்குவதால் தான் எல்லாம் நடக்கிறது.அப்புறம் இதற்கெல்லாம் தீர்வு கடுமையான தண்டனைகளும்,தனி மனித ஒழுக்கமும் தான்.சொல்ல மறந்து விட்டேன் - இது மாதிரி நான் சொன்னதற்கு இது மும்பை இது சென்னை என்று சொன்னார்கள்.அங்கு இன்னும் சில விதிமுறைகள் இருக்கின்றன.அதில் ஒன்று - வரிசையில் தான் ஏறுவார்கள்.இங்கு - ஹையோ ஹையோ.

சில மாதங்களுக்கு முன் இவரை கண்டால் எனக்கு ஆகாது.அதிரடி விமர்சங்களுக்கு பஞ்சமே கிடையாது.இந்த கதை படித்தப் பிறகு அவருடைய மைனஸ் எல்லாம் எனக்கு தெரியவில்லை.இந்த கதை படித்து விட்டு கண் கலங்கினேன்.காரணம் இது போன்ற வேலைகளை எல்லாம் மனிதர்கள் செய்யக் கூடாது என்று சின்ன வயதில் இருந்தே சொல்லி வருகிறேன்.இது போல வேலை செய்யும் சமூகத்தில் இருந்து எத்தனை பேர் ஆந்திராவில் நக்சல்பாரிகளாக மாறி இருக்கிறார்கள் என்று நினைத்தால் பெயர் தெரியாதவர்கள் மீது எல்லாம் கோபம் வருகிறது.எனக்கு இரண்டு முறை அங்கீகாரம் கொடுத்துள்ளார்.சில ஆயிரம் ஹிட்ஸ் அவரால் வந்தது.தற்சமயம் அவருக்கு ஏதோ ஹிட்ஸ் பிரச்சனை.அதனால் இந்த கைமாறு.

7 comments:

  1. அதிரடி அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அன்பின் அரவிந்த்

    அதிரடி அறிமுகங்கள் அத்தனையும் அருமை - சென்று வந்தேன் படித்தேன்

    இறுதியில் அவருக்கே அறிமுகமா

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. அதிரடி அறிமுகங்களுக்கு நன்றி..

    பொங்கலோ பொங்கல்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. இனிய பொங்கல் வாழ்த்துகள் அரவிந்த்.

    ReplyDelete
  6. சீனா ஐயா, அரவிந்த் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது