07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 27, 2010

வலைச்சரத்தின் மூன்றாம் நாள் - கவிதைகள்.

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். 

-மகாத்மா காந்தி

அனைவருக்கும் எனது வணக்கம். இரு நாட்களை கடந்து இன்று இந்த இனிமையான மூன்றாவது நாளிற்கு வந்திருக்கிறோம்.

எனக்கு தமிழின் மேல் தணியாத ஆர்வம், கவிதைகள் என்றால் ரொம்ப பிரியம் என சொன்னால் அது முழுதும் உண்மையல்ல. இலக்கணத்தில் அவ்வளவாய் புரிதல் இல்லை. நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என இதைத்தாண்டி தெரியாது. இருப்பினும் நல்ல விசயங்களை தாங்கி வரும் எந்த ஒரு கவிதையையும் ரசிக்கத் தவறுவதில்லை...

வானம்பாடிகள் அய்யாவின் கவிதைகளின் வர்ணனைகளும்,  கதிரின் கவிதைகளின் வார்த்தை ஜாலங்களும், கலகலப்ரியாவின் கவிதைகளின் பொருள் பொதிந்த தாக்கங்களும், பா.ரா. வின் எதார்த்தம் நிறைந்த அழகிய வார்த்தைகளிலான எளிய கவிதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்களெல்லாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் புதிதாய் சிலரை இதோ வரிசையாய் பார்க்கலாம். இவர்களில் சிலர் கவிதைகள் மட்டுமே எழுதி வருபவர்கள், சிலர் கவிதையும் அவ்வப்போது எழுதுபவர்கள்.

பனித்துளியாய் எனும் ஒரு வலைப்பூவில் மோகன் ராஜேந்திரனின் ஒரு காலையில் நீ இல்லை எனும் இக்கவிதையைப் பாருங்கள். அழகாயும் யதார்த்தமாயும் நன்றாக இருக்கிறது.


நேசமித்திரன் கவிதைகள் எனும் வலைப்பூவை சமீப காலமாக தொடர்ந்து வருகிறேன். கவிதைப்பிரியர்களுக்கு இது ஒரு அருமையான இடம். எல்லாம் புரிவதற்கு திரும்ப திரும்ப படித்து தெளிகிறேன் (நம் தமிழறிவு அவ்வளவே). அற்புதமான எழுத்து, அழகான கவிதைகள். உதாரணத்திற்கு நேசமித்திரனின் யாருமற்ற கருவறை, இவரது கவிதையின் சிறப்பை சொல்லும்...

நள்ளெண் யாமம் என்னும் வலைப்பூவில் க.சீ. சிவக்குமார் எழுதி வருகிறார். இவரின் குளிர் எனும் கவிதையை படித்துப்பாருங்கள், குளிர்தலாய் உணர்வீர்கள். தொடர்ந்து படிக்கப்படவேண்டியவர்.

பயணங்கள் எனும் வலைப்பூவின் வாயிலாய் எழுதிவரும் மா.குருபரனின் புன்னகை எனும் இக்கவிதையை படித்துப் பார்த்தீர்களென்றால், உங்களின் புன்னகைக்கும் முகம் கூட வாடிப்போகும் படித்த பாதிப்பில்.

தமிழ்க்கவிதைகள் எனும் வலைப்பூவில் எழுதி வரும் உத்தமபுத்ராவின் கவிதைகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.  இவரின் ‘எச்சங்கள்’ எனும் இக் கவிதை ஒரு உதாரணத்திற்கு. படித்துத் தொடர ஒரு அருமையான வலைப்பூ... இன்னும் இவர் நிறைய எழுத மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

ராகவனின் வலைப்பூவில் கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதோ அவரின் நம்பிக்கை... எனும் இக் கவிதையை படித்துப் பாருங்கள். எவ்வளவு எளிமையாய் அழகாய் இருக்கிறது!

தொடர்பவன் எனும் வலைப்பூவை எதேச்சையாய் பார்த்து நானும் ஆனேன் தொடர்பவனாய். நண்பர் கவிதைகள் நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார். இதோ அவரது தொடர்பவனாய் எனும் இக்கவிதையினை பாருங்களேன்.

வானம் வெளித்தபின்னும் எனும் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி ஹேமா என்னமாய் கவிதை எழுதுகிறார் தெரியுமா? உதாரணத்திற்கு அவரின் சமீபத்திய இருகையான பெண்ணை படித்துப்பாருங்கள்...

முனியப்பன் பக்கங்களின் வாயிலாக டாக்டர் மிகவும் அருமையாய் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இதோ அவரின் என்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் ? எனும் இந்த இடுகையை படியுங்கள், கவிதையின் வாயிலாய் நம்ம கலங்க வைத்திருப்பார்.

இவ்வளவு போதும் என நினைக்கிறேன். நாளை சந்திப்போமா?

24 comments:

  1. மிக்க நன்றி பிரபாகர் என் கவிதைகள் உங்களை கவர்ந்திருப்பது மகிழ்வு. நான் ரசிக்கும் கவிஞர் பெருமக்கள் உங்கள்
    வாசிப்பிலும் நேசிப்பிலும் இருப்பது நெகிழ்வு

    ReplyDelete
  2. அருமையான தேர்வுகள்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி பிரபாகர்...

    ReplyDelete
  5. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றியும் வாழ்த்துகளும் பிரபா

    ReplyDelete
  8. நல்ல அறிமுகங்கள். தொடருங்கள் நண்பர்களே.

    வாழ்த்துகள் அண்ணே! :-)

    ReplyDelete
  9. ஹேமா, நேசமித்ரன் அவர்களை தெரியும் மற்றவர்கள் அறிமுகம் அசத்தல்..

    நன்றி பிரபாகர்.::))

    ReplyDelete
  10. கேபிளை, கவிஞர் பட்டியலில் சேர்க்காத, அண்ணன் பிரபாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்

    என்டர்
    கவிஞர்
    கேபிள்
    தொண்டர்
    படை

    ReplyDelete
  11. கவிஞர்கள் அறிமுகம்
    நன்று! வலையுலகின் சிறந்த கவிஞர்கள்.

    ReplyDelete
  12. அருமையான தேர்வுகள்.

    ReplyDelete
  13. நீங்கள் குறிப்பிட்ட அனைவரின் கவிதையும் ரொம்ப நல்லாருக்கும் .

    ReplyDelete
  14. ரொம்ப அருமையான அறிமுகம் பிரபாகர்.

    தலைவர்களின் பொன்மொழிகள் மிக அருமை.

    ReplyDelete
  15. பின்னூட்டமளித்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...

    பிரபாகர்.

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  17. கவிஞர்கள் அறிமுகமும் கவிதைகளும் அருமை. ஆமாம் உன்க கவிதைகளை அறிமுகம் செய்ய கூடாதா????

    ReplyDelete
  18. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் :)

    பகிர்வுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  19. அருமையான தொகுப்பு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது